நான் எம்எஸ்வி ரசிகனாக்கும்... எனக்கு 22 இன்னும் முடியலே...
Printable View
நான் எம்எஸ்வி ரசிகனாக்கும்... எனக்கு 22 இன்னும் முடியலே...
http://www.inbaminge.com/t/j/Jaathagam/
சிந்தனை ஏன் செல்வமே....
இன்ப துன்பம் இரண்டும் வாழ்வில்
மாறி மாறி வருமே..
சார் இது என் பஞ்ச் இல்லை... பி.பி.ஸ்ரீநிவாஸின் முதல் படமான ஜாதகம் திரைப்படத்தில் பாடிய பாட்டில் வரும் வரிகள்..
என்னது நான் கோவக்காரனா...
எவன்யா சொன்னது...
இந்த நேரத்திலே கையிலெ எதுவும் மாட்டமாட்டேங்குதே...
எவனாவது கோவக்காரன் சொல்லியிருப்பான்...
இருக்கட்டும் அவனை ஒரு கை பாத்துக்கறேன்..
இன்னொரு கை..
போனால் போகுது விட்டுடலாம்.. இங்கே எழுதணுமே...
சூரியகலா பற்றிய தகவல்களுக்கு நன்றி கிருஷ்ணா சார்..ம்ம்
இப்போ மனசுக்குள்ள ஒலிக்கிற பாட்டு டி.ஆர் மகாலிங்கம் சுசீலா பாடிய பாட்டாக்கும்..இசையரசியின் துள்ளல் குரல் அண்ட் டி.ஆர்.எம்மின் கணீர்க் குரல்.. நல்ல கெமிஸ்ட்ரி..அந்தக்காலத்திய..
ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
இவள் ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ
துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை
எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்
கிளை தான் இருந்து கனியே சுமந்து
தனியே கிடந்த கொடி தானே
கண்ணாளன் உனைக் கலாந்தனந்தமே பெற
காவினில் வாழும் கிளி நானே
துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை
அந்தி வெய்யில் நிறத்தவளோ
குலுங்கும் அல்லி மலர் இனத்தவளோ
உந்தி உந்தி விழும் நீரலையில்
ஓடி விளையாடி மணம் சிந்தி வரும் தென்றல் தானோ
இன்பம் தந்த மயில் இவள் தானோ
.
அன்பு மனம் கூடுவதில் துன்பமில்லை
அஞ்சி அஞ்சி ஓடுவதில் லாபமில்லை
வீணை மட்டும் இருந்தால் நாதமில்லை
மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை
இதயம் கனிந்து எதையும் மறந்து
இருவர் மகிழ்ந்து உறவாட
நன் நேரமிதே
மனம் மீறிடுதே
நன் நேரமிதே
மனம் மீறிடுதே
மனம் மாளிகை ஓரம் ஆடிடுவோம்
முகில் ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
மதுண்ணா கொஞ்சம் பெரிய இடம் குசும்புன்னுல்லாம் கேக்காதீங்க... என்ன ஊரா.. மன்னார் குடி :)
பொங்கும் பூம்புனல்
வருங்காலத் தலைவன் நீயே பாப்பா வளர் தமிழ் நாட்டிலே பிறந்ததினாலே...
இது எந்த நேரத்தில் எழுதிய வரியோ... ஏகப் பட்ட அர்த்தமிருக்குது இந்தப் பாட்டிலே...
தலைவரின் கண்கள் திரைப்படத்தில் எம்.எல்.வி. அவர்கள் எஸ்.வி.வெங்கட்ராமனின் இசையில் பாடிய மதுர கானம்...
மீண்டும் மீண்டும் கேட்கலாம்.
http://www.inbaminge.com/t/k/Kangal/