சதா சாரை பற்றி ராஜா சொன்னதை எடுத்து சொன்ன ஜெய்கனேசுக்கு நன்றி.
செழியனின் கட்டுரையை அவசியம் எல்லோரும் படிக்க வேண்டும். அவர் அங்கே எழுதி இருப்பதெல்லாம் சத்தியம், நாம் எல்லோரும் வேறு வேறு காலங்களில் வேறு விதங்களாய் அனுபவித்ததை அவர் இங்கே ஒரே பக்கத்தில் சொல்லி விட்டார். அவருக்கு எழுத தெரிந்து இருக்கிறது. சினிமாவில் எதை வேண்டுமானாலும் அவர் சாதிக்கட்டும், ஆனால் எழுதுவதை தொடர வேண்டும்.
இதை நம்மிடம் பகிர்ந்து கொண்ட சகலகலாவல்லவருக்கும் நன்றி.
* மண்பானையில் டேப் ரிகார்டை இணைத்தவர்கள் அநேகம்.
* வெளிநாட்டிலிருந்து வந்ததற்கான அடையாளம்
* அந்த நள்ளிரவில் பாடல் தரும் அனுபவத்தை மொழியில் எப்படி எழுத?
* கால இயந்திரம்போல அவரது எந்தப் பாடல் வழியாகவும் எனது இறந்த காலத்திற்குள் நுழைந்துவிட முடியும்.
* வாடகை வீடு. வெக்கை, வானொலி என காலத்தின் சுழற்சியில் பருவங்கள் இடங்கள் மாறினாலும் நான் ஒரே இட்த்திலிருப்பதைப் போலவே உணர்ந்தேன்.
* உலகத்தில் எல்லாம் மாறினாலும் ஒரு பாடல் போதும். எல்லோரும் திரும்ப வருவார்கள்.
* எங்கெல்லாம் உங்கள் பாடலைக் கேட்டிருக்கிறேன். எத்தனை இரவுகள், எத்தனை துயரங்கள், எத்தனை சந்தோஷம்.. உண்மையான ஈர்ப்பு என்னை இங்கு அழைத்து வந்து எதிரில் உட்காரவைத்து விட்டது.
* இசையின் உன்னத்த்தில் தீராத என் கண்ணீர் வழிந்துகொண்டே இருக்கிறது.