Aaliwud Offers varudhu varudhu-nu solraanga, oNNum paNNa maattEngaraarE...
Printable View
ike @thenameisike 22h
Watched rough cuts of axn seq #Vishwaroopam 2 Mindblowing!! #Ulaganayagan does wat he does best above da rest #Salute
http://i1366.photobucket.com/albums/...psb2bc5737.jpg
நான்கு மொழிகளில் மருதநாயகம். கமல்ஹாசனின் மெகா பிளான்.
நடிகர் கமலஹாசனால் கடந்த 1997ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட 'மருதநாயகம்' ஒரு வரலாற்றுத் திரைக் காவியமாகச் சித்தரிக்கப்பட்டது. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முகமது யூசுப் கான் என்ற வீரரைப் பற்றிய கதை இதுவாகும்.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் தயாரிக்கப்படுவதாக இருந்த இந்தத் திரைப்படம் பின்னர் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பொருளாதாரப் பிரச்சினையும், மற்ற சில வெளிவராத பிரச்சினைகளும் இந்தப் படத்தைக் கிடப்பில் போட்டன.
விஸ்வரூபம் முதலாம் பாகத்தில் மட்டும் கமல்ஹாசனுக்க 100 கோடிக்கு மேல் லாபம் கிடைத்துள்ளது. எனவே இந்த தைரியத்தில் மீண்டும் மருதநாயகம் படத்தை ஆரம்பிக்க முடிவுசெய்துள்ளார். ் தமிழ், தெலுங்கு, இந்தி , ஆங்கிலம் என்ற நான்கு மொழிகளில் தயாரிக்க மெகா பிளான் செய்துள்ளார் கமல்ஹாசன்.
தற்போது 'விஸ்வரூபம்' படத்திற்கு கிடைத்த வரவேற்பில் கமலஹாசன் அதன் இரண்டாவது பாகத்தையும் தயாரித்து வெளியிடும் இறுதிக் கட்ட வேலைகளில் உள்ளார். இந்தப் படத்தின் வெற்றி அவருக்கு மீண்டும் மருதநாயகத்தை இயக்கும் எண்ணத்தை உருவாக்கியுள்ளது. அவரது வெளிநாட்டு நண்பர்கள் பலரும் அந்தப் படத்திற்குத் தேவையான பொருளுதவியை அளிப்பதாகக் கூறியுள்ளது அவரது ஆர்வத்தினை மேலும் தூண்டியுள்ளது. அதனால், தன்னுடைய தீவிரமான ரசிகர்களுக்காக 'மருதநாயகம்' படத்தினைத் தயாரிக்கும் முயற்சியில் அவர் மீண்டும் ஈடுபடக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Legend Dr.Kamal Haasan FB)
சிவாஜியின் மடியில், எம்.ஜி.ஆரின் தோளில் வளர்ந்த நான் ஜெயிக்காமல் இருக்க முடியுமா?: கமல்
http://i1366.photobucket.com/albums/...ps9eb4c2db.jpg
சிவாஜியின் மடியிலும், எம்.ஜி.ஆரின் தோளிலும் வளர்ந்த தான் ஜெயிக்காமல் இருக்க முடியுமா என்று சினிமா நூற்றாண்டு விழாவில் கமல் ஹாஸன் தெரிவித்தார். சினிமா நூற்றாண்டு விழாவை முதல்வர் ஜெயலலிதா நேற்று துவங்கி வைத்தார். விழாவில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள். விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல் ஹாஸனுக்கு சிறப்பு விருதை ஜெயலலிதா வழங்கினார்.
விழாவில் பேசிய கமல் கூறுகையில், நான் சினிமா துறையில் 50 ஆண்டுகளாக உள்ளேன். இருப்பினும் நான் இன்னும் சின்ன குழந்தை தான். நான் குழந்தையாக இருந்தபோது சிவாஜியின் மடியிலும், எம்.ஜி.ஆரின் தோளிலும் வளர்ந்தவன். நான் வெற்றி பெறாமல் இருக்க முடியுமா?. சினிமாவில் எனக்கு இரண்டு குருக்கள் உள்ளனர். ஒருவர் சிவாஜி கணேசன் மற்றொருவர் கே. பாலசந்தர். இந்திய சினிமா நூற்றாண்டை கொண்டாடும் வேளையில் என்னை வளர்த்துவிட்ட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ரசிகர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த தலைமுறை நடிகர், நடிகைகள் எங்களை விட பெரிய அளவில் வளர வேண்டும் என்றார்.
கலைஞர் மேடையில் இருந்தால் "நான் குழந்தையாக இருந்தபோது சிவாஜியின் மடியிலும், எம்.ஜி.ஆரின் தோளிலும் வளர்ந்து கலைஞரின் வசனத்தால் தமிழ் கற்றுக்கொண்டேன். நான் வெற்றி பெறாமல் இருக்க முடியுமா?" என அடித்துவிட்ருப்பார். காசா பணமா ?Quote:
Originally Posted by ganse
சிவாஜியின் மடியில், எம்.ஜி.ஆரின் தோளில் வளர்ந்த நான் ஜெயிக்காமல் இருக்க முடியுமா? என்று தானே குறிப்பிட்டுள்ளார்.
கமல், நடிகர் திலகத்துடனும் மக்கள் திலகத்துடனும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதனால் கமல் அப்படி சொன்னது பொய் இல்லையே. நிஜத்தை தானே குறிப்பிட்டுள்ளார்.
கலைஞர் பற்றி குறிப்பிடுவதை தவிர்த்து இருப்பது அவர் மட்டும் அல்ல; அங்கு பேசிய ரஜினி உட்பட அனைவருமே...
http://i1366.photobucket.com/albums/...ps9eb4c2db.jpg
this image promises a green patch ahead of the release of VR2..hopefully..
It is good that he avoided MK considering the problems he faced this year. He has praised MK in so many platforms before this. One cannot deny MK's influence in Kamal considering his eloquent Tamil.
Kamal in great shape, and trim.
Yes, looks like all is well ...