கே.எஸ்.ராஜாவின் தேன் மதுரக் குரலினை நீண்ட
காலத்திற்குப் பிறகு கேட்டு மகிழ வாய்ப்பளித்த
வாசு சாருக்கு நன்றி
அன்புடன் கோபு
Printable View
கே.எஸ்.ராஜாவின் தேன் மதுரக் குரலினை நீண்ட
காலத்திற்குப் பிறகு கேட்டு மகிழ வாய்ப்பளித்த
வாசு சாருக்கு நன்றி
அன்புடன் கோபு
ஹையோ ஹையோ ஹாய்.. வாசு சார், கிருஷ்ணா சார், பார்த்தசாரதி சார்,கோபால் சார், ராகவேந்திரா சார்..என எல்லாரும் தூள் பரத்துகிறீர்கள்..ம்ம் எதை ச் சொல்ல எதை விட..
ஓடம் கடலோரம் எனக்குப் பிடிக்கும்..
இந்த சிவகுமார்…உயரம் கம்மி நடிகைகளுடன் நடித்ததை விடுங்கள்..கொஞ்சம் வித்தியாசமான படம் ஒன்று உண்டு..ஆயிரம் முத்தங்கள்..(இந்தப் படத்தில் வில்லனாக முத்துராமன் புக் ஆகி ஊட்டி படப்பிடிப்பில் இருந்த போது ஹார்ட் அட்டாக்கில் மரித்து விட..சென்னைக்கு முத்துராமனைக் கொண்டு வந்தது எல்லாம் சிவகுமார் தான்..உபயம் இது ராஜ பாட்டை அலல)) வில்லனாக வேறு ஒரு நடிகர் மலையாளம் என நினைவு..
*
இந்தப் படத்தில் சிவகுமார் அண்ட் ராதா..இளமை துள்ளும் பாடல்..
சேலை குடைபிடிக்க காத்து சில்லுன்னு வீசுதடி.. ரொம்ப நல்லா இருக்கும்..
அதே படத்தில் யாரோ ரூம் போட்டு யோசித்து சிவகுமாருக்கு டகடக சிகுசிகுவந்தாள் டக டக சிகு சிகு கங்கை.. தேனாற்றிலே நீராடினாள்…
என்று ஒரு நடனப் பாட்டைக் கொடுத்திருப்பார்கள்.. சிவகுமாரும் நன்கு உதறியிருப்பார்…உடலை..
கார்த்திக் சார்..பூக்காரியின் காதலின் பொன் மேடையில் ரொம்ப ப் பிடிக்கும் பாட்டு..கேட்க மட்டும்..
ஓஹ்.. கே.எஸ். ராஜா கணீர்க் குரல்.. அந்தப் படிப்பினை ஊட்டும் குடும்பச் சித்திரம் ..எப்படி மறக்கும்..வாசு சார் நீங்கள் விட்ட முக்கியமான இரண்டு..
இசைக்களஞ்சியம் – நாலு டு நாலரை என நினைவு
பாட்டும் பதமும்…- ந்ல்லவன் நல்லது செய்தால் நல்லபடி இருக்கும்..என்பது போல ஒரு வாக்கியம் போட்டு ஒரு வார்த்தைக்கு ஒரு பாட்டு
பாட்டும் படமும்.. ஒரு பாடல் அந்தப் பாடல் ஆரம்பத்தில் படத்தின் பெயர் இருக்கும்..(என நினைவு)
கடந்த கால இனிய நினைவுகளில் ஒன்றான இலங்கை வானொலி சேவைகளின் பட்டியல் - படங்கள் - ஆடியோ
என்று அமர்க்களமான பதிவுகளை வழங்கி மலரும் நினைவுகளை புதுப்பித்த இனிய நண்பர்கள் திரு , கார்த்திக் , திரு வாசு அவர்களை எப்படி பாராட்டுவது என்று தெரிய வில்லை .
ரவி லதா ஜோடியாக நடித்த வீட்டுக்கு வந்த மருமகள் திரைப்படத்திலிருந்து சங்கர் கணேஷ் இசையில் சூப்பர் ஹிட் பாடல்
பெண்ணுக்கு சுகம் என்பதும்
http://youtu.be/cPFNK0o7qxI
நன்றி வினோத் சார், கோபு சார்.
இதில் என் பங்கு எதுவும் இல்லை. அந்த வீடியோவை அப்லோட் செய்த புண்ணியவானுக்கே (விசு கருணாநிதி)எல்லாப் பெருமையும் சாரும். அவருக்கு நம் திரியின் சார்பாக மீண்டும் நன்றி!
ராகவேந்திரன் சார்
ரவி, லதா ஜோடி இப்பாடலில் கொள்ளை அழகு. லதா பார்பி கேர்ள். ரவி செம ஸ்டைல். 'சொர்க்கத்தில் திருமணம்' தான் இன்னும் ஆகவில்லை ஸாரி கிடைக்கவில்லை.
காத்திருப்போம்.
இப்போது ஒரு சூப்பர் பாடலைப் பாருங்கள்.
இப்பாடலில் இளவயது பால்வடியும் முகம் கொண்ட எஸ்,பி.பி என்ன ஒரு கலக்கு கலக்குகிறார் பாருங்கள்!
முகம்மது பின் துக்ளக்கில் மனோரமாவின் பிறந்த நாள் விழாவின் போது 'வெண்ணிற ஆடை' மூர்த்தி டி எம் எஸ் பின்னணிக் குரலில் பாடுவாரே 'பாவலன் பாடிய புதுமைப் பெண்ணை' என்று.
(ஆச்சி ரோலில் தெலுங்கில் ரமாபிரபா சரத்பாபு)
அதையே தெலுங்கில் கலக்கோ கலக்கு என்று கலக்குவார் எஸ்.பி.பி நடித்தபடியே. அந்த இளம் வயதில் பாலாவைப் பார்க்க என்னமாய் இருக்கிறது! (மியூசிக் அட்டகாசம்)
தமிழ்ப் பாடல்கள் திரியில் தெலுங்கு எதற்கு என்று ஒருசிலர் கேட்கலாம். (அதுவும் ஒருவர் 'கொல்டி வேலையைக் காட்டிட்டான்' என்று கழுத்தைத் திருக வருவார்)
காரணம் இருக்கிறது.
சற்றுப் பொறுங்கள்.
இப்போது காலையில் உற்சாமாக இப்பாடலைப் பார்த்துவிட்டு வேலைக்குக் கிளம்புங்கள்.
http://www.youtube.com/watch?v=vreyT...yer_detailpage
வாசு சார்
இந்த பாட்டை கேட்ட பிறகு எப்படி வேலைக்கு கிளம்பறது
தமிழ் version இல் ஒரு வரி வரும்
"நீ இருக்கும் இடத்தில குடி இருக்கும் .. குடி இருக்கும்
அன்பு குடி இருக்கும் "
சோவின் குசும்பு