9000 பதிவுகள் கண்ட திரு. வினோத் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் !
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
அன்புடன் : கலைவேந்தன்
Printable View
9000 பதிவுகள் கண்ட திரு. வினோத் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் !
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
அன்புடன் : கலைவேந்தன்
THANKS KALAI VENDHAN SIR
http://i62.tinypic.com/6svsza.jpg
இன்று பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் இனிய நாளாக அமையட்டும்...தன்னலம் கருதா மாபெரும் தலைவர்கள் எனும் சிறப்பிடத்தில் காமராஜர் அவர்கள், பேரறிங்கர் அண்ணாதுரை அவர்கள், மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., அவர்கள் என இவர்களைத்தான் நினைக்க முடிகிறதே தவிர, வேறு எவரையும் ஒப்புகொள்ள மனம் தயங்குகிறது... ஆனாலும் இந்த மாபெரும் தலைவர்களில் மக்கள் திலகம் தனியாக வேறுபடுகிறார்...எப்படி? எம்.ஜி.ஆர்., அவர்கள் எந்த ஒரு ஜாதியையோ, மதத்தையோ, பிற்படுத்த பட்டவர், அல்லது முற்படுத்த பட்டவர் - குலம் - பிரிவினை - என்ற எந்தவொரு பாகுப்பாடு, பாரபட்சமின்றி களத்தில் தன்ன,தனியாக இறைவன் அருளாலும், பொது மக்கள் சார்பான ஏகோபித்த ஆதரவாலும் முன்னேற்றம் - வெற்றியை கண்டார்!!! என்பது கண்கூடு...
மக்கள் திலகத்தை பாராட்டிய காமராஜர் !
இந்திய சுதந்திரப் போராட்ட நூற்றாண்டு விழா 1957ல் நடைபெற்றது. அப்போது நம் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள் நடிகர் சங்க செயலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அச்சமயத்தில், காங்கிரஸ் சார்பில் விடுதலை போராட்ட கலைவிழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். விடுதலை வீரர்களின் சரிதங்களை சிறு நாடகங்களாக்கிப் படைக்க வேண்டும் என்று நடிகர் சங்கச் செயலாளர் மக்கள் திலகத்திடம் கேட்டுக் கொண்டனர்.
தி. மு. க. வின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் விளங்கிய போதும் நடிகர் சங்கத்தின் செயலாளரும் அவரே என்ற காரணத்தினால் காங்கிரஸ் சார்பில் நடந்த கலை விழாவில் தமது கடமையையும் பொறுப்பினையும் தயங்காமல் செய்ய .முன் வந்தார். அந்தப் பெருவிழா சென்னை எஸ். ஐ. ஏ. ஏ. திடலில் நடைபெற்றறது.
திருப்பூர் குமரன், முத்து வடிவு, வீரர் சிதம்பரனார் ஆகிய மூன்று நாடகங்களை நம் மக்கள் திலகம் அவர்கள் தமது மேற்பார்வையில் இயக்கி தயாரித்து வழங்கினார். நாடகங்களை தயாரித்து இயக்கியவர் நம் பொன்மனச்செம்மல் அல்லவா ! நாடங்கள் அரங்கேற்றப்பட்ட போது கூடிய கூட்டம் இருக்கிறதே ..... அப்பப்பா ...........கேட்கவா வேண்டும்.
இவ்விழாவிற்கு சென்னை மாகாண முதல்வராக அப்போதிருந்த, பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தலைமை தாங்கினார். நடிகர் சங்கத்தின் பேராதரவில், அதன் செயலாளராக இருந்த மக்கள் திலகம் அவர்கள் இந்த விழாவை இனிதே நடத்திக் கொடுத்ததை காமராஜர் வெகுவாக பாராட்டினார்.
மாற்றுக் கட்சியில் இருந்த போதிலும், காங்கிரஸ் சார்பில் நிகழ்ந்த இந்த விழாவில் தமது மகத்தான சேவையை மக்கள் திலகம் அவர்கள் செய்தார் என்பது அவரது பரந்த மனப்பான்மையை காட்டுகிறது என்று அன்றைய தினம் எல்லோரும் புகழ்ந்தனர்.
http://i57.tinypic.com/2zirlex.jpg
முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் காட்சி !
உடனிருப்போர் : மக்கள் திலகத்தின் நிழல் - அவரது நம்பிக்கைக்குரிய ஆர். எம். வி. மற்றும் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்.
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
டியர் எஸ்வி சார்
நீங்கள் 9000 பதிவுகள் கடந்தவர் என்று படித்தேன்
மிக்க மகிழ்ச்சி
உங்கள் பணி என்றும் சிறக்க எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டுகிறேன்
வாழ்க உங்கள் தொண்டு வளர்க உங்கள் புகழ்
என்றும் அன்புடன்
[QUOTE=makkal thilagam mgr;1147744][B] தமிழக முதல்வராக இருந்த போது, புரட்சித் தலைவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் ........
" உன்னை விட மாட்டேன் " படத்துக்காக மக்கள் திலகத்தின் இணையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை சத்தியகலா, நடிகைகள் பசி சத்யா, எஸ். என். பார்வதி, விஜயகுமாரி, பட்டினப்பிரவேசம் மீரா ஆகியோர்.
மிக அரிய அருமையான புகை படத்தை வெளியிட்டு உள்ளீர்கள்
இந்த திரைப்படம் பற்றி தகவல்கள் கிடைக்குமா
" உன்னை விட மாட்டேன் " படத்துக்காக மக்கள் திலகத்தின் இணையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை சத்தியகலா....
நடிகை சத்தியகலாவின் தம்பி ஒரு ஊர்வலத்தில் நடந்துகொண்டது ....... வேண்டாம் பழைய கதை.
http://i59.tinypic.com/mvpvg2.jpg
மக்கள் திலகம் திரியில் முதுபெரும் பதிவாளராகவும், மூத்த நண்பராகவும்,
சிகரங்களை அடைவதில் முதல்வராகவும் உள்ள திரு. வினோத் அவர்களுக்கு 9000 பதிவுகள் முடித்து 10000 பதிவுகள் விரைவில் எனும் சிகரத்தை விரைவில் தொடுவதற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .
தங்களின் கடின உழைப்பிற்கு, பல்வேறு பணிகளுக்கு இடையே இடும்
பதிவுகளுக்கு ஈடு இணை இல்லை.
சளைக்காமல், எதிர்வாதங்களை கண்டு மலைக்காமல் , சர்ச்சைகளுக்கு
இடந்தராமல் , சக நண்பர்களுக்கு உத்வேகம் காட்ட தவறாமல் ஆற்றிடும்
தங்களது செய்திகள், புகைப்படங்கள், ஆதாரங்கள், ஆவணங்கள் நிறைந்த பதிவுகள் அற்புதம். அருமை. அட்டகாசம்.