https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...d1&oe=5E1F1E50
Thanks VCG Thiruppathy H O S
Printable View
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...d1&oe=5E1F1E50
Thanks VCG Thiruppathy H O S
#சிவாஜியின்_கொடைத்_தன்மை_உண்மை_என்ன?
என்னமோ 'எம்ஜியார் மட்டுந்தான் கொடைவள்ளல்,
சிவாஜி ஒரு கஞ்சர்' என்று வெகுகாலமாகவே தமிழ்நாட்டு ஜனங்களிடையே ஒரு பொய்யான ஒரு தகவ...ல் பரப்பப்பட்டு வந்திருக்கிறது.
அதைப் பற்றியெல்லாம் அந்த அப்பாவி என்றுமே கவலைப்பட்டதில்லை.
'சிலரைப்' போல, தான் செய்ததை விளம்பரப் படுத்தும் ஊடகத் தந்திரங்களை அவர்
அறிந்தவருமில்லை.
இருந்தாலும் அவரது அபிமானிகள் அவர் செய்த நற் காரியங்கள் பலவற்றைப் பட்டியலிட்டிருக்கிறார்கள்.
அது இங்கே:
1. சிவாஜி அவர்கள் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் நடிப்பின் ராஜா சிவாஜி 1959.ல் மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் ஒரு கோடி) வழங்கினார்.
2. 1961ல் தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ரூபாய் ஒரு லட்சம் வழங்கினார்.
3. 1962ல் இந்திய - சீனா போரின்போது ஒரு பெருந்தொகையை யுத்த நிதியாக வழங்கினார்.
4. புதுவை அரசின் பகலுணவு திட்டத்திற்கு ரூபாய் 1 லட்சம் வழங்கினார்.
5. நேருஜி நினைவு அறக்கட்டளை நிதிக்காக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வழங்கினார்.
6. பெங்களூரில் நாடகை அரங்கம் கட்ட ரூபாய் இரண்டு லட்சம் வழங்கினார்.
7. 1960ல் பெருவெள்ளம் சென்னையை சூழ்ந்தபோது காமராஜர் முன்னிலையில் 1 லட்சம் உணவு பொட்டலங்களை அவரது இல்லத்தில் தயாரித்து கொடுத்ததோடு 800 மூட்டை அரிசியும் அள்ளிகொடுத்துள்ளார்.
8.1968-ல் உலகத்தமிழ்மாநாடு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது சென்னை கடற்கரையில் 10 தமிழறிஞர்களுக்கு சிலை வைக்கப்பட்டது. அதிலே திக்கெட்டும் தமிழ் பரப்பிய திருவள்ளுவருக்கு சிலை அமைத்து தந்தது சிங்க தமிழன் சிவாஜி.
9. சிலையும் அமைத்து உலக தமிழ மாநாட்டிற்கு நிதியாக ரூபாய் 5 லட்சம் (இன்றைய மதிப்பு 5 கோடி) அள்ளித்தந்து அண்ணாவையே அசர வைத்தவர் சிவாஜி.
10. 1965ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் சிவாஜிக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும், மொத்தம் 500 பவுன் இன்றைய மதிப்பு ரூ.1,00,00,000 கொடுத்து தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்.
11.யுத்த நிதி அன்றைய முதலமைச்சர் திருமகு. பக்தவச்சலத்திடம் 1 லட்சம் நிதி வழங்கினார். மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய வியர்வையில் விளைந்த வெள்ளிகாசுகளாம் 17 லட்சம் (இன்றைய மதிப்பு 100 கோடி) வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றவர் சிவாஜி.
12. வெள்ளிவழா கண்ட பாசமலர் திரைப்படம் இந்தியில் ராக்கி என்ற பெயரில் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து திரையிட்டு நாடு முழுவதும் வசூலான ஒரு நாள் தொகையை மீண்டும் யுத்த நிதியாக வழங்கி பெருமை சேர்த்தவர்.
13. 1972ல் ராஜா திரைப்படத்தின் மூலம் வசூலான ஒரு நாள் தொகையை விமானபடையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார் சிவாஜி.
14.வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை (இன்றைய மதிப்பு 300 கோடி) பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார்.
15.1961ல் மும்பையில் பல பகுதியில் நாடகம் நடத்தியபோது பல லட்சம் மக்கள் திரண்டனர். அதன் மூலம் கிடைத்த 5 லட்சத்தை மகாராஷ்டிரா அரசிடம் வழங்கினார்.
16. தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை அன்றைய மதிப்பு பல லட்சம் இன்றைய மதிப்பு பல கோடி நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக வழங்கி நடிகர்களின் காவலராய் திகழ்ந்தவர்.
17.தன்னை வைத்து முதல் படம் எடுத்த திரு. பெருமாள் முதலியார் அவர்களின் வீட்டிற்கு வருடந்தோறும் பொங்கலன்று சென்று சீர் செய்து அவர்கள் குடும்பத்திற்கு தன் இறுதி மூச்சு உள்ளவரை உதவிவந்தவர் நடிகர் திலகம்.
பொதுவாகவே நடிப்பது ஒன்றைத் தவிர வேறு தந்திரங்கள் ஏதும் தெரியாத வெள்ளந்தி மனம் கொண்ட கலைஞன் சிவாஜி. அதனால்தான் திரையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் ஜொலித்த அந்த மகா கலைஞனால் அரசியலில் நிலைக்க முடியவில்லை.
என்றாலும் என்னைப் போன்ற கோடிக்கணக்கானோர் நெஞ்சில், இந்தக் கட்டை வேகும் வரையிலும் அவர் வாழ்ந்திருப்பார், இன்னும் வரும் நூற்றாண்டுகளுக்கும் அவர் செய்த நடிப்புச் சாதனைகள் நிலைத்திருக்கும் என்றே நம்புகிறேன்.
-த.பொ.இராமச்சந்திரன் From. Whatsapp
Thanks Vasudevan Srirangarajan
உலக திரை உலக அய்யனுக்கு பிரான்ஸ் அரசாங்கத்தின் செவாலியர் விருது கொடுக்கும் விழாவில், மறைந்த சிரிப்பு நடிகர் நாகேஷ் அவர்கள் அய்யனை பற்றி இவ்வாறு சொல்லி மகிழ்ந்தார்கள்.
சிவ பெருமான் ஒருபிடி மண்ணை கையில் எடுத்து அந்த மண்ணிற்கு உருவம் கொடுத்தார். விஷ்ணு உயிர் கொடுத்தார். பிரம்மன் அந்த உருவத்தை கையில் வாங்கி கொண்டு உலகில் எந்த ஆசைக்கும் அடிமை ஆகாமல் மக்களுக்காகவே நீ வாழ வேண்டும் என்று சொல்லி உலகில் விட்டு விட்டார். அவர்தான் அப்பச்சி காமராஜ் அவர்கள்.
சிவன் மீண்டும் ஒரு பிடி மண்ணை எ...டுத்து அந்த மண்ணிற்கு உருவம் கொடுத்தார். விஷ்ணு அந்த உருவத்திற்கு உயிர் கொடுத்தார். பிரம்மன் அத்த உருவத்திற்கு, இந்த உலகில் எவராலும் செய்ய முடியாத காதாபாத்திரங்களை அச்சு அசலாக நீ பூமில் சென்று செய்து திரை உலகமே பெருமை பட வேண்டும் என்று சொல்லி உலகில் விட்டு விட்டார் அவர்தான் அய்யன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்றார்கள்.
அன்று திரு. நாகேஷ் அவர்கள் கூறியது எப்படிபட்ட, எத்தகைய நிதர்சனமான உண்மை, சத்தியம்.
ஒரு நடிகனுக்குத்தான் ஒரு நடிகனின் திறமை புரியும். அய்யனே நீ வாழ்க.
Thanks Selvaraj Fernandas
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...cf&oe=5E5EBDC3
Thanks Ramesh Prabhu
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...40&oe=5E5A4764
Thanks Ramesh Prabhu
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...63&oe=5E21F66C
Thanks Vcg Thiruppathy H O S
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...5f&oe=5E552534
Thanks Vcg Thiruppathy H O S
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...b7&oe=5E600466
Thanks Friends..
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...6c&oe=5E1F198E
Thanks Veeyaar