I read somewhere Orampo is releasing on Nov 30th. Not sure though :?
Printable View
I read somewhere Orampo is releasing on Nov 30th. Not sure though :?
They had a very interesting trailer. Haven't seen the trailer in a long time. Release aagudhA ?Quote:
Originally Posted by littlemaster1982
I'm also looking forward to the movie. Songs are good and the trailer increased my expectations. It's almost an year since the songs have been released :|
According to Dinamalar, Shruti haasan is going to act with Maddy in a tamil movie. She just rejected Venkat Prabhu's offer :shock:
Quote:
Originally Posted by Nerd
:shock: :? :confused2:
She's good at singing, but acting?!
« இரண்டு பெரிய ஹீரோக்கள் தன்னிடம் பேசியதில் மிகுந்த உற்சாகமாக இருக்கிறார் வடிவேலு. அந்த இருவருமே வடிவேலுவின் தீவிர ரசிகர்கள். தங்களுடன் சேர்ந்து நடிக்கும்படி அவர்கள் கேட்க, வடிவேலுவும் டபுள் ஓகே சொல்லிவிட்டார். யார் அந்த ஹீரோக்கள்? தனுஷ், சிம்பு! (கலக்குங்க)
:KUMUDAM: Lights ON:
Rumor mills in orkut have it that Lollu Shaba Sathanam has passed away! :shock: :shock:
Pictures from the new venkat prabu movie Saroja
http://pstlpost.blogspot.com/2007/12/blog-post_06.html
Cast includes JeyaRam and PrakashRaj too
Music by Yuvan
புதுசா வந்திருக்கிற மியூசிக் டைரக்டர்ங்ககிட்டருந்து நான் நிறைய கத்துக்க வேண்டியிருக்கு’’ என்று எப்படித்தான் சொல்ல முடிகிறதோ ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ். விஸ்வநாதனுக்கு பெருந்தன்மை.
‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் ‘பொன்மகள் வந்தாள்...’ பாட்டும், ‘பொல்லாதவன்’ படத்தில் ‘எங்கேயும்.. எப்போதும்..’ பாட்டும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது அடுத்து ‘பில்லா’விலும் ‘மை... நேம் இஸ் பில்லா’... பாடலும் சுடச்சுட ரீ மிக்ஸில் கலக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த மூன்று பாடல்களும் அந்தக் காலத்தில் எம்.எஸ்.வி. இசையமைத்தவை என்பதுதான் ஹை லைட்.
ஒரு மாலை நேரத்தில் மெல்லிசை மன்னரைச் சந்தித்தோம்.
‘‘எப்படி இருக்கீங்க?’’ என்றதும்,
‘‘ஹார்ட் ஆபரேசனுக்குப் பிறகு நல்லா ரெஸ்ட் எடுத்தேன். தினமும் ‘பிஸியோதெரபி’ எடுத்துக்குறேன். இப்போ ஆல்ரைட். பழைய வேகம் வந்துடுச்சு. சமீபத்துல கூட ‘குங்குமக்காரி’ என்ற பக்தி ஆல்பத்துக்கும், ‘மணல்மேரி மாதா’ என்ற ஆல்பத்துக்கும் ஒரே வாரத்துல ரெக்கார்டிங் செய்து முடிச்சேன்.’’
‘‘சினிமா இசை இப்போ எப்படி இருக்கு?’’
‘‘எல்லாரும்... நல்லா பண்றாங்க. பிரமாதமான பாட்டெல்லாம் வருது. ஒரே ஒரு குறை, வார்த்தைகளைக் கடித்துத் துப்புறாங்க. கேட்கவே வருத்தமாயிருக்கு. நான் புதுசா மியூசிக் பண்ண வந்த சமயம் ‘தேவதாஸ்’ படத்துக்கு பாட்டு கம்போஸ் நடந்துக்கிட்டிருந்துச்சு. உடுமலை நாராயணகவி பாட்டை எழுதினார். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்ன நான் நாராயணகவி கிட்ட வேட்டி, சட்டை துவைச்சு போட்டுக்கிட்டு இருந்தேன். பிறகு தான் மியூசிக் பண்ற வாய்ப்புக் கிடைச்சது. ‘தேவதாஸ்’ படத்துல கவிராயர் எழுதின, ‘உலகே மாயம் வாழ்வே மாயம்’ என்ற பாட்டை கண்டசாலா பாடினார். தமிழ் சரியா உச்சரிக்க வராம ‘உல்கே மாயம்’னு பாடிட்டார். எவ்வளவோ சொல்லிக் குடுத்தும் வரல. சரின்னு அப்படியே பதிவு பண்ணிட்டோம். இதைக் கேட்டுட்டு உடுமலை நாராயணகவிராயர் என் கன்னத்துல ஓங்கி ஒரு அறை விட்டுட்டு, ‘ஏண்டா தமிழை இப்படிக் கொலை பண்றீங்க’ன்னு கோபப்பட்டார். அதுக்கப்புறம் ரொம்ப கவனமா பாடல் வரிகள் நல்லா கேட்கிற மாதிரி மியூசிக் பண்ணினேன். ஆனா கவிராயர் அன்னிக்கு பயந்தது மாதிரி இப்ப நடந்துட்டுருக்கு. கேரளாவிலோ, கர்நாடகாவிலோ இப்படிப் பாடமுடியாது. ஆனா தமிழர்கள் தான் மன்னிச்சு ஏத்துக்கிறாங்க.
இது ஒரு பெரும் குறையா இருந்தாலும், புதிய புதிய பாடல்கள் வித்தியாசமான குரல்கள்னு ஒரு வெரைட்டியா கேட்க முடியுது.’’
‘‘எல்லாரும் நல்லா பண்றதா சொன்னீங்க. இப்ப, பழைய பாடல்களை ரீ_மிக்ஸ் செய்யுறாங்க. அதில் அதிகமா உங்கள் பாடல்களாகவே இருக்கு. இது போன்ற முயற்சிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’ இந்தக் கேள்வியைக் கேட்டதும் எம்.எஸ்.வி. முகம் மாறுகிறது. அதைத் தன் பளீர் புன்னகையால் மறைத்து விட்டுப் பேசுகிறார்.
‘‘நானும் கேட்டேன். நான் யாரையும் குற்றம் சொல்ல மாட்டேன். ஆனா இப்ப இருக்குற ரசிகர்கள், இளைய தலைமுறையினர் இதைத் தான் விரும்புறாங்கன்னு சொல்றது தப்பு. ‘‘தொட்டால் பூ மலரும்..’’ பாட்டை ரஹ்மான் ரீ_மிக்ஸ் செய்திருந்த சமயம், ஏர்போர்ட்ல மீட் பண்ணினோம். என்னைப் பார்த்துட்டு நான் எதுவும் சொல்வேனோன்னு பயந்தார் ரஹ்மான். ஆனா, நான் பாராட்டினேன். காரணம் ரஹ்மான் செய்தது ரீ_மிக்ஸ் மாதிரி இல்ல. முழு பாடல் வரிகளையும் அப்படியே வெச்சுக்கிட்டு டியூன் போட்டார். பாட்டு கேட்கவும் நல்லா இருந்தது. அதுதான் சரி. அப்படித்தான் பண்ணணும். ஆனா பழைய ட்யூனை வெச்சுக்கிட்டு இடையில் ‘காச் மூச்’னு கத்தறதும், சத்தமான மியூசிக்கும் கேட்கவே பரிதாபமாயிருக்கு. ஏன் இப்படிப் பண்ணணும். செய்தா ‘பழமை மாறாமல்’ செய்யணும். இப்ப கூட ‘பில்லா’ படத்துல ‘மை நேம் இஸ் பில்லா’ பாட்டை எனக்குப் போட்டுக் காண்பிக்கிறதுக்காக வர்றேன்னு சொன்னாங்க. நான் தவிர்த்துட்டேன். என்னோட வாழ்த்து எப்பவும் எல்லார்க்கும் இருக்கும். ஒரு ரசிகனா நான் இதை ரசிக்கவில்லை. இளைய தலைமுறைக்கு விஷம் பிடிக்குதுன்னா நாம விஷம் கொடுக்கலாமா? இது தப்பு. சரியில்ல...
‘நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்காக கம்போஸ் செய்தபோது, ஒரு கிராமத்துப் பாடலை நான் பாடிக் காண்பித்தேன். ‘கத்தாழங் காட்டுக்குள்ள... விறகொடிக்கப் போனபுள்ள’ இதுதான் அந்தப் பாட்டு. அதையே கண்ணதாசன், ‘எங்கேயும் எப்போதும்’னு உடனே பாடலை எழுதிக் கொடுத்திட்டார். இப்படி ஒன்றிலிருந்து ஒன்று வந்தால் தப்பில்லை. எதையும் கெடுத்திடக் கூடாது’’ என்றவர், ‘‘சொல்லத்தான் நினைக்கிறேன்.. உள்ளத்தால் துடிக்கிறேன்’’ என்று உச்ச ஸ்தாயியில் பாட ஆரம்பித்தார்..
:kumudam:
உதட்டுடன் உதடு சேர்த்து
நயன்தாராவுடன் விஷால் முத்தக் காட்சி
ரகசியமாக படமாக்குகிறார்கள்
http://www.dailythanthi.com/article....ate=12/28/2007