Originally Posted by
esvee
எம்.ஜி.ஆரின் தனித்தன்மை. அவர் மலைக்கள்ளன்,குலேபகாவலி,அலிபாபாவும் நாற்பது திருடர்களும்,மதுரைவீரன்,மகாதேவி என்று தாண்டி நாடோடி மன்னனை அவரே இயக்கினார்.
எம்.ஜி.ஆர் கால் உடைந்தது. சரிதான் எம்.ஜி.ஆர் ஜேப்டர் குளோஸ்! என்றார்கள்.
மன்னாதிமன்னன்,திருடாதே, பாசம்,(பாசம் படத்தில் அவர் இறந்து போவார்!)தாய் சொல்லைத்தட்டாதே,தாயைக்காத்த தனயன்.பணத்தோட்டம்,கொடுத்து வைத்தவள்
அதன் பிறகு அவர் விஸ்வரூபம் எடுத்தார்,
பொதுவாகவே அவர் சரோஜாதேவியுடன் நடித்த படங்கள் விசேசமானவை.
படகோட்டி, எங்கவீட்டுப்பிள்ளை,அன்பேவா.
அவர் நடித்த அந்தக் கால சரித்திரப் படங்களும் தொடர்ந்துவந்த படங்களும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை.
எங்கவீட்டுப்பிள்ளை எந்த ஒரு ஹீரோ நடிகனும் பார்த்து ஏங்கும் படம்.அன்பே வா நூறு தடவை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது. அதுவே தான் ஜெயலலிதாவுடன் நடித்த ஆயிரத்தில் ஒருவன், குடியிருந்த கோவி்ல்,அடிமைப்பெண்,மாட்டுக்கார வேலன்.
பெற்றால் தான் பிள்ளையா அவருடைய தனித்துவமான பாணியின் உச்சம்.
மந்திரிகுமாரி, மர்மயோகி, மகாதேவி,நாடோடி மன்னன்,ராணி சம்யுக்தா,மன்னாதி மன்னன் போன்ற படங்களில் மட்டுமல்லாமல் பெற்றால் தான் பிள்ளையா வரை அவர் வசனங்கள் பற்றி சொல்லவேண்டுமானால் என்னிடம் ‘வெண்கலமணி அடித்தாற்போல,உச்சரிப்பு சுத்தமா’ என்று மனோரமா சொன்னார்.
இவ்வளவிலும் அவர் படங்களில் பாடல்கள்,வசனம் அவர் எதிர்கால தலைவர் என்பதை அறிவிக்கும் வண்ணம் தான் இருந்தன.
குண்டடிபட்டபின் கூட ‘ஒரு நடிகனுக்கு குரல் முக்கியம். அதையே இழந்தபின் என்ன செய்யப்போகிறார்,பாவம்’என்றவர்கள் வாயடைக்கும்படி அவருக்கு செல்வாக்கு மிகவும் அதிகமாகியது. வசூல் சக்கரவர்த்தி என்பது நிரந்தரமானது.
பாடல் காட்சிகளில் அவர் அனுபவித்து நடித்தார். அதனால்முன்னர் டி,எம்.எஸ் பாடல்களில் அவர் எந்த அளவுக்கு அப்பீலிங்காக தெரிந்தாரோ அதே மாதிரி தான் குண்டடிபட்ட பின்னும் கூட எஸ்.பி.பி பாடல்களிலும், ஜேசுதாஸ் பாடல்கள் அனைத்திலும் கடைசிவரை பாடல் காட்சிகளில் சோடை போனதேயில்லை என்பதை மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை செக் செய்து பார்த்துக்கொள்ளலாம். பாடல்களில் அவர் பிரத்யேக அசைவுகளை இப்போது யாராவது நடித்துக்காட்டும்போது அந்தக் கால மனிதர்களுக்கு கண்ணில் நீர் கோர்த்து விடும். ஸ்டண்ட் காட்சிகளில் அவரிடம் இருந்த quickness, டான்ஸில் அவரிடம் இருந்த quickness அலாதியானது. பாடல்களுக்கு அவர் வாயசைக்கும் அழகு.
ஐம்பது,அறுபதுகளில் அவர் முகத்தில் இருந்த களை அன்று மட்டுமல்ல, இனி எந்த நடிகனிடமும் எந்தகாலத்திலும் காணவே முடியாது.
இன்னொன்று மாறு வேடம் போட்டு விட்டால் எம்.ஜி.ஆர் நடிப்பில் புது பரிமாணம் வந்து விடும்.கூடு விட்டு கூடு பாய்வது போல ஆளே மாறிவிடுவார். மலைக்கள்ளன் படத்தில் வருகிற முசல்மான் பாய் வேஷம் துவங்கி எந்தப் படத்தில் வேண்டுமானாலும் எந்த நிபுணர் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளட்டு்ம்.’போயும்,போயும் மனிதனுக்கிந்த புத்தியைக்கொடுத்தானே’ பாடல் காட்சி , ‘எங்கள் தங்கம்’ படத்தில் மொட்டையாக ஐயர் வேடமிட்டு கதாகாலட்சேபம் செய்யும்போது பார்க்கவேண்டும். எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த எந்தப் படத்தில் மாறுவேஷமிட்டாலும் விஷேச பரிமாணத்தை தொடுவதை காணமுடியும்.
தனிப்பிறவி படத்தில் ஒரு காட்சியில் முருகன் வேடம் போட்டவர்.பொருத்தமாயிருக்கும். காதல் வாகனம் படத்தில் ஆங்கிலோ இந்தியப்பெண் வேடம்!
அவர் ஏசுநாதர் ஆக நடிக்க ஒரு படம் பூஜை போடப்பட்டது.அப்போது அவர் ஏசு வேடத்தில் நடிக்க எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் இப்போது கூட பார்க்க கிடைக்கின்றன.சாந்த சொரூபியாக ஏசு போலவே தான் இருப்பார்.
எம்.ஜி.ஆர் சிரிப்பு பற்றி 1960களில் தமிழ்வாணன் கேள்விபதிலில்- ”ஒரு குழந்தை முன் பல புகைப் படங்களைப் போட்டுப்பாருங்கள். அந்த்க் குழந்தை எம்.ஜி.ஆர் படத்தைத் தான் எடுக்கும். ஏனென்றால் எம்.ஜி.ஆரிடம் தான் உண்மையான சிரிப்பு இருக்கிறது.”
M.G.R's Beaming Smile !
COURTESY-
r.p.rajanehayam -net