https://www.youtube.com/watch?v=MrFYNuieH0M
Printable View
என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
தீபாவளித் திருநாளின் தீம் பாடல் என்றுமே காதல் மன்னர் தோன்றும் கல்யாணபரிசு பாடல் காட்சியே!!
Quote:
இன்று புகையில்லா தீபாவளி என்னுமளவில் சுற்றுசூழல் மாசு தடுப்பாக வெடிகள் இல்லாத பசுமை தீபாவளி கொண்டாடுமளவு சுற்றுப்புற சூழல் காற்றிலும் நீரிலும் ஒளியிலும் ஒலியிலும் உணவிலும் உடையிலும் உணர்விலும் கெட்டுப் போனதாக உருவகப் படுத்தப்படும் நிலையில் தீப ஒளியில் தீபாவளி எப்படி கொண்டாடப்பட்டது என்பதற்கு இப்பாடல் காட்சியே சாட்சியம் !!
.....சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு தீயேதுமில்லாமல் வெடித்திடும் கேப்பு ...இதுவே பசுமை தீபாவளி....பட்டுக்கோட்டையாரின் பார்வையில்...
https://www.youtube.com/watch?v=MrFYNuieH0M
Karaoke forms too...indelible kalyanaparisu diwali song!!
https://www.youtube.com/watch?v=9vyAfW_AjSc
https://www.youtube.com/watch?v=WUgWBQComsU
https://www.youtube.com/watch?v=VuR_75ahCPE
Gap filler!
Same Diwali song in the Hindi version Nasrana starring RajKapoor!
https://www.youtube.com/watch?v=V9Cr2RpVxxw
Happy DeepavaLi ! :) Celebrate with all sweets and kaaram - wheat halwa, almaond halwa, mysore pagu, adhirasam, paal kovaa,........, murukku, seedai, poochchi koodu, kaara boondhi, kaara sevu,.......... But, limit sugar intake ! :lol:
Also, play this song from Nayagan - naan sirithaal DeepaavaLi........
http://www.youtube.com/watch?v=1uf64EMKoN8
Have fun with mathaappu and 'cape'-u ! :)
Fireworks are banned here except for sparklers and fireworks that don't go above a few feet!
எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! :)
Ellorukkum Deepavali Vaazhthukkal
தீபாவளி ஸ்பெஷல்…
*********
“ணிக்ணிக்ணிக் என ஏதோ ஒரு பூச்சியோ ராக்கோழியோ மெல்லிய குரலில் ராகம் பாடிச் சென்றுகொண்டிருந்தது..
வாசலைக் கடந்து யாரோ சைக்கிளில் மணியடித்தவாறே செல்வது கொஞ்சம் ஒலி கூட்டி ப் பின் மெல்ல மெல்லத் தேய்ந்துசெல்வதும் காதில் விழுந்தது..விழுந்ததா இல்லை..
பின் அவள் குரல் மட்டும் கேட்டது..யுகத்துக்கு அப்பாலா..வெகு தொலைவிலா..இல்லை..வெகு நெருக்கத்தில் காதுக்கருகே…”ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம் அவம்மேல ஒரு ராணி ஆசைப்பட்டாளாம்..ஒரு நா ராணி என்ன பண்ணாளாம்..ராஜாவின் கோட்டையை முற்றுகையிட்டுட்டாளாம்..இப்படி…”
பாபு கொஞ்சம் கஷ்டப் பட்டே உதடுகளை விடுவித்தான்..கோட்டைகளாய் கற்பனைசெய்யப்பட்ட உதடுகள்.. செய்தவள் தங்கம்..அவள் பார்வையில் கேள்விக்குறி..பாபுவுக்குள்ளும் சிந்தனைகள்.. நான் செய்வது சரிதானா..இது யமுனாவிற்குச் செய்யும் துரோகமில்லையா..
ஏதோ பேச வாயெடுத்தவனைப் பேச விடவில்லை அவள்..”
ஹல்லோ….வாசகாஸ்.. வெய்ட் வெய்ட்.. ஏற்கெனவே எனக்கு நல்ல்ல பெயர்.. இதில் இப்படி ஆரம்பித்தால் இன்னும் நல்லதாகிவிடும். அதுவும் தீபாவளியும் அதுவுமா..
ஹச்சோ ..தலைப்பு போட மறந்துட்டேன்.. திரையில் மலர்ந்த நாவல்கள்…
எனில் இது தி.ஜானகி ராமன் எழுதிய மோகமுள் நாவலில் வரும் (கொஞ்சம்மாறியிருக்கும்..ஏனெனில் நினைவிலிருந்து எழுதுகிறேன்) முக்கியக் காட்சியில் முக்கியப்பாத்திரங்களின் மனவோட்டம்..
http://d.gr-assets.com/books/1327812102l/5054443.jpg
அது சரீ ஈ ஈ..
யாராக்கும் பாபு யாராக்கும் தங்கம் யாராக்கும் யமுனா..யாராக்கும் பாபுவின் இசைக்குக் குரு நாதரான ரங்கண்ணா…
கதைச்சுருக்கம் சொல்லலாம் என நினைத்தால் திகைக்கிறது மனது..இத்தனைக்கும் மோகமுள் நாவல் படித்து ஒரு இருபத்தைந்து வருடத்திற்கு மேலிருக்கும்..மூன்று முறை புத்தகமாய் வாங்கி யாரோ எடுத்துக் கொண்டு போய்விட அடுத்த முறை போகும் போது வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன்..
இருப்பினும் அது புத்தகமாய் எனது கலெக்ஷனில் பெருமையாய் வீற்றிருக்க மட்டும் செய்யும்..பின் என்ன.. நாவலின் விரியும் கதாபாத்திரங்கள் மனதுள் பதிந்திருக்கிறதே..
இருப்பினும் கொஞ்சம் சிரமம் பார்க்காமல் கீழே உள்ள இரண்டு லிங்க்ஸ் படித்து விட்டு என்னைத் தொடரலாம்..
http://www.kalachuvadu.com/issue-157/page86.asp
https://3konam.wordpress.com/2010/12...%E0%AF%8D%E0a/
சிலுசிலுவென்று மெல்லிய தென்றல் தடவிக் கொண்டிருக்க,படித்துறையில் அமர்ந்து காவிரியின் ஆற்று நீரில் கால் நனைத்திருக்கும் போது (கூடவே மரபுக்கவிதைப் புத்தகம் மடியில் இருக்கும்போது) ஏற்படும் சுகம் இருக்கிறதே.. அது போன்றஒரு சிலிர்ப்பு ஏற்படும் தி.ஜானகிராமனின் எழுத்துக்களைப் படிக்கும் போது.
அவரைப்பற்றி எழுதுவதென்றால் நிறைய எழுதலாம்..அவரது சிறுகதைகள் எனக்கு ரொம்பப்பிடிக்கும் நாவல்களில் மோகமுள், உயிர்த்தேன், அம்மாவந்தாள்..
மோகமுள்ளின் கதை எனச் சுருக்கமாய்ச் சொல்லவியலாது..
சின்னவயதிலிருந்தே தான் பார்த்திருந்த யமுனாவின் மீது ஈர்ப்பு – தன்னைவிட பத்து வயது மூத்தவள்- இருப்பினும் அது காதலா வெறும் மோகமா எனக் குழப்பங்கள் – இல்லை அது தான் தனது தான் தேர்ந்தெடுத்த இசைவாழ்வினைத் தொடரச் செய்வதற்கான விளக்கில் விடப்படும் நெய் எனப் புரிந்து கொள்கிறான்..என்ன பலவருடங்கள் ஆகிறது அதற்கு அவனுக்கும்.. அந்த வேட்கை, வேள்விக்கு ஆகுதியானபிறகு யமுனாவிற்கும்..( இதுகூட சரியாக எழுதியிருக்கிறேனா தெரியவில்லை)
நடுவில் அவன் வாழ்க்கையில் குறிக்கிடும் இளம்பெண் தங்கம்மா.. வயதில் முதியவருக்கு வாழ்க்கைப்பட்ட இளம் நங்கை..அவளுக்கு பாபுவிடம் வேண்டுவது உடலா..இல்லை எனமட்டும் இல்லை.. வாழ்க்கை.. அவளது தாபங்கள் அவளது வார்த்தையிலேயே கொஞ்சம் பார்க்கலாம்..
//“நேத்து நீங்க பாடினேள் பாருங்கோ. ‘மனசு விஷய’வா அதுதானே?”
“ஆமாம்.”
“இனிமேல் என் காதுபட அதைப் பாடாமல் இருக்கேளா?”
“ஏன்?”
“நீங்க பாடினா நல்லாத்தான் இருக்கு . . . பாட வேண்டாம்.”
“ஏன்?”
“என் கல்யாணத்தில் யாரோ ஒரு பெண் வந்து பாடினா அதை . . . எனக்கு அதைக் கேட்டால் பைத்தியம் பிடிச்சுப் போயிடும் போலிருக்கு.//
ஏனென்று பார்த்தால் அந்தப் பாடலின் சாரம்சம்.. விளக்கமாய் காலச்சுவடு லிங்க்கில் இருக்கிறது..
தங்கம்மாவிடம் ஏற்பட்ட மோக விழைவிற்குப் பிறகு யமுனாவிடம் அவளுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாக பாபு புலம்புவதும் இதனால் தான்.. தங்கம்மாவின் மரணம் தற்கொலை அவனுக்குள் ஏற்படுத்தும் அதிர்வலைகள் எல்லாம் நாவல் படிக்கும்போது கண் முன்னே விரியும்..
இந்த நாவலை எப்படிப் படமாக எடுத்திருப்பார்கள் என்று மிக ஆவல் எனக்கு இருந்தது.. சிதைக்காமல் இருக்கவேண்டுமே என்றபயமும் இருந்தது..
http://ecx.images-amazon.com/images/...L._SL1444_.jpg
நல்லவேளை கூடுமான வரையில் சிதைக்காமல் அப்படியே பாபு யமுனா பாபு ரங்கண்ணா பாபு தங்கம்மா பாபு வைத்தி பாபு ராஜம் என கதாபாத்திரங்களுடன் பாபுவான அபிஷேக்கை ஒன்றி இருக்கும்படி எடுத்திருந்தார் ஞான ராஜசேகரன்..
கடைசியில் அப்ரப்ட்டாக டபக்கென இதற்குத் தானா என யமுனா சொல்லப் படம் முடிவது நாவல் படிக்காதவர்களுக்குப் புரிவது சிரமம்..அதுவே நாவலில் பல பக்கங்களுக்கு விரியும் ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகும்..
இந்தப் பதிவு கூட காலச்சுவடு பதிவைப் படித்ததனால் விரிவாக எழுதவில்லை..அதைப் பார்த்தாலே புரியும்
யமுனாவாக அர்ச்சனா ஜோக்லேகர், ராஜமாக விவேக். தங்கம்மா வாக யாரெனத் தெரியவில்லை..ஆனால் வெகு பொருத்தமான முழியும் முழியுமான பெண், ரங்கண்ணாவாக நெடுமுடி வேணு.. என வெகு பொருத்தமான பாத்திரத் தேர்வு..
http://padamhosting.me/out.php/i5583...3h25m46s39.png
http://padamhosting.me/out.php/i5583...h24m14s140.png
மோகமுள் நாவலை என்றும் மறக்க முடியாது..அதைத் திரைப்படமாகத் தந்ததையும்..
அதில் உள்ள சில பாடல்கள்…
மெதுவாக இசை ஞானம் மனதோடு அரும்பும்
கமலம் பாத கமலம்..
https://youtu.be/KzCxeKXcY60
சொல்லாயோ வாய் திறந்து..
பாபு யமுனா ராஜம்
https://youtu.be/Q4WhrHfXF10
தங்கம்மா சொல்லாயோ வாய் திறந்து
https://youtu.be/czhul3eoTtI
நிறைய நாட்களாக எழுதவேண்டும் என்ற எண்ணம் முகிழ்த்து முழித்துக் கொண்டே இருக்க சரி எழுதிவிடலாமெனக் கொஞ்சம் கொஞ்சமாய் சில நாட்கள் ஒருவரி இருவரியாய் எழுதி..இதோ இட்டுவிட்டேன்.. எடிட்பண்ணி விட்ட விஷயங்கள் நிறைய.. சுவைக்குறைவின் மன்னிக்க..
வாசுவின் சிரமங்கள் செய்து பார்க்கும் போது தான் புரிகிறது.. பட் நான் இப்போது மோகமுள் பார்க்கவில்லை..முன்பு பார்த்தது தான்.. நேரம் கிடைத்தால் வார இறுதியில் பார்க்க வேண்டும்..
தியாக ராஜ கீர்த்தனை பாடல் + ஆங்கில விளக்கம்..
https://youtu.be/73h2vrdhxcQ
If one becomes a slave to the evil propensities of the five senses, how can he meditate on the holy feet of SrI RAma? Then where is the prospect of obtaining His grace? Is it not as ridiculous as lending the door of one's cottage to a neighbor and standing guard at one's own, all night trying to drive away the dogs itching to enter? It is as foolish as a faithless housewife going out to get some bran, leaving behind a potful of cooked rice to be carried away by monkeys. To advise such silly ones is like initiating a deaf person by whispering a sacred text in his ears.
சிக்கா...
சொல்லாயோ வாய் திறந்து பாடல் ( ஆண் குரல் ) படத்தில் ஒரு சரணம் மட்டுமே வரும். பாடுவது அருண்மொழியாம்.. ஆனால் ஆடியோ ரிலீசில் எம்.ஜி.ஸ்ரீகுமார் பாடி ரெண்டு சரணம் இருக்கு.... ( அருண்மொழியின் ஆடியோவும் இருக்கு...) எந்தக் குரல் உங்களுக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்லுங்கோ..
( தேடி லிங்க் கொடுக்க முடியலை.. தீபாவளி ஸ்வீட் சாப்பிட்டு உடம்பு டயர்ட் ஆயிருச்சு.. நீங்களே கண்டு பிடிச்சு கேட்டுட்டு பதில் சொல்லுங்கோ )
மதுண்ணா.. எம்.ஜி.ஸ்ரீகுமார் dhiறந்து ந்னு பாடறார்.. அருண்மொழி ‘திறந்து. மற்றபடி இரண்டுபேர் குரலுமே எனக்குப்பிடிச்சுருந்தது..
RARE STILL
VANISREE GREETING JAISANKAR
http://i67.tinypic.com/34sqdk5.jpg
Here's a classic featuring Jaisankar & Vanishree; ably helped by Kannadasan, V. Kumar, TMS & P. Susheela...
https://www.youtube.com/watch?v=B1GFVz3BNVw
வெகு அழகான பாடல் ராகதேவன்..
எனக்கு நினைவுக்கு வரும் இன்னொரு பாடல்
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
உலகம் என் புகழ் பாடட்டுமே
உயர்ந்தவள் நான் என்று சொல்லட்டுமே
புலவர் என் பெருமை பேசட்டுமே
உள்ளத்தை காட்டிடும் கண்ணாடி...
ம்ம் புலவர் ல நிறைய பாட் இல்லை போல..
Here is one from Paithiyakkaaran(1947)
Paattukkoru pulavan Bharathiyadaa......
No video clip from the movie is available. Listen to M.M.DandapaNi Desikar's rendition:
http://www.youtube.com/watch?v=70_DxxsWL6A
Courtesy: Dinamani
பானுமதி: 4. பூங்கோதையும்... கல்யாணியும்...
தெலுங்கிலும் தமிழிலும் பானுமதிக்கு வரவேற்பு தொடர்ந்தது. 1939---ல் அறிமுகமான பானுமதிக்குப் பத்து ஆண்டுகள் கடந்தும், நீடித்தப் புகழோடு பரபரப்பானப் பொற்காலமும் சேர்ந்து கொண்டது.
ஆந்திராவை ஒரு கலக்கு கலக்கிய பானுமதியின் ‘லைலா மஜ்னு’ வை அன்றைய பிரபல சினிமா நிறுவனமான ஜூபிடர் 1949 நவம்பர் 5-ல் தமிழில் வெளியிட்டது. இங்கும் அமோக வசூல் கிடைத்தது.
இளையராஜாவையே கட்டிப் போட்ட சூப்பர் ஹிட் பாடல்கள் அதில் ஒலித்தன.
சி.ஆர். சுப்பராமனின் இசையில் 1. ‘எனது உயிர் உருகும் நிலை - சொல்லுவாய் வான்மதி’, 2. பறந்து பறந்து செல்லும் பைங்கிளியே மறதியாகுமா?- இது நியாயமா? 3. பிரேமைதான் பொல்லாததா’ போன்ற பாடல்கள் நெஞ்சில் நிலைத்தவை.
ஹாலிவுட் கீதங்களை நம் பண்பாட்டுக்கு ஏற்ப சுவீகரிக்க கொஞ்சமும் தயங்காதவர் பானுமதி.
ஸ்வர்க்க ஸீமாவில் ரீடா ஹேவர்த் பாடலைப் பின்பற்றி பாவுறமா பறக்க விட்டதை, லைலா மஜ்னுவிலும் பின்பற்றினார்.
இம்முறை லாரென்ஸ் ஆலிவரின் ‘ஹாம்லெட்’ படத்தில் இருந்து கிடைத்த மெட்டை, ‘பிரேமை தான் பொல்லாதது’ என்கிற டூயட்டாக உயிர்ப்பித்தார்.
மஜ்னுவாக ஏ. நாகேஸ்வரராவும், லைலாவாக பானுமதியும் வாழ்ந்து காட்டியிருந்தார்கள்.
திரையில் லைலாவாக மறு பிறவி எடுத்த பானுமதியின் கமென்ட் இது.
‘என் கணவர் ஒரு டைரக்டர். என்னைப் போன்ற பிரபல நட்சத்திரத்தோட கணவராக இருந்துக்கிட்டு, அடுத்தவங்க கிட்ட வேலை செய்ய விரும்பல. அதுக்காகத் தானே, புதுசா ஒரு சினிமா கம்பெனி ஆரம்பிச்சார். அவர் இயக்கத்துல என் கேரக்டர்கு ஒத்து வராத படம் லைலா மஜ்னு. அழுது அழுது கண்ணு புண்ணாப் போச்சு. - பானுமதி (1993 பிப்ரவரி பொம்மையில்)
அதே நேரத்தில் பானுமதி குறித்த கண்டனங்களும் பரவலாக எழுந்தன.
நவம்பர் 1949 குண்டூசி இதழில் ‘மலாயா செண்டூல்- எம்.எஸ். ராதா’ என்கிற வாசகர் ஒரு கேள்வி எழுப்பினார்.
‘ஆந்திர நடிகையான பானுமதி இப்படியேன், மார்பகத்தில் துணியே இல்லாமல் ஆபாசமாய் நடிக்கிறார்? இதை அவரது கணவர் பார்த்துக் கொண்டு ஏன் சும்மா இருக்கிறார்...?’
‘நிஷானின்’ வரலாறு காணாத ஓட்டத்தைத் தொடர்ந்து, ஜெமினியின் ‘மங்கம்மா சபதம்’ பானுமதி- ரஞ்சன் மீண்டும் இணைந்து நடிக்க இந்தியில் ‘மங்களா’ என்ற பெயரில் ரீமேக் ஆனது.
பாரதம் உலகின் மிகப் பெரிய குடியரசு நாடாக, ஜெய பேரிகை கொட்டிய ஜனவரி 26, 1950. ஒட்டு மொத்த இந்தியாவெங்கும், பானுமதியின் வெற்றிக்கொடி பட்டொளி வீசிப் பறந்தது.
1949 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த நடிகையாக பானுமதியைத் தேர்வு செய்து கவுரவித்தது சென்னை சினிமா ரசிகர்கள் சங்கம்.
1951ல் பி.என். ரெட்டியின் வாகினி பிக்சர்ஸில் பானுமதி நடித்தது ‘மல்லீஸ்வரி’ தெலுங்கு வெற்றிச் சித்திரம். என்.டி. ராமாராவ் ஹீரோ. பானுமதியின் இனிய பாடல்களும், அத்தனை இலேசில் மறக்க முடியாத நடிப்பும் மல்லீஸ்வரியை ஓஹோவென்று ஓட வைத்தன.
லைலா மஜ்னுவில் லாபம் குவித்த ஜூபிடர், பானுமதி நாயகியாக நடிக்க நேரடியாகத் தயாரித்த படம் ராணி. 1952 கோடையில் வெளியானது. ராஜா ராணி கதை. ஓடாமல் போனது.
லைலா மஜ்னு வெற்றிக்குப் பின்னர் பரணி பிக்சர்ஸின் அடுத்த படைப்பு ‘காதல்’. அதே பானுமதி- ஏ. நாகேஸ்வர ராவ் ஜோடி. பானுமதியின் ஆஸ்தான இசை அமைப்பாளர் சி.ஆர். சுப்பராமனின்
‘இன்பக் காவியம் ஆகும் வாழ்வே காதலினாலே’ போன்ற இனிய பாடல் இடம் பிடித்தும் ‘காதல்’ தோல்வியில் முடிந்தது.
பானுமதி ராசியான தனது மகன் பெயரிலேயே பரணி ஸ்டுடியோவை சாலிகிராமத்தில் உருவாக்கினார். அங்கு உருவான சண்டிராணி, இந்திய சினிமா சரித்திரத்தில் இடம் பெற்ற பானுமதியின் சாதனைச் சித்திரம்!
பானுமதியின் சண்டிராணி சாகஸங்கள்:
‘ஒரு தடவை என்னைக் காப்பாத்தறதுக்காக எம்.ஜி.ஆர்., நம்பியாரோட கத்திச் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார். நான் இந்த சண்டைக்கு நடுவே தவித்துக் கொண்டிருப்பதாக காட்சி. எனக்குத்தான் இந்த மாதிரி கட்டங்கள் தாங்காதே...
அந்தக் காட்சி படமானதும் நான் ‘எம்.ஜி.ஆரிடம், ‘உங்க வாளை என் கிட்ட கொடுத்தா, என்னை நான் காப்பாத்திக்க மாட்டேனா...?’ என்றேன்.
எம்.ஜி.ஆர். அதை ரொம்பவே ரசித்துச் சிரித்தார்.
உண்மையில் நான் சண்டிராணி படத்தில் நடிக்கும் போது வாள் சண்டையில் பயிற்சி எடுத்திருந்தேன். அதோடு அந்தப் படத்துக்குத் தேவையான குதிரை ஏற்றமும் கற்றேன்.
நான் கத்தி வீச எங்கே, எப்படிப் பயின்றேன் என்பதே கூட ஆச்சர்யமானதாக இருக்கும். பஞ்ச பாண்டவர்களின் வம்சத்தினர் கல்கத்தாவில் வாழ்வதாகக் கூறுகிறார்கள்.
அங்கு பாண்டவர் பரம்பரையில் பிறந்த ஒரு பெரியவர், எனக்கும் ரொம்ப நல்லாவே கற்றுக் கொடுத்தார். அதில் அடைந்த தேர்ச்சியால் சண்டி ராணியில் வேக வேகமாக, நான் வாளைச் சுழற்றி ரசிகர்களை பிரமிக்க வைக்க முடிந்தது.
அதனால்தானோ என்னவோ சினிமாவில் கூட என்னை நானே காப்பாற்றிக் கொள்ள விரும்பினேன்.
1953லேயே சண்டி ராணில சண்டி, சம்பான்னு இரட்டை வேஷங்கள்ள நடிச்சேன். ஒருத்தி காட்டுல இருப்பா. இன்னொருத்தி அரண்மனையில இளவரசியா வாழ்வா. என். டி. ராமாராவ் ‘கிஷோர்’ன்ற பேர்ல மந்திரி மகனா வருவாரு.
வில்லனைப் பழிக்குப் பழி வாங்கி அவன் கிட்டயிருந்து பெத்தவங்கள காப்பாத்தற, ஒரு ஆக்ஷன் ஹீரோ செய்ய வேண்டிய ரிவென்ஜ் சப்ஜெக்ட் அது. நான் தைரியாமா நடிச்சேன்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே நாள்ள தமிழ், தெலுங்கு, இந்தின்னு மூணு மொழிகள்ள 1953 ஆகஸ்டு 28ல் வெளியிட்டேன். எனக்கு அப்ப முழுசா இருபத்தேழு வயசு.
‘ஒரு பொம்பள தனியா நின்னு ஜெயிச்சிட்டா பாரு!’ன்னு, ஏவிஎம். செட்டியார் எல்லார் கிட்டயும் என்னைப் பாராட்டிப் பெருமையா பேசுவாராம். -பானுமதி.
அபூர்வ சகோதரர்களை உல்டா செய்து பானுமதி சண்டிராணி எடுத்திருந்தும், அதுவும் நன்றாகவே ஓடியது.
சண்டி ராணி இசை அமைப்பாளர் சி.ஆர். சுப்பராமன் அகால மரணம் எய்த, மிச்சத்தைப் பூர்த்தி செய்தவர் எம்.எஸ். விஸ்வநாதன். அதன் மூலம் எம்.எஸ்.விக்கு மிகப் பெரிய திருப்புமுனையை உண்டாக்கியவர் பானுமதி.
அவர் சொந்தக்குரலில் பாடி அதில் இடம் பெற்ற மகா அற்புதமானப் பாடல்
‘வான் மீதிலே... இன்பத் தேன் மாரி பெய்யுதே...!’ இளையராஜாவை வெகுவாகக் கவர்ந்தது.
சண்டிராணியில் இடம் பெற்ற அதே பாடல் மீண்டும் ஏவி.எம்மின் மெல்லத் திறந்தது கதவு படத்தில் (வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே...) புதுமையாக ஒலித்தது.
தன்னை அசத்திய எம்.எஸ்.வி.யின் மெட்டை, மெல்லிசை மன்னருடன் சேர்ந்து பணியாற்றிய வேளையில் அவர் முன்னிலையிலேயே மீண்டும் பயன்படுத்திக் கொண்டார் இசைஞானி.
எடுத்த எடுப்பில் மூன்று மொழிகளிலும் சொந்தமாகப் படத்தைத் தயாரித்து, இயக்கி அதில் வெற்றியும் அடைந்த முதல் பெண் டைரக்டர் பானுமதி! என வரலாறு பதிவு செய்து கொண்டது. இன்று வரையில் மிக அபூர்வமான சாதனை!
சண்டி ராணிக்குப் பிறகு பானுமதிக்குப் பெரும் புகழைத் தேடித் தந்த படம் மலைக்கள்ளன். பானுமதியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த முதல் படமே வெற்றிச் சித்திரமாகவும், தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப் படமாகவும் விளங்கியது தனிச் சிறப்பு.
மலைக்கள்ளன் நாயகி பானுமதி பற்றிய ‘குமுதம்’ விமர்சனம்:
‘பானுமதிக்குப் ‘பூங்கோதை’ பாகம் வெகு பொருத்தம். ஏய் யார் நீ... ? என்று அவர் போடும் அதட்டலைக் கேட்டு அஞ்சாதவர்கள் இரும்பு மனிதர்களாகத்தான் இருக்க வேண்டும்.
கதாநாயகியை ஒரு முறை கூடக் கண்ணீர் விடச் செய்யாமல் எடுக்கப்பட்ட, முதல் தமிழ்ப் படம் மலைக்கள்ளன்’ என்று எண்ணுகிறோம். பானுமதியின் நாட்டியம் சுகமில்லை. பாட்டுக்கள் மதுரமாக இல்லை.’
சரோஜாதேவி அறிமுகமாவதற்கு முன்பு தொடர்ந்து வெற்றி வலம் வந்தது எம்.ஜி.ஆர் - பானுமதி ஜோடி. மலைக்கள்ளனின் அமர்க்களமான வசூல் ஓட்டத்துக்குப் பின்னர், அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க கிராக்கி கூடியது.
மாடர்ன் தியேட்டர்ஸ் அலிபாபா அடுத்து வெளியானது. சேலத்தில் அதன் படப்பிடிப்பில் பானுமதிக்கு கிடைத்த இன்னொரு அற்புத இணை நடிகர் திலகம்!
முதன் முதலாக சிவாஜியைச் சந்தித்தது பற்றி பானுமதி விவரமாக கூறியுள்ளார்.
‘நெப்டியூன் ஸ்டுடியோவில் ஜூபிடர் பிக்சர்ஸ் ராணி படத்தில் நடித்த சமயம். ஒருநாள் அவர்களது ‘மனோகரா’ படக் காட்சிகளைப் பார்த்து விட்டு செட்டுக்குத் திரும்பினேன்.
அவரது நடிப்பு என்னைக் கவர்ந்து விட்டிருந்தது. அன்றைய தினம் அரங்கில் என்னுடன் நடித்தவர்களிடமெல்லாம், கணேசனின் திறமையைப் பற்றிச் சொல்லிக் கொண்டே இருந்தேன்.
சிவாஜிகணேசன் நடித்து நான் பார்த்த முதல் படம் இதுவே. பின்னர் நான் பார்த்த சினிமாக்களில் அவரது ஆற்றல் மேலும் மேலும் பெருகியது.
தவிர, ஒரு சிறந்த நடிகர் என்கிற முறையில் அவர் மீதுள்ள மதிப்பும் நம்பிக்கையும் என்னிடம் வளர்ந்தன. மனோகரா பார்த்துச் சில மாதங்கள் சென்றிருக்கும்.
சேலம் பக்கம் ஏதோ வேலையாக வந்த சிவாஜி, அன்றைக்கு மாடர்ன் தியேட்டர்ஸில் அலிபாபா ஷூட்டிங்கில் இருந்தார். அங்கே தான் அவரை முதன் முதலாக நேரில் பார்த்தேன்.
சிறிது நேரம் காமிராமேன் டபிள்யூ. ஆர். சுப்பாராவ் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு கணேசன் கிளம்பிச் சென்றார்.
அந்த சில நிமிஷங்களில்
என்ன அருமையாக நடிக்கிறார் இவர்! இவருடன் எப்படியாவது நான் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும். என்ற தன் விருப்பத்தை சுப்பாராவிடம் சொன்னாராம்.
சிவாஜி போன பிறகு, அதை என்னிடம் கூறிய சுப்பாராவ், ‘என்னம்மா உங்களுடன் நடிக்கணும்னு இவர் இப்படித் துடிக்கிறாரே!’ என்றார்.
சென்னைக்குத் திரும்பி வந்த சில நாள்களிலேயே அதற்குப் புதிய சந்தர்ப்பம் கிடைத்தது.
கல்கியின் ‘கள்வனின் காதலி’ கதையைப் படமாக்க என்னைத் தேடி வந்தார் ரேவதி ஸ்டுடியோ அதிபர், டைரக்டர் வி.எஸ். ராகவன்.
‘இந்தப் படத்தில் கதாநாயகி கல்யாணியாக நீங்கள் நடிக்க வேண்டும். முத்தையனாக சிவாஜி நடிக்கப் போகிறார்... உங்களுக்குச் சம்மதமா?’ என்றார்.
‘நான் என்ன சொல்வது...? கணேசன் மிகச் சிறந்த நடிகர். அவருடன் நடிப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே...! என உடனடியாக ஒத்துக் கொண்டேன்.- பானுமதி.
‘கள்வனின் காதலி’ 1955 தீபாவளி வெளியீடு. சென்னையில் கெயிட்டி, மகாலட்சுமி, சயானி, ராஜகுமாரி, பிரபாத் என ஐந்து தியேட்டர்களில் ரிலிசானது. அந்நாளில் அது ஓர் அபூர்வ நிகழ்வு. பிரம்மாண்டமான ஜெமினி சித்திரங்கள் கூட மூன்று அரங்குகளில் மட்டுமே நடைபெறும்.
அதே நாளில் சிவாஜியின் இன்னொரு படமான கோட்டீஸ்வரனும் வெளியானது. அதில் அவரது ராசியான பத்மினி ஜோடி. கோட்டீஸ்வரன் முழு நீள நகைச்சுவைச் சித்திரம். வீணை எஸ். பாலச்சந்தர் கூட சிரிப்பு காட்டினார்.
திரையிட்ட ஐந்திலும் கள்வனின் காதலி 80 நாள்களைக் கடந்து ஓடி நன்கு வசூலித்தது.
மூன்று தீபாவளிகளைக் கண்ட ஹரிதாஸ் பட இயக்குநர் சுந்தர்ராவ் நட்கர்ணியின், சொந்தத் தயாரிப்பு இயக்கத்தில் கோட்டீஸ்வரன் உருவானது. இருந்தும் கள்வனின் காதலி பிரமாதமாக ஓடியது. காரணம் சிவாஜி- பானுமதி இருவருமே விட்டுக் கொடுக்காமல் நடித்திருந்தார்கள்.
நூறாவது நாள் விழா எடுத்தால் ஐந்து தியேட்டர் ஊழியர்களுக்கும் போனஸ் தர வேண்டியிருக்கும். அதனால் கிடைத்த வசூலோடு ரேவதி ஸ்டுடியோ திருப்தி அடைந்தது. கள்வனின் காதலியில் பானுமதி பாடியதில் ‘வெயிலுக்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு’ சூப்பர் ஹிட்.
1955 தீபாவளி தொடங்கி தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான நடிப்புப் போட்டி முதன் முதலாக உருவானது.
‘கள்வனின் காதலியில்’ நடித்தது பற்றி நடிகர் திலகம்:
‘கள்வனின் காதலி’யில் பானுமதி ஹீரோயின் என்று டைரக்டர் ராகவன் சொன்னதும் எனக்குப் பெருமையாக இருந்தது. படப்பிடிப்புக்காகச் சென்றேன்.
ராகவன் என்னை பானுமதிக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஒரு பெரிய நடிகை, நான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பிருந்தே, நடித்துப் பிரபலமாக விளங்கி வரும் சிறந்த நடிகை என்ற உணர்வோடு வணக்கம் என்றேன்.
அன்றைய தினம் நான் பெண் மாதிரியும், அவர் ஆண் பிள்ளை போலவும் பேசி கிண்டல் செய்யும் தமாஷான காட்சி ஒன்றை எடுத்ததாக நினைவு.
முந்நூறு படங்களில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஐம்பதுக்கும் மேற்பட்ட நாயகிகளுடன் நடித்தவர் சிவாஜிகணேசன். 1970ல் ராமன் எத்தனை ராமனடியோடு விரைந்து 140 படங்களை முடித்தத் திருப்தி !
சற்றே விரும்பித் தனது படப்பட்டியலை வாசித்து, அதில் ஒவ்வொன்றைப் பற்றியும் தன் எண்ணங்களை வரைந்தார்.
கள்வனின் காதலி பற்றிக் குறிப்பிடுகையில், ‘தலை சிறந்த நடிகையான பானுமதியுடன் இணைந்து எப்படி நடிக்கப் போகிறோம், என்று நான் பயந்து நடித்த படம்’ என்று எழுதினார். வேறு எந்த நடிகைக்கும் வழங்காத மதிப்பை பானுமதிக்குத் தந்தார்.
கிட்டத்தட்ட ஒரு தலைமுறை காலம்(1955 -1970) கடந்திருந்தும், அதே பழைய பணிவை, வி.சி. கணேசன் போன்ற யுகக் கலைஞரிடம் பெற பானுமதியால் மட்டுமே முடிந்தது!
‘மலைக்கள்ளன், - கள்வனின் காதலி’ எம்.ஜி.ஆர்.-சிவாஜியோடு முதன் முதலாக பானுமதி சேர்ந்து நடித்த இவ்விரு படங்களும் தமிழின் புகழ் பெற்றப் புதினங்கள்.
இரு கதைகளிலும் கதாநாயகன் திருடன். ஆனால் மிகவும் நல்லவன். இரண்டிலும் ஒரே நாயகி பானுமதி. பூங்கோதைக்கும், கல்யாணிக்கும் நடிப்பில் எத்தனை எத்தனை வித்தியாசம் காட்டி இருக்கிறார் பானுமதி!
13/11/2015
From Facebook
இசையரசிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் !!
அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள்!!
இன்று திரையிசைக்குயில், இசையரசி
பி.சுசீலா அவர்களின் பிறந்த தினமாகும். அவர் நோய், நொடியின்றி நீடூழி வாழ இறைவனை பிரார்த்திப்போம்.
கான சரஸ்வதி,தெய்வப் பாடகி,திரையுலக பொக்கிஷம்,கலைவாணி சுசீலாம்மா
அவர்களின் 82-வது பிறந்த நாளான இன்று அவரை வணங்கி புகழ் பாடுவோம்.காலம் காலமாக தான் பாடிய இனிய தமிழ்ப் பாடல்களால் நம்மையெல்லாம் மகிழ்வித்திருக்கிறார் இசையரசி
பி.சுசீலா அவர்கள்.
நாட்டில் சிலரைப் பார்க்கையில் இவர் ஏன் பிறந்தார் என்று கேள்வி தோன்றும். இசையரசியின் இன்னிசைப் பாடல்களைக் கேட்கும் பொழுதுதான் இவர் நமக்காகப் பிறந்தார் என்று தோன்றும்.
எத்தனை பாடல்கள்! தாலாட்டும் தாயாக, ஆதரவூட்டும் மனைவியாக, நல்லதொரு தோழியாக, குறும்பு மிக்க சுட்டிப் பெண்ணாக, எழுச்சியூட்டும் புரட்சிப் பெண்ணாக, நம்முடைய நெஞ்சில் இருக்கும் சோகத்தையெல்லாம் நெருப்பிட்டு உருக்கி கண்ணீராய் வழிந்து ஓடச் செய்து மனதை இலேசாக்கும் ஆதரவாக, இறைவன் புகழைப் பாடி நம்மை பரவசத்தில் ஆழ்த்தும்
வழிகாட்டியாக என்று பலப்பல உணர்ச்சிகளில் தனது இனிய குரலால் பாடியிருக்கிறார்.
வாழ்க அவரது புகழ்..!!
வளர்க அவரது திரைப் பணி...!!
Courtesy: Tamil Hindu
காற்றில் கலந்த இசை 30 - அன்பைத் தேடும் மனதின் பாடல்
மனம் ஒரு விசித்திர உலகம். ஒருவர் தன் வாழ்வில் கடந்துவந்த மனிதர்களை நிரந்தரமாகக் குடியமர்த்தியிருக்கும் பிரதேசம். அனுபவங்களின் நிழல்கள் நிரந்தரமாகப் படிந்திருக்கும் அந்த இருள் குகைக்குள், இளம் வயதில் எதிர்கொள்ளும் கசப்பான அனுபவங்கள் கோர உருவங்களாகத் தங்கிவிடும்.
எல்லைகளற்று விரியும் மனதை நிர்வகிக்கும் ஆற்றல் இல்லாதவர்கள் அதன் எதிர்மறையான எண்ணங்களுக்குப் பலியாகிவிடுவதுண்டு. அப்படியான ஒரு மனிதனைப் பற்றிய கதைதான் பாலுமகேந்திராவின் ‘மூடுபனி’(1980). ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் ‘சைக்கோ’ படத்துக்கு மரியாதை செய்யும் விதத்தில் இப்படத்தை எடுத்ததாகப் பின்னாட்களில் குறிப்பிட்டார் பாலுமகேந்திரா.
பிரதாப் போத்தன், ஷோபா நடித்த இப்படத்தில் கல்கத்தா விஸ்வநாத், பானுச்சந்தர், மோகன் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இளையராஜாவின் 100-வது படம். தன் முதல் படத்திலேயே இளையராஜாவுடன் பணியாற்ற விரும்பினாலும், அது சாத்தியமானது தனது மூன்றாவது படமான மூடுபனியில்தான் என்று பாலுமகேந்திரா குறிப்பிட்டிருக்கிறார்.
கதாபாத்திரங்களின் மன உணர்வுகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் இசையும், அர்த்தமுள்ள மவுனங்களும் நிறைந்தவை பாலுமகேந்திராவின் படங்கள். அவரது பயணம் முழுவதும் அவருக்குத் துணை நின்றவர் இளையராஜா.
‘பருவ காலங்களின் கனவு’ எனும் பாடலுடன் படம் தொடங்கும். எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன் பாடிய இப்பாடல் இனிமை பொங்கும் உற்சாகத்தின் இசை வடிவம். மோட்டார் சைக்கிள் பில்லியனில் அமர்ந்து காதலனை அணைத்தபடி செல்லும் பெண்ணின் குதூகலத்தைப் பிரதியெடுக்கும் பாடல் இது. கங்கை அமரன் எழுதியது. காற்றைக் கிழித்துக்கொண்டு விரையும் வாகனத்தின் வேகமும், கட்டற்ற சுதந்திரத்துடன் துடிக்கும் மனதின் பாய்ச்சலும் இப்பாடல் முழுவதும் நிரம்பித் ததும்பும்.
‘தகுதகுததாங்குதா தகுதகு’ என்று களிப்புடன் கூடிய குரலில் ஒலிக்கும் ஜானகியின் ஹம்மிங் இப்பாடல், சென்றடையும் தூரத்தை அதிகரித்துக்கொண்டே செல்லும். பாடல் முழுவதும் அதிர்ந்துகொண்டே இருக்கும் டிரம்ஸ், அதீத மகிழ்ச்சியில் வேகமாக அடித்துக்கொள்ளும் இதயத் துடிப்பை நினைவுபடுத்தும். ஒரே ஒரு சரணத்தைக் கொண்ட இப்பாடலின் நிரவல் இசையில் பெண் குரல்களின் கோரஸ், மாலை நேரச் சூரியக் கதிர்களினூடே வாகனங்கள் மீது மிதந்துசெல்லும் அனுபவத்தைத் தரும் எலெக்ட்ரிக் கிட்டார் என்று ஒரு இன்பச் சுற்றுலாவை இசைத்திருப்பார் இளையராஜா.
உல்லாசம் ததும்பும் மலேசியா வாசுதேவனின் குரல் பாடலின் மிகப் பெரிய பலம். மெல்லிய உணர்வுகள் கொண்ட இளம் காதலியை அரவணைக்கும் குரலில், ‘தழுவத்தானே தவித்த மானே…’ என்று பாந்தமாகப் பாடியிருப்பார்
‘ஸ்விங்… ஸ்விங்’ எனும் ஆங்கிலப் பாடலை டாக்டர் கல்யாண் பாடியிருப்பார். விஜி மேனுவல் எழுதிய இந்தப் பாடல், கட்டுப்பாடுகளை உடைத்தெறியும் உத்வேகத்தைத் தரும் வகையில் இசைக்கப்பட்டது. எலெக்ட்ரிக் கிட்டார் இசையில் தெறிக்கும் உத்வேகம் பிரதாப் போத்தனுக்குள் மறைந்திருக்கும் மிருகத்தைத் தட்டியெழுப்பும். சித்தியின் கொடுமையால் அத்தனை பெண்களையும் வெறுக்கும் அந்தப் பாத்திரத்தின் தன்மையை, படத்தின் போக்கில் பின்னணியில் ஒலிக்கும் இந்தப் பாடல் உணர்த்திவிடும்.
அதேசமயம், மறைந்துபோன தனது தாயின் மென் சுபாவத்தைக் கொண்ட பெண்ணின் (ஷோபா) பின்னால் பித்தேறிச் சுற்றுவான் நாயகன். அவனது மனதுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கும் தாலாட்டுப் பாடல் ‘அம்மா பொன்னே ஆராரோ’. உமா ரமணன் பாடியிருக்கும் இந்தக் குறும்பாடல், நாயகனின் ஆழ்மனதின் வேதனைகளுக்கு மருந்திடும் மந்திரம்.
இப்படத்தின் மிக முக்கியமான பாடல், ஜேசுதாஸ் பாடிய ‘என் இனிய பொன் நிலாவே’. கங்கை அமரன் எழுதிய இப்பாடல், உலக அளவில் கிட்டார் இசையின் நுட்பங்களையும், அழகியல் கூறுகளையும் கொண்ட மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று.
பெங்களூரிலிருந்து ஊட்டிக்கு ஷோபாவைக் கடத்திவந்திருக்கும் பிரதாப், தன் காதலை ஏற்றுக்கொள்ளுமாறு கெஞ்சுவார். உயிர் பயத்துடன் அங்கு தங்கியிருக்கும் ஷோபா, ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக, கிட்டாரும் கையுமாக இருக்கும் பிரதாப்புக்குப் பாடத் தெரியுமா என்று கேட்பார். தன் மனதின் குரலை வெளிப்படுத்தும் விதமாக, சற்றே கூச்சத்துடன் பாடத் தொடங்குவார் பிரதாப்.
மெல்லிய கிட்டார் ஒலியுடன் தொடங்கும் இப்பாடலின் வழியே, சுய இரக்கமும் மர்மமும் நிறைந்த அம்மனிதனின் ஆழ்மனதில் கிடக்கும் அன்பு மேலேறி வரும். நிகழ்விடத்திலிருந்து கனவுலகுக்குச் செல்லும் அவன், அந்த உலகில் தன் காதலியின் அருகாமையை, அன்பை உணர்வான்.
முதல் நிரவல் இசையில் தேவதைகளின் வாழ்த்தொலியாக ஒலிக்கும் பெண் குரல்களின் கோரஸைத் தொடர்ந்து அடிவானத்தில் மிதக்கும் மாலை நேரத்து சொர்க்கம் நம் மனதில் உருப்பெறும். இரண்டாவது நிரவல் இசையில், கற்பனை உலகின் சவுந்தர்யங்களை உணர்த்தும் வயலின் இசைக்கோவையும், பெருகிக்கொண்டே செல்லும் காதலின் வலியை உணர்த்தும் எலெக்ட்ரிக் கிட்டார் இசையும் ஒலிக்கதிர்களாக நம்முள் ஊடுருவதை உணர முடியும்.
காதலுக்காக இறைஞ்சும் மனமும், இருட்டு உலகிலிருந்து வெளிச்சத்தை நோக்கிய பயணத்துக்கு ஆயத்தமாகும் நம்பிக்கையும் கலந்த குரலில் பிரவாகமாகப் பாடியிருப்பார் ஜேசுதாஸ். ‘தொடருதே தினம் தினம்’ எனும் வரியைப் பாடும்போது அவர் குரலில் சந்தோஷக் குளிர் தரும் சிலிர்ப்பு தொனிக்கும். அன்பைத் தேடி அலையும் மனதின் தற்காலிக ஏகாந்தம் அது!
Courtesy: Tamil Hindu
நினைவுகளின் சிறகுகள்: கே.ஏ. தங்கவேலு - அண்ணே என்னைச் சுடப்போறாங்க!
‘புது வாழ்வு’ படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தங்கவேலு, டி.ஏ. மதுரம் | படங்கள் உதவி: ஞானம்
‘புது வாழ்வு’ படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தங்கவேலு, டி.ஏ. மதுரம் | படங்கள் உதவி: ஞானம்
சந்திரபாபுவைப் போலவே 1950-களில் நல்ல மார்க்கெட்டில் இருந்த காலம் தொடங்கி, பின்னால் நாகேஷ் காலம், சோ, தேங்காய் சீனிவாசன்,சுருளி ராஜன் காலங்களையும் தாண்டிக் கொஞ்சமும் சலிப்பு ஏற்படுத்தாத, பொறி சற்றும் குறையாத நடிப்பு இவருடையது.
‘கல்யாண பரிசு’ பைரவன் மட்டுமல்ல. ‘அறிவாளி’ படத்தில் முத்துலட்சுமியுடன் பூரி சுடும் காட்சி, தெய்வப்பிறவியில் “அடியே, நீ என்ன சோப்பு போட்டாலும் வெள்ளையாக மாட்டே”, “பார்த்தியா, இதெல்லாம் எடுத்தா அதெல்லாம் வரும்னு சொன்னனேக் கேட்டியா” போன்ற பல வசனங்கள் பிரபலம். வீரக்கனல்’ படத்தில் “தப்பித்தவறி அடி ஒங்க மேல பட்டுருச்சின்னு வச்சிக்க்க்கிங்ங்ங்ங்...க..” என்று தங்கவேலு பேசும் வசனம்!
“தங்கவேலு சுவாமியாக வந்ததும் நாங்களே! வேலுத்தங்கமாக வந்ததும் நாங்களே! காதலர்ர்ர்ரா...க வந்ததும் நாங்களே!” என ‘அடுத்த வீட்டுப் பெண்’ படத்தில் பேசுவதும் மறக்க முடியாதது. ‘மிஸ்ஸியம்மா’வில் பாட்டு கற்றுக்கொள்ளும் தங்கவேலு. அப்போது ஜெமினி அந்த அறைக்குள் வந்தவுடன் வெட்கப்பட்டுத் தவிக்கிற காட்சி!
‘திருடாதே’ படத்தில் “ பிசாசு ஏன் புரோட்டா கடைக்கு வருது? ஒரு வேளை குஞ்சு பொரிச்சிரிக்குமோ?’’
‘நம் நாடு’ படத்தில் “ ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்” “கொல பண்ணது கூட லேட்டுங்க. நான் அமுக்குனதுலதான் செத்தான்!’’ என்ற வசனம். இவையெல்லாம் அந்தக் கால திரைப்பட நகைச்சுவையில் முத்திரை வசனங்கள்! வடிவேலுவின் வசனங்களையும் கவுண்டமணியின் கவுன்டர்களையும் வைத்து இன்று இணைய உலகின் ‘நையாண்டி’ பதிவுகளும் பின்னூட்டங்களும் பிழைப்பு நடத்துவதுபோல் அன்றைய திண்ணைப் பேச்சுப் பெரிசுகளுக்குத் தங்கவேலுவின் வசனங்கள்தான் வாய்ச்சரக்கு.
சந்தானம் தனக்குப் பிடித்த காமெடியன்களாக தங்கவேலுவையும் கவுண்டமணியையும் அடிக்கடி குறிப்பிடுகிறார். சந்தானத்தின் நடிப்பில் கவுண்டமணி தெரியும் அளவுக்கு தங்கவேலு தெரிவதில்லை. இதற்கு முக்கியமான காரணம் தங்கவேலுவின் நாசூக்கான நடிப்புதான். தங்கவேலு எந்தப் படத்திலும் கல்யாணப் பெண்- மாப்பிள்ளையைப் பார்த்து “இவ என்ன யாரோடயாவது ஓடிப் போயிட்டாளா? இல்ல இவன்தான் செத்துப் போயிட்டானா?” என்று கேட்கவே மாட்டார். தொந்தரவான வில்லனைக் கூட “அட நீ நல்லாருக்க” என்பார்.
‘பணம்’(1952) படத்தில் வயதானவராக நடித்த பின்தான் தங்கவேலு பிசியான நடிகரானார். ‘பணம்’ படத்தில் நடித்ததற்காகப் படத்தின் தயாரிப்பாளர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அந்தக் காலத்தில் தங்கவேலுவுக்கு 5,000 ரூபாய் கொடுத்தாராம். இவரும் அந்தப் பணத்தை வீட்டுக்குக் கொண்டுபோய் காட்ட, இவருடைய பெரியப்பா “அடப் பாவி . அன்னமிட்ட வீட்டுல கன்னமிடலாமாடா? கலைவாணர்கிட்ட திருடுனா நீ விளங்கவே மாட்ட”ன்னு திட்டி அடித்து இழுத்துக்கொண்டு என்.எஸ்.கேயிடம் அழைத்துக்கொண்டு போனார். என்.எஸ்.கே “அந்த பணம் தங்கவேலுவுக்கு நான் கொடுத்த சம்பளம்” என்று சொன்னபோதுதான் சமாதானம் ஆனாராம்.
எம்.ஜி.ஆர் அறிமுகமான ‘சதி லீலாவதி’ (1936) திரைப்படத்தில் தங்கவேலுவுக்கு ஒரு சின்ன பாத்திரம். அதே படத்தில் என்.எஸ்.கே, டி.எஸ் பாலையா போன்றோரும் நடித்தார்கள். “இன்னைக்கு உன்னை ஷூட் பண்ணப் போறோம்”னு இயக்குநர் தங்கவேலுவிடம் சொன்னதும் இவர் பதறிப் பயந்து என்.எஸ்.கே-விடம் போய் “அண்ணே, என்னை சுடப் போறாங்களா?” என்று அழுதாராம். “ பைத்தியக்காரா! ஒன்னைப் படம் பிடிக்கப் போறாங்கடா!” என்று என்.எஸ்.கே விளக்கம் சொன்னாராம்.
தங்கவேலுவுக்கு பின்னணிப் பாடல்கள் பலவற்றைப் பாடியவர் எஸ்.சி.கிருஷ்ணன்.
‘கண்ணே நல்வாக்கு நீ கூறடி, நான் நாலு நாளில் திரும்பிடுவேன். என் செல்வக் களஞ்சியமே! என் சின்னக்கண்ணு மோகனமே!’
சீர்காழி சில பாடல்கள் பாடினார். பிரபலமான ‘ரம்பையின் காதல்’(1956) படப் பாடல். ‘சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே’சுடுகாட்டில் தங்கவேலு பாடுவதாகக் காட்சி.
பி.பி.ஸ்ரீனிவாஸும் பாடியிருக்கிறார். ‘அடுத்த வீட்டுப் பெண்’ படத்தில் ‘கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே!’ ரொம்பப் பிரபலம். கண்களை நன்கு உருட்டி நடிக்கத் தெரிந்த நடிகர்களில் தங்கவேலு டாப்கிளாஸ் நடிகர்.
தங்கவேலு 10/10
1.புதுச்சேரி மாநிலம் காரைக்கால்தான் தங்க வேலுவின் சொந்த ஊர்.
2.பத்து வயதுமுதல் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய தங்கவேலு 20 வயதில் ‘யதார்த்தம்’ பொன்னுசாமி நாடகக் குழுவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக மாறினார். அப்போது கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் புதிதாகத் தொடங்கிய தனது நாடகக் குழுவுக்குத் தன் நண்பரான தங்கவேலுவை இழுத்துக்கொண்டார்.
3. என்.எஸ்.கிருஷ்ணனும் தங்கவேலுவும் கந்தசாமி முதலியாரின் நாடகக் குழுவில் அண்ணன் தம்பியாகப் பழகியவர்கள். கந்தசாமி முதலியாரின் ‘பதிபக்தி’ நாடகம்தான் பின்னாளில் ‘சதி லீலாவதி(1936)’ என்ற படமாகத் தயாரிக்கப்பட்டது. அதில்தான் அறிமுகமானார் தங்கவேலு.
4. சொந்த நாடகக் குழுவைத் தொடங்கி, பல நாடகங்களை நடத்திய தங்கவேலு சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் போனதும் 1994-வரை தொடர்ந்து நாடகங்களில் நடித்திருக்கிறார்.
5. தங்கவேலு 20 வயதில் மிகவும் ஒல்லியாக இருப்பார். அதனால் தனக்கு வசதியாக இருக்குமென்று கருதி வயதான வேடங்களையே ஏற்று நடித்தார். பணம், திரும்பிப்பார், இல்லற ஜோதி, சுகம் எங்கே உள்படப் பல படங்களில் 60 வயது வேடங்களில் நடித்தார்.
6. ‘சிங்காரி’ என்ற படத்தில் டணால்... டணால்... என்று அடிக்கடி வசனம் பேசியதால் தங்கவேலுவின் பெயர் முன்னால் டணால் என்ற வார்த்தை ஒட்டிக்கொண்டது.
7. கலைவாணர், எம்.கே.தியாகராஜ பாகவதர் தொடங்கி எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் வரை சுமார் 1,000 படங்களில் நடித்திருக்கிறார்.
8. நகைச்சுவை ஜோடிகளில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மதுரம் ஜோடிக்குப் பிறகு தங்கவேலு - எம்.சரோஜா ஜோடி சுமார் 50 படங்களில் இணைந்து நடித்துப் புகழ்பெற்றபின் காதல் திருமணம் செய்துகொண்டனர்.
9. கடந்த 1994-ம் ஆண்டு தமது 77-வது வயதில் மறைந்த தங்கவேலு தி.மு.கவின் தீவிர உறுப்பினராக இருந்தார். அவர் மறைந்தபோது தி.மு.கவின் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன.
10. தங்கவேலுவின் முதல் மனைவி ராஜாமணி அம்மாள். அவருக்கு இரண்டு மகள்கள். இரண்டாவது மனைவி நடிகை எம்.சரோஜாவுக்கு ஒரே மகள்.
Courtesy: Facebook
சுசீலாம்மா..
சில ரசனைகள் .. என் பார்வையில்.
பாடலாசிரியர் அறியேன்.. இசையைத்தவர் அறியேன்.. தெரிந்ததெல்லாம். பாடும் குரலும் பாடல்வரிகளுமே. இவற்றில் திளைத்து ஊறிய பிறகே மற்ற சங்கதிகளுக்குள் மனம் நுழையும்.
கிராமத்துப் பண்ணிசையில் தான் இவர் முதல் ரசனையுணர்வாக என்னுள் நின்றார்.
தாலாட்டு... 'நிலவும் தாரகையும் நீயம்மா.. உலகம் ஒருநாள் உனதம்மா...'
தொடங்கி, ...' திங்க உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரனுமா.." கேட்டு , ...' மாவடு கண்ணல்லவோ ! மைனாவின் மொழியல்லவோ ! பூவின் முகமல்லவோ! பொன் போன்ற நிறமல்லவோ... !" எனவெல்லாம் சீராட்டி..
'.... காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே! காலமிதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகளே! '... என வாழ்வில் பெண்மையின் யதார்த்த இயல்புகளை தனது குரல் பாவத்தில் எதிரொலித்தவர் தான்.
பிறகு சற்று வளர்ந்து விட்ட நிலையில்..
' காட்டு ராணி கோட்டையிலே கதவுகளில்லை .. இங்கு காவல் காக்க கடவுளையன்றி ஒருவருமில்லை..'...என்று எங்களைக் கவர்ந்திழுத்தவர். .. அடுத்தடுத்து அந்த ரசனையிலேயே எங்களை .. ஏன் இன்னமும் நிறுத்தியுள்ளார் என்றால் அது மிகையில்லை. ' காட்டுக்குள்ளே திருவிழா .. கன்னிப் பொன்னு மணவிழா!..' என்று ஒரு வைபவத்து பரவசங்களையே தனது குரல் பாவத்தில் வைத்தவர்.
' காடு கொடுத்த கனியிருக்கு ..கழனி விளைஞ்ச நெல்லிருக்கு.." என எகிறி விழும் சொற்களில் மீதேறி வரும் தன் குரல் பாவத்தில் அழுத்தமான முத்திரை பதித்தவராயிற்றே.
' பூ முடிப்பதும் பொட்டு வைப்பதும் யாருக்காக .. என்று பாடியவர், ' குருவிக் கூட்டம் போல நிற்கிற பூவம்மா! உன்னைக் கொண்டு போகும் புருஷன் இங்கே யாரம்மா ? ..என இயற்கையான யதார்தங்களைப் பாடியவர் ..பின்னாளில் ..' ஓடுகிற தண்ணியில உரசி விட்டேன் சந்தனத்தை ..சேர்ந்துச்சோ சேரலியோ ..செவத்த மச்சான் நெற்றியிலே..!'...என்று மயங்க வைத்தவராயிற்றே.
துணை குரலோடு ..ஒத்தையடிப் பாதையிலே அத்தை மகன் போகையிலே.. ' பாடலும், ' வள்ளிமலை மான்குட்டி எங்கே போறே..?,,,, வந்திருக்கும் வேலனைப் பார்க்கப் போறேன்...' பாடல்கள் இன்றும் கேட்க சுகமே!
https://upload.wikimedia.org/wikiped...P.susheela.jpg
நவம்பர் 13 அன்று பிறந்த நாள் கொண்டாடும் இசையரசிக்கு வாழ்வில் எல்லா வளமும் நலனும் தந்து இறைவன் ஆசீர்வதிப்பானாக.
https://www.youtube.com/watch?v=EebeAk08FnE
இசையரசி பாடிய முதல் தமிழ்த்திரைப்படப் பாடல்
இசையரசியின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படம்
https://scontent-mia1-1.xx.fbcdn.net...ed&oe=56F468BB
'பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்)
http://i812.photobucket.com/albums/z...ps36911d5b.jpg
'பரதேசி' (தெலுங்கு)
வெளி வந்த நாள்: 14.01.1953
'பூங்கோதை'(தமிழ்)
http://www.iqlikmovies.com/modules/a...7_07_35_49.jpg
வெளி வந்த நாள்: 31.01.1953
உரையாடல் - சக்தி கிருஷ்ணசாமி
இசை: ஆதிநாராயண ராவ்
ஒளிப்பதிவு: கமால் கோஷ்
தயாரிப்பு: அஞ்சலி பிக்சர்ஸ் கம்பைன்ஸ் (நடிகை அஞ்சலி தேவி மாறும் அவர் கணவர் ஆதிநாராயண ராவ்)
இயக்கம்: எல்.வி. பிரசாத்
நடிக, நடிகையர் : நடிகர் திலகம், 'அக்கினேனி' நாகேஸ்வரராவ், அஞ்சலி தேவி, எஸ்.வி.ரங்காராவ், பண்டரி பாய், வசந்தா, ரேலங்கி...
கதை:
http://www.thehindu.com/multimedia/d...v_1654969g.jpg
சந்த்ரம் (நாகேஸ்வரராவ்) ஓர் இளைஞன். ஏழையும் கூட. தன் தந்தையை விபத்தில் பறி கொடுக்கிறான். வறுமையில் வாடுகிறான். அவனுடைய நண்பன் ரகு (ஜனார்த்தன்) திடீரென மாரடைப்பால் மரணம் எய்துகிறான். இறந்த ரகுவிற்கு சுசீலா (பண்டரிபாய்) என்ற மனைவியும் மோகன் என்ற சிறு வயது மகனும் உண்டு. நண்பன் ரகு இறந்ததால் அவன் மனைவி, மகன் இருவரையும் தன் பொறுப்பில் வைத்து காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறான் சந்தத்ம். அதனால் கடுமையாக பணிபுரிந்து அதிக மணி நேரங்கள் உழைத்து நண்பனின் குடும்பத்தைக் காப்பாற்றுகிறான். இதனால் அவன் உடல் நிலை சீர்கெடுகிறது. அவன் உடல்நிலையைப் பரிசோதிக்கும் மருத்துவர் சந்தரமை ஒரு நல்ல மலைப் பிரதேசத்திற்கு சென்று சில காலம் அவனை ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்துகிறார்.
சந்திரமும் மருத்துவர் அறிவுரையின்படி சீதகிரி என்னும் அழகிய மலைப் பிரதேசத்திற்கு ஓய்வெடுக்க செல்கிறான். அங்கு பூக்கள் விற்கும் லக்ஷ்மி (அஞ்சலிதேவி) என்ற பெண்ணுடன் காதல் வயப்படுகிறான். அங்கிருக்கும் ஒரு கோவிலில் வைத்து அவளை திருமணமும் செய்து கொள்கிறான். சந்தரமுக்கு சொந்த ஊரிலிருந்து வேலை நிமித்தம் ஒரு அவசர அழைப்பு வருவதால் அவன் லஷ்மியிடம் சொல்லாமல் ஊருக்குத் திரும்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது. சந்த்ரம் தங்கியிருந்த ஓட்டலில் லஷ்மி வந்து அவனைப் பற்றி விசாரிக்கையில் சந்த்ரம் அங்கில்லை என்பது தெரிகிறது. லஷ்மி இதனால் அதிர்ச்சியடைகிறாள். சந்த்ரம் தன்னை ஏமாற்றி விட்டானோ என்று பரிதவிக்கிறாள்.
லஷ்மி இதனிடையே கர்ப்பமாகிறாள். இனியும் விஷயத்தை மறைக்க முடியாது என்று லஷ்மி தன் தந்தை ரங்கடுவிடம் தான் சந்த்ரமை திருமணம் செய்த விஷயத்தையும், அதனால் தான் கர்ப்பமுற்றிருக்கும் நிலைமையையும் சொல்லி சந்திரனை தேடிக் கண்டு பிடித்து வரும்படி மன்றாடுகிறாள். சந்த்ரமைத் தேடி அவனைக் கண்டுபிடிக்க முடியாமல் மலைக் கிராமத்திற்கு திரும்பும் ரங்கடு தன மகள் லஷ்மியின் நிலைமையால் ஊராரின் கேலிப் பேச்சுக்கு ஆளாகி அவமானம் தாங்காமல் தற்கொலை புரிந்து கொள்கிறான்.
இதற்கிடையில் லஷ்மியை தன்னுடன் அழைத்து செல்ல மறுபடி சீதகிரிக்கு வரும் சந்த்ரம் லஷ்மியின் வீடு தீப்பற்றி எரிந்து போய் விட்டதாகவும், அதில் சிக்கி லஷ்மி உயிரை விட்டு விட்டதாகவும் கேள்விப்பட்டுத் துடித்துப் போகிறான், சோகத்துடன் மறுபடி சொந்த ஊருக்கே திரும்புகிறான்.
ஆனால் தந்தையை இழந்த லஷ்மி தீ விபத்திலிருந்து தப்பி சந்த்ரம் மூலம் தனக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு தாரா( வசந்தா) எனப் பெயரிட்டு அவளை மிகவும் கஷ்ட்டப்பட்டு வளர்க்கிறாள்.
வருடங்கள் உருண்டோட சந்த்ரம் வளர்க்கும் நண்பனின் மகன் ஆனந்த் (சிவாஜி கணேசன்) இளைஞனாகிறான். ஒரு வேலையாக சீதகிரிக்கு வரும் சந்தரன் அங்கு லஷ்மியின் மகள் தாராவைப் பார்த்து காதல் கொள்கிறான். தன் வாழ்க்கை சந்த்ரமால் வீணாகப் போனதாக நினைத்து வருந்தும் லஷ்மி தன் மகள் வாழ்க்கையும் தன்னைப் போல ஆகிவிடக் கூடாதே என்று கவலை கொள்கிறாள். தாரா ஆனந்ததைக் காதலிப்பதைத் தடுத்து எதிர்க்கிறாள். அவனிடமிருந்தும் தாராவைப் பிரிக்க நினைக்கிறாள். இதற்கிடையில் சந்த்ரமும் சீதகிரிக்கு திரும்ப வருகிறான்.
சந்த்ரம் தன் மனைவி லஷ்மியை சந்தித்தானா?
ஆனந்த், தாராவின் காதல் வெற்றி பெற்றதா?
சந்தர்மும் லஷ்மியும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா?
போன்ற கேள்விகளுக்கு சில திருப்பங்களுடன் கூடிய கிளைமாஸ் பதில் சொல்லுகிறது.
'பரதேசி' மற்றும் 'பூங்கோதை' படங்கள் பற்றிய சில சுவையான விசேஷ தகவல்கள்
1. நடிகர் திலகத்தின் முதல் நேரடித் தெலுங்குப் படம் இது.
2. தெலுங்குப் படவுலகின் முடிசூடா நாயகர் 'அக்கினேனி' நாகேஸ்வரராவ் (ANR )அவர்களுடன் நடிகர் திலகம் இணைந்த முதல் படம் இது.
3. பிரபல இயக்குனர் திரு.எல்.வி.பிரசாத் அவர்கள், அஞ்சலி தேவி இவர்களுடன் சிவாஜி இணைந்த முதல் படம்.
4.' பராசக்தி' படத்திற்காக ஏவிஎம் ஸ்டுடியோவில் நடிகர் திலகம் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் திலகத்தின் புதுமையான நடிப்பைப் பற்றிக் கேள்விப்பட்ட பக்கத்து புளோரிலிருந்த நடிகை அஞ்சலி தேவி தான் நடிப்பதை நிறுத்திவிட்டு சிவாஜி நடிப்பதைப் பார்க்க 'பராசக்தி' ஷூட்டிங்கிற்கு வந்திருக்கிறார். சிவாஜியின் நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறார்.
5. அப்போதே தெலுங்கு, மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் மிகப் பிரபலமாகி விட்ட நடிகை அஞ்சலிதேவி. (சிவாஜிக்கு மிக சீனியர்) பிரபல மியூசிக் டைரக்டர் ஆதிநாராயண ராவ் அவர்களைத் திருமணம் செய்து கொண்டு 'அஞ்சலி பிக்சர்ஸ்' என்ற சொந்த சினிமாத் தயாரிப்பு கம்பெனி ஒன்றை ஆரம்பித்து 'பரதேசி' படத்தை தெலுங்கிலும், தமிழிலும் தயாரிக்க முடிவு செய்தார். இயக்குனர் எல்.வி. பிரசாத் என்று முடிவாயிற்று. 'பரதேசி' தெலுங்குப் படத்திற்கு தமிழில் 'பூங்கோதை' என்று பெயர் வைக்கப்பட்டது. நாகேஸ்வரராவ் வளர்ப்பு மகனாக வரும் ஆனந்த் கதாபாத்திரத்திற்கு சிவாஜி என்ற அந்த புதுப் பையன் நன்கு பொருந்துவார் என்று அஞ்சலிதேவி சிவாஜியின் 'பராசக்தி' படத்தின் நடிப்பைப் பார்த்து முடிவெடுத்தார். சிவாஜியை தனியே அழைத்து 'பூங்கோதை' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டார். முதல் தொகையாக ஒரு நல்ல தொகையைக் கொடுத்து சிவாஜியை மகிழ்வித்தார் அஞ்சலி தேவி.
http://i872.photobucket.com/albums/a...psaa331c5f.jpg
(நடிகர் திலகம்.காம், மற்றும் திரு.ராகவேந்திரன் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி)
6. சிவாஜியும் அற்புதமாக 'பூங்கோதை' படத்தில் நடித்துக் கொடுத்தார். இதற்கிடையில் 'பரதேசி' தெலுங்குப் படத்திற்காக அந்த கதாபாத்திரத்திற்கு வேறொரு தெலுங்கு நடிகர் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவரின் நடிப்பு எல்.வி.பிரசாத்திற்கும், அஞ்சலி தேவிக்கும் பிடிக்காமல் போனதால் தெலுங்கிலும் சிவாஜியே செய்தால் நன்றாக இருக்கும் என்று அஞ்சலி தேவி சிவாஜியைக் கேட்க சிவாஜி சற்று தயங்கினார். "நான் நடிக்கப் போகும் பாத்திரத்திற்கு நீங்கள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருக்கும் அந்த தெலுங்கு நடிகரை எனக்காக நீக்கினால் அவர் வருத்தப் படுவாரே" என்று சிவாஜி அஞ்சலி தேவியிடம் சொல்ல, சிவாஜியின் பெருந்தன்மையைப் புரிந்து கொண்ட அஞ்சலிதேவி அந்த தெலுங்கு நடிகரின் மனம் புண்படாத வகையில் அவரிடம் பேசி, அவரை சமாதானப் படுத்தி, அவருக்கும் ஒரு தொகையைக் கொடுத்து, அவரை நீக்கி, பின் சிவாஜியை 'பரதேசி'யில் 'புக்' செய்தார்.
7. அதனால்' பரதேசி' தெலுங்கு, அதன் தமிழாக்கம் 'பூங்கோதை' இரண்டு மொழிப் படங்களிலும் சிவாஜியே திறம்பட நடித்தார். சிவாஜி தெலுங்கில் வசனங்களை அருமையாக மனனம் செய்து பிரமாதமாக தெலுங்கை உச்சரித்து 'ஆனந்த்' என்ற கதாபாத்திரத்தின் மூலம் தெலுங்கு மக்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்தார்.
8. பின்னாட்களில் சிவாஜி அவர்கள் தமிழ்த் திரையலகில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த நேரத்தில் (அதாவது தமிழ்த் திரைப்படத் தொழிலின் மொத்த வியாபாரத்தில் மூன்றில் இரண்டு பங்கு வியாபாரம் இந்தக் காலக் கட்டங்களில் நடிகர் திலகம் சிவாஜியை வைத்தே நடந்தது) அஞ்சலி தேவிக்கு வயதாகி விட்டது. 1973 ஆம் ஆண்டு அஞ்சலி தேவி நாகேஸ்வரராவ் அவர்களை வைத்து' பக்த துக்காராம்' என்ற தெலுங்குப் படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார். அதில் மிக முக்கியமாக மகாரஷ்டிர 'வீர சத்ரபதி சிவாஜி' வேடம் ஒன்று முக்கியமான பாத்திரமாக, படத்தை முடித்து வைக்கும் பாத்திரமாக வரும். அந்த 'வீர சத்ரபதி சிவாஜி' பாத்திரத்திற்கு நம் சிவாஜிதான் மிகப் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்த அஞ்சலிதேவி அந்தப் பாத்திரத்தில் நடிக்க சிவாஜியை அணுகினார். சிவாஜி அவர்களும் தனக்கு ஆரம்ப காலங்களில் அஞ்சலிதேவி பரதேசி, பூங்கோதை படங்களில் சான்ஸ் கொடுத்து உதவி செய்ததை மறக்காமல் மிகுந்த நன்றி உணர்ச்சியுடன் 'சத்ரபதி சிவாஜி' வேடத்தில் நடித்துத் தர மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். 'பக்த துக்காராம்' படத்தில் ஒரு கால் மணி நேரமே வரும் அந்த வீர சிவாஜி பாத்திரத்தில் 'சத்ரபதி சிவாஜி'யாகவே நடிகர் திலகம் வாழ்ந்து காட்டி இன்றளவும் அந்த பாத்திரத்தைப் பற்றிப் பேச வைத்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தில் நடித்ததற்காக சிவாஜி அவர்கள் அஞ்சலிதேவியிடம் நன்றி உணர்ச்சியின் காரணமாக ஒரு பைசா கூட வாங்க வில்லை என்பது இன்னோர் செய்தி. 'பக்த துக்காராம்' ஆந்திராவில் சக்கை போடு போட்டு வசூலை வாரிக் குவித்தது.
நடிகர் திலகம் அதன் பிறகு முதல் டெலிவிஷன் தொடராக பம்பாய் தூர்தர்ஷனுக்கு 'சத்ரபதி சிவாஜி' என்ற நாடகத்தை நடித்துக் கொடுத்தார். அப்போது அஞ்சலிதேவி தான் தயாரித்த' பக்த துக்காராம்' படத்தில் வீர சிவாஜியாக நடிகர் திலகம் அணிந்த உடைகளே டெலிவிஷன் நாடகத்திற்கும் பயன்படுத்தப்பட்டன. அஞ்சலிதேவி சிவாஜி அவர்கள் மேல் கொண்ட பேரன்பினால் வீர சிவாஜி உடைகளை டெலிவிஷன் நாடகத்திற்காக நடிகர் திலகம் சிவாஜிக்கு தந்து உதவினார்.
8.1951 -இல் இந்தியில் வெளி வந்த 'ராஜா ராணி' படத்தின் உரிமையை வாங்கி அஞ்சலிதேவி பரதேசி, பூங்கோதை திரைப்படங்களைத் தயாரித்தார். இயக்குனர் எல்.வி. பிரசாத் இந்திப் படத்தின் முழுக் கதையையும் அப்படியே எடுத்துக் கொள்ளாமல் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி சினிமாக்களுக்குத் தக்கபடி கதையை மாற்றி பின் இயக்கம் செய்தார்.
9. நடிகர் திலகத்திற்கு ஜோடியாக தெலுங்கு மற்றும் தமிழ்ப் படங்களில் அப்போது ஓரளவிற்கு பிரபலமாய் இருந்த நடிகை வசந்தா 'தாரா' பாத்திரத்தில் நடித்தார்.
10. நடிகர் திலகம் முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் இயக்கத்தில் நடித்து வெளிவந்து சக்கை போடு போட்ட 'அந்தமான் காதலி' திரைப்படம் பரதேசி மற்றும் பூங்கோதை திரைப் படங்களைத் தழுவி எடுக்கப் பட்டதாகும். தெலுங்கில் நாகேஸ்வரராவ் ஏற்ற பாத்திரத்தை அந்தமான் காதலியில் நடிகர் திலகமும், அஞ்சலிதேவி பாத்திரத்தை நடிகை சுஜாதாவும், நடிகர் திலகத்தின் ஆனந்த் பாத்திரத்தை தெலுங்கு குணச்சித்திர நடிகர் சந்திரமோகனும், தாரா பாத்திரத்தை நடிகை கவிதாவும், ரங்குடு பாத்திரத்தை நடிகர் செந்தாமரையும் சிறு சிறு பாத்திர மாறுதல்களுடன் ஏற்று நடித்திருந்தனர்.
11. பரதேசி, பூங்கோதை இரு படங்களும் சிவாஜி அவர்களின் படங்களில் மிக மிக அபூர்வமான படங்கள். இப்படங்களை பெரும்பாலோனோர் பார்த்திருப்பதே அரிது. இப்படங்களின் வீடியோ சிடிக்கள் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. நானும் தேடுகிறேன் தேடுகிறேன் தேடிக் கொண்டே இருக்கிறேன். நானும் இப்படத்தைப் பார்த்ததில்லை. பல்வேறு பத்திரிக்கை செய்திகள், ஊடகங்கள், வீடியோ பேட்டிகள் உதவியில்தான் இக்கட்டுரையை வடித்துள்ளேன். அதனால்தான் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி விமர்சிக்க முடியவில்லை. அப்படி இந்தப் படம் பார்க்கும் அதிர்ஷ்டம் நேர்ந்தால் (நிச்சயம் நிகழும்) இப்படத்தில் நடிகர் திலகம் அவர்களின் பங்களிப்பைப் பற்றி அவசியம் எழுதுகிறேன்.
12. தென்னிந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே முதன் முதலாக ஸ்லோ மோஷன் காட்சி அறிமுகமானது இந்தப் படத்தில்தான். சாகுந்தலை நாட்டிய நாடகக் காட்சியில் ஸ்லோ மோஷன் காட்சி காண்பிக்கப் பட்டதாம். பிரபல இயக்குனர் சாந்தாராம், அவருடைய ராஜ்கமல் கலாமந்திர் சார்பாக ஸ்லோ மோஷன் காட்சிகளுக்காகவே வெளிநாட்டிலிருந்து ஸ்பெஷலாகத் தருவிக்கப் பட்ட சிறப்புக் காமிரா தான் இந்த இரு படங்களுக்காக வாடகைக்கு வாங்கப்பட்டு உபயோகிக்கப் படுத்தப்பட்டதாம். (நன்றி: தி இந்து)
13. இயற்கை சூழல்கள் அதிகம் தேவைப்பட்ட இந்த படங்களுக்கு மொத்தம் நான்கு ஆர்ட் டைரக்டர்கள் பணி புரிந்தனராம். (T.V.S.ஷர்மா, வாலி, தோட்டா வெங்கடேஸ்வரா, ஏ.கே சேகர் என்ற 4 ஆர்ட் டைரக்டர்கள்). இயற்கை எழில் சார்ந்த மலைப் பிரதேசங்களிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டதாம்.
13. பிரபல ஒளிப்பதிவாளர் கமால் கோஷ் அவர்களின் உதவியாளராக இருந்தவர்தான் பிரபல ஒளிப்பதிவு மேதை ஏ.வின்சென்ட் அவர்கள். இவரிடம் தான் இயக்குநர் எல்.வி.பிரசாத் அவர்கள் நடிகர் திலகத்தின் கண்களைப் பார்த்து இவர் மிகச் சிறந்த நடிகராக வருவார் என தீர்க்கதரிசனமாக கணித்தாராம்
14. தன்னை முதன் முதல் ஆதரித்து வாய்ப்பு கொடுத்ததால் அஞ்சலி தேவி அவர்களை சிவாஜி அவர்கள் 'பாஸ்... பாஸ்' என்று தான் அழைப்பார். அவ்வளவு நன்றிப் பற்று நடிகர் திலகத்திடம் இருந்தது.
15. இந்தப் படங்களின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதுதான் சிவாஜி அவர்களின் திருமணமும் நடந்தது. ஒரு ஆறு மாத காலம் படப்பிடிப்பை ஒத்தி வைத்து விட்டு அஞ்சலிதேவி சிவாஜி அவர்களை திருமணத்திற்கு அனுப்பி வைத்தார். திருமணம் முடிந்து வரும் போது சிவாஜி நன்றாக சதை போட்டிருந்தார். அதற்கு நாகேஸ்வரராவ் "என்ன சிவாஜி! மாமனார் வீட்டு சாப்பாடு பலமா! நல்லா சதை போட்டுட்டு வந்துட்டியே" என்று ஜோக் அடித்து சிரித்தாராம். அது முதற்கொண்டு சிவாஜி அவர்களின் குடும்பத்தாரோடு நெருக்கமாக இருந்து இருந்திருக்கிறார் அஞ்சலிதேவி.
16. நாகேஸ்வரராவ் இடைவேளை வரை இளவயது சந்த்ரமாகவும், இடைவேளைக்குப் பிறகு நடிகர் திலகத்துத் தந்தையாக வயதான தோற்றத்திலும் முதன் முதலாக நடித்தார். அப்போது அவரும் இளைஞர்தான். நாகேஸ்வரராவ் தந்தையாகவும், நடிகர் திலகம் மகனாகவும் நடிக்க நாம் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லவா! இன்னொரு கொசுறு செய்தி என்னவென்றால் இதே நாகேஸ்வரராவ் மகன் நாகார்ஜுனனுடன் நடிகர் திலகம் 'அக்னி புத்ருடு' என்ற தெலுங்குப் படத்தில் கை கோர்த்தார். அதனால் அப்பா, பிள்ளை இருவருடனும் நடித்த பெருமைக்குரியவராகிறார் நடிகர் திலகம்.
17. வயதான கெட்-அப்பில் நாகேஸ்வரராவ் அவர்களை போட்டோ செக்ஷனுக்காக புகைப்படம் எடுக்கும் போது குளோஸ்-அப் ஷாட்ஸ் சரிவரவில்லை. இயக்குனருக்கு திருப்தி வரவில்லை. மிகவும் இரக்கப்பட்டு பார்க்க வேண்டிய வயதான வேடம் ஆகையால் பல தடவை நாகேஸ்வரராவை மேக்-அப் மாற்றி மாற்றி திருப்தி வரும் வரை புகைப்படம் எடுத்தார் இயக்குனர் எல்வி.பிரசாத். நாகேஸ்வரராவும் மிக்க பொறுமையுடன் ஒத்துழைத்தார்.
http://www.iqlikmovies.com/modules/a...6A8-09DF90.jpg
18. 'நடிகர் திலகம்' அவர்கள் நாடகங்களில் நடித்து விட்டு பின் திரைப்படங்களுக்கு வந்தவர் ஆதலால் வந்த புதிதில் நாடகங்களில் உரக்க பேசுவது, எமோஷன் காட்சிகளில் நடிப்பது போன்றே இப்படங்களில் அவர் நடிக்க, இயக்குனர் எல்.வி.பிரசாத் அவர்கள் "தம்பி...நாடகங்களில் காட்ட வேண்டிய அதிகப்படியான முக பாவங்கள், சத்தமான உச்சரிப்புக்கள் சினிமாவுக்கு அவ்வளவாகத் தேவையில்லை. நீ சினிமாவுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு நடித்தால் போதும்" என்று நாடகங்களுக்கும், சினிமாவுக்கும் நடிப்பில் உள்ள வித்தியாசங்களை புரியவைத்து, ஒரு குரு போல நடிகர் திலகத்திற்கு சினிமா பற்றிய நடிப்பிலக்கணங்களை பற்றி சொல்லிக் கொடுத்தாராம். நடிகர் திலகமும் கற்பூரம் போல 'டக்'கென அவர் சொன்னதைப் புரிந்து கொண்டு, சினிமாவுக்கேற்றமாதிரி பிரமாதமாக நடித்து இயக்குனர் எல்.வி.பிரசாத் அவர்களிடமே அதிகப் பட்சமான பாராட்டுக்களைப் பெற்றாராம். தொழிலை சரியாகக் கற்றுக் கொடுத்ததனால் 'நடிகர் திலகம்' திரு. எல்.வி.பிரசாத் அவர்களை கடைசி வரை மறக்காமல் "சினிமாவில் எப்படி நடிக்க வேண்டும் என்று எனக்கு சொல்லிக் கொடுத்து என்னை சினிமா நடிகனாக்கிய செதுக்கிய குரு" என்று குருபக்தியோடு குறிப்பிடுவதுண்டு.
இந்த இரு படங்களைப் பற்றி என்னால் இயன்றவரை திரட்டிய தகவல்களை அளித்துள்ளேன். இப்படங்களைப் பற்றிய மேலதிக தகவல்கள் இருந்தால் நண்பர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
'பூங்கோதை' திரைப்படத்தில் ஜிக்கி மற்றும் டி.பி.ராமச்சந்தின் பாடிய அற்புதமான பாடல் ஒன்று மிகவும் புகழ் பெற்றதாகும்.
'நான் ஏன் வரவேண்டும் ஏதுக்காகவோ
யாரைக் காண்பதற்கோ
வான் நட்சத்திரம் முன் குயிலழைத்தாலும்
வையகம் தனிலே வருமோ
வலை கண்டும் மான் வீழ்ந்திடுமோ'
https://youtu.be/5dMdoM1PhRs
இந்தப் பாடல் 1951ல் வெளிவந்த 'Jadoo' இந்திப் படத்தில் ஒலித்த 'Lo Pyar Ki Ho Gai' பாடலின் தழுவலாகும். இந்தியில் இசை நவ்ஷாத்.
https://youtu.be/vRTYEcnEY0w
மழை, புயலில் அதிகம் பாதிக்கப்பட்டு நெய்வேலியில் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. 5 நாட்களாக மின்சாரம், இணைய இணைப்பு, கேபிள் எதுவும் இல்லை. நேற்று ஓரளவு நிலைமை சீராகி இன்று மறுபடியும் மழை பிய்த்து உதற ஆரம்பித்து விட்டது. இணைய இணைப்பு கிடைத்த நேரத்தில் 'பூங்கோதை' பதிவை இட்டுவிட்டேன்.
மதுண்ணா, ஜி, சின்னா, வாசு சார், ராஜ்ராஜ் சார், வினோத் சார், ராகவேந்திரன் சார், ரவி சார், ராகதேவன் சார், கோபு சார், பாலா சார், கிருஷ்ணா சார் மற்றும் அனைத்து நண்பர்களும் நலம்தானே!
சின்னா!
எங்கே காணோம்? மதுர கானங்கள் மயங்கி நின்று விட்டதே!
ஜி!
தங்கள் பி.எம் இன்றுதான் பார்க்க முடிந்தது. ரொம்பவும் மிஸ் பண்ணி விட்டேன். இசைத் தாய்க்கு என் மகிழ்வான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
மதுண்ணா!
எப்படி இருக்கிறீர்கள்? உடல் நலனை கவனித்துக் கொள்ளவும்.
இன்று 'குழந்தைகள் தினம்' முன்னிட்டு நான் முன்னம் அளித்திருந்த, தலைவர் விஞ்ஞானி வேடத்தில் அசத்தியிருந்த 'குழந்தைகள் கண்ட குடியரசு' பட ஆய்வின் மீள்பதிவு.
http://www.koodal.com/contents_kooda...y-jpg-1193.jpg
குழந்தைகள் கண்ட குடியரசு.(1960)
தயாரிப்பு: பத்மினி பிக்சர்ஸ்
நடிகர்கள்: சிம்மக் குரலோன், 'ஜாவர்' சீத்தாராமன், பி.ஆர்.பந்துலு, 'குலதெய்வம்' ராஜ கோபால், கே.ஆர். சாரங்கபாணி, மாஸ்டர் கோபி
நடிகைகள்: வழக்கம் போல (பத்மினி பிக்சர்ஸ்) எம்.வி.ராஜம்மா, லட்சுமி ராஜம், பேபி லட்சுமி.
கதை: தாதாமிராசி
வசனம்: விந்தன்
பாடல்கள்: கு.மா. பாலசுப்ரமணியம்
இசை: டி .ஜி.லிங்கப்பா.
ஒளிப்பதிவு டைரக்டர் :W.R.சுப்பாராவ்.
ஒளிப்பதிவு: M .கர்ணன்.
ஒப்பனை : ஹரிபாபு. (நடிகர் திலகத்தை முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்டிய இந்த 'ஹரி' ஒரு 'ஒப்பனை சிங்கம்'.)
http://i1087.photobucket.com/albums/...ps7e39311e.jpg
இந்த 'குழந்தைகள் தின'த்தில் பத்மினி பிக்சர்ஸ் 'குழந்தைகள் கண்ட குடியரசு' படத்தில் தலைவரின் நடிப்பைப் பற்றி எழுதுவது பொருத்தமாய் இருக்கும் எனத் தோன்றியது. நம் ரசிகர்களே அதிகம் பார்த்திருக்க முடியாத மிக அபூர்வப் படமென்றும் சொல்லலாம். நடிகர் திலகத்திற்கு கௌரவ வேடம்தான். ஆனால் படத்திற்கே அதுதானே கௌரவம்! நடிகர் திலகத்திற்கு கௌரவத் தோற்றம்தானே என்று சொல்லி அலட்சியப்படுத்திவிட முடியாத முக்கியமான ப(வே)டம்.
B.R.பந்துலு அவர்களின் தயாரிப்பு + இயக்கத்தில் தமிழ், ('குழந்தைகள் கண்ட குடியரசு') கன்னடம், ('மக்கள ராஜ்யா' 1960) தெலுங்கு, ('பிள்ளலு தெச்சின செல்லனி ராஜ்ஜியம்' 1960) என மும்மொழிகளில் வெளியானது. குழந்தைகளே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படத்தின் கதையை ஓரிரு வரிகளில் முடித்து விடலாம்.
மாயாபுரி நாட்டின் மன்னன் (B.R.பந்துலு) நல்லவன். முடியாட்சியை முடித்து வைத்து மக்களாட்சியை மலரச் செய்வதே அவன் எண்ணம். கெட்ட எண்ணம் கொண்ட தளபதி (ஜாவர்) மன்னனை தீர்த்துக் கட்ட துணிகிறான். மன்னன் மக்களுடன் குடியாட்சியின் மகத்துவத்தைப் பற்றி உரையாற்றிக் கொண்டிருக்கையில் மன்னர் குடும்பத்தை வெடி வைத்து கொல்ல தளபதி முயற்சி செய்கிறான். அதிர்ஷ்டவசமாக மன்னன் மகாராணியுடன் (எம்.வி ராஜம்மா) தப்பித்து, விதிவசத்தால் ஒரு பூதத்தின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகி, பத்து வருடங்களுக்கு மாமரமாக ஆகி விடும்படி சபிக்கப்பட்டு விடுகிறான். தளபதியோ ஆட்சியைக் கைப்பற்றி, மன்னனாக மகுடம் தரித்து கொடுங்கோலாட்சி புரிகிறான். கர்ப்பம் தரித்திருந்த மகாராணி நல்லவர் ஒருவரால் காப்பாற்றப்பட்டு ஆண் குழந்தை ஒன்றை ஈன்றெடுக்கிறாள். இளவரசன் வில்லேந்தி (மாஸ்டர் கோபி) என்ற அந்தக் குழந்தை வளர்ந்து வீரச் சிறுவனாகிறான். மாமரமாகிப் போன மன்னரான தன் தந்தையின் சாபத்தை போக்கவும், தாய்க்கு சாபத்தின் காரணமாக நேர்ந்த இழந்து போன ஞாபகசக்தியை திரும்பக் கொண்டு வருவதற்கும் தேவையான சர்வகலாமணியை வில்லேந்தி ஒரு விஞ்ஞானி (தலைவர்தான்) உதவியுடன் சந்திர மண்டலத்திலிருந்து எடுத்து வந்து, தாய் தந்தையரின் சாபங்களைப் போக்கி, அந்நாட்டின் குழந்தைகளுடன் (தளபதியின் பெண் சிறுமியான இளவரசியையும் சேர்த்து) கைகோர்த்து, கொடுங்கோலாட்சி புரியும் தளபதியுடன் போராடி, வெற்றி பெற்று, அவனைத் திருத்தி, குடியரசையும் மலரச் செய்கிறான்.
சிறுவனான வில்லேந்தி சாபங்களைப் போக்கும் சர்வகலாமணி சந்திர மண்டலத்தில் கிடைக்கும் என்று கேள்விப்பட்டு சந்திர மண்டலத்திற்கு போவது எப்படி என்று விழித்து நிற்க, ஆபத்பாந்தவனாய் ஆருயிர் 'நடிகர் திலகம்' சந்திர மண்டல ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானியாக இடைவேளைக்குப் பின் அட்டகாச அறிமுகம். சந்திரனுக்கு மனிதனை தான் கண்டுபிடித்து வைத்துள்ள விண்கலத்தில் அனுப்பி ஆராய்ச்சி செய்வதே அவர் நோக்கம். மனித உயிர்கள் எவரும் அவர் முயற்சிக்கு முன் வராததால் வெறுப்புற்று சந்திரனுக்கு ஒரு நாயை சோதனை முயற்சியாக வைத்து தன்னுடைய விமானத்தில் விஞ்ஞானி அனுப்ப எத்தனிக்க, அங்கு தன் தாய், தந்தையரின் சாபங்களைப் போக்கக் கூடிய சர்வகலாமணி இருப்பதாகவும், அதைக் கொண்டுவர சந்திர மண்டலத்திற்கு தன்னை அனுப்பும்படியும் அவரிடம் வேண்டுகோள் விடுக்கிறான் வில்லேந்தி. அவனுடைய முயற்சியில் மனம் மகிழ்ச்சி கொண்ட விஞ்ஞானி தன்னுடைய அறிவியல் ஆராய்ச்சி நோக்கமும் நிறைவேறப் போகிறதே என்ற மகிழ்ச்சியில் வில்லேந்தியையும், அவன் தோழனையும் ('குலதெய்வம்' ராஜகோபால்) உடல் ரீதியாக பரிசோதித்து இருவரையும் பொது மக்கள் முன்னிலையில் விமானத்தில் சந்திரனுக்கு அனுப்பி வைக்கிறார். அதற்கான இயந்திரங்களை அவர் பூமியிலிருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார். எதிர்பாராத விதமாக அதில் ஒரு இயந்திரம் உடைந்து விடுகிறது. அதை எப்படியும் சரி செய்து விடுவதாகக் கூறி அதற்கான முழு முயற்சியில் ஈடுபடுகிறார் விஞ்ஞானி. அதற்குள் பொறுமை, மற்றும் அறிவிழந்த மானிடக் கூட்டம் விஞ்ஞானியின் திறமை மீது நம்பிக்கை இழந்து (!) சந்திர மண்டலத்திற்கு சென்ற வில்லேந்தி மற்றும் அவன் தோழன் உயிருடன் திரும்ப முடியாததற்கு காரணம் விஞ்ஞானிதான் என்று அவர் மீது அவசரப்பட்டு பழி சுமத்தி, அவரை அடித்துத் துவைத்து துவம்சம் செய்கிறது. குற்றுயிரும், கொலையுயிருமாய் மரண வாசலை நெருங்கிக் கொண்டிருக்கும் அந்த விஞ்ஞானி தன் உயிர் போகும் அந்தத் தருவாயிலும் பழுதான இயந்திரத்தை சரி செய்து வில்லேந்தியையும், அவன் தோழனையும் திரும்ப பத்திரமாக பூமிக்கு வரவழைக்கிறார். சந்திரனுக்கு மனிதனை அனுப்பி சோதனை செய்த முயற்சியில் தனக்கு முழு வெற்றி கிடைத்து விட்டது என்ற திருப்தியுடன் தன் உயிர் போகக் காரணமாக இருந்த மக்களையும் மன்னித்து, பரமேஸ்வரன், பார்வதியை வணங்கியபடியே உயிரை விடுகிறார்.
http://i1087.photobucket.com/albums/...ps08985ac6.jpg
தோள்பட்டை வரை நீளும் முற்றிலுமாக படர்ந்த, பஞ்சடைந்த, கலைந்த தலைமுடி. நடுவகிட்டிலிருந்து நெற்றியின் மீது இருபுறமும் கீற்றாய் படரும் வெண் முடிக் கற்றைகள். அகோரமான அருவருக்கத்தக்க மிகப் பெரிய சேதமடைந்த கருட மூக்கு. மூக்கின் கீழே வரைகோடிட்டாற் போன்ற தெரிந்தும் தெரியாத மெல்லிய மீசை. அடிக்கடி வாயிலிருந்து உதட்டோரமாய் அரணை போல வெளியே தள்ளும் நாக்கு. முழுதான கூன் விழுந்த முதுகு. கண்களுக்குக் கீழே காணச் சகியாத தடிமன் வீக்கங்கள். முகவாய்க்கட்டையிலிருந்து நீளும் சற்றே நீண்ட வெண் குறுந்தாடி. அறிவியல் ஆர்வத்தை அள்ளித் தெளிக்கும் அரிய பெரிய கண்கள். பருத்த கனத்த வயிறு. நீண்ட பிரில் வைத்த கருப்பு அங்கி. முதுமையை வெளிப்படுத்தும் சற்றே தள்ளாடிய தடுமாறும் ஓட்டமும் நடையுமான நடை. (அந்த சிம்மக் குரல் மட்டும் காட்டிக் கொடுக்கவில்லையென்றால் "யார் அது கணேசனா?" என்று அனைவரும் வாயடைத்துப் போவார்கள்) அப்படி ஒரு அபார ஒப்பனை. வித்தியாசம்... வித்தியாசம்... வித்தியாசம். ஆம். நடிப்பை ஆராய்ந்து முடித்த நடிப்புலக விஞ்ஞானிக்கு சந்திர மண்டல ஆராய்ச்சி செய்ய, அங்கு ஆள் அனுப்பும் இப்படி ஒரு வித்தியாச விஞ்ஞானி வேடம் இந்த 'குழந்தைகள் கண்ட குடியரசு' படத்தில். இதுவரை எந்த ஒரு படத்திலும் அவர் செய்திராத ரோல். நடிப்புக்கே ரோல் மாடலாக விளங்கியவருக்கு இந்த விஞ்ஞானி வேடம் சவால் விட்டு பின் "ஐயோ எமகாதகா' என்று எகிறிக் குதித்து அலறி இவரிடம் தோற்றோடிப் போனது. அறிவியல் ஆராய்ச்சி நிபுணர் வேடம் தரிக்க வேண்டும். அதுவும் அந்தக் கால கட்டத்திலேயே. இந்த ரோலை எப்படி உள்வாங்கிக் கொள்வது என்பதற்கு அடையாளம் தெரிந்து கொள்ள எவ்வித முகாந்திரமும் அப்போது இருந்திருக்க வாய்ப்பில்லை. மீடியாக்களோ, சேனல்களோ, டிவி பெட்டியோ, இணைய வலைத்தளங்களோ இல்லாத கால கட்டம். அறிவியல் சம்பந்தமாக அப்போது அல்லது அதற்கு முன்னால் எடுக்கப் பட்ட அயல் நாட்டு சினிமாக்களை முடிந்தால் பார்த்திருக்கலாம். அது சம்பந்தமான புத்தகங்கள் இருந்திருக்கலாம். படித்திருக்கலாம். ஆனால் இந்த ஜாம்பவான் கொடிகட்டிப் பறந்த அந்தக் காலத்தில் அதற்கெல்லாம் இவருக்கு நேரம் இல்லை. அப்படியே நேரம் இருந்து இவற்றையெல்லாம் பார்த்து நம்மவர் கிரகித்திருந்தாலும் பார்த்தவற்றின் பிரதிபலிப்பைக் நம்மிடம் காட்டிவிடக் கூடாது. நடிகர்களுக்கெல்லாம் நாயகர் என்பதால் காட்டிவிடவும் முடியாது. அப்படியே காட்டிவிட்டாலும் அதைக் கண்டுபிடித்து வெட்ட வெளிச்சமாக்கிவிடும் அறிவு சார்ந்த ஜாம்பவான்கள் நிறைய பேர் உண்டு. (நம்ம கோபால் சாரைப் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.) ஆனால் இந்த சரித்திர புருஷருக்கு இதெல்லாம் தேவையே இல்லயே! மற்றவர்களைத் தன் பக்கம் திருப்பித்தானே நம் திலகத்திற்குப் பழக்கம்! அடுத்தவர் பக்கம் திரும்பிப் பழக்கம் இல்லையே! அதனால்தான் இந்த சவால்மிகு பாத்திரத்தை சந்தித்து சரித்திர சாதனை ஆக்கினார் நம் சாதனை நாயகர்.
http://i1087.photobucket.com/albums/...ps652fe1e0.jpg
வில்லேந்தி தலைவரை சந்திக்கப் போகும் போது தன்னுடைய ஆராய்ச்சிக் கூடத்தில் தரையில் அமர்ந்தபடியே பின் பக்கம் முதுகைக் காட்டி அமர்ந்தவாறு விண்வெளிக் கூண்டு போன்ற கலத்தில் உள்ளே நாயை வைத்து மூடி, நாய்க்கு "வலது புறம் விசை... இடது புறம் விசை...இப்போது வரிசையாக எல்லாம்" என்று இயக்க command கொடுக்கும் அந்தக் கணமே நடிப்பு அரக்கன் நயமாக நடிகர் திலகத்துடன் சங்கமிக்க ஆரம்பித்து விடுகிறான். தன்னுடைய கட்டளையை உள்ளே உள்ள நாய் சரியாக நிறைவேற்றியவுடன் "மனிதனால் செய்ய முடியாததை ஒரு நாய் நீ செய்துவிட்டாயே" என்ற தொனியில் "மகா புத்திசாலிடா நீ" என்று அவரது கம்பீரக் குரலிலே கரைபுரண்டோடும் உற்சாகம் இருக்கிறதே....(இத்தனைக்கும் இன்னும் முகத்தைக் காட்டவில்லை).
இந்த சம்பவங்களைப் பார்க்கும் வில்லேந்தியும், அவனுடன் வந்தவர்களும் தன்னையறியாமல் கொல்'லென்று ஏளனமாகச் சிரித்து விட, சட்டென்று முகம் திருப்பி (யப்பா.. நடிகர் திலகமா அது!) நாக்கை பாம்பு போல வெளியே நீட்டி "யாரது? என்று மிரட்டும் தொனி வில்லேந்தி கூட்டத்தை மட்டுமல்ல... நம்மையும் மிரள வைக்கிறதே... எள்ளி நகையாடியவர்களை சாடிவிட்டு 'சரித்திரத்தில் யாருமே சாதிக்க முடியாத காரியத்தை நான் சாதித்தேன்" (உண்மை! உண்மை! படத்தில் அவர் விஞ்ஞானியாய் செய்த சாதனையை சொன்னாலும் நடிகர் திலகம் நடிப்பில் தன்னிகரில்லா சாதனை புரிந்ததுதானே நமக்கு ஞாபகம் வருகிறது!) (இந்த வசனத்தின் மூலம் விந்தனின் ஆழ்மனதில் நடிகர் திலகம் எவ்வளவு தூரம் ஊடுருவியுள்ளார் என உணர முடியும்) என தான் கண்டு பிடித்த சாதனத்தைப் பற்றி கூறி பெருமையில் தனக்குத் தானே பூரித்துக் கொள்வது ஜோர். "சிரிக்கிறார்கள்" என்று பதிலுக்கு அவர்களைப் பார்த்து "ஹேஹே" என கைகளால் நையாண்டி செய்து பழித்துக் காட்டி நகைப்பதோ இன்னும் ஜோர்.
http://i1087.photobucket.com/albums/...ps08985ac6.jpg
"சந்திர மண்டலத்துக்கு நீங்களே போயிட்டு வரக் கூடாதா?" என ஒரு அம்மணி கேட்க "நான் போனால் இங்குள்ள இயந்திரங்களையெல்லாம் யார் இயக்குவது?" என்று எகத்தாள எதிர்க் கேள்வி வேறு கேட்பார். இயக்குவது என்ற வார்த்தையின் போது கைகள் இயந்திரங்களை சர்வ சாதாரணமாக handle செய்வது போன்ற பாவனயில் பின்னுவார்.
வில்லேந்தி அவரைப் புரிந்து கொண்டு, "என்னை சந்திரனுக்கு அனுப்புங்கள்" என்றவுடன் அதை கொஞ்சமும் எதிர்பாராமல் ஆச்சர்யம், வியப்பு, சந்தோஷம், பெருமிதம் அனைத்தையும் ஒரு வினாடியில் முகத்தில் கொண்டு வந்து கொட்டுவார். அத்துணை பாவங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வராமல் ஒரு சேர முகத்தில் ஒன்றாக சட்டென சங்கமிக்கும். வில்லேந்தியை தன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொண்டு "பலே! சிறுவனாய் இருந்தாலும் சிங்கமாய் இருக்கிறாய்" என்று சடுதியில் அவனை நமக்கு பெருமை பூரிக்க சுட்டிக் காட்டுவார். அற்புதமாய் இருக்கும். பின் இருவரையும் சந்திரனுக்கு அனுப்ப தயாராவார். வில்லேந்தியும் அவனது தோழனும் விசேஷ கவசங்கள் அணிந்து நிற்கையில் இருவரின் உடல் நிலையை பரிசோதிப்பார். இருவரின் நாடிகளைப் பிடித்துப் பார்த்து 'நாடித் துடிப்பு நன்றாக இருக்கிறது' என்பதை தன் தலையாட்டலில் விளக்குவார். நாக்கை மட்டும் மறக்காமல் அடிக்கடி வெளியே தள்ளியபடி இருப்பார். எந்த ஒரு இடத்திலும் தவறு நேரவே நேராது. (அதுதான் 'நடிகர் திலகம்' என்கிறீர்களா!)
மீன் வடிவிலான விமானத்தில் இருவரையும் ஏற்றி விட்டு சற்று பதைபதைத்தவாறு அனைவரையும் அழைத்துக் கொண்டு இயந்திரங்கள் இருக்கும் பகுதிக்கு வருவார். அந்த நடையில் ஒரு பதட்டம் தெரியும். என்னதான் பெரிய அறிவார்ந்த விஞ்ஞானியாய் இருந்தாலும் முதன் முதலில் தன்னுடைய கண்டுபிடிப்பான இயந்திரத்தில் மனிதர்கள் பயணம் செய்கிறார்களே என்ற தன் இயல்பு மீறிய படபடப்பு உணர்வினை அந்த நடையிலேயே காட்டி விடுவார். இயந்திரங்களை இயக்கிக் கொண்டிருக்கையில் ஒரு இயந்திரம் எதிர்பாராமல் வெடித்துச் சிதறும்போது உள்ளுக்குள் இவர் வெடித்துச் சிதறுவது நமக்குப் புரியும்... தெரியும்.... கைகளை ஒன்றோடொன்று பிசைந்தவாறு ஒருகணம் செய்வதறியாது குழம்பி நிற்பார். மறு வினாடி தன்னம்பிக்கை துளிர்விட "சீக்கிரமே சரி செய்து விடுகிறேன்" என்று வில்லேந்தி நண்பன் காதலியிடம் தைரியம் சொல்லுவார்.
அதற்குள் கொந்தளிக்கும் ஜனம் அவரது திறமை மீது அவநம்பிக்கை கொண்டு கற்களால் அவரைத் தாக்கும் போதும், பின் ஜனத்திரள் அவரை சூழ்ந்து கண்மண் தெரியாமல் தாக்கும் போதும் அடி வாங்கும் பாவனைகளில் நம்மை பதற வைப்பார். அடிதாங்க மாட்டாமல் கீழே வீழ்ந்து கிடக்கும் சமயத்தில் தான் அனுப்பிய கலம் திரும்பி வரும் சப்தம் கேட்டதும்
"அதோ பாருங்கள்... அவர்கள் வந்து விட்டார்கள்" என்று தரையில் ஒரு காலை முட்டி போட்டவாறு மறு காலைக் கெந்திக் கெந்தி படுத்தவாறே எழுந்திருக்க இயலாமல் ஒருக்களித்தாற் போன்று தவழ்ந்தவாறே தடுமாற்றத்துடன் நகர்ந்து செல்வதை என்னவென்று எழுதுவது!. எழுத்துகளுக்கும், வார்த்தை வர்ணிப்புகளுக்கும் அப்பாற்பட்ட மாமேதை அல்லவோ அவர்! பின் தட்டுத் தடுமாறி எழுந்து கைகளை கால்களாகி தரையில் ஊன்றி பின் மறுபடி எழுந்து இயந்திரத்தை நிறுத்தி சட்டென்று முடியாமல் கீழே சாய்ந்து விடுவார். வில்லேந்தி, அவனது நண்பனுடன் திரும்பி வந்தவுடன் நண்பனின் மடியில் சாய்ந்து விடுவார். கைகள் துவண்டு விடும். முகம் வெளிறி வலியின் வேதனைகளை பிரதிபலிக்கும். "ஆண்டவன் எனக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்திருந்தால் எத்தனையோ அற்புதங்களை சாதிக்கத் திட்டமிட்டிருந்தேன். நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்" என்று அமைதியாக மரண தருவாயில் அவர் கூறுவதை நான் கண்ணுற்ற போது எனது கண்கள் பனித்தன. (உண்மையாகவே அவர் இன்னும் உயிரோடு இருந்திருந்தால், நல்ல உடல் நலத்துடன் இருந்திருந்தால் இன்னும் எவ்வளவோ அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பார். நமக்குக் கொடுப்பினை இல்லையே! இன்னும் ஆயிரம் வருடங்கள் மறக்க முடியாத சாதனைகளை அவர் ஆயுளில் அவர் நிகழ்த்தியிருக்கிறாரே! அது மட்டும் சாந்தப்படுத்திக் கொள்ளவேண்டியதுதான்)
http://i1087.photobucket.com/albums/...ps38ae55d5.jpg
பின் அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்து பரமேஸ்வரன் பார்வதி தெய்வச் சிலைகளின் முன் அமரச் செய்தவுடன், "பரமேஸ்வரா... இந்த மக்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது... இவர்களை மன்னித்து விடு",என்று அமைதியாக உயிரை விடுவார்.
கிட்டத்தட்ட பத்து நிமிட நேரம்தான். பத்து நிமிடத்திலும் பத்தாயிரம் முகபாவங்கள். நாம் காணாத பல்வேறு உடல்மொழிகள். அற்புதமான பாத்திரம். எந்த நடிகன் தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்காக தன்னை, தன் உருவத்தை உருக்குலைத்தது, சிதைத்துக் கொள்கிறானோ அவனே மக்கள் மனதில் நிற்பான்... அவனே நடிகன். ஈகோ, இமேஜ் என்ற மாய்மாலங்களையெல்லாம் உடைத்தெறிந்து இந்த நடிப்புலக ஞானி இந்தப் படத்தில் கூனனான, குரூபியான விஞ்ஞானியாக வி(ந்)த்தைகள் புரிந்து வியக்க வைக்கிறார் வழக்கத்திற்கும் மேலாக.
என்றென்றும் வாழ்க நம் தெய்வத்தின் புகழ்.
இந்தப் படத்தில் தலைவர் போர்ஷனுக்குதான் முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருக்கிறேன். வித்தியாசமான கோணத்தில் தலைவரை சிந்தித்துப் பார்த்த கதாசிரியர், ஒப்பனைக் கலைஞர் மற்றும் இயக்குனருக்கு நன்றி. 1960-லேயே சந்திர மண்டலத்திற்கு விண்கலம் மூலம் மனிதனை அனுப்பும் முயற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதுவும் அந்த விஞ்ஞானி பாத்திரத்தில் தலைவரை கற்பனை செய்து பார்த்து நடிக்க வைத்து, நாம் இதுவரை காணாத புதிய பரிமாணத்தில் அவரை பரிமளிக்கச் செய்தது நமக்கு ஆச்சர்யம் கலந்த ஆனந்தத்தை அளிக்கிறது. இதில் நடித்துள்ள குழந்தைகளும் அற்புதமாக நடித்திருப்பார்கள். வில்லேந்தியாக வரும் கதாநாயகச் சிறுவன்தான் சற்று அதிகப் பட்சமாகப் பண்ணியிருப்பான். ஜாவர் காமெடி கலந்த வில்லன் தளபதி வேடத்தில் கனப் பொருத்தம். பந்துலு, ராஜம்மா as usual. காமெடிக்கு சாரங்கபாணியும், குலதெய்வமும். படமும் மாயாஜாலம், சந்திர மண்டலம், குழந்தைகள் குறும்புகள், வீர வசனங்கள் என்று போரடிக்காமல் செல்லும். குழந்தைகளோடு குதூகலித்துப் பார்க்க இது ஒரு நல்ல படமே. பாடல்களைப் பற்றி அவ்வளவாக ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
(இந்தப் படத்தின் DVD மற்றும் CD க்கள் எங்கும் கிடைப்பதாகத் தெரியவில்லை. கண்டிப்பாக சந்தர்ப்பம் வரும்போது மிஸ் செய்யாமல் பாருங்கள். புதியதொரு பரிணாமத்தை நடிகர் திலகத்திடம் காண்பீர்கள். இதனுடைய தெலுங்கு பதிப்பு (பிள்ளலு தெச்சின செல்லனி ராஜ்ஜியம்) இணையத்தில் உள்ளது. அதைப் பார்த்தும் ஆனந்தப் படலாம். ஆனால் நம்மவருக்கு சொந்தக்குரல் அல்ல. முக்கமாலாதான் நடிகர் திலகத்திற்கு தெலுங்கில் பின்னணி கொடுத்திருப்பார். (அப்படிதானே முரளி சார்! ஜக்கையா என்றும் சந்தேகமாக இருக்கிறது). தமிழில் நடிகர் திலகத்தின் சிம்ம கர்ஜனையில் பார்ப்பதே தனி சுகம். கௌரவ தோற்றம் என்றாலும் இப்படிப்பட்ட பிரமிக்க வைக்கும் நம்மவரின் நடிப்பைக் கொண்டுள்ள இந்தப் படமும், இதைப் போன்ற வேறு சில படங்களும் வெட்ட வெளிக்கு வந்து ஒளி வீச முடியாமல் குடத்தினுள் இட்ட விளக்காகவே ஒளி வீசுகின்றன. இதில் நிறையவே எனக்கு வருத்தம் உண்டு. அந்த ஆசையில் முன்னம் எழுதப்பட்டதுதான் 'பக்த துக்காராமு'ம் கூட. நம் ரசிகர்கள் கூட இவற்றிக்கெல்லாம் அதிக முக்கியத்துவம் தருவதில்லையோ என்ற சந்தேகமும், அது சார்ந்த வருத்தமும் எனக்கு அடிக்கடி எழுவதுண்டு. இப்படிப்பட்ட சில அபூர்வ படங்களில் தலைவரால் உழைக்கப்பட்ட அசாதாரணமான உழைப்பு சூரியக் கதிர்களாய் உலகெங்கும் பரவி ஒளி வீசி, அவர் புகழ் அகிலமெல்லாம் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆசையில் வடிவமைக்கப்பட்டதுதான் இந்த ஆய்வு. இதில் ஒரு சதவிகிதம் வெற்றி பெற்றால் கூட எனக்கு அளப்பரிய ஆனந்தம் கிட்டும் என்பது மட்டும் திண்ணம். நன்றி!)
அன்புடன்,
வாசுதேவன்.
வாசு சார்
பரதேசி-பூங்கோதை அபூர்வ தகவல்கள்
நடிகர்திலகத்திற்கு தந்தை நாகேஸ்வரராவ் என்பதும்,முதல்ஸ்லோமோஷன் படப்பிடிப்பு போன்ற தகவல்களும்
(பல பத்திரிக்கைககள் ,ரசிகர்கள் உட்பட வசந்தமாளிகை தான் முதல் ஸ்லோமோஷன் படப்பிடிப்பு என்று கூற அறிந்திருக்கிறேன்) அருமையானவை.
இது வியக்கத்தகக்க தகவல்தான்.
குழந்தைகள் கண்ட குடியரசு மீள்பதிவு பிரமாதம்.படத்தின் திரைக்கதையில் கூட இவ்வளவு விவரங்கள் எழுதப்பட்டிருக்காது.
உங்கள் பாஷையிலேயே சொல்வதென்றால் "செம தூள்".
வாசுஜி..
குழந்தைகள் கண்ட குடியரசு பற்றி கேள்விப்பட்டதுடன் சரி.. சில காலத்துக்கு முன்புதான் சில பாடல் காட்சிகளை யூடியூபில் பார்த்தேன். மற்றபடி ந.தி. கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது மட்டுமே அறிந்த விஷயம். இப்போது 70mm ஸ்கிரீனில் மொத்தப் படத்தையும் பார்த்து முடித்த உணர்வு. அதிலும் ந.தி காட்சிகளை ஸ்லோ மோஷனில் நிதானமாக ரசித்த ஃபீலிங்.... என்ன சொல்வேன்.. ?
அதிரடி... சரவெடி... என்றெல்லாம் சொல்வது இந்தப் பதிவைக் குறித்துதான்..
வாசுஜி.. மழை எல்லாம் நின்று விட்டதா..இன்னும் இரு தினங்கள் இருக்குமாமே..குழந்தைகள் கண்ட குடியரசு வெகு ஜோரான பதிவு.. நான் கேள்விப் பட்டதில்லை. ந.தியின் ரோலின் விளக்கம் காட்சியின் வர்ணனை ஓஹோ. வெரி நைஸ் வாஸ்ஸூ.. தாங்க்ஸ்..
மழை யெல்லாம் நின்னு கரெண்ட் வரவழைக்க என்ன பண்ணலாம்..\
விஜயகுமாரி பாட் போட்டுடலாம்..கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்..இந்த ஆனந்தி படத்துலயே இன்னொரு பாட் குளிரெடுக்குது குளிரெடுக்குது கூட வரட்டுமா..டிஎம்மெஸ் எல் ஆர் ஈன்னு நினைக்கறேன்..பட் அது நிறைய பாடல்களோட இருக்கு..
https://youtu.be/wAqfNj0aBmM
சேற்றில் ஒரு செங்கழுநீர் திங்கள் நூறு பூ மலரும்... சிலோன் ரேடியோவில் அடிக்கடி கேட்கும் பாடல்..இன்று தான் பார்க்கிறேன்...ம்ஹூஹூம். ஹீரோயின் புதுவெள்ளம் மஞ்சுளா இல்லை..ஒரு வேளை சுபாவின் தங்கையோ..ம்ம் யாருக்குத் தெரியும்..பாட்கேக்கலாம்..
https://youtu.be/9wt7jpwinEw
செந்தில் நடிச்ச முதல் படம் ஒரு கோவில் இரு தீபங்கள். ம்ம் ஆனா இந்தப் படத்தைப் பத்தி வேற தகவல்லாம் இல்லை ஒரே ஒரு பாட்..முத்துமுத்துப் புன்னகையோ முக்கனித்தோட்டம் உன் முன்னழகும் பின்னழகும் கண்ணுக்கு நோட்டம்னு ஒரு பாட்..பரவாயில்லாத பாடல்.. பட் ஹீரோயின் யாருன்னு தெரியலையே..
https://youtu.be/2Jy8bmAO6YI?list=PL...5QsJ3M37XN7STO
From IndraNi(1994)
thoda thoda malarndhadhenna........
http://www.youtube.com/watch?v=CgkSNkZhxCQ
From the Hindi dubbed version Priyanka(1994)
ThOdaa thOdaa pyaar ho gaya.......
http://www.youtube.com/watch?v=wzLPNXPP5wk
In a recent Super Singer show SPB had this to say: "I pleaded with Hariharan to let me sing this song in the Hindi version." Hariharan was supposed to sing this song. But yielded to SPB.
Here is the Hariharan version:
http://www.youtube.com/watch?v=RvB3R_e3BYI
https://upload.wikimedia.org/wikiped...a_Krishnan.JPG
இயக்குநர் திலகம் என்று மக்களால் போற்றப்பட்ட திரு கே.எஸ்.ஜி. அவர்களின் மறைவு தமிழ்த் திரையுலகின் வரலாற்றில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். வசனங்களால் புகழ் பெற்றவர் திரு கே.எஸ்.ஜி. சினிமா என்பது விஷுவல் மீடியாவாக 70களின் பிற்பகுதியில் புதிய பரிமாணம் பெறும் வரை வசனத்தின் முக்கியத்துவம் மற்றவற்றை விட சற்று அதிகமாகவே இருந்த காலத்தில், அவருடைய பங்களிப்பு மிகப் பெரிய அளவில் இருந்தது. பக்கம் பக்கமாக வசனம் எழுதினாலும் அதிலும் பல்வேறு கருத்துக்களை புகுத்தியிருப்பார் கே.எஸ்.ஜி.
அவருடைய படங்களில் பெரும்பாலும் சம்பத் அவர்கள் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருப்பார். ஆனால் இசையமைப்பாளர் யாராக இருந்தாலும் தனக்கேற்ப, தன் மனதிற்குத் திருப்தியளிக்கும் வரையில் விடாத அளவிற்கு இசை ஞானம் கொண்டவராயிருந்ததால் அவர் படங்களில் பாடல்கள் ஹிட்டானது மட்டுமின்றி இன்றும் கேட்கும் வகையில் மன நிறைவைத் தருகின்றன.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவருடைய படப்பாடல்களைப் பகிர்ந்து கொள்ளலாமே.
மெல்லிசை மன்னரின் இசையில் கே.எஸ்.ஜி.யின் உயிரா மானமா படத்திலிருந்து அருமையான பாடல்.
https://www.youtube.com/watch?v=sltxkZQvcfU
இயக்குனர் கே.எஸ்.ஜி அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
http://2.bp.blogspot.com/-fgbq1K_lx4.../Image0018.JPG
http://3.bp.blogspot.com/-M9KklSCzuv.....10++.....JPG