-
-
-
Sekar Parasuram
இன்று டிவி சேனல்களில் நடிகர் திலகம் சூப்பர் ஹிட் திரைப்படங்கள்,
பிற்பகல் 1:00 மணிக்கு ஜெயா மூவியில் " திருமால் பெருமை "
பிற்பகல் 2:00 மணிக்கு வசந்த் தொலைக்காட்சியில் " மருது நாட்டு வீரன்"
இரவு 7:30 மணிக்கு முரசு தொலைக்காட்சியில் * பச்சை விளக்கு*
இரவு 10:00 மணிக்கு ஜெயா மூவியில் ...
* பாகப்பிரிவினை*
-
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
7 வது வெற்றிச்சித்திரம்
கண்கள் வெளியான நாள் இன்று
கண்கள் 5 நவம்பர் 1953
https://upload.wikimedia.org/wikiped...angal_1963.jpg
-
-
-
-
-
-
-
-
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
211 வது வெற்றிச்சித்திரம்
விஷ்வரூபம் வெளியான நாள் இன்று
விஷ்வரூபம் 6 நவம்பர் 1980
https://i.ytimg.com/vi/3jdHael_hr0/maxresdefault.jpg
http://oi64.tinypic.com/334ryio.jpg
-
-
-
-
-
-
நடிகர் திலகத்தின் அன்புக்கரங்கள் படத்தின் மறு வெளியீட்டு
விளம்பரம் ஒன்று முகநூலில் கிடைத்தது
அனைவரின் பார்வைக்கும் அது இங்கே
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...72&oe=5A6C1A53
1965ல் வெளிவந்தது 1973ல்
2வது வாரமாக அதுவும் ஊட்டியில்
விடயம் என்னவெனில் ஓடியவிபரங்கள்
சாதித்த சாதனைகள் வெளியே தெரியவரவில் என்பதனால்
அவை எல்லாம் இல்லையென்று ஆகிவிடாதல்லவா?
-
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
134 வது வெற்றிச்சித்திரம்
சிவந்தமண் வெளியான நாள் இன்று
சிவந்தமண் 9 நவம்பர் 1969
http://oi66.tinypic.com/15332fp.jpghttp://oi68.tinypic.com/11hs6mu.jpg
http://oi63.tinypic.com/20hqys0.jpg
-
Abdul Razac
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 90 -வது பிறந்தநாளையொட்டி, அகமதாபாத் தமிழ்ச் சங்கம் சார்பில், சென்னையில் நடந்த விழாவில்,
தமிழுக்கும் தமிழர்களுக்கும் வழிகாட்டியது, சிவாஜியின் சமூகப் படங்களா? சரித்திர படங்களா என்ற தலைப்பில் நடைபெற்ற, திண்டுக்கல் லியோனியின் சிறப்புப் பட்டிமன்றம், 11 -11 -2017 . சனிக்கிழமை, இரவு 8 மணிக்கு, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. காணத் தவறாதீர்கள்.
-
-
-
-
-
vaannila vijayakumaran
மண்ணாண்ட மன்னவர் கோட்டையல்ல... நடிப்புலக மன்னர்மன்னனின் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் முதல் வெளியீட்டில், சேலம் ஓரியண்டல் தியேட்டரின் அலங்கார முகப்பு....(1959)
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...dc&oe=5AA07294
-
-
Murali Srinivas
சிவந்த மண் - 09-11-1969
இன்று சிவந்த மண் வெளியான நாள். படம் வெளியான 1969 நவம்பர் 9-ந் தேதி அன்று மதுரையில் என்னுடைய நேரிடையான அனுபவத்தை ஒரு சில வருடங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். இந்த நாளின் நினைவிற்காக மீண்டும் அந்த பதிவு. இதில் படத்தைப் பற்றிய எந்த விமர்சனமும் இருக்காது. காரணம் நான் முதல் நாள் படம் பார்க்கவில்லை. ஒரு வாரம் கழித்துத்தான் பார்க்க முடிந்தது.
ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் அழகிய ரைன் நதி ஓரத்தில்
மாலைப் பொழுதின் சாரத்தில் மயங்கி திரிவோம் பறவைகள் போல்
எக்கச்சக்க எதிர்பார்ப்புகள். பாடல்கள் ரெகார்ட் வெளி வந்துவிட்டது. இந்த நிலையில் தீபாவளி வருகிறது. எல்லோரும் வெகு ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் சிவந்த மண் வெளியாகப் போகிறது. படத்தை பற்றி ஏராளமான செய்திகள். அது வரை எந்த தமிழ் படத்தின் பாடலுக்கும் செய்யாத வகையில் பட்டத்து ராணி பாடலுக்குத்தான் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டது என்ற உற்சாக செய்தி உலவிக்கொண்டிருக்கும் போது மற்றொரு செய்தி வருகிறது. தீபாவளிக்கு வெளியாகும் நம் நாடு படத்தில் இடம் பெறும் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் பாடலுக்கு அதிகமான இசைக்கருவிகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்ற செய்தி. வழக்கம் போல் இரு தரப்பு ரசிகர்களும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட, எங்கே திரும்பினாலும் ஒரு பக்கம், ஒரு ராஜா ராணியிடம் மற்றும் பட்டத்து ராணி பாடல்கள் ஒலிப்பெருக்கியில் முழங்க, மற்றொரு பக்கம் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நானும், வாங்கய்யா வாத்தியாரய்யாவும் அலற, மதுரையே குலுங்குகிறது.
நவம்பர் 7 வெள்ளி, நம் நாடு ரிலீஸ். மறுநாள் 8ந் தேதி தீபாவளி. 9ந் தேதி ஞாயிறன்று சிவந்த மண் ரிலீஸ். பொதுவாக சினிமாவில் செண்டிமெண்ட் அதிகம். 8-ம் நம்பரை சினிமாவில் ராசியில்லை என நினைப்பார்கள். கூடுமானவரை படத்தலைப்பில் கூட எழுத்துக்களின் கூட்டு தொகை எட்டு வராமல் இருக்க பெயரை முடிவு செய்யும்போதே கவனம் எடுத்துக் கொள்வார்கள்.. தீபாவளி 8ந் தேதி வந்ததால் ஒரு படம் ஒரு நாள் முன்னதாகவும் அடுத்த படம் ஒரு நாள் பின்னரும் வெளியிடப்பட்டது. பொதுவாக இன்று முதல் விளம்பரம் பார்த்திருப்போம். சிவந்த மண் விளம்பரம் மட்டுமே நாளை முதல் என்று கொடுக்கப்பட்டிருக்கும். காரணம் தீபாவளிக்கு பத்திரிக்கை அலுவலகம் விடுமுறை என்பதனால் அதன் காரணமாக படம் வெளியாகும் நவம்பர் 9ந் தேதி பத்திரிக்கைகள் வெளி வராது என்பதானாலும் முதல் நாள் அதாவது தீபாவளி நாளான நவம்பர் 8ந் தேதி தினசரிகளில் நாளை முதல் என்ற விளம்பரம் வெளியானது.
அன்றைய நாட்களில் எங்களது வீடு நகருக்கு சற்றே ஒதுக்குப்புறமான ஆரப்பாளையம் பகுதியில் இருந்தது.. அங்கே தீபாவளியை கொண்டாடி விட்டு மாலை எனது தாத்தா வீட்டிற்கு (நகரத்தின் மையப் பகுதி) வந்தாகி விட்டது. அன்று மாலையே படம் ரிலீஸ் ஆகும் சென்ட்ரல் தியேட்டர் முன்னாள் கூட்டம் கூட்டமாக ரசிகர்கள். படத்தை பற்றிய பல்வேறு செய்திகளை பேசிக்கொண்டு நிற்கிறார்கள்.
மறு நாள் காலை விடிகிறது. எப்படியிருந்தாலும் படம் பார்க்க முடியாது. ஆனால் தியேட்டர் எப்படியிருக்கிறது என்று பார்க்க காலை 7.45 மணிக்கே நானும் என் கஸினும் போகிறோம். மேல மாசி வீதியில் இருந்த வீட்டிலிருந்து தட்டாரச் சந்து வழியாக கோபால கொத்தன் தெருவில் வலது பக்கம் திரும்பி சென்றால் சென்ட்ரல் சினிமாவை அடையலாம். தியேட்டருக்கு எதிரே ரத்தினசாமி லாட்டரி கடை அருகே நிற்கிறோம். 10.30 மணிக்கு ஆரம்பமாக போகும் காட்சிக்கு அந்த நேரத்திலேயே கட்டுங்கடங்காத மக்கள் வெள்ளம். படத்தின் பானர் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டு விட்டது. பட்டத்து ராணி பாடலில் வரும் அரபி ஷேக் வேடத்தில் சாட்டையுடன் நிற்கும் நடிகர் திலகத்தின் கட் அவுட் மிகப்பெரிய மாலையை தாங்கி நிற்கிறது. அந்த நேரத்திலேயே கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் லாட்டி வீசுகிறது. அந்த இடத்தை விட்டு விலக மனமில்லாமல் விலகி வருகிறோம்.
மாலை எங்களது வீட்டுக்கு திரும்பி போக வேண்டும். மறுநாள் ஸ்கூல் போக வேண்டும். மாலை 5 மணி அளவில் என்னை சைக்கிளில் வைத்து கஸின் தியேட்டர் வழியாக கூட்டி போகிறான். காலையில் பார்த்ததை விட அதிகமான மக்கள் வெள்ளம். தியேட்டர் வாசலில் ஆரம்பித்து டெல்லி வாலா ஸ்வீட் ஸ்டால் வரை ஒரு வரிசை. மற்றொன்று அதே போல் கவுண்டரில் ஆரம்பித்து டவுன் ஹால் ரோடு திரும்பி மீண்டும் மேல அனுமந்தராயன் கோயில் தெருவில் திரும்பி பின்னால் திண்டுக்கல் ரோடு வரை நிற்கிறது. மற்றொரு வரிசை தியேட்டர் வாசலில் ஆரம்பித்து, டவுன் ஹால் ரோடு ஸ்போர்ட்ஸ் சாதனங்கள் விற்கும் பாப்லி பிரதர்ஸ் கடை தாண்டி, பாட்டா வையும் கடந்து, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கடையையும் தாண்டி, மேல மாசி வீதி திரும்பி அதே சென்ட்ரல் சினிமாவின் பின்புற கேட் இருக்கும் சந்து வரை நீண்டு நின்றது.[மதுரை தெரிந்தவர்களுக்கு நான் சொல்வதன் மூலம் எந்தளவிற்கு கூட்டம் இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடியும்]. அது போன்ற ஒரு கூட்டத்தை நான் வேறு எந்தப் படத்திற்கும் பார்த்ததில்லை. இன்றும் மனக்கண் முன்னே அந்த காட்சி அப்படியே நிற்கிறது. படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது மட்டும் அப்போது தெரிந்து கொள்ள முடிந்தது. படமே ஞாயிறன்றுதான் ரிலீஸ் என்பதால் அதை தொடர்ந்து வந்த 6 நாட்களிலும் ஸ்கூல் இருந்ததால் அடுத்த வாரம் ஞாயிறுதான் பார்க்க முடிந்தது. அதுவும் சித்ராலயா ஆபிஸில் தெரிந்தவர் மூலமாக சொல்லி ஞாயிற்றுக்கிழமை காலைக் காட்சிதான் கிடைத்தது.
ஆயிரம் படம் வரலாம். பிரம்மாண்டமான கூட்டம் என சொல்லலாம். ஆனால் 1969 நவம்பர் 9ம் சரி சிவந்த மண்ணும் சரி பாரத் நடிகர் திலகமும் சரி சரித்திரத்தில் சாதனையாளராக என்றும் நிலைப்பார்கள். எதுவும் எவரும் நெருங்க முடியாத தூரத்தில்.
படம் வெளியானபோது தமிழகமெங்கும் ஒட்டப்பட்ட ஒரிஜினல் போஸ்டர் உங்கள் பார்வைக்கு (நன்றி ராகவேந்தர் சார்). அத்துடன் நாளை முதல் விளம்பரமும் உங்கள் பார்வைக்கு.
மீண்டும் அந்த இனிமையான நினைவுகளை அசை போட வாய்ப்பளித்த நவம்பர் 9-ற்கு நன்றி.
அன்புடன்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...f6&oe=5A9C6D3C
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...60&oe=5AA211F5
-
-
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
191 வது வெற்றிச்சித்திரம்
அண்ணன் ஒரு கோயில் வெளியான நாள் இன்று
அண்ணன் ஒரு கோயில் 10 நவம்பர் 1977
http://royalisai.com/download/albums...ru%20Kovil.jpg
https://upload.wikimedia.org/wikiped..._Oru_Koyil.jpg
-
Natarajen Pachaiappan
·
1962-ல் சீனப் படையெடுப்பின் போது நடிகர்திலகம் ரூ.40,000/- நிதியளித்தார்.
1965-ல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் போது ரூ.1,15,000/- மற்றும் 600 பவுன் தங்கம் அளித்தது மட்டுமல்லாமல் ரூ 17 இலட்சம் வசூல் செய்து கொடுத்தார்.
1999-ல் கார்கில் போரின் போது ரூ.1,00,000/-, யுத்த நிதியாக தாய்நாட்டிற்கு வழங்கியுள்ளார்.
1965-ல், இந்திய - பாகிஸ்தான் யுத்தத்தின் போது, போரில் காயமுற்ற நமது ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, சிவாஜி அவர்கள், தமிழகத்தின் பல முன்னணிக் கலைஞர்களை போர்முனைக்கே அழைத்துச் சென்று, பல கலைநிகழ்ச்சிகள் நடத்தி, வீரர்களை மகிழ்வித்தார்.
1965 நவம்பர் மாதம். சிவாஜி கணேசன் தலைமையில் தமிழக நட்சத்திரங்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் தேநீர் விருந்து. பாகிஸ்தான் போரில் எல்லையில் படுகாயமுற்ற ராணுவ வீரர்களின் மத்தியில் ஆறுதலாக ஆடிப்பாடி, உற்சாகப்படுத்திவிட்டு வந்தவர்களுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு.
'யாராவது ஏதாவது பாடுங்களேன்...’ என்றார் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன். சிவாஜி, 'ஆர்மோனியம் இல்லாம முடியாதே...’ எனவும், ஜனாதிபதிக்குச் சுடச்சுட கோபம் வந்துவிட்டது.
‘பத்தாயிரம் பேருக்கு மேல் இங்கே வேலை செய்கிறீர்கள். ஒருவருக்குக்கூட சங்கீத ஞானமில்லையோ...’
அறிவார்ந்த அரிமாவின் அதட்டலில் கலைஞர்கள் கலங்கினர். ஏ.எல்.ராகவன், 'ஆர்மோனியம் இல்லாமலே பாடறேன் சார்...' என்று சிந்து நதியின் இசை நிலவினிலே என முந்திக்கொண்டார். பி.சுசீலா, 'அத்தை மடி மெத்தையடி' பாட, கச்சேரி களை கட்டியது. 1965-ன் சிறந்த புதுமுகம் ஜெயலலிதா. ஜனாதிபதி முன்பாக ஆடினார். பி.எஸ்.வீரப்பா கணக்காக, மேதகு ஜனாதிபதி, கலைச் செல்விக்கு சபாஷ் போட்டார்.
நடிகர் திலகம் - நடிகையர் திலகம் இருவரும் இணைந்து நவராத்திரியில் ஆடிய சத்யவான் - சாவித்ரி தெருக்கூத்தை அரங்கேற்றினர். ஜனாதிபதி தன்னுடைய ஸ்பெஷல் பாராட்டை சிவாஜிக்குத் தெரிவித்தார். சாவித்ரியிடம் திரும்பி, 'புதிதாகப் பிறந்த குழந்தை சவுக்கியமாக இருக்கிறதா... பார்த்தாயா உன் வளர்ச்சியை நான் எப்படி கவனித்துக்கொண்டு வருகிறேன்!’
நடிகையர் திலகம் சாவித்ரி
By நவீனன், August 10, 2016 in வண்ணத் திரை
மற்றும் இணையத்தின் பதிவுகளின் தொகுப்பு.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...97&oe=5AA0F584https://scontent.fybz1-1.fna.fbcdn.n...a3&oe=5A97E76F
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...cb&oe=5A9C9082https://scontent.fybz1-1.fna.fbcdn.n...d7&oe=5A99A3FC
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...26&oe=5A643BE9https://scontent.fybz1-1.fna.fbcdn.n...7a&oe=5A96E787
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...32&oe=5A66D329
-
-
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
8 வது வெற்றிச்சித்திரம்
பெம்புடு கொடுகு (தெலுங்கு) வெளியான நாள் இன்று
பெம்புடு கொடுகு (தெலுங்கு) 11 நவம்பர் 1953
https://c.saavncdn.com/664/Pempudu-K...53-500x500.jpg
பெம்புடு கொடுகு
-
-
Murali Srinivas
அண்ணன் ஒரு கோவில் ரிலீஸ் நினைவலைகள்
10.11.1977 அன்று வெளியாகி இன்றைக்கு 40 வருடங்களை நிறைவு செய்யும் அண்ணன் ஒரு கோவில் ரிலீஸ் நேரத்து நினைவலைகள். மன்னிக்கவும், இந்த பதிவிலும் பட விமர்சனம் இருக்காது.
எங்கள் மதுரையில் நியூசினிமாவில் படம் வெளியானது. மதுரை ரசிகர்களும் இளைய தலைமுறை மற்றும் நாம் பிறந்த மண் சரியாக போகாத காரணத்தால் சற்று டல்லாக இருந்த நேரம். அதற்கேற்றார் போல் படத்திற்கு முதலில் வைக்கப்பட்டிருந்த எங்க வீட்டு தங்க லட்சுமி பெயரும் ரசிகர்கள் மத்தியில் ஒரு அதிருப்தியை கிளப்பியிருந்த நேரம் [சொந்த படத்துக்கு பெயரை பார்த்தியா].ஆனால் பெயர் மாறிய உடன் ரசிகர்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டார்கள்.
படம் வெளி வந்த நேரம் தமிழகத்தில் அரசியல் மற்றும் சமூக சூழல் normal-ஆக இல்லை. 1975-ல் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை விலக்கி கொள்ளப்பட்டு 1977 மார்ச் மாதம் பொது தேர்தல் நடத்தப்பட்டு இந்திரா காந்தி அம்மையார் ஆட்சியை இழந்து ஜனதா ஆட்சி ஏற்பட்டு மொரார்ஜி தலைமையில் மத்திய ஆட்சி நடைப்பெற்றுக் கொண்டிருந்த நேரம். தமிழகத்திலும் ஒன்றரை வருட குடியரசு தலைவர் ஆட்சிக்கு பின் 1977 ஜூன்-ல் சட்டசபை தேர்தல் நடைப்பெற்று அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த நேரம்.
இரண்டு வருட அவசர நிலையின் போது அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டிருந்ததால் அமைதியாக இருந்த இந்தியா மீண்டும் ஒரு போராட்ட சூழலை சந்தித்தது.பல தொழிற் சங்கங்களும் மாணவர்களும் ஒன்றின் பின் ஒன்றாக போராட்டத்தில் குதித்தனர். தமிழகம் மட்டும் அதற்கு விதி விலக்காக முடியுமா என்ன?
இங்கேயும் பல போராட்டங்கள். சென்னையில் பச்சையப்பன் கல்லூரியில் நடந்த கலவரம் ஒரு புறம் என்றால் மதுரையில் 1977 அக்டோபர் 6 அன்று மதுரை கல்லூரி [Madura College] வளாகத்திலும் அமெரிக்கன் கல்லூரி வளாகத்திலும் நடைபெற்ற மாணவர் போலீசார் மோதல்கள் இந்தியாவெங்கும் கவனம் ஈர்த்தன. கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன.
தோல்வியடைந்தவுடன் எங்கும் போகாமல் நான்கு மாதங்கள் டெல்லியிலே இருந்த இந்திரா 1977 ஜூலை மாதம் இறுதியில் மராட்டிய மாநிலம் பூனாவிற்கு சென்றார். பூதான இயக்கம் நடத்தி வநத ஆச்சாரியா வினோபாவே அவர்களை சந்திக்க என்று சொல்லப்பட்டாலும் பூனே விமான நிலையத்திலும் மற்றும் பல இடங்களிலும் அவரை வரவேற்க மக்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். இது ஆட்சியாளர்களுக்கு குறிப்பாக சரண் சிங் போன்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்று அவர் பேச்சிலேயே தெரிந்தது. மத்தியில் ஜனதா ஆட்சியில் அமைக்கப்பட்ட ஷா கமிஷன் விசாரணை நடந்துக் கொண்டிருக்கும் போது வேறொரு வழக்கில் (இந்திய ராணுவத்திற்கு ஜீப் வாங்கியதில் ஊழல் என்று வழக்கு) இந்திரா காந்தி அம்மையார் மீது கூறப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆரம்ப முகாந்திரம் [Prima Facia] இருக்கிறது என்று சொல்லி விட அந்த காரணத்தை வைத்து அக்டோபர் மாதம் 3-ந் தேதி இந்திரா காந்தி அம்மையார் கைது செய்யப்பட இது நாடெங்கும் பெரிய அதிர்வுகளை உருவாக்கியது. பல இடங்களில் கலவரம் மூண்டது. மறு நாளே அதாவது அக்டோபர் 4-ந் தேதி இந்திரா அம்மையார் ஜாமீனில் விடுதலையானார். உடனே இந்தியாவெங்கும் சுற்றுபயணம் செய்ய போவதாக அறிவித்தார். எப்போதும் தென்னகம் தன பக்கம் என்பதை உணர்ந்த அவர் அக்டோபர் 29 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்திற்கு விஜயம் செய்வதாக முடிவானது.
தமிழகத்திற்கு வருகை தரும் இந்திராவிற்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டத்தை தி.மு.க.அறிவிக்க மீண்டும் பதட்டம் தொற்றிக் கொண்டது. பலரும் அச்சப்பட்டது போலவே அக்டோபர் 29 அன்று மதுரை வந்த அன்னை இந்திரா அவர்களுக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் வன்முறை வெடிக்க அவர் தாக்கப்பட்டார். திறந்த காரில் ஊர்வலம் வந்த இந்திரா காந்தி அம்மையார் அவர்களை நெடுமாறன் அவர்களும் என்.எஸ் வி சித்தன் அவர்களும் இரு புறமும் அரணாக நின்று காக்க அவர் உயிர் தப்பினார்.மதுரை திருச்சி மற்றும் சென்னை என்று இந்திரா அம்மையார் சென்ற அனைத்து ஊர்களிலும் பெரிய கலவரம் உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக திமுகவின் முன்னணி தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட அது மேலும் வன்முறைக்கு வழி கோலியது.
இந்த பிரச்சனைகள் போதாதென்று அந்த நேரத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து மிக சக்தி வாய்ந்த புயலாக மாறியது.அது தமிழகத்தை எந்த நேரத்திலும் தாக்கலாம் என்ற நிலையில் அது திசை மாறி ஆந்திர மாநிலத்தில் உள்ள ஓங்கோல் என்னும் நகரத்தை அக்டோபர் 31 அன்று தாக்கி கரையை கடந்தது. இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் இந்தியாவை தாக்கிய இயற்கை சீற்றங்களில் இது பேரழிவை ஏற்படுத்திய ஒன்றாகும். புயல் ஆந்திராவை தாக்கினாலும் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. ஏராளமான உயிர் சேதம் மற்றும் பொருட் சேதமும் ஏற்பட்டது. இந்த புயல் நிவாரண நிதிக்காக தமிழக அரசே பல ஊர்களிலும் நட்சத்திர கலை விழாவை நடத்த, அந்த விழாவில்தான் நடிகர் திலகம் சாம்ராட் அசோகனாக மீண்டும் மேடை கண்டார்.
அண்ணன் ஒரு கோவில் வெளியான நேரத்தில்தான் [நவம்பர் 10] மேற் சொன்ன நிகழ்வுகள் எல்லாம் நிகழ்ந்தன. ஒரு புறம் மாணவர் மற்றும் தொழிற்சங்கத்தினர் போராட்டம், மறு புறம் அரசியல் வன்முறைகள் இவை போதாதென்று இயற்கையின் சீற்றம். ஆக அமைதி இல்லாத இப்படிப்பட்ட ஒரு அரசியல் சமூக சூழலில், ஒரு எதிர்மறையான சூழல் நிலவிய நேரத்தில் வெளியான படம் அண்ணன் ஒரு கோவில். நடிகர் திலகத்தை பொறுத்தவரை எந்த சூழலையும் சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர். இதையும் எதிர்கொண்டார்.
இப்போது ஆரம்பித்த இடத்திற்கு வருகிறேன். படத்தின் ஓபனிங் ஷோ பார்க்க வேண்டும். ஆனால் எங்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு சின்ன தயக்கம். அந்த வருடத்தில் அதற்கு முன்பு வெளிவந்த இளைய தலைமுறை மற்றும் நான் பிறந்த மண் ஓபனிங் ஷோ போயிருந்தோம். ஆனால் அவை சரியான வெற்றி பெறவில்லை.அதே நேரத்தில் நாங்கள் ஓபனிங் ஷோ போக முடியாமல் miss பண்ணிய தீபம் சூப்பர் வெற்றியை பெற்றது. ஆகவே மாலைக் காட்சி போகலாம் என்று முடிவு செய்தார்கள்.ஒப்புக் கொள்ள கஷ்டமாக இருந்தது. ஆனால் படத்தின் வெற்றிக்காக விட்டுக் கொடுத்து விட்டோம்.
ஒரு சில நண்பர்கள் காலையில் அவரவர்கள் வீட்டில் பூஜையில் கலந்து கொள்ள அனைத்து சடங்குகளும் காலையிலே முடிந்து விட்டதால் நாங்கள் இரண்டு நண்பர்கள் காலை 10.30 மணி காட்சிக்கு சென்ட்ரல் சினிமாவில் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் சிவகுமார், ஸ்ரீகாந்த், Y.விஜயா நடித்த பெண்ணை சொல்லி குற்றமில்லை படத்திற்கு போனோம். உடல் சென்ட்ரலில் இருந்தாலும் மனம் நியூசினிமாவில்தான் இருந்தது. இந்த படம் முடிந்து வெளியே வரும்போது நமது படம் சூப்பர் என்ற ரிப்போர்ட் வந்து விட்டது.
மாலை காட்சிக்கு அப்படி ஒரு கூட்டம். நியூசினிமா அமைந்திருப்பது அகலம் குறைந்த ஒரு சின்ன தெருவில்.அங்கே நடிகர் திலகத்தின் படங்களுக்கு எப்போதும் கூட்டம் அலை மோதும். அதிலும் முதல் வாரம் கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் நீந்தி சென்று அரங்கில் நுழைந்தோம். ஒன்றே ஒன்று சொல்ல வேண்டும். முதலில் நடிகர் திலகம் போலீஸிடமிருந்து தப்பித்து ஓடி வரும் அந்த ஓட்டத்திற்கே அலப்பறை ஆரம்பித்து விட்டது. ரயில் நிலையத்தில் ஸ்வர்ணா ஆவி போல் பாடும்போது நடிகர் திலகம் உள்ளே வெய்டிங் அறையில் அமர்ந்திருந்து சிகரெட் அடிப்பார். வெகு நாட்களுக்கு பிறகு அவரின் சிகரெட் ஸ்டைல் அதிலும் வளையம் வளையமாக புகை விடும் காட்சியில் தியேட்டர் அதிர்ந்தது. பிறகு வந்த அனைத்து காட்சிகளுக்கும் அதே response-தான். ஜெய்கணேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தங்கையை யாருக்கும் தெரியாமல் பார்க்க வந்து அவர் ஆற்றாமையில் புலம்பும் அந்த காட்சிக்கு தியேட்டர் இரண்டுபட்டது.
அதன் பின் தொடர்ச்சியாக வந்த நமது வெற்றிகளுக்கு அடித்தளமிட்டது தீபம் மற்றும் அண்ணன் ஒரு கோவில்தான். அவை ஏற்படுத்திய சாதனைகள் பற்றி குறிப்பாக மதுரையில் நிகழ்ந்த சாதனைகளைப் பற்றி இதோ
மதுரையைப் பொறுத்த வரை அந்தக் காலகட்டத்தில் இது எப்படிப்பட்ட சாதனை என்று பார்ப்போம். 1977 நவம்பர் 10 தீபாவளியன்று நியூசினிமாவில் வெளியான அண்ணன் ஒரு கோவில் மதுரையில் தொடர்ந்து 101 காட்சிகள் அரங்கு நிறைந்து ஓடியது. அதாவது முதல் 30 நாட்களில் நடைபெற்ற அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ்புல். படம் 77 நாட்களை கடந்த போது 1978 ஜனவரி 26 அன்று சினிப்ரியா அரங்கில் அந்தமான் காதலி வெளியானது. அந்தமான் காதலி தொடர்ந்து 130 காட்சிகள் ஹவுஸ் புல். அதாவது முதல் 39 நாட்களில் நடைபெற்ற அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ் புல். அந்த நேரத்திலும் அண்ணன் ஒரு கோவில் வெற்றிகரமாக ரெகுலர் காட்சிகளில் 100 நாட்களை பிப்ரவரி 17 அன்று கடக்கிறது.
அந்தமான் காதலி முதல் 39 நாட்களின் அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ் புல் என்று சொன்னோம். படம் 37 நாட்களை கடந்த போதே மார்ச் 4 அன்று தியாகம் மதுரை சிந்தாமணியில் ரிலீஸ் ஆகி விட்டது. அதற்கு பிறகும் அந்தமான் காதலி ஹவுஸ் புல். தியாகம் வெளியாகி 14 நாட்களில் என்னைப் போல் ஒருவன் தங்கத்தில் ரிலீஸ்.
குறிப்பிட வேண்டிய விஷயம் படம் வசூல் ரீதியாக சாதனை புரிந்தது பற்றி. அதுவரை தங்கம் திரையரங்கில் முதல் வார வசூலில் சாதனை புரிந்திருந்த எங்க மாமா மற்றும் நீதி படங்களின் வசூலை வெகு எளிதாக கடந்த என்னைப் போல் ஒருவன் மதுரை தங்கத்தில்
முதல் 7 நாட்களில் பெற்ற வசூல் - Rs 80 ,140 .69 p.
தங்கத்தின் சரித்திரத்திலேயே கட்டுக்கடங்காத கூட்டத்தின் காரணமாக இரண்டாவது வாரம் ஞாயிற்றுக்கிழமையும் 5 காட்சிகள் திரையிடப்பட்ட என்னைப் போல் ஒருவன் மதுரையில் முதல் பத்தே நாட்களில் ஒரு லட்ச ருபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையையும் புரிந்தது.
என்னைப் போல் ஒருவன் முதல் பத்து நாட்களில் ஒரு லட்ச ருபாய் வசூல் செய்யும் போது தியாகம் 24 நாட்களை கடந்திருந்தது. அந்த 24 நாட்களில் நடைபெற்ற 80 காட்சிகளும் ஹவுஸ் புல். அதே நாளில் அந்தமான் காதலி வெற்றிகரமாக 61 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
1978 மே 5 அன்று அந்தமான் காதலி சினிப்ரியாவில் 100 நாட்களை வெற்றிகரமாக கொண்டாடும்போது சிந்தாமணியில் தியாகம் 63 நாட்களை நிறைவு செய்கிறது. அந்த 63 நாட்களில் நடைபெற்ற 207 காட்சிகளும் ஹவுஸ்புல். அதே நாளில் என்னைப் போல் ஒருவன் 49 நாட்களை கடந்து 50 -வது நாளில் அடியெடுத்து வைக்கிறது.
இது போதாதென்று நடிகர் திலகம் தெலுங்கில் நடித்த ஜீவன தீரலு என்ற படம் வாழ்க்கை அலைகள் என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்யபட்டு 1978 ஏப்ரல் 14 அன்று மதுரை மீனாட்சியில் வெளியாகி அதுவும் ஓடிக் கொண்டிருக்கிறது,
இது போன்ற ஒரு சாதனை அதற்கு முன்பும் செய்யப்பட்டதில்லை. அதற்கு பின்னும் முறியடிக்கப்படவில்லை. நான் ஏற்கனவே சொன்னது போல் யார் யாரோ என்னவெல்லாம் சொன்னாலும் மதுரை நடிகர் திலகத்தின் கோட்டை என்பதும் மதுரையில் அவரது தியேட்டர் சாதனைகளை முறியடிக்க இனி ஒருவர் பிறந்து வர வேண்டும் என்பதும் காலத்தின் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட சரித்திரம்.
அன்புடன்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...80&oe=5AA80C2C
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...f7&oe=5A668959
LikeShow More Reactions
Comment
-
-
-
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
25 வது வெற்றிச்சித்திரம்
கள்வனின் காதலி வெளியான நாள்
13 நவம்பர் 1955
https://upload.wikimedia.org/wikiped...%281955%29.jpg
https://i.ytimg.com/vi/7f3x5CPsPeY/maxresdefault.jpg
-
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
173 வது வெற்றிச்சித்திரம்
அன்பைத்தேடி வெளியான நாள்
13 நவம்பர் 1974
https://i.ytimg.com/vi/DAf4xFxVSsU/maxresdefault.jpg
https://upload.wikimedia.org/wikiped...nbai_Thedi.jpg
-
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
229 வது வெற்றிச்சித்திரம்
பரிட்சைக்கு நேரமாச்சு வெளியான நாள்
14 நவம்பர் 1982
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...b2&oe=5A9387DF
https://upload.wikimedia.org/wikiped...Neramaachu.jpg
-
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
230 வது வெற்றிச்சித்திரம்
ஊரும் உறவும் வெளியான நாள் இன்று
14 நவம்பர் 1982
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...24&oe=5A64BB7A
https://i.ytimg.com/vi/w5_n09UP02U/hqdefault.jpg