நிச்சயம் ... மறக்க முடியுமா... அதற்கப் பிறகு நாம் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை... முரளி சார் தங்களை எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தாரே...
Printable View
நிச்சயம் ... மறக்க முடியுமா... அதற்கப் பிறகு நாம் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை... முரளி சார் தங்களை எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தாரே...
அருமையான பாடல் சின்னகண்ணன் சார்
வேந்தர் சூரிய லோகத்தில் இருந்து பிடிக்கிறார் என்றல் நீங்கள் சந்திர லோகத்தில் இருந்து பாடல்களை பிடிக்கிறீர்கள் .நாங்கள் எல்லாம் எங்கே செல்வது ?
ஜோ அவர்களை சந்தித்தேன் அதன் பிறகு.. அதுவும் முரளி சாரின் தயவால் தான்...
பொங்கும் பூம்புனல்
போவோமே புது உலகம்...சொல்லப் போனால் போய்க்கொண்டிருக்கிறோம்..
மனம் என்னும் வானில் மழை மேகமாகவே ஆசைகள் மேவிடுதே... புதுப்புது சந்தோஷங்களை மனம் தேடிக்கொண்டு தானிருக்கிறது
http://www.youtube.com/watch?v=PTtsuCeODvU
எல்லோரும் இந்நாட்டு மன்னர்.. டி.ஜி.லிங்கப்பா நம்மை அழைத்துச் செல்கிறார், ஏ.எம்.ராஜா பி.சுசீலா குரல்கள் மூலமாக
பொங்கும் பூம்புனல்
கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே...
பின்னாளில் வந்த தேன்கிண்ணம் ஹலோ பார்ட்னர் படங்களின் கலப்படப் பாட்டு சூழ்நிலைக்கு முன்னோடியான பாட்டு.
கடன் வாங்கி கல்யாணம்..
எஸ். ராஜேஸ்வர ராவின் இசையில் ஒரு சிறப்பம்சம்... மேண்டலின் பிரயோகம்... சூப்பராக இருக்கும்...
http://www.youtube.com/watch?v=dGDz7PcW3Co
பொங்கும் பூம்புனல்
சூர்யகலா பற்றி இவ்வளவு பதிவுகள் வந்திருக்கும் போது நாம் ஒன்றாவது போடக் கூடாதா...
மாடர்ண் தியேட்டர்ஸ் வேதா கூட்டணி ஆரம்பித்து வைத்த படம்... அன்பு எங்கே..
வேதா இசையில் ஜிக்கி பாடிய அபூர்வமான பாடல்களில் ஒன்று இடம் பெற்ற படம் அன்பு எங்கே...
சூர்யகலாவின் அற்புத நடனம் இடம் பெற்ற பாடல் இடம் பெற்ற படம் அன்பு எங்கே..
மேலே பறக்கும் ராக்கெட்டு மின்னல் பூச்சி ஜாக்கெட்டு..
அந்த காலத்திலேயே இந்த மாதிரி வரிகளா. என்று கேட்கிறீர்களா..
அதான் இருக்கவே இருக்காரே தஞ்சை ராமய்யாதாஸ் என்று அந்த காலத்தில் கூறுவார்களாம்..
நான் சொல்லவில்லை சாமி.
ராக் அண்ட் ரோல் மெட்டில் தூள் கிளப்பிய பாடல்...
ஹௌரா ப்ரிட்ஜ் படப் பாடலை அப்படியே நினைவூட்டும் மெட்டு..
https://www.youtube.com/watch?v=mHJfDtPa8Pw
இந்தப் பாட்டில் குரல் கொடுத்திருப்பவர்களில் ஒருவர் கே.ஜமுனாராணி. இன்னொருவர் டெஸ்மாண்ட்..இவர் மெல்லிசை மன்னரின் இசையிலும் சிலபாடல்களில் கோரஸ் குரல் தந்திருக்கிறார்...
இப்பாட்டில் இசையமைப்பாளர் வேதாவின் இசைக்குழு இடம் பெற்றிருக்கிறது.. அவரும் இப்பாட்டில் தலையைக் காட்டியிருக்கிறார்.
கண்டு பிடியுங்கள் பார்ப்போம்.. கேட்டிருப்பவர் இப்பாடலை இணையத்தில் தரவேற்றிய நமது மய்ய நண்பர் பேராசிரியர் சேக்கரக்குடி கந்தசாமி அவர்கள்..
ம்ம் நன்றி க்ருஷ்ணா ஜி அண்ட் ராகவேந்தர் சார் ஃபார் இனிய பாடல்களுக்காக..
மன்னார் குடி ராஜகோபாலனுக்காக்த் தான் மதுண்ணா..:)
*
டி.ஆர்.எம் சுசீலா காம்பினேஷன் ஒரு டைப் என்றால்
சீர்காழி எஸ்.ஜி அண்ட் சுசீலாம்மா வேறொரு டைப்..
மதுரையில் தெப்பக்குளம் போகும்வழியில் இருந்தது அந்ததியேட்டர்.. கணேஷ் தியேட்டர் என நினைவு.. அங்கு என் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு பெண்மணி அந்தப் படத்திற்கு என்னை துணைக்கு அழைத்துச் சென்றார்கள்..அப்போது அவருக்கு மணமாகவில்லை ... எனக்கும் தான் (ஏனெனில் நான் எட்டாம் க்ளாஸோ ஒன்பதாவதோ)..மேட்னி ஷோ...
சரித்திரகாலப் படம் தான் ஆனந்தன் சரோஜா தேவி..படப்பெயர் நினைவு வந்திருக்குமே.. யானைப்பாகன்..
இனி பாடல்
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்
தித்திக்கும் தேன் குடமே செண்பகப் பூச்சரமே..
பொங்கும் எழில் பருவம்
பெண்களின் இளம் உருவம்
சிந்தையில் உறவாடும் இன்ப உருவம்
கன்னியின் ஆவல் தனைகடைக்கண் சொல்லும்கண்ணே
எண்ணத்தைக் கிள்ளும் அந்த இன்பத்தை சொல்லும் முன்னே
அலை மோதும் உணர்வாலே கனலாகவே
உள்ளம் ஆடி வானம் தொடும் ஆசைக் கடலாகவே
நிழலாகி உருவான காதல் தன்னை
நினைந்து நினைந்து இன்பம்
இணைந்து பருகும் முன்னே
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்..
**
நல்ல பாட்டு தானே..