உண்மையான விவரம். பாலாஜி முதலில் அணுகியது தேவராஜ் மோகனை. அவர்கள் எதனாலோ மறுத்து விட அடுத்து அணுகியது சி.வீ.ஆர் ஐத்தான் .அவர் ஈகோ hurt ஆனதால், subject பிடிக்கவில்லை என மறுத்து விட பிறகு விஜயன் வந்தார். இது அத்தனையும் உண்மையான உண்மை.
Printable View
Thanks Ganse, Parthasarathy,S.L.
நண்பர்களே,Quote:
ஓஹோஹோ, 305 முத்துக்களில் ஒன்று சொத்தையாமோ.. வாந்தி எடுப்பது போன்ற சிரஞ்சீவி காட்சி ,(ஒரு திரியை களங்க படுத்த.அது இலக்கணமாம்.இது போன்ற ஆட்களுக்கு....)சிரஞ்சீவி என்ற கேவலத்தை பார்த்தால் ,உலகத்தில் அனைத்து படங்களும் சிறப்பே. தாம்பத்யம் உட்பட. சிரஞ்சீவியை போட்டு திரியை அசுத்த படுத்திய உம்மை..... நற.....நற.....
பொறுமை கடலினும் பெரிது என்பர். அந்தக் கடலையும் வற்ற வைக்கும் அளவிற்கு நெருப்பை உமிழும் எழுத்துக்களால் நடிகர் திலகம் என்னும் உன்னதக் கலைஞனை களங்கப் படுத்துவதை நான் இனிமேல் ஏற்க முடியாது.
மய்யம் என்பது பொதுவான விவாத மேடை. ஒருவருக்கு பிடித்தது இன்னொருவருக்கு பிடிக்காமல் போகலாம். அது நியாயமே. அதற்காக அளவிற்கு மீறி தன் கருத்தில் வன்மத்தைத் திணித்தால் அது ஏற்க முடியாது. இது ஒருவருடைய தனி உடமைச் சொத்து அல்ல. இங்கு எனக்குப் பிடித்ததை நான் எழுத எனக்கு உரிமை உண்டு. தன் மனதில் தோன்றுவதை எழுத அவரவர் தனியாக புத்தகத்தை எழுதட்டும். அல்லது தனியாக இணைய தளத்தை உருவாக்கி எழுதிக் கொள்ளட்டும். அங்கு தனக்கு வேண்டியவர்களுக்கு அழைப்பு விடுத்து கருத்துக்களைப் பகிரந்து கொள்ளட்டும். இதை விட்டு இங்கு வந்து சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்வது நியாயமில்லை.
என்னைப் பொறுத்த வரையில் நடிகர் திலகத்தின் அத்தனை படங்களிலும் அவர் நடிப்பை நான் ரசிக்கிறவன், தாம்பத்யம் உள்பட. அதனை முன்னர் ஒரு காட்சியைக் குறிப்பிட்டு எழுதியுள்ளேன்.
திரும்பத் திரும்ப இதே போல எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் வேண்டுமென்றே எழுதுவதைப் பார்த்தால் நான் இங்கு எழுதக் கூடாது என அவர் சபதம் எடுத்திருப்பதைப் போலத் தெரிகிறது. அதற்கு அவருக்குத் துணையாய் சிலர் இருப்பதாகவும் எனக்கு மனதில் படுகிறது.
கோபாலின் அணுகுமுறையை ஏற்றுக் கொள்கிறவர்கள் இருக்கும் வரை நான் இங்கு எழுதுவதில் அர்த்தமில்லை.
KCS sir,you have rightly pointed it out that immolation attempts were never supported by NT,but let us salute Mr.Jayakumar, let our people fight the issue in other methods.I prey for his speedy recovery.
Ragavender sir please don' t take seriously our gopal sir comments/comedy you are the crown of fans of acting god nadigarthilagam gopal sir always jovial person with vide knowledge making others to bring this thread with energetic
mood to nadigarthilagam fans
ஆஹா ,அருமையான யோசனை. அதைத்தான் செய்ய போகிறேன் வேந்தரே. பொது மேடை என்பது இப்போதுதான் புரிகிறதோ?அதை எழுதாதே இதை எழுதாதே என்று என்னை,கார்த்திக் சாரை,ஜோ சாரை,முரளியை மிரட்டிய போது புரியவில்லையா?
நாங்கள் கஷ்ட பட்டு உழைத்து அவரை பற்றி புரிய வைக்க முயலும் போது, அவரின் தோற்றம், கதையமைப்பு, நடிப்பு ,படமாக்கம் எதிலும் உதவாத படங்களை போட்டு ,தேவையில்லாமல் பிடிவாதம் பிடிக்கும் உங்களுடன் இன்னுமா உறவாட போகிறேன்?
இதில் வேறு நான் ஆள் வைத்து கொண்டிருக்கிறேனாம். நான் எதில் irritate ஆவேன் என்று தெரிந்தே ஸ்கூல் of acting திரியில் நீங்கள் பண்ணிய திரிசம வேலையெல்லாம்....
வேண்டாம் விடுங்கள். உங்கள் மேல் கொண்ட மரியாதையினால் கேவலமான கெட்ட வார்த்தையை சொல்லாமல் தவிர்க்கிறேன்.
கிட்டத் தட்ட பதினான்கு ஆண்டுகள் ஆகி விட்டன என நினைக்கிறேன்.. இந்த மன்ற மையம் ஃபாரம் ஹப் என்று வந்து கொண்டிருந்த வேளை..
எனக்குப் பிடித்த திரிகளான மிஸ்ஸ்லேனியஸ் போயம்ஸ் என்ற திரிகளைப் படித்துக் கொண்டிருந்த காலம்..உதயா குழ்ந்தைவேலு என்ற கவிஞர் ஆங்கிலக் கவிதை எழுதிக் கொண்டிருந்தார்.. மற்றவர்களும்.. நான் மெளன ரசிகனாய் இருந்தேன்.. இருந்தும் என்னையும் பேச வைத்து எழுதவும் வைத்தவர் ஒரு நபர்..
அவர் பெயர் சிவக்குமார்..அதற்கு முன் உதயா எழுதிய கவிதையின் தமிழாக்கம்..
அந்தப் பெண் என்
பதினாலாவது மாடி ஃப்ளாட்டிற்கு எதிர்
பில்டிங்கில் அதே மாடியில்
உள்ள அலுவலகத்தில் இருக்கிறாள்..
தினமும் காலை என் அலுவலகத்திற்கு
வந்தேனென்றால் ஜன்னலில் இருந்து பார்க்கையில்
அவள் தெரிவாள்..
அன்றும் அப்படித் தான்
என் ப்ரேக்பாஸ்டிற்கான சாண்ட்விச்சைக்
கையில் வைத்தபடி ஜன்ன்லில் பார்த்த போது
அவள் தெரிந்தாள்..
பார்வையில் கலவரம்
ஒரு வித அமைதியின்மை..
ஒவ்வொரு முறை டெலிஃபோன் ஒலிக்கும் போதும்
தாவிச் சென்று எடுப்பதும்
பின் ஏமாந்து அமர்வதும் என..
நானும் பார்த்துக் கொண்டிருந்தேன்.
என்னாயிற்று அவளுக்கென..
பத்தாவது தடவை போன் ஒலிக்க
அவள் எடுக்க
அவள் முகம் மலர்ந்தது.
நாற்காலியில் அமர்ந்து
ஒரு கண் மூடி
செவ்வாயில் முத்துப் பூக்கள் மலர்ந்திட
சிரித்துச் சிரித்துப் பேசும்
அவளைப் பார்க்கையில் எனக்குப்
புலப்பட்டது ஒன்றே ஒன்று
தெய்வீகம்...
*
இதை உதயா எழுதிப் போட்டிருக்க சிவக்குமார் என்ன எழுதியிருந்தார்.. யோவ் உதயா
உன்னால் என்ன பிரயோசனம்..உன் கவிதையால் உலகத்திற்கு என்ன உபயோகம்..ஒய் டிட் யூ ரைட்..
என்றெல்லாம்..
படித்த எனக்கே பிபி எகிறியதென்றால் எழுதிய கவிஞருக்கு எப்படி இருந்திருக்கும்.
நான் என்ன செய்தேன்.ம்ம் அதை அடுத்த போஸ்டில் சொல்கிறேனே..
நான் என்ன செய்தேன்..ம்ம் மக்களின், மன்றமைய வாசகர்களின் போறாத காலம் எனச் சொல்லலாம் ;) எனது எழுதும் ஆசையை அவிழ்த்து விட்டேன்..
என் கற்பனைக் கன்றுக்குட்டி கோபத்தில் கட்டவிழ்த்து நகராட்சித் தண்ணீர் லாரிகள் போலத் தாறுமாறாய் ஓடியது..விழுந்தது ஒரு பதிவு..
எனக்கு ரோஜா பிடிக்கும்
என் மனைவிக்கு முல்லை
என் நண்பனுக்கு மரிக்கொழுந்து..
அவரவர் ரசனைக்கேற்ப பூக்களைப் பிடிப்பது
தப்பில்லை..
அதற்காக மரத்தையே பூக்காதே என்றால்
எப்படி..
அர்ச்சிக்கப் படும் பூக்களில்
சிலசமயம்
முட்களும் கலந்திருக்கும்
அதற்காக ஆண்டவன் கவலைப் படுவதில்லை..
உதயா கீப் இட் அப் என எழுதிப் போஸ்ட் செய்யப் போகையில் ஒரு குழப்பம்..என் பெயர் கண்ணன் ரா.. அப்ப்படியே நிறைய பேர் இருக்கிறார்கள்
புனைபெயரில் அழகான பெண்கள் பெயர்களை பல எழுத்தாளர்கள் வைத்துக் கொண்டு விட்டார்கள்..எனில் டிஃபரன்ஷியேட்ட் செய்வதற்காக கே.ஆர்.ஐயங்கார்
என எழுதிப் போஸ்ட் செய்து விட்டேன்..(சின்னக் கண்ணன் என்பது பிற்பாடு வைத்துக் கொண்டது).. சில நிமிடங்களிலேயே எனது மெய்லிற்கு
உதயாவிடமிருந்து பதில். நன்றி நவின்று..
ஆமாம் இதை நான் எதற்கு இங்கு சொல்கிறேன்..
//அவரவர் ரசனைக்கேற்ப பூக்களைப் பிடிப்பது
தப்பில்லை..
அதற்காக மரத்தையே பூக்காதே என்றால்
எப்படி..// இந்த வார்த்தைகளுக்காக.. இங்கோ மரமோ பூக்க மாட்டென் என்கிறது.. அஃப்கோர்ஸ் ராகவேந்தர் சார் சற்றே குண்டாக இருக்கலாம்..இருந்தால் ஆலமரம் எனலாம்..;) ராகவேந்தர் சாரைப் பொறுத்தவரை அவருடைய எண்ணங்கள் சிவாஜியின் எல்லா நடிப்பும் பிடிக்கும்..கோபால், சின்னக் கண்ணன் போன்றோருக்கு செலக்டிவ்வாகப் பிடிக்கும் அவ்வளவே..
ராகவேந்தர் சார்.. நீங்கள் எழுதவேண்டியதை எழுதுங்கள்.. அது உங்கள் கருத்து. மாற்றுக் கருத்தாக கோபால் அவர் கருத்தை சொல்லி வருகிறார்.. எங்களுக்கெல்லாம் மாற்றுக் கருத்துச் சொல்ல வராது.. எனில் நாங்கள் எல்லாம் சின்ன வெள்ளைப் புறாக் குட்டிகள் :)
நடிகர் திலகம் ஒரு இமயமான உயர்ந்த நடிகர். அவர் சில வேளைகளில் சில படங்களில் சில விதங்களில் சில சந்தர்ப்பங்களில் நடித்திருந்தது அவருக்கே பிடிக்காமல் இருந்திருக்கும்..இருந்திருக்கலாம். எனில் நான் சொல்ல வருவது என்னவென்றால் (ஹாஆஆவ்வ்வ் :) )
(கடைசியில் ரவி சார் பாணியில் nt பற்றி ஒரு வரி எழுதிவிட்டேன் :) )
சி.க சொன்னது போல நீங்கள் எழுதுவதை எழுதுங்கள், அவர் எழுதுவதை எழுதட்டும். மய்யத்தில் பல திரிகள் "monopoly" ஆகிவிட்டன. இப்படித்தான் எழுதவேண்டும் என்று நிர்பந்திப்பவர்கள் தான் அதிகம்.. இந்த திரியும் அப்படி ஆகிவிட வேண்டாம். இப்படி சண்டைகள் வந்ததால் தான் பல திரிகள் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கின்றன..