ஞாபகம் வருதே ஞாபகம் வருதே .. என் மதுரைக்காலங்கள் ஞாபகம் வருகிறதே ...
Printable View
முரளி சார்..
உங்களிடமிருந்து இப்படி ஒருகேள்வி வரும் என எதிர் பார்க்கவில்லை :)
..ச்சும்மா ஒரு சுவாரஸ்யத்திற்காக லேடிடோக் ஃபர்ஸ்ட் இயர் என எழுதியிருந்தேன்..இப்படியா வயதுக் கணக்குப் போட்டு என்னை வாருவது :)
அந்தப்பெண்மணி எஸ்.எஸ்.எல்.சியிலேயே படிப்பை நிறுத்தி வீட்டோடு பல வருடம் இருந்தார்..வீட்டில் அவருக்கு பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. என் நண்பனுடைய வீட்டில் தான் அவர்கள் குடியிருந்தார்கள். அவர்கள் வீட்டிலிருந்து பார்த்தால் எங்கள் தெருவை குறுக்கால் வெட்டிய தெரு ஆரம்பிக்கும்..வலதுகைப்பக்கம் ஒரு அரசு பிரசவ ஆஸ்பத்திரி..சற்றுத் தாண்டி சந்தை.. அந்தத்தெருமுனைக்குச் சென்றால் ஆறு முச்சந்தி வந்து விடும்..(லொகேஷன் தெரிகிறதா) (இப்போது எப்படி மாறியிருக்கிறது எனத் தெரியாது)
ஒரு பள்ளி விடுமுறை தினம் தான் என நினைக்கிறேன்.. அவர் அம்மா வராததினால் என்னைத் துணைக்குக் கூப்பிட்டார் அந்த ப் பழைய பட விரும்பி.. நானும் சமர்த்தாய் என் அம்மாவிடம் சொல்லிவிட்டுத் தான் சென்றேன்..
இப்போது எப்படி இருக்கிறாரோ என்னவோ.(ஹைய்யா..கண்டிப்பா வாசு சாரிடம் அவரின் இந் நாளைய புகைப்படம் இருக்காது!):)
அடுத்த வருடமே அவர் அப்பாவிற்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகிப் போய் விட்டார்..-சென்னை என்று தான் நினைக்கிறேன்..அப்புறம் தொடர்பில்லை.. 13 வயசுப் பையன் 25 வயதுப் பெண்ணிற்குத் துணைக்குப் போகலாம் தானே..
அன்புடன்
சி.க.
கூடவே பனியில்லாத மார்கழியா..காதலில்லாத வாலிபமான்னுசம்பந்தமே இல்லாம பாட்டு எனக்குக் கேக்குதே காரணம் என்னவா இருக்கும்..
எனக்கு கிடைக்கும் நேரத்தில் நூற்றுகணக்கான பதிவை படிக்கவே நேரம் போதவில்லை...
நீங்கள் உருகு உருகுன்னு உருகி கேட்க நூறாவது நாள் பாடல் இதோ :
http://www.mediafire.com/listen/f6nv...vathu_Naal.mp3
நன்றி
ஆஹா! மாட்னேன்பா மதுண்ணாகிட்ட. (இனிமே நானும் மதுண்ணா அப்படின்னுதான் கூப்பிடப் போறேன். சார் அந்நியமாப் படுது)
ஷிப்ட்டுக்கு புறப்படும் போது அவசரமா போட்டேனா . எப்பவும் கடைசியா ஒரு தடவ செக் பண்ணுவேன். இன்னைக்கு டைம் இல்லாம மிஸ்ஸிங். கந்தனுக்கு பதிலா கண்ணன் ஆயிடுத்து.
அழகா கண்டு பிடிச்சுட்டேளே! நல்ல வேளை. தெய்வக் குத்தம் ஆகியிருக்கும்.:) திருத்திட்டேன்.
ஆமாம்... மதுண்ணா...அங்கே விளக்கெண்ணை என்ன விலை?:)
முரளி சார்,
நீண்ட இடைவெளிக்குப் பிறகு? வாருங்கள் சார்.
தங்களுக்குக் கீழ்தான் நாங்கள் எல்லோருமே!
நீங்களும் சைட்டை பத்தி பேச வந்தது மிகவும் சந்தோஷம். ஐ மீன் நம்ம 'மதுரகானங்கள்' வெப் சைட் பற்றி.
கிராதகர் வந்தால் மட்டுமே டோஸ்.
முரளி சார்! எப்படி இருக்கிறீர்கள்? ரொம்ப நாட்களாயிற்று. விரைவில் செல்லில் தொடர்பு கொள்கிறேன். தாங்கள் ஒன்றுமே பதிவிடா விட்டாலும் முரளி ஸ்ரீனிவாஸ் என்ற பெயர் பார்த்தாலே கரை புரண்ட வெள்ளம் போல் மகிழ்ச்சி. அது எங்கள் முரளியால் மட்டுமே முடிந்த ஒன்று.
அடுத்த பாகத்திற்கு தங்கள் மனமுவந்த வாழ்த்துக்கள் தேவை.
நேற்று இரவு இணைய இணைப்பு கிடைக்காததனால் அனைவருக்கும் நன்றி கூற இயலவில்லை. நேற்று நண்பர்கள் அனைவரும் அமர்க்களப்படுத்தி விட்டீர்கள். குறிப்பாக மதுண்ணா அதிகமாகக் கலந்து பெருமைப்படுத்தியுள்ளார். அவருக்கு நன்றி. சின்னக்கண்ணன் அற்புதமான பல பாடல்களை அளித்துள்ளார். கிருஷ்ணாஜி ஏ .வி.எம்.பற்றி அழகாக ஞாபகப்படுத்தியுள்ளார். ராகவேந்திரன் சாரின் விஸ்வரூபம் விவரிக்க முடியாத ஒன்று. எஸ்.எஸ். சாரின் நூறாவது நாள் பாடலுக்கும் நன்றி! வினோத் சார் அமர்க்களம். கிருஷ்ணாஜி சூர்யகலாவை நினைவுகூர்ந்து கலக்கி விட்டீர்கள். அதிகம் வெளியே தெரியாத கலைஞர்களை திரியில் பெருமைப்படுத்தும் தங்கள் பதிவுகள் பாராட்டுக்குரியவை. மாற்றும் விடுபட்டுப் போன அனைத்துப் பதிவாளர்களுக்கும் நன்றி! படித்து இன்புற்ற பார்வையாளர்களுக்கும் நன்றி! மதியம் சந்திப்போம்.
ராஜேஷ் சார்,
அமர்க்களம். தங்கள் பதிவுகளை இனிமேதான் பார்க்க வேண்டும். இரவு சந்திப்போம். நன்றி!
பொங்கும் பூம்புனல்
http://www.inbaminge.com/t/k/Kaidhi/
Be Happy Be Cheerful Be jolly
இப்படி ஒரு ஜாலியான பாடலை ராதா ஜெயலக்ஷ்மி பாடி கேட்டிருக்க மாட்டீர்கள். கைதி படத்தில் எஸ்.பாலச்சந்தர் இசையில் இப்பாடலை நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்பீர்கள். இது நிச்சயம்.. தங்கள் காலர் அளவு சட்டையின் நீளம் என ஒரு அங்கியின் அளவு, என ஒரு பெண் தையற்கலைஞர் பாடும் பாடலாக்கும் இது
1951ம் ஆண்டிலேயே எப்படிப்பட்ட புதுமையான கருத்துக்கள்...
பொங்கும் பூம்புனல்
ஆனந்தம் ஆனந்தமே...
உண்மையின் வெற்றி எப்போதும் தரும் ஆனந்தம் ஆனந்தமே...
1951ம் ஆண்டு வெளியான உண்மையின் வெற்றி திரைப்படத்திலிருந்து டி.ஏ.கல்யாணம் இசையில் நடராஜகவியின் வரிகளில் எப்போதும் ஆனந்தமே...
http://www.inbaminge.com/t/u/Unmayin%20Vetri/
99% சிவாஜி ரசிகர்களாலேயே ,ஆரம்பிக்க பட்டு,நடத்த பட்டு,பங்களிக்க பட்ட திரி. இதன் வெற்றி ,சிவாஜி ரசிகர்களின் பரந்து விரிந்த அறிவு,தெளிவு,ரசனை மற்றும் விவரங்களின் தெளிவை நிரூபித்துள்ளது.இது எனக்கு சந்தோஷமே ஆனாலும் ,கார்த்திக் ,வாசு,ராகவேந்தர்,சி.க.,ராஜேஷ்,மது, கிருஷ்ணா எல்லோருமே நமது முக்கிய திரியான பாகம்-14 ஐ வந்து கவனிக்க வேண்டுமாய் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா ,பாகம்-2 ,மதுர கானத்தை துவக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனையை வழி மொழிகிறேன்.
பாகம்-2 வெற்றி பெற வாழ்த்துக்கள். இவ்வளவு வேகம்,பதிவுகளின் மேல் குவிய வேண்டிய கவனத்தை சிதறடிக்க வாய்ப்புண்டு.
காட்டாற்று வெள்ளம் போல் ஓடிக்கொண்டிருப்பதை அணை போட்டு தடுக்கலாமா கோபால் ஜி .. நியாயமா தர்மமா நீதியா அடுக்குமா .. அச்சசோ சினிமா வசனம் போல பொங்கி வருகிறதே ..:)