http://i65.tinypic.com/2qnw31w.jpg
Printable View
மே மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள்
என் தங்கை
பாக்தாத் திருடன்
பெரிய இடத்து பெண்
சந்திரோதயம்
அரசகட்டளை
அடிமைப்பெண்
என் அண்ணன்
ரிக்ஷாக்காரன்
உலகம் சுற்றும் வாலிபன்
நினைத்தை முடிப்பவன்
உழைக்கும் கரங்கள்
இன்று போல்என்றும் வாழ்க
மக்கள் திலகத்தின் '' அடிமைப்பெண் '' இன்று 47 நிறைவு தினம் .
https://youtu.be/UMcJl5D5qU4
எம்.ஜி.ஆரைப் பற்றி டைரக்*டர் சங்*கர்.....
‘அடிமைப்பெண்’ அவருடைய சொந்தப் படம். அதை இயக்கப் பலரும் முன்வந்தனர். அவர் என்னை அழைத்து உங்க திறமை எனக்குத் தேவை என்றார். ஒப்புக்கொண்டேன்.
‘அடிமைப்பெண்’ பட ஸ்டோரி டிஸ்கஷனுக்காக ஒரு மாதம் அவரது வீட்டிலேயே இருந்தேன். படத்தை ஜெய்பூரில் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நான் சொன்னதை ஏற்க ஆரம்பத்தில் தயங்கினாலும் பின்பு, அங்கேயே படமாக்க ஒப்புக்கொண்டார். படத்தைப் பார்த்தவுடன் அவர் சொன்ன வார்த்தை 'படத்தின் உயிர்நாடியே ஜெய்பூர் தான்'. இந்த சந்தர்ப்பத்தில் ஜெய்பூர் அனுபவத்தை சொல்லியாக வேண்டும்.
நாங்கள் ஜெய்பூரில் போய் இறங்கியவுடனேயே ராஜஸ்தான் வறட்சி நிதிக்காக ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தார். அதனால் ஜெய்பூரில் நாங்கள் எந்த இடத்திலும் படப்பிடிப்பை நடத்தலாம் என்கிற நிலைமை உருவாகியது. ஜெய்பூர் அரண்மனையில் ஆறாவது மாடியில் மன்னரின் படுக்கை அறை உள்ளது.
இங்கேயே பாடல் காட்சியை எடுத்தால் நன்றாக இருக்கும் என்றேன். என்ன பெட்ரூமி லேயா? என்று சொல்லி வாய் விட்டுச் சிரித்தார். ''ஆமாம். ஆனால் இங்கே ஒரு குறை. நாம் படமெடுக்க முடியாதபடி உள்ளது. அதை நிவர்த்தி செய்தால் எடுக்கலாம்'' என்றேன். என்ன அது?
இந்த அறையில் கார்ப்பெட் மட்டும்தான் உள்ளது. அதற்கு பதிலாக சன்மைக்காவை பதித்து காட்சிகளை எடுத்தால் ரொம்ப சிறப்பாக இருக்கும்.
சன் மைக்கா அப்போதுதான் அறிமுகமான சமயம். டில்லிக்கு ஒருவரை விமானத்தின் மூலம் அனுப்பி சன் மைக்காவை வரவழைத்துவிட்டார். அந்நாளில் அதன் மதிப்பு நாற்பதாயிரம் ரூபாய்.
பாடலின் சில வரிகளை மட்டும் எடுத்தால் போதும் என்றிருந்த நாங்கள், பாடலின் முக்கால்வாசியை அந்த அறையிலேயே எடுத்தோம். அந்தக் காட்சியைப் பார்த்த சின்னவர் முதல் முறையாக என்னைத் தட்டிக்கொடுத்துப் பாராட்டினார்.
படம் திரையிடப்பட்ட பிறகு ரசிகர்களின் பெரிய பாராட்டையும் பெற்ற அந்தப்பாட்டு ‘ஆயிரம் நிலவே வா’. ஜெய்பூரில் ஷூட்டிங் முடிந்தவுடன், அங்கேயே கிரேன் தள்ளியவர் உட்பட எல்லோருக்கும் அன்பளிப்பு வழங்கினார்.
சரியாக திட்டமிட்டு செலவைப் பற்றித் கவலைப்படாமல் எடுக்கப்பட்டதால்தான், ‘அடிமைப்பெண்’ படவுலக வாலாற்றில் இடம் பெற்றது.
‘அடிமைப்பெண்’ பட எடிட்டிங் நடந்து கொண்டிருந்தது. இந்திப்பட வேலைக்காக மும்பைக்குப் போய்விட்டேன். ‘அடிமைப்பெண்’ படத்திற்காக சில காட்சிகளை எடுக்க வேண்டியிருந்தது. நான் மும்பையிலிருந்து வராததால் அதை சின்னவரே எடுத்துவிட்டார்.
அந்தக் காட்சிகளை ஏற்கனவே எடிட் செய்த காட்சிகளுடன் அவர் இணைத்த விதம் அருமை. தொழில்நுணுக்கம் தெரிந்தவர்கள் கூட எளிதில் கண்டுபிடிக்க முடியாது.
இந்தப் படம் வெளியாவதற்கு முன், டைட்டிலில் என் பெயரை போடும்போது சங்கருடைய உழைப்பு… ஒவ்வொரு துளி ரத்தமும் இந்தப் படத்தில் உள்ளது என்று பாராட்டி இருக்கிறார். பிறருடைய திறமையைப் பாராட்டுவதில் அவருக்கு நிகர் அவரேதான்.
எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பல படங்களில் நடிக்கும்போதும் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது. பொது இடங்களில் சினிமா நட்சத்திரங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எம்.ஜி.ஆரிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். நமது சொந்த உணர்ச்சிகள் எதையும் பொது இடத்தில் காட்டிக் கொள்ளக்கூடாது. நமது இமேஜுக்கு பங்கம் வரும்வகையில் எக்காரணத்தை முன்னிட்டும் நடந்து கொள்ளக் கூடாது, லேடி ஆர்டிஸ்ட் என்றால் மற்றவர்கள் கை எடுத்து கும்பிட்டு, "வாங்கம்மா உட்காருங்கம்மா'' என்று சொல்லி வரவேற்கும் அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்லுவார் என்று எம்.ஜி.ஆரை பற்றி நம்முடன் பகிர்ந்துக் கொள்கிறார் 'புன்னகை அரசி' கே.ஆர்.விஜயா.
''அண்ணா முதல்வராக இருந்தபோது அவர் கையால் தமிழக அரசின் 'கலைமாமணி விருது' வாங்கிய பெருமை எனக்கு உண்டு. எம்.ஜி.ஆரும் அதே ஆண்டுதான் 'கலைமாமணி விருது' பெற்றார்.
எம்.ஜி.ஆர். கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்றால் கூட்டத்துக்கு கேட்கவா வேண்டும்? நிகழ்ச்சி முடிந்ததும் அரங்கிலிருந்து வெளியே வந்து கார் இருக்கும் இடத்திற்கு செல்லக்கூட முடியவில்லை. எம்.ஜி.ஆரைச் சுற்றிலும் மக்கள் வெள்ளம்தான். ஆயினும் அவர் தன்னைப்பற்றிக் கவலைப்படாமல் என்னை பத்திரமாக அழைத்துச் சென்று என் காரில் என்னை ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அதுதான் எம.ஜி.ஆர். இதேபோல் அவர் முதல்வராக இருந்தபோது அரசு சார்பில் சேலத்தில் நடந்த ஒரு விழாவிற்கு சென்றிருந்தேன். விழா முடிந்ததும் இரவு கணவருடன் காரில் புறப்பட்டபோது, "இரவில் நீண்ட தூரம் காரில் செல்ல வேண்டாம். தங்கிவிட்டு காலையில் புறப்பட்டுச் செல்லுங்கள்' என்று அதே பழைய அன்போடும் அக்கறையோடும் எம்.ஜி.ஆர். கூறவே அதன்படியே நாங்கள் அன்றிரவு அங்கு தங்கிவிட்டு அடுத்த நாள் பகலில் புறப்பட்டு சென்னை வந்தோம்.
எனது நூறாவது படம் "நத்தையில் முத்து'' வெளியானபோது ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, என்.டி.ராமாராவ் மற்றும் முன்னணி இயக்குனர்கள் அனைவரும் கலந்து கொண்டு என்னை வாழ்த்தியதை என்றென்றும் என்னால் மறக்க முடியாது. இவர்கள் எல்லோருடைய வாழ்த்தும்தான் இருநூறு, முன்னூறு, என்று படங்களின் எண்ணிக்கையை கடக்கச் செய்து இன்று நானூறாவது படத்தை நான் நெருங்குவதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.
எம்.ஜி.ஆரைப் பற்றி டைரக்*டர் சங்*கர்.....
‘பணத்*தோட்*டம்’ படத்*தின் க்ளைமேக்ஸ் காட்*சியை எடுக்*கும்*போது காலை ஏழு*மணி. படப்*பி*டிப்பு தொடங்கி, அடுத்*த*நாள் காலை ஏழு*ம*ணி*வரை தொடர்ந்து நடந்*தது. பதி*னெட்டு நாளும் எங்*க*ளுக்கு சாப்*பாடு ராமா*வ*ரம் தோட்*டத்*தி*லி*ருந்*து*தான்.
’பணத்*தோட்*டம்’ மிகப்*பெ*ரிய வெற்*றி*ய*டைந்*த*தும் சின்*ன*வர் என்னை அழைத்*தார். என் படத்தை டைரக்ட் செய்*ய*மாட்*டேன் என்று சொன்*னீர்*களே? இப்*போது என்ன சொல்*கி*றீர்*கள்? என்று கேட்*டார்…
…
அப்*போது நான் சொன்ன பதில், ’என்னை மன்*னித்து விடுங்*கள்’. அவ*ரு*டைய நட்பு தொடர்ந்*தது, அவர் நடித்த ‘கலங்*கரை விளக்*கம்’, ‘சந்*தி*ரோ*த*யம்’, ‘குடி*யி*ருந்த கோயில்’ படங்*களை டைரக்ட் பண்*ணி*னேன்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த படங்*களை ஒரே நாளில் டைரக்ட் செய்த பெருமை எனக்*குத்*தான்
.
‘ஆல*ய*மணி’, ‘பணத்*தோட்*டம்’ படங்*கள் ஒரே சம*யத்*தில் தயா*ரா*னவை. வாகினி ஸ்டுடி*யோ*வில் காலை ஏழு மணி முதல் ‘ஆல*ய*மணி’ படப்*பி*டிப்பு., பிற்*ப*கல் இரண்டு மணி*யில் இருந்து சத்யா ஸ்டுடி*யோ*வில் ‘பணத்*தோட்*டம்’ ஷூட்*டிங்.
வாகி*னி*யில் ஒரு மணிக்கே சூட்*டிங் முடிந்து சத்யா ஸ்டுடி*யோ*விற்*குப் போவ*தற்*குள் சின்*ன*வர் மேக்*கப் போட்டு இரண்டு மணிக்*குத் தயா*ராக இருப்*பார்.
சத்*யா*வுக்கு யூனிட் போன*வு*டன் லைட்*டிங் பண்ணி ஷூட்*டிங் ஆரம்*பிக்க நேரம் சரி*யாக இருக்*கும். எங்*க*ளுக்கு சாப்*பிட நேரம் இருக்*காது. இதை ஓரிரு தினங்*கள் கவ*னித்த சின்*ன*வர் நீங்க எல்*லோ*ரும் சாப்*பிட்*டாச்சா என்று கேட்*டார்.
இல்லை?
ஏன்?
நீங்க இரண்டு மணிக்கு மேக்*கப்*போட்டு காத்*துக்*கிட்*டி*ருப்*பீங்க, அத*னால் நேரா சாப்*பி*டாம இங்கே வந்*துட்*டோம்.
நாளை*யி*லி*ருந்து நான் இரண்டு மணிக்கு வர்*ரேன், நீங்க இங்*கேயே சாப்*பிட்ட பின் ஷூட்*டிங் ஆரம்*பிக்*க*லாம். இன்*னொரு விஷ*யம் கூட, நீங்க சாப்*பிட்*டு*விட்டு லைட்*டிங் பண்ணி ஷூட்*டிங் ஆரம்*பிக்*க*லாம் என்*றார் அவர்.
குடி*யி*ருந்த கோயில் நமக்*கென ஒரு யூனிட், அந்த யூனிட்*டு*டன்*தான் கண்*டிப்*பு*டன் வேலை செய்*ய*வேண்*டும் என்று இருந்*தேன்.
‘ஆல*ய*மணி’ படத்தை இந்*தி*யில் டைரக்ட் செய்ய வாய்ப்பு வந்*த*போது நடி*கர் திலீப்*கு*மார் ஒளிப்*ப*தி*வா*ளரை மாற்*ற*வேண்*டும் என்*றார். நான் மறுத்*து*விட்*டேன். இதைக் கேள்*விப்*பட்ட சின்*ன*வர் என்*னி*டம் நீங்*கள் யூனிட் என்று பணி*யாற்*று*வதை மதிக்*கி*றேன் அதே சம*யத்*தில் தொழி*லை*யும் கவ*னிக்க வேண்*டும், வாழ்க்*கை*யில் பிற*ரு*டன் அனு*ச*ரித்*துப்*போ*க*வேண்*டும். இதற்*காக நீங்*கள் பின்*னால் வருத்*தப்*ப*டு*வீர்*கள் என்*றார். அபோ*தும் அவர் சொன்*னதை நான் ஏற்*க*வில்லை.
‘குடி*யி*ருந்த கோயில்’ படத்*தில் நடித்*துக் கொண்*டி*ருந்த போது தான் அவர் சுடப்*பட்டு சிகிச்சை பெற்*று*வந்*தார். ஒன்*பது மாதங்*கள் ஷூட்*டிங் இல்லை.
சங்*கர் எம்.ஜி.ஆர் படங்*கள் தான் பண்*ணு*வார். அத*னால் அவ*ருக்கு படங்*கள் கிடை*யாது. எம்.ஜி.ஆருக்*கும் அடி*பட்*டுப்*போச்சு இனி சங்*கர் ஊருக்*குப் புறப்*ப*ட*வேண்*டி*யது தான் என்று சொல்லி எந்த யூனிட்*டுக்*காக பல படங்*களை தியா*கம் செய்*தேனோ அதே யூனிட் என்*னை*விட்டு பிரிந்*தது. இந்த சம்*ப*வம் எனக்கு ரொம்ப வேத*னை*யைத் தந்*தது. தனித்து விடப்*பட்*டேன்.
சின்*ன*வர் உடல் நலம் பெற்*ற*வு*டன் ‘குடி*யி*ருந்த கோயில்’ ஷூட்*டிங் மீண்*டும் ஆரம்*ப*மா*னது. முதல் நாள் ஷூட்*டிங், வேறு டெக்*னீ*ஷி*யன்*க*ளு*டன் அரங்*கில் படப்*பி*டிப்பு ஏற்*பா*டு*களை செய்*து*கொண்*டி*ருந்*தேன்.
சின்*ன*வர் வந்*தார்… பார்த்*தார்..
’என்ன யூனிட்டா’ அவர் இப்*ப*டிக் கேட்*ட*வு*டன் என்*னை*ய*றி*யா*மலே என் கண்*ணில் நீர் நிறைந்*து*விட்*டது.
வாழ்க்கை வேறு, கொள்கை வேறு என்*கிற உண்,மையை எனக்கு உணர்த்*தி*ய*வர் சின்*ன*வர், எதை*யும் முன்*கூட்*டியே தீமா*னிப்*ப*தில் வல்*ல*வர் என்*ப*தற்கு என் வாழ்க்*கை*யில் நடந்த இந்த சம்*ப*வமே ஒரு எடுத்*துக்*காட்டு.