-
#அன்பிற்குமுண்டோ...!
எம்ஜிஆர் என்ற தனியொரு மனிதருக்காக அவர் சட்டத்தையே மாற்றியமைத்தார் என்றால் அதை உங்களால் நம்ப முடிகிறதா?
1979-ஆம் ஆண்டு பொன்மனச்செம்மலின் ஆட்சியைக் கலைத்த இந்திராகாந்தி அம்மையார், எம்ஜிஆருக்காக ரிசர்வ் வங்கியின் சட்டத்தையே மாற்றி அமைத்தார் என்றால், அது எம்ஜிஆர் ஒருவருக்கே சாத்தியப்படும்…
நட்புக்கு ஒரு உதாரணம் சொல்லுவார்கள். நெல்லுக்குள் தான் அரிசி. அது பிரிந்து விட்டால் ஒட்டாது. அப்படிதான் நட்பும் என்று கூறுவார்கள். ஆனால் அதையும் முறியடித்தார் எம்ஜிஆர் தனது அருங்குணத்தால்.
இரண்டாவது முறை மக்களால் அரியணையில் அமர்ந்த பிறகு இந்திராகாந்தி அம்மையார், எம்ஜிஆர் மீது மக்கள் வைத்திருக்கும் மதிப்பை உணர்ந்தார்.
மோதல் இருந்த போதும் சஞ்சய்காந்தி இறந்த பொழுது, இரங்கல் தெரிவிக்க சென்ற பொன்மனச்செம்மலின் உன்னத குணத்தை அறிந்தார்.
தமிழகம் தன் நட்பில் இல்லையென்றால் தென்னகமே தன்னாட்சிக்குள் இருக்கத்தகுதியில்லை என நினைத்து, பொன்மனச்செம்மலுக்கு இன்னொரு தாயானார்.
இந்திராகாந்தி அம்மையாருக்கும் பொன்மனச்செம்மலுக்கும் இடையே நடைபெற்ற மோதல்கள் மட்டுமே அறிந்து வைத்திருக்கின்ற நம்மை அவர்களிடையே இருந்த இதுபோன்ற நல்லுறவு, பெருந்தன்மை...காலத்தால் அழிக்கமுடியாதது................. Thanks wa.,
-
சென்னை ராஜாஜி மண்டபம். பகல் நேரம் பத்து மணி , கோட் ,சூட் சகிதமாய் IAS அதிகாரிகள், மாவட்ட ஆட்சியாளர்கள் மண்டபத்திற்குள் வந்து குழுமியிருக்கிறார்கள் . அதிகாரிகள் இருக்கையில் அமர்த்த பத்தாவது நிமிடம் வரலாற்று புகழ்மிக்க 4777 எண் உள்ள பச்சை நிற அம்பாசடர் கார் சர்ரென்று ராஜாஜி ஹால் வாசலில் வந்து நிற்கிறது .காலத்தை வென்ற காவிய நாயகன் கார் கதவை திறந்து.முதன் முறையாக ராஜாஜி ஹால் மண்டப படிக்கட்டில் கால் வைக்கிறார் .செக்யூரிட்டிகள் பின் தொடர மண்டப படிக்கட்டுகளில் ராஜநடை போட்டு அந்த ஆலோசனை கூட்டத்திற்கு செல்கிறார் . ஆலோசனை கூட்டத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் , "ஆட்சியை மக்கள் என்னிடம் நம்பி ஒப்படைத்து இருக்கிறார்கள்.உடனடியாக அவர்களுக்கு செய்ய வேண்டிய நல்ல திட்டங்களை சொல்லுங்கள்,ஆக வேண்டியதை நான் பார்த்து கொள்கிறேன் என்று மாவட்ட கலெக்டர்களிடமும், உயர் அதிகாரிகளிடமும் , ஆலோசனை கேட்கிறார்.அப்பொழுது அந்த நேரத்தில்,அந்த மண்டபத்தில் பெயின்டிங் வேலை செய்து கொண்டிருந்த ஒரு இளைஞர் , எவரையும் அனுமதிக்காத அந்த கூட்ட வளாகத்துக்குள் தடையை மீறி நுழைந்து விடுகிறார். காவலர்களின் கட்டுப்பாட்டை மீறினாலும் அந்த மக்கள் தலைவர்,அந்த குடிமகனை மன்னித்து, வந்த நோக்கத்தை சொல்ல என்கிறார் . "எனக்கென்று எதுவும் கேட்க வரவில்லை. தலைவா! "கிராமங்களில் இன்னமும் பாமர மக்கள் மக்கி போன சோளக் கூழைத்தான் சாப்பிட்டு வருகிறார்கள்.நெல்லுச்சோறு என்பது மாசத்துல ஒருநாள் அல்லது வாரத்துல ஒருநாள், இல்லாட்டி நல்ல நாள் பெரிய நாளைக்குத்தான் நெல்லு சோற்றை பார்க்க முடியுது,இது நமக்கு ஆண்டவன் விதித்த விதி என்றே மக்கள் நம்பி கொண்டிருக்கிறார்கள் .அந்த அளவுக்கு வறுமையை பழகிக்கொண்டு, சகித்துவாழ முன்பிருந்த ஆட்சியாளர்களால் பழக்கப்படுத்த விடப்பட்டிருக்கிறார்கள். அதை மட்டும் போக்கி காட்டுங்கள்,உங்கள் ஆட்சியை வரலாறு ,பொற்கால ஆட்சி என்று போற்றிப்பாடும்.."என்கிற கோரிக்கையை முன் வைக்கிறார் அந்த குடிமகன் .கூறியவன் ஒரு சாதாரண குடிமகன் தானே என்று சாதாரணமாக நினைக்காமல்,அந்த குடிமகனின் கோரிக்கையை குறித்து கொள்ளுங்கள் என்று கலெக்டர்களிடம் ஆணையிடுகிறார், மக்கள்திலகம்.கொடுமையிலும் கொடுமையான பசியை போக்க வேண்டும் .உங்களுக்கு தெரியமோ ,தெரியாதோ! ஆனால்,எனக்கு தெரியும் ,பசியின் கொடுமை. என் ஆட்சியில் பாலாறு தேனாறு ஓடும் என்றெல்லாம் சொல்ல மாட்டேன் ஆனால் மக்கள் பசிக் கொடுமையை அனுபவிக்க ஒருக்காலும் விட மாட்டேன் .என் மக்கள், தினமும் அரிசி சோறு சாப்பிடுவதற்கான திட்டத்தை சொல்லுங்கள் .அதற்கு ஆகும் செலவை சொல்லுங்கள் ,நிதி ஒதுக்கி தருகிறேன் .என் மக்கள் பசி போக்க ,அரிசி எங்கிருந்து கிடைத்தாலும் ,எப்பாடு பட்டாவது ,வாங்கி வருகிறேன் .உங்களுக்கு அரைமணி நேரம் அவகாசம் தருகிறேன் .திட்டமிட்டு சொல்லுங்கள் " என்று டேபிளில் கிடந்த பேப்பரை எடுத்து படிக்க ஆரம்பிக்கிறார்; புரட்சித்தலைவர்.அரைமணி நேரத்திற்கு பிறகு , ஆகும் பட்ஜெட் செலவு என்று , ஒரு தொகையை சொல்கின்றார்கள் அதிகாரிகள் .உடனே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் இரண்டு மடங்காக்கி தருகிறேன் என்று அந்த இடத்திலேயே உத்தரவிடுகிறார் . ஒரு சாதாரண குடிமகன் வழிமொழிந்த கோரிக்கையை வேதமாக எடுத்து செயல்பட்டிருக்கிறார் மக்கள் திலகம்! புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் கிராமங்களில் இதுவரை சோளக்கூழை சாப்பிட்டு வந்த மக்களுக்கு மூன்று வேலையும் அரிசி சோறு சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது ..................... Thanks wa.,
-
-
-
-
-
-
-
-