டியர் வாசு சார் - இமாலய சாதனை - ராகவேந்திரா சாரை தொடர்து ! படிக்க படிக்க அலுக்காத பதிவுகளில் உங்களதும் ஒன்று .
Ravi
:):smokesmile:
Printable View
டியர் வாசு சார் - இமாலய சாதனை - ராகவேந்திரா சாரை தொடர்து ! படிக்க படிக்க அலுக்காத பதிவுகளில் உங்களதும் ஒன்று .
Ravi
:):smokesmile:
ஒரு சின்ன rewinding - kind attention to Mr Ragavendra and Mr Gopal
Dear Raghavendra and Gopal Sirs ------ an appeal to you both !!
Dear Ragavendra /Gopal sirs
உங்கள் பதிவுகள் அருமை , உங்கள் குணம் - அடுத்தவர்களை , அவர்களின் திறமையை உடனே பாராட்டும் எண்ணம் மிகவும் பெருமைப்பட வைக்கின்றது - இந்த திரியில் என்னை பங்கேற்க தூண்டிவிட்டது , உங்களின் தீவிர NT பக்தி , வாசுவின் அருமையான தமிழ் நடை , முரளியின் அசராத உழைப்பு , கோபாலின் deep rooted passionate R&D on NT , கார்த்திக்கின் எழுத்துக்கள் , கண்படின் பதிவுகள் , நட் 360 யின் உழைப்பு, கக் சிரின் அயராத உழைப்பு , சின்ன கண்ணனின் நகைச்சுவை கலந்த மென்மையான பதிவுகள், நம் அன்பின் மொத படைப்பு Pammalar அண்ட் சாரதா மேடம் ( இன்னும் சில மேதைகளை விட்டிருந்தால் மன்னிக்கவும்) -NT திரி யின் புகழ் ,உண்மையான , நிரூபிக்கப்பட்ட ஆவணங்கள் வேறு எந்த திரியுலும் இல்லை , வரபோவதும் இல்லை - என்ன பக்தி அண்ட் என்ன உழைப்பு !!
இப்படி வேகமாக போகும் திரியில் வேண்டாமே சார் Speed Breakers , உள் பூசல் – எல்லோருடிய எண்ணமும் NT யை பற்றி இருக்கும் போது ஏன் இந்த war of words ?
ஒரு இரண்டு பதிவுக்குள் இப்படி ஒரு அட்வைஸ் ஆ ???
தயுவு செய்து என்னை தவறாக எண்ணவேண்டாம் - இந்த திரி வேகமாக போகவேண்டும் & எல்லோருடிய உழைப்பும் அவசியம் - யாரும் விரோதிகள் இல்லை NT யை தப்பாக சொல்பவர்களை தவிர, இந்த பேராசையில் தான் எழுதிகிறேன் - இன்னும் பலர் இந்த திரிக்கு வந்து பெருமை சேர்ப்பார்கள் , அந்த நாள் வெகுதூரம் இல்லை - அருமையாக எழுதுவோம் for அடுத்த generation , அன்புடன் பழகுவோம் , எதிரிகளை ஓட வைப்போம் , சர்ச்சை தூண்டும் வார்த்தைகளுக்கு விடை கொடுப்போம் -
Shall be grateful if anyone compiles the list of contact nos , e mails of all the Veterans of this hub ( I can do this if I get the details from each one of you) , சில முரண்பாடான பதிவுகளை discuss செய்துவிட்டு போஸ்ட் பண்ணலாம் - எனது சிறிய வேண்டுகோளுக்கு செவி கொடுத்ததிற்கு மிகவும் நன்றி.
எதாவது அனுபவத்துக்கு மீறி எழுதிருந்தால் மன்னிக்கவும்- இந்த திரிக்கு மிக பெரிய பெருமை சேர்க்கும் நீங்கள் இருவரும் ஒன்றுபட்டால் அந்த நாள் ஒரு இனிய நாள் அதுவே நாங்கள் எல்லோரும் வேண்டும் நாள்.
ஏன் அந்த இனிய நாள் இன்றாக இருக்ககூடாது ?
நன்றி - அன்புடன் ரவி
------------
Response from Mr Gopal
Mr.Ravi,
உங்கள் யோசனைக்கு மிக மிக நன்றி சார். மிக சிறந்த பதிவு உங்களுடையது. நான் சொல்வது என்னவென்றால்,தமிழ் நாடே நடிகர்திலகத்தின் ரசிகர்களை கொண்டது. இதில் மற்ற கட்சிகளை சார்ந்தவர்கள்,மற்ற நடிகர்களை ரசிப்பவர்களும் அடங்குவர். நாம் எல்லோரையும் அணைத்து போய் அவர் புகழை பரப்பலாமே? அனாவசிய விமர்சனங்களை தவிர்க்கலாமே? அவருடைய உன்னத காவியங்களை இன்னும் பெருமை படுத்தி,அதன் அருமையை எல்லோரும் உணர செய்யலாமே?இதுவே எனது கட்சி.நடிகர்திலகத்தை போலவே அவர் பக்தனான எனக்கும் வாழ்க்கையில் நடிக்கவோ,தமிழ் நாட்டு பாணியில் அரசியல் பண்ணவோ தெரியாது.
நானும்,ராகவேந்தர் சாரும் நண்பர்களே. முரண்பாடு ,எங்கள் நெருக்கத்தை அதிகமாக்கியே உள்ளது.இது திரியை எந்த விதத்திலும் பாதிக்காது.கவலை கொள்ளாதீர்கள்.
-----
Response from Mr.Ragavendra
Dear Ravi,
தங்களுக்கும் சரி, மற்ற நண்பர்களுக்கும் சரி என் பணிவான நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கோபாலும் நானும் கொள்கையைப் பொறுத்த வரையில் இரு துருவங்களாகத் தான் இருப்பதாகத் தெரிகிறது. என்றாலும் அதற்காக சண்டையெல்லாம் கிடையாது.
என்னைப் பொறுத்த வரையில் நடிகர் திலகத்தின் ரசிகர்களில் நான் தீவிரமாக இருப்பவன். அவரை நடிகர் என்கிற வட்டத்திற்குள் அடக்காமல் ஒரு சிறந்த தேசியவாதியாக, தமிழகத்தின் சிறந்த தலைவராக எண்ணிப் போற்றுகிறவன். அவருடைய கஷ்டங்களை அவருடைய உழைப்பை சிறு வயதிலேயே பார்த்தவன், காங்கிரஸை விட்டு வெளியே வந்த போது உடன் இரவு பகலாக தொகுதியில் சுற்றிச் சுற்றி உழைத்தவன், அதனைப் பெருமையுடன் எண்ணி மகிழ்பவன். மற்ற எந்தத் தலைவரை விட பல மடங்கு அதிக தகுதி வாய்ந்த தலைவராக அவரைத் தான் நான் கருதுகிறேன். நேர்மையின் சின்னமாக உண்மையாக வாழ்ந்து காட்டியவர், வெறும் வாய் ஜாலத்திற்காக அல்ல. தேர்தலில் தோல்வியடைந்து விட்டார் என்பதற்காக அவரை அரசியலில் இருந்து ஒதுக்கிப் பார்க்க முடியாது. ஒரு தலைமுறையையே தேசியவாதியாக, தேச பக்தனாக வளர்த்து விட்டவர் அவர். வாழ்க்கையிலும் அதை செயல் படுத்தினார். அவருக்காக இன்றும் ஏராளமான ரசிகர்கள் எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் உழைத்து வருகின்றனர். நம்முடைய சக்தியினை அதுவும் செயல் வடிவம் தந்தால் பல திருப்புமுனைகளை வரலாற்றில் ஏற்படுத்தக் கூடிய வலிமை வாய்ந்த சக்தியினை எதிர்காலத் தலைமுறைக்கும் அரசியல் தூய்மைக்கும் பலனளிக்கும் வகையில் பயன் படுத்த வேண்டும் என்பதே என் ஆவல்.
அரசியல் வேண்டாம் என்று சொல்பவர்கள் இருப்பார்கள். அதற்காக வேண்டும் என்று சொல்பவர்களை தவறாக சித்தரிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. இன்றைய நிலைமையில் அரசியலில் நேர்மையாளர்களும் நல்லவர்களும் வராமல் இருப்பதற்கு காரணமே இந்த மேம்போக்கான வாதங்கள். அரசியலுக்கு லாயக்கில்லை என்கிற ஒரு சொற்றொடர், ஒரு தேசத்திற்கே நன்மை ஏற்படுவதற்கு தடைக்கல்லாக இருப்பதை மக்கள் உணர வேண்டும். இந்த தடைக்கல்லை உடைத்தெறிந்து நல்லவர்களையும் நேர்மையாளர்களையும் இரு கரம் கூப்பி வரவேற்று உற்சாகப் படுத்தி ஆதரவளித்தால் தான் அரசியலில் தூய்மையையும் நேர்மையையும் நாம் எதிர்பார்க்க முடியும்.
அதற்காக நான் தற்போது எந்த இயக்கத்தையும் ஆதரிக்கச் சொல்ல வில்லையே. யாரையாவது குறிப்பிட்டுச் சொன்னால் அப்போது என்னை யாரும் சுட்டிக் காட்டலாம். கண்ணுக்கெட்டிய தூரத்தில் யாராவது தென்பட்டால், அதுவும் நடிகர் திலகத்தை தலைவராக ஏற்று அவர் வழி நடப்பதாக உறுதி கொண்டு அதனை நடைமுறையும் படுத்தினால் அப்போது இந்த சக்தி அதற்கு பயன் படட்டுமே. காரணம் நடிகர் திலகத்தைத் தலைவராக ஏற்றுக் கொள்பவர் நிச்சயம் அவருடைய கொள்கைகளையும் தத்துவங்களையும் ஏற்று செயல் படுத்துவார் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை.
இது தான் என் நிலைப்பாடு.
இதில் எனக்கு யாருமே ஆதரவு தரவில்லையென்றாலும் நான் அதைப் பற்றிக் கவலைப் பட மாட்டேன். தனியாக என்றாலும் கூட என்னுடைய எண்ணம் நிச்சயம் இங்கே கருத்தாக பிரதி பலித்துக் கொண்டிருக்கும்.
இவர்களின் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் இந்த திரியின் வேகத்தையும் , NT யின் மேல் இவர்கள் வைத்துள்ள பக்தியையும் என்றுமே குறைக்காது என்பதே மேல்கொண்ட பதிவுகளின் சாரம்
Ravi
:smile2::smokesmile:
எஸ்.எல்.,
நீங்கள் இருவருக்கும் நல்லவராக காட்டி கொள்ள முயன்று,இரு பக்கமும் ,ரசிக்க முடியாத கோமாளி போல ஆகி கொண்டிருக்கிறீர்கள்.கொஞ்சம் திருத்தி கொண்டு,உங்கள் மனதிற்கு பிடித்ததை மட்டுமே சொல்லுங்கள் ,செய்யுங்கள்.போதும்.
ரவி சார்,
தங்கள் கருத்துடன் எனக்கு உடன்பாடே. என்னால் இந்த திரியில் எந்த குழப்பமும் வராது. நான் யாரையும் எதிரியாக கருத மாட்டேன்.கோபம் வந்தால் திட்டி விட்டு போய் கொண்டே இருப்பேனே தவிர,விரோதம் கொள்ளும் மனப்பாங்கு என்றுமே இருந்ததில்லை.இருக்காது.
திரு.கோபால் அவர்களே !
ஒரு கோமாளிதான் மற்றவர்கள் துன்பநிலையில் இருக்கும்போது அவர்களை சாந்தபடுத்த மகிழ்விக்க முடியும். அந்த வகையில் நான் கோமாளிதான் & அதில் நான் பெருமை கொள்வேன் !
என்னமோ நீங்கள் ஒருவர் தான் நடிகர் திலகத்தின் உண்மையான பக்தன் என்பதுபோல காட்டிகொண்டு அதே நடிகர் திலகத்தை சிலேடையாக தாக்கி எழுதுவது, நேரிடையாக தாக்கி எழுதுவது என்னமோ பெரிய சத்திய கீர்த்தி போல உங்களை நீங்கள் project செய்து கொள்கிறீர்கள் காலம் காலமாக !
இதில் அடுத்தவர்களை தேவையில்லாமல் திட்டுவது இதெல்லாம் நல்ல செயல் என்று எண்ணி பதிவு வேறு செய்கிறீர்கள். உங்களை மற்றவர்களால் நோகடிக்க எவ்வளவு நேரம் தேவைப்படும் ? எண்ணி பார்கிறீர்கள அதை ?
சாதாரண மனிதனான உங்களிடம் ஒரு கோடி குறைகள் உள்ளன ! முதலில் அதைஎல்லாம் போக்கிக்கொண்டு நடிகர் திலகம் எப்படி இருந்திருக்கவேண்டும், என்ன செய்திருக்கவேண்டும் என்று LIST போடுங்கள் ! அவர் இருந்தபோது இதை சொல்லும் துணிவு உங்களுக்கு இருந்திருக்க வேண்டியது தானே ? DO NOT DRIVE IN BACKSEAT !
http://www.youtube.com/watch?v=luJPiOyqqLo
உங்கள் எழுத்துக்களிலும் பல தவறுகளை சுட்டிகாட்டமுடியும் மற்றவர்களால் என்பதை மறந்து விடாதீர்கள். School of acting என்ற ஒரு விஷயத்தை எழுதியவுடன் அஹந்தை தலைகேருகிறதோ, நடிகர் திலகத்தையே உரிமை என்ற பெயரில் திட்டுவதற்கு ?
இப்பொழுது கூறுகிறேன்...கேளுங்கள் ! அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுத பழகிகொள்ளுங்கள் ! உங்களுடைய school of acting எழுத்தை எல்லோராலும் ரசிக்கமுடியும் என்று எண்ணி இறுமாப்பு கொண்டீர்களேயானால் மிக பெரிய தவறான எண்ணம் !
உங்களுக்கு என்னவெல்லாம் தெரியுமோ அதையெல்லாம் இங்கே விவரணம் என்ற பெயரில் பக்கங்களை நிரப்பாதீர்கள் ! Don t try to establish as if you are more knowledgeable .
பாமரனும் படித்து அறிந்து மகிழும் வண்ணம் எழுத முதலில் கற்றுக்கொள்ளுங்கள்.
dear vasu sur,
my solid answer for you NO 3 AS OUR DISCUSSIONS ARE FOCUSED AROUND THE THE PERFORMANCES OF THE LRGEND ONLY AND NOT THEIR COMMERCIAL SUCCESS AND OTHER FACTORS, THAT WAY RAGHAVENDER IS ABSOLUTELY RIGHT,
Dear Vasu Sir
இரண்டு கண்களில் எந்த கண் சிறந்தது என்பதைப்போல உள்ளது இந்த நிலைமை. நடிகர் திலகம் - நடிப்பிற்கு திலகமானவர் என்பது பொருள். ஆகையால் கப்பல் ஒட்டிய தமிழன் மட்டும் நடிப்பு அல்ல ! மிருதங்க சக்ரவர்த்தி மட்டும் நடிப்பு அல்ல ! ஒரு கருடா சௌக்யமா கூட நடிப்புதான் ! ஒரு சிரஞ்சீவி கூட நடிப்புதான் ! ஒரு சந்திப்பு கூட நடிப்புதான் ! இவ்வளவு ஏன் ? ஒரு LORRY DRIVER RAJAKANNU கூட நடிப்புதான் !
இலை முழுவதும் நெய்கலந்த சோறும் ஒரு அப்பளமும் வைத்திருந்தால் யாரும் உண்பதற்கு சிறிது தயங்குவர்.
சிலருக்கு பொரியல் தேவைப்படும், சிலருக்கு கூட்டு, சிலருக்கு பருப்பு, சிலருக்கு பச்சடி, சிலருக்கு ரசம், சிலருக்கு சாம்பார், சிலருக்கு தயிர், சிலருக்கு மோர் ...!
ஆக ! வெறும் சோற்றைமட்டுமே நெய்விட்டு அப்பளத்துடன் பிசைந்து யாராலும் எப்போதும் சாபிட்டுகொண்டிருக்க முடியாது !
சில நேரங்களில் இது ஒன்றுமே கிடைக்காதபட்சத்தில் சப்பாத்தி மட்டுமே கிடைக்கும்..! இருந்தாலும் அதுவும் ஒரு உணவு தான் !
ஒன்றுமே கிடைக்காதபட்சத்தில் சப்பாத்தியாவது கிடைத்ததே என்று சந்தோஷப்படும் கூடமும் நம் நாட்டில் உண்டு என்பதுவே எனது கருத்து !
Vasudevan Sir,
Congrats on your 4000th post.
எஸ்.எல்,
இந்த வகை படங்களால்,நடிகர்திலகம், அப்போதைய வளரும் தலைமுறையிடமிருந்து அந்நிய பட்டார். அவருடைய 1981-1987 வரை படங்கள் போர் என்றே ஒதுக்க பட்டன.(ஒரு சில மிக நல்ல படங்களை தவிர)
அவரும் ,ஒரு நடிகரின் முக்கிய கடமையான, உடலையும் மனதையும் பராமரித்து, ஒரு சீனியர் நடிகருக்கு வேண்டிய சீரான, குறைந்த ,இடை வெளி விட்ட தரமான தேர்ந்தெடுத்த படங்களை மட்டுமே செய்யவில்லை.அப்படி ,ஒரு தேர்ந்த பக்தனான நானே வெறுத்த படங்களை தூக்கி பிடித்து எழுதுவது எந்த விதத்திலும்,இங்கு வரும் பொதுவான பார்வையாளர்களுக்கு சுவைக்காது.
என்னை பொறுத்த அளவில்,அவரின் மிக மிக நல்ல படங்கள் (நடிப்பிலும்) ஒரு 50 என்றால், மிக நல்ல படங்கள் இன்னொரு 60-70 ,நல்ல படங்கள் இன்னொரு 50 என்று கணக்கு வைத்தாலே 160-170 தேறுமே? நான் commercial அளவுகோலை மட்டும் பார்க்கவில்லை. தேனும் பாலும்,பாலாடை போன்ற படங்கள் கூட நல்ல படங்களே என் பார்வையில். ஆனால் தர்மராஜா,சிரஞ்சீவி,சுமங்கலி,ஊருக்கு ஒரு பிள்ளை,தராசு போன்றவைகளை பற்றி நாம் விஸ்தாரமாக எழுதினால்.... சாரி.....
ஏனைய்யா ,எனக்கு ஆயிரம் வேலைகள்,கடமைகள் எல்லாம் விட்டு விட்டு,ஓய்வு நேரத்தில் வேறு ஏதாவது செய்து,ரிலாக்ஸ் செய்வதை விட்டு,உங்களுடன் ஆசையாய் பழகுவதும் ,உரிமைஎடுப்பதும்,போராடுவதும், அந்த தெய்வத்தின் புகழை மேலும் உயர்த்தி,உரக்க சொல்லத்தானே?
உங்களுக்கு என் எழுத்து புரிந்ததா இல்லையா என்று சொல்லுங்கள் போதும்.அடுத்தவருக்கு புரிந்ததா என்பதை அடுத்தவர்கள் சொல்லட்டும்.நான் எப்படி எழுத நினைக்கிறேனோ,அப்படித்தான் எழுதுவேன். குற்றமிருந்தால் தாராளமாக விமர்சியுங்கள்.
கடைசியாய் ஒன்று.....
வேண்டாம்.வருத்த படுவீர்கள்.விட்டு விடலாம்.
வாசுவின் 4000 ஆவது பதிவுக்கு ஆவலாக இருக்கும் நேரத்தில், விவாதங்கள் தொடர வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். ராகவேந்தர் சாரின் தேவையற்ற provocation இவ்வளவையும் செய்து ,என்னை பொங்க வைத்தது. மற்ற படி, என் வழிக்கு வராத வரை ,நான் யாரையும் எதுவும் சொல்லவோ,விமர்சிக்கவோ போவதில்லை.அவரவருக்கு பிடித்ததை எழுதி கொள்ளுங்கள். சங்கிலி,தராசு என்று போட்டு என்னுடைய உலக அதிசயத்தை ,ஸ்கூல் திரியில் இழிவு படுத்தினால், சும்மா இருக்க மாட்டேன்.