Originally Posted by
venkkiram
முருகதாஸ் இயக்கிய கத்தி மட்டுமில்லாமல் மற்ற எந்தவொரு அவரது வருங்கால படைப்புகளையும் பார்ப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறேன். படைப்பாக்கத் திருட்டு பலவாறு நிகழ்ந்து வருவதை பார்த்துவந்திருக்கிறோம். ஆனால் பல வருடங்களாக ஒருவரிடம் கதையை கேட்டு திரைக்கதை அமைக்கச் சொல்லி கடைசியில் அதை தனது படைப்பாக்கம் எனச் சொல்லிக் கொள்வது ஏமாற்றுவேலை மட்டுமல்ல. ஒரு மாற்றுசினிமாவினை கோபியின் வார்த்தைகளில் சொல்வதென்றால் ஒரு சமூகத்திற்கு நான் செய்யவந்த கதையை நீ திருடியிருக்கிறாய், ஒரு கோட்பாட்டிற்கு இணையாக உருவாக்கப்பட்ட திரைக்கதை அது!" - நீர்த்துப் போகவைத்த முருகதாஸின் போக்கு ஏற்கத்தக்கதல்ல. கோபியின் வருங்கால படைப்பாக்கங்களுக்கு விஜய் போன்றவர்கள் ஆதரவு கொடுக்கணும். நடிக்கணும். அதுதான் தமிழனுக்குப் பெருமை. 'பன்றி மேய்யப்பவனாக ஒரு கதைநாயகன்' - கேட்பதற்கே எவ்வளவு ஈர்ப்பாக இருக்கிறது. அது நிகழ்ந்தேறாதது தமிழ்சினிமாவிற்கு இழப்புதான். இதை இங்குபதிவு செய்து ரசிகர்களின் உற்சாகத்திற்கு இடைஞ்சல் செய்யக் கூடாது என திரிபக்கமே கொஞ்ச நாட்களுக்கு வராமல் இருந்தேன். இன்று எதேச்சையாக இத்திரியை மேய்ந்தபோது படைப்பாக்கத் திருட்டை ஒட்டி பதிவுகள் வந்திருப்பதை பார்க்க முடிந்தது. அந்த வரிசையில் என் பதிவாக இது.