Originally Posted by
g94127302
Part 2 : நடிப்புக்கு சிறப்பு சேர்த்தவர்கள்
“ One of the hardest decisions you ‘ll ever face in life is choosing whether to walk away or try harder”
MGR : நடிப்பில் ஒரு புயலை பார்க்கிறோம் -- ஒரு வில்லத்தனம் நிறைந்த அதே சமயத்தில் மனிதாபிமானம் உள்ள வேடம் - இரண்டையும் அழகாக கையாண்டுள்ளார் - "பல்லவன் பல்லவி பாடட்டுமே" - இந்த பாடலில் அவர் நடித்த விதம் , காட்டும் சுறுசுறுப்பு , ஒரு திருஷ்ட்டி சுத்தி போட வேண்டும் - கதை வளைந்து நெளிந்து போனாலும் , அவரால் படம் தொய்வு இல்லாமல் செல்கிறது . நண்பனை அடித்துவிட்டு அதற்காக அவர் வருந்தும் காட்சி கல்லையும் கரைய வைக்கும் - " Try harder " - இதுதான் அவர் இந்த படத்தில் அடைந்த பெரிய வெற்றி ----
சரோஜா தேவி - நீலாவாகவும் , மல்லிகாகவும் இரண்டு வேறுப்பட்ட கதாபாத்திரங்கள் - இரண்டுமே "சபாஷ் " வாங்கக்கூடிய பாத்திரங்கள் - பார்க்கும் நமக்கெல்லாம் ஒரு பயம் வருகின்றது - பக்கத்து வீட்டுக்கு போவது போல , நினைத்தால் , கலங்கரை விளக்கத்தின் உச்சிக்கு ஓடி போய் விடுகிறார்
நம்பியார் : எவ்வளவு படங்களில் வில்லனாக வந்தாலும் , இவன் வேற மாதிரி என்பதை போல நடிப்பவர் - கண்ணில் கொடூரம் - வார்த்தைகளில் விஷம் - இவை இரண்டும் இருந்தால் சுலபமாக கிடைப்பது உதை தானே - கை நிறைய வாங்குகிறார்
VG : MGR ருடன் நண்பனாக நடிக்க கொடுத்து வைத்தவர் - அளவாக வந்தாலும் அழகாக வருகிறார்
நாகேஷ் & மனோரமா : நகைச்சுவை பிரமாதம் - மூன்று கேள்விகள் , மனோரமாவை மணந்து கொள்ள - கடைசி கேள்வி பிரமாதம் - உங்கள் குழந்தை தொலைந்து விட்டது - நீங்கள் தீவிரமாக தேடுகிண்டீர்கள் - குழந்தை கிடைத்து விடுகிறது - உடனே என்ன செய்வீர்கள் ?? - நாகேஷ் உடனே - casual ஆக தேடுவதை உடனே நிறுத்திக் கொள்வேன் என்று கூறி ஜெயித்துவிடுவார் ----- அருமை . இன்னமொரு இடத்தில் ரவியிடம் - ரொம்ப நேரம் உங்களுடன் பேசிக்கொண்டு இருக்க முடியாது - இப்பொழுது தான் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம் - நீங்கள் வக்கீல் - யாரவது பார்த்தால் பாவம் உடனே விவாகரத்து செய்யத்தான் உங்களிடம் பேசி கொண்டுருக்கிறேன் என்று நினைப்பார்கள் -- நாங்கள் வருகிறோம் ----
மற்றவர்கள் : சொல்லும்படியாக ஒருவரும் இல்லை –
தொடரும்