Raj Raj- Your postings are very crisp and enjoyable. Pl.Contribute more to enlighten us.
vasu- Awaiting surprise.
Chi.ka&Madhu - thanks.
Printable View
Raj Raj- Your postings are very crisp and enjoyable. Pl.Contribute more to enlighten us.
vasu- Awaiting surprise.
Chi.ka&Madhu - thanks.
பாடல் வரிகள் ...ஒருவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை தத்துவங்களாக பிரதிபலிக்கிறது . மாறி வரும் சமுதாயத்தில் மனிதனின் மாற்றங்கள் , ஏமாற்றங்கள் , கசப்பான சம்பங்கள் , எதிர்மறை எண்ணங்கள் , போட்டி , பொறாமை , தரமின்றி பேசுதல் , பொறாமை , அடக்கும் ஆளுமை .,கெஞ்சினால் மிஞ்சுவது , மிஞ்சினால் கெஞ்சுவது ஆத்திரம் , இந்த மாதிரி மனிதர்களுக்காக பல பாடல்கள் வந்துள்ளது . எனக்கு பிடித்த பாடல்
http://youtu.be/IEUaXQPmtdY
சிறிய வயதில் எனக்கு ஒரு குரலின் மீது மயக்கம் . காரணம் என் தந்தை.. கிருஷ்ண கானம் என்ற ஒரு காஸெட் அதுவும் அந்த நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண என்ற அந்த வரிக்காகவே அந்த ரெக்கார்டை தேய்த்திருக்கிறேன். ஆம் இசையரசியின் குரலில் ஈடுபாடு வர காரணம் “குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள் “ என்ற பாடல். மெல்லிசை மன்னரின் இசை, கவியரசரின் வரிகள், இசையரசியின் குரல் என இந்த பாடல் என்றுமே மறக்க முடியாத பாடல்
கண்ணனின் மேனி கடல் நீலம் அவன் கண்களிரண்டும் வான் நீலம்
கடலும் வானும் அவனே என்பதை காட்டும் குருவாயூர் கோலம்
https://www.youtube.com/watch?v=Mmk5O-vHgiE
ராஜேஷ்
தேவா அவர்களின் 'காணா' பாடல்களின் மீது சற்றும் எனக்குப் பிடிப்பில்லை. ஆனால் அவருடைய இசை'யமைப்பில் ' இனிமையான பாடல்களை ரசிக்கத் தவறியதில்லை.
தெற்குத் தெரு மச்சான் படத்தில் தென்ன மரத் தோப்புக்குள்ளே குயிலே குயிலே - அப்படியே முல்லை மலர் மேலே - நன்றாக இருக்கும். அவருடைய டூயட் பாடல்கள் பெரும்பாலும் வேறு பாடல்களை நினைவூட்டினாலும் கேட்கும் போது இனிமையாக இருக்கும்.
தொடருங்கள்..கேட்டு மகிழலாம்
வாசு சார்
வானத்திலே வெள்ளி ரதம் ... அருமையான பாடல்... ஆனால் அந்த ஆண் குரல்...
இன்று வரை என்னால் மனோவை ஒரு பாடகராக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. டிராக் பாடகராகவே தொடர்ந்திருக்கலாமே என பல முறை நினைத்ததுண்டு.
இருந்தாலும் ஒரு சில பாடல்கள் பரவாயில்லை..
குறிப்பாக செந்தமிழ்ப் பாட்டு படத்தில் இடம் பெற்ற கூட்டுக்கொரு பாட்டிருக்கு .... அவர் பாடியதில் நான் விரும்பிக் கேட்ட ஒரு சில பாடல்களில் ஒன்று... (ஒரு வேளை மெல்லிசை மன்னரின் கைவண்ணத்தாலோ என்னவோ இப்பாடலில் குரலில் ஒரு மெச்சூரிட்டி தெரியும்).
இளையராஜாவின் இசையில் மனோ பாடிய பல பாடல்கள் வேறு யாராவது பாடியிருக்கக் கூடாதா என பல முறை நான் நினைத்ததுண்டு.
இது என்னுடைய சொந்தக் கருத்தே தவிர யார் மனதையும் புண்படுத்த அல்ல.
பொங்கும் பூம்புனல்
இன்றைய பாடல் இன்றைய ராகம் இன்றுடன் முடிவதில்லை..
இது இப்பாடலில் இடம் பெற்ற ஒரு வரி... நம்முடைய மதுர கானம் திரிக்கு எந்த அளவிற்கு பொருந்துகிறது பாருங்கள்..
திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் 1970களின் பிற்பகுதியில் இசையமைத்த தமிழ்ப் படங்களில் பெரும்பாலும் தமிழிலிருந்து விலகியே நின்று வேற்று மொழியின் சாயலே அமைந்திருந்தது. அதற்கு இப்பாடலும் ஒரு சான்று.
என்றாலும் இசைக்கு மொழி ஒரு பொருட்டல்லவே..கேட்கும் போது இப்பாடல் நம்மைக் கவரத் தவறுவதில்லை..
மௌன யுத்தம் திரைப்படத்திலிருந்து ... அழைத்தால் வருவாள்... எஸ்.பி.பாலா, வாணி குரல்களில்
http://www.inbaminge.com/t/m/Mouna%20Yuththam/
பொங்கும் பூம்புனல்
நல்லது நடந்தே தீரும்...
ஆம்.. இது ஒரு படத்தின் தலைப்பே..
இப்படம் வெளிவந்ததா தெரியவில்லை.. இளைய ராஜா இசையில் இந்த பாடல் அவருடைய ஆரம்ப கால சூப்பர் பாடல்களில் ஒன்று.. மிகக் குறைந்த அளவிலான இசைக்கருவிகளுடன் இனிமையாக நெஞ்சை வருடிச் செல்லும் எஸ்.ஜானகியின் குரலில் கேட்டுக் கொண்டே இருக்கலாம்..
அந்த ஆத்தோரமா ஒரு ஆலமரம்...
http://www.inbaminge.com/t/n/Nallath...the%20Theerum/
தேனிசை தென்றலின் முத்துக்கள் - 2
ஆரம்ப காலங்களில் சில சின்ன சின்ன படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் பெரிசாக ஒன்னும் பெயர் கிடைக்கவில்லை
பாடல்கள் நன்றாக இருந்தும் படங்கள் வெற்றி பெறாததால் பாடல்கள் ஹிட் ஆகவில்லை .
அதன் பின்னர் அன்பாலயா பிரபாகரன் தயாரித்த வைகாசி பொறந்தாச்சு படத்தின் அனைத்து பாடல்களும் பிரபலமாகி தேவா என்ற இசையமைபாளரை திரும்பி பார்க்க வைத்தது.
இன்று நான் பதிவிடப்போகும் பாடலும் மிகவும் அழகான பாடல்.
1993’ல் அன்பாலயா பிரபாகரன் தயாரிப்பில் வெளிவந்த மதுமதி திரைப்படத்தில் பாலாவின் குரலில் அழகான பாடல்
கவிஞர் காளிதாசனின் வரிகள்
ஓ ஓ மதுபாலா இது தான் சுக நாளா
ஹ ஹா ஹா
ஓ ஓ மதுபாலா இதுதான் ஆ ஆஆ சுபலாலா
ஓ ஓ மதுபாலா இதுதான் ஆ.. ஆ..ஆ.. சுபலாலா
இனி மாதம் பணிரண்டுமே..
மலர் காலம் தொடந்திடுமே..
இளம் காதல் சபையினிலே..
புது வேதம் மலர்ந்திடுமே..
மதுபாலா என் மதுபாலாஆஅ ஆஅ ஆஅ ஆஅ
நானாக மாறவா.. தாலாட்டு பாடாவா..
ஊரெங்குமே ஒர் வெள்ளிநிலா..நீதானே தேவி
ஏழைமகள் என்வீட்டில் நீ செந்தூர ஜோதி
இளமைக்காலங்கள் ஒளிவீசும்
இன்பவசந்தங்கள் நாமல்லவா..ஆஆஆஆஆ
எளிமைகோலத்தில் நாம் இருந்தாலும்
உன் இதயம் நானல்ல்வா..ஆஆ
மதுபாலா என் மதுபாலாஆஆ
உன் மனதுக்குள் வரைந்தேன் வெகுநாளா..
ஓ ஓ மதுபாலா இதுதான் ஆ ஆஆ சுபலாலா
ஸ்ரீராமனின் சீதை வரம் பூபூக்கும் நேரம்..ம்..ம்
ஊடல்களில் மாதங்களும் நாளாக மாறும்
திசைகள் எல்லமே தடுமாறும்
இந்த திருமகள் பாதம் பட்டாள்ஆ..ஆ...ஆஆ
உதயம் சொல்லமல் இடம் மாறும்
உந்தன் விழிமலர் ஜாடைக்கண்டாள்..
மதுபாலா என் மதுபாலாஆஆ
உன் மனதுக்குள் வரைந்தேன் வெகுநாளா..
ஓ ஓ மதுபாலா இதுதான் ஆ ஆஆ ஆ சுபலாலா
.. ஓ .. ஓ மதுபாலா.. இதுதான் ஆ ஆஆஆ சுபலாலா
இனி மாதம் பணிரண்டுமே.. மலர் காலம் தொடந்திடுமே..
இளம் காதல் சபையினிலே.. புது வேதம் மலர்ந்திடுமே..
மதுபாலா என் மதுபாலாஆஅ ஆஅ ஆஅ ஆஆஆ
நானாக மாறவா.. தாலாட்டு பாடாவா..
ஓ ஓ மதுபாலா இதுதான் ஆ ஆஆ சுபலா....லா....
https://www.youtube.com/watch?v=FB_LqwKWTOg
தொடரும்
பொங்கும் பூம்புனல்
இனி ஆகாயம் மண்ணில் வரும்...ஒரு
ஆகாய கங்கை விழும்...
அருமையான பாடல்.. ஜெயச்சந்திரன் எஸ்.ஜானகி குரல்களில் சங்கர் கணேஷ் இசையில் நீதி பிழைத்தது படத்திலிருந்து ..
நெஞ்சைத் தொடும் இனிய பாடல்..
எது வரை இன்பம் அது வரை...
http://www.inbaminge.com/t/n/Needhi%20Pizhaithadhu/