http://i66.tinypic.com/34jc8ld.jpg
Printable View
வாசு சார்
அபிராமி பட்டர் அமாவாசையில் வெண்ணிலவை ஒளிரச் செய்தது போல், இந்த அடாத மழையிலும் அமாவாசை நெருக்கத்திலும் வெண்ணிலவின் ஜோதியை தீப ஒளியாய் ஒளிரச் செய்து விட்டீர்கள்..
கண்டசாலாவின் குரலென்ன, அந்த கானா பாலாவே பாடினால் கூட தலைவர் அதற்கேற்றார் போல் தன் உதட்டசைவில் ஈடு செய்து விடுவார். என்ன ஒரு அருமையான பாடல். இசை மேதை ஜிஆர் அவர்களின் படைப்பில் மேற்கத்திய இசையை அடிப்படையாய் வைத்து அவர் அளித்த பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். யாரடி மோகினி பாடலைப் போன்று இதுவும் மேற்கத்திய இசைக்கருவிகளின் துணையோடு குறிப்பாக மேண்டலின் இசைக்கருவியின் ரம்மியமான ஒலியில் மனதைக் கவரும் மதுர கானமாய் என்றும் செவியில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கக் கூடிய பாடல்.
பாராட்டுக்கள்.