https://scontent.fyto1-1.fna.fbcdn.n...47&oe=5AA85902
Printable View
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
93 வது வெற்றிச்சித்திரம்
அன்னை இல்லம் வெளியான நாள் இன்று
அன்னை இல்லம் 15 நவம்பர் 1963
https://upload.wikimedia.org/wikiped...am_Poster_.jpg
https://i.ytimg.com/vi/hw8i4JRXmlo/hqdefault.jpg
https://i.ytimg.com/vi/oY-KbeTlOZI/maxresdefault.jpg
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
124 வது வெற்றிச்சித்திரம்
லட்சுமி கல்யாணம் வெளியான நாள் இன்று
லட்சுமி கல்யாணம் 15 நவம்பர் 1968
https://i.ytimg.com/vi/q4y_aZxpax0/hqdefault.jpg
https://upload.wikimedia.org/wikiped...yanam_1968.jpg
https://c.saavncdn.com/897/Lakshmi-K...68-500x500.jpg
கணணி கை கொடுக்க மறுத்துவிட்டதால் 2 நாட்களாக இங்கு வந்து பதிவுகள்
இட முடியாமல் போய்விட்டது
Sundar Raja
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...69&oe=5A62DDAC
Sundar Rajan.
அன்புள்ள மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
கலைக்கோவிலாம், நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் மணிமண்டபத்திற்கு பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் நடிகர்கள் வருகை தருகின்றனர...்.
ஆனால் இந்த செய்தியை எந்த பத்திரிக்கைகளும் சரி தொலைக்காட்சிகளும் சரி மக்களுக்கு தெரியப்படுத்துவதில்லை.
முகநுால் வாயிலாக தான் தெரிந்து கொள்ள முடிகிறது. அதிலும் சில இளைய நடிகர்கள் வருவது முகநுாலில் கூட யாரும் பதிவிடுவதில்லை.
அன்பு இதயங்களே,
உங்களுக்கு தெரிந்து விஐபிக்கள் யாராவது மணிமண்டபம் விஜயம் செய்வது தெரிந்தாலோ அல்லது புகைப்படம் பார்க்க நேர்ந்தாலோ உடனே முகநுாலில் பதிவிட்டு உலகறியச் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இதோ சிவகார்த்திகேயன் அவர்கள் மணிமண்டபம் சென்று நமது கலைக்கடவுள் சிவாஜி அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கிய புகைப்படம்.
நடிகர்கள் அனைவருக்கும் சிவாஜியே கலைக்கடவுள் அவரது மணிமண்டபமே கோவில்.
Sukumar Shan
·
நடிகர் திலகமும் தேவிகாவும் !
1961 மே 27. பத்மினியின் திருமணம் நடைபெற்றது.
அவர் சினிமாவிலிருந்து விலகிச் சென்றார். சிவாஜியும்-- தேவிகாவும் முதன் முதலாக இணை சேர்ந்த பாவமன்னிப்பு வெள்ளிவிழா கொண்டாடியது.
பத்மினி மீண்டும் சிவாஜியுடன் சினிமாவில் டூயட் பாட சில வருடங்கள் பிடித்தது. இடைப்பட்ட ஐந்து ஆண்டுகள் நடிகர் திலகத்துக்குப் பொருத்தமான ஜோடியாக வெற்றிகரமாக வலம் வரும் அதிர்ஷ்டம் தேவிகாவுக்கு அமைந்தது.
மாபெரும் பிரம்மப் பிரயத்தனங்களுக்குப் பிறகே பத்மினியால் சிவாஜி- தேவிகா ஜோடியைப் பிரிக்க முடிந்தது. அந்த அளவுக்குத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், ரசிகர்கள் ஆகிய மூன்று தரப்பினராலும் சிவாஜி- தேவிகா ஜோடிக்கு அற்புத வரவேற்பு கிட்டியது.
1961 முதல் 1965 வரை எம்.ஜி.ஆர்.-சரோ, சிவாஜி -தேவிகா, ஜெமினி -சாவித்ரி இணைகள் தமிழ் டாக்கியை ஆண்டன.பலே பாண்டியா...1962..பந்துலு படம்...பாடல்கள் எல்லாம் அதி அற்புதம்....ஆனந்தம்...பாடல் வரிகள் கண்ணதாசன்..இசை...வெறும் இசை என்று எழுத கை மறுக்கிறது....தேனிசை....ஒவ்வொரு பாடல் ஒவ்வொரு ரகம்.....நாதமயம்....விஸ்வநாதமயம்.....இரட்டையர்களின ் மாயம்....நடிகர் திலகம்,தேவிகா எம். ஆர் . ராதா ....மறக்கவே இயலாத படம்...ராதா 2 வேடம்...நடிகர் திலகம் ரௌடி ராதாவால் அனுப்பப்படுகிறார் தேவிகா வீட்டிற்கு....அங்கு தேவிகாவின் தந்தை இன்னொரு ராதா .......சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் நகைச்சுவை...அழகெல்லாம் திறண்டு மொத்த உருவமாக தேவிகா.....வெகுளியாகக் குண்டுக் கன்னமும்...குளிர் சிரிப்பும்,குதூகலம் கொப்பளிக்கும் நடிகர் திலகம்......காதலிக்கும் அவளிடம் அவன் என்னவோ சொல்ல அவள் சிணுங்க இங்கு ஒரு பாடல்...இனிமையான மாலைப் பொழுதை பறைசாற்றும் மணிக்கூண்டு அது ஒலிக்கும் மணி ஐந்தே பாடலின் துவக்கம்...ஆரம்ப இசை இப்போது கேட்டாலும் புலன்களை எல்லாம் கட்டிப்போடும் இனிய மெல்லிசை..நாணி சிணுங்கி நிற்கும் தேவிகா கறுப்பு வெள்ளையில் ஒரு வண்ணக்கோலம்....முகமெல்லாம் பூரிப்பு...பார்த்துக் கொண்டெ இருக்கலாம் போல...காதலன் பாடும் பாடல்.......நடிகர்திலகம் காட்சி முழுவதும் துள்ளிக் குதித்து பச்சைப் பிள்ளை போல் கையையும் காலையும் அசைத்து,ஓடி......இதையெல்லாம் ஏழிசை வேந்தன் குரலிலேயே ஜாலம் செய்திருக்கும்
சிவாஜியுடன் தேவிகா இணைந்து நடித்த ஆண்டவன் கட்டளை, பி.எஸ். வீரப்பாவின் தயாரிப்பு.
தேவிகா நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்த படங்களில் ஆண்டவன் கட்டளைக்குத் தனி மகுடம் சூட்டலாம்.
விவேகானந்தர் போல் பரம புருஷராக வாழத் துடிக்கும் பேராசிரியர் கிருஷ்ணனை, வலியச் சென்று காதலிக்க வைக்கும் துணிச்சல் மிக்க கல்லூரி மாணவி ராதாவாக தேவிகா வாழ்ந்து காட்டியிருந்தார்.
‘அழகே வா அருகே வா‘ பாடலில் கவர்ச்சிக்கும் விரசத்துக்குமான மெல்லிய வேற்றுமையை- ஒற்றைக் குழல் ஈர முகத்தில் விழும் எழிலிலும், நீரில் நனைந்த வாளிப்பான தோற்றத்திலும், மிக நுண்ணிய சிருங்கார பாவனைகளிலும் தேவிகா அற்புதமாக வெளிப்படுத்தினார்.
தேவிகாவின் பெர்ஃபாமன்ஸை ஆனந்த விகடன், குமுதம் உள்ளிட்ட முன்னணி வார இதழ்கள் மனமாரப் பாராட்டின.
‘குறை சொல்ல முடியாமல் நடித்திருக்கிறார் தேவிகா. அதுவும் கடைசியில் பழைய நினைவுகளை மறந்த நிலையில் கண்களை உருட்டி, மிரட்சியுடன், நீ யாரு? நீ என்ன சொல்றே’ என்று நடிகர் திலகத்திடம் கேட்கும் இடங்கள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. ' என்று போற்றி எழுதியது ஆனந்த விகடன்.'
தேவிகாவின் பிசிறு இல்லாத நடிப்பு நிறைவு. புன்னகை செய்தே பேராசிரியரைக் கவரும் பாணியும், பழைய நினைவு மறந்த அரைப் பைத்தியமாக உலவும் முறையும் நிறைவைத் தருகின்றன. ' என்றது குமுதம்.
நீலவானம் பட விமர்சனத்தில் ஆனந்த விகடன் தேவிகாவை கை கொடுத்த தெய்வம் சாவித்ரி ரேஞ்சுக்கு உயர்த்தி எழுதியது. .
அன்புக் கரங்கள்- அன்னம் கதாபாத்திரமும், நீலவானமும் கௌரி கேரக்டரும் 1965ல் பேசும் படம் இதழால் தேவிகாவின் சிறந்த நடிப்புக்காகப் பெரிதும் பாரட்டப்பட்டன.
சிவாஜியிடமிருந்து சிறந்த நடிப்பைக் கற்றுக் கொண்ட அனுபவம் குறித்து தேவிகா !
‘நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் மட்டுமல்ல, தன்னோடு நடிப்பவர்களின் திறமையும் வெளிப்பட வேண்டும் என்று நினைக்கிற பண்பிலும் அவர் திலகம்!
பாவமன்னிப்பு படத்தில் ரஹீமாக வாழ்ந்து காட்டியிருப்பார். அதில் சிவாஜியுடன் நாயகியாக நடித்த முதல் சீனை என்னால் என்றும் மறக்கவே முடியாது. காரணம் அது ரஹீமை நான் ஜெயிலில் சந்திக்கும் சோகமயமான கட்டம்.
உள்ளேயிருந்து சிவாஜி கதற, வெளியே நிற்கும் நான் புலம்ப... அதனை க்ளைமாக்ஸ் காட்சிக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்துடன், அதிக அக்கறையோடு முதலில் படமாக்கினார் டைரக்டர் ஏ. பீம்சிங்.
சிறைக் கம்பிகளைப் பிடித்தவாறு அதில் முகம் புதைத்து நான் அழ வேண்டும். புதிதாக பெயிண்ட் அடித்திருப்பார்கள் போல. அது என் கைகளில் ஒட்டிக்கொண்டு விட்டது.
சிவாஜிக்கு அதைப் பார்த்ததும் பயங்கர கோபம் ஏற்பட்டது. என் படபடப்பு மேலும் கூடியது.
‘ கம்பிகளைப் பிடித்துக் கொண்டு பலம் கொண்ட மட்டும் அதை ஆட்டி விட்டால் போதுமா...? கண்ணீர் விட்டுக் கதறும் நடிப்பு வந்து விடுமா உனக்கு? இந்தக் கம்பிகள் போலியானவை. நிஜக்கம்பிகள் போல் இவற்றை உலுக்கினால் இவை என்ன ஆகும்? எப்பவும் சுய நினைவோடு நடிக்கணும்.
அப்பத்தான் நீ நடிப்பில் உச்சம் தொட முடியும். இப்ப நான் மேரியாக நடிப்பதை நீ பார்... ' என்ற சிவாஜி,
கம்பிகளுக்குப் பூசப்பட்ட புது சாயம் கொஞ்சமும் கைகளில் படாமல், உணர்ச்சி வசப்பட்டு அழகாக நடித்துக் காட்டினார்.
அன்புக்கரங்கள் படத்தில் நான் மணிமாலாவைச் செல்லமாகக் கடிந்து கொள்ள வேண்டிய ஒரு கட்டம். விளையாட்டுக் கோபம் காட்ட வேண்டிய இடத்தில், அதை உணராமல் நான் நிஜமாகவே கோபித்துக் கொள்வது போல நடித்தேன்.
அதைப் பார்த்த சிவாஜி, ‘இந்த சீன்ல இப்பிடித்தான் நடிப்பீங்களா..? கொஞ்சம் தள்ளுங்க நான் நடிச்சிக் காட்டறேன்.
நடிக்கறதே பொய்யான சமாசாரம். நீ போலியா கோவிச்சிக்கிட்டுப் பாசாங்கு பண்ணணும். அதை விட்டுட்டு முகத்துல இவ்வளவு கடுப்பைக் காமிச்சா காட்சி எப்படி சரியா வரும்?
நீ அவளுக்கு புத்தி சொல்றதுல உள்ளூற அன்பும் பாசமும் எதிரொலிக்கணும். அது உன் ஆதங்கமா வெளிப்படணுமே தவிர ஆத்திரமா மாறிப்போயிடக் கூடாது.
டூரிங் டாக்கீஸுல படம் பார்க்கறவனுக்கும் நீ பொய்யாத்தான் கோவிச்சிக்கிறன்னு புரியறாப்பல நடிக்கணும். என்ன நான் சொல்றது விளங்குதான்னு’ கேட்டுட்டு நான் எப்படிப்பட்ட பாவத்தோடு பேசணும்னு நடிச்சிக் காமிச்சார்.
போலியான கோபத்தில் கூட இவ்வளவு நுணுக்கங்களா...! என்று வியந்தேன்.
அவரோட நடிச்சதாலதான் நான் ஒரு ஆர்ட்டிஸ்ட்டா நிக்கிறேன்னு கூடச் சொல்லலாம். செட்ல எனக்கு சீன் இல்லாத நேரத்துல லைட் பாய் கிட்ட பேசிட்டிருப்பேன். உடனே சிவாஜி என்னிடம்,
‘ஹீரோ கிட்டப் பேசறது தேவையில்லன்னு நினைக்கிற’ என்று நையாண்டியாகக் கேட்டிருக்கிறார். எனக்கு பேசக் கூடாது என்றெல்லாம் இல்லை. ஒரு வித அச்சத்தினால் பெரியவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன்.
ஷாட்ல எப்படி நடிக்கணும்னு எனக்குச் சொல்லிக் கொடுத்துட்டு கம்மியா பண்ணுவார். கூட நடிக்கிறவங்களுக்கும் பேர் வரணும்னு நினைப்பார்... அவர் தான் சிவாஜி.
அதுக்குச் சரியான எடுத்துக்காட்டு வேணும்னா ‘நீல வானம்’ படத்தைச் சொல்லலாம். ‘அதுல கதாநாயகிக்கு முக்கியத்துவம் கிடைக்கிற கேரக்டர். ஹீரோவுக்கு அதிக வேலை கிடையாது.’
அந்த விஷயம் சிவாஜிக்குத் தெரிவிக்கப்பட்டும் அவர் பிடிவாதமா நடித்தார். என் கேரக்டர் ஓங்கி நிற்க வேண்டிய கட்டங்கள் அத்தனையிலும் எனக்காக விட்டுக் கொடுத்து நடிச்சிருக்கார்.
நான் எந்த சீன்லயாவது நடிப்பை கோட்டை விட்டுட்டேன்னா, ‘மண்டு மண்டு’ ன்னுச் செல்லமா கோவிச்சுக்குவார். அப்புறம் அந்தக் காட்சியில் என் நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று அவரே நடித்துக் காட்டுவார்.
நான் கர்ப்பிணியா நடிக்க வேண்டிய காட்சி. தாய்மை அடைந்த பெண்ணின் ஒவ்வொரு அசைவையும் செய்து காட்டி என் நடிப்பை மேம்படுத்தினார்.
அந்த மாதிரி யார் நன்றாக நடித்தாலும் காட்சி முடிந்த பிறகு பாராட்டி விடுவார். அது அவருக்கு மட்டுமே உரிய பெருந்தண்மைக் குணம்!
(தேவிகாவின் கூற்று அத்தனையும் நிஜம். 1970களில் தனது சினிமாக்களைப் பற்றி சுய விமர்சனம் செய்த நடிகர் திலகம், நீல வானம் பற்றிக் குறிப்பிடுகையில்,
‘திருமதி தேவிகாவின் சிறந்த நடிப்பைக் கொண்ட படம்! ' என்று வெளிப்படையாகவே தேவிகாவுக்கு நற்சான்றிதழ் அளித்திருக்கிறார்.
சிவாஜி படப்பட்டியலில் நாயகிகள் குறித்த கணேசனின் பாராட்டு மிக மிக அபூர்வம்!)
‘சிவாஜி எப்பப் பார்த்தாலும், ‘சவுக்கியமா... நல்லா இருக்கியா? 'ன்னு ரெண்டே வார்த்தைகள் தான் கேட்பார். அதில் ஓர் ஆழமான அன்பு ஒளிந்திருக்கும். எனக்கு ஆதரவாக இருந்த அவரது அன்பில் நான் ஒரு போதும் அதிகம் உரிமை எடுத்துக் கொண்டது கிடையாது.
என் மகள் கனகாவுக்கு அப்ப 4 வயது. சிவாஜி தச்சோளி அம்பு மலையாள சினிமாவில் நடிக்கும் போது கை உடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
அவரைப் பார்த்து நலம் விசாரிக்கப் போயிருந்தேன். கனகாவும் என்னுடன் அழைத்துச் சென்றேன். வலியைச் சற்றே மறந்து ஜாலியாக உரையாடியவர், கனகாவைப் பார்த்து ‘உன் பேர் என்னடா’...ன்னு கேட்டார்.
கனகா பதில் பேசாமல் நின்றாள். சிவாஜி மறுபடியும் செல்லமாக அதையே வினவினார். கனகா வாயை இறுக்க மூடிக்கிட்டா. பேசவே இல்லை.
சிவாஜி என்னைப் பார்த்தார்.
‘என்ன பிள்ளை வளர்த்துருக்கே. ' என்றார் இலேசான கோபத்துடன்.
‘என் பொண்ணு என்ன மாதிரியே வளர்ந்திருக்கா... ' என்று சொல்லி சமாளித்தேன். அது நிஜமே. நானும் ஆரம்பத்தில் அறிமுகம் இல்லாதவங்க கிட்டே பேசவே மாட்டேன். ' தேவிகா.
சிவாஜி கணேசனும்-தேவிகாவும் உச்ச நட்சத்திர ஜோடிகளாக ஜொலித்த 1964. தேவிகா பற்றி நடிகர்திலகம் கூறியவை-
‘நல்ல பெண். திறமை உள்ளவர். மேலும் முன்னுக்கு வரக் கூடியவர். சொன்னதைச் சட்டென்று புரிந்து கொள்வதுடன் அப்படியே சிரமப்பட்டு நடிப்பில் கொண்டு வந்து விடுவார்.
ஷூட்டிங்குக்கு வருவதில் ரொம்ப கரெக்ட். சின்ன உதாரணம்- ‘ஆண்டவன் கட்டளை’ படப்பிடிப்பு.
‘அழகே வா அருகே வா
அலையே வா தலைவா வா... ’
பாடல் காட்சியில் தேவிகாவை அலை அடித்துக் கொண்டு போய் விட்டது. அந்த விபத்தில் தேவிகா பிழைத்ததே பகவான் புண்ணியம். உயிர் பயத்தால் தொடர்ந்து அவர் நடிக்க வரமாட்டார் என்று எண்ணினேன்.
மறு நாளே அவர் வழக்கம் போல் வேலைக்கு வந்து எங்களைத் திகைக்க வைத்தார்.
தொழிலில் எத்தனை ஈடுபாடோ அதே சமயம் விளையாட்டுப் பேச்சிலும் சமர்த்து. ஷூட்டிங் சமயத்தில் நிருபர்கள் யாராவது வந்தால் போச்சு. தேவிகாவுக்கு நேரம் போவதே தெரியாது. ’
சிவாஜியும் தேவிகாவும் ஜோடி சேர்ந்த படங்களில் சிகரம் ‘கர்ணன்’ அதைப் பற்றி எழுதாமல் தேவிகாவின் திரையுலக அனுபவங்களைப் பூர்த்தி செய்திட முடியாது.
தமிழில் அதிசயிக்கத் தக்க வகையில் நாற்பது லட்சம் பொருட்செலவில் ஈஸ்ட்மென் கலரில் உருவான முதல் பிரம்மாண்ட புராணச் சித்திரம்.
விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் கண்ணதாசன் பாடல்கள் இடம் பெற்ற முதல் இதிகாசப் படம்!
காற்றுள்ளவரை காதுகளில் தேனைப் பாய்ச்சும் கந்தர்வ கானங்கள் கர்ணன் படப் பாடல்கள். பெங்களூர் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் கண்ணதாசனால் மூன்றே நாள்களில் முழுமையாக எழுதப்பட்டவை.
1962-1963ல் தயாராகி 1964 தைத் திருநாளில் வெளியானது கர்ணன். தேவிகா கர்ணனின் மனைவி சுபாங்கி.
பணத்தைத் தண்ணீராக வாரி இறைத்து ஒவ்வொரு அரங்கமும் போடப்பட்டது. சுபாங்கியின் வளைகாப்பு மஹாலுக்கு மட்டும் லட்சக்கணக்கில் செலவு செய்து, விஜயா ஸ்டுடியோவில் மாபெரும் செட் அமைக்கப் பட்டது.
துரியோதனன் மனைவி பானுமதியாக நடித்தவர் நடிகையர் திலகம் சாவித்ரி. அவர் சுபாங்கியைத் தாய் வீட்டுக்கு வழி அனுப்பிப் பாடுவதாக வந்த, ‘மஞ்சள் பூசி மலர்கள் தூவி’ என்று தொடங்கும் வளைகாப்புப் பாடலில் தேவிகாவை வாழ்த்தி 45 நடனப் பெண்கள் ஆடினார்கள்.
ஒவ்வொரு காட்சியிலும் தேவிகாவின் அழகிய தோற்றமும், தலை அலங்காரமும், உடலெங்கும் ஜொலி ஜொலிக்கும் விலை மதிப்பற்ற ஆடை அணிகலன்களும் பிரமிக்க வைக்கும்
கர்ணன் படத்தில் சுபாங்கி கதாபாத்திரம் உன்னதமாக அமைந்தது. தேவிகாவின் ஸ்டார் இமேஜ் மேலும் உயர்ந்தது.
யூ ட்யூபில் பதிவேற்றப்பட்டு பார் முழுவதும் நிற மொழி பேதங்களைக் கடந்து அனிருத்தின் கொலவெறி பாடல் பரவி புயலைக் கிளப்பிய 2012. மார்ச் மாதம்- 16 ஆம் தேதி நவீன தொழில் நுட்பத்தில் கர்ணன் மீண்டும் தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.
எல்லாரும் ‘கொல வெறி’யில் லயித்திருக்க யாரும் எதிர்பாராத வகையில், எளிதாக இருபத்தைந்து வாரங்களைக் கடந்தது கர்ணன்.
அதே மார்ச் 30ல் மாபெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான தனுஷின் 3 உள்ளிட்டப் புதிய சினிமாக்களை விட, கோடிக்கணக்கில் வசூலித்து அரிய சாதனை படைத்தது கர்ணன். தினமணி நாளிதழில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் .
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...86&oe=5AA3157F
Vee Yaar
From today's DTNext (a Daily Thanthi Publication)
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...3f&oe=5A643E9F
Sukumar Shan
சிவாஜி ஏன் உசத்தி? நாட்டிய பேரொளி பத்மினியின் பதில் !
சிவாஜியுடன் நீங்கள் அதிகம் இணைந்து நடித்ததற்குக் காரணம், உங்களுக்கும் அவருக்கும் இருந்த நட்பா, இல்லை உங்கள் இருவரின் நடிப்பாற்றலா?
இந்தக் கேள்விக்கான பதிலை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பல நேர்காணல்களில் பகிர்ந்துகொண்டிருக்கிறார் பத்மினி. இனி வருவது அவற்றின் தொகுப்பு. இதில் ஒவ்வொரு சொல்லும் பப்பிக்கே சொந்தம்.
‘நான் மறக்கமுடியாத ஒருவர் சிவாஜி. கணேஷ் நடிகராக மட்டுமின்றி என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரொம்பவே அக்கறையானவர். பப்பியம்மா என்றுதான் என்னை அழைப்பார். உற்சாகமான மூடில் இருந்தால், பேப் என்று அழைப்பார். நான் நன்றாகத் தமிழ் பேச ஆரம்பித்ததே சிவாஜியால்தான்.
1959-ல் நெப்டியூன் ஸ்டுடியோவில் தங்கப்பதுமை படம் எடுத்தார்கள். ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்டர். அதில் வரும் ‘ஈடற்றப் பத்தினியின் இன்பத்தைக் கொன்றவன் நான்...’ என்ற பாடல், அப்போதே பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தப் பாட்டினூடே நான் கண் பறிக்கப்பட்ட நிலையில் இருக்கும் என் கணவரைப் பார்த்து, ‘அத்தான் உங்கள் கண்கள் எங்கே அத்தான்?’ என்று வீறிட வேண்டும்.
காட்சி விளக்கப்பட்டதும், நான் ரிகர்சல் எதுவுமின்றி கதறி அழுது நடித்தேன். அப்படி ஒரு சம்பவம் எனக்கே நேர்ந்தது போலான நடிப்புக்குள் நான் ஆழ்ந்துபோனேன். யதார்த்த நிலைக்கு வர சில விநாடிகள் பிடித்தது. சீன் முடிந்ததும், ‘நடிச்ச மாதிரியே தெரியல. ரொம்ப இயல்பா இருந்தது பப்பி’ என்று சிவாஜி பாராட்டினார்.
சிவாஜியிடமிருந்து இலேசில் பாராட்டு வாங்கிவிட முடியாது. அவரே பாராட்டிய பிறகு அதற்கு ஈடான பாராட்டு வேறு எதுவும் இருக்கமுடியாது.
அவருடன் நடிப்பதே ஒரு தனியான அனுபவம். சிவாஜி ஒரு பிறவி நடிகர். கணேஷைப்போல ஒரு நொடியில் முகபாவங்களை மாற்றிக்கொள்ளவோ, உணர்ச்சியைப் பொழிந்து வசனம் பேசவோ யாராலும் முடியாது. நான் ஒரு நல்ல நடிகை என்று பெயர் வாங்கியதற்கு, சிவாஜியுடன் நடித்த படங்களில் பெற்ற பயிற்சியே காரணம்.
‘நான் நாடகத்தில் நடித்துத் தேர்ச்சியுற்று முன்னுக்கு வந்தவன். நீ மேடையில் பாவனைகளைக் காட்டக் கற்று பெயர் பெற்றவள். உனக்குச் சொல்லிக் கொடுப்பதில் எனக்கு என்ன சிரமம்?’ என்பார். நான் நடிக்க வேண்டியவற்றை அவரே நடித்தும் காட்டுவார். எங்களுக்குள் நடிப்பில் ஒரு போட்டிகூட இருக்கும். என்னால் முடிந்தவரையில் அவருக்கு ஈடு கொடுத்திருக்கிறேன்.
பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள், சிவாஜி படங்களில் அதிகம் இருந்தது. மேலும் நடிப்புத் தொழிலில் என் தாயார் சொன்னபடிதான் பட ஒப்பந்தங்கள் அமையும். நடிகர் திலகத்தோடு நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவர் எனக்குப் பழக்கமானவர். இந்த இரண்டையுமே பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் நினைத்துக்கொள்வேன்.
சம்பூர்ண இராமாயணம் ஷூட்டிங்குக்காக நாங்கள் ஒகேனக்கல் போயிருந்தோம். இதில் சிவாஜி பரதனாக நடித்ததை ராஜாஜியே பார்த்துப் பாராட்டி இருக்கிறார். கணேஷுக்கு வேட்டை என்றால் ரொம்பப் பிரியம். எங்கேயாவது ஒரு சிறு சான்ஸ் கிடைத்தால் கிளம்பிவிடுவார். காடுகள் நிறைந்த மலைப்பாங்கான இடமான ஒகேனக்கல்லில் நாங்கள் விடுதியில் தங்கி இருந்தோம்.
இரவு பன்னிரெண்டு மணி இருக்கும். கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. எனக்குப் பயமாகப் போயிற்று. எழுந்து மெதுவாகக் கதவைத் திறந்தேன். வெளியே சிவாஜி நின்றுகொண்டிருந்தார்.
‘என்ன விஷயம்?’ என்று கேட்டேன். ‘பப்பி! உனக்கு ஒரு ப்ரஸண்ட்’ என்று தன் கையில் இருந்த பையில் கையை விட்டார். வெளியே வந்தது ஒரு அழகான சிறு முயல் குட்டி!
சிவாஜியோடு நடிப்பதற்கு அவர் மீது செலுத்தும் அன்பும் நட்பும் மட்டும் போதாது. அவரோடு ஈடுகொடுத்து நடிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. ‘இதைவிடச் சிறப்பாக உன்னால் நடிக்க முடியும். உன்னுடைய திறமை எனக்கு நன்றாகத் தெரியும் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி, பிரமாதமாக நடிக்க வைப்பார்.
நான் எப்படி நடித்தால் நன்றாக வரும். இன்னும் அதை எவ்விதம் வளர்த்துக்கொள்வது என்பதெல்லாம் அவர்தான் சொல்லித் தருவார். இல்லாவிட்டால், அன்று என் வயதுக்கு மீறிய வேடங்களில் என்னால் நடிகர் திலகத்தோடு நடித்திருக்க முடியுமா?
சிவாஜி ரொம்ப பங்க்சுவலாக, காலை ஏழு மணிக்கெல்லாம் செட்டில் நடிக்க வந்துவிடுவார். என்னைப் போன்ற ஹீரோயின்கள், மேக் அப் செய்துகொண்டு வர நேரமாகும். சில சமயம், நான் பத்து மணிக்குத்தான் தயாராக முடியும். அதுவரைக்கும் கணேஷ் பொறுமையாக இருப்பார். இதுவே எனக்கு வெட்கமாகக்கூடப் போய்விடும் .
சிவாஜி, சேர்ந்தாற்போல் ஒரு டஜன் படங்களில் நடித்துக்கொண்டிருப்பார். அவற்றில் அதிகமாக அவரோடு நானும் பங்கு பெறுவேன். ஒரு சினிமாவுக்கும் இன்னொரு சினிமாவுக்கும் கொஞ்சமும் குழப்பம் இல்லாமல், கணேசன் வசனம் பேசுவதையும், நடிப்பை மாற்றிக்கொள்வதையும் பார்க்கும்போது எனக்குப் பிரமிப்பாக இருக்கும்! உலகத்திலேயே மிகச்சிறந்த கலைஞர் நடிகர் திலகம். அதைப்பற்றி இரண்டு கருத்துகள் இருக்கமுடியாது.
கெய்ரோவில் நடந்த ஆசிய-ஆப்பிரிக்கத் திரைப்பட விழாவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் படம் அனுப்பிவைக்கப்பட்டது. அதையொட்டி, சிவாஜியுடன் நானும் ராகினியும் அம்மாவும் போயிருந்தோம்.
‘புகழ் பெற்ற நடிகர்கள் ஒமர் ஷெரீப்போல் உலகின் பல பாகங்களில் இருந்தும் வந்திருந்தார்கள். சிறந்த நடிகர் என்ற மரியாதை யாருக்குக் கிடைக்கப்போகிறதோ...? என எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். பரிசு, சிவாஜி கணேசனுக்குத்தான் என்று அறிவிக்கப்பட்டபோது, எங்களுக்கெல்லாம் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. சிவாஜி கணேசன் அந்த சந்தோஷத்தைத் தாங்கமுடியாமல் உருகிப்போனார். என்னால் இந்தியாவுக்கு இவ்வளவு பெரிய கௌரவமா... என் உடம்பெல்லாம் சிலிர்க்குது’ என்று உணர்ச்சிவசப்பட்டார்’.
சிவாஜியிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் பல. பொறுமையுடன் அதிக தடவை சொல்லிக் கொடுப்பார். அதில் திருப்தி அடையும்வரையில் விடமாட்டார். நடிப்பு நன்றாக இருந்தால் உடனே பாராட்டுவார். சரியாக இல்லையென்றால் டைரக்டரிடம் சொல்லி, மீண்டும் எடுக்கச் சொல்வார். சிவாஜியால் நடிக்க முடியாத ரோல் எதுவும் கிடையாது. ஆனால் அதைச் செய்வதற்கு முன் அவர் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று முழு முயற்சி எடுத்துக்கொள்வார்.
சென்னைக்கு எப்போது வந்தாலும், நான் சிவாஜியைச் சந்திப்பது வழக்கம். ஒரு நாளாவது அவர் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு வருவேன். 1979-ல், டிசம்பர் சீசனில் மியூசிக் அகாடமியில் என்னுடைய ராமாயணம் நாட்டிய நாடகம் இரண்டு நாள்கள் நடந்தது. நிகழ்ச்சிக்கு மனைவி கமலா அம்மாளோடு அவர் வந்திருந்தார்.
ஒரு ஆள் உயரத்துக்கு ரொம்பப் பெரிய மாலை ஒன்றைத் தூக்க முடியாமல் எடுத்துக்கொண்டு வந்து, ஸ்டேஜில் என்னை கௌரவித்துப் போட்டார். அவர் வரப்போவது எனக்குகூடத் தெரியாது. ப்ளசன்ட் சர்ப்ரைஸ் ஆக இருக்க வேண்டும் என்று யாருக்கும் சொல்லாமலே வந்தாராம். பத்மினி இப்ப நடிக்கிறதுகூட இல்லையே என சிலர் கேட்டபோது, ‘நடிக்காவிட்டால் என்ன? பப்பி ஒரு கிரேட் ஆக்ட்ரஸ். அதுக்காகவே மரியாதை செய்யணும்’ என்று சிவாஜி சொன்னதாகக் கூறினார்கள்.
ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளைப் பார்வையிட சிவாஜி அமெரிக்கா வந்தபோது, விமான நிலையத்துக்குச் சென்று அவரை வரவேற்றேன். என் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹார்ட் ஆபரேஷனுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்த சமயம். என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. கமலா அம்மாள் என்னைப் பார்த்துக் கண் கலங்கிவிட சிவாஜி சோகமானாலும், ‘ஷீ ஈஸ் சச் எ பியூட்டிஃபுல் லேடி’ என என்னைத் தட்டிக் கொடுத்தார். அழுதுவிடக்கூடாது என்று தன்னையும் கட்டுப்படுத்திக்கொண்டார்.
அமெரிக்காவில் இருந்தாலும் சிவாஜியின் பிறந்த தினம், திருமண நாள் ஆகிய விசேஷத் தருணங்களில் மறக்காமல் கணேஷூக்கு ஃபோனில் வாழ்த்து சொல்லுவேன். ஆனால், சிவாஜிக்கு எனது பிறந்த நாள்கூடத் தெரியாது.’ - பத்மினி.
*
கணேசனின் முதல் காமெடி சித்திரம், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி…
முதல் பட விநியோகம், அமரதீபம்…
முதல் புராணப் படம், சம்பூர்ண இராமாயணம்…
இரட்டை வேட நடிப்பு, உத்தமபுத்திரன்…
தமிழில் முதல் சரித்திரம் மற்றும் சிவாஜியின் முதல் வண்ணப்படம், வீரபாண்டிய கட்டபொம்மன்.
ஆசிய அளவில் முதல் அயல்நாட்டு விருது, வீரபாண்டிய கட்டபொம்மன்…
சிவாஜி புரொடக்ஷன்ஸ் முதல் தயாரிப்பு, வியட்நாம் வீடு...
என, சிவாஜியின் பல முதல்களில் பத்மினிக்கும் அதிகப் பங்கு உண்டு. சிவாஜியின் மிக ராசியான நட்சத்திரம் அவர்.
‘தில்லானா மோகனாம்பாள்’ பற்றிச் சொல்லாமல், பத்மினியின் சினிமா வாழ்வு பூர்த்தி பெறாது.
ஏறக்குறைய, இளமையைத் தொலைத்துவிட்ட நிலையில், தில்லானா மோகனாம்பாள், பத்மினியின் திரை உலகப் பயணத்தில் மாபெரும் பாக்கியம். என்றைக்கும் பத்மினியை இளைய தலைமுறை மறந்துவிடாமல் இருக்க, கலைத்தாய் சூட்டிய மகுடம்! கொத்தமங்கலம் சுப்புவின் காலத்தை வென்ற படைப்பான மோகனாம்பாள், பத்மினிக்குக் கிடைக்கக் காரணமானவர் ஏ.பி.நாகராஜன் .
ஏ.பி.நாகராஜன் நீண்ட வருடங்களாக, அக்கதையைப் படம் எடுக்க வேண்டும் என்று வாசனிடம் கேட்டு வந்தார். வாசன் அதற்குச் சம்மதிக்கவில்லை. மோகனாம்பாளாக வைஜெயந்திமாலா நடிக்க, ஜெமினி ஸ்டுடியோஸ் சார்பில் தானே தயாரிக்கப்போவதாக வாசன் சொல்லி அனுப்பிவிடுவார்.
1965-ல், ஏ.பி.நாகராஜன் உருவாக்கிய ‘திருவிளையாடல்’, வாசனைக் கவர்ந்தது. மீண்டும் நாகராஜன் வந்து கேட்டபோது, தில்லானா மோகனாம்பாள் உரிமையை அவருக்கு விட்டுக்கொடுத்தார்.
‘எனக்கு மணமான பிறகு நான் நடித்த படங்களில் முக்கியமானது தில்லானா மோகனாம்பாள். என்னால் மறக்க முடியாத ஓர் அனுபவம்! நாட்டியமாடும் ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் படம் அது. அதன் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் அனுபவித்து நடித்தேன்.
‘தில்லானா மோகனாம்பாள் படத்தைத் தயாரிக்கணும்னு முடிவு பண்ணினதுமே, நீதாம்மா மோகனா. சிவாஜி சிக்கல் ஷண்முகசுந்தரம்னு முடிவு பண்ணிட்டேன். உங்க ரெண்டு பேர்ல யார் ஒருத்தர் நடிக்கலைன்னாலும் படத்தை எடுக்கிறதா இல்லை என்றார் ஏ.பி.என். எப்பேர்ப்பட்ட வார்த்தை! சிலிர்த்துப் போனேன்.
நான் அன்று அடைந்த சந்தோஷம், எவ்வளவுன்னு சொல்ல முடியாது. ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே, இந்தக் கதை படமானால் மோகனாம்பாள் கேரக்டர் எனக்கே கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். கதையோடு பத்திரிகையில் கோபுலு வரைந்த சித்திரங்கள் பற்றியும் பரபரப்பாக பேசப்பட்டது. கோபுலுவின் ஓவியங்களைப் போலவே, எங்களுக்கான மேக் அப்பும் காஸ்ட்யூமும் அமைந்தன.
18 வயசுப் பெண் ரோல் அது. எனக்கு அப்போ 38. என் மகன் பிரேம், சிறுவனாக இருந்த நேரம். மோகனாம்பாளின் யவ்வன பருவத்தை நினைத்துக்கொண்டு நடிக்கவேண்டி இருந்தது. உடம்பை ஒல்லியாக்கிக்கொள்ள நேர்ந்தது. அந்த மாதிரி சமயத்தில், நமக்கு நம்ம வாழ்வே சொந்தமில்லே. சினிமா தொழிலுக்கும் ஜனங்களுக்கும்தான் அது சொந்தம்.
எனக்கும் சிவாஜிக்கும் கதைக்கு ஏற்ற மாதிரி நிஜமான போட்டி உணர்வு ஏற்படணும்னு நாகராஜன், சாரதா ஸ்டுடியோல இரண்டு தனித்தனி காட்டேஜ் அமைச்சார். சிவாஜி க்ரூப் ஒரு காட்டேஜ். என் குழுவினர் ஒரு காட்டேஜ். யாரை யார் மிஞ்சறாங்க பார்க்கலாம் என்கிற போட்டியை உருவாக்கினார். அதனால்தான் மோகனாம்பாள் வெற்றிப் படமாச்சு.
வாத்தியக் கோஷ்டியுடன் நான் ஜரூராக ஒத்திகை பார்த்துக்கொண்டிருப்பேன். சிக்கலாரின் செட்டில் தவில் வாசிப்பவர், நாயணக்காரர், ஒத்து ஊதுபவர், தாளம் போடுபவர் என்று அங்கேயும் தீவிரமான ரிகர்ஸல் நடக்கும். அவர்கள் மிஞ்சிவிடுவார்கள்போல... என்று எனக்கு இங்கே தகவல் வரும். நாங்கள் இன்னும் மும்முரம் காட்டுவோம்.
பப்பி முந்திக்கொண்டுவிடுவார் என சிவாஜிக்கு செய்தி போகும். கணேஷ் பார்ட்டியின் வேகம் கூடும். ஏ.பி.என்., இரண்டு தரப்பினரையும் வந்து பார்த்து உற்சாகப்படுத்திவிட்டுப் போவார். இரண்டு கோஷ்டியை வைத்தும் ஃபைனல் பார்ப்பார். இந்தக் காட்சி சிறப்பா அமையணும்னா, எல்லாரும் உடம்பு பலவீனம் இல்லாம நடிக்கணும்னுவார்.
என் முகத்தில் கொஞ்சம் அலுப்புத் தட்டினாலும், ‘உடம்பு சரியில்லயாம்மா... ஷூட்டிங்கை கேன்சல் செய்துடவா’ என்று அக்கறையுடன் கேட்பார்.
கடைசியில் இந்தப் போட்டிக் காட்சி பிரமாதமாகவே அமைந்தது. நாங்கள் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டோம்’ - பத்மினி.
*
தில்லானா மோகனாம்பாளுக்காக, பத்மினியை 1968-ம் ஆண்டின் சிறந்த நடிகையாகத் தேர்வு செய்தது தமிழக அரசு. விருது வழங்கியவர், அன்றைய முதல்வர் மு.கருணாநிதி. நவீனன் அவர்களுக்கு நன்றி .
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...f5&oe=5A8F3211
(முகநூல் பதிவு)
Sukumar Shan.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி சரோ-,
‘எம்.ஜி.ஆர். என் உடன் பிறவா சகோதரர் என்றால், என் கலை உலக ஆசான் சிவாஜி ஆவார். சிவாஜிக்கு மூச்சே நடிப்புதான். நடிகர் திலகத்தின் இடத்தை சினிமாவில் யாராலும் நிரப்ப இயலாது. அவரே இன்னொரு ஜென்மம் எடுத்து வந்தால் மட்டுமே அந்த இடத்தை நிரப்ப முடியும்! நடிப்பைத் தவிர என் குருவுக்கு வேறு உலகம் தெரியாது. நடிக்க வந்து விட்டால் செட்டுக்குள்ளயே இருப்பார். டைரக்டர் பிரேக் சொன்ன பிறகுதான் வெளியே போவார். பெங்களூருவில் பள்ளியில் படித்து வந்த காலம். ‘மனோகரா’ நாடகம் நடைபெற்றது. தோழிகள் சிலர் ‘சிவாஜி மனோகரனாக நடிக்கிறார். நேருக்கு நேர் அவரது அற்புத நடிப்பைப் பார்க்க நமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. நீயும் அவசியம் வரவேண்டும்’ என்று என்னையும் வற்புறுத்தி அழைத்தார்கள்.
சிவாஜி கணேசன் நடிப்பில் மகத்தானப் புகழ் பெற்றவர். மிகப் பெரிய இந்தி நட்சத்திரங்கள் கூட அவரை வியந்து பாராட்டுகிறார்கள். சிவாஜி நம் ஊரில் நடிக்கிறார் என்றால் மக்கள் வழக்கத்தை விட அதிகமாகவே கூடுவார்கள். அவரை நேரில் காணும் ஆசை எல்லாருக்கும் சகஜமாக இருக்கும். எனக்கோ கூட்டம் என்றாலே பிடிக்காது. அதனால் என் சிநேகிதிகளிடம்,
‘நீங்கள் போங்கள். எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிட்டட்டும்’ என்றேன். நான் அப்போது விளையாட்டாகச் சொன்னது, பிற்காலத்தில் பலிக்கும் என்று நான் நிச்சயம் எதிர்பார்த்தவள் கிடையாது.
தங்கமலை ரகசியம் படத்தில் நடிகர் திலகத்துடன் ஒரு சின்ன வசனம் மட்டுமே எனக்கு இருந்தது. சும்மா இரண்டே வார்த்தைகள். ‘வாழ்க்கைக்கு எது மிகவும் முக்கியம், இளமையா... அழகா...? ’ என்று நான், சிவாஜி அண்ணனைப் பார்த்துக் கேட்க வேண்டும்.மிகப் பெரிய கலைஞரான அவர் முன்பு அதைப் பேச முடியாமல் கூச்சத்தில் தவித்தேன். கையும் காலும் தந்தி அடித்தன. இரண்டு சொற்கள் என் வாயிலிருந்து வெளியே வரவில்லை.‘தைரியமாகப் பேசும்மா’ என்று சிவாஜி கணேசன் ஊக்கம் தந்த பிறகு, சமாளித்துக் கொண்டு பேசினேன். சபாஷ் மீனாவில் நாங்கள் இருவரும் நடித்திருந்தாலும் அவருடன் பழகச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. பாகப் பிரிவினைக்குப் பிறகே நடிகர் திலகத்தின் அன்பையும் ஆசியையும் ஆதரவையும் பெற்றேன்
விடிவெள்ளி படத்துக்குக் கால்ஷீட் கொடுப்பதில் எனக்குப் பட அதிபருடன் சிறு சிறு பிரச்சனைகள் எழுந்தன. சிவாஜியின் மிக நெருங்கிய நண்பர் வேட்டைக்காரன்புதூர் முத்து மாணிக்கம். அவரோட தயாரிப்பு விடிவெள்ளி. அண்ணன் சிவாஜியோ எதிலும் பட்டுக் கொள்ளாமல் அமைதியாக ஒதுங்கியே இருந்தார்.‘சொந்த விருப்பு வெறுப்புகளை மனத்தில் வைத்துக் கொண்டு, அதைப் படத் தொழிலில் உடன் நடிப்பவர்களிடம் சிவாஜி அண்ணன் எப்போதும் காட்டியது கிடையாது. மனத்தில் எதையும் துளி கூட வஞ்சம் வைக்காத உயர்ந்த மனிதர்! அவரை அரசியல் மேடைகளில் தூற்றியவர்களும், அண்ணனைப் பத்தி குறை கூறிப் பேசியவர்களும் சிவாஜியோட படங்களில் நடிச்சிருக்காங்க. அது பொது ஜனங்களுக்கும் தெரிஞ்சிருக்கலாம்.நானாக மனம் நொந்து போய் யாரைப் பற்றியாவது அண்ணனிடம் புகார் செய்தால்,‘போனால் போகட்டும் போ’ சினிமா உலகமே அப்படித்தான் என்று தொடங்கி, சிரித்துச் சிரித்துப் பேசி அனுப்பி விடுவார். யாருடனும் பகையை வளர்க்க விரும்ப மாட்டார்.
பாகப் பிரிவினை தொடங்கி நான் அவருடன் நடித்த ஒவ்வொரு படமும் எனக்கு நடிப்புக் கல்லூரியில் ஒவ்வொரு வகுப்பாகும்.. 'நடிகர் திலகம் சிவாஜிகணேசன், எப்போதும் தனது காட்சி முடிந்த உடன் அந்த இடத்தைவிட்டு போய் விடமாட்டார். அருகிலேயே நின்று, மற்ற நடிகர்களின் நடிப்பை பார்த்து அவர்களின் நடிப்பில், ஏதாவது குறைகள் இருந்தால் அதுபற்றி எடுத்து கூறுவார்' என்றும் சரோஜா தேவி கூறி இருக்கிறார். 'மனோகரா'வுக்குப் பிறகு கருணாநிதி, சிவாஜிகணேசன், டைரக்டர் எல்.வி.பிரசாத் ஆகிய மூவரும் இப்படத்தில் ஒன்று சேர்ந்தனர்.
கதாநாயகி சரோஜாதேவி.கலைஞர் கருணாநிதி எழுதிய வசனங்களை, முதல் தடவையாக சரோஜாதேவி பேசி நடித்தார். 'எனக்கு என்ன அழகில்லையா, படிப்பில்லையா, பணம் இல்லையா? என்னை ஏன் திருமணம் செய்ய சம்மதிக்க மறுக்கிறாய்?' என்று சிவாஜி கேட்கும் கேள்விக்கு 'படிப்பில் நீமேதையாக இருக்கலாம். பணத்தில் நீ குபேரனாக இருக்கலாம், அழகில் நீ மன்மதனாக இருக்கலாம் ஆனால் என்னை மணக்கும் கண்ணியம் உன்னிடம் இல்லை!' என்று சரோஜாதேவி பதில் வசனம் பேசவேண்டும். ஆனால் ஒரே தடவையில் இந்த வசனத்தைப் பேச முடியவில்லை.உடனே, அவர் தயக்கத்தை போக்க சிவாஜி ஒரு யுக்தி செய்தார். சுற்றிலும் கூடியிருந்தவர்களை விலகிப்போகச் சொன்னார். 'தைரியமாகப் பேசு' என்றுஎன்னை உற்சாகப்படுத்தினார்.
அதன்பின், ஒரே 'டேக்'கில் அந்தக் காட்சி 'ஓகே' ஆயிற்று. புதிய பறவை படம் பற்றி சொல்லவே வேண்டாம் . அவரின் சொந்த படம் .இன்று இந்தப் படத்தைப் புதிதாகப் பார்க்கும் இளைய தலைமுறை ரசிகர்களைக் கூட நிமிர்ந்து உட்கார வைக்கக்கூடிய படம். ‘பார்த்த ஞாபகம் இல்லையோ…’, ‘எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி’ சிட்டுகுருவி முத்தம் கொடுத்து , ஆஹா மெல்ல நட , உன்னை ஒன்று கேட்பேன் உள்ளிட்ட பாடல்களாலும் கதை சொன்ன படம் ‘புதிய பறவை’.
.
என்னிடம் ஏதாவது திறமை இருந்தால், சினிமாவில் நான் நடப்பது முதல் நடிப்பது வரை எனக்குச் சொல்லிக் கொடுத்த வழி காட்டி சிவாஜி அண்ணன்! சிவாஜியின் கூட்டுக் குடும்பம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். எந்த வீட்டிலும் இல்லாத அம்சம்! ஞாயிற்றுக்கிழமையானால் அவங்க வீட்டு டைனிங் டேபிளில் அறுபது பேர் அமர்ந்திருப்பார்கள். அத்தனை பேர்களுக்கும் மருமகள்களே பரிமாறுவார்கள். ரொம்ப காலத்துக்குப் பிறகு ‘ஒன்ஸ் மோர்’ படத்துல நானும் சிவாஜியும் நடித்தோம். ‘அண்ணனோட மறுபடியும் நடிக்கிறோம்’னதும் சந்தோஷமா இருந்தது. பழைய நினைவுகள் மொத்தமா மனசுல வந்து அலை மோதுது. காலை ஏழு மணிக்குக் கால்ஷீட் கொடுத்திருந்தார்னா ஆறே முக்கால் மணிக்கெல்லாம் மேக் அப்போட செட்ல உட்காந்திருப்பார். நாங்க பெண்கள் மேக் அப் போட்டு முடிய எப்பவுமே கால தாமதம் ஆகும். அதுல கொஞ்சம் கூடுதலா லேட்டாயிடுச்சுனா முறைக்கிற மாதிரி ஒரு பார்வை பார்ப்பார். அதனாலயே சிவாஜி செட்டுக்கு வந்திட்டாருன்னா, நாங்க மேக் அப்காரரை சீக்கிரம் சீக்கிரம்னு அவசரப்படுத்தி இருக்கோம்.
சிவாஜி கிட்டே என் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை மனம் விட்டுப் பேசி இருக்கிறேன். பல சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லி இருக்கிறார்.அவர் மட்டும் அல்ல, அவரோட மனைவி கமலாம்மா, பொண்ணுங்க உட்பட ஒட்டு மொத்தக் குடும்பமும் என் மேல் தனிப்பாசம் வெச்சிருந்தாங்க. அண்ணன் காலத்துக்குப் பிறகும் அது மாறாம தொடருது. சில நேரம் நாங்க லேடீஸ் எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து பேசிக்கிட்டு இருப்போம். அந்த சமயம் சிவாஜி வந்துட்டாருண்ணா , ‘என்ன மாதர் மன்றமா எல்லாரும் ஒண்ணு சேந்துட்டீங்களா..., அப்ப நான் போயிடறேன்னு...’ கிண்டல் பண்ணுவார்.என் வாழ்க்கை திறந்த புத்தகம். அதில் ரகசியம் எதுவும் கிடையாது. 1986ல் என் கணவர் என்னைத் தவிக்க விட்டு விட்டுப் போய் விட்டார். என்னை விதவை கோலத்தில் காண சிவாஜி விரும்பவில்லை.
‘நான் சரோஜாவைப் பார்க்க மாட்டேன். அவள் நெற்றியில் குங்குமம் இல்லை. ’ என்று சில ஆண்டுகள் என்னைப் பார்க்காமலே தவிர்த்தார். நானாக மனத்தைத் தேற்றிக் கொண்டு அவரைச் சென்று பார்த்தேன். கடைசிக் காலம் வரையில் அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தேன். ‘ஒன்ஸ் மோர்’ ஷூட்டிங். முதல் நாள் லன்ச் பிரேக்ல சிவாஜி என்னிடம், ‘சரோஜா... நம்ம வீட்லருந்து சாப்பாடு வந்துருக்கு. நீயும் இப்ப என் கூட சாப்பிடறே...’ என்றார்.
‘இல்லண்ணே... எனக்குத் தனியா மீல்ஸ் வரும்’ என்றேன்.நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. சிவாஜி வீட்டுச் சாப்பாட்டை, அவருடன் எத்தனை நாள் சாப்பிட்டிருக்கிறேன். இன்னிக்குப் புதுசா என்ன வந்ததுச்சு..?ஒரு வேளை... கால இடைவெளி, என்னை இந்த வார்த்தையைப் பேச வைத்து விட்டதோ..! அப்போது சிவாஜி என்னிடம், ‘சரோஜா... நமக்கு வேண்டியவங்க எல்லாரும் ஒவ்வொருத்தரா போயிட்டே இருக்காங்க பார்த்தியா... பாலையாண்ணன், சகஸ்ரநாமம், ராதா அண்ணன்லருந்து இப்ப எம்.ஜி.ஆர். அண்ணன் வரை போயாச்சு...நம்மள்ள கூட இப்ப நான், பப்பி, நீன்னு கொஞ்சம் பேர்தான் இருக்கோம். நம்மள்ள யார் முந்தறோம்னு நமக்குத் தெரியாது. இருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா அனுசரணையா இருப்போம்’ன்னாரு.
சிவாஜி அப்படி சோகம் பொங்க வருத்தமாச் சொன்னதும் எனக்குக் கண் கலங்கிற்று. அவராலயும் மேற்கொண்டு ஏதும் பேச முடியாம நாக்கு தழுதழுத்துச்சு. எனக்காக சிவாஜியோட சாப்பாடு கேரியர் பிரிக்காமயே இருந்தது. கொஞ்சம் கழிச்சு அண்ணன் மறுபடியும் என்னைத் தன்னோட சாப்பிட வற்புறுத்தினார். சரோஜா உனக்கு லன்ச் எப்ப வரும்? ’ ‘உங்களோடயே சாப்பிடறேன் அண்ணே. ’என்று சொல்லி அவருடனேயே மதிய உணவைப் பகிர்ந்து கொள்ள உட்கார்ந்தேன். இழப்பு என்பது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து கொண்டாலும், தனது நண்பர்களின் இழப்பு அவரை எத்தனை தூரம் பாதித்து இருக்கிறது என்று புரிந்து கொண்டேன்.அதற்குப் பிறகு ஒன்ஸ் மோர் ஷூட்டிங்கில் சிவாஜி வீட்டுச் சாப்பாடுதான் தினமும் எனக்கு!
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...5a&oe=5AA7949F
(முகநூல் பதிவு)
vaannila vijayakumaran
கம்பீரம்
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...e5&oe=5A92984A
(முகநூல் பதிவு)
Nanjil Inba Mgs
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...4b&oe=5A98E7A2
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...64&oe=5A64C347
Nanjil Inba Mgs added 2 new photos. · Yesterday at 12:26
அன்பான தோழர்களே
வணக்கத்தை உங்களுக்காக
18-11-20!7 சனிக்கிழமை மாலை
6 மணியளவில் எஸ்.ஆர்.எம்.கலையரங்கத்தில் வைத்து நக்கீர் தமிழ் சங்கத்தின் சார்பில் அய்யன் சிவாஜிக்...கு தமிழ் இலக்கிய
அறிஞர்கள் நடந்தும் இலக்கிய பரி வட்டம்
பந்தள பதிப்பகம் சார்பில் நான் எழுதிய கலை மகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை என்ற நூல்களை குறித்து திறனாய்வு நடைபெறுகிறது...
இளைய சமுதாயத்தினரோடு தமிழ் ஆளுமைகள் கைகோர்க்கும் இலக்கிய விழா சிவாஜி நேசிப்பு குழுமத்திற்கு புதுமையான நிகழ்வு...
சிவாஜி ரசிகனே..
இதனை அழைப்பாக நினைத்து கூடுகை செய்ய வா...
அய்யன் சிவாஜிக்கு முதன்முதலாக கட்டப்படும் இலக்கிய பூந்தூவலுக்கு உன் கரமும் இருக்கட்டும்...
காமராஜ் காலத்தில் ஜெயகாந்தன் நடத்திய இலக்கிய வீச்சு இன்று அய்யனுக்காக....
வேற்றுமை மறந்து கூடுவோம் சிவாஜிக்காக
இன்பா....
kanchjpuram thyagarajan
மலேசியாவில் சிவாஜி நிகழ்ச்சி நடைபெறப் போகிறது. ?? யாரெல்லாம் வருகிறீர்கள்? ?
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...30&oe=5AAC5BBA
Vaannila Vijayakumaran
உங்களுக்குத் தெரியுமா?
1960 களின் மத்தியில் சென்னை நகரில் இருந்த திரையரங்குகளின் எண்ணிக்கை 49
1964-ல் தமிழில் வெளியான நேரடிப் படங்கள் 35 மட்டுமே. அதில், நடிகர்திலகம் நடித்து வெளியான தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 7. அதாவது, ஐந்தில் ஒரு பங்கு நடிகர்திலகம் நடித்தவை என்பது குறிப்பிடத்தக்ககது.
கர்ணன், பச்சை விளக்கு, ஆண்டவன் கட்டளை, கை கொடுத்த தெய்வம், புதிய பறவை, முரடன் முத்து, நவராத்திரி ஆகிய 7 படங்களில் 5 படங்கள் 100 நாட்களைக் கடந்தவை....
ஆண்டவன் கட்டளை வசூல் ரீதியில் மாபெரும் வெற்றியைப் பெற்றிருப்பினும், அடுத்தடுத்து வெளியான படங்களின் விதியால் 100 நாட்களை எட்டமுடியாமல் போய்விட்டது.
நவராத்திரியுடன் இணைந்து தீபாவளிக்கு வெளியான முரடன் முத்து கிராமப் புறங்களில் வசூலில் வாகை சூடிய படமாகும்.
சரி...விசயத்திற்கு வருவோம்.
மேற்கண்ட 7 படங்களும், சென்னையிலிருந்த 49 அரங்குகளில், 15 வெவ்வேறான அரங்குகளில் திரையிடப்பட்டன.அதாவது, ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு. அந்த 15 அரங்குகளில் திரையிடப்பட்ட 7 படங்களில், ஐந்து படங்கள் 11 அரங்குகளிலும் தினசரி 3 காட்சிகளில் 100 நாட்களைக் கடந்தன.
இந்த சாதனை இன்றுவரை ஒரே ஆண்டில் வெளியான எந்தநடிகரின் படங்களும் ரெகுலர் காட்சிகளில், 11 அரங்குகளில் ஓடி முறியடிக்கவில்லை என்பது வரலாற்று உண்மை.
மற்ற நான்கு அரங்குகளும் தன் பங்குக்கு எட்டு முதல் 12 வாரங்கள் ஐயனின் படங்களை ஓடவிட்டு அவரின் புகழுக்கு புகழ் சேர்த்தன.
சென்னையைப் போலவே பிற ஊர்களிலும், அந்தந்த பகுதிக்கேற்ப இவ்வேழு படங்களும் வெற்றி நாட்களை எட்டின.
சென்னை நகர வெற்றிப் பட்டியல் உங்கள் பார்வைக்காக ....
1. சாந்தி கர்ணன் 100 நாட்கள்
2. பிரபாத் கர்ணன் 100 நாட்கள்
கைகொடுத்த தெய்வம் 100 நாள்
3. சயானி கர்ணன் 100 நாட்கள்
4. வெலிங்டன் பச்சை விளக்கு 105 நாட்கள்
5. மகாராணி பச்சை விளக்கு 105 நாட்கள்
நவராத்திரி 108 நாட்கள்
6. ராக்ஸி பச்சை விளக்கு 105 நாட்கள்
7. மிட்லண்ட் நவராத்திரி 101 நாட்கள்
கைகொடுத்த தெய்வம் 105 நாள்
8. சரஸ்வதி கைகொடுத்த தெய்வம் 100நாள்
9. ராம் கைகொடுத்த தெய்வம் 100 நாட்கள்
நவராத்திரி 108 நாட்கள்
10. பாரகன் புதிய பறவை 133 நாட்கள்
11. உமா நவராத்திரி 108 நாட்கள்
ஆக, அன்றைக்கு தமிழ்த் திரையுலகின் உச்சநட்சத்திரம் யாரென்றும், வசூல்மன்னன் யாரென்றும் நீங்களே விளங்கிக் கொள்ளலாம். அதுமட்டுமன்றி, அன்றைய திரையுலகமும், அரங்குகளும், கலைஞர்களும் ஐயன் ஒருவரையே சுற்றி சுழன்று கொண்டிருந்தது என்பது கண்கூடு.
ஆனால், அந்த ஒப்பற்றக் கலைஞனின் காலத்திலும், அதன் பின்பும் இந்தத் திரையுலகம் அவருக்கு நன்றியுடன் நடந்து கொண்டதா என்பது கேள்விக்குறி ..?
வரலாறு இன்னும் புரட்டப்படும்.
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...e2&oe=5A911E26
Sekar Parasuram
அன்றைய இந்திய ஜனாதிபதி திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் அருகில் அமர்ந்து இருக்கும் நடிகர் திலகம்,
நடனமாடும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா,
வரலாற்று நிகழ்வுகளை மறந்து விடுபவர்களுக்காக!
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...dd&oe=5A8D1136
Natarajen Pachaiappan
சிவாஜியின் "பட்டிகாடா பட்டணமா"
sivajisivajisivajisivajisivajisivajisivajisivaji
வில்லியம் ஷேக்ஸ்பியரின் "டாமிங் ஆஃப் ஸ்ரீவ்"
(The Taming of the Shrew) நகைச்சுவை நாடகத்தை அடிப்படையாக வைத்து பாலமுருகன் தமிழில் எழுத பி.மாதவன் இயக்கத்தில் நடிகர்திலகமும் ஜெயலலிதாவும் சேர்ந்து நடித்த "பட்டிக்காடா பட்டணமா" 1972 மே,6ஆம் நாள் கருப்பு-வெள்ளை படமாக வந்து கலக்கிய படம்.
"கேட்டுக்கோடி உருமிமேளம்" பாட்டிற்கு இந்தளவு பாவனையுடன சிவாஜி ஆடிய ஆட்டம் எந்த நடிகர்களாளும் ஆடமுடியாது.
அவருடைய ஆட்டம் மிரட்சியான சந்தோஷத்தை கொடுத்து நம்மையும் ஆடவைக்கும். அந்த வருடத்தில் அதிக வசூலுடன் 189 நாட்கள் ஓடி சாதனை செய்தது. வெள்ளிவிழா கொண்டாடிய் கடைசி கருப்பு- வெள்ளை படம். "அடி என்னடி ராக்கம்மா" பட்டி தொட்டி எங்கும் பரவியது.
1973ல் தேசிய விருது பெற்ற சிறந்த படம்.
1973ல் சிறந்த தமிழ் படத்திற்கு ஃபிலிம் ஃபேர் விருது கிடைத்தது.
இந்த படத்தை காமராஜருக்கு தனியாக திரையிட்டு காட்டப்பட்டது. "நம்முடைய நாட்டின் பாராம்பரியத்தையும் கலாச்சாரத்தையும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற உண்ணத கருத்தையும் மக்கள் எப்படி வாழவேண்டுமென உயரீய கருத்தையும் தெரிவிக்கின்ற சிறந்தப்படமென்று காமராஜர் பாராட்டினார்."
நடிகர்திலகத்தின் நாட்டுப்புறத்தை சார்ந்த
கதையமைப்பில் முதல் வியாபார ரீதியில் பெரும்பாலும் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி மிகப் பெரிய வெற்றியை தந்தது.
இந்த படத்தை பற்றி திரு தனஜெயன் அவர்கள் எழுதியது, இந்த படத்தின் அடிப்படை கரு நமது நாட்டின் பாராம்பரிய கலாச்சாரத்தை பாதுகாப்பதும் பரவலான மக்களுக்கு கொண்டு சேர்பதாகும். இந்த படம் சிவாஜியின் ஒப்பற்ற நடிப்பெனும் ஆதாரத்தால்தான் இந்த படமே நின்றது. அவர் இரண்டுவிதமான வித்தியாசமான பாத்திரங்களையும் மக்களுக்கு திருப்திதரும்படி சித்தரித்து காட்டினார்.
1972 ஜூன்,28 ஆனந்த விகடன் விமர்சனத்தில்
"இந்த படத்தின் சிவாஜியின் ஆற்றல் மிகுந்த நடிப்புத்தான் முன்னிலை வகிக்கிறது. மிக அழகான வெளிப்புற படபிடிப்பு இல்லையென்றால், எப்போதையும்போல 'புதிய மொந்தையில் பழைய கள்’ என்ற கதைபோல் ஆகியிருக்கும்.
மனோரமா, அவருடைய பாத்திரம் படத்தின் ஆரம்பத்தில் அருமையாக மதுரை வசனத்தை சரளமாக மிக அழகாக பேசுவது ரசிகர்களை கவரும்படியாக இருந்ததென 'தி ஹிந்து' பாராட்டியது.
பெலுடூரி பாவா (Palletoori Bava) ( நாட்டுப்புற மருமகன்) 1973ல் தெலுங்கு மொழியில் மறுதயாரிப்பில் அக்கினேனி நாகேஷ்வரராவ், லட்சுமி நடித்தப்படம்.
புட்டன்ஜா (Putnanja) (Kannada: ಪುಟ್ನಂಜ) கன்னட மொழியில் வீ.ரவிசந்திரன் மீனா நடித்து மறுதயாரிப்பில் வண்ணப்படமாக வெளிவந்தது.
பனாரசி பாபு (Banarasi Babu) 1997ல் கோவிந்தா, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஹிந்தி நகைச்சுவை படமாக வெளிவந்தது.
இத்தனை மொழிகளில் வந்தாலும் யாரும் சிவாஜி அவர்களுக்கு இணையாக வைத்து பார்க்க முடியவில்லை.ஆரம்ப காட்சியிலேயே அம்பிகையே ஈஸ்வரியே என்ற பாடலுடன் நெருப்புச்சட்டியை கையில் ஏந்தி மூக்கையைனாக வரும் சிவாஜி ரசிகர்களின் கரவோசையையும் கற்பூர தீப ஆராதனையும் அள்ளிச்செல்லுவார். ஜெயலலிதா வந்த பிறகு சூடுபிடிக்கு ஆட்டம் சிலம்பாட்ட சண்டையில் தூள் கிளப்புவார், கவிஞர் கண்ணதாசனின் பாடல்களின் கருத்துக்களை சொல்லவும் வேண்டுமோ... "கேட்டுக்கோடி உருமி மேளம் ஆட்டம்" இன்றும் மறக்கமுடியாது "நல்வாழ்த்து நான் சொல்வேன்" எனும் பாடலுக்கு பட்டணத்து இளைஞனாக வந்து கலக்குவார். மொத்தத்தில் பார்த்தவர்களை திரும்ப திரும்ப பார்க்கவைத்த ஓர் ஜனரஞ்சக படம். இன்றைக்கும் இதுபோன்ற படங்கள் எத்தனையோ வந்தாலும் சிவாஜி அய்யாவின் நடிப்பை யாரும் தொடமுடியாது போனது நமக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் தெரியும்.
அன்புடன்...
சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...97&oe=5AA6782D
.................................................. ....................................
(முகநூல் பதிவு)
Natarajen Pachaiappan
· 13 November at 14:10 ·
கை ரிக்ஷாவும் சைக்கிள் ரிக்ஷாவும்
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
ரிக்*ஷாக்காரன்
வெளியீடு மே 30, 1971
1972-ஆம் ஆண்டிற்கான எம். ஜி. இராமச்சந்திரன்
அவர்களுக்கு சிறந்த நடிகருக்கான 'பாரத்' இந்திய தேசிய திரைப்பட விருது கிடைத்தது. (சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற முதல் தமிழ் நடிகர்)
பாபு
வெளியீடு அக்டோபர் 18, 1971
மறு தயாரிப்பு என்ற காரணத்தினால் மிக சிறந்த நடிப்பு இருந்தும் விருதுபெற தகுதி இல்லாமல் போனவர். நடிக்கின்ற காலம் வரை சிறந்த நடிகருக்கான அங்கிகாரம் அளிக்காமல், இந்தியா தவறவிட்ட தலைசிறந்த நடிகர்?
Gopal Sankar
Face book November 13,2017
ரிக்ஷாகாரன் திரைப்படத்திற்கு விருது கொடுத்த சமயம் துக்ளக் இதழில் ஒரு கேலிச்சித்திரம் வெளியானது சூரியனிலிருந்து அருவி விழும்
ஒருவர் கூறுவார் இது என்ன அதிசயம் ரிக்ஷாக்காரன் திரைப்படத்திற்கு விருது
கிடைத்துள்ளது அதைவிடவா இது அதிசயம்.
விருதை திருப்பித் தந்த எம்.ஜி.ஆர்!
(அரசியல் பின்னனி என்ன?)
Published Date: 3 NOVEMBER 2015 6:12PM
கன்னட எழுத்தாளர் கல்புர்கி படுகொலை இந்தியா முழுவதும் எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு கட்சித்தலைவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு மத்திய அரசை குற்றஞ்சாட்டி எழுத்தாளர்கள் பலர், தாங்கள் மத்திய அரசிடமிருந்து பெற்ற விருதுகளை திருப்பித் தந்து பரபரப்பை கூட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக கோபம் என்பது உணர்ச்சியை உடனே காட்டிவிடத் துடிக்கும் ஒரு உணர்வு. தேசத்தின் மீதான கோபம் எழும் போதெல்லாம், காந்தி மேற்கொள்கிற விஷயம் உண்ணாவிரதம். அடிப்படையில் அது அஹிம்சை வடிவம் என்றாலும், அதுதான் காந்தியின் உச்சக்கட்ட கோபம். இதை பின்பற்றித்தான் எழுத்தாளர்களும் தங்களுக்கு பெருமையளித்த விருதுகளை திருப்பித்தருவதும்.
ஆனால் இவ்வாறு விருதுகளை திருப்பி அளிப்பதற்கு எதிரான விமர்சனங்களும் எழுகின்றன.
இந்த நிலையில், சற்றேறக்குறைய 42 வருடங்களுக்கு முன் தமிழகத்தில் பிரபலமாக விளங்கிய நடிகர் ஒருவர், உள்ளுர் அரசியலில் உருவான ஒரு உஷ்ணமான சூழ்நிலையில், 'சிறந்த நடிகர்' என தனக்கு அளிக்கப்பட்ட பாரத் விருதை திருப்பியளித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். அந்த நடிகர் எம்.ஜி.ஆர்.
அதுசரி பாரத் பட்டத்தை திருப்பியளிக்கும் அளவுக்கு எம்.ஜி.ஆரை உஷ்ணத்திற்குள்ளாக்கிய விஷயம் என்ன...
இதோ... எம்.ஜி.ஆரே பாரத் பட்டத்தை திருப்பியளித்து, அப்போதைய மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சருக்கு எழுதிய கடிதம் எல்லாவற்றையும் விளக்குகிறது.
திரு. ஐ.கே.குஜ்ரால், மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர், புதுடில்லி, 21.3.73.
மதிப்பிற்குரிய மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு,
கடந்த 1972-ஆம் ஆண்டுக்கான “பாரத்” விருதைப் பெற்றவன் என்று என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் பெருவிழிப்பை நீங்கள் அறிவீர்கள் என்றும், இந்த உணர்ச்சி வெள்ளத்தின் நீரோட்டத்திற்கு ஆட்பட்டுவிட்டவர்களில் நானும் ஒருவன் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றும் நம்புகிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும், ஆளும் தி.மு.க.கழகத்திற்கும் இடையே எழுந்த வாக்குவாதத்தில் மாநிலகல்வி அமைச்சரான திரு நெடுஞ்செழியன் பின்கண்ட பகிரங்க அறிவிப்பை வெளியிட்டார்.
“பாரத் விருதை வேறொரு நடிகருக்கு வழங்க தேர்வுக்குழு முடிவு செய்தது. இதை அறிந்த நமது முதல்வர் கலைஞர், திரு ஏ. எல். சீனிவாசனை அழைத்து, எம்.ஜி.ஆருக்கு இந்த விருது கிடைக்க முயற்சி செய்யுமாறு கூறினார். இதற்காக திரு ஏ.எல். சீனிவாசன் கடும் முயற்சிகள் மேற்கொண்டார். சாதகமான கருத்து கூறுவதற்காக பலரை தன்பக்கம் மாற்றினார். ஆனால், தேர்வுக்குழு தலைவரான திரு. வி.கே. நாராயணமேனன் எளிதில் இணங்கவில்லை. நமது முதல்வரான கலைஞர், இதனை அடைய வைக்க பல வழிகளைக் கையாண்டார். இந்த முயற்சிகள் எல்லாம் எதற்காக? மற்ற நடிகருக்கு கிடைப்பதற்கு முன் எம்.ஜி.ஆருக்கு விருது கிட்டவேண்டும் என்பதற்காகதானே? அந்த இன்னொரு நடிகர் யார் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை”
இந்த அறிவிப்பு 8.2.1973 தேதியிட்ட ஒரு வார ஏட்டில் வெளிவந்தது. மிக அதிகமாக விற்பனை ஆகும் தமிழ் வார ஏடு அது. இந்த செய்தி, அந்த இதழின் வாசகர் ஒருவரின் கிண்டலான விமர்சனத்திற்கு இரையானது. அந்த வாசகரின் கடிதம் 15.2.73 தேதியிட்ட இதழில் பிரிக்கப்பட்டிருந்தது. அதை இங்கு மீண்டும் தருகிறேன்.
“எம்.ஜி.ஆருக்கு பாரத் விருது பெற்றுத் தருவதற்காக தேர்வுக்குழு தலைவரான திரு நாராயண மேனன் விஷயத்தில் பலவழிகளை முதல்வர் கலைஞர் கையாண்டதாக நெடுஞ்செழியன் கூறியுள்ளார். இந்த செய்தி என்னை வியப்பிலாழ்த்தியது, இந்த காரியத்திற்காக ஒருவரை இணங்க வைப்பது குற்றமல்லவா? அதுவும் ஒரு முதலமைச்சர் இப்படியெல்லாம் செய்யலாமா?
இந்த.... அதை ஒரு மாநில அமைச்சர் பெருமையாக கூறிக்கொள்வது வேடிக்கையாக இல்லையா?”- இவ்வாறு அந்த வாசகனின் கடிதம் இருந்தது.
இத்தகைய கருத்துக்கள் வெளிவந்த பின்னரும் முதல்வரிடமிருந்தோ, தேர்வுக்குழு அதிகாரிகளி டமிருந்தோ இதனை மறுத்து மறுப்புரை வரவில்லை. முதல்வர் ஓர் கூர்மையான அரசியல்வாதி என்பதால் அவர் மறுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், தேர்வுக்குழு அதிகாரிகளின் மவுனம் எனக்கு வியப்பைவிட கலக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.
தேசிய அளவில் நுண்கலைத்திறனை தேர்வு செய்வதற்காக அமர்த்திடும் குழுவின் நடுநிலைத் தன்மையின் மீது எனக்கு மெத்த மதிப்பும், மரியாதையும் உண்டு. நீதியின் அடிப்படையிலும், பேதமற்ற நிலையிலும்தான் அந்தக்குழு செயல்படுகிறது என்பதே எனது நிச்சயமான அபிப்பிராயமாகும்.
இப்போது அந்தக் குழுவின் மீதும் அதன் தலைவர் மீதும் சுமத்தப்பட்டிருக்கிற உள்நோக்கம், முறைகேடான நடைமுறைகள் இவற்றை மென்மையாகக் குறிப்பிடவேண்டுமானால், 'நான் அதிர்ச்சியடைந்தேன்' என்றுதான் கூறுவேன். எனது உண்மையான உழைப்பின் காரணமாக இந்த விருது பெறும் தகுதி எனக்கு உண்டு என்று நான் நம்புகிறேன்.
இந்த அங்கீகாரம் எனக்கு அளிக்கப்பட்ட உயர்ந்த கவுரவம் என்றும் நான் மதிக்கிறேன். ஆனால், நடுநிலை தவறாத தீர்ப்புக் காரணமாக இந்த விருது கிடைத்தால் மட்டுமே நான் பெருமிதம் கொள்ளமுடியும். தமிழ்நாட்டை ஆளும் ஆட்சியும் ஊழல் அற்றதாக விளங்கவேண்டும் என்று நான் கூறி வருகின்ற காரணத்தால், தமிழக அரசியலில் நான் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றேன்.
ஆனால், முறையற்ற வழிகளால் எனக்கு ஒரு கவுரவம் கிடைத்தது என்பதை என்னால் எண்ணிப் பார்க்கவும் இயலவில்லை. இந்தச் சம்பவங்கள் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது.
இந்த விருதின் தன்மைகள் பாதிக்காத வகையில், தகுதியை தீர்மானிக்க கையாளப்பட்ட வழி முறைகளைப் பற்றி மட்டுமே கருத்தில் கொண்டு பார்க்கும்போது இனியும் இந்த விருது என்வசம் வைத்திருப்பது நியாயமில்லை என்று நான் கருதுகிறேன்.
எனவே இந்த விருதினை திருப்பி அனுப்புகிற நேரத்தில் எனது செயலை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். எனது முடிவின் பின்னால் உள்ள உணர்வை பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் பிரதான பாத்திரம் வகிக்கும் ஒரு நியாயமற்ற சர்ச்சையிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள அனுமதிக்குமாறு வேண்டுகிறேன். தேர்வுக்குழு போன்ற உயர் இலக்கிய மதிப்பு வாய்ந்த நிறுவனங்களை அரசியல் தலைவர்களின் தந்திரோபாயங்களுக்கு ஆட்படவிடாமல் காத்து வருவதுடன், நீதி வழுவாமுறையில் கலைஞர்களின் தகுதிகள் நிர்ணயிக்கப்படவும், உரியமுறையில் அவர்கள் உற்சாகம் பெறவும் வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
தங்கள் அன்பன் எம்.ஜி.ராமச்சந்திரன்
-எஸ்.கிருபாகரன்
1972 அக்டோபர். எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பமானது.
.................................................. ...............
(முகநூல் பதிவு)
Jahir Hussain
· 3 mins · Puduchattiram, India
நண்பர்களுக்கு போட்டி வைத்து பல நாட்கள் ஆகி விட்டது..
. ஒரு சிறிய காம்ப்படிஷன்..
. இந்தக்காலத்திலே படங்கள் வருவதும் தெரியலே... போவதும் தெரியல...
ஆனால் அப்போதெல்லாம பட ரிலீஸ்... ரீ ரிலீஸ்... அடுத்தடுத்த புதிய பிரிண்ட் போட்டு பொலிவுடன் புதுப் படங்கள் போல ரிலீஸ்..
தீபாவளிக்கும் பொங்கலுக்கும் புதுப் படங்கள் கிடைக்காவிட்டால் இருக்கவே இருக்கிறது வசந்த மாளிகை, தங்கப்பதக்கம், சிவந்த மண், திரிசூலம் போன்ற எண்ணற்ற திரைப்படங்கள்...
கிராமங்களில் பண்டிகைக் காலங்களில் தியேட்டர்களில் பழைய படங்க...ளை போட்டு குறைந்த முதலீட்டில் நாலைந்து நாட்கள் ஹவுஸ்ஃபுல் ஆக படங்கள் ஓடி பணம் சம்பாதித்து கொடுத்து இருக்கிறது..
. தியேட்டர் முதலாளிகள், விநியோகஸ்தர்கள் என்று டாப் டூ பாட்டம் வரைக்கும் "வைரமுட்டைகள் இடுகிற பொற்கோழிகளாக" இருந்தன அந்தக்கால சினிமாக்கள்... மிக முக்கியமாக சிவாஜி சினிமாக்கள்..
. அதுமட்டுமல்ல... பாடல்கள் பெரிய ஹிட் அடித்து கேசட்டுகளாகவும் ரெக்கார்டு பிளேயர்களாகவும் சி.டி வடிவங்களாகவும் பணத்தை வாரி குவித்தது வரலாறு... "வாராய தோழி வாராயோ" பாடலும் "நிகழும் பார்த்திபனாண்டு ஆவணித்திங்கள் 20ம் நாள்" என்று தொடங்கி தங்கள் நல்வரவை அன்புடன் நாடும் ரகுராமன்... என்ற வசன நடை பாடலாகட்டும் இசைத்தட்டுகளாய் ஒலிக்காத திருமண வீடுகளே இல்லை... இப்படி ஒருபுறம் இருந்தாலும் "ஓடினாள் ஓடினாள்"... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்... "பொறுத்தது போதும் பொங்கி எழு"... "என் காதல் தேவதைக்கு நான் கட்டிய இந்த ஆலயத்தைப் பார்"... என்ற வனசங்களை கதையுடன் காட்சி விளக்கங்களுடன் அச்சிட்டு புத்தகங்களாக வெளியிட்டு வருமானம் வெளுத்து வாங்கிய காலமெல்லாம் உண்டு... இதையனைத்தையும் கடந்து சென்னை, கோவை இன்னும் தமிழகத்து வானொலி நிலையங்கள்... குறிப்பாக இலங்கை வானொலி நிலையம்... ஒலிச் சித்திரங்களாக பலநூறு படங்களை ஒலிபரப்பி வெற்றி கொண்டாடியது... அதில் பெரும் படங்கள் நம் ஐயனின் படங்கள்... இதெல்லாம் எமது நண்பர்களுக்கு அத்துபடி... போட்டி என்னவென்றால் ஒலிச்சித்திரத்தில் நீங்கள் மிகவும் ரசித்துக் கேட்ட சிவாஜி சினிமாக்கள் பற்றி கமெண்ட் அடியுங்கள்... இது போன்ற ஒலிச் சித்திரங்கள் கான்செப்ட் ஆக வைத்துதான் பிற்காலங்களில் வானொலி நிலையங்கள் தன் சொந்த நாடக ஒலி சித்திரங்ளைாக தயாரித்து ஒலி பரப்பினார்கள்... எத்தனையோ சிவாஜி சினிமாக்கள் ஒலி சித்திரங்களாக மின்னியது ... "பட்டிக்காடா பட்டணமா" படத்தின் ஒலி சித்திரத்தை குறிப்பிட்டு விவாத மேடையை ஓப்பன் செய்கிறேன்... மற்றதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்...
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...59&oe=5A9879B0
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
273 வது வெற்றிச்சித்திரம்
தாம்பத்யம் வெளியான நாள் இன்று
தாம்பத்யம் 20 நவம்பர் 1987
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...2c&oe=5AA52A21
https://i.ytimg.com/vi/16awFyAS1Ak/maxresdefault.jpg
Vasu Devan
·
கருடா சௌக்கியமா ஆய்வுக்கட்டுரை . பாகம்-1.
25-02-1982 அன்று வெளியான நடிக மாமன்னனின் 222-ஆவது படைப்பான ரேவதி கம்பைன்ஸ் 'கருடா சௌக்கியமா' என்ற வண்ண ஓவியமான இக் காவியத்தைப் பற்றி ஆய்வு செய்து முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.
'பத்தோடு பதினொன்று' என்று ஒதுக்கி விடக் கூடிய படமில்லை இது.
இப்படம் ஓர் அற்புதக் காவியம்.
இயக்குனர் திரு டி. எஸ்.பிரகாஷ்ராவ் அவர்களின் பழுத்த அனுபவமிக்க இயக்கத்தாலும், 'வியட்நாம் வீடு' சுந்தரம் என்ற வளமான வசனகர்த்தாவின் உயிரோட்டமான வசனங்களினாலும், திரு.என்.கே.விஸ்வாதன் அவர்களின் அற்புத ஒளிப்பதிவினாலும், 'மெல்லிசை மாமன்னரி'ன் தேனூறும் இசை அமைப்பினாலும், எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போன்று' நடிப்புலகச் சக்கரவர்த்தி',' நடிக மாமேதை',நடிகர் திலகம்' அவர்களின் அற்புதமான, வித்தியாசமான நடிப்பசைவுகளாலும் உருவான உயிரோவியமே' கருடா சௌக்கியமா' என்னும் காவியமாகும்.
சரி! கதைக்கு வருவோம்.
அனாதைக்குழந்தை' தீனா' 'மேரி' என்னும் கன்னிகாஸ்திரீயால் வளர்க்கப்படுகிறான். சிறுவயதிலேயே அவள் கணவனால் தீனா விரட்டியடிக்கப்படுகிறான். யாருமில்லாத அனாதையாக தனியாக வளர்ந்து பெரியவனாகிறான். தீனாவைப் பயன்படுத்தி, அவனை வைத்து குற்றங்கள் புரிந்து பணம் சம்பாதிக்கின்றனர் சில கயவர்கள். தீனா அதைப் புரிந்து கொண்டு உஷாராகிறான். அவர்கள் தனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்களை அவர்களுக்கே கற்றுக் கொடுக்கிறான்.
முத்துக்கிருஷ்ணன் எனும் அனாதைச் சிறுவன் தீனாவின் திறமைகளைக் கண்டு வலிய வந்து தீனாவிடம் அட்டை போல் ஒட்டிக் கொள்கிறான். தீனாவுக்கு வலது கையாகிறான்.
தன் தாய்மாமனால் துன்புறுத்தப்படும் 'லஷ்மி' என்ற பெண்ணை அவனிடமிருந்து காப்பாற்றி அவளைத் திருமணம் செய்து கொள்கிறான் தீனா. அவளுடைய தாய்மாமனையும் தன்னுடைய அடியாளாக்கிக் கொள்கிறான்.
தீனாவுக்கு வயதாகிறது. தீனா இப்போது' தீனதயாளு' என்று மக்களால் போற்றப்படும் ஆபத்பாந்தவர். அநாதை ரட்சகர். ஏழை எளிய மக்களுக்கு தீனதயாளு ஒரு காட்பாதர். தீனதயாளு ஏழை எளியவர்களுக்கு இன்னல்கள் கொடுக்கும் பணக்கார முதலைகளின் கொட்டங்களை தன் செல்வாக்கால் ஒடுக்கி அவர்களை நிலை குலைய வைக்கிறார். ஆனால் தீனதயாளு எப்போதுமே கெட்டவழியில் செல்வது இல்லை. மொத்தத்தில் அவர் ஒரு நல்ல' தாதா'.
ஆனால் குடும்பத்தைப் பொறுத்த வரையில் அவர் ஒரு அப்பாவி. அவர் மனைவி லஷ்மிக்கு தன் கணவர் ஒரு பெரிய 'தாதா' என்பது தெரியாது. அப்படி அவள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதில் தீனதயாளு உறுதியாக இருக்கிறார். அவ்வளவு பெரிய தாதாவாக இருந்தும் தான் நேர்மையாக நடத்தி வரும் அச்சக ஆபீஸ் மூலம் வரும் வருமானத்தை வைத்துதான் தீனதயாளு தன் குடும்பத்தை நடத்துவார்.
தீனதயாளுவுடன் சிறுவயது முதற்கொண்டே வளர்ந்து வரும் முத்துகிருஷ்ணன் இப்போது இளைஞன். தீனதயாளு என்ற சிவனின் கழுத்தில் சுற்றிய பாம்பாய் யாரை வேண்டுமானாலும் கருடா சௌக்கியமா என்று கேட்பவன்.தீனதயாளுவுக்கு எல்லாமே அவன்தான். இதற்கிடையில் தீனதயாளு தன் வளர்ப்புத்தாய் மேரியம்மாவை அடிக்கடி சந்தித்து ஆறுதலடைகிறார். தீனதயாளுவுக்கு ராதா என்ற செல்ல மகள்.
ராதா மோகனை விரும்புகிறாள். திருமணம் செய்ய ஆசைப் படுகிறாள். ஆனால் தீனதயாளுவுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும் தன் மனைவி லஷ்மியின் விருப்பத்துக்காக அரைமனதுடன் சம்மதித்து மகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.
ராதாவின் கணவன் மோகன் குடிகாரனாகி ராதாவை தீனதயாளுவின் வீட்டிற்கே அனுப்பி வைத்து விடுகிறான். சந்தோஷம் குடியிருந்த வீட்டில் சோகம் குடிகொள்ள ஆரம்பிக்கிறது.
தீனதயாளுவை சில பணக்காரத் தீயவர்கள் சந்தித்து போதை மருந்து கடத்தலில் ஈடுபடவைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் தீனதயாளு அதை அடியோடு மறுத்துவிட்டு, அவர்களும் அதில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி விடுகிறார். இது முத்துகிருஷ்ணனுக்கு பிடிக்காமல் தீனதயாளுவை எப்படியாவது கடத்தலில் தான் ஈடுபட சம்மதிக்க வைப்பதாக அவர்களிடமிருந்து பணம் வாங்கிக் கொள்கிறான்.
சத்தியநாதன் என்ற தொழிலதிபர் தீனதயாளுவின் வளர்ப்புத்தாய் மேரியம்மாவை குடிபோதையில் காரை ஏற்றிக் குற்றுயிரும், கொலையுயிருமாக விட்டு விட்டு கண்டு கொள்ளாமல் சென்றுவிடுகிறான். இது தீனதயாளுவுக்குத் தெரியவர, துடிதுடித்து, மேரியாம்மாவை பார்க்க ஓடிவர, அவர் கண் முன்னமே மேரியம்மாவின் உயிர் பிரிகிறது. தன் வளர்ப்புத்தாயைக் கொன்றவனை பழிவாங்கத் தயாராகிறார் தீனதயாளு.
இது புரியாமல் சத்தியநாதன் மேரியம்மாவின் மரணத்துக்காக தரும் சொற்பப் பணத்தை வாங்கிவந்து முத்துகிருஷ்ணன் தீனதயாளுவிடம் தர, தீனதயாளு மிகுந்த கோபமடைந்து அந்தப் பணத்தை வாங்கி வந்ததற்கு முத்துக்கிருஷ்ணனைக் கடிந்து கொள்கிறார். இருவருக்கும் அபிப்பிராய பேதங்கள் ஏற்படுகிறது.
தன் தாயைக் கொன்ற சத்தியநாதனைப் பழிவாங்க நேரிடையாக தலையிட ஆரம்பிக்கிறார் தீனதயாளு. சத்தியநாதனுக்கு பலவகையிலும் தொல்லைகள் கொடுத்து அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விடுகிறார்.
இப்போது சத்தியநாதன், மருமகன் மோகன், முத்துக்கிருஷ்ணன், மற்றும் தீனதயாளுவின் எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீனதயாளுவைப் பழிவாங்க பலவகையிலும் முயற்சி செய்கிறார்கள்.
கள்ளநோட்டுகளை அச்சடித்து அவற்றை தீனதயாளுவின் அச்சாபீஸில் போட்டு தீனாவை போலீசில் சிக்க வைத்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாது தீனதயாளுவின் மற்றொரு முகமான' தாதா' முகத்தை அவர் மனைவி லஷ்மிக்கு தெரியப்படுத்தி விடுகின்றனர். லஷ்மி தன் கணவர் தீனதயாளு ஒரு கெட்டவர் என்று எண்ணி அதிர்ச்சி அடைந்து உயிரை விட முயற்சிக்கிறாள். தீனதயாளு அவளைக் காப்பாற்றி தான் நியாயமானவன் என்று அவளை சமாதானப்படுத்துகிறார்.
எதிரிகளின் சூழ்ச்சி ஒருபுறம்.
குற்றவாளிக் கூண்டில் ஏற்றத் துடிக்கும் சட்டம் ஒருபுறம்.
மருமகனும், வளர்த்த முத்துக்கிருஷ்ணனும் எதிர்ப்புறம்.
தன்னைக் கெட்டவன் என்று நினைத்து துயருறும் மனைவி மறுபுறம்.
இவ்வளவு பிரச்னைகளையும் சர்வசாதரணமாக எதிர்கொண்டு, கோர்ட்டில் குற்றவாளிக்கூண்டில் தீனதயாளு.
வக்கீல் வைத்துக் கொள்ளாமல் தானே தனக்கு வக்கீலாகி, தன் வாதத் திறமையாலும், சமயோசித புத்தியாலும், மனதைரியத்தாலும் தான் குற்றவாளி அல்ல என்று வாதாடி, தீயவர்களின் சூழ்ச்சிகளை வீடியோப்படக் காட்சிகள் மூலம் நிருபித்து நிரபராதியாய் வெளியில் வருகிறார் தீனதயாளு.
பிரிந்த குடும்பம் ஒன்று சேர முடிவில் சுபம்.
இத்திரைப்படத்தில் 'தீனதயாளு' என்ற அற்புதமான கதாபாத்திரத்தில் நடிகர்திலகமும், அவர் மனைவி லஷ்மியாக மறைந்த குணச்சித்திர நடிகை சுஜாதாவும், முத்துக்கிருஷ்ணனாக தியாகராஜன் அவர்களும்,மகள் ராதாவாக அம்பிகாவும், மருமகனாக மோகனும் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படம் நிச்சயமாக ஒரு 'ஒன் மேன் ஷோ' மூவி என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவிற்கு நடிகர் திலகத்தின் ஆதிக்கம் தான் படம் நெடுகிலும்.
மேக்-அப், கெட்-அப், நடை, உடை, பாவனை அனைத்திலும் மிக மிக வித்தியாசமாக காட்சியளிப்பார் நடிகர்திலகம் அவர்கள்.
தாதாவாக உலா வரும்போது.....
வெளியே அணிந்திருக்கும் மிக மெல்லிய ஜிப்பா என்ன!
உள்ளே பளிச்' சென்று தெரியும் கட்-பனியன் என்ன!
வேட்டியின் மேல் அணிந்திருக்கும் பச்சை நிற பெல்ட் என்ன!
வலது கையில் மின்னும் மோதிரம் என்ன!
கையில் ஜிப்பாவுக்கு மேல் கட்டப் பட்ட வாட்ச் என்ன!
கையில் எப்போதும் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட் என்ன!
அப்பப்பா.... தீனதயாளுவாக அல்லோலகல்லோலப் படுத்துகிறார் நடிக மன்னன்.
அதே சமயம் குடும்பத்தலைவனாகக் காட்சியளிக்கும் போது நீண்ட அங்கவஸ்திரம் அணிந்து கையில் சிகரெட் இல்லாமல் முகத்தை அப்பாவியாக வைத்திருப்பார்.
'காட்பாதர்' தீனதயாளுவாக வரும்போது உதடுகளைக் குவித்து சிகரெட்டை கை விரல்களுக்கிடையில் வைத்துக் கொண்டு, கண்கள் சிவக்க, ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் சேர்த்து ஒரு சொடுக்கு போடுவார் பாருங்கள். தியேட்டர் கூரை ரசிகர்களின் கைத்தட்டலில் பிய்த்துக் கொண்டு போகும்.
இனி இரண்டாம் பாகம்.
நடிக வேந்தனின் நடிப்பு முத்திரைகள்.
படம் ஆரம்பித்த உடனேயே நடிகர் திலகத்தின் ஆர்ப்பரிக்க வைக்கும் நடிப்பு வித்தைகள் விளையாடத் தொடங்கி விடும்.
சிறுவன் முத்துக் கிருஷ்ணன் பள்ளிகூடத்திற்குக் கட்ட பணமில்லை என்று தீனா (N.T) விடம் பொய் சொல்லி அழ, N.T யும் அதை நம்பி அவனுக்குப் பணம் கிடைப்பதற்காக அவனை ரோட்டில் வரும் காரின் முன்பு விழச் சொல்லுவார். சிறுவன் முத்துக் கிருஷ்ணனும் விழுந்து அடிபட்டது போல நடிப்பான். கார் நின்றவுடன் காரின் சொந்தக்காரரிடம் பணம் வாங்கி சிறுவனிடம் N.T. கொடுப்பார். பையனோ .,"வாத்தியாரே! இதே போல செட்-அப்ப அடுத்த வாரம் மைலாப்பூர்ல வச்சுக்கலாமா?..கிடைக்கும் பணத்துல ஆளுக்கு 50...50...என்ன சொல்ற?'.. என்று N.T.க்கு அதிர்ச்சி கொடுப்பான்.
உடன் N.T.,"நமக்கெல்லாம் 20 வயசுக்கு மேல தான் புத்தி வந்துது...இந்தக் காலத்து பசங்க பொறக்கும் போதே பிரசவம் பாக்குற நர்ஸோட மோதிரத்த புடுங்கிகிறானுங்க... என்று இரு கைகளையும் சற்று அகல விரித்தபடியே audience- ஆன நம்மைப் பார்த்து கேலியாக நகைச்சுவை ததும்பச் சொல்ல அரங்கமே அதிரும். ஆரம்பமே அமர்க்களம் தான்.
தன்னை சிறுவயதில் வளர்த்த மேரியம்மாவின் (பண்டரிபாய்) பிறந்த நாளுக்கு அவரை வாழ்த்த வருவார் N.T. பண்டரிபாய் N.T.யிடம்,"தீனா...நீ போற போக்கே சரியில்ல..எப்படியோ போ"... என்று கோபித்துக் கொள்வார். அதற்கு N.T.
"ஆங்...அப்படியெல்லாம் நீ என்ன விட்டுக் கொடுத்திடுவியா?... மேரியம்மா...நீ சொல்லுறபடி வாழுறதா இருந்தா ஒண்ணு முற்றும் துறந்த ரமண மகரிஷியா இருக்கணும். என்னால அப்படியெல்லாம் வாழ முடியாது... என் பொறப்புக்கு நான் இப்படிதான் இருக்க முடியும்... என் பொறப்பப் பத்தித்தான் உனக்குத் தெரியுமே"...
என்ற வித்தியாசமான dialogue delivery-யைக் கொடுப்பார். இது வரை நடிகர் திலகத்திடம் நாம் கேட்டிராத டயலாக் டெலிவிரி அது. (இந்தப் படத்தில் அவர் வசனங்களை உச்சரிக்கும் பாணியே தனி. வசனங்களை சற்றே நீட்டி முழக்கி வார்த்தைகளை சிறிது கடித்தாற் போன்று வல்லின அழுத்தங்களை அதிகம் கலந்து கொடுத்து, அழுத்தம் திருத்தமாக அவர் உச்சரிக்கும் விதமே அலாதியாய் இருக்கும். N.T யின் வேறு எந்தப் படங்களிலும் அவர் கையாளாத புதிய முறை பாணி அது. அந்தப் புதுமை ஒன்றிற்காகவே இந்தப் படம் அவருடைய மற்ற படங்களில் இருந்து வேறுபட்டு நிற்கிறது).
நடிகர் திலகத்திற்கு இந்தப் படம் வெளியாகும் போது கிட்டத்தட்ட 54 வயது. அவருடைய அனுபவம் என்ன! நடிப்பின் முதிர்ச்சி என்ன!..அந்த வயதிலேயும் தன்னை,தன் பாணியை வித்தியாசப் படுத்திக் காட்ட வேண்டும் என்ற நடிப்பின் மேல் உள்ள அவருக்கிருந்த ஈடுபாடும், புதிதாய் வந்த நடிகரைப் போல் அவருக்கிருந்த ஆர்வமும் நம்மை மலைக்க வைக்கிறது. காலங்களை வென்ற காவிய புருஷரல்லவா அவர்!
தன்னை கடத்தல் தொழிலில் ஈடுபட வைக்க முயற்சி செய்யும் கயவர்களை N.T.பந்தாடிவிட்டு,"நீங்க எனக்குச் சொல்லிக் கொடுத்த வித்தைகளை உங்களுக்கே சொல்லிக் கொடுக்கிறேன்டா ..உங்களுக்கு மட்டுமில்லே... இந்த உலகத்துக்கே கத்துக் கொடுக்கிறேன்டா" ... என்று கர்ஜிப்பார். அப்போது சிறுவன் முத்துக்கிருஷ்ணன் அங்கு வருவான். N.T. அவனிடம்,"நீ பள்ளிக்கூடம் போகலையா?..என்பார்.
அதற்கு சிறுவன் N.T.யிடம்,"நீங்கதான் என் பள்ளிக்கூடம்..நீங்க தான் என் வாத்தியார்... நீங்கதான் நான் படிக்க வேண்டிய புத்தகமே"... என்று பதில் சொல்வான். (படத்தில் வரும் இந்த வசனம் நிஜத்தில் எவ்வளவு உண்மை! 'நடிப்பு' என்ற பள்ளிக் கூடத்திற்கு N.T.யைத் தவிர சிறந்த 'வாத்தியார்' எவர் இருக்க முடியும்?. அந்தக்கால நடிகர்கள் முதல் இந்தக் கால நடிகர்கள் ஏன் வருங்கால நடிகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய 'நடிப்புப் புத்தகம்' அல்லவா அவர்!).வியட்நாம் வீடு சுந்தரத்திற்கு ஒரு 'ஷொட்டு'.
டைட்டிலுக்குப் பிறகு வயதான கெட்டப்பில் நடிகர் திலகம். நடு வகிடு எடுக்கப்பட்ட, முன்னால் இரண்டு புறமும் மேலருந்து கீழாக கொக்கி போல் வளைந்த அடர்த்தியான முடி..கையின் விரல்களுக்கிடையே விளையாடிக் கொண்டிருக்கும் சிகரெட்...உள்ளே தெளிவாகத் தெரியும் கட்-பனியன்... மெலிதான முழுக்கை ஜிப்பா...மடித்துக் கட்டப்பட்ட வேட்டி...இடுப்பில் அணிந்துள்ள பட்டையான பச்சை நிற பெல்ட்..ஜிப்பாவின் மேலாக கையில் கட்டப்படுள்ள வாட்ச். தீனதயாளு தாதாவாக அற்புதமான,வித்தியாசமான மேக்-அப்பில் வலம் வருவார் N.T.
ஏழைகளான டீ எஸ்டேட் தொழிலாளிகளுக்கு போனஸ் வழங்க மாட்டார் எஸ்டேட் முதலாளி சண்முக சுந்தரம். தொழிலாளிகள் ஸ்டிரைக் செய்வார்கள். தீன தயாளுவான N.T.யிடம் உதவி கேட்டு வருவார் சண்முக சுந்தரம். N.T.யிடம் அவர்
"திடீர்னு கை கழுவிட்டாங்க... பேச்சு வார்த்தைக்குக் கூட வரமாட்டேன்கிறாங்க ... நீங்க சொன்னாதான் ஸ்டிரைக்க வாபஸ் வாங்குவோம்னு சொல்றாங்க...நாங்க ஒன்னுமே செய்யலீங்க..
என்பார்.
அதற்கு N.T.
"நீங்க ஒன்னுமே செய்யலீயா?... எனக்குத் தெரியும்யா ..பக்கத்து எஸ்டேட்ல டீ இலைய திருடிட்டு வாங்கன்னு உங்க தொழிலாளிக்கு நீங்க பணம் கொடுத்து அனுப்பல?..
ஏழைகளுக்குத் திண்டாட்டம்...பணக்கரானுக்குக் கொண்டாட்டம்..
ஏழைகள என்னைக்குமே கோழைகளா நெனச்சுடாதீங்க..
தொழிலாளி முதுகு வளைஞ்சி வேலை செய்யணும்னா அவன் வயிறு நிமிரணும்",
என்று மடித்துக் கட்டிய வேட்டியுடன் வலது கையை இடுப்பில் ஊன்றி, சற்றே குனிந்தபடி, முதுகை முன்னால் ஒரு வளை வளைத்து பின் உடனே வயிறறுப் பகுதியை ஒரு நிமிர்த்து நிமிர்த்துவார் பாருங்கள்... அடடா..என்ன ஒரு உடல் மொழி அது!....அற்புதத்திலும் அற்புதம் இந்தக் குறிப்பிட்ட காட்சி.
அதே போல தன் வக்கீல் குமாஸ்தா தேங்காய் சீனிவாசனிடம் N.T,பேசுவதாக வரும் சில வசனங்களும், அவருடைய வசன modulation களும் மிக அருமையாக இருக்கும்.
தேங்காய்: யார் யாரை ஏமாத்தினா உங்களுக்கு என்ன? சட்டம்ன்னு ஒண்ணு இருக்கு... கோர்ட்டுக்கு போய்க்கிறாங்க...
N.T: மடையா! இந்த விஷயமெல்லாம் கோர்ட்டுக்கு போனா என்னாகும்?...வாதிக்கு நஷ்டம்...பிரதிவாதிக்குக் கஷ்டம்...வக்கீலுக்கு அதிர்ஷ்டம்...ஜட்ஜுக்கு அவரு இஷ்டம்...
என்று அவர் பாணியில் உச்சரிக்கும் போது தியேட்டரே அல்லோலகல்லோலப்படும்.
தேங்காய்: உங்களைப் பத்தி என்னவெல்லாம் பேசிக்கிறாங்க தெரியுங்களா?
N.T: கடவுளே இருக்காரா இல்லையான்னுதான் பேசிக்கிறான்... என்னப் பத்தி பேசனா என்ன. I don't care. குற்றம் எங்கெல்லாம் நடக்குதோ அங்கெல்லாம் இந்த தீனதயாளு இருப்பான்.. சட்டம் வக்கீலோட பண பலத்துக்கும், வக்கீலோட வாதத் திறமைக்கும் வளைஞ்சி கொடுத்திடும்..அப்ப பாதிக்கப் பட்டவன் என்ன செய்வான்?.. அந்த ஆண்டவன்தான்டா உன்ன கேக்கனும்னு கண்ணீர் வடிப்பான். அப்பிடி கேக்க வந்த ஆண்டவனே நான்தான்னு வச்சுக்கடா... போடா"...
என்று படு அலட்சியமான அசத்தலான 'மூவ்' களைக் கொடுப்பார் N.T.
"இப்படியெல்லாம் செஞ்சா சமுதாயம் உங்களை மதிக்கவா போகுது?" என்று தேங்காய் கேட்டவுடன், சிகரெட்டை ஸ்டைலாக வாயில் வைத்துப்
புகைத்துவிட்டு,லேசாக தலையை வலதும் இடதுமாய் ஆட்டி சிரித்தபடியே நடிகர் திலகம்,
"நானு.. உன் வீட்டுக்கு வரும் போது பாண்டி பஜார் பிளாட்பாரத்துல ஒருத்தன் போட்டோவெல்லாம் போட்டு வித்துகிட்டு இருந்தான்..அவன் சொன்னான்...
காந்தி நாலணா..
நேருஜி நாலணா..
.
காமராஜி நாலணா..ன்னான்...
அப்பேற்பட்ட மகான்களுக்கே நாலணாதாண்டா விலை. உலகம் நம்மள மதிச்சா என்ன..மிதிச்சா என்ன,"...
என்று கலாய்க்கும் போது,
கரகோஷம் காதுகளைக் கிழிக்கும்.(எப்பேர்ப்பட்ட வசனங்கள்! கால சூழ்நிலைகளுக்குத் தக்கபடி, எக்காலங்களுக்கும் ஏற்ற வசனங்கள். மகான்களும், மாபெரும் தலைவர்களும் N.T. அவர்கள் கூறுவது போல் நாலணா ஏன் காலணாவுக்குக் கூட இப்போதெல்லாம் மதிக்கப் படுவதில்லை).
அதே போல் தன்னை வளர்த்த பண்டரிபாயைப் பார்க்க வருவார் N.T. பண்டரிபாயின் கன்னங்களில் தன் இரண்டு கைகளையும் வைத்து கண்கள் மேலிறங்க,கீழிறங்க பாசத்துடனும்,வாஞ்சையுடனும் ,சற்று வருத்தப் பட்ட வேதனையுடனும் அவர் முகத்தைப் பார்ப்பார் பாருங்கள்...ஒரு வினாடியே ஆனாலும் அந்தக் காட்சியில் அவர் காட்டும் முக பாவம் இருக்கிறதே..தனக்காக, தன் வாழ்வைத் தியாகம் செய்த அந்த வளர்ப்புத்தாய் வயது முதிர்ந்த கோலத்தில் இப்படி உருக்குலைந்து காட்சி தருகிறாளே.. என்ற உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவார். உடன் பண்டரிபாயிடம்,
"அய்யோ மேரியம்மா! எனக்காக கஷ்டப்பட்டே நீ பழுத்துப் போயிட்ட.. வாழ்க்கையில அடிபட்டே நான் பழுத்துப் போயிட்டேன், "என்று வேதனையாகக் கூறுவார். உடனே பண்டரிபாய்,"நல்லா இருக்கியாப்பா ? என்று நலன் விசாரித்தவுடன்,
"நல்லா இருக்கேன்... நல்லா இருக்கேன்", என்று இரு முறை அவர் ஸ்டைலில் அசத்துவது அருமை.
"இன்னைக்கு ஒண்ணாந்தேதி இல்லையா?..எல்லாருக்கும் கொடுத்துக்கிட்டே வந்தேன்..உனக்குக் கொடுக்குற பாக்கியத்தைத்தான் நீ எனக்குக் கொடுக்கல..அதனால உன்கிட்ட வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன்", என்று சொன்னவுடன் பண்டரிபாய் "என்னப்பா?",என்று கேட்பார். அதற்கு நம்மவர் சற்று உரத்த குரலில்,
"ஆசீர்வாதந்தான்...ஆசீர்வாதந்தான்,"...என்று ஏற்ற இறக்கமுடன் கூறுவது அவருக்கு மட்டுமே உரித்தான ஒன்று...
மற்றொரு சூப்பரான காட்சி...
நடிகர் திலகத்தின் ஏழை பால்ய நண்பனாக வரும் V.S.ராகவன் தன் மகளின் திருமணத்திற்காக உதவி கேட்டு நடிகர் திலகத்தைச் சந்திக்க அவர் வீட்டுக்கு வருவார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்கள் இருவரும் சந்திப்பது போன்ற காட்சி அது. V.S.ராகவன் வந்தவுடன் வீட்டில் அமர்ந்திருக்கும் N.T. அவர்கள் ,
"ஏய் படுவா...பலராமா...வாடா...வாடா,"
என்று எழுந்து வந்து கட்டித் தழுவி பின்,
"ஒன்னப் பாத்து ரொம்ப நாளாச்சு...நான் ரெண்டாங் கிளாசாவது பள்ளிக்கூடத்திலே படிச்சேன்கிறதுக்கு சாட்சியே இந்த உலகத்தில நீ ஒருத்தன் தான். (நடிகர் திலகம் தான் சிறுவயதில் உண்மையிலேயே இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்ததை நினைவு கூர்வதைப் போல் அமைந்திருக்கும் இந்தக் காட்சி). நல்லா இருக்கியா?.. குடும்பமெல்லாம் நல்லா இருக்கா?"
என்று நலம் விசாரித்து விட்டு V.S.ராகவனின் நரைத்த தலையைப் பிடித்து சற்றே கீழே அழுத்தி,"என்னடா கெழவன் மாதிரி ஆயிட்டே...என்ன சமாச்சாரம்?", என்று நட்பை வெளிப்படுத்துவது படு இயல்பு.
மனைவி சுஜாதாவுடன் கோவிலுக்குப் போகும்போது தன் மனைவியின் மாமனும், அடியாளுமான கபாலி எதிர்பாராமல் அங்கு வந்து விட, சுஜாதா கண்களை மூடிக்கொண்டு சாமி கும்பிடும் அந்த இடைவெளி நேரத்தில், தனக்கு கபாலியிடம் இருக்கும் தொடர்பு தன் மனைவிக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அவனை அவசர அவசரமாக பேசி அனுப்பி வைக்கும் அந்த தருணத்தில், சுஜாதா சட்டென்று அதைக் கவனித்துவிட,அதை சமாளிக்கும் விதமாக தன் உடலை 'ஜகா' வாங்குவது போல ஒரு இழுப்பு இழுத்து, பின் ஒன்றும் தெரியாத அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு நடையைக் கட்டுவது நம்மை பரவசப் படுத்தும் நடிப்புக் காட்சி.
பின் வீட்டில் சுஜாதா தன் கணவர் N.T.க்கு தன் மாமன் கபாலியுடன் என்ன தொடர்பு?..என்று கோபிக்க, அதற்கு N.T. வேண்டுமென்றே சுஜாதாவை வெறுப்பேற்ற மைலாப்பூர் கடவுள் கபாலீஸ்வரரைப் போற்றுவது போல, அருகில் இருக்கும் தேங்காய் சீனிவாசனிடம்,
கபாலி 'உயர்ந்த மனிதன்'
கபாலி 'கை கொடுத்த தெய்வம்'
கபாலி 'தெய்வப் பிறவி'
என்று ஜாலியாக கோஷம் போடுவது அவருக்கே கை வந்த கலை. (இந்தக் காட்சியில் நடிகர் திலகம் அவர்கள் திருவாயாலேயே அவர் நடித்த படங்களின் பெயர்கள் உச்ச்சரிகப்படுவதை நாம் கேட்கும் போது நம் காதுகளில் தேனும் பாலும் கலந்து வந்து பாய்வது போல அவ்வளவு இனிமை).
சமீப காலமாக 'சாந்தி' தியேட்டரில் நம் இதய தெய்வத்தின் காவியங்கள் வெளியீடுகளின் போது நம் ரசிகக் கண்மணிகள் பெரும்பாலும் மேலே நடிகர் திலகம் கூறிய படங்களின் பெயர்களையே அவருக்கு புகழாரமாய் சூட்டி,
'உயர்ந்த மனிதன்' சிவாஜி
'கை கொடுத்த தெய்வம்' சிவாஜி
'தெய்வப் பிறவி' சிவாஜி
என்று விண்ணை எட்டிய கோஷங்களை எழுப்பியது நினைவுக்கு வந்து கண்களைப் பனிக்கச் செய்தது.
(நடிப்பு முத்திரைகள் மூன்றாம் பாகத்தில் தொடரும்).
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...38&oe=5A9E7992
vasudevan .s
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...8a&oe=5A9916D6
( from face book)
vasudevan .s
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...c1&oe=5A9742D4
( from face book)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...5d&oe=5A9DE39F
(nadigarthilagam fan)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...14&oe=5AAF1140
(nadigarthilagam fan)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...ff&oe=5A9D9DE2
(nadigarthilagam fan)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...66&oe=5AA2E7DB
(nadigarthilagam fan)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...3e&oe=5A90DF0D
(nadigarthilagam fan)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...da&oe=5AA4D3FE
(nadigarthilagam fan)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...14&oe=5A9EEEA0
(nadigarthilagam fan)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...2d&oe=5AA48E27
(nadigarthilagam fan)
Sekar Parasuram
* என் மகன்
இன்று இரவு 7:30 க்கு முரசு தொலைக்காட்சியில்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...2c&oe=5AA5549C
suresh kumar
Nadigar thilagam received best actor award from CM of Madras on 1964.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...05&oe=5AAA25AE