Just for my information, did Hamsadhwani/KB make amends DURING the felicitation for KB?
I know they sent a non-committal mail to some of you blaming Krishna Sweets.
Printable View
Just for my information, did Hamsadhwani/KB make amends DURING the felicitation for KB?
I know they sent a non-committal mail to some of you blaming Krishna Sweets.
'ஸ்கூல் மாஸ்டர்' இந்தி. (1959) கிடைத்தற்கரிய நடிகர் திலகத்தின் பொக்கிஷம்.
அன்பு நண்பர்களே!
இதுவரை நம்மில் பெரும்பான்மையோர் பார்த்திராத மிக மிக அரிய ஒரு காட்சியைக் காணப் போகிறீர்கள். நம் அன்புத் தெய்வம் அவர்கள் 1959-இல் கௌரவ நடிகராக நடித்து, திரு.B.R. பந்துலு அவர்கள் தயாரித்து இயக்கி வெளியான 'ஸ்கூல் மாஸ்டர்' இந்தித் திரைப்படத்தின் அபூர்வக் காட்சி தான் அது. இந்தக் காட்சியின் ஒலி-ஒளி வடிவத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதை எண்ணி பூரிப்பும்,பெருமையும் அடைகிறேன். படத்தில் மூன்று நிமிட நேரங்களே வந்தாலும் நம் நடிகர் திலகத்தின் நடிப்பாற்றல் காந்தமாய் நம்மைக் கவருகிறது.
நிராதரவாக தன் சொந்த பந்தங்களால் கைவிடப் பட்ட தன் ஸ்கூல் மாஸ்டரையும், அவர்தம் மனைவியையும் பழைய மாணவனான வாசு(நடிகர் திலகம்) தன் வீட்டிற்கு அழைத்து வரச் சொல்லி, 'தான்' யாரென்று தெரியாமல் தவிக்கும் அந்த ஸ்கூல் மாஸ்டரை சற்று அதட்டலாக மிரட்டி ஒரு பேப்பரிலே 'இந்த வீட்டை விட்டு எங்கும் போக மாட்டேன் என்று எழுதி கொடுக்கச் சொல்ல, ஸ்கூல் மாஸ்டர் பேனா இல்லாமல் தவிக்க, நடிகர் திலகம் "ஒரு பேனா கூட இல்லை... என்ன மாஸ்டர் நீங்கள்"... என்று பொய்க் கோபம் கொண்டு தன்னுடைய பேனாவை எடுத்துத் தர, இறுதியில் சிறு வயதில் தன்னிடம் படித்த மாணவன் வாசு (நடிகர் திலகம்) தான் அது என்று தான் கொடுத்த அந்தப் பேனாவின் மூலம் மாஸ்டர் தெரிந்து கொண்டு மகிழ்ச்சி அடைய, தன்னுடனேயே தன் குருவை வாழ வைத்து நன்றிக்கடன் செலுத்துகிறார் நடிகர்திலகம். தன் குருவின் மனமுவந்த ஆசீர்வாதங்களையும் பெறுகிறார். ஸ்கூல் மாஸ்டரின் குடும்பத்தையும் அவரோடு சேர்த்து வைக்கிறார்.
ரயில்வே ஸ்டேஷனில் மனைவியுடன் தனியாகத் தவிக்கும் தன் மாஸ்டரை அதிகாரி உடையில், தன் கீழ் பணி புரியும் அதிகாரியிடம் சைகைகள் மூலமாகவே வீட்டுக்கு அழைத்து வரச் சொல்லுவதாகட்டும்.... அந்த உடன் பணி புரியும் அதிகாரியிடம் விடை பெறும்போது அடிக்கும் அந்த million dollar சல்யூட் ஆகட்டும்.... மாஸ்டருக்கு பொய்யாக அன்புக் கட்டளைகள் பிறப்பித்து அவரை தவிக்க வைப்பதாகட்டும்.... வட இந்திய பாணியில் உடுத்தியிருக்கும் உடையில் காட்டும் கம்பீரமாகட்டும்.... மாஸ்டர் தன்னை அடையாளம் கண்டுகொண்ட உடன் பாசப் பெருக்கில் ஆனந்தக் கண்ணீர் விட்டு அரவணைத்துக் கொள்வதாகட்டும்.... அசத்தல் அசைவுகளை அந்த மூன்றே நிமிடங்களில் அள்ளிக் கொடுக்கிறார் நடிகர் திலகம். இதோ அந்த மிக மிக மிக அரிதான நடிகர் திலகத்தின் 'ஸ்கூல் மாஸ்டர்'.
http://www.youtube.com/watch?v=q8vxK...yer_detailpage
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்.
'ஸ்கூல் மாஸ்டர் ' பல மொழிகளில் வெற்றி நடை போட்ட ஒரு படம்.1958-இல் கன்னடத்திலும் ,1959-இல் ஹிந்தியிலும்,1964-இல் மலையாளத்திலும் B.R.பந்துலு அவர்களின் இயக்கத்தில் 'பத்மினி பிக்சர்ஸ்' தயாரிப்பில் வெளிவந்து அத்தனை மொழிகளிலும் வெற்றிக்கொடி நாட்டிய படம். அத்தனை மொழிகளிலும் நடிகர் திலகம் கௌரவ நடிகராக அசத்தியிருப்பார். B.R.பந்துலு அவர்கள் ஸ்கூல் மாஸ்டராக இந்தியிலும், கன்னடத்திலும் அருமையாக நடித்திருப்பார். மலையாளத்தில் நடிகர் திலகத்தின் அருமை நண்பரும், மலையாள திரை உலகின் புகழ் பெற்ற நடிகருமான திரு,திக்குரிசி சுகுமாரன் நாயர் அவர்கள் ஸ்கூல் மாஸ்டராக நடித்திருந்தார். ('உலகின் முதலிசை தமிழ் இசையே' என்ற தவப்புதல்வன் படத்தில் இடம் பெறும் அருமையான பாடலில் நடிகர் திலகத்துடன் போட்டி போடும் வட இந்திய பாடகராக வருவாரே ...அவரே தான்.... ' தச்சோளி அம்பு' மலையாளப் படத்திலும் நம்மவரோடு நடித்திருப்பார்.) 1958-இல் 'எங்கள் குடும்பம் பெரிசு' என்ற பெயரில் தமிழிலும் இப்படம் வெளிவந்தது. பின்னர் 1973 -இல் இப்படம் தமிழில் மறுமுறை 'ஸ்கூல் மாஸ்டர்' என்ற பெயரிலேயே எடுக்கப் பட்டது. இதில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி,முத்துராமன்,மற்றும் ஜெயசித்ரா ஆகியோர் நடித்திருந்தனர். நடிகர் திலகம் மற்ற மொழிகளில் செய்த கதாபாத்திரத்தை தமிழில் திரு.முத்துராமன் அவர்கள் செய்திருந்தார்.
'ஸ்கூல் மாஸ்டர்' (1964) மலையாளப் படத்தில் நடிகர் திலகத்தின் கம்பீரமான தோற்றம். உடன் சௌகார் ஜானகி.
http://www.thehindu.com/multimedia/d...LD_257965f.jpg
அன்புடன்
வாசுதேவன்.
மதிப்பிற்குரிய சாரதா மேடம்,
தங்களின் ரசனைக்கு என் மனமுவந்த பாராட்டுதல்கள். நீங்கள் அருமையாய் விளக்கியிருந்த அந்த போஸ் என் ரத்த நாளங்களில் எப்போதும் நர்த்தனமாடிக்கொண்டிருக்கும் அற்புத போஸ். அந்த ஒரு போஸ் வாழ்க்கையில் போதும். வேறு எதுவுமே வேண்டாம்...தங்கள் அன்புக்கும், பாராட்டுதல்களுக்கும் ஆயிரம் நன்றிகள். உங்கள் பதிவு எப்போது வரும் எப்போது வரும் என்று கண்கள் காத்துக் கிடக்கின்றன. இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது எழுதுங்கள்.
நன்றியுடன்,
வாசுதேவன்.
Dear Mr. Kumareshan Prabhu,
It's an immense pleasure to know that our N.T movie is up again at Lavanya, i would strongly suggest that we will go with 50 ft. cutout for our legend. Lets not worry about others and their views on this...
This time again, we should prove wat is our N.T not for others but for Next Generations......
Already I'm planning with my 8 year old son for Sunday Gala Grand Show, he is excited so am I. We will do all the way to create our N.T record again.
JAIHIND
M. Gnanaguruswamy
டியர் வாசுதேவன் சார்,
பாராட்டுக்கு நன்றி !
நடிகர் திலகத்தின் 'பொம்மை' இதழ் நிழற்படம் அற்புதம் !
நடிகர் திலகம் கௌரவத் தோற்றத்தில் கலக்கியுள்ள "ஸ்கூல் மாஸ்டர்" ஹிந்தித் திரைக்காவியத்தின் இதுவரை பார்த்தேயிராத அரிரிரிரிரிரிரிரிரிரிய ஒலி-ஒளிக் காட்சியைப் பதிவிட்டு எல்லோர் இதயத்திலும் நிரந்தரமாகக் குடியேறிவிட்டீர்கள் ! பசுமையான பாராட்டுக்களுடன் கூடிய நெஞ்சார்ந்த நன்றிகள் !
நடிகர் திலகம்-சௌகார் மலையாள "ஸ்கூல் மாஸ்டர்" ஸ்டில் அசத்தல் !
அன்புடன்,
பம்மலார்.
சகோதரி சாரதா,
தங்களின் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி !
வரலாற்று ஆவணங்களும், சாதனைச் செப்பேடுகளும் செவ்வனே தொடரும் !
('நம்பியார்'கள் என்றுமே வென்றதில்லையே, விடுங்கள் !)
அன்புடன்,
பம்மலார்.
Dear kumareshanprabhu,
Thank You so much !
Just ignore the ignorant persons !
Wish You All Success !
டியர் ராகவேந்திரன் சார்,
திரு.மோகன்ராமன் அவர்களின் திருமகள் திரையுலகில் வெற்றி பவனிவர வளமான வாழ்த்துக்கள் !
அன்புடன்,
பம்மலார்.
கலைக்குரிசிலின் கலக்கல் பேட்டி
[கலையுலகின் தலைமகனை பேட்டி காண்கிறார் அவரது இளையமகன்]
வரலாற்று ஆவணம் : பொம்மை : ஜூலை 1984
முதல் பக்கம்
http://i1094.photobucket.com/albums/...EDC4524a-1.jpg
இரண்டாவது பக்கம்
http://i1094.photobucket.com/albums/...EDC4525a-1.jpg
மூன்றாவது பக்கம்
http://i1094.photobucket.com/albums/...EDC4526a-1.jpg
நான்காம் பக்கம்
http://i1094.photobucket.com/albums/...EDC4527a-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
Hi guru
how are you ,
hi harish
we will all meet on sunday
அன்பு குமரேசன் பிரபு சார்,
வசந்த மாளிகை கொண்டாட்டங்களுக்கு முன் கூட்டியே எங்கள் வாழ்த்துக்கள். நாங்களும் கலந்து கொள்ள எண்ணியுள்ளோம். விரைவில் சந்திப்போம். நடிகர் திலகம் புகழ் பாடுவோம்.
வாசுதேவன்.
டியர் ஹரிஷ் சார்,
தங்கள் அழைப்புக்கு நன்றி. கடலூர் மற்றும் நெய்வேலியில் இருந்தும் வசந்த மாளிகை கொண்டாட்டங்களுக்காக பெங்களூர் வர முயற்சி செய்கிறோம்
அன்புடன்,
வாசுதேவன்.
நடிகர்திலகம் அவர்களின் தினமணி பேட்டி படித்து முடிப்பதற்குள், நடிகர்திலகத்தை கலைச்செல்வி பேட்டி காணும் பொம்மை பதிவு. அதனைப் படித்து இன்று பதிலைப் பதிவு செய்யலாம் என்று திரியைப் பார்த்தால், நடிகர்திலகத்தை இளைய திலகம் பேட்டி காணும் பொம்மை பதிவு என அடுத்தடுத்து சுவையான கலக்கல் பதிவுகளை அளித்து, செப்டம்பர் மாதத்தை, சிறப்பு பேட்டிகள் மாதமாக ஆரம்பித்திருக்கும் பம்மலாருக்கு வாழ்த்துக்கள், நன்றிகள் பல.
பம்மலார் அவர்கள் 335 ஆம் பக்கத்தில் இடுகை செய்திருந்த, பொம்மை (1987) அக்டோபர் இதழில் வெளி வந்த 'சிவாஜி படங்களும் இலங்கை ரசிகர்களும்' என்ற தலைப்பில் அருமையான கட்டுரையை எழுதிய திரு.யாழ் சுதாகர் இவர் தான்.
http://upload.wikimedia.org/wikipedi...h_suthahar.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
நாளை 9-9-2011 பொன்விழா நிறைவு ஆண்டு. பாலும் பழமும் கொடுத்து வரவேற்கிறோம். வருக! வருக!
http://padamhosting.com/out.php/i100148_pp5.png
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் சந்திரசேகர்,
நான் சொல்ல நினைத்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள். மூன்று பேட்டிகளிலும் மூன்று வெவ்வேறு கோணங்கள். கால வித்தியாசம் காரணமாக இருக்கலாம். இளைய திலகத்துக்கு அளித்த பேட்டியில், பிரபுவின் நடிப்பைப்பற்றி சொல்லியிருந்தது சிரிப்பை வரவழைத்தது. நடிகர்திலகம் சொன்னதும் உண்மைதான். பேட்டிகண்ட அந்த காலகட்டம் (1984) வரை, பிரபுவுக்கு ஓகோவென்று சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் வரவில்லை, 'சங்கிலி'யைத் தவிர.
ஆனால் அதே நடிகர்திலகம் பிற்காலத்தில் சின்னத்தம்பி போன்ற படங்கள் வந்தபோது பிரபுவைப்பாராட்டியதோடு, டைரக்டர் பி.வாசுவிடம், 'என்னைப்பற்றி பீம்பாய் (ஏ.பீம்சிங்) புரிந்து வச்சிக்கிட்டு படம் எடுத்த மாதிரி, நீயும் இவனை (பிரபுவை) நல்லா புரிஞ்சிக்கிட்டு படம் எடுக்கிறே. அதுக்காக ஒரே மாதிரி ரோல் கொடுத்து அவன் கேரியரை கெடுத்துடாதே' என்று சொல்லியிருக்கிறார். (வாசுவை பீம்சிங்குடன் ஒப்பிட்டது சற்று நெருடல்தான்).
கூடவே அந்த நாளைய 'பொம்மை' இதழ்களைப்பார்க்கும்போது மனம் அப்படியே பின்னோக்கிப் பயணிக்கிறது. பொம்மை மாத இதழ், திரைப்பட விரும்பிகள் பெரும்பாலோரால் பாதுகாத்து வைக்கப் பட்ட தரமான பத்திரிகை என்பதில் ஐயமில்லை.
டியர் பம்மலார்,
இங்கு சந்திரசேகர், சாரதா மற்றும் நண்பர்கள் குறிப்பிட்டது போல், தொடர்ச்சியாக அருமையான பொக்கிஷங்களை அள்ளி வழங்கி அனைவரையும் திக்கு முக்காட வைக்கிறீர்கள்.
டியர் வாசுதேவன் சார்,
பம்மலாரும் தாங்களும் படைக்கும் விருந்தில் உண்பதற்கு மேலும் இடம் வேண்டும்... இரண்டு மனம் வேண்டும் என தலைவர் கேட்பது போல் வேண்டும்...
குறிப்பாக
ஸ்கூல் மாஸ்டர் காணொளி.... சிம்ப்ளி சூப்பர்....
அன்புடன்
இயக்குநர் திரிலோக்சந்தர், வசனகர்த்தா பால முருகன், ஒளிப்பதிவாளர் வின்சென்ட். சுகுமாரி, மற்றும் சித்ராலயா கோபு... இவர்கள் இந்த ஆண்டு டாக்டர் சிவாஜி கணேசன் நினைவுப் பரிசிற்காக தேர்ந்தெடுக்கப் பட்ட கலைஞர்கள். இவர்கள் 01.10.2011 அன்று நடைபெற உள்ள விழாவில் கௌரவிக்கப் பட உள்ளனர். அனைவரும் வந்திருந்து விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறேன். விழா அழைப்பிதழின் நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு -
முகப்பு
http://i872.photobucket.com/albums/a...TBD11INV0A.jpg
பக்கம் 2
http://i872.photobucket.com/albums/a...TBD11INV0B.jpg
பக்கம் 3
http://i872.photobucket.com/albums/a...TBD11INV0C.jpg
பக்கம் 4
http://i872.photobucket.com/albums/a...TBD11INV0D.jpg
அன்புடன்
திரு குமரேசன் சார்,
யார் என்ன சொன்னாலும் பெங்களுரை பொறுத்தவரை கட் அவுட்களுக்கு மாலை அணிவிப்பதில் நடிகர்திலகத்தின் ரசிகர்களை மிஞ்ச ஆள் இல்லை என்பது நமது மாற்று முகாமினரே ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம் ,மற்றவர்களை ஒதுக்கிதள்ளுங்கள்.ரிலீஸ் தேதிக்கு முன் வரும் ஞாயிறு அன்று தினத்தந்தி, தினகரன் மற்றும் தினசுடர் நாளிதழ்களில் கண்டிப்பாக வெளியீட்டு விளம்பரம் வரவேண்டும் என்று விநியோகஸ்தரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் ,அப்போதுதான் ரசிகர்கள் அனைவரும் தயாராவதற்கு வசதியாக இருக்கும். ஞாயிறு மாலை கண்டிப்பாக சந்திப்போம்.
திரு வாசுதேவன் சார்,
தாங்களும் சென்னையில்தான் வசிப்பீர்கள் என்று நினைத்து கொண்டு சொல்லிவிட்டேன், மன்னிக்கவும்.தமிழகத்தின் அனைத்து ஊர்களிலுமிருந்து ரசிகர்கள் வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
பெங்களூரு எங்களூரு என்று சிவாஜி ரசிகர்கள் மார்தட்டிக் கொண்டு போட்டி போட்டுக் கொண்டு நடிகர் திலகத்தின் மேல் தங்கள் அபிமானத்தை எந்தெந்த வழிகளில் நிரூபிக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருப்பது எங்களுக்கெல்லாம் மிகுந்த மன நிறைவைத் தருகிறது. வசந்த மாளிகை பெங்களூருவை வசந்த வாசமாக மாற்றும் என்பது திண்ணம்.
ஹரீஷ் கார்த்திக் குமரேஷ் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் அட்வான்ஸ் மகிழ்வூற்றுக்கள்...
அன்புடன்
நாளை 09.09.2011 அன்று 50வது ஆண்டை நிறைவு செய்யும் டாக்டருக்கு வாழ்த்துக்கள்...ஷீட்டிங் ஸ்பாட்டில் டாக்டர் ஸ்டைலாக நிற்பதைப் பாருங்கள்
http://i872.photobucket.com/albums/a...SHOOTINGfw.jpg
Most memorable movie in my life. watching first day first show with a lot of allaparai and everything at srikrishna north madras with my mother incdently she is also a sivaji follower in those days. from this movie to thrisulam late seventies if I don't see first day i become restless. fortunately I was above average student with more percentages in the school college days so escaped from my father. GREAT DAYS OF MY CHILDHOOD.
i AM likely to miss this year oct first birthday celebration as I am proceeding USA to my children's place. Advance greetings and good wishes for the success of the function.
kindly upload the coverage in the thread.
GOOD LUCK AND VALGA VALARGA NADIGARTHILGAM FAME AND GLORY.
Dear Sri Ramajayam Sir,
We shall be missing you very much, since there is also likely that a movie of NT would see the silver screen during early October in Chennai.
Sir, can you try to contact any body in Voice of America radio station where an interview of NT with V. Gopalakrishnan was broadcast during late sixties?
Also can you get any more original snaps of NT in America during his visit in 62?
Wish you a pleasant journey
Raghavendran
ஆனந்த விகடன் 03.09.1961 தேதியிட்ட இதழில் வெளியான பாலும் பழமும் திரைக்காவியத்தின் விளம்பரம்
http://i872.photobucket.com/albums/a...ELEASEADfw.jpg
அன்புடன்
பாடல் காட்சிகள்
1. ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
http://www.youtube.com/watch?v=6meifsU2vwI
2. நான் பேச நினைப்பதெல்லாம்
http://www.youtube.com/watch?v=lWDg8dheihg
3. பாலும் பழமும் கைகளில் ஏந்தி
http://www.youtube.com/watch?v=usRpe2nB3MY
4. போனால் போகட்டும் போடா
http://www.youtube.com/watch?v=Pkywv_mRuTI
...தொடரும்...
5. காதல் சிறகைக் காற்றினில் விரித்து
http://www.youtube.com/watch?v=KwnLqaCpsA0
6. என்னை யார் என்று எண்ணி எண்ணி
http://www.youtube.com/watch?v=AtrOLDpmaT8
7. நான் பேச நினைப்பதெல்லாம்
http://www.youtube.com/watch?v=XdaSEorBQyA
8. இந்த நாடகம் அந்த மேடையில்
பாடல்கள் - கவியரசர் கண்ணதாசன்
இசை - மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி
குரல்கள் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
வெளியான நாள் - 09.09.1961
ராகவேந்திரன் சார் - பாடல்கள், ஷூட்டிங் ஸ்பாட் மற்றும் ஆனந்த விகடன் விளம்பரம் என "பாலும் பழமும்" கலந்து விருந்தாக்கிய உங்களுக்கு நன்றி.
பெங்களூர் ரசிகர்களின் நீண்ட நாள் ஆவல் நிறைவேறபோகிறது. வாழ்த்துக்கள்.
ஒரு சில சுய விளம்பரப் பிரியர்களின் கொள்கைப் பாடல்கள் மக்களிடையே எந்த தாக்கத்தையும் செய்யாத போது, தன் உரையாடல்களின் உச்சரிப்பின் மூலம் சமுதாயத்தின் மிக உச்சமான இடத்திற்கு மக்கள் உயர வழி வகை செய்தவர் நடிகர் திலகம் என்பதற்கு மிகச் சரியான சான்று இதோ. அமெரிக்காவில் கெல்லாக் நிறுவனத்தின் மிக உயர்ந்த இடத்தில் உள்ள ஓர் இந்தியரின் பேட்டி நாளைய 09.09.2011 தேதியிட்ட ஹிந்து நாளிதழில் வெளிவர உள்ளது.
http://www.thehindu.com/multimedia/d..._4_776324f.jpg
பேராசிரியர் பாலா. பாலச்சந்திரன், கணக்குத் தகவல் மற்றும் ஆளுமை தலைவர் மற்றும் தற்போது கௌரவ பேராசிரியர், கெல்லாக் நிறுவனம்
அந்தப் பேட்டியில் அவர் நடிகர் திலகத்தைப் பற்றிக் கூறியிருக்கும் வாசகம் ஆங்கிலத்தில் இங்கே தரப்படுகிறது.
அவருடைய முழுப் பேட்டியினையும் படிக்க மேலே உள்ள படத்தைக் க்ளிக் செய்யவும்.Quote:
“It was a new beginning. I leveraged my time and sweat for academic accomplishments. I'm a huge fan of veteran actor Sivaji Ganesan. His dialogue on education being a powerful weapon in one of his films left a deep impact on me.”
நன்றி பேராசிரியர் பாலா. பாலச்சந்திரன் மற்றும் ஹிந்து நாளிதழ்
'வசந்த மாளிகை' விழாவை வசந்த விழாவாகக் கொண்டாட ஆயத்தமாயிருக்கும் அனைத்து பெங்களுர் ரசிகர்களுக்கும் நல் வாழ்த்துக்கள்.
'இதுபோல ஒரு மறுவெளியீடு இதுவரை நடந்ததில்லை' என அனைவரும் வியக்க வேண்டும். நீங்கள் செய்வீர்கள். சென்னை விழாவுக்கே வந்த ராட்சத மாலை அணிவித்தவர்களாயிற்றே.
டியர் ராகவேந்தர்,
நாளை 51-வது உதயதினத்தை சந்திக்க இருக்கும் 'டாக்டர் ரவி'யை வரவேற்கும் வண்ணம் இன்றைக்கே அளித்திருக்கும் விகடன் விளம்பரம், அனைத்து பாடல்களின் வீடியோ காட்சிகள், மற்றும் 'போனால் போகட்டும் போடா' பாடலின் ஷூட்டிங் ஸ்டில் என்று அமர்க்களமாகத் துவங்கியுள்ளீர்கள். நன்றிகள் பல.
பெரும்பாலோரால் கண்டுகொள்ளாமல் விடப்படும், எனக்குப்பிடித்த பாடலான 'இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா' பாடலையும் மறக்காமல் இணைத்தமைக்கு மிக்க நன்றி. அத்துடன் படத்துக்காக இயற்றப்பட்டு, இசையோடு பதிவு செய்யப்பட்டும் படத்தில் இடம்பெறாமல் போன 'தென்றல் வரும் சேதி வரும், திருமணம் பேசும் தூது வரும்' பாடலின் ஆடியோவையும் தருவீர்கள் என்று நம்புகிறோம்.
('பாலும் பழமும்' படம் சென்னையில் காஸினோவிலோ அல்லது சித்ராவிலோ வெளியாகியிருந்தால் இன்னொரு வெள்ளிவிழாப்படமாகியிருக்கும். சாந்தியில் வெளியானதால் 133 நாட்களில் 'பார்த்தால் பசிதீரும்' படத்துக்காக தூக்கப்பட்டது. இத்தகவல் 'நம்பியார்' ஆதிராம் கவனத்துக்காக).
டியர் சந்திரசேகரன் சார், ராகவேந்திரன் சார், சகோதரி சாரதா,
தாங்கள் வழங்கிய வளமான பாராட்டுதல்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !
டியர் வாசுதேவன் சார்,
அண்ணல்-அபிநயம் "பாலும் பழமும்" நிழற்படம் சூப்பர் !
திரு.யாழ் சுதாகர் அவர்களின் நிழற்படத்தைப் பதிவிட்டமைக்கு நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்திரன் சார்,
நடிகர் திலகத்தின் ஜெயந்தி விழா அழைப்பிதழ் அருமை ! விழா சிறக்க நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !
பொன்விழாக் காவியமான "பாலும் பழமும்" பற்றிய பதிவுகள் பாலும் பழமும் உண்ட மகிழ்ச்சியைத் தந்தது !
பேராசிரியர் பாலா.பாலசந்திரன் அவர்களுக்கும், "The Hindu" நாளிதழுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்
"பாலும் பழமும்" : பொன்விழா நிறைவு
[9.9.1961 - 9.9.2011] : 51வது ஆரம்பதினம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 19.8.1961
http://i1094.photobucket.com/albums/...EDC4533a-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : திராவிட நாடு : 3.9.1961
http://i1094.photobucket.com/albums/...EDC4531a-1.jpg
'இன்று முதல்' விளம்பரம் : The Hindu : 9.9.1961
http://i1094.photobucket.com/albums/...EDC4534a-1.jpg
'இப்பொழுது நடைபெறுகிறது' விளம்பரம்
http://i1094.photobucket.com/albums/...EDC4535a-1.jpg
தொடரும்.....
அன்புடன்,
பம்மலார்.
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்
"பாலும் பழமும்" : பொன்விழா நிறைவு
[9.9.1961 - 9.9.2011] : 51வது ஆரம்பதினம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள் [தொடர்ச்சி...]
காவிய விளம்பரம் : The Hindu : 14.10.1961
http://i1094.photobucket.com/albums/...EDC4536a-1.jpg
50வது நாள் : The Hindu : 28.10.1961
http://i1094.photobucket.com/albums/...EDC4537a-1.jpg
12வது வாரம் : The Hindu : 25.11.1961
http://i1094.photobucket.com/albums/...EDC4538a-1.jpg
100வது நாள் : The Hindu : 17.12.1961
http://i1094.photobucket.com/albums/...EDC4541a-1.jpg
குறிப்பு:
100 நாள் விழாக் கொண்டாடிய திரையரங்குகள் மொத்தம் பத்து, அவையாவன:
1. சென்னை - சாந்தி (1214 இருக்கைகள்) - 127 நாட்கள்
2. சென்னை - ஸ்ரீகிருஷ்ணா (1198 இருக்கைகள்) - 127 நாட்கள்
3. சென்னை - உமா (762 இருக்கைகள்) - 111 நாட்கள்
4. மதுரை - சென்ட்ரல் (1662 இருக்கைகள்) - 127 நாட்கள்
5. திருச்சி - பிரபாத் (1289 இருக்கைகள்) - 127 நாட்கள்
6. சேலம் - பேலஸ் (1222 இருக்கைகள்) - 127 நாட்கள்
7. கோவை - கர்னாடிக் - 139 நாட்கள்
8. திண்டுக்கல் - சோலைஹால் (1117 இருக்கைகள்) - 105 நாட்கள்
9. பெங்களூர் - ஸ்டேட்ஸ் - 112 நாட்கள்
10. கொழும்பு - கிங்ஸ்லி - 103 நாட்கள்
தொடரும்.....
அன்புடன்,
பம்மலார்.
டியர் பம்மலார்,
அசத்திட்டீங்க... பாலும் பழமும் படத்தை வேறு ஏதேனும் திரையரங்கில் திரையிட்டிருந்தால் வெள்ளி விழாக் கண்டிருக்கும். நாம் இப்படி சாந்தி திரையரங்கில் பல படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே அகற்றப் பட்டு நம்மிடையே வருத்தம் ஏற்படுத்தியிருக்கையில் சில பிரகஸ்பதிகள் சாந்தி திரையரங்கை குறிப்பிட்டு விதண்டா வாதம் கேட்கும் போது மனதுக்கு உள்ளபடியே கஷ்டமாயுள்ளது. இவர்களெல்லாம் திருந்தவே மாட்டார்களா என்கிற எண்ணம் தான் ஏற்படுகிறது.
சகோதரி சாரதா,
தாங்கள் கோரியபடி தென்றல் வரும் பாடல் வரிகள் இதோ
ஓஹோ...ஒஹோஹோ...
ம்ம்.....ம்ம்....ஓஹோ ஒஹோஹோ
தென்றல் வரும் சேதி வரும்
திருமணம் பேசும் தூது வரும்
மஞ்சள் வரும் மாலை வரும்
மாலையும் மேளமும் சேர்ந்து வரும்
சரணம் 1
கண்ணழகும் பெண்ணழகும்
முன்னழகும் பின்னழகும்
காதல் வார்த்தை பழகும் - அதைக்
கண்டிருக்கும் பெண்டிருக்கும்
வண்டிருக்கும் மங்கையர்க்கும்
உள்ளம் தானே மலரும்
எண்ணம் தொடரும்
இன்பம் வளரும்
அங்கு திருநாள் கோலம் திகழும்
--- தென்றல் வரும்
சரணம் 2
பட்டிருக்கும் பொன்னுடலைத்
தொட்டிருக்கும் பொட்டிருக்கும்
பந்தலில் கூட்டம் திரளும் - கோலம்
இட்டிருக்கும் மேடை தன்னில்
வி்ட்டிருக்கும் பெண் கழுத்தில்
மாப்பிள்ளை கைகள் தவழும்
மலர் குவியும், மனம் நிறையும்
அங்கு மங்கல கீதம் திகழும்
--- தென்றல் வரும்
டியர் ராகவேந்திரன் சார்,
As you earlier pointed out, just ignore the ignorant people.
தாங்கள் அளித்த அசத்தல் பாராட்டுக்கு எனது கனிவான நன்றி !
தங்களின் கூற்று முற்றிலும் உண்மை !
தங்கள் பதிவால் திரியில் தென்றல் தவழுகிறது !
அன்புடன்,
பம்மலார்.
பொன்னோணம்
அனைவருக்கும் திருவோணம் திருநாள் நல்வாழ்த்துக்கள் !
http://i1094.photobucket.com/albums/...lar/KKD1-1.jpg
அன்புடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
மதிப்பிற்குரிய சாரதா மேடம்,
இதோ உங்களுக்கு மிகவும் பிடித்தமான தென்றல் வரும் பாடல். (திரு ராகவேந்திரன் சார் சார்பாக)
http://google.saregama.com/music/pag...y=INH100306230
அன்புடன்,
வாசுதேவன்.
பாலும் பழமும் படத்தில் பால் முகத்தவரின் பற்பல 'பாவங்கள்'.
http://i1087.photobucket.com/albums/..._000208840.jpg
http://i1087.photobucket.com/albums/..._001210800.jpg
http://i1087.photobucket.com/albums/..._002488040.jpg
http://i1087.photobucket.com/albums/..._003676960.jpg
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.