1984
BANGALORE - NAGA THEATER- OLIVILKKU
http://i42.tinypic.com/159gz4.jpg
Printable View
1984
BANGALORE - NAGA THEATER- OLIVILKKU
http://i42.tinypic.com/159gz4.jpg
K.B.SUNDRAMBAL NINAIVU NAAL - INDRU
http://i61.tinypic.com/1629qj7.jpg
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
கீர்த்திக்கு கிரீடங்கள்
https://www.youtube.com/watch?v=A2zd...ature=youtu.be
ஒளி விளக்கு என்றும் மங்கா விளக்கு
குடியின் தீமையை உணர்த்துவதற்காக செம்மல் குடிப்பதுபோல நடித்த ஒரே படம்.
இந்தி படத்தில் விதவைக்கு (சவுகார் ஜானகி வேடம்) கதாநாயகன் வாழ்வு கொடுத்து அவரை திருமணம் செய்து கொள்வதுபோல கதை இருந்தாலும் அப்போதைய வாழ்க்கை சூழலுக்கும் ரசிகர்களின் விருப்பத்துக்கும் ஏற்ப கதை மாற்றியமைக்கப்பட்டது.
டைட்டில் சீனில் காட்சிகள் உறைந்து நிற்பது போல காட்டப்பட்ட முதல் படம். அதிலும் ஒரு சுவற்றில் இருந்து தலைவர் குதிக்கும்போது பறப்பது போல உறைந்து நிற்கும் காட்சி அற்புதம்.
டைட்டில் காட்சியில் போலீஸ் துரத்தி வருகையில் சாலையில் எந்தப் பக்கம் செல்வது என்று பதட்டத்துடன் அதே நேரம் ஸ்டைலாக ஆள்காட்டி விரலை வாயில் வைத்து யோசித்து பிறகு ஒரு முடிவு செய்து ஓடும் காட்சி கண்ணிலேயே நிற்கிறது.
மனோகருடன் முதல் சண்டையில் அவர் பணக்கட்டை மேஜை மீது போட்டு எடுத்துக் கொள்ளச் சொல்ல, எடுக்கும் நேரத்தில் மனோகர் கத்தியால் குத்த முயற்சிக்க, அதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் பணக்கட்டை எடுக்கும் தலைவரின் வேகமும் ஸ்டைலான லாவகமும் சூப்பர்.
கிராமத்துக்கு திருட வந்திருக்கும் தலைவரைப் பார்த்து ‘காரணமில்லாமல் வரமாட்டியே’ என்று சோ சொல்ல, நாக்கை வெளியே நீட்டி லேசாக கடித்து குட்டு வெளிப்பட்டு விட்டதே என்பதை வெளிக்காட்டும் வள்ளலின் இயற்கையான நடிப்பு.
சவுகார் வீட்டில் திருடும்போது பீரோவில் ஏதேனும் விலையுயர்ந்த பொருட்கள் இருக்கிறதா என்பதை தேடும் இடத்தில் துணிகளை பரபரவென எடுத்தெறியும் அந்த speed.
சவுகாரை வீட்டுக்கு கூட்டி வரும் காட்சியில் இப்போது இளைஞர்கள் மத்தியில் பேஷனாக இருக்கும் checked shirt -ஐ தலைவர் அப்போதே அணிந்திருப்பார். கழுத்தில் ஸ்டைலாக முடிச்சிடப்பட்டிருக்கும் கர்சீப் கூடுதல் அழகு. இந்தப் படத்தைப் பார்த்து அதேபோல checked shirt அணிந்த ரசிகர்கள் ஏராளம். நண்பர்கள் அந்த still ஐ பதிவிட்டால் நன்று. எதிலும் தலைவர்தான் முன்னோடி.
சவுகாருக்கு வைத்தியம் செய்ய என்னத்தே கண்ணையாவை கூட்டி வந்து, பின்னர் அவருக்கு பணம் கொடுக்கும் போது, மறுக்கும் கண்ணையாவை உங்களுக்கு இவ்வளவு பெருந்தன்மையா? என்பதை வார்த்தைகளே இல்லாமல், கையில் பணத்தை நீட்டியபடியே புன்னகையை குழைத்து நன்றியும் அன்பும் வியப்பும் கலந்த தலைவரின் அந்த பார்வை... ஒன்றே போதுமே.. பல்லாயிரம் சொல் வேண்டுமா?
தீயில் சிக்கிக் கொண்ட குழந்தையை காப்பாற்றிவிட்டு தனக்கு தீக்காயம் ஏற்பட்டதால் எரிச்சல் தாங்காமல், பாராட்ட வரும் கூட்டத்தை தவிர்த்து சாந்தி.. என்று அலறிக் கொண்டே வீட்டுக்கு ஓடும் காட்சியில் கல் மனமும் கரையும்.
சவுகார் ஜானகியை வீட்டுக்கு கூட்டி வந்தவுடன் அவர் வழிபாட்டுக்காக முருகன் சிலையை எடுத்து தலைவர் என்ன சொல்வாரோ என்ற சந்தேகத்துடன் இருக்க, ‘‘எனக்கு நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ? உங்கள் நம்பிக்கையில் குறுக்கிட மாட்டேன்’’ என்று தலைவர் கூறும் கருத்து, யார் எந்த நம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும் அவர்கள் மனதை புண்படுத்தாத, தலைவருக்காகவே செதுக்கப்பட்ட வார்த்தைகளை வடித்தெடுத்த வசனகர்த்தாவின் சாதுர்யம் அபாரம். ‘பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன், பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன்’ என்ற பேரறிஞரின் கருத்தையொட்டி இந்த வசனம் இருக்கும். அதை பேசும் காட்சியில் பேரறிஞர் அண்ணா கண்ட திமுக கொடியின் வண்ணத்தில் இருக்கும் இரு வண்ண கர்சீபை தலைவர் கழுத்தில் கட்டிக் கொள்வதன் மூலம் கட்சியின் கொள்கை அதுதான் என்பதை மறைமுகமாக விளக்குவார். (அப்போது அண்ணா முதல்வராக இருந்த நேரம்)
சவுகார் ஜானகியின் சோகக் கதையை பட்டன் கத்தியை தனக்கே உரிய ஸ்டைலில் வெளியே நீட்டியும் மடக்கியும் நிதானமாக கேட்கும் அழகு யாருக்கு வரும்? பின்னர், தான் திருடன் என்பதால் தன்னைப் பற்றி சவுகார் தவறாக நினைத்து விடக் கூடாது என்பதற்காக ‘‘நான் கெட்டவன்தான். ஆனால், கேவலமானவன் இல்லை’’ என்று கூறும் காட்சியே போதும் அந்த கேரக்டரை உயர்த்திப் பிடிக்க.
அதை உறுதிப்படுத்துவது போல, குடித்து விட்டு வீட்டுக்கு வரும் தலைவர், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்வாரோ என்று சவுகார் ஜானகி பயத்தில் இருக்க, தலைவரும் தடுமாறியபடியே அவர் அருகே வர.. எந்தப் படத்திலும் குடிக்காத தலைவர் இப்படத்தில் குடித்திருக்கிறாரே, காட்சி அமைப்பு எப்படி இருக்குமோ? என்று நமக்கும் நாடித்துடிப்பு அதிகரிக்க பயத்தால் உடல் நடுங்க திரும்பி படுத்திருக்கும் சவுகார் அருகே வந்து..... போர்வையை எடுத்து அவர் மீது போர்த்திவிட்டு திரும்பிச் செல்லும்போது.............. ‘அவன்தான்டா தலைவன்’
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
kalaivendhan sir
very nice write up about our makkal thilagam m.g.r. In olivilakku .
Puratchi Thalaivar MGR's 100th movie Olivilaku was re-released 2 years back in two theatres in Chennai one is Anna as 4 shows and in Mahalakshmi as 3 shows. Both the theatre showed worst print.
In Mahalakshmi theatre I went and watched the first day first show the movie is screen had lot of pink.
http://www.mgrroop.blogspot.in/2012/...ease-news.html
The movie was re-released on 28.9.2012. Sunday matinee and evening show was houseful since the movie was re-released after a very long time.
http://www.mgrroop.blogspot.in/2012/...lease-iii.html
Polimer TV telecasted MGR devotees celebration for Olivilaku.
http://www.mgrroop.blogspot.in/2012/...elease-iv.html
Video Link
http://www.youtube.com/watch?v=PHNgx...layer_embedded
With a bad print and blaring audio this movie reached second week in Mahalakshmi theater having 900+ capacity.
His fans provided overwhelming support for this movie re-release.