-
வசூல் சக்கரவர்த்தி - 5
'பாலும் பழமும்' முதல் வெளியீட்டில் (9.9.1961) சென்னை சாந்தி மற்றும் மதுரை சென்ட்ரல் ஆகிய திரையரங்குகளில் பெற்ற வசூல் விவரம்:
[ஊர் - அரங்கம் - ஓடிய நாட்கள் - மொத்த வசூல்(ரூ.- பை.)]
1. சென்னை - சாந்தி - 127 நாள் - 3,06,167-68
2. மதுரை - சென்ட்ரல் - 127 நாள் - 2,50,528-76
இந்த இரண்டு பிரிண்டுகள் மட்டுமன்றி, 'பாலும் பழமும்' திரைக்காவியத்தின் ஒவ்வொரு பிரிண்டுமே வசூல் பிரளையம் தான்!
அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலர்
-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 128
கே: 'இன்ன நடிகையுடன் தான் நடிப்பேன்' என்று சிவாஜி சொல்வதில்லையே, ஏன்? (கே.எல்.சாந்தி கன்னியப்பன், சிலியாவ், மலேசியா)
ப: அவர் தன் திறமையில் நம்பிக்கை கொண்டவர்.
(ஆதாரம் : பேசும் படம், ஜூலை 1971)
அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலர்
-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 129
கே: தங்கள் படங்களில் அதிகமான பஞ்ச் டயலாக்குகளை வைக்கத் தூண்டும் ஹீரோக்களின் குறிக்கோள், படத்தின் வெற்றியா? இல்லை தற்புகழ்ச்சியா? (வ.லெட்சுமணன், இராஜவல்லிபுரம்)
ப: 'பட்டிக்காடா பட்டணமா' படத்தில் ஒரு காட்சியில், "எங்கிட்டயே சாந்தி தியேட்டர் எங்க இருக்குன்னு காட்றியா?" என்பார் நடிகர் திலகம். இத்தனை வருஷங்கள் போன பிறகும் அந்த பஞ்ச், நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. சூட்சமம் இது தான். எப்போதாவது ஒரு முறை 'நச்'சென்று வைக்கப்பட்டால் அது பஞ்ச். படம் முழுக்க 'பஞ்ச்' தோரணமே தொங்கினால் அது 'நச்சு பிச்சு'.
(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 1-15 நவம்பர் 2006)
அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலர்
-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 136
கே: பத்மினி பிக்சர்ஸ் இதுவரை தயாரித்துள்ள படங்களில் அதிக வசூலைத் தந்த படம் எது? (சே.நரசிம்மன், புதுடெல்லி)
ப: வீரபாண்டிய கட்டபொம்மன்.
(ஆதாரம் : பேசும் படம், ஜனவரி 1968)
அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலர்
-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 138
கே: நடிகர் திலகத்துக்கு அடுக்கடுக்காகப் படங்கள் 'புக்' ஆகியிருப்பது எதைக் காட்டுகிறது? (ஏ.தர்மபூபதி, பொள்ளாச்சி)
ப: நடிப்பாற்றல் மிக்கவருக்குத் தான் நிரந்தரப் புகழ் உண்டு என்பதை.
(ஆதாரம் : பேசும் படம், ஜூன் 1972)
அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலர்
-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 140
கே: "ராஜ ராஜ சோழன்" படம் இரண்டு வாரங்களில் இருபத்தைந்து லட்ச ரூபாய் வசூல் தந்தது குறித்து தங்கள் கருத்து என்ன? (எஸ்.பாலகிருஷ்ணன், திருச்சி - 20)
ப: இப்படிப்பட்ட படங்கள் தயாரிக்க மற்றவர்களுக்கு ஆர்வம் ஏற்பட வேண்டுமானால் இந்தப் படம் வசூலில் வெற்றி பெறத்தானே வேண்டும்!
(ஆதாரம் : பேசும் படம், மே - ஜூன் 1973)
அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலர்
-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 147
கே: சிவாஜியிடம் உங்களுக்குப் பிடித்த குணம்? (பி.சிவாஜி பிரியா, போரூர்)
ப: சமீபத்தில் சிவாஜியைச் சந்திக்க அவரது கட்சியைச் சேர்ந்த சிலர் வந்திருந்தார்கள். படப்பிடிப்பில் இருந்த சிவாஜி, "மாலை வீட்டுக்கு வந்து விடுங்கள். இது என் தொழில் நேரம்" என்று சொல்லி அனுப்பி விட்டார். இப்படித் தொழிலை அவர் தெய்வமாக மதிக்கும் குணம் எனக்குப் பிடித்தது.
(ஆதாரம் : பொம்மை, ஏப்ரல் 1980)
அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலர்
-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 148
கே: வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்களை இப்போது எடுத்தால் ஓடுமா? (பகதூர், சென்னை)
ப: எடுக்க ஆள் இல்லை...நடிக்கவும் ஆள் இல்லையே!
(ஆதாரம் : ராணி, 10.10.2010) [லேட்டஸ்ட் 'ராணி' இதழ்]
அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலர்
-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 152
கே: மார்லன் பிராண்டோ, ரெக்ஸ் ஹாரிசன், அல்பசினோ, ராபர்ட் டிநீரோ - இவர்களில் நம் சிவாஜி கணேசனுடன் போட்டி போடத் தகுதி பெற்ற நடிகர் யார்? (ஜி.கே.எஸ்.மூர்த்தி, கோபிசெட்டிபாளையம்)
ப: பிராண்டோ, ரெக்ஸ் - இந்த இருவர் தான் சிவாஜியின் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவருமே சிவாஜி செய்த விதவிதமான ரோல்களைச் செய்ததில்லை என்பதே உண்மை. அந்த இருவரும் உலகின் மிகச் சிறந்த டைரக்டர்களிடம் பணியாற்றியவர்கள். சிவாஜி சுயம்பு!
(ஆதாரம் : ஆனந்த விகடன், 3.11.2002, "ஹாய் மதன்" கேள்வி-பதில் பகுதி )
அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலர்
-
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 153
கே: இரு மலர்கள், ஊட்டி வரை உறவு இரு படங்களும் ஒரே தினத்தில் வெளியாகி நூறு நாள் ஓடியிருக்கின்றன. ஒரே கதாநாயகனின் இரு படங்கள் ஒரே நாளில் வெளியாகி நூறு நாள் ஓடியதாக திரைப்படவுலக வரலாற்றில் வேறு ஒரு சான்று உங்களால் காண்பிக்க முடியுமா? (தா.அய்யப்பன், திருவனந்தபுரம்)
ப: பூக்காட்டில் மேலும் ஒரு புது மலர்!
(ஆதாரம் : பேசும் படம், மார்ச் 1970)
அன்புடன்,
பம்மலார்.
நன்றி பம்மலர்