மரியாதைக்குரிய நடிகர் திலகம் மற்றும் மக்கள் திலகம் திரியின் moderator திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு மற்றும் நான் பெரிதும் மதிக்கின்ற பேராசிரியர் திரு செல்வகுமார் மற்றும் திரு எஸ்வி அவர்களுக்கும் சேர்த்து
நடப்பவற்றை நீங்கள் பார்த்துகொண்டு இருக்கிறீர்கள் . படிக்கிறீர்கள் என்று நம்புகிறேன் !
திரு முத்தையன் அவர்களுக்கு என் மீது தனிப்பட்ட முறையில் என்ன கோபம் என்று தெரியவில்லை.
அவரிடம் நான் விண்ணப்பம் வைத்தது தவறு என்கிறாரா அல்லது என்ன சொல்லவருகிறார் என்று புரியவில்லை.
தொடர்ந்து 20 முதல் 30 படங்கள் வருவதால் அதற்க்கு முன்னர் பதிவிட்ட ராஜ ராஜ சோழன் மற்றும் இதர விளம்பர படங்கள் ( முதன் முறையாக பதிவிடப்படுபவை) சரியாக பார்த்து ரசிக்க முடியவில்லை, அறிந்துகொள்ள முடியவில்லை.
அதற்க்கு காரணம் ஒரு பக்கத்தில் 10 படங்கள் இருந்தால் பக்கம் load ஆவதற்கு சிறிது நேரம் வேறு பிடிக்கிறது. ஆகையால்தான், அவரிடம் வின்னபித்தேன்....ஆனால் திரு முத்தையன் அவர்கள் மரியாதை குறைவாக ( மரியாதை கூட இரெண்டாம் பட்சம்..காரணம் அவர் என்னை விட வயதில் மூத்தவர் ) தர குறைவாக இப்படி தனி மனித தாக்குதலில் ஈடுபடுவது எந்த விதத்தில் ஞாயம் என்று நீங்கள் தான் சொல்லவேண்டும் !
என் மீது தவறு இருந்த பொழுதெல்லாம் அதனை பேராசிரியர் அவர்களும் திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களும் திரு எஸ்வி அவர்களும் சுட்டிக்காட்டி அதனை நான் மன்னிப்பு கேட்பதோடல்லாமல் திருத்திகொள்ளவும் செய்து இருக்கிறேன், கடந்த காலங்களில். இது உங்கள் மூவருக்குமே தெரியும். அப்படி இருக்கும் பட்சத்தில், நான் இவரிடம் விண்ணப்பித்தது குற்றமா ? எதற்க்காக இதுபோல எழுதுகிறார் என்று எனக்கு இன்னும் விளங்கவில்லை.
இவர் எழுதியது போல நானும் எழுத ஒரு சில நிமிடம் கூட ஆகாது. ஆனால் இவருக்கு நான் பதில் பதிவு போட்டால் மற்ற நண்பர்கள் யாராவது அதனை வேறு விதமாக நினைத்து விட கூடும் என்ற காரணத்தால் உங்களது கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
ரிக்க்ஷகாரன் திரைப்படத்தில் மக்கள் திலகம் அவர்கள் நீதிபதியிடம் உரைப்பதை போல...நடந்ததை நான் சொல்லிட்டேன் ...நடக்காததை திரு முதய்யன் சொல்லிட்டார் ....இனி நடக்கபோவதை நீங்கள் தான் சொல்லணும் !
வருத்தத்துடன்
RKS