Pattum Naane
https://www.youtube.com/watch?featur...&v=txQ5T0CMXSc
Printable View
Dear vasu sir,
congratulations 0n reaching 4000 posts,expecting a special post from you.
Dear ramajeyam sir,
wishing you many many happy returns of the day
dear gopal sir,
we are all still loving you and your posts,please continue
Dear Mr Ragulram
உங்கள் அயராத உழைப்பும் , வாசு சாரின் அருமையான touch up ம் சேர்ந்து - கவரிமான் பதிப்பை மிகவும் அழகாக மெருகு ஏற்றி உள்ளது - பல நல்ல படங்கள் ஏன் சரியான இல்லக்கை அடையவில்லை என்ற நமது பட்டி மண்டபத்தில் இந்த படத்தையும் சேர்க்க வேண்டும் . அருமையான படம் , சிறந்த நடிப்பு , ரசிக்க வைக்கும் பாடல்கள் இருந்தும் என்ஜின் கோளாறு பண்ணிய படம் . சில ஓட்டைகள் என்னை பொறுத்த வரையும் :
1. இரண்டாவது பகுதியில் சோகத்தை அளவுக்கு மீறி தினித்து இருப்பார்கள் - NT யையும் நமள்ளுடன் அழைத்துகொண்டு வெளியில் ஓடிவந்துவிடலாம் என்று நினைக்க தோணும் .
2. புரிந்துகொள்ளவே முடியாத family members - ஒரு சங்கடத்தில் மாட்டிகொண்ட சகோதரனை /மகனை எல்லோரும் வில்லனாக பாவிப்பது மிகவும் எரிச்சலை உண்டாக்க கூடிய விஷயம்
3. அவரவர்கள் படம் முழுவுதும் தங்கள் தங்கள் பங்குக்கு எரிச்சலை உண்டுபண்ணிக்கொண்டே இருப்பார்கள் - NT யை எப்படியாவது இவர்களிடம் இருந்து தப்ப வைக்க மாட்டோமா எண்டு நினைத்துகொண்டிருக்கும் போது படமும் முடிந்துவிடும்.
NT's performance is outstanding and that alone saved this movie from a free fall .
Ravi
:smile2::smokesmile:
கவரி மான் பதிவுக்கு நன்றி ராகுல். இன்னும் பெறு வெற்றி பெற்றிருக்க வேண்டிய படம். NT பாடும் தியாகராஜா கீர்த்தனையில் இளையராஜாவும்,இயேசு தாஸ் அவர்களும் அசந்து நின்றார்களாம். என்னா ஒரு timing sense &perfect நடிப்பு!!!!அசர வைப்பார்.மனைவி பிடிபடும் காட்சியில் அவர் நடிப்பு என்னை அவ்வளவாக இம்ப்ரெஸ் செய்யவில்லை.
ரொம்ப நாள் கழித்து வந்த கார்த்திக் ,இதை பதிவிட்டதாக ஞாபகம். அதை யாராவது மீள் பதிவிட முடியுமா?
கவரிமான்
நடிகர் திலகத்தின் அற்புத நடிப்பில் சில துளிகள்
முதல் காட்சியில் நம் நடிகர் திலகத்தின் அறிமுகம் சாதரணமாக இருக்கும் , காரிலிருந்து இறங்கியதும் , கோட் யை கொஞ்சம் இழுத்து விட்டு , மெதுவாக படி ஏறுவார் , ஒரு calm & composed அதிகாரி எப்படி நடந்து போவரோ அப்படி . ஆபீசை நெருங்கும் பொது அவர் நடை வேகம் எடுக்கும் , கை தானாக கோட் பட்டன் யை போடும் (எதிலும் நேர்த்தி , பல நண்பர்கள் , ஆபீசில் இருந்து வெளியே வந்த உடன் இன் பண்ண சட்டையை வெளியே எடுத்து விடுவார்கள் அது போன்று தான் )
அடுத்த காட்சியில் தேங்காய் ஸ்ரீநிவாசன் (நடிகர் திலகத்தின் பாலிய நண்பன் ) சிவாஜியிடம் பேரம் பேசுவார் , அது NTக்கு பிடிக்க வில்லை என்பதை அவர் பார்வை, பார்வையாளர்களுக்கு தெரிவித்துவிடும் , தேங்காய் ஸ்ரீநிவாசன் தராசை அசைக்கும் பொது , நடிகர் திலகத்தின் பார்வை ஒரு அலட்சியம் கலந்த கிண்டல் கலந்து இருக்கும் , நான் அவ்வளவு துரம் காசுக்கு அலையவில்லை என்பதை சொல்லும் ஒரு பார்வை
அதே தியாகு வீட்டில் , தன் தாய் , தந்தை , மற்றும் அண்ணன் , தம்பியுடன் சிரிச்சு பேசும் காட்சி , அவரின் வேறு முகத்தை காடும் ,
கர்நாடக பாடலில் அவர் வாய் அசைவு கச்சிதம் .
தன் தம்பி கலப்பு கல்யாணம் செய்து கொண்டது தெரிந்ததும் , அவர் தன் அண்ணனிடம் முறைடுவதும் , ன் தன் தந்தை இதற்கு நேர்மறை எண்ணம் வெளிபடும் பொது , சாப்டும் முருங்கைக்காயை அப்படியே வைத்து கொண்டு விழிப்பதும் , நல்ல தமாஷ்
படத்தின் உச்ச காட்சி , தன் மனைவி வேறு ஒரு நபர் உடன் இருபது அறிந்ததும் , அவர் பார்வை போகும் விதம் பார்த்தவர்களுக்கு தான் புரியும் ஒரு எரிமலை வேடிக போகும் என்பதுக்கு ஒரு அறிகுறி , இதற்கு பொருத்தமான பின்னணி இசை , இதயத்தில் இடி விஜின்தது போலே
மிகவும் கோபம் வரும் சமயம் கண் தெரியாது (என்னக்கு நேற்று தான் அது தெரியும் ) அந்த நொடியில் அவர் காட்டும் உணர்ச்சி வேறு யாரும் நினைச்சு கூட paarka முடியாது , ஒரே நொடியில் அவர் மனைவியை அடித்தது முடித்ததும் , அவர் முகத்தில் அக்கிரமத்தை அடித்த ஒரு திருப்தி, அடுத்த நொடி அவர் மகள் அதை கண்டு அலற தன் சுயநினைவுக்கு வருகிறார் தியாகு
ஜெயில் ல் தியாகுவின் மனம் அலைபாய்வதை லைட் மூலம் அழகாக காட்சிபடுத்தி இருப்பார் ஒளிபதிவாளர் பாபு ,
அந்த காட்சியில் அவர் உடம்பை கூனி குறுகி , ஒரு குட்ட்ரவாளியை போல் காட்சியளிப்பார்
இந்த காட்சியில் இரண்டு stalwarts நடிப்பில் அடுத்த கட்டத்திற்கு அந்த காட்சியை கொண்டு போய் சிறப்பாக செய்து இருப்பார்கள் (மேஜர் தன் தம்பியை காப்பாற்ற துடிப்பார், தம்பியோ குடும்ப மானம் தான் முக்கியம் என்று தண்டனை க்கு தயாராக இருப்பார்
குடும்ப மானத்தை கூர் போட தியாகு விரும்பாமல், மேஜர் யை சுத்தி சுத்தி வந்து அந்த பொய் (அது தான் உண்மை ) குடும்பத்தை எப்படி எல்லாம் பாதிக்கும் என்பதை விவரிப்பார்
அந்த தண்டனையை அனுபவிக்கும் பொது தன் நண்பர் தேங்காய் ஸ்ரீனிவாசனை சந்திக்கிறார் , அப்போது அவர் தான் தண்டனை அனுபவிக்கும் காரணத்தை அவர் விவரிக்கும் பாங்கு , எல்லாம் கண்டனத ஒரு ஞானி யை போன்ற பாவனை கொடுப்பார் பாருங்கள் , காண கண் கோடி வேண்டும்
சிறை தண்டனை mudinthu வீட்டுக்கு வந்த உடன் தன் குடும்ப அங்கத்தினர் அனைவரும் மூஞ்சியை தூக்கி வைத்து கொண்டு இருப்பதாய் கண்டு ஒரு neglected , dejected feel யை அழகாக கொண்டு வந்து இருப்பார் , அதே சமயம் , தன் குடும்பத்தினர் உடன் வெகு நாட்களுக்கு பிறகு உணவு அருந்த செல்ல முற்படும் சமயம் அதற்கு தடை விழும் பொது , தாயாரின் அரவணைப்பில் உணவு சாப்பிடும் பொது , ஒரு குழந்தை போலே காட்சி அளிப்பார் , அதே சமயம் உடைந்து போய் அழும் பொது , நம்மளையும் சேர்த்து கரைதுவிடுவார் மனுஷன்
நல்லா வாழ்ந்த மனிதர்கள் , ராஜாக்கள் , கடைசிவரை ராஜா போலே இருப்பார்கள் , மனதளவில் , அதனால் தான் தியாகு அங்கே இருந்து அவமான பட பிடிக்காமல் , தன் நண்பர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் வீட்டுக்கு வந்து விடுகிறார் ,
இந்த மாதிரி பெரிய மனிதர்கள் தவறாக எது நடந்தாலும் போருக்க மாட்டார்கள் , அதுவும் தியாகு ஏற்கனவே இதே போன்ற விஷியத்தில் உணர்ச்சிகளை அடக்க மறந்து தண்டனை அனுபவிதவனே , அந்த மாதிரி குணம் கொண்ட தியாகு , ஒரு பெண் பித்தர் இருக்கும் இடத்தில , எப்படி இருக்க முடியும் , தன் வெறுப்பை நாசுக்காக முதல்லில் தன் நண்பன் தேங்காய் ஸ்ரீநிவாசன்யிடம் தெரிவிக்கிறார் , அதற்க்கு பலன் இல்லாமல் போகவே கொஞ்சம் aggressive டோன் ல் சொல்கிறார்
ஒவ்வொரு முறையும் தன் மகளால் அவமானத்தை மட்டும் சந்திக்கும் அப்பாவாக நடிகர் திலகம் , சாரி தியாகு நம் கண்ணில் கண்ணீரை வரவைக்கிறார் , அதுவும் அவர் வாங்கி கொடுத்த புடவையை ஸ்ரீதேவி தூக்கி எரியும் பொது , அவர் முகம் தொங்கி போய் பாவமாக காட்சியாளிகிறது , தன் மகளை காப்பாற்ற குற்றத்தை தான் செய்ததாக சொல்லி , அதுக்கு ஸ்ரீதேவியை convince செய்யும் பொது , அதற்கு அவர் சொல்லும் காரணம் , நிச்சயம் கரைப்பர் நெஞ்சையும் கரைக்கும்
My thanks for all people who acknowledged the write up
thanks
g94127302 Sir , Raagadevan Sir , Rsubras Sir, KCSHEKAR sir
Gopal sir,
don't use thanks, I am a ardent fan of your writing though I could not understand your high IQ (references about stalwarts in acting )
நண்பர்களிவர்க லென்றும் தங்கள்கருத்து வேற்றுமைகளை தாமேகளைவரென்றும்
அன்பர்கள்சிலருக்கு எடுத்தோதியதுண்டு. நடிகர்திலகபக்த ராகவேந்தர் இத்திரியில்
நடிகர்திலக திரைப்படம் குறையோடுண்டு எனக்கூறுவாரை வாரு வாருவென வாரவைத்தது.
கோபங்கொள் கோபாலரோ நடிகர்திலக திரிபாரதி - "யாமறிந்த நடிகர்களிலே நடிகர்திலகம்போல்
மிகச்சிறந்த நடிகரினை யாங்கணுமே கண்டதில்லை. உண்மையிது வெறும்புகழ்ச்சியிலை" யெனக்கூறி
அவர்தம் நடிப்புக்கலையெடுத்துரைத்தார். ஆயினுமவர் நடிகர்திலக பிற்காலப்படங்களிலே குறைகண்டார், மோதுகிறார் பக்தருடனே.
குறைகண்ட படங்களை விவாதித்தால் கீறுகிறார். நானுமிவரை யிதற்காக கடிந்ததுண்டு.
(தொடரும்)
1.Dear Vasu Sir,when we discuss about acting,the success of the film is irrelevant.
2.If we discuss quality movies on;ly,then the quality is based on performance or success.?
3.The best performance is sometimes wasted by a worst movie,shall we not discuss the performance?When ACTING is discussed every movie can be discussed.
4.If only selected movies to be discussed it can be done in SCHOOL OF ACTING
SORRY for the late reply.
MY DEAR HUBBERS AND NT FANS,
MY sincere thanks to all who sent greetings for my birthday and i am glad to share the good news of my becoming GRANDFATHER of a son born to my daugher here.
my blessings to all younsters and good wishes and namaskarams to elders.
LET US ALWAYS UNITED AND MAKE OUR NT FLAG VERY HIGH FORGET AND FORGIVE SHORTCOMINGS AND OTHER UNPLEASANT SMALL HAPPENINGS
WHICH ARE NOTHING BUT PASSING CLOUDS IN THE MIDWAY,