My wishes for the boy and the proud Grad Pa. He is a scorpian like me.
Printable View
கிரிக்கெட்டின் சிவாஜி என நான் மதிக்கும் சச்சினின் கடைசி மேட்ச் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இருக்கும் நிலையில் ,கடைசி இன்னிங்க்ஸ் ஆகவும் அமைய வாய்ப்புகள் உள்ளது. அவர் நூறோடு ஓய்வு பெற்று ,பல்லாயிரம் ஆண்டுகள் அசைக்க முடியாத புகழோடு வாழ ஆண்டவனை தொழுகிறேன்.
சிவாஜி,சச்சின் இருவருமே genius cum prodigies . இருவருமே மிக இள வயது முதல் தங்கள் சாதனைகளை செய்து அவர்களே அதனை முறியடித்தும் வந்துள்ளனர்.
இருவருமே தங்கள் கடைசி காலங்களில் விமர்சனங்களின் சூட்டினை தாங்கினர்.
சச்சின் அரசியல் பிரவேசம் அவசியமில்லை என்று கருதுகிறேன்.
என் நண்பர்கள் என்னை மூட் அவுட் பண்ண உபயோகிப்பது இரண்டே தந்திரங்கள். ஒன்று சிவாஜியை தேவையில்லாமல் விமரிசிப்பது. அல்லது சச்சினை. இந்த இருவரின் இறுதி நாட்களிலும் அவர்கள் performance சம்மந்த பட்ட விஷயங்களில் நான் ஊர் பழி சுமந்தே வாழ்ந்தேன்.
இவர்கள் இருவருமே பாரத ரத்னா பெரும் தகுதியுள்ள இரண்டே இந்தியர்கள் என உறுதியாக நம்புகிறேன்.
அந்த நாட்களின் சிவாஜி-பீம்சிங் படங்களை நினைவு படுத்தும் உண்மை சம்பவம். நெஞ்சை தொடுகிறது. அன்னாரின் ஆன்மா இறைவனுக்கு அருகில்(எந்த மதத்தின் இறைவனாக இருந்தாலும்) வைக்க பட வேண்டும் என வேண்டுகிறேன்.
இனி செய்தி.
நீ எதை விதைக்கிறாயோ அதுதான் முளைக்கும் என்று சொல்லி கேள்விப் பட்டிருக்கிறேன். நல்லது செய்தால் நல்லது நடக்கும், கெட்டது செய்தால் கெட்டது என்பதுதான் விதி என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால் இது கலிகாலம் நல்லதுக்கு காலமில்லை போல..
சிவகுமார் என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்னால் இரவு அண்ணாசாலை புகாரி ஓட்டலுக்கு முன் வண்டியிலிருந்து கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு சுயநினைவு இழந்து காணப்பட்டிருக்கிறார். பொது மக்கள் இவரை கண்டெடுத்து அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ரெண்டு நாட்கள் சுயநினைவின்றி மருத்துவ சிகிச்சை பலன் அளிக்காமல் யாருமற்ற அநாதையாய் இறந்து போனார். சரி இதிலென்ன கலிகாலப் புலம்பல் இருக்கிறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சிவகுமார் எனும் இவரை பற்றிய பின்புலம் தான் இப்படி புலம்ப வைத்திருக்கிறது. சவக்கிடங்குகளில் கேட்பாரற்று கிடக்கும் உடல்களை கோர்ட்டில் அவர்களுக்கு இறுதி சடங்குகள் செய்து வழியனுப்பி வைக்கும் உன்னத கடமையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தவர் இவர். விபத்துகளில் ஆள் அடையாளம் தெரியாமல் மரணத்தருவாயில் இருப்பவர்களின் பின் புலத்தை தேடி பிடித்து அவர்களின் குடும்பங்களுக்கு தெரிவித்து இறந்தவரின் கடைசிக் கால காரியங்களை அவர்கள் குடும்பத்துடன் செய்தவர். இந்த சேவைக்காக அரசு மருத்துவமனை டாக்டர்களால் பாராட்டுப் பெற்றவர். யாருமற்ற அநாதையாய் தெருவில் வீழ்ந்து, கேட்பாரற்று மரணித்து, அவர் உடலை யாரும் கோராமல் அநாதை பிணமாய் அடக்கமானார். கலிகாலம் என்று புலம்புவதை தவிர வேறென்ன செய்வது. ஒரு வேளை அவர் விதைத்தது தவறாய் முளைத்துவிட்டதோ..?
கலிகாலத்தின் விதி முறைகள்..
நீ நல்லது செய்தால் உனக்கு நல்லதே நடக்கும்!
நீ தீமை செய்தால் உனக்கு தீமையே நிகழும்.!
நீ நல்லது செய்து உனக்கு தீமை நிகழ்ந்தாலோ
அல்லது
தீமை செய்து நல்லது நிகழ்ந்தாலோ,
அது,உன் முற்பிறவி பயன்.
இஸ்லாமிய சகோதரர்களுக்கு ,நடிகர்திலகத்தின் சார்பாக எங்களது மொஹரம் வாழ்த்துக்கள்.
இந்த சேவைக்காக அரசு மருத்துவமனை டாக்டர்களால் பாராட்டுப் பெற்றவர். யாருமற்ற அநாதையாய் தெருவில் வீழ்ந்து, கேட்பாரற்று மரணித்து, அவர் உடலை யாரும் கோராமல் அநாதை பிணமாய் அடக்கமானார். கலிகாலம் என்று புலம்புவதை தவிர வேறென்ன செய்வது. ஒரு வேளை அவர் விதைத்தது தவறாய் முளைத்துவிட்டதோ..?[/QUOTE]
கோபால் சார் - படிக்கவே மனதிற்கு கஷ்டமாக உள்ளது - நீங்கள் இந்த புத்தகத்தை படித்திருப்பீர்கள் - " why bad things are happening to good people" " கஷ்டங்கள் நல்லவர்களைதான் தேடி வருகிறது ஆனால் அவர்களை உலகுக்கு அடையாளம் காட்டி முன் நிலைக்கு எடுத்து கொண்டு செல்வதும் இந்த கஷ்டங்கள் தான் - சிவகுமாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லோரும் ப்ராத்திபோம் .
:cry2::cry: