http://i59.tinypic.com/2wftlz9.jpg
Printable View
வாங்க வாங்க எஸ்வி சார் சுகமா ? .
வாசு சார் எஸ்வி சார்க்கு ஒரு சோடா கொடுக்கவும் :) நான் பீடா கொடுக்கிறேன் :):)
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
என்னது காலையில் மனதில் ஒலிக்கும்பாட்டா.. நித்தம் நித்தம்மாறுகின்றதெத்தனையோ நெஞ்சில் நினைத்ததெல்லாம் நடந்ததுவும் எத்தனையோ.. என்ன படம் என நினைவிலில்லை..
வாசு சார்..குட்டியாய் இரண்டே இரண்டு பாரா மட்டும்..பின் இதுபற்றிப்பேசமாட்டேன்..முதலிலேயே சொல்லிவிடுகிறேன்..வாசக தோஷ ஷந்தவ்யஹ..
உங்களுடைய பதிவைப் படித்த போது உங்கள் மனத்தில் கனன்று கொண்டிருந்த வேதனையின் வெளிப்பாடு எரிமலையாகப் பொங்கி வழிந்திருக்கிறது என்பது என் எண்ணம்..மிகச்சிறந்த கலைஞர் ந.தி. அவரது மிகச் சிறந்தபக்தர்களுள் ஒருவர் தாங்கள்..ஆனால் ஒருவர் எழுதிய பதிவு புண்படுத்தி ந.தி இழைக்குள்ளேயே போக இயலவில்லை என்ற காரணம் எனக்கு சரிவரப் புரியவில்லை.. சொன்னால் கேட்டுக் கொள்கிறேன்.. சொல்லாவிட்டாலும் ஓ.கே.. ஒரு படைப்பாளியின் வேதனை இன்னொரு படைப்பாளிக்குத்தான் புரியும் அது போல ஒரு தக்குணியூண்டு சின்னதாய் எழுதிப்பார்க்கும் சக படைப்பாளி (?!) என்ற வகையில் எனக்குப் புரிகிறது..
வாழ்க்கையில் வெகுவாய் அடி வாங்கி இதுவும் கடந்து போகும் என்ற கீதையின் மன நிலைக்கு வந்து விட்டவன் நான்..நான் நடிகைகளை வர்ணித்து எழுதுவதெல்லாம் ரசனையின் வெளிப்பாடே..உள்ளொன்று வைத்துப் புறமொன்று எழுதுவதில்லை..எழுதுவது ஒரு சுகம்..அதுவும் எப்படிப்பட்டதையும் எந்த வித சூழ் நிலையையும் எந்த வித நபரையும் நமக்கு மேலான ஆண்டவனையும் சுவாரஸ்யம் குறையாமல் வித்தியாசமாக (அடிப்பது ஜல்லியானாலும்( எழுதிப் பார்க்க வேண்டும் என்பதே எனது ஆசை..அதற்காக இடைவிடாமல் முயற்சியும் செய்து கொண்டு வருகிறேன். எழுதத் தான் வரமாட்டேன் என்கிறது.. அதற்காக என் முயற்சியைத்தவற விடுவதில்லை..
ஒரு காலத்தில் சற்றும் எதிர்பாராத வகையில் மனம் புண்பட்ட போது தொலைபேசிய பல நண்பர்களில் ஒருவர் கோபால்.. அவரது சில கோபத்தின் வெளிப்பாடான இடுகைகள் பார்க்கும் போது எனக்கு சின்னவயது சி.க நினைவு தான் வரும்..(இந்த “சின்ன” என்ற அடைமொழிகூட எனக்கு நான் கொடுத்துக் கொண்டதன் காரணம் வலை வாழ் அறிஞர் தம் அடியார்க்கும் அடியேன் என்பதால் தான்).. நான் மாறியிருக்கிறேன்.. அதே போல மனம் புண்பட்ட காலத்தில் சி.கவை இப்படிப் பேசியிருக்க வேண்டாம் என மொழிந்த பல நண்பர்களில் ஒருவர் வெங்க்கி ராம்.. கவிதைக்குக் கவிதையில் என்னுடன் விளையாடிய நண்பர்களில் ஒருவர். அப்போது தான் அவரது இடுகையை ந.தி திரியில் முதன் முதலில் பார்த்தேன்.. (முன்னால் எழுதியிருக்கலாம் நான் பார்த்ததில்லை)
வாசு சார்.. மனதில் பாரமிறக்கிவிட்டீர்கள் அல்லவா..யூ ஹேவ் டு கோ டு ந.தி த்ரெட் அண்ட் யூ ஹாவ் டுகிவ் யுவர் காண்ட்ரிப்யூஷன்ஸ் ஓவர் தேர் ஆல்ஸோ.. தவிர இந்த மதுர கானங்கள் என்பது மன இளைப்பாறல் என்பதற்கான் திரி என்பதை விட பகிர்ந்ததைப் படிப்பதற்கும் பகிர்ந்து எழுதப் பார்ப்பதற்கும் உண்டான திரி.. எனக்குத் தான் படங்கள் வீடியோபோடுவது மறந்து விட்டது..
( இரண்டு பாரா என்று விட்டு நான்காகி விட்டது..!)
மதுர கானங்கள் பாகம் மூன்றை வெற்றிகரமாக தொடங்கவிருக்கும் என் அருமை ராஜேஷ்ஜிக்கு என் மனப்பூர்வமான இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
http://www.pegham.com/images/imported/2009/02/545.jpg
http://www.cottoneauctions.com/uploa...1/1202ph51.jpg
கிருஷ்ணா சார்
ம.ம. ம. கானம் -பாகம் -2 சிறப்பாக நடத்தி சென்ற உங்களுக்கு எனது அன்பான பாராட்டுக்கள் .
எட்டு வாரங்களில் அறுபத்தி எட்டாயிரம் பார்வையாளர்களுடன் இனிதே இன்றே நிறைவு பெறும்
மதுர கானத்திற்கு வாழ்த்துக்கள் .எத்தனை பாடல்கள் .... அலசலகள் - கட்டுரைகள் - எல்லோருக்கும்
அன்பான பாராட்டுக்கள் .
இனிய நண்பர் திரு ராஜேஷ் அவர்கள் பெருமையுடன் துவக்கும் ம.ம.ம .கானம் -3 வெற்றி பெற
வாழ்த்துக்கள் .
திகம்பர சாமியாரும் பல தோற்றங்களும் (பாத்திரங்கள் அல்ல!)
நானும் யாராவது சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். இதுவரை இல்லை என்பதால் எழுதுகிறேன். நெய்வேலியார் சற்றே "கெட்டப்புகள்" என்று சிறிதாக எழுதி இருந்தார்.
இன்றும் கூட பல கலைஞர்கள் இந்த பல்வேறு கெட்டப்புகளில் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
திகம்பர சாமியார் படத்தில் மறைந்த நம்பியார் அவர்கள் பல்வேறு கெட்டப்புகளில் தான் நடித்தார். பாத்திரங்களில் அல்ல.
ஆனால், நடிகர் திலகமோ நவராத்தியில் ஒன்பது வெவ்வேறு குணாதிசயம் கொண்ட வேறு வேறு பாத்திரங்களில் நடித்தார் - அல்ல, வாழ்ந்தார்! ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒவ்வோர் உடல் மொழி, குரல், etc. அவருக்கு செவாலியே விருது வழங்கப்பட்டதற்கு, இந்தப் படத்தில் அவர் காட்டியிருந்த சாதனை தான் மூல காரணம். இத்தனைக்கும், ஹாலிவுட்டின் MGM நிறுவனத்தினர் படம் வந்த புதிதிலேயே, பார்த்து மிரண்டு, இந்த நடிகர் மட்டும் எங்கள் ஊரில் இருந்தால், நாங்கள் தங்கச் சுரங்கத்தையே செய்து விடுவோம் என்றனர்.
எந்த வித தொழில் நுட்ப உத்தியும் இல்லாத காலத்தில் தன்னுடைய கற்பனை வளத்தை மட்டுமே வைத்துக் கொண்டு (கூடுமான வரை, அவரே ஒப்பனையும் செய்து கொண்டு விடுவார்!) ஒன்பது பாத்திரங்களில் நடித்தது, ஒப்பு உயர்வற்ற சாதனை.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
தாரளமாக. சின்னக் கண்ணன் சார்! உங்கள் உரிமையை நான் ரொம்ப மதிக்கக் கடமைப்பட்டவன். ஆனால் நீங்களும் குழந்தை போன்றவர். விரைவில் பி.எம்.அனுப்புகிறேன். அப்போது எல்லாம் விவரமாக புரிந்து கொள்வீர்கள். ஆனால் ஒன்று. எந்தக் காலத்திலும் நியாயம் தவறி நடக்கவே தெரியாது. அதுதான் என் தெய்வம் எனக்கு நேரிலே கூட சொல்லிக் கொடுத்த பாடம்.