http://i58.tinypic.com/10sac0i.jpg
http://i61.tinypic.com/2n0swow.jpg
http://i62.tinypic.com/jg6w6e.jpg
http://i57.tinypic.com/2eowcc0.jpg
Printable View
தினகரன் -16/04/2015
http://i60.tinypic.com/21b2oph.jpg
புதிய வானம் … புதிய பூமி …
அன்பே வா திரைப்படத்தில் ஆரம்பப் பாடலிது! உள்ளத்திலிருந்து ஒரு உற்சாகக் கங்கை பிரவகித்து ஓடி வருகிற வெள்ளம்! எழில்சிந்தும் காஷ்மீரின் இதயமாக விளங்கும் சிம்லாவின் அழகிலே நெஞ்சம் மயங்கலாம்! கதிரவன் காட்சிதரும் விடிகாலைப் பொழுதொன்றில் கதாநாயகன் எம்.ஜி.ஆர். கருப்பு சிவப்பு நிறத்தில் உடையணிந்து கையில் ஒரு சூட்கேஸ் … என அமர்க்களமாய் குளிர்க்காற்றின் கதகதப்பில் ஓடியாடி வருகின்ற காட்சி! இன்றும் எம்.ஜி.ஆர். ரசிகர்களின் மத்தியிலே உறைந்திருக்கிறது! புதிய வானம் புதிய பூமி என்று ஒரு கையை மேலும் மறு கையை கீழும் காட்டும் எம்.ஜி.ஆரின் பாணி இன்றும் பிரபலம்தானே!! முத்திரை பதித்த நடிகராக உலா வந்த எம்.ஜி.ஆர் அவர்கள் தனது இரண்டு கரங்களை பயன்படுத்தி வெற்றி பெற்றதுபோல் இன்னொரு நடிகர் பெற்றிருக்கிறாரா என்பது கேள்விக்குறியே!
கவிஞர் வாலி அவர்களின் வரிகளில் இமயத்தின் உயரமும் இதயத்தின் ஈரமும் பிரதிபலிப்பதைப் பாருங்கள்! மக்கள் திலகம் துள்ளிவரும் பாதையிலே பள்ளிக் குழந்தைகளுடன் கொஞ்சி மகிழும் அழகென்ன? அவர்களின் முகத்தில் எதிர்காலம் உயர்ந்ததாக அமையும் என்கிற நங்கூர நம்பிக்கையைப் பாட்டு வரிகளில் விதைத்திருக்கிறார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசைப் பாதையிட்டு கவிதைக்கு ரத்தினக் கம்பள வரவேற்பளித்திருக்கிறார். தனது குரல்வளத்தால் தமிழ்த்திரையை 50 ஆண்டுகாலமாக தன்வசப்படுத்தி வைத்திருந்த டி.எம்.செளந்திரராஜன் அவர்தம் கம்பீரக் குரலில் முழங்கிடும் பாடல் இன்றும் நம் இதயத்தைத் தொடுகிறது!!
courtesy-thiru கவிஞர் காவிரிமைந்தன்.
ஆசைமுகத்திற்காக கவிஞர் வாலி அன்று வரைந்த பாட்டு! காதல் பாடல் என்று வரும்போது பல்லவி என்ன வைக்கலாம் என்று எண்ணிடத் தோன்றிய கணமெ… அன்பு முகம் நோக்கி காதலன் கேட்கும் கேள்வியாய் முதல் வரி அமைந்திட… இன்பபுரி நோக்கி எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும்… வரியும் இனிக்கிறதே! காதலி கூடுகிறாள்… அவள் தானும் சேர்ந்தே பாடுகிறாள்!!
காதலியிடம் தான் வேண்டுவன எல்லாம் கேட்கும் பாணியைப் பாருங்கள்… அவளும் தருவதைத் தந்து பெறுவதில் குறியாய் இருக்கிறாள்! இன்ப நாமாவளியில் இருவர் இதயங்கள் இணைகின்றன! எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்களின் இசையும் அதற்கேற்ப கவிஞர் வாலியின் வரிகளும் இசைத்தமிழாய் வலம் வருகின்றன! எளிய வார்த்தைகளில் புதிய பாணியில் சொல்லப்பட்ட காதல் பாட்டாக..
கட்டித்தங்கம் வெட்டியெடுத்த மக்கள் திலகத்துடன் அபிநயசரஸ்வதி சரோஜாதேவி திரையில் தோன்றும் இன்பத்தமிழ்த் தேனாறு இசையின்வாயிலாக வழிகிறது! இறைவன் எழுதிவைத்த தேவகுயில்கள் டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா குரல்களில் மற்றுமொரு இன்பநாதம்! தமிழ்த்திரையின் மொத்த ராஜ்ஜியத்தில் இவர்களின் பங்காக… அவற்றுள் ஒன்றே இப்பாடல் என்றாக… இதோ நன்றாக. .. என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா? வேறென்ன வேண்டுமாம்..
courtesy-thiru கவிஞர் காவிரிமைந்தன்.
ஸ்வீட் எடு கொண்டாடு குறுந்தொடர்
கால மாற்றங்கள் மனிதரிடையே எத்தகைய மனமாற்றங்களையும் தோற்றுவிக்கின்றன!!
கல்வியறிவு பல்கிப் பெருகியிருக்கும் தற்போதைய சூழலில் தொழில் நுட்பங்கள் வானமே எல்லை என்று சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கும் வேளையில்
'பக்கத்து வீட்டுக்காரரின் நண்பரின் அண்ணனின் மாமாவின் பேரனுக்கு பிறந்தநாள் ஸ்வீட் எடு கொண்டாடு' என்று மனமுதிர்ச்சியுடன் வாழ்த்துக்கள் பரிமாறப்படும் பரந்த மனப்பான்மைக்கு இன்றைய இளம் தலைமுறையினர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர் எதிர்கால மன்னர்களை நெறிப்படுத்தி வழி நடத்த வேண்டிய மூவேந்தர்களின் ரசிகர்களாகிய நாமோ இன்னும் 'சாட்டை எடு விளாசு' என்ற ரீதியில் கால இயந்திரத்தில் (Time Machine) ஏறி பின்னோக்கிச் சென்று சின்னப்புள்ளத்தனமான சண்டைகளை இன்னும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறோம். நடந்தவை மறப்பதற்கே!! நம்மை மகிழ்வித்தவர்களின் அமர ஆத்மாக்கள் சாந்தியடைய 'புரிதலும் விட்டுக்கொடுத்தலும்' அலை வரிசையில் பயணிப்போமே!! இது இந்த எளியவனின் தனிப்பட்ட கருத்தே!
பகுதி 1 : மழலைப் பட்டாளங்களை வழிநடத்தும் மூவேந்தர்கள்
எதிர்காலமன்னர்களான மழலைகள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வலிமை பெற வேண்டும் என்ற துடிப்பில் மன்னாதி மன்னர் மக்கள் திலகம் சுழற்றுகிறார் வாளை !
https://www.youtube.com/watch?v=fOdj2pzD_Js
பாச உணர்வுகள் நிறைந்து எல்லோரும் கடவுளின் குழந்தைகளே அனாதைகள் என்று யாருமில்லை என்பதை போதிக்கிறார் நடிப்பின் நாளந்தா பல்கலைக் கழகம் நடிகர்திலகம்!
https://www.youtube.com/watch?v=yglkhIIxBf8
நெஞ்சங்களில் அன்பு நிறைந்து வாழ்வில் முன்னேற்ற ஆசைகள் குழந்தைகள் மனதில் பதிய பதியன் போடுகிறார் ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வைக்கும் காதல் மன்னர்!
https://www.youtube.com/watch?v=Q8B4mhk_nAk
Quote:
As a stepping stone I just try this series with a view to imbibe mutual understanding between threads by way of forgetting our differences for upholding the name and fame of our icons!
All are my personal opinions only. I dont know whether I am building castles in the air or my wishes (NT fans greeting MT movie release...MT fans greeting NT movie release....) just vanish like soap bubbles or I am trying to reinvent a white elephant?!
Kindly guide me if I hurt any body by oversight.
with regards, senthil
dear sivaji senthil
very nice concept.pl continue your valuable articles about our mooventhargal
இனிய நண்பர் திரு சிவாஜி செந்தில் சார்
தங்களின் புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள் . மக்கள் திலகம் - நடிகர் திலகம் - காதல் மன்னன்
கருத்தும் கானமும் மிகவும் நன்றாக உள்ளது .தொடருங்கள் நண்பரே .
வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் - மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.
போட்டி பாடல் வரிசையில் மக்கள் திலகத்தின் துடிப்பான பாங்கு:
https://www.youtube.com/watch?v=iuqP9YTKPMc
திரு காவிரி மைந்தன் அவர்களின் இரண்டு மக்கள் திலகத்தின் பாடல்கள் பற்றிய பதிவுகள் அருமை .பதிவிட்ட இனிய நண்பர் திரு குமார் அவர்களுக்கு நன்றி .