Quote:
கடிதம் எழுதுவதென்பது யாருக்கும் கைவந்த கலையாவதற்கு கடினமான எழுத்துப் பயிற்சி மனம்தளராத முயற்சி தேவையே !!
உலகில் பிறந்த எந்தவொரு மனிதருக்கும் கடித அரிச்சுவடி லீவ் லெட்டரும் லவ் லெட்டரும்தானே !!
லீவ் லெட்டர் என்றாலே பஞ்ச் டயலாக் போல இளம் மனதில் பசுமரத்தாணியாகப் பதிந்த வரிகள் :
As I am suffering from fever I may please be granted one day leave .....என்பதே! ஸ்கூலிலிருந்து ஆரம்பித்து ரிடையராகும்வரை மாற்றமில்லாதது இதுவே!
இதை எழுதிஅனுப்பிவிட்டு ஓய்வில் நமது காதல் மன்னர் என்ன செய்கிறாரென்றால் ......பார்ப்போமே!!
Quote:
காதல்மன்னர் இப்படி என்ஜாய் பண்ணுவதைக் கேள்விப்பட்டு அவரது கிளாஸ் நண்பரான எஸ் எஸ் ஆரும் இந்த லீவ் லெட்டரை அப்படியே ஈயடிச்சான் காப்பியாக எழுதி அனுப்பிவிட்டு தானும் காய்ச்சலாகி படுத்துக் கொள்கிறார் ! பொறுக்க முடியாமல் ஜெமினியிடமிருந்து எஸ்ஸாகி விஜயகுமாரி எஸ்எஸ்ஆரைக் கவனிக்க ஓடி வருகிறார் !
ஜெமினியின்காதலி சரோஜாதேவிக்கு இதைப் பார்த்து மனம் கொதித்து சொல்லாமல் கொள்ளாமல் போட்டிக்கு நானும் எஸ்எஸ்ஆரைத் தூங்கவைக்கிறேன் என்று கிளம்பிவிடுகிறார் ! ஜெமினி என்ன செய்வார்?! கல்யாணப் பரிசு சைக்கிளை எடுத்துக்கொண்டு சாவித்திரியின் காருக்குப் பின்னே காதல் துரத்தலுக்குப் போய் விடுகிறார்>>>>அப்புறம் க(ழு)தை எங்கெங்கோ காகிதம் மேயப் போய்விடுகிறது...எனக்கும் யாரோ தண்ணீர் தெளித்து கனவை சிதைத்துக் காப்பாற்றி விடுகிறார்கள் !!