aduththa chapter pOdunga Sivan....
oru naaLaikku 10 thadavai vandhu paarthuNdirukkEn :-D
Printable View
aduththa chapter pOdunga Sivan....
oru naaLaikku 10 thadavai vandhu paarthuNdirukkEn :-D
seekiram ezhudharen zimmi... :D
எழுதுங்க எழுதுங்க !
கரியாட்டியின் கதை
நாள்தோறும் தனது ஏழு குதிரைகள் பூட்டிய தேரின் மூலம் இந்த உலகினை உலா வந்து தன் ஒளியினால் உலகை வாழ வைக்கும் சூரியபகவான் அன்போடு தன் பல்லாயிரம் கரங்களை நீட்ட அதில் ஒன்று மண் தரையில் படுத்து இருக்கும் கரியாட்டியின் முகத்தில் விழுந்தது. திரும்பி படுத்த கரியாட்டியின் கண்கள் அயர்ந்து உறங்கும் வீரசேனனை பார்த்து நின்றது. இவர் இல்லாவிடில் இன்று நான் இல்லை என்று எண்ணிய அவன் மனம் சற்றே இறந்த காலத்தை நோக்கி நடைபோட்டது.
40 ஆண்டுகளுக்கு முன் ஓட்டர்தேசத்தில் கரை இறங்கிய யாசோஸ் கேரியோட்டிஸின் கண்களில் பட்டவள் பத்ரா என்னும் கலிங்க தேசத்து தேவரடியாள். பல தேசங்களை கண்டு பழக்கப்பட்ட மாலுமியான அந்த யவனனுக்கு அவள் ஆட்டமும், பாட்டமும் புதிதாக தெரிய அந்த கணமே அவளிடம் தன் மனத்தை பறி கொடுத்தான்.
அவனது உயரத்தையும் ஆகிருதியையும் கண்டு முதலில் பயந்த பத்ரா நாளடைவில் அவனது வெள்ளை உள்ளத்தில் தன்னை ஐக்கியம் ஆக்கியதின் பலன் ஒரு வருடத்தில் கையில் கிடைத்தது. நீல கண்களும், செம்பட்டை முடியுமாக இருந்த சாவோஸ் கேரியோட்டிஸுக்கு ஆரம்பமே சரியாக அமையவில்லை. சிறு வயதில் தாயை இழந்த அந்த சிறுவனை சரியாக வாழ அந்த சமுதாயம் அநுமதிக்கவில்லை. இதை காண சகிக்காத தகப்பன் அவனை யவனம் செல்லும் கப்பலில் ஏற்றி தன் குடும்பதாரிடம் அனுப்பி வைத்தான். மத்தளத்திற்க்கு இரு பக்கமும் அடி என்பது போல் அங்கும் நிலைமை சரியில்லை. நாள்தோறும் ஆடுகளை மேய்த்து விட்டு பின் ஆட்டுப்பாலினால் செய்யப்பட்ட பாலேடு கட்டிகளும், பிட்டா ரொட்டியும் அவனுக்கு அலுத்து விட்டது. தாய் ஊட்டிய பால் சோறும், நெய் சோறும், கதம்பச்சோறும் அவனுக்கு மறக்கவில்லை. மேலும் தகப்பனை போல் உயரமும், ஆகிருதியும் கொண்ட அவனை அவன் சுற்றத்தார் பார்த்த பார்வையும் அவனுக்கு பிடிக்கவில்லை. வீட்டை விட்டு ஓடிய சாவோஸுக்கு புகலிடம் கொடுத்தது தகப்பனின் தொழிலே. அரபு நாடு வழியாக பாரதம் செல்கிறது என்ற ஒரே காரணத்திற்க்காக அவன் வேலைக்கமர்ந்த அரபுக்கப்பல் அவன் கனவிலும் நினைத்திராத துன்பத்தை அளித்தது. கசையடிகளை தாங்க முடியாத சாவோஸ் ஒரு நாள் கப்பலில் இருந்து கடலில் குதித்து விட்டான். கை சளைத்து மூழ்கும் அவனை காப்பாற்றியது ஒரு பல்லவ நாட்டு கப்பல். பத்து நாள் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த அவனை பேணிக் காத்தது அக்கப்பலின் கலபதி போன்று காட்சியளித்த வீரசேனன். நினைவு திரும்பியதும் இதமாக பேசி அவன் பயத்தை போகிய வீரசெனன், தனக்கும் அவன் வயதில் ஒரு மகன் இருப்பதாக கூறிய பின் அவன் மீது பக்தியே வந்து விட்டது.
வீரசேனனின் ஆலோசனையின் பேரில் பல்லவ கடற்படையில் சேர்ந்த கரியாட்டி ( இனி அவனை மற்றவரைப்போல் இப்பெயரிலேயே அழைப்போம்) விரைவிலேயே தான் வித்தியாசமானவன் என நிறுபித்து விட்டான். கழுகு போன்ற கூரிய பார்வையும் பெருங்காற்றினிலும், அலைகளிலும் குரங்கு போல் பாய்மரங்களில் அவன் தாவி ஏறியது அவன் சிறந்த மாலுமி எக்ஸ் தெரிய வைத்தது. மல்லை வரும் போதெல்லாம் வீரசேனரை தேடி சந்தித்து அவருடன் அளவளாவுவது அவனுக்கு பிடித்தமானதாகவும் இருந்தது. வீரசேனனும் கரியாட்டியை பேச விட்டு அவனிடம் இருந்து உலகத்தை பற்றி நிறைய அறிந்து கொண்டார்.
யவன பெருமன்னனான சிக்கந்தரைப்பற்றி அறிஎது கொள்வதில் அவர் ஆவலாக இருந்தார். 800 ஆண்டுகளுக்கு முன் எப்படி அப்பெருமன்னனால் 10 வருடங்கள் தொடர் படையெடுப்பு நடத்த முடிந்தது, அவனது போர் சாஸ்திரம், போர் சாகசம் பற்றி அடுக்கடுக்காக கேள்வி கேட்ட வண்ணம் இருந்தார். கரியாட்டியும் தனக்கு தெரிந்ததையும் தெரியாததை மற்ற யவனர்களிடம் கேட்டு வந்து சொன்னான்.
தஷினபாரதத்தை காண ஹர்ஷரின் உதவியோடு பல்லவ தேசம் வந்த சீன புத்த யாத்ரீகரை தனது கப்பல் மூலம் கலிங்கதுக்கு அழைத்து சென்ற கரியாட்டி அவரிடம் இருந்து ஆயுதம் இன்றி போரிடும் முறையை கற்று கொண்டான். இதை மேலும் கற்று கொள்ள சீன தேசம் சென்ற கரியாட்டி சீன வாட்போர் முறையையும் கற்று தேர்ந்தான். அவனது திறமைகளை கண்ட வீரசேனர் அவனை தனது அந்தரங்க ஒற்றனாக வைத்துக்கொண்டார். கடலோடியும் யவனனுமான கரியாட்டி மற்றவர்கள் புக முடியாத இடத்தில் எல்லாம் புகுந்து செய்தி திரட்டி வந்தான்.
தனது குடிசையில் தன்னை மறந்து அயர்ந்து உறங்கும் வீரசேனரை கண்ட கரியாட்டி அவர் முகத்தில் தெரிந்த அயர்ச்சியும், கவலையையும் பார்த்து மனம் கலங்கினான். வீரசேனர் உண்மையில் யார் என்பதை வெகு காலம் முன்பே அவன் அறிந்தவனாதலால் பல்லவ மன்னன் மீது கோபம் கொண்டான்.
:P
sivan,
A small jist which includes characters, their intros, and also a brief recap of what has happened so far, would thro more light.
I need not say ur story is simply way above the ordinary.
:clap:
Quote:
Originally Posted by sivank
Quote:
Originally Posted by sivank
As usual, I am enjoying ur description of nature, way above other research or even ur story :clap:Quote:
Originally Posted by sivank
too creative!
யவன தேசத்தின் வடமேற்கு மலைகளுக்கப்பால் கருமண் பூமியில் வசிக்கும் மங்கல்ம் நல்கும் கடவுளின் பெயர் கொண்ட இனிய நண்பருக்கு....
தொண்டை மண்டலத்துக்க் கடற்கரையோர குடியிருப்பில் ஒரு அங்கமான மாபிலம் எனும் பெயருடைய சிற்றூரில் இருந்து பூந்தேறல் எழுதும் மடல்..
கடற்கரை மணலில் காணும் காலடிச்சுவடுகள் மறைந்தபோதிலும்
தங்கள் எழுத்துக்கள் வெளிப்படுத்தும் சில காலச்சுவடுகள் என்றும் மறையாதிருக்க வாழ்த்துகிறேன்.
வள்ர்க உங்கள் எழுத்தாக்கம் !! :victory:
அண்ணாத்தே...
புச்சா எவனோ ஒளறிக்கிறானேன்னு பாக்குறியா ?
அது நாந்தான்... :mrgreen:
:notworthy:Quote:
Originally Posted by Shakthiprabha