வாலி வதைப் படலம்
வீழ்த்திய ராமனைப் பார்த்து வாலி சொல்லும் பிரமாதான பாக்களில் சில
Quote:
'அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல், அதற்கு வேறு ஓர்
குரக்கு இனத்து அரசைக் கொல்ல, மனு நெறி கூறிற்றுஉண்டோ?
இரக்கம் எங்கு உகுத்தாய்? என்பால் எப் பிழை கண்டாய்? அப்பா!
பரக்கழி இது நீ பூண்டால், புகழை யார் பரிக்கற்பாலார்
ஐயா, அரக்கன் (ராவணன்) ஒருவன் தீங்கு செய்தால் அதற்காக ஒரு குரங்கு மன்னனை கொல்லவேண்டும் என்று உன் நீதிநூல் கூறுகிறதா என்ன?
Where did you spill your mercy?
இதுபோல பெரும்பழியை நீ ஏற்றால், 'புகழ்' என்பதை யார் தான் இருக்கிறார்கள்?
Quote:
'ஒலி கடல் உலகம் தன்னில் ஊர் தரு குரங்கின் மாடே,
கலியது காலம் வந்து கலந்ததோ? - கருணை வள்ளால்! -
மெலியவர் பாலதேயோ, ஒழுக்கமும் விழுப்பம் தானும்?
வலியவர் மெலிவு செய்தால், புகழ் அன்றி, வசையும் உண்டோ
அது சரி, ஒழுக்கம் விழுப்பம் (சிறப்பு) என்றால் குறள் போதனைகள் எல்லாம் எளியவர்களுக்குத்தானே ராமா. (உன்னைப்போல) பெரியவர்கள் செய்தால் அந்த ஒழுங்கீனத்துக்கும் மீறலுக்குமாகவே மேலும் புகழ் தானே உங்களை வந்தடையும். மாறாக வசையா கிட்டும்?
Quote:
'கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவ! பெற்ற தாதை
பூட்டிய செல்வம் ஆங்கே தம்பிக்குக் கொடுத்துப் போந்து,
நாட்டு ஒரு கருமம் செய்தாய்; எம்பிக்கு, இவ் அரசை நல்கி,
காட்டு ஒரு கருமம் செய்தாய்; கருமம் தான் இதன்மேல் உண்டோ?
தனியாகவே போரிடும் வல்லமை பெற்றவனே, நீ நாட்டில் உன் தம்பிக்கு நீயே உவந்து அளித்தாய். இங்கு என்னைக் கொன்று என் தம்பிக்கு அரசை அளிக்கிறாய். அங்கே ஒரு நியாயம், இங்கே ஒரு நியாயமா.
Quote:
'அறை கழல் அலங்கல் வீரர் ஆயவர் புரிவது ஆண்மைத்
துறை எனல் ஆயிற்று அன்றே? தொன்மையின் நல் நூற்கு எல்லாம்
இறைவ! நீ, என்னைச் செய்தது ஈது எனில், "இலங்கை வேந்தன்
முறை அல செய்தான்" என்று, முனிதியோ? - முனிவு இலாதாய்
வீரம் என்பது என்ன? வலிமை படைத்தவர்கள் செய்வது தான் வீரம் என்று நீ நினைக்கிறாய் போலும் (that is what one can infer from your act). அப்படியென்றால் இலங்கை வேந்தனின் செய்தது முறையன்று என்று சொல்ல நீ சொல்லக்கூடாது.
Quote:
'தாரம் மற்று ஒருவன் கொள, தன் கையில்
பார வெஞ் சிலை வீரம் பழுதுற,
நேரும் அன்று, மறைந்து, நிராயுதன்
மார்பின் எய்யவோ, வில் இகல் வல்லதே?
உன் மனைவி வேறொருவன் கையில் (அவளைக் கூட தவறவிட்டு, ஆண்மை தவறிவிட்டாய் - hit where it hurts), இப்போது பெரிதாக வில்லைத் தூக்கிக்கொண்டு வந்து ஒரு நிராயுதபாணியைத் தாக்குகிறாய். இதற்குத் தான் உனக்கு வில்வீரன் என்று பெயரா?
It is as human and contemporary as it gets. And as you can see above, when written with the words separated out, it is quite accessible even after centuries.
The emphasis of the story itself is about man, manhood , notions of valour, fraternity and this feels (thus far) like the focal point of everything in the epic. Lovely.