upper image is not otm.
Printable View
ஊருக்கு உழைப்பவன் சிறப்பு மலர்
http://i125.photobucket.com/albums/p...ps34a4a7f9.jpg
One Tamil duet and one English song.
http://i125.photobucket.com/albums/p...psd0b081c6.jpg
Hearty congratulations - & best wishes to starts our evergreen emperor of tamil, indian, world, universe cine field, political world -only one - mgr., proudly, prestigely thread part 9 (nine)... All of the makkal thilagam's devotees participate in time, every time...thank you all viewers...
http://i60.tinypic.com/1zwozli.jpg
MSG FROM MR.V.P.HARIDAS, COIMBATORE
நமது ஈடு இணையில்லா பெருமை மிகு மக்கள்திலகம் அவர்களின் 8 ம் பாகம் இனிதே நிறைவு பெற்று பாகம் 9 அருமையாக நம் பேராசிரியர் செல்வகுமார் துவங்குவது உள்ளபடியே மகிழ்ச்சியான தருணம்... இதுவரையில் அறியாத அற்புதமான மக்கள்திலகம் - பற்றிய தகவல்களை இங்கு பகிர்ந்து கொண்டால் அனைவரும் பயன் பெறுவர் என நம்பும் புரட்சி நடிகர் அபிமானி...
3 முதல்வர்களுடன் மகேந்திரன் அனுபவம்
நாடகத்திலும், சினிமாவிலும் புகழ் பெற்று விளங்கிய ஒய்.ஜி.மகேந்திரன், மூன்று முதல்-அமைச்சர்களுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார்.
தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி, தாயார் திருமதி ஒய்.ஜி.பி. ஆகியோர் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்ததால், பல தலைவர்களுடனும், பிரமுகர்களுடனும் சிறு வயதிலேயே அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.
இதுபற்றி மகேந்திரன் கூறியதாவது:-
"என் தந்தை எங்கள் இல்லத்தையே ஒரு கலைக்கூடமாக வைத்திருந்தார்கள். இசை மேதைகள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, படேகுலாம் அலிகான், சமீபத்தில் காலமான ஷெனாய் மேதை மிஸ்மில்லாகான் போன்றோர் எல்லாம் அங்கு வருகை தந்திருக்கிறார்கள்.
என்னுடைய முதல் பிறந்த நாள் விழாவில் எம்.எஸ்.சுப்புலட்சுமியும், மாபெரும் நடனக் கலைஞர் பாலசரஸ்வதியும் இசை விருந்து அளித்துள்ளனர்.
என் தந்தையுடன் எம்.ஜி.ஆர். மிகவும் நெருக்கமானவர். "நாடோடி மன்னன்'' படமாகிக்கொண்டிருந்த காலத்தில், எங்கள் வீட்டுக்கு வந்து, தனக்குப் பிடித்தமான `அயிட்டங்களை' சமைக்கச் சொல்லி சாப்பிட்டு விட்டுப் போவார்.
நான் சிறுவனாக இருந்தபோது, ஒருமுறை எம்.ஜி.ஆர். என்னை ராயப்பேட்டையில் உள்ள தன் வீட்டுக்கு (தற்போது அ.தி.மு.க. தலைமை நìலையம்) அழைத்துச் சென்றார். அங்கு ஒரு அறையை எனக்குக் காட்டினார். சினிமாவுக்குப் பயன்படுத்தப்படும் 40, 50 கத்திகள் அங்கு இருந்தன.
ஒரு கத்தியை எடுத்து என்னிடம் கொடுத்தார். ஒரு கத்தியை அவர் எடுத்துக்கொண்டு, சினிமாவில் கத்திச்சண்டை போடுவது எப்படி என்பதை கற்றுக் கொடுத்தார். எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.
"கலங்கரை விளக்கம்'' படத்தில், "காற்று வாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்'' என்று எம்.ஜி.ஆர். பாடுவது போல் ஒரு பாட்டு வரும். என்னுடைய "நலந்தானா'' நாடகத்தில் இதுபற்றி காமெடி வசனம் பேசுவேன்.
"நம்ம தமிழ் ஹீரோகிட்டே இதுதான் பிரச்சினை. ஒன்னை வாங்கிக்கிட்டு வரச்சொன்னா, வேறு எதையோ வாங்கிக்கிட்டு வருவாரு'' என்று ஜோக்கடிப்பேன். இது ரொம்ப பாப்புலர்.
ஒரு நாள், எம்.ஜி.ஆர். அந்த நாடகத்தைப் பார்க்க வந்தார். குறிப்பிட்ட இந்த ஜோக்கை அன்று கூறலாமா அல்லது விட்டு விடலாமா என்று எனக்கும், ஏ.ஆர்.எஸ்.சுக்கும் வாக்குவாதம்.
"இந்த ஜோக் வேண்டாம். எம்.ஜி.ஆர். கோபப்படுவார்'' என்று ஏ.ஆர்.எஸ். சொன்னார்.
"அந்த ஜோக் அவசியம் வேண்டும்'' என்று சொல்லிவிட்டு, வழக்கம்போல் நாடகத்தில் பேசினேன். முன் வரிசையில் அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர். விழுந்து விழுந்து சிரித்தார். மேடையில் பேசும்போதும், அதைப் பாராட்டினார். `இந்த ஜோக்கை பேசலாமா, வேண்டாமா என்று கூட உங்களிடையே விவாதம் நடந்திருக்கலாம். மகேந்திரன் தைரியமாகப் பேசியதை பாராட்டுகிறேன். அது நல்ல நகைச்சுவை வசனம்'' என்று கூறினார்.
courtesy malaimalar
Avargal Movie Song Sequence our thalaivar movie displayed from 4.08 to 4.09 minutes
https://www.youtube.com/watch?v=93FlwTQ3cIg
http://i1170.photobucket.com/albums/...ps324153de.jpg
கருணை உள்ளமே .....
கிராமப்புறத்தில் பெண்கள் நீர் நிலைகளில் குளித்துவிட்டு , தங்களிடம் உள்ள "ஒரே" சேலையை பாதி அணிந்துகொண்டு மீதியை " வெயிலில்" நின்று காயவைத்து பின் அணிந்து கொள்கிறார்கள் என்பதை கேள்விப்பட்ட முதல்வர் "மக்கள் திலகம்" MGR அவர்கள் , பண்டிகை நாட்களில் பெண்களுக்கு " இரண்டு சேலைகள் " வழங்க ஆணை பிறப்பித்தார்கள் ....
Courtesy net
http://i1170.photobucket.com/albums/...psf6b52471.jpg
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா ?
தன்னை தானும் அறிந்து கொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா ?
மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும் !
திரு.சத்யராஜ் அவர்கள் இல்லத்தில் திரு. MGCB PRADEEP, உரிமைக்குரல் ஆசிரியர் திரு.BSR மற்றும் பலர்
http://i58.tinypic.com/119ukpy.jpg
திரு.சத்யராஜ் அவர்கள் இல்லத்தில் திரு. MGCB PRADEEP, உரிமைக்குரல் ஆசிரியர் திரு.BSR மற்றும் பலர்
http://i59.tinypic.com/2lu7ud.jpg
திரு.சத்யராஜ் அவர்கள் இல்லத்தில் திரு. MGCB PRADEEP, உரிமைக்குரல் ஆசிரியர் திரு.BSR மற்றும் பலர்
http://i59.tinypic.com/4t0rdh.jpg
திரு.சத்யராஜ் அவர்கள் இல்லத்தில் திரு. MGCB PRADEEP, உரிமைக்குரல் ஆசிரியர் திரு.BSR மற்றும் பலர்
http://i60.tinypic.com/k1excg.jpg
திரு.சத்யராஜ் அவர்கள் இல்லத்தில் திரு. MGCB PRADEEP, உரிமைக்குரல் ஆசிரியர் திரு.BSR மற்றும் பலர்
http://i57.tinypic.com/fvll3p.jpg
நேற்று சத்யம் திரை அரங்கில் - திரு சத்யராஜ் அவர் குடும்பத்தினருடன் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்க்க மீண்டும் வந்தார். அவருடன் உரிமைக்குரல் ஆசிரியர் திரு.BSR மற்றும் பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் : புகைப்படம்
http://i61.tinypic.com/mw9mzc.jpg
நேற்று சத்யம் திரை அரங்கில் - திரு சத்யராஜ் அவர் குடும்பத்தினருடன் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்க்க மீண்டும் வந்தார். அவருடன் உரிமைக்குரல் ஆசிரியர் திரு.BSR மற்றும் பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் உறுப்பினர்கள் : புகைப்படம்
http://i62.tinypic.com/b50jf8.jpg
aayirathil oruvan tomorrow 46 th day only 7 tickets balance in sathyam complex
glad news aayirathil oruvan 8th week continue in baby albert and sathyam complex
http://i1170.photobucket.com/albums/...ps7735ffba.jpg
'உன்னை நம்பி எம்புள்ளைய படிக்க
வச்சேன்... நீ
வேலை தருவியா மாட்டியா?' -
ஏதோ ஒரு குக்கிராமத்திலி
ருந்து கோபத்துடன் ராமாவரம்
தோட்டத்துக்கு வந்து, எந்தக்
கட்டுக்காவலுமில்லாமல்
வீட்டுக்குள் நுழைந்து எம்ஜிஆரிடம்
நேருக்கு நேர் சண்டை பிடிக்கிறார்
ஒரு தந்தை. அதைப்
புன்னகையுடன் கேட்டுக் கொண்ட
எம்ஜிஆர், 'போங்க... முதல்ல
சாப்பிட்டுவிட்டு வாங்க...
பேசலாம்' என்கிறார்.
ஆனால் அந்த
தந்தை கோபம் தணியாமல், 'இல்ல,
நீ எனக்கு பதில் சொல்லு.
எம்புள்ளைக்கு வேலை தருவியா மாட்டியா?'
'போய் சாப்பிட்டுவிட்டு வாங்க.
அடுத்த மாசம் உங்க கையில
அரசாங்க சம்பளம் இருக்கும்' என
மீண்டும் அதே மாறாத
புன்னகையுடன் தலைவர் சொல்ல,
அதன்
பிறகு சமாதானமாகி சாப்பிட்டுவிட்ட
ு வருகிறார் அந்த பெரியவர்.
உடனே, அவரிடம்
விவரங்களை வாங்கிக் கொண்ட
எம்ஜிஆர், கையில் ஐந்நூறு ரூபாய்
கொடுத்து, பத்திரமாக அவரை பஸ்
ஏற்றி அனுப்புமாறு உதவியாளருக்கு கட்டளை இடுகிறார்.
அன்று அவர் தமிழகத்தின்
முதல்வர்... அதுவும்
இரண்டாவது முறையாகப்
பதவியேற்றிருக்கிறார்!
அடுத்த மாதம் மீண்டும்
அதே தந்தை ராமாவரம்
தோட்டத்துக்கு வந்தார். இந்த
முறை அவர் கையில் மாலை,
தேங்காய், பழங்கள்...
கூடவே அரசாங்க சம்பள கவர்.
புன்னகையுடன் அவரை வரவேற்ற
எம்ஜிஆர், இப்போதும்
அவரை சாப்பிட வைக்கிறார். தாம்
கொண்டு வந்ததை எம்ஜிஆர் என்ற
கடவுளின் முன்
வைத்து கும்பிட்டுவிட்டுப்
போகிறார் அந்த தந்தை.
அந்தக் குடும்பம் முதல் முதலாகப்
பெற்ற அரசு சம்பளம் அது.
இன்றும் அந்தப் பெரியவர்
இருக்கிறார். அவர் மனசுக்குள்,
அந்த குடும்பத்துக்குள், அவர்கள்
பூஜையறையில் அதே ஈரத்துடன்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்
எம்ஜிஆர். இப்படி நிறைய
தந்தைகள், குடும்பங்கள்
தமிழ்நாட்டில் உள்ளன!
இன்றைக்கு ஒரு மாநில
முதல்வரை யாராவது இப்படிச்
சந்தித்துவிட முடியுமா...
உரிமையாக
சண்டை போட்டு தனக்கு வேண்டியதைப்
பெற முடியுமா...
அல்லது இதையெல்லாம்
அனுமதிக்கும் பெரிய மனசுதான்
யாருக்காவது வருமா?
மனிதருள் புனிதர் என்ற பெயர்
யாருக்குப்
பொருந்துகிறதோ இல்லையோ....
சமகால சரித்திர நாயகரான
புரட்சித் தலைவர், பொன் மனச்
செம்மல், மக்கள் திலகம்
எம்ஜிஆருக்கு மிகப் பொருந்தும்...
அவர் கருணைப் பார்வையில் நல்ல
கல்வியும் வளமான வாழ்க்கையும்
பெற்றவர்கள்
எண்ணிக்கை கொஞ்சமல்ல.
ஒரு மனிதன்
கடவுளை வேண்டுவது பெரும்பாலும்
இந்த இரண்டிற்காகவும்தான். அந்த
வகையில்
வாழ்ந்தபோதே பலருக்கும்
கடவுளாகத் திகழ்ந்தவர்
பொன்மனச் செம்மல்.
தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள்
மத்தியில்
தமிழனுக்கு தனி நாடு அமையவே பாடுபட்ட
புரட்சியாளர் இந்த பெருமகன்!
அவரைப் பற்றி ஏதாவது சொல்லத்
தொடங்கினால்... அல்லது எழுத
ஆரம்பித்தால் கண்களை நீர்
மறைக்கிறது. இந்த வாழ்நாளில்
இன்னொரு முறை இப்படியொரு மனிதரின்
அருள் பார்வை கிடைக்குமா?
மக்களை மட்டுமே நினைத்த
ஒரு தலைவர் கிடைப்பாரா என்ற
ஏக்கத்தின் விளைவு அது!
'என் மனதை நானறிவேன்.. என்
உறவை நான் மறவேன்... எதுவான
போதிலும் ஆகட்டுமே' என
நெஞ்சில் உரமும் நேர்மைத்
துணிவும் கொண்டு தமிழருக்காக
பாடுபட்ட தலைவர் அவர்.
பெருந்தலைவர் காமராஜருக்குப்
பின் கல்வியின்
அருமையை உணர்ந்த
ஒரே தலைவர் எம்ஜிஆர்தான்.
இன்றைய முதல்வர்கள் தனியார்
கல்வி கொள்ளையர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகி
றார்கள். ஆனால் எம்ஜிஆர்
காலத்தில் மட்டும் திறக்கப்பட்ட
அரசுப் பள்ளிகள் 47000!
புதிய அரசுக் கல்லூரிகள், அரசுப்
பல்கலைக்கழகங்கள்,
தமிழுக்கென்று தனிப் பல்கலைக்
கழகம்,
பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம்
என அவர் செய்த கல்விப்
புரட்சிக்கு நிகரில்லை.
எம்ஜிஆர் என்றவுடன், தமிழகத்தில்
உள்ள படித்தவர், பாமரர், விமர்சகர்,
பத்திரிகையாளர் என
அத்தனை பேருமே ஏதோ ஒரு நெகிழ்ச்சியான
சம்பவத்தை- நினைவைப்
பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.
எம்ஜிஆர் எனும் பெருமழை தந்த
ஈரம் இன்னும் கூட வற்றாமல்
இருப்பதற்கு சான்று அது!
எம்ஜிஆர் என்ற
அரசியல்வாதியை விமர்சித்தவர்கள்
கூட, எம்ஜிஆர் என்ற ஈகைப்
பெருந்தகையாளரை மனமார
வாழ்த்திக் கொண்டேதான்
இருக்கிறார்கள்.
இன்று அவரை விமர்சிக்கும்
துணிச்சல் எந்த அரசியல்வாதிக்கும்
கிடையாது. காரணம், மக்கள்
தங்கள் மனங்களில் அவருக்குக்
கொடுத்திருக்கும் சிம்மாசனம்
அத்தகையது!
வாழ்ந்த போதும்,
வாழ்ந்து மறைந்து பின்னும்
வாழ்வு தரும் வள்ளல் என்றால்,
அவர் எம்ஜிஆர் மட்டுமே.
வள்ளல்களுக்கு வயதில்லை...
என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்!
http://i1170.photobucket.com/albums/...ps3011105b.jpg
நன்றி-Balachandar Nagarajan
The Knight of Tamil Nadu !
http://i1170.photobucket.com/albums/...ps4d4c8cfb.jpg
courtesy facebook
இன்று பாவேந்தர் பாரதி தாசனின் பிறந்த தினம் . அவருடைய பாடல்கள் பல மக்கள் திலகத்தின் படங்களில் இடம் பெற்றுள்ளன . அவற்றில் முக்கியமாக நான் ஏன் பிறந்தேன் படத்தில் இடம் பெற்ற சித்திர சோலைகளே பாடல்
மிகவும் அருமையாக இருக்கும் . உழைக்கும் வர்க்கத்தை பற்றி சிறப்பாக எழுதிய பாடல் . இந்த பாடல் காட்சியில்
மக்கள் திலகத்தின் அபார நடிப்பு காண்போரை மனம் கவரும் அளவிற்கு இருந்தது .
http://youtu.be/S2RLsp1D58Q