மெர்ரிலாண்ட் ஸ்டூடியோ
பல அருமையான படங்களை தயாரித்த திரு பி.சுப்பிரமணியம் அவர்களின் ஸ்டூடியோ
http://i.ytimg.com/vi/xobJJfhKJzU/maxresdefault.jpg
Printable View
மெர்ரிலாண்ட் ஸ்டூடியோ
பல அருமையான படங்களை தயாரித்த திரு பி.சுப்பிரமணியம் அவர்களின் ஸ்டூடியோ
http://i.ytimg.com/vi/xobJJfhKJzU/maxresdefault.jpg
அன்புள்ள கண்ணா,
உங்கள் எழுத்து நடையில் ஒரு வசீகரம் இருக்கிறது என்பதை ஏற்கனவே சொல்லிருக்கிறேன். அது மீண்டும் கீற்றுக் கொட்டகையில் வெளிப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இளமையின் துள்ளல் கட்டங்களில் எதிர்பாலினத்தின் மீது ஏற்படும் ஈர்ப்பும் அதை சார்ந்த அனுபவங்களை பதிவு செய்யும்போதும் சுவை கூடுகிறது. இது போன்ற இனிமையான அனுபவங்கள் மட்டும் எத்தனை வருடம் ஆனாலும் எப்போது அசை போட்டாலும் மனதுக்குள் மயிலிறகால் வருடுவது போல் மழைத்துளி விழுவது போல் அத்துனை இனிமையாக இருக்கும் என்பது உங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தும். இப்படிப்பட்ட அனுபவப் பதிவுகளில் எப்போதும் முடிவு சோகமாக(?) [அதன் பிறகு சந்திக்கவேயில்லை என்பது போன்ற] இருப்பதனாலேயே இது மனதிற்கு நெருக்கமாகி விடுகிறது. இது "போன்ற" பதிவுகளை மேலும் எதிர்பார்க்கிறேன்.
இந்த இனிமையைப் பற்றி பேசும்போது வேறொரு சோகத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். அதுதான் நமது ஸ்ரீதேவி டாக்கிஸ் இன்று அபார்ட்மெண்டாக மாறி நிற்கும் நிலை. உண்மையிலே மிக மிக சோகமான விஷயம். நீங்கள் நடிகர் திலகம் திரியை ரெகுலராக படித்து வருவீர்கள் என நினைக்கிறேன். நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தைப் பற்றிய தொடர் ஒன்று எழுதி வருகிறேன். அதில் இப்போது தர்மம் எங்கே படம் ஸ்ரீதேவியில் வெளியான் போது நடந்தவற்றை எழுதி வருகிறேன், [நீங்களும் அப்போது அங்கேதான் இருந்திருப்பீர்கள். 1971 ஜூலை சவாலே சமாளி டயத்தில் இருந்தேன் என்று சொளியிருந்தீர்கள். ஆகவே 1972 ஜூலை தர்மம் எங்கே படத்திற்கும் அங்கே இருந்திருக்க வேண்டும்] அதை பற்றி எழுதும்போதெல்லாம் எனக்கு தியேட்டர் நினைவு வந்து மனம் மிக கனமாகி விடுகிறது.. அது போலவே ராஜேஷ் போட்ட நியூசினிமா தியேட்டரின் முகப்பு போட்டோ. அதுவும் எத்தனை எத்தனை இனிய அனுபவங்களை நமக்கு தந்திருக்கிறது? அது போன்றே சிந்தாமணியும். ஒரே ஆறுதல் [இதை ஆறுதல் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை] நியூசினிமாவும் சிந்தாமணியும் இன்று செயல்படவில்லையே தவிர கட்டிடங்கள் அப்படியே இருக்கிறது. கொஞ்சம் யோசித்தோமென்றால் இவை எல்லாம் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு இரண்டாம் வீடுகளாகவே விளங்கியிருக்கின்றன.[have been second homes to us].
இனியவற்றையும் அல்லாதவற்றையும் ஒரு சேர அனுபவிக்க தந்தற்கு நன்றி!
அன்புடன்
கீற்று கொட்டாய் மின்னுகிறது. எஸ்.வீ போடும் பதிவுகள் (net ) சுவையாகவே உள்ளது. high light முரளியை ஓடி வர செய்த மதுரை பதிவு. சுவையான பதிவு சின்ன கண்ணன்.(முரளிக்கு எப்பவுமே மதுரை மதுரை மதுரைதான்.)
பொதுவாகவே இந்த தலைப்பு எல்லோர் நினைவலைகள்,சிறு வயது ஏக்கங்கள்,மகிழ்வுகள்,nastolgia ,அழகுணர்ச்சி,அனுபவங்கள்,இழப்புகள் எல்லாவற்றையும் தூண்டி விட சாத்தியகூறு கொண்டது. நிறைய பங்களிக்க போகிறேன். இது வரை போட்டது teaser மட்டுமே. வெங்கி ,நீங்களும் வாருங்கள்.
Murali sir, yes "aaruthal is the right word" while many movie halls are becoming muti complex, chinthamani still shines which is little comfort ..
All those memories - Vijayalakshmi, Jeyaraj, Saraswathi, Thangam, chinthamani, cinipriya/minipriya, midland, new cinema, regal, mathi innum niraya niraya
வண்ணநிலவன் தன்னுடைய கொட்டகை அனுபவத்தை இங்கே நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார்.
இப்போதுபோல் வாரந்தோறும் சினிமா படம் ரிலீசாகும் காலமல்ல அது. மாதத்திற்கு ஒரு படம் வெளி வந்தாலே அபூர்வம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மட்டும் மூன்று நான்கு படங்கள் வெளியாகும்.
நான் பார்த்த முதல் திரைப்படம் ஜெமினியின் 'சம்சாரம்', திருநெல்வேலி ஜங்கஷனில் பாலஸ் டி.வேல்ஸ் என்ற தியேட்டர் ரயில்வே லயனை ஒட்டி இருந்தது. அந்தத் தியேட்டரில்தான் சம்சாரம் படத்தை என் அப்பாவைப் பெற்ற அம்மாவுடன் (ஆச்சி) பார்த்தேன். சிறு வயதில் பார்த்த பல படங்கள் இன்றும் ஞாபகத்திலிருக்கின்றன. ஜெனோவா, குணசுந்தரி, ஜனக்ஜனக் பாயல்பாஜே.
தமிழகத்தின் வடமாவட்டங்களில் டூரிங் டாக்சீஸை 'டெண்ட் கொட்டகை' என்கிறார்கள். ஆனால், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை போன்ற பகுதிகளில் டூரிங் டாக்கீஸ் என்று தான் பெயர். கூரை தென்னங்கீற்றால் ஆனது. ஆபரேட்டர் ரூம் மட்டும்தான் செங்கல் கட்டிடம். சுற்றுலுமுள்ள காம்பவுண்ட் கூட தென்னங்கீற்றுத் தடுப்புதான். தரை டிக்கெட் என்றால், அசல் தரைதான். மணல் பரப்பியிருப்பார்கள். வெறும் மரப்பலகைகளுக்கு இரண்டு பக்கமும் முடுக் கொடுத்து ஆணியால் அடித்திருப்பார்கள். இதுதான் பெஞ்ச் டிக்கெட். ஆபரேட்டர் ரூமை ஒட்டி ஏழெட்டுப் பிரம்பு நாற்காலிகளைப் போட்டிருப்பார்கள். அதுதான் ஸோபா டிக்கெட்.
ஸோபா டிக்கெட் பகுதி வரை கீழே தரையில் மணலைப் பரப்பியிருப்பார்கள். அதனால் தரை குளிர்ச்சியாக இருக்கும். அந்தக் காலத்தில் டூரிங் டாக்கீஸ்களில் மேட்னி ஷோக்களை போட மாட்டார்கள். இரவு நடைபெறும் இரண்டே காட்சிகள்தான். மூன்று நான்கு வருஷங்களுக்கு முன்பு வெளி வந்த திரைப்படங்களைத்தான் திரையிடுவார்கள்.
என்னுடைய சொந்த ஊரானா தாதன்குளம் என்ற கிராமம், திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதையில் அமைந்துள்ளது. எங்கள் ஊரின் வடக்குப் பகுதியில் வாய்க்கால் ஓடுகிறது. இந்த வாய்க்காலைத் தாண்டிப் போனால் கருங்குளம் என்ற ஊர் வரும். எங்கள் ஊருக்கும் கருங்குளத்துக்கும் நடுவே பிரதான சாலையில் ஒரு ரைஸ்மில் உண்டு. சுற்றுப் பகுதியிலுள்ள பல ஊர்களுக்கு இந்த மில் ஒன்று தான் பயன்பட்டு வந்தது.
இந்த ரைஸ்மில்லின் உரிமையாளருக்கு நாசரேத். தினசரி ரயிலில் தாதன்குளம் ஸ்டேஷனில் வந்திறங்கி, அதேபோல் மாலை ரயிலில் மீண்டும் தன் ஊருக்குத் திரும்புவார். 1960-ம் ஆண்டு வாக்கில் இந்த மில் உரிமையாளர், தனது ரைஸ் மில் அருகிலிருந்த காலியிடத்தில் ஒரு டூரிங் டாக்கீசை ஆரம்பித்தார். 'ரீகல்' டூரிங் டாக்கீஸ் என்று பெயர் வைத்தார். அப்போது எங்கள் குடும்பம் கருங்குளத்துக்குக் குடியேறியது. ஸ்ரீவைகுண்டம் குமரகுபேர சுவாமிகள் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஏழாவது படித்து வந்தேன்.
தினசரி பஸ்ஸில் ஸ்ரீவைகுண்டம் சென்று படித்து வந்தேன். ரீகல் டூரிங் டாக்கீஸில் மானேஜராக அப்பாவின் நெருங்கிய நண்பர் கொம்பையா வேலை பார்த்து வந்தார். அநேகமாக எல்லா சனி, ஞாயிறுகளிலும் இந்த டூரிங் டாக்கீசுக்குப் படம் பார்க்கச் சென்று விடுவேன். கொம்பையா மாமா என்னை பெஞ்ச் டிக்கெட்டில் உட்கார வைத்து விடுவார். எங்கள் குடும்பத்திலிருந்து எத்தனை பேர் சென்றாலும் டிக்கெட் வாங்க விட மாட்டார் மாமா.
அந்த நாட்களில் எங்கள் பக்கத்துக் கிராமங்களில் மின்சாரம் கிடையாது. ஆங்காங்கே மினுக் மினுக்கென்று எரியும் லாந்தர் விளக்குகள் தான் எங்காவது மூலைக்கொன்று எரிந்து கொண்டிருக்கும். அதனால் சினிமா பார்க்கச் செல்லும்போது கையோடு ஒரு அரிக்கேன் விளக்கையும் எடுத்துச் செல்வோம். அந்த அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்தான் இரவு வீடு வந்து சேர வேண்டும். பக்கத்தில் அரிக்கேன் விளக்கை வைத்துக் கொண்டு படம் பார்ப்பது வேடிக்கையாகப் படலாம். ஆனால், அந்தக் காலத்தல் இது சர்வ சாதாரணமானது.
காட்சி துவங்குவதற்கு முன்னால் டாக்கீஸின் மேல் கட்டப்பட்டிருக்கும் நீளமான குழாய் ஸ்பீக்கர்களில் சினிமா பாடல்களை ஒலிபரப்புவார்கள். முதல் காட்சி ஏழு, ஏழே காலுக்குச் சாவகாசமாகத் துவங்கும். தரை டிக்கெட் 25 பைசா. பெஞ்ச் டிக்கெட் 39 பைசா. ஸோபா 75 பைசா. 27 பைசா இருந்தால் தரை டிக்கெட்டில் படம் பார்த்து விட்டு ஒரு முறுக்கும் சாப்பிடலாம். ஒரு முறுக்கின் விலை 2 பைசாதான். டீ 5 பைசா. அது ஆறு பைசாவுக்கு இரண்டு வாழைப்பழம் விற்ற காலம்.
ரீகல் டூரிங் டாக்கிஸில் நான் பார்த்த முதல் படம் சிவாஜிகணேசன் நடித்த காத்தவராயன் படம்தான். அன்னையின் ஆணை, திருமணம், சுமங்கலி, என்று பல படங்களை அந்த டூரிங் டாக்கீஸில் பார்த்திருக்கிறேன். அந்தக் காலத்துப் படங்களெல்லாம் மூன்று மணி நேரம் ஓடும். ஒவ்வொரு படமும் 18 ரீல்கள் இருக்கும். டூரிங் தியேட்டர்கள் டபுள் புரொஜக்டர்கள் கிடையாது. சிங்கிள் புரொஜக்டர்தான் அதனால் நான்கு முறை படத்தை நிறுத்தி நிறுத்தி ரீலை மாட்டி ஓட்டுவார்கள். முதல் காட்சி முடியும்போது இரவு பத்து மணியாகி விடும். இரண்டாவது காட்சி இரண்டு மணிவாக்கில்தான் முடியும்.
சிவகங்கைச் சீமை இரண்டாவது காட்சிக்குச் சென்று வந்தது. இன்றும் நினைவிருக்கிறது. படம் பார்த்து விட்டு வந்த சிறிது நேரத்தில் விடிந்து விட்டது. ஆற்றுக்குக் குளிக்கக் கூட்டிக் கொண்டு போக நண்பர்கள் வந்து விட்டார்கள். எங்கள் கிராமத்துக்கு அருகிலுள்ள சேரகுளம், கார்சேரி, முள்ளிக்குளம் போன்ற ஊர்களிலுள்ளவர்களுக்கு சினிமா பார்க்க வேண்டுமென்றால் ரீகல் டூரிங் டாக்கீசுக்குத்தான் வரவேண்டும். 1961ல் பாளையங்கோட்டைக்கு எங்கள் குடும்பம் குடிபெயரும் வரை ரீகல் டூரிங் டாக்கீஸ்தான் எனது சினிமா பார்க்கும்ஆசையைப் பூர்த்தி செய்து வந்தது.
I
என் ஆரம்பக்கல்வி திருநெல்வேலி டவுனில்தான் நடந்தது. உயர்நிலைப் பள்ளிப் படிப்பு திருநெல்வேலியை அடுத்த பாளையங்கோட்டையில். பாளையங்கோட்டையில் இருந்தபோதுதான் ஆங்கிலப் படங்களைப் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டது. 61,62 லேயே ஆல்பர்ட் ஹிட்ச்காக்கின் ஸைக்கோ, ரியர் ஷண்டோ போன்ற படங்களைப் பார்க்க முடிந்தது.அப்போது பார்வதி டாக்கீஸீல் ஏராளமான ஆங்கிலப் படங்கள் திரையிடப்பட்டன. கான் வித் த விண்ட், கவுண்ட் ஆஃப் மியூஸிக், பென்ஹர், டென்கமாண்மெண்டஸ், ஹன்ச்பேக் ஆஃப் நாட்டர்டேம், ஜெர்ரி லூயிஸின் பல அற்புதமான நகைச்சுவைப் படங்களை எல்லாம் பார்வதி டாக்கீஸில்தான் பார்த்தேன்.
தமிழ்ப்படங்களைப் பொறுத்தவரை நான் ஸ்ரீதருடைய ரசிகன். கே. பாலசந்தர் வந்த பிறகு அந்த ரசனை அவர் பக்கம் திரும்பிற்று. கிருஷ்ணன் பஞ்சு, பீம்சிங், ஏபி.நாகராஜன் போன்ற பிற இயக்குனர்களின் திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். என்றாலும் ஸ்ரீதரும், பாலசந்தரும் என் மனதுக்கு நெருக்கமானவர்கள். 59,60ல் எங்கள் குடும்பம் திருநெல்வேலி, திருச்செந்தூர் சாலையிலுள்ள கருங்குளம் என்ற சிற்றூரில் வாழ நேர்ந்தது.
கிராமத்தின் விடியற்காலைகள் வேப்பம்பழக்காலங்களில் காக்கைகளின் கூக்குரலோடு விடியும். அதுவும் வேப்பம்பழக்கால ஆரம்பித்த ஓரிரு நாட்களில் வேம்பின் வாசம் ஒரு வித போதையூட்டும் . வீட்டின் வாசலில் இருந்த பெரிய வேப்பமரம் நல்ல காற்றுக்கும் விடுமுறை நாட்களில் ஊஞ்சல் கட்டி ஆடுவதற்கும் வசதியாக இருந்தது அதுவும் என் வீட்டில் காரின் டயர் இருந்தது டயரின் இரு முனையிலும் கயிறைக்கட்டி ஊஞ்சலாடுவது எங்கள் தெருவின் அனைத்துப்பசங்களுக்குமே ஒரு கனவு. வீட்டின் எதிரில் ஆறு , வீட்டின் பக்கத்தில் சாலை என பலவிதங்களில் எனக்குப் பெருமை தேடித்தந்தது என் வீடு. அதே நேரத்தில் தண்டனைகளின் போதும் ஊர் முழுவதும் எளிதில் செய்திப்பரவிடவும் அந்த இடமைப்பு ஒரு பெரிய தொல்லையாகவும் இருந்தது.
ஊரில் பெரும்பாலான வீடுகளின் வாசலிலோ கொல்லைப்புறங்களிலோ கட்டாயம் ஒரு வேப்பமரமாவது இருக்கும் கிராமத்தில். அதுவும் என் வீட்டில் ஒரு வேப்பமரமும் வீட்டிற்கு எதிரிலிருக்கும் முனீஸ்வரனின் கோவிலில் ஒரு பெரிய வேம்பும் இருந்தது. கோவில் வேம்புக்கும் அரசமரத்திற்கும் கல்யாணம் நடந்திருந்ததால் அதன் மேல் ஏறுவது தெய்வக்குற்றம் என்று பெரிதாக பேசப்பட்ட காலம் அது. எனக்கோ முனீஸ்வரனுக்கு அதன் மேல் பெரிதாய் நம்பிக்கையில்லை.
கிராமத்திலிருந்து இரண்டாவது கிமீட்டரில் சங்கரன்பந்தல் என்றொரு சிற்றூர் இருக்கிறது. அது எங்களின் கனவு ஊர் ஏனென்றால் அங்குதான் ஓடியன் தியேட்டர் இருந்தது. சிறு வயதில் எங்களின் பெரிய கனவுகளில் ஒன்று எங்களின் வீடுகள் சங்கரன்பந்தலுக்கு மாறிட வேண்டுமென்பதும் தினமும் படம் பார்க்க வேண்டுமென்பதாகவும் இருந்தது.
கிட்டத்தட்ட என் பதினொன்றாம் வயதில் அந்த தியேட்டரின் பெஞ்ச் டிக்கெட்டின் விலை 60 பைசா. பேக் பெஞ்ச் டிக்கெட்டின் விலை 1.20 பைசா. முன்னால் மணல்குவித்து உட்காருமிடத்தின் விலை 45 பைசா. எங்களுக்கு எப்போதுமே பேக் பெஞ்சில் உட்கார்ந்து படம் பார்த்திட துடித்தாலும் அப்போதைய பொருளாதார நிலை பெஞ்ச் கிளாஸின் 60 பைசாவில் தள்ளிடும் எப்போதும்.
பெரும்பாலும் எம்ஜிஆர், சிவாஜி படங்கள் மட்டுமே வரும்.அதுவும் ஒரு எம்ஜிஆர் படமென்றால் அடுத்த படம் சிவாஜி படம். அதுவும் எம்ஜிஆர் படங்கள் மாதக்கணக்கில் ஓடும் . இந்த நிலையில் தான் ஆயிரத்தில் ஒருவன் வந்தது. எம்ஜிஆரின் படங்களைப்பற்றி நிறையக்கதைகள் சொல்ல எங்களூரின் துருத்தி ஆசாரி இருந்தார். தீவிர எம்ஜிஆர் ரசிகர் அவர். எப்போதும் தலைவரைப்பற்றி பேசியபடியே இருப்பார். மாயூரம் கூட்டத்தில் தலைவர்க்கு இந்தக்கையை கொடுத்தேன் என்றபடி அவரின் கைகளைக்கண்களில் ஒத்திக்கொள்ளும் பக்தர். அவர் சொல்லும் எம்ஜிஆரின் படக்கதைகளைக் கேட்கவே சனி , ஞாயிறுகளில் பசங்களின் கூட்டம் கொல்லுப்பட்டறையில் நிரம்பி வழியும். அவர் கதைகள் சொல்லியபடியே தேவையான வேலையையும் வாங்கிக்கொள்வார்.
ஆசாரியின் கதையில் மதி மயங்கி வாழ்நாளில் எப்படியாவது ஆயிரத்தில் ஒருவன் படத்தைப்பார்த்திட வேண்டும் என்கிற நிலைக்குத்தள்ளப்பட்ட நாளொன்றில் ஓடியன் தியேட்டரின் நோட்டீஸ்கள் எங்களூரில் மூன்று இடங்களில் மட்டுமே ஒட்டப்படும் காலமது. ஆயிரத்தில் ஒருவன் படம் வந்தது ஓடியன் தியேட்டருக்கு.
அதுவும் ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ என்ற பாட்டை முழுவதும் ஆசாரி நடித்தே காண்பித்திருந்தார். நம்பியாரின் வில்லத்தனம் , கப்பல் , கடற்கொள்ளை, நாகேஷ் , ஜெயலலிதா என்று ஒரு வாரம் முழுக்க கதைக்கேட்டுவிட்ட நிலையில் படம் வந்திருந்தது.
இப்போது எங்கள் முன் இருந்த பெரிய பிரச்சனை பள்ளி நாளில் படத்திற்கு போக முடியாது, போவதாயிருந்தால் முதலில் காசு இல்லை, இரண்டாவது சங்கரன்பந்தலுக்கு இரண்டாம் ஆட்டம் சினிமாவுக்கு போய்விட்டு திரும்பும் தைரியம் இருந்தாலும் வீட்டில் விட மாட்டார்கள்.
ஒரு வாரத்தில் ஆயிரத்தில் ஒருவன் படம் மாறிப்போக போவதான வதந்தி வேறு எங்களின் வயிற்றில் புளிக்கரைத்துக்கொண்டிருந்தது. பள்ளியில் முழுக்க ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு போவதான பேச்சு வேறு எரிச்சலைக்கிளப்பிக் கொண்டிருந்தது.
அம்மாவிடம் கெஞ்சிக்கூத்தாடி பார்த்தும் சினிமா பார்க்க விட முடியாதென்று விட்டாள். எம்ஜிஆர் படமென்றாலும் இரண்டாம் ஆட்டம் போவதென்றால் நாவமரங்களைக்கடந்து போக வேண்டுமென்பதாலும் அந்த நாவ மரத்தில் மோகினிப்பேய் இருப்பதாய் பல கால பேச்சு என்பதாலும் பிடிவாதமாய் மறுத்து விட்டாள். இனி அம்மாவிடம் பேசிப்பயனில்லை என்று முடிவு செய்தேன். ஆயிரத்தில் ஒருவன் எம்ஜிஆர் வாளோடு நிற்கும் போஸ்ட்டரை நள்ளிரவில் பிய்த்து வந்து வீட்டின் கதவுக்குப்பின்னால் ஒட்டி வைத்தேன்.
இதனிடையே இரண்டு நாள் போய் விட்டிருந்தது. அப்போதுதான் சாதிக் வந்தான் உலக மகா யோசனையோடு. வேப்பப்பழக்காலமது. ஊர் முழுவதும் வேப்பப்பழங்கள் கொட்டி தெருவெங்கும் சிதறி நசுங்கி வாசமெடுக்கும் காலமது. வேப்பபழங்களைப்பொறுக்கி விற்பதுதான் அந்த யோசனை. படி 10 பைசா என்றும் சனிக்கிழமைக்குள் ஆளுக்கு ஆறு படிகள் சேர்த்திட்டால் சனிக்கிழமை மதியக்காட்சிக்கு எவருக்கும் தெரியாமல் போய்விட்டு சாயங்காலம் ஆறு மணிக்குள் வீட்டிற்குத் திரும்பிடலாம் என்பதுதான் அந்த யோசனை. எனக்கும் வெகு எளிதான யோசனையாகவே பட்டது. தினமும் அம்மா தெருக்கூட்டி ஒதுக்கி வைத்திருக்கும் வேப்பம்பழங்களை எடுத்தாலே ஆறு படி மூன்று நாட்களில் தேறிடும் என்பதால், ”சாதிக் ஆயிரத்தில் ஒருவன் பாத்திட்டோம்னு நினைச்சுக்க” என்றேன்.
அந்த சாயங்காலமே என் கனவில் பெரிய மண் விழுந்தது. அம்மா சேர்த்து வைத்த வேப்பப்பழங்கள் நாத்தங்காலில் போடுவதற்காய் அப்பா எடுத்துக்கொண்டு போய்விட்டிருந்தார். தூக்கமில்லாமல் புரண்டு புரண்டு படுத்து விடியற்காலையில் முழிப்பு வந்தவுடன் எழுந்து வாசலுக்கு ஓடினேன்.
பார்த்தால் ஊரின் குஞ்சுக்குளுவான்களெல்லாம் ஆளுக்கொரு பையுடன் வேப்பப்பழம் பொறுக்கிக்கொண்டிருந்தார்கள். சாதிக்கைப்பார்க்க அவனோ வெகுவாய் அழுகிற முகபாவத்துடன் தான் ஒரே ஒருவனிடம் மட்டும் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்க்கப்போகும் யோசனையை சொன்னதாகவும் அதுவும் ஒரு வெல்லக்கட்டி வாங்கித் தின்றதற்கு பதிலாய் சொன்னதாகவும் அது இப்படி ஊருக்கே தெரிந்த ரகசியமாகிவிட்டதாகவும் சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கோ அதலபாதாளத்தில் குரல் கேட்பதாயிருந்தது.
ஊர் முழுக்க தெருவில் இருந்த வேப்பமரங்களை மொட்டையடித்துப்போயிருந்தார்கள் தெருப்பசங்கள். இப்போது எங்கள் முன்னால் இருந்தது முனீஸ்வரனின் வேப்பமரம். அரசமரத்தோடு பின்னிப்பிணைந்து வானத்துக்கும் பூமிக்குமாய் வளர்ந்து நிற்கும் வேம்பு அதுவும் முழுவதுமாய் அரச மரத்துக்குள் புதைந்து கிளைகள் மட்டும் வெளியில் தெரிய ராட்சச அரக்கனாய் தெரியும் வேம்பு. ஒரு பயலும் சாமிக்குப்பயந்து அந்த மரத்தின் பக்கம் மட்டும் போகவில்லை. நான் சாதிக்கைத்தனியா தள்ளிக்கொண்டு போய் திட்டத்தை விளக்கினேன். சாயங்காலம் ஏழு மணிக்கு மேல் ஒரு பயலும் முனீஸ்வரன் கோவிலின் பக்கம் போக மாட்டார்கள். விளக்கு வெளிச்ச ஏதுமில்லாமல் சூலமும் அரசமரமும் வேப்ப மரமுமாய் பறவைகளின் சப்தங்களோடு சில்வண்டுகளின் சப்தமும் பயமுறுத்திட , இரவு நேரத்தில் வெள்ளைக்குதிரையில் முனீஸ்வரன் உலா வருவதாய் சொல்லப்பட்ட கதையின் காரணமாகவும் அந்த நேரத்தில் குறுக்கே போகிறவர்கள் ரத்தம் கக்கி செத்துப்போய்விட நேரிடும் என்பதாலும் ஒரு காக்கா குருவிக் கூட இருட்டியப் பின் அந்த பக்கம் போவதில்லை.
முதலில் பயந்து வர மறுத்த சாதிக் , எம்ஜிஆரின் வாள் வீசும் போஸ்ட்டரைக்காட்டிய பின் ஒரு அரைமனதாக ஒப்புக்கொண்டான். ஏதோ ஒரு வேகத்தில் இதை சொல்லி விட்டாலும் இரவில் மரமோ ஒரு ராட்சச அரக்கனாய் முணுமுணுத்துக்கொண்டு காத்திருப்பதாய் பயமேற்பட்டது.
இருவரும் ஆளுக்கொரு பையுடன் வரவழைத்துக்கொண்ட தைரியத்துடன் கோவில் மரத்துக்குக் கீழாய் காலால் கூட்டி சேர்க்கத்துவங்கினோம். அரை மணி நேரத்தில் வேர்க்க விறுவிறுக்க இரு பையையும் நிரப்பி விட்டிருந்தோம். இப்போது பிரச்சனை எங்கு கொண்டு வைப்பது என்பதில் இருந்தது. வீட்டில் வைத்தால் அப்பா வயலுக்குக்கொண்டு போய்விடுவார். அம்மாவுக்கு தெரியாமல் ஒளித்து வைக்க வேண்டும் எங்கு வைக்கலாம் என்ற யோசனையின் முடிவில் சாதிக் வீட்டின் சந்துக்குள் ஒளித்து வைத்திட முடிவெடுத்தோம்.
சனிக்கிழமையின் முடிவில் கோவில் மரத்தை முழுவதும் சுத்தம் செய்திருந்தோம். காலையிலிருந்தே வேப்பம்பழக்காரனைத் தேடிக்கொண்டிருந்தோம். எங்க எந்த வியபாரி போனாலும் வேப்பம்பழம் வாங்கிறீங்களா என்று கேட்டு அலைந்துக்கொண்டிருந்தோம்.
வந்தான்யா கடைசியா ஆறு மணிக்கு வியாபாரி, நாங்களோ அரைச்சாக்கை தூக்கமுடியாமல் தூக்கி வந்து பெருமையாக பார்த்தோம். அவனோ இவ்ளோதானா இருக்கு என்றபடி எடுத்தான் படியை.
எனக்கோ அதுவரை என் வீட்டின் ஒரு லிட்டர் அளக்கும் அரிசிப்படி ஞாபகம்தான் இருந்தது. அவன் வைத்திருந்த படியோ தகரத்தில் செய்யப்பட்ட படியாய் ஒரு மரக்கால் அளவுக்கொள்ளுமாய் இருந்தது. எங்களின் அரைச்சாக்கு வேப்பம்பழம் வெறும் ஐந்து படிகளில் முடிந்து போயிருந்தது.
அதிலும் நான்கு நாட்களில் பழங்கள் காய்ந்துப்போய் விட்டதால் அளவு இன்னும் குறைந்துப்போய் விட்டிருந்தது. நாப்பது பைசா மட்டுமே தரமுடியுமென்றும் அவன் பேரம் பேசத்துவங்க எனக்கு தூரமாய் எம்ஜிஆர் நகர்ந்துப் போய்க்கொண்டிருப்பதாய் பட்டது.
ஐம்பது பைசாவை சாதிக் சண்டைப்போட்டு வாங்கி விட்டிருந்தான், அதுவரை கிட்டத்தட்ட இரண்டு ரூபாய் கனவோடு இருந்த நானும் அவனும் நொந்துப்போய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம்.
இன்னும் நாப்பது பைசா தேறினால் மண் டிக்கெட்டுக்காவது படத்திற்கு போகலாம் என்றான் சாதிக். வேறு என்ன செய்யலாம் என்று திட்டம் போட்டிக்கொண்டுருக்கையிலே அம்மா தலைவிரிக்கோலமாய் வந்து ஆளுக்கொரு அடியை முதுகில் வைத்தாள். முனீஸ்வரன் கோவில் வேப்பம்பழம் விவகாரத்தை அதற்குள் யாரோ சிண்டு முடித்து வைத்திருந்தார்கள்.
கையில் வைத்திருந்தக் காசைப்பிடுங்கி 25 காசுக்கு சூடமும் வாங்கிக்கொளுத்த செய்தாள், 25 காசை உண்டியலிலும் போட செய்தாள். ஞாயிறு முழுவதும் ஆற்றுத்தண்ணீர் கொண்டு வந்து கோவிலை சுத்தம் செய்ய வைத்தாள். ஆளுக்கு ஐம்பது தோப்புக்கரணம் வேற.
வீட்டிக்குள் வைத்து சிறப்பு அடி வேறு கிடைத்தது. கதவின் பின்னால் எம்ஜிஆர் வாள் வீசும் போஸ்ட்டரில் பார்த்துக்கொண்டிருந்தார்.
--
- கென் -
///அன்புள்ள கண்ணா,
நியூசினிமாவும் சிந்தாமணியும் இன்று செயல்படவில்லையே தவிர கட்டிடங்கள் அப்படியே இருக்கிறது. கொஞ்சம் யோசித்தோமென்றால் இவை எல்லாம் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு இரண்டாம் வீடுகளாகவே விளங்கியிருக்கின்றன.[have been second homes to us]. /// அன்பின் முரளி சார்.. மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும்..அண்ட் உங்கள் நினைவலைகளுக்கும்.. ஸாரி நேற்றே என்னால் எழுத இயலவில்லை..
ஸ்ரீதேவி - எங்கிருந்தோ வந்தாள், தர்மம் எங்கே, சவாலே சமாளி நாளை நமதே இன்னும் பல படங்க்ள் வெகுசின்ன வயதில் பார்த்திருக்கிறேன்.. அம்மா, சகோதரிகளுடன் தான் பின் கொஞ்சம் வளர்ந்த பிறகு பற்பல படங்கள்..ம்ம் இன்னொரு பதிவில் விரிவாக எழுதுகிறேன்..
கோபால் சார் மிக்க நன்றி..
ராஜேஷ் ஜெயராஜ் விஜயலஷ்மி.மினிப் ப்ரியா சினிப்ரியா.. நீங்க ஆற்றுக்கு அந்தக்கரைப்பக்கமா இருந்தீர்கள்..அண்ணா நகர் கேகே நகர்..?..
எஸ்வி சார்
திரு வண்ணநிலவன் டூரிங் கொட்டகை அனுபவம் அருமை.
இந்த ஸ்ரீவைகுண்டம் தான் நான் பிறந்த ஊர் .60 களில் இந்த ரீகல் கொட்டகை மிகவும் famous .அவர் கூறியது போல் ஒரே கொட்டகை . இதற்கு அருகில் தான் கருங்குளம் ஊர் .ஸ்ரீவைகுண்டம் ஊரில் இருந்து 8 km தூரம்.
கருங்குளம். பொன்னியின் செல்வன் புதினத்தில் கல்கி அவர்கள் சொல்வது போல் திருநெல்வேலி திருசெந்தூர் ராஜபாட்டையில் உள்ள சிற்றூர். இங்கு தான் 'இன்று முதல்' சிகப்பு கலர்,மஞ்சள் கலர்,நீல கலர் போஸ்டர் எல்லாம் ஓட்டுவார்கள். போஸ்டர் இறுதியில் 'பாட்டு சண்டை அருமை .கண்டிப்பாக இரண்டு தினங்கள் மட்டும்' என்று இருக்கும். இந்த வாசகம் எல்லா போஸ்டர்களிலும் கான்ஸ்டன்ட் ஆக பிரிண்ட் செய்யப்பட்டு இருக்கும். பின் ஒரு டிசைன் போட்டு செல்வி ,ஸ்ரீவை என்று இருக்கும். இதற்கு என்ன அர்த்தம் என்று நண்பர்கள் எல்லோரும் சண்டை போட்டு கொள்வோம் . அப்போது நான் கொஞ்சம் புத்திசாலி .(சினிமா பார்ப்பதில் மட்டும்). அது 'செல்வி அச்சகத்தில் அட்சடிகப்படது ' என்று சொல்லி காலரை தூக்கி விட்டு கொள்வேன். :) இதற்கு விடை தெரியாதவர்கள் எல்லாம் இன்று அமெரிக்கா ,இங்கிலாந்த் ,ஜப்பான் என்று வெளிநாடுகளில் குப்பை கொட்டுகிறார்கள் . விடை சொன்ன நான் தமிழ்நாட்டில் ஜல்லி அடித்து கொண்டு இருக்கிறேன் :)
ஸ்ரீவைகுண்டம் ஊர் ராஜபாட்டையில் இருந்து 2 km உள்ளே போக வேண்டும்.நடுவில் தாம்பிரபரணி ஆறு ஓடி கொண்டு இருக்கும். முதலில் தாம்போதி என்ற சிறு பாலம் இருந்த நினைவு . பின்னாட்களில் பெரிய பாலம் கட்டிய நினைவு. அங்கு இருந்து சைக்கிள் மிதித்து கொண்டு கருங்குளம் வந்து போஸ்டர் பார்த்து விட்ட சென்ற நினைவு .உண்டு
துடிக்கும் துப்பாக்கி,துப்பாக்கியே துணை,கத்தி குத்து கந்தன் (எல்லாம் ரங்கராவ் நடித்த டப்பிங் படங்கள் ) பார்த்த நினைவு உண்டு. ஜெய், ரவி நடித்த 'நாம் மூவர்' ஒரு தீபாவளி பண்டிகைக்கு முன் ஒரு தினம் மட்டும் போட்டு தீபாவளிக்கு முன் தினம் இரவு காட்சி பார்த்த நினைவு . இரவு இரண்டு மணிக்கு படம் பார்த்து விட்டு அண்ணனின் சைக்கிள் இல் doubles சென்ற நினைவு. அவர் நெல்லை மாவட்ட சிவாஜி மன்ற பொறுப்பில் இருந்தார் 68-70 களில்.
பின்னாட்களில் அருகில் உள்ள இன்னொரு கிராமம் செய்துங்க நல்லூர் என்று பெயர் .அங்கே சென்ட்ரல் என்று ஒரு டூரிங் கொட்டகை திறந்தார்கள் .ஜி ஆர் எட்மண்ட் என்று மந்திரி (மக்கள் திலகம் முதல் அமைச்சரவையில் கல்வி மந்திரி) திறந்த நினைவு. இதற்கு எல்லாம் புகை படம் என்னிடம் இல்லை . ஆனால் இப்போது தான் தெரிகிறது புகை படம் சேகரிக்காதது எவ்வளவு பெரிய தவறு என்று .70 களில் படிப்பிற்காக திருநெல்வேலியில் குடியேறினோம் .
மலரும் நினைவை மீட்டியதற்கு நன்றி எஸ்வி சார்
மன்னிக்கவும் என்னால் regal கொட்டகை,சென்ட்ரல் கொட்டகை புகைப்படம் கொடுக்க முடியவில்லை .அதற்கு பதிலாக அந்த ஊர் கருங்குளம் பின்னணியை கொடுக்கிறேன்.
http://karungulamtemple.files.wordpr...8200820621.jpghttps://c2.staticflickr.com/4/3203/2...f0d97ffd9d.jpghttp://upload.wikimedia.org/wikipedi...ulam_Board.JPG
தாமிரபரணி ஆறு பிரிக்கும் ஸ்ரீவைகுண்டம் ஊர்
http://photos.wikimapia.org/p/00/00/53/39/74_big.jpg
க்ருஷ்ணா ஜி.. ஸ்ரீ வைகுண்டம் கருங்குளம் நினைவுகள் நன்று.. புகைக்கபடங்கள் அருமை..ம்ம்
இனிய நண்பர் திரு கிருஷ்ணா சார்
உங்கள ஊர் வரலாற்றை நிழற் படங்கள் மூலம் காணும் போது பசுமையான கிராமம் என்பதை உணர முடிகிறது .பசுமையான நினைவலைகளை பகிர்ந்து கொள்ள இந்த திரி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது .கேரளாவில் இருந்த ஒரு டூரிங் டாக்கீஸ் .
http://i62.tinypic.com/do9pix.jpg
உண்மை எஸ்வி சார்
அபரிமிதமான தண்ணீர் சார் .ஆனால் என்ன பிரச்சனைனா தண்ணீர் தவிர வேற ஒண்ணும் கிடையாது. அகண்ட காவிரி மாதிரி அகண்ட பரணி போக போக குருகிடுச்சு.சில சுயநலவாத ஆக்கிரமிப்பாளர்களால்.விவசாயம் தான் முக்கிய தொழில் .அதுவும் இப்ப நடுவைக்கும்,களை பிடுங்கவும் கூட ஆள் இல்லை
கிருஷ்ணா ஜி
ஸ்ரீவை குண்டம் எனது அத்தையின் மகளை கொடுத்த ஊர். இரு முறை வந்திருக்கிறேன்.. கோயிலை ஒட்டியுள்ள வீடு தான் அவர்களுடையது ...
இன்னும் கண் முன் உண்டு அந்த ஊரின் பசுமை .. நினைவூட்டலுக்கு நன்றி.
Yes Murali and Rajesh ... this applies uniformly to all the places now..Quote:
Murali sir, yes "aaruthal is the right word" while many movie halls are becoming muti complex, chinthamani still shines which is little comfort ..
All those memories - Vijayalakshmi, Jeyaraj, Saraswathi, Thangam, chinthamani, cinipriya/minipriya, midland, new cinema, regal, mathi innum niraya niraya
வினோத் சார்
தங்கள் பங்களிப்பு அபாரம் அருமை... கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்யவும் என்பதைப் போல புகழுரை எதுவேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்..
அதுவும் அந்த கேரளா டூரிங் டாக்கீஸ்... அருமை..
தொடருங்கள்..
ராஜேஷ்
மெரிலாண்ட் சுப்ரமணியம் தென்னிந்திய திரையுலகில் தனியிடத்தைப் பெற்ற பெயர்... குறிப்பாக கேரளம் மற்றும் தமிழ்த்திரையுலகில் இவரைத் தவிர்த்து வரலாற்றை எழுத முடியாது.. அந்த புகழ் பெற்ற மெரிலாண்ட் ஸ்டூடியோவின் நிழற்படம் அவருடைய படங்களை நினைவூட்டிக் கொண்டே உள்ளன.
கருங்குளம் தந்த கிருஷ்ணா...
என்று சொல்லலாமா.. இலவசமாக தங்கள் ஊருக்கு எங்களையெல்லாம் அழைத்துச் சென்று விட்டீர்கள் சார்... ஸ்ரீவைகுண்டம் போன திருப்தியைத் தங்களுடைய பதிவே தந்து விட்டது...
ஒவ்வொருவருக்கும் மலரும் நினைவுகளைக் கிளறி விட்டது... திரியின் வேகமும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது.. அனைவருக்கும் உளமார்ந்த நன்றி
கோபால்
தங்களுடைய இளம் வயது அனுபவங்கள் எந்த அளவிற்கு சுவையாகவும் சிலாகிப்பதாகவும் உள்ளனவோ அதே வகையில் தங்களுடைய பதிவுகளும் அமைந்துள்ளன.
பாராட்டுக்கள்.
சகோதரி ஸ்டெல்லாஜி
தாங்களும் தங்களால் பகிர்ந்து கொள்ளக் கூடிய, அந்நாளைய தற்காலிக திரையரங்குகளான கீற்றுக் கொட்டகைகளில் பார்த்த திரைப்படங்கள் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்...
THANKS RAGAVENDRAN SIR
டூரிங் டாக்கீஸ் - டெண்டு கொட்டாய் - கீத்துக்கொட்டகை’‘விநாயகனே வினை தீர்ப்பவனே’ என்று சீர்காழியின் பாட்டு போட்டதுமே ‘ஆஹா...கொட்டாயில படம் போடப்போறாங்கப்பா’
டூரிங் டாக்கீஸ் - டெண்டு கொட்டாய் - கீத்துக்கொட்டகை:
http://i61.tinypic.com/353cmld.jpg
ஊருக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு வெட்டவெளியில்தான் டூரிங் டாக்கீஸ் இருக்கும். ‘டெண்டு கொட்டாய், கீத்துக்கொட்டகை’ என்ற செல்லப்பெயர்களும் உண்டு. கூப்பிடுதூரத்திலுள்ள அக்கம்பக்கத்து மக்களின் போக்கிடமும், பொழுதுபோக்கிடமும் இது ஒன்றுதான். ஒவ்வொரு சாயங்காலமும் கூரைக்கு மேல் கட்டியிருக்கும் டபுள் குழாய் ஸ்பீக்கரில் ‘விநாயகனே வினை தீர்ப்பவனே’ என்று சீர்காழியின் பாட்டு போட்டதுமே ‘ஆஹா...கொட்டாயில படம் போடப்போறாங்கப்பா’ என்று ஊர் மக்களுக்குள் ஓர் உற்சாகப் பரபரப்பு பற்றிக்கொள்ளும். அடுத்து ரெண்டு, மூணு பாடல்கள் ஓடி ‘கோடிமலைதனிலே கொடுக்கும் மலை எந்த மலை’ பாட்டு கேட்டதுமே ‘விறுவிறுவென ஜனம் டூரிங் தியேட்டருக்கு ஓட்டமும் நடையுமாக படையெடுக்கும். பாடலின் முடிவில் படுவேகமாக ஒலிக்கும் ‘பனியது மழையது நதியது கடலது’ வரிகள் வந்தால் போதும்... டிக்கெட்டை வாங்கிக்கொண்டு பாந்து செல்வார்கள். காரணம்- இந்தப் பாட்டு முடிந்ததுமே படம் ஓடத்தொடங்கும்.
அந்த நாட்களை இப்போது நினைத்தாலும் சிலிர்ப்பாகவும் இருக்கிறது...கொஞ்சம் சிரிப்பாகவும் இருக்கிறது. எங்கள் ஊரிலிருந்து 1 கி.மீ. தூரத்திலிருந்தது ‘பாண்டியன்’ டூரிங் டாக்கீஸ். லீவுக்கு மதுரையிலிருந்து அத்தை மகன்களும், பெரியம்மா பசங்களும் வந்துவிடுவதால் எங்களுக்கான ஒட்டுமொத்த ஜாலியும் ‘பாண்டியன்’தான். மதுரையில் பெரிய தியேட்டர்களில் 2 ரூபா 90 காசுக்கு படம் பார்த்த அவர்களுக்கு, வெறும் 25 காசில் டூரிங் டாக்கீஸில் படம் பார்த்தபோது ஏற்பட்ட பிரமிப்பை வார்த்தையில் சொல்ல வராது. அதோடு ஏகப்பட்ட பிரமிப்பும் உண்டு. அரை டிக்கெட்டுகளும், தரை டிக்கெட்டுகளுமாக சகலரும் சமத்துவமாக உட்கார்ந்து ரசிக்கும் மணல் தரை டிக்கெட் 25 காசுதான். ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டின் விலை 50 பைசா. சோல்வதற்கு மட்டுமே இது சோகுசாக இருக்கும். மற்றபடி ஒரு நீளமான மர பெஞ்ச்தான் ஃபர்ஸ்ட் க்ளாஸ். ஒரு ரூபாக்கு வி.ஐ.பி.டிக்கெட்டும் உண்டு. அதில் ஒரே ஒரு சேர் மட்டுமே இருக்கும். ஊர்ப்பெருசுகளுக்கு மட்டுமே இது ரிசர்வ் செயப்பட்டது. ஒரு படத்திற்கு நாலு இடைவேளை விடுவார்கள். ‘ஏன் இந்த ஊர்ல மட்டும் நாலு இடைவேளை விடறாங்க?’ என்றெல்லாம் ‘மதுரைப் பசங்க’ நிறைய கேள்விகள் கேட்பார்கள். அப்போதெல்லாம் ‘ரீல் மாத்தறாங்கப்பா’ என்று எங்கள் ஊர் சிறிசு, பெரிசுகள் சகஜமாகச் சொல்வார்கள்.
இரவு 7 மணிக்கு, பிறகு 10 மணிக்கு என ரெண்டு காட்சிகள் ஓடும். அதை ‘முதலாவது ஆட்டம், ரெண்டாவது ஆட்டம்’ என்று சொல்வார்கள். பிள்ளை குட்டிகள், பெண்கள் பெரும்பாலும் முதலாவது ஆட்டத்திற்கு வருவார்கள். வேலை வெட்டிக்குப் போவரும் ஆண்கள்தான் ரெண்டாவது ஆட்டம் போவார்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த பழைய படங்களை ‘மெருகு குலையாத புத்தம்புது காப்பி’ என்ற கவர்ச்சியான விளம்பரத்துடன் கலர்ஃபுல் போஸ்டர்கள் ஒட்டி ரசிகர்களை வலைவீசி இழுப்பது டூரிங் டாக்கீஸ்களுக்கே உரிய தனி சாமர்த்தியம். அதிலும் அந்த போஸ்டர் ஒட்டப்படும் வீட்டுச்சுவற்றின் சொந்தக்காரர்களுக்கு மட்டும் ஓசி பாஸ் கொடுக்கப்படும். அந்த பாஸுடன் சம்பந்தப்பட்ட வீட்டுக்காரர்கள் பகுமானமாக வருவதைப் பார்த்து... சுவரில்லாத சாமான்யர்கள் தங்களுக்குள் ‘கயா முயா’ என்று முனகிக்கொள்வதைக் கேட்க சுவாரஸ்யமாக இருக்கும்.
இப்படிப்பட்ட கலகலப்பான சூழலில் படம் பார்க்கும் அனுபவம் பரவசமானது. திரையில் படம் ஓட ஓட... தரையில் ஆங்காங்கே மணல் சீட்டுகள் உருவாகும். முன்னால் உட்கார்ந்திருப்பவரின் தலை மறைத்தால், அதை அட்ஜஸ்ட் செய்வதற்கேற்ற உயரத்தில் மணலைக் குவித்து மேடாக்கி உட்கார்வார்கள். இதனால், பின்னாலிருக்கும் இன்னொரு ரசிகர் அதைவிட உசரத்தில் மணல் சீட் போட்டு அசர வைப்பார். சமயங்களில் இந்த ‘மண்ணாசை’ ‘அந்நாட்டு மன்னர்களுக்குள்ளே’ சண்டை சச்சரவுகளில் முடிவதும் உண்டு. இதற்கிடையே சாப்பாட்டு தட்டு சைஸுக்கு ஒரு முறுக்கு விற்பார்கள். இந்த ‘மெகா முறுக்கு’ டூரிங் டாக்கீஸில் மட்டுமே மெல்லக்கிடைத்ததே தவிர, இன்றுவரை வேறெங்குமே கிடைத்ததாக யாருமே சொல்லக் கேட்டதில்லை.
‘வெள்ளிக்கிழமை விரதம்’, ‘ஆதிபராசக்தி’ ‘தெவம்’ போன்ற பக்திப் படங்கள் ஓடும்போது செம அமர்க்களமே நடக்கும். பக்திப் பரவசமான காட்சிகள் வரும்போது... பார்த்துக்கொண்டிருக்கிற பல பெண்களுக்கு திடீரென அருள் வந்துவிடும். அதுவரை அப்பிராணியாக பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்கள்...தடாலடியாக ‘டேஏஏஏஏஎ’ என்று பெருங்குரலெடுத்து சத்தமிட்டு, வெறித்த முழிகளோடு, நாக்கைத் துருத்திக்கொண்டு சாமியாடுவார்கள். அவ்வளவுதான்...அருள் குரல் கேட்ட அடுத்த நொடியே படம் நிறுத்தப்பட்டு லைட் போடப்படும். சுற்றியுள்ளவர்கள் சாமியை சாந்தப்படுத்த முயற்சி செய்வார்கள். அப்படியும் சாந்தமாகவில்லை என்றால், உள்ளூர் பூசாரி வந்துதான் வேப்பிலை அடித்து சாமியை மலையேறச் செய்வார். இதுபோல அடிக்கடி ‘சாமியாடல்கள்’ நடப்பதைப் பார்த்து உஷாராகி விட்டார் டாக்கீஸ் ஓனர். ஒருகட்டத்தில் பக்திப்படங்கள் போடும்போதெல்லாம் உள்ளூர் பூசாரிக்கு ‘ஸ்பெஷல் பாஸ்’ கொடுத்து வரச்சொல்லிவிட்டார். வழக்கம்போல பெண்களுக்கு சாமி வந்ததும், விபூதியும் பையுமாக ரெடியாக இருக்கிற பூசாரி, ‘சாமியை’ மந்திரித்து மலையேறச் செய்துவிடுவார்.
இந்த இடைவேளையில் சுடச்சுட முட்டை போண்டா, முறுக்கு, டீ, காபி யாவாரமும் சூடு பிடித்து, கேண்டீன்(?)காரர் செம லாபம் அள்ளுவார். படம் விட்டு பொடிநடையாக வீடு திரும்பும் மக்கள், மனசு விட்டுப் பேசி அரட்டை அடித்துச் சிரித்தபடி நடக்கும் காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. எத்தனையோ டூரிங் டாக்கீஸ்கள் இன்றைக்கு கல்யாண மண்டபம், காம்ப்ளக்ஸ், ஃப்ளாட்டுகள் என்று அடையாளம் மாறிப் போனது போல, ‘பாண்டியன்’ டூரிங் டாக்கீஸ் இருந்த இடத்தில் இப்போது மர அறுவை மில் ஓடுகிறது.
.
இன்று சாதி, மத, அரசியல் என பல விஷயங்கள் மக்களை கூறு போடத் துடித்தாலும், அவர்களை ‘ஒரு தாய் மக்களாக’ அன்று ஒரே கூரையின்கீழ் ஒன்று சேர்த்து வைத்த பெருமை டூரிங் டாக்கீஸுக்கு உண்டு. அப்போதெல்லாம் டூரிங் டாக்கீஸுக்குள் முட்டை போண்டா விற்பவர் இப்படிக் கூவியழைப்பார்: ‘போனா வராது...பொழுதுபோனா கிடைக்காது’ என்று. என் பால்ய வயதில் டூரிங் டாக்கீஸ் தந்த சுகானுபவம் கூட அப்படித்தான். அன்றைக்குப் போன அந்தப் பொற்காலம் இனி வராது; விதவிதமாகப் பொழுது போனாலும் அந்த இனிமைகள் இப்போது கிடைக்காது.
COURTESY Muralikrishna
TOURING TALKIES OPENING SONG IN AANPAVAM
https://www.youtube.com/watch?v=7Z4QfCBUCCc
THALAIVAR WATCHING MOVIE IN TOURING TALKIES ( EN ANNAN MOVIE SONG NEELA NERAM)
https://www.youtube.com/watch?v=P2nWo2jLMkE
http://i1170.photobucket.com/albums/...ps3a16500c.jpg
U ntil two decades ago, evenings in Madurai meant movies. The entire town would descend on the streets and head to the theatres. Watching films was a ritual in this small town where every lane has a temple and where every turn once had a theatre.
“In the 1990's there were 52 theatres in Madurai city, out of which only 24 are functioning now. Before the 70's, ‘touring talkies' was very popular, in the city as well as the rural areas,” says Rm. M. Annamalai, State President of Tamil Nadu Theatre Owner's Association, “Later talkies became cinemas, benches were replaced with seats and the pole and tents gave way to concrete structures.”
Built in the 1930's, the Imperial Cinema was probably the first theatre to come up in temple town and ironically also the first one to be demolished 15 years ago. “From 1970 to the early nineties, there was spurt in the theatre business. Cinema going was a part of everyday entertainment those days,” recalls Annamalai, “There is a set of thirteen theatres in Madurai that can be called the oldest. Many are either shut down or have been pulled down, but Central, Vellaikannu and Regal are still functioning.”
Trophies and shields celebrating landmarks – ‘Sakala Kala Vallavan 150', ‘Padikkathavan 100' and so on – still decorate the showcase of the Central Cinema. Dusting them with care, D. Sundaram, the proprietor, says, “I feel proud whenever I see these trophies. Central was one of the sought-after theatre among movie buffs. We used to screen only two films per year and now it is two films per week. Films running for 100 or 200 days have become a thing of the past.”
“People run these old-time theatres as it is a prestige issue. Only old films are screened and there are audiences even today who come to watch MGR and Sivaji,” says Annamalai, “MGR hits like “Ayirathil Oruvan”, “Arasilangumari”, “Padakotti” and “Adimai Penn” and Sivaji starrers like “Manohara”, “Parasakthi”, “Vietnam Veedu” and “Vasantha Maligai” are evergreen movies that still draw people to the theatres.”
“MGR continues to be a phenomenon among movie lovers and many acknowledge that Madurai was much instrumental in making him the demigod. Our theatre is alive just because of MGR films” says E.M.G.S. Pothirajan, proprietor of Meenakshi Talkies and Meenakshi Paradise.
“Cinema was a strong tool at that time. Movies played a vital role even in politics. It was because of cinema that the DMK grew during the sixties” says Muthu, an MGR fan and an auto driver.
S. Ramadoss, an operator at Central, says, “Working in a cinema theatre was a matter of pride. I was the operator at Imperial Cinema and now at Central. It has been 35 years and I have seen technology change over the years.” Ramadoss's close association with cinema theatres earned him a short role in the film ‘Subramaniapuram' as an operator. “The scene in “Subramaniapuram” where people are shown fighting for tickets for ‘Murattu Kaalai' is a depiction of real trend that was once prevalent in major theatres in Madurai. It shows the craze people had for movies those days,” adds Ramadoss.
The women of Madurai have been known as movie enthusiasts. On weekend mornings theatres witnessed a huge rush of housewives. Decked in gold and the bests of Kanjivaram, the women dragged along their kids and carried tins full of murukkus, cheedais and athirasams – all to spend those three hours in reel-world. “It was common to watch three to four movies a week. I used to prepare snacks the night before and it was great fun buying tickets in the rush and groping in the dark to locate the seats,” remembers homemaker Dhanalakshimi, now in her sixties. “Finding the seat gave you a sense of thrill and achievement.”
She adds, “Cinema halls were the place where we forgot ourselves. We smiled and cried with MGR and Sivaji, enjoyed songs of M.S. Viswanathan and K.V. Mahadevan, cursed villains like P.S.Veerappa and Nambiar, worshipped K.R.Vijaya and Savithri when they played Goddesses and laughed our hearts out at the comedy of K.R. Ramachandran, A. Karunanidhi, Thangavelu and Nagesh.” Devotional films like ‘Rajakaliamman' and ‘Amman' had a strong following of women and theatres were treated as temples during the screenings.
N.M. Sivanathan, former owner of Chintamani Talkies says, “In olden days, theatre owners enjoyed a personal rapport with the producers and artistes. The trend of demanding a huge sum of money as Minimum Guarantee has left theatre owners in the lurch. Running a cinema hall has become much difficult and less profitable.”
Sivanathan's son Dr. N.M.S. Prabbakar beams, “Madurai was always considered the hot spot for films. Producers and celebrities paid often visits to theatres to gauge the pulse of audience. Chintamani enjoyed numerous such star visits.”
“The discerning Madurai movie-goer was considered difficult to convince and hence the town's response was always taken into consideration to judge a film's success. It was widely believed that if a movie makes it in Madurai, it will definitely be successful in the state,” says Iyyapan, an old-time film enthusiast.
Says Annamalai: “The current trend is mini multiplexes with capacities of 200 to 300. Air-conditioning and advanced facilities like 3D and DTS lure the audience. Only 10 percent of the film-goers continue coming to the regular theatres out of which five percent are choosy both about the films and the facilities provided. People now watch a film only if it is exceptionally good.”
This is taken from Ananda Vikatan Pongal issue 2009.
It tells about the experience of viewing MGR movie in a village touring talkies. The people are not more than 50 (highest) but MGR movies only gives collection.
http://i1170.photobucket.com/albums/...ps1a1a0c1d.jpg
Mgr fans experience in thoothukudi sathya touring talkies screnned continuously 100 week mgr films
தூத்துக்குடியில் எம்ஜிஆர்.,படப்பெட்டியுடன் சைக்கிள் பேரணி: திரளான ரசிகர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் எம்.ஜி .ஆர்.நடித்த படத்தின் படப்பெட்டி சைக்கிள் பேரணியாக தியேட்டருக்கு எடுத்து செல்லப்பட்டது. இதில் திரளான எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பங்கேற்றனர். “புரட்சித்தலைவர்’ என்று தமிழ்த்திரையுலக சினிமா ரசிகர்களால் அழைக்கப்பட்டுவரும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் திரைப்படத்திற்கு இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தூத்துக்குடியிலுள்ள சத்யா தியேட்டரில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தவறாமல் எம்.ஜி.ஆர். நடித்த படம் திரையிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சத்யா தியேட்டரில் எம்.ஜி.ஆர் நடித்த படம் 99 வாரங்கள் தொடர்ந்து ஓடியதை தொடர்ந்து அவர் நடித்த “ஒளிவிளக்கு’ படத்தின் படப்பெட்டி தூத்துக்குடி நகர எம்.ஜி.ஆர்.மன்றத்தின் சார்பில் யானை மீது வைத்து சைக்கிள் பேரணியாக தியேட்டருக்கு எடுத்துசெல்லப்பட்டது. தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலையில் இருந்து ஆட்டம்-பாட்டத்துடன் துவங்கிய சைக்கிள் பேரணிக்கு தூத்துக்குடி நகர எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ஏசாதுரை தலைமை வகித்தார். சைக்கிள் பேரணி எட்டயபுரம் ரோடு, கீழரெங்கநாதபுரம், வடக்குரத வீதி, 2ம் ரயில்வே கேட் மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று முடிவில் சத்யா தியேட்டரை சென்று அடைந்தது.
சைக்கிள் பேரணியில் வக்கீல்அணி துணைசெயலாளர் நட்டர்ஜி, மாணவரணி துணைசெயலாளர் சரவணகுமார், வட்ட செயலாளர் பெரியசாமி, திருமூர்த்தி, மாநகராட்சி கவுன்சிலர் வீரபாகு, மாநில எம்.ஜி.ஆர்.சமூகநல பேரவை தலைவர் நாராயணன், டைரக்டர் நீலகண்டன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாநில அமைப்புசாரா தொழிற்சங்க இணை செயலாளர் பெருமாள்சாமி, ஜெபராஜ், செல்லப்பா, மகேஷ்குமார், சைக்கிள் ரிக்ஷா தொழிலாளர்கள், கைவண்டித் தொழிலாளர்கள் மற்றும் எம்.ஜி.ஆர்.ரசிகர்கள் உட்பட பலர் திரளாக கலந்துகொண்டனர்.
FULL SONGS TAKEN IN OPERATOR ROOM FILM VEYIL
http://www.youtube.com/watch?v=th3plTrXYBQ
வேலூர் தொரப்பாடி கணேஷ் அரங்கம் 96 வது மக்கள்திலகம் பிறந்தநாள் விழா
http://i57.tinypic.com/296lldx.jpg
என்று எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
ஸ்ரீரங்கம் ரங்கராஜா திரை அரங்கு .இப்போது இயங்குகிறதா என்று தெரியவில்லை
https://encrypted-tbn2.gstatic.com/i...xXxkAf5UJrHM17
srirangam devi thirai arangu
http://ananthablahblah.files.wordpre...vi-talkies.jpg
ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்று எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதிய சிறுகதை தொகுப்பில் இந்த தேவி திரை அரங்கை பற்றி நிறைய எழுதி இருப்பார்
http://www.taipeitimes.com/images/20...-100403-a1.jpg
Children walk past the tent of Anup Touring Talkies traveling cinema at Shikhar Shingnapur, about 350km south of Mumbai.
புனே யில் இருந்து ஷிரிடி (சாய்பாபா ) கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ளது என்று நினைவு இந்த ஊர் .சனீச்வரன் கோயிலுக்கு புகழ் பெற்ற ஊர்
India's reels on wheels facing the end of the road
http://msnbcmedia.msn.com/j/MSNBC/Co...otoblog900.jpg
Two attendants sit at the entrance to traveling talkie cinema tents in the village of Ond, south of Mumbai, India.
Reuters photographer Danish Siddiqui reports on India's traveling cinema industry:
OND, India, Feb 16 - The sleepy village of Ond comes alive for a week every year when trucks loaded with tents and projectors reach its outskirts.
The tents are pitched in open fields, converting the trucks into projection rooms for screening the latest Indian blockbusters to exuberant villagers, who otherwise have few chances to see a film at all.
But now, this decades-old tradition known as the "talkie" is under threat in the face of cable television and a flood of pirated CDs and DVDs.
http://msnbcmedia.msn.com/j/MSNBC/Co...otoblog900.jpg
A truck used as a makeshift projection room is pictured in the village of Ond.
"People used to like touring cinemas a lot, but after these new modes of entertainment only about 10 percent of the people come here to watch films," said Anup Chadha, the owner of Anup Talkies, one such company.
Anup, 31, inherited the firm from his father, who started in the era of black and white and ran the company for 40 years.
In Ond, some 350 km (218 miles) south of Mumbai, India's cinema capital and home to its Bollywood film industry, three different companies of touring talkies show films of different genres, in a bid to attract as much of an audience as they can.
Each company runs five shows of three hours each, with the last film show ending at three in the morning. Tickets cost less than half a dollar, about 15 to 20 Indian rupees.
http://msnbcmedia.msn.com/j/MSNBC/Co...otoblog900.jpg
A man adjusts a film reel in a makeshift travelling talkie projection room set up on the back of a truck in the village of Ond.
The shows are packed with people of all ages, who stare raptly at the films as they are shown. Children jump and clap along with the scenes, although some lie down in their parents' laps as the hour grows late, eyes still fixed on the film.
For women, who often have few chances to leave the four walls of their homes, it is an eagerly awaited outing. Dressed in bright saris, they queue at ticket counters for what is one of their only forms of entertainment.
Despite this, though, the threat to the "tambu" - tent talkies -- looms larger every year.
"There were around 50 such tambu talkies in Satara district 10 years ago, but today only seven or eight are left," said Jaywant Thorat, 45, the owner of Ayodhya Talkies.
"We are running these theatres just because of our passion for it. If we shut down our tambu cinemas, regional cinema will find no audience since they don't show these films at multiplexes in the city," he added, referring to the fact that local language films are also shown.
http://msnbcmedia.msn.com/j/MSNBC/Co...otoblog900.jpg
Villagers sit inside a travelling talkie tent to watch a movie in the village of Ond.
Not all the owners are giving up without a fight.
Some have devised new marketing strategies, such as distributing packets of shampoo and pocket-sized pictures of film actresses with the tickets, but the money from this is small.
Anup Chadha forecasts that touring talkies will be extinct within five years if the government doesn't step in.
"Sometimes I want to shut down this business but there are so many people associated with this talkie that I hang on for them," he said.
If that happens, the only cinema available to people in the villages may come from local devotees such as Suresh, a farmer who is also the owner of Akshay Talkies and has converted a vintage truck to a projector room, using a tractor to pull it.
"We can't afford to go to watch a film in a theatre, especially with the nearest town being 70 km (43.50 miles) away from here," said Vikas Shinde, a farmer who waited eagerly at the counter to grab his ticket.
"These talkies are just 100 metres away from my house."
http://msnbcmedia.msn.com/j/MSNBC/Co...otoblog900.jpg
A man walks near posters advertising movies playing inside travelling talkie tents in the village of Ond.
http://www.karmakerala.com/news/wp-c...the-venues.jpg
திருவனந்தபுரம் நியூ திரை அரங்கு
நீலா production merryland சுப்ரமணியன் அவர்களுக்கு சொந்தமானது
திரு ராஜேஷ் அவர்கள் கூட merryland ஸ்டுடியோ பற்றி குறிப்பிட்டு உள்ளார் .
1950 களில் நாடகங்கள் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து, 1960 களில் முடி சூட்டி, 1970களிலும் கொடி கட்டி பறந்த சரித்திர நாயகர்கள் எம்ஜிஆர்-சிவாஜி. அதிக வருடங்கள் அடுத்த தலைமுறை நடிகர் கூட இல்லாத நிலை இவர்களின் காலங்கள். இவர்களின் ரசிகர்களே தமிழ் சினிமாவின் வெற்றி தோல்வியை
நிர்ணயிப்பவர்கள். இவர்களின் படங்களே திரைஉலகின் வாழ்வாதாரங்கள். இருவேறு கட்சிகளின் அனுதாபிகளாக தங்களை காட்டிகொண்டதாலே இவர்கள் இரு துருவங்களாக ஆக்கப்பட்டு, தமிழ் ரசிகர்களின் முதலிரு இடங்களில் கோலோச்ச வைத்தது. காங்கிரஸ் கட்சியின் நாயகனாக சிவாஜியும், திராவிட கட்சியின் நாயகனாக எம்ஜிஆரும் பார்க்கபட்டார்கள். குடும்ப சித்திரம், நடிப்பு, சரித்திர படங்கள், என்று சிவாஜி ஒரு புறமும், சமூக படங்கள், பொழுதுபோக்கு படங்கள் என்று எம்ஜிஆர் ஒரு புறமும் ரசிகர்களை தங்கள் பக்கம் மயங்க வைத்தார்கள். எம்ஜிஆர், சிவாஜி பற்றி சொல்லும் விஷயங்கள் அனைத்தும் அனைவரும் அறிந்ததே. ஆனால் ஆரம்பத்தில் திராவிட அனுதாபியாக இருந்து காமராஜரின் பால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் பக்கம் சென்றவர் சிவாஜி. காங்கிரஸ் அனுதாபியாக இருந்து அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு திராவிட கட்சியின் பக்கம் சென்றவர் எம்ஜிஆர் என்பது பலரும் அறியாத உண்மை. எம்ஜியார், சிவாஜி படங்கள் ஒன்றாக வெளியாகும் நாட்களே தீபாவளி போலானது. கிலோமீட்டர் கணக்கில் வரிசையில் நின்று, இரண்டு நாட்கள் கூட திரைஅரங்குகளின் நின்று படம் பார்த்த ரசிகர்கள் ஏராளம். அவையே திரையுலகின் பொற்காலமாக கருதப்பட்டது.
I think the Srirangam Rangaraja theatre is still running but i am not sure. In this theatre only I have watched Andaman Kadhali, Iru Nilavugal and
many other movies during summer vacation.
Regards
நன்றி சித்தூர் சார்
திருவானைக்காவல் வெங்கடேசா னு ஒரு திரை அரங்கு .நிறைய பிட் படம் போடுவாங்க .அது இருக்கா இப்ப
http://upload.wikimedia.org/wikipedi...er%2C_1931.jpg
Alam Ara poster, 1931
On March 14 , 1931 Indian cinema created history . First Hindi talkie ” ALAM ARA “ made by Ardeshir Irani was released on this very day in the Majestic cinema of Bombay [ now Mumbai ] Though , ” RAJA HARISCHANDRA ” , first ever full – length silent feature film of India was made by Dada Saheb Phalke , the pioneer of Indian cinema , in 1913.
http://upload.wikimedia.org/wikipedi...0px-Phalke.jpg
Dada Saheb Phalke - Father of Indian Cinema
http://upload.wikimedia.org/wikipedi...ishchandra.jpghttp://upload.wikimedia.org/wikipedi...ra%2C_1913.jpg
A rare still in Raja Harishchandra
http://upload.wikimedia.org/wikipedi...ra%2C_1931.jpg
A rare still in Alam ara
http://upload.wikimedia.org/wikipedi...amAraStill.jpghttp://upload.wikimedia.org/wikipedi...px-AlamAra.jpg
The name of the actors , who played major role in ” ALAM ARA ” , is worthy of notice for the today’s film connoisseurs. Apart from Master Vithal and Zubeida Begum Dhanrajgir [ known as Zubeida ] , it had singer Wazir Mohammad Khan as a faqir. Three prominent actors , who were part of the cast of ” ALAM ARA ” and who played major role in the talkie era and are known to today’s generation also , were Prithvi Raj Kapoor , Jillo Bai and L. V. Prasad .
t is sad that no print of the epic movie ” ALAM ARA “ is available today. This part of our history is lost for ever and no one is bothered . Ardeshir Irani’s path-breaking film is lost forever.
Trichy Jupiter - Thyagam
Trichy Raja - Nallathoru Kudumbam
Trichy Ramba - Krishnan Vandahan
Trichy Marris - Thai Naadu
Tricy Sona - The Living Day Lights
The above movies are seen by at Trichy during summer vacation.
Now most of the theatres have been closed or changed as shopping malls.
Regards
Regards
South Mumbai and Old Theaters Details
The era when Rajesh Khanna, Jitendra like actors rocked and Amitabh Bachchan Zanzeer released in cinema theaters of south Mumbai locations like Grant Road, Opera House and Mumbai Central was to be seen, These old theaters then had ticket costing Rs.1 and Rs 2.50. The then called Talkies use to be jammed packed with people watching 2 to 3 shows continuously of movie goes hit, That golden era of Indian cinema turned from Black and white to Color and so the old theaters were dilapidated and the new trend of multiplex arise in starting years of 2000 when chains like Big Cinema, Cinemax, Fame and Broadway are leading the talkies industries.
So what about those old theaters now, Are they closed ? and the answer is no the show still goes on, But now its nothing latest of those movies so more, rarely one can find new movies released and be screened in the list of old talkies of Mumbai as listed below. Almost all of these cinema house features Bhojpuri, Tamil, Telugu films, some times those old Bollywood hits too and some and most of them also show semi-adult movies that attracts the labor class, beggars at cost of Rs.25 and somewhere around. That is the entertainment in those talkies now a days for survival. Below are list of such theaters in South Mumbai locations like Grant Road, Mumbai Central and Opera House.
Maratha Mandir at Mumbai Central : DDLJ ( Dilwale Dulhaniya Le Jayenge ) movie is the first thing that comes in mnd when we get the name of this one of the very old theaters located at Mumbai Central East. And who will forget that royal entrance of legendary actor Dilip Kumar riding on Horse and theater location filled with Elephants on premier day of the royal film ‘Mughal-E-Azam’ which kept running for next 6 years since 1960, Wow. Till date the ticket cost at Maratha Mandir is like Rs.25, Rs.35 and below Rs.100.
http://www.mumbai77.com/Pictures/Gal...dir-Cinema.jpg
The very first movie to get premiered here was Sunil Dutt’s Sadhna. This theater is old yet cannot be said outdated as DDLJ is still featured in Rs.25 and weekends are filled now also
Royal Talkies, Grant Road : Before it started screening Bollywood movies in 1930’s, Since it started in 1911, Royal theater was known to show small documentaries shot and stage plays during Old Mumbai days. With seating capacity of 600 people, hardly any heads are seen now. Located at Royal Cinematography, M Saukatali Road, Mumbai Central, this is one of those beautiful memories of old talkies still in shape to be watched when along the way.
http://www.mumbai77.com/images/newbl...al-Theater.jpg
Edward Theater, Dhobi Talao : Historically this old theater was named after Kind Edward since 1914. Edward is best known for Mythological classic of all time called ‘Jai Santoshi Maa’ that released in 1974, now this is funny to hear but in those days it really happened outside this old theater, Womens from around area got so into the role played and spiritual Maa Santoshi of that movie that they came in well traditional dress with diya and thalis in front of screen (was allowed that time) to pray godess inside theater.
http://www.mumbai77.com/images/newbl...rd-Talkies.jpg
New Roshan talkies, Grant Road : Exactly opposite Delhi Darbar at 195/197, Patthe Bapu Rao Marg is this old memory of Mumbai cinema called New Roshan Talkies, Started in 1930 with ticket rates till date at Rs.15 and Rs.20 attracting poor to watch the rerun movies since it started by a Parsi family in Mumbai, now with Mr Iqbal who takes care of theater with some of other changes like chairs and furniture with time and little profit.
http://www.mumbai77.com/images/newbl...an-Talkies.jpg