Designed by Dr PS Ramesh Babu, the Medical Officer of Tamil Nadu Agricultural University, Coimbatore Hospital
drpsrameshbabu@gmail.com
https://mail.google.com/mail/u/0/?ui...2&disp=safe&zw
https://mail.google.com/mail/u/0/?ui...1&disp=safe&zw
Printable View
Designed by Dr PS Ramesh Babu, the Medical Officer of Tamil Nadu Agricultural University, Coimbatore Hospital
drpsrameshbabu@gmail.com
https://mail.google.com/mail/u/0/?ui...2&disp=safe&zw
https://mail.google.com/mail/u/0/?ui...1&disp=safe&zw
Designed by our ardent NT fan Dr Ramesh Babu of TNAU Hospital Coimbatore-3
https://mail.google.com/mail/u/0/?ui...2&disp=safe&zw
https://mail.google.com/mail/u/0/?ui...1&disp=safe&zw
Designed by Dr Ramesh Babu from Coimbatore, yet to become a member
https://mail.google.com/mail/u/0/?ui...2&disp=safe&zw
https://mail.google.com/mail/u/0/?ui...1&disp=safe&zw
https://www.youtube.com/watch?v=zpd0...FZNyi3mTALNtmQ
செந்தில்வேல்
தாங்கள் தேர்ந்தெடுக்கும் பாடல்கள் சூப்பரென்றால், அதற்குத் தரும் விளக்கம் இன்னும் சூப்பர்.
தங்கள் பதிவைப் படித்தவுடன் எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்...
சென்னை சாந்தியில் முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர்கள் சற்றே சோர்வடையும் நேரத்தில் இந்தப் பாடலும், யாரோ நீயும் நானும் யாரோ பாடலும் அழற்சியைப் போக்கி தெம்பை ஊட்டின. தேவதை பாடலும் நடிகர் திலகத்திற்கே கிடைத்திருந்தால் இன்னும் அமர்க்களமாக இருந்திருக்கும்.
எங்கெங்கோ செல்லும் பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் சிவப்பு மற்றும் கருநீல மேலங்கிகள் அவ்வளவு அழகாக அவரை எடுத்துக் காட்டியது சிறப்பாக இருந்தது. அதுவும் கல்லானவன் எனத்துவங்கும் அந்த மூன்றாவது சரணத்திற்கு முன் வரும் பின்னணியின் போது ஒலிக்கும் கிடார் இசையின் போது, இருவரும் தரும் அந்த Jerk, body twist with mild and slight movements, ஆஹா காணக் கண்கோடி வேண்டும்..
படத்தை விடுங்கள். அது எப்படியோ போகட்டும்.
தலைவருக்கு பாடல் காட்சிகள் இப்படத்தில் சூப்பர்.
http://cinema.dinakaran.com/Karan_im...-news-7093.jpg
இளையராஜாவிற்கு நமது உளமார்ந்த பாராட்டுக்கள்.
இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்தப் பாடலுக்கென்று தனியாக ரசிகர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்.
On behalf of this prestigious NT thread we welcome many more contributions from our ardent NT fan Dr P S Ramesh Babu, from Coimbatore
senthil
வாசு,
அழகான காட்சி! அற்புதமான போஸ்! அருமையான எழுத்து!
[நெஞ்சிருக்கும் வரை பற்றி இவ்வளவு தாமதமாக எழுதுவதற்கு மன்னிக்கவும்].
நெஞ்சத்தில் உள்ளதையெல்லாம் கொட்டி எழுதியிருக்கிறீர்கள். ரகுராமனும், சிவராமனும் ராஜேஸ்வரியும் பீட்டரும் மறக்க முடியாத பாத்திரங்கள். நட்பையும் நம்பிக்கையையும் அழுத்தமாக சொன்ன படம். உறவுகளை விட நட்பு மனித நேயம் உயர்ந்தது என்பதை அழுத்தமாக சொன்ன படம். வெளியே முறைப்பாக காட்டிக் கொண்டாலும் உள்ளே ஈர பசையுடன் இருக்கும் மனதிற்கு சொந்தகாரராக விஎஸ் ராகவனுக்கும் மறக்கமுடியாத ரோல்.
நமது பாட்டுடை தலைவனை பற்றி நினைக்கும்போதெல்லாம் பிரமிப்பாக இருக்கும். ஒரு மனிதன் அதிலும் ஒரு நடிகன் அதிலும் உச்சத்தில் நிற்கும் ஒரு நடிகன் மேக்கப் இல்லாமல் அதுவும் ஒரு கருப்பு வெள்ளை படத்தில் மேக்கப் இல்லாமல் நடிக்க அதுவும் ஆரம்பம் முதல் முடிவு வரை அது போல் தோன்ற ஒப்புக் கொள்ள வேண்டுமென்றால் எத்துனை தைரியம் வேண்டும்? தன் மீதும் தன் திறமை மீதும் தன் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் மேல் எத்துனை நம்பிக்கை வேண்டும்? இவையனைத்தும் நிரம்ப பெற்றதனால்தான் அவரால் இது போன்ற பல சோதனை முயற்சிகளில் ஈடுபட முடிந்தது. வாழ்க்கையில் ஒப்பனை செய்துக் கொள்ளாதவர் அல்லவா அதனால் திரையிலும் தேவைப்படவில்லை.
நீங்கள் குறிப்பிட்ட அந்த காட்சி மறக்கவே முடியாத ஒன்று. அந்த உடல் மொழி அசாதாரணமாக இருக்கும். நட்போடு ஆரம்பித்து கண்டிப்போடு முடியும். அந்த அட்டகாசமான நடை திரும்புதல் அப்புறம் அந்த போஸ் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒன்று. தியேட்டர்களில் கைதட்டல்கள் காதை கிழிக்கும். Spontaneous என்று சொல்வார்களே அது போல் தன்னிச்சையாக ரசிகர்கள் கைதட்டுவார்கள்.
எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. 1979-ம் வருடம் மாதம் நினைவில்லை. மதுரை அலங்காரில் நெஞ்சிருக்கும் வரை வெளியாகியிருக்கிறது. சனிக்கிழமை மாலைக்காட்சி. நிறைந்த கூட்டம். ஆங்காங்கே ஆர்ப்பரிப்பு இருந்தாலும் ஞாயிறு மாலைக்காட்சிக்கு நடைபெறும் அலப்பரை போல் இல்லாமல் ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது இந்த குறிப்பிட்ட காட்சி வந்தது. அந்த குறிப்பிட்ட இடம் வந்தபோது எழுந்த பலத்த கைதட்டல் சத்தம் என்னருகே அமர்ந்திருந்த ஒரு வயதானவரை திடுக்கிட செய்துவிட்டது. கிட்டத்தட்ட அவரை பிடித்து குலுக்கியது போல் உணர்ந்திருப்பார் என நினைக்கிறேன். நான் அவரை கவனிப்பதை பார்த்ததும் லேசான சிரிப்பை உதிர்த்துவிட்டு திரும்பிக் கொண்டார். தியேட்டரில் அப்படி ஒரு ரியாக்ஷன் ஏற்படுத்தக்கூடிய ஒரு காட்சியை அழகாக வர்ணித்து சுவையூட்டியதற்கு நன்றி.
அன்புடன்
வாசு, அப்புறம் இரண்டு விஷயம். உங்கள் ஊருக்கு பக்கத்தில் உள்ள மந்தாரக்குப்பத்தில் அவன்தான் மனிதன் பார்த்த சுவையான நினைவுகளை நண்பர் ஒருவர் பகிர்ந்துக் கொண்டார். உங்கள் ஞாபகம்தான் வந்தது.
இரண்டாவது முக்கியமானது, உங்கள் ஆண்டனியின் மகள் மேரியை சந்தித்தோம். பேசினோம். சொல்ல வேண்டுமா அப்போதும் உங்கள் நினைவுதான்!
ரவிகிரண் சார்,
தங்களின் உளப்பூர்வமான பாராட்டுதல்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.
'வீரபாண்டியக் கட்டபொம்மன்' முன்னோட்ட வீடியோவிற்கு சந்தோஷமான நன்றிகள். தங்கள் விடா முயற்சியில் இந்த முன்னோட்டத்தை நாங்கள் கண்டு அனுபவிக்கிறோம்.
முரளி சார்,
மிக்க நன்றி! 'நெஞ்சிருக்கும் வரை' நினைவுகள் அருமை. நமக்குப் பிடித்த அந்த அற்புதக் காட்சியை ஏனைய அனைவரும் ரசிக்கும் விதத்தை அழகாகச் சொல்லி இருந்தீர்கள்.
சிவராமன் பெயரை மறக்க முடியாது. அதுவும் எங்கள் குடும்பத்தினர் அந்தப் பெயரை மறக்கவே இயலாது. ஏனென்றால் என்னுடைய அம்மாவிற்கு சிவராமன், சீதாராமன் என்று இரு தம்பிகள். இதில் மூத்தவர் சிவராமன். என்னுடைய மாமா. இவர் நடிகர் திலகத்தின் தீவிர பக்தர். இவருடன்தான் 'சிவந்த மண்' கடலூர் ரமேஷ் திரையரங்கில் 09.11.1969 அன்று முதல் காட்சி, காலைக்காட்சி போய் பார்த்து, கூட்டத்தில் சிக்கி உடல் சிவந்து போய் உயிரோடு திரும்பி வந்தேன். போலீஸ் லத்தி பதம் பார்த்ததில் கையெல்லாம் காயம். அப்போது வயது எனக்கு சரியாக எட்டு. மாமாவிற்கும் இளம் வயது. இருபது வயதுதான். குடும்பத்தில் ஆறு பேர் பெண்களாக இருக்க இருவர் மட்டுமே ஆண்கள். மாமா சிவராமன் மிகுந்த கண்டிப்பானவர். நீங்கள் குறிப்பிட்ட மந்தாரக்குப்பம்தான் ஜாகை. தாத்தா அப்போது உயிருடன் இல்லை. இறந்து விட்டார்கள். பாட்டி மட்டுமே. குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பும் மாமாவின் கையில். அதுவும் அந்த இளம் வயதில்.
அந்த தெருவே எங்கள் மாமாவைக் கண்டால் கிடுகிடுக்கும். அந்த இளம் வயதிலேயே சிங்கம் மாதிரி அந்த ஏரியாவிற்கு அவர். நான் அவர் முகத்தை ஏறிட்டும் பார்த்து பேசியது கிடையாது. தலைவரை கணேசன் என்றுதான் மாமா உரிமையுடன் அழைப்பார். விடுமுறைக்கு மந்தாரக் குப்பம் சென்றால் தலைவரின் படங்களுக்கு என்னை மறக்காமல் கூட்டிச் செல்வார். குடும்பத்தில் மூத்த ஆண்பிள்ளை. மாமா இருக்கும் தெருவில் வாலிபப் பிள்ளைகள் தெருவில் நடமாடவே பயப்படுவார்களாம்.
அப்படிப்பட்டவர் இளம் வயதிலேயே 1971 ல் எதிர்பாராவிதமாக காலமாகி விட்டார். அதிர்ச்சியில் அனைவரும் உறைந்து விட்டோம். அம்மாவிற்கு மாமா மேல் மூத்த தம்பி என்பதால் நிரம்பப் பிரியம். மேலும் வறுமை நிலையில் உழன்ற குடும்பம். அம்மாவுக்குக் கல்யாணம் ஆகி விட்டதால் மீதி உள்ள 5 பெண்களையும் கரையேற்ற வேண்டிய பொறுப்பு சிவராமனுக்கு. அதையும் அவர் பொறுப்பாக செய்து வந்தார். அப்படிப்பட்டவர் நாங்கள் யாருமே எதிர்பாராத வகையில் காலனிடம் சென்று விட்டார். எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.
அம்மா வேறு அப்போது குடும்ப அறுவை சிகிச்சையை துணிந்து ஏற்ற முதல் பெண்மணி. அப்போது குடும்ப அறுவை சிகிச்சை என்பது இன்னொரு கண்டம் போல. ஆரம்ப காலம். யாருமே செய்து கொள்ள அஞ்சுவார்கள். அதனால் அம்மாவுக்கு அந்த அறுவை சிகிச்சையிலிருந்து அடிக்கடி மயக்கம் வந்து விடும். சுயநினைவை இழந்து விடுவார்கள். ஒரு அரை மணிநேரம் சென்றதும் மயக்கம் தானாக சரியாகி விடும். ஆனால் அந்த மயக்க நிலையிலும் அவர்கள் சில சமயங்கள் எழுந்து நடமாடுவார்கள். ஆனால் அவர்களுக்கு தன் நிலைமை என்னவென்று தெரியாது. அந்த நிலையிலேயே அடுப்பு பற்ற வைப்பார்கள். பாத்திரம் துலக்குவார்கள். சமைப்பார்கள். ஆனால் தான் யாரென்று அவர்களுக்குத் தெரியாது. மயக்கம் தெளிந்ததும்தான் அவர்களுக்கு தான் யாரென்றே தெரியும்.
நான் அப்போது சிறு வயது ஆதலால் அம்மாவின் இந்த நிலைமை கண்டு பயப்படுவேன். அம்மா மயக்கமானால் கிட்டே போக மாட்டேன். மயக்கம் தெளிந்து அம்மா என் பெயரைச் சொல்லி அழைத்தால்தான் அருகே செல்வேன்.
அப்படிப்பட்டவர்கள் தன் தம்பி, அதுவும் இளம்வயது தம்பி, அந்தக் குடும்பத்தையே, அதுவும் இன்னும் 4 தங்கைகள், ஒரு தம்பி என்று அனைவரையும் கரையேற்ற வேண்டிய தம்பி (இன்னொரு அக்காவிற்கு அதாவது எனது சித்திக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார் மாமா) இறந்து போனதை தாங்கவே முடியாமல் அம்மா துடிதுடித்துப் போய் விட்டார்கள்.
அடிக்கடி தன் தம்பியின் திடீர் மறைவால், அதிக துக்கத்தில், ஏற்கனவே அம்மாவிற்கு அடிக்கடி வரும் மயக்கம் அதிகமானது. ரொம்ப சிரமப்பட்டோம். நான் கடலூர் துறைமுகத்தில் பத்தாம் வகுப்புவரை பாட்டி வீட்டில் தங்கிப் படித்ததால் வாரம் ஒருமுறை அம்மா இருக்கும் ஊர் சென்று சனி ஞாயிறு அவர்களுடன் தங்கி விட்டு திங்கள் அன்று திரும்ப ஸ்கூலுக்கு வந்து விடுவேன். அம்மாவுடன் தங்கியிருக்கும் அந்த இரு நாட்களிலும் கூட அவர்கள் சில மணி நேரங்கள் மயக்கமாகி விடுவார்கள். வயது ஏற ஏற எனக்கு பயம் தெளிந்து அம்மாவின் அருகிலேயே இருப்பேன் அவர்களுக்கு மயக்கம் தெளியும்வரை. அப்பா வேலைக்குப் போய் இருக்கும் போது கூட பல தடவை அம்மா சுயநினைவிழந்து இருப்பார்கள். என்னுடன் பிறந்த சகோதர சகோதரிகள் அப்போது மிகச் சிறிய வயது. தவிரவும் அதில் ஒரு தங்கை இன்னொரு சொந்தக்காரார் வீட்டில் தங்கிப் படித்து வந்தாள். தம்பியும், என் பெரிய தங்கையுமே இருப்பார்கள். தம்பி கைக்குழந்தை. பெரிய தங்கை விவரம் புரியாத சிறுமி.
மாமாவின் நினைப்பு அதிகமானதால் அம்மா மிகவும் கவலையில் நொந்து போனார்கள். (இன்னும் கூட நினைத்துக் கொண்டு அழுதபடி இருப்பார்கள்)
இப்போது விஷயத்திற்கு வருகிறேன். 'நெஞ்சிருக்கும் வரை' படத்தில் தலைவர் பாடும் 'பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி' பாடலில் 'திருவளர்ச்செல்வன்' சிவராமனுக்கும், திருவளர்ச்செல்வி' ராஜேஸ்வரிக்கும்' என்ற வரிகள் வருமல்லவா?! மாமா இறந்து கொஞ்ச நாட்கள் சென்று ஒரு விடுமுறைக்கு நான் அம்மா வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது ரேடியோவில் இந்தப் பாட்டைப் போட்டு விட்டார்கள். அதுவரை நன்றாக இருந்த அம்மா அந்தப் பாட்டில் இந்த வரிகளில் 'சிவராமன்' என்று கேட்டதும் 'தொப்'பென்று மயக்கமாய்க் கீழே விழுந்து விட்டார்கள், பாடலில் 'சிவராமன்' என்ற தம்பி பெயரை கேட்டதும் தம்பி ஞாபகம் வந்து இந்த நிலைமை. அப்புறம் அரைமணி நேரம் சென்று முகத்தில் தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தியதும் நார்மல் ஆனார்கள்.
அதிலிருந்து இந்தப் பாடல் எப்போது எந்த வானொலியில் ஒலி பரப்பினாலும் அதுவும் அம்மா இருக்கும் போது ஒலி பரப்பினால் நைஸாக ஓடோடிச் சென்று ரேடியோவை 'ஆப்' செய்து விடுவேன். (நல்ல வேளை. தொலைக்காட்சிகளில் அதிகம் இந்தப் பாடலைப் போடுவதில்லை) எங்கே மயக்கமாகி விடப் போகிறார்கள் என்ற பயத்தில். பேச்சை மாற்றி விடுவேன். இன்றும் கூடத்தான். அந்த சம்பவம் என் மனதில் ஆழமாகப் புதைந்து விட்டது. அம்மாவைவிட நான் அதிகம் பயப்படுவேன் இந்தப் பாட்டிற்கு இப்போதும்.
எனக்கும் அந்த பாடலை இப்போது கேட்டாலும் எங்கள் குடும்பம் பட்ட வேதனை, மாமா இறந்த சோகம், அம்மாவின் மயக்கம் என்று மனதில் துக்கம் பீறிடும். நம் ரகுராமன் தன் தங்கை ராஜேஸ்வரிக்கு சிவராமனைத் திருமணம் முடித்து வைத்து அழகு பார்த்தான். எங்கள் குடும்பத்து சிவராமனோ தானும் திருமணம் முடிக்காமல், தங்கைகளுக்கும் திருமணம் முடிக்காமலேயே (தீவிர தலைவர் பக்தன் வேறு) சகோதரிகள் அனைவரையும் நிர்க்கதியாக்கி தவிக்க விட்டு விட்டு இளைஞனாய் இருக்கும் போதே இறைவனடி சேர்ந்துவிட்டான்.
இன்னொரு ஆறுதலான விஷயம். காலப் போக்கில் அம்மாவுக்கு அடிக்கடி வரும் வந்த அந்த மயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி விட்டது. ஆனாலும் எப்போதாவது ஒருமுறை இன்னும் கூட எட்டிப் பார்ப்பதுண்டு.
மன்னிக்க வேண்டும் முரளி சார். எங்கள் குடும்பக் கதையைச் சொல்லி உங்களை சங்கடப்படுத்தி விட்டேன். எனக்கு அந்தப் பதிவைப் பதிவிடும்போதே இந்த நினைவு முழுக்க இருந்து அப்புறம் கொஞ்சம் மறந்தது. இப்போது நீங்கள் சிவராமன் என்று பெயரைக் குறிப்பிட்டிருந்ததும் மீண்டும் அந்த நினைவு வந்துவிட்டது.
இன்றுவரை அம்மாவை அந்த பாட்டை நான் கேட்கவே விடுவதில்லை. எங்கள் குடும்பத்தில் இந்தப் பாட்டிற்கு இப்படி ஒரு பின்னணி உண்டு.
எங்களை என்றும் சோகத்தில் ஆட்டி வைக்கும் பாடல்.
https://youtu.be/35rQjjzAlmA
நெய்வேலியார் அவர்களுக்கு பாலகாட்டார் எழுதும் மடல்
தங்களுடைய எழுத்தினை என்னவென்று பாராட்டுவது...! இது கேள்வி சார் ! உண்மையிலயே தெரியவில்லை...அந்தளவிற்கு ஒரு தர உச்சம் !
கட்டபொம்மன் திரைகாவிய முன்னோட்டம் - விடா முயற்சி என்பது ஒருபுறம் இருந்தாலும் தலைவரின் அருள் இதுதான் உண்மை ! நான் எதிர்பார்க்காத ஒருவரிடமிருந்து எனக்கு இது கிடைத்தது என்றால் அது அவர் அருள் அல்லாமல் எப்படி ?
அன்புடன்
rks
https://scontent-sin1-1.xx.fbcdn.net...91&oe=565B9F25
Kalam Sir, Our salutes to you. We dream of greater India, scientific India, self-dependent India,
We love you. We love Kamaraj. We love Sivaji Ganesan.
You are not a politican.
But you are a role model.
You are people's President.
We saw Kamaraj and Sivaji in you.
We must elect a person,
who adores you, vows to rule as you, Kamaraj and Sivaji Ganesan, a role model,
Kamaraj, undoubtedly, the only leader whose period was a golden rule for Tamil Nadu.
People knew him.
Kalam - People know you. You are a people's President.
Sivaji Ganesan - was a failure only in elections, not in politics. But he was a true follower of Kamaraj. He was honest. He was outspoken. He was a down to earth person.
People don't know him as a leader - able administrator - man of highest calibre in public administration.
We are sure, a leader who vows to follow these leaders, will definitely bring the golden period for Tamil Nadu. The best tribute we can give you, is to choose such a person as our administrator.
May your Soul Rest in Peace.
The last rites for our honorable simpleton People's erstwhile President of India Dr. APJ Abdhul Kalaam are on the anvil.
May his soul rest in peace even as his vision for having prompted our younger generation to 'dream' to become the cream of our national development would remain a mission under his eternal guidance
https://scontent-nrt1-1.xx.fbcdn.net...96&oe=5647CEF3
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல, எவரும் எட்டாத அதிசியம்...
மக்கள்தலைவர் சிவாஜி சிவாஜி அவர்களின் 14வது நினைவுநாளையொட்டி நாம்தமிழர் கட்சி சார்பில் திரு.செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 26.7.2015 அன்று மாபெரும் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திரு.சீமான் அவர்கள் நமது தலைவரை பற்றி ஒரு மணி நேரம் பேருரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் அகிலஇந்திய சிவாஜி மன்றத்தின் செயலாளர் திரு.முருகவிலாஸ் நாகராஜன் அவர்கள், சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் திரு.சந்திரசேகரன் அவர்கள், அகிலஇநதிய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் செயல்தலைவர் திரு.நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாடு போல் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்தில் திரு.சந்திரசேகரன், திரு.நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா ஆகியோர் உரையாற்றியபோது தலைவரைப் பற்றி தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நாம்தமிழர் கட்சி தலைவர் திரு.சீமான் அவர்களுக்கு உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும், சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் நன்றியை காணிக்கையாக்குகிறோம்.
இந்நிகழ்ச்சியின் நிழற்படங்களை காண visit... www.sivajiganesan.in
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல, எவரும் எட்டாத அதிசியம்...
தமிழகத்தில் பிறந்து தங்களுடைய தொழில் பக்தி, தொழில் நேர்த்தியால் உலகபுகழ் பெற்ற தமிழகத்தின் பெருமைகலான நடிகர் திலகம் மற்றும் கலாம் அவர்களிடம் உள்ள ஒற்றுமை பாருங்கள் தோழர்களே.
இரு விஞ்ஞானிகளும் அக்டோபர் மாதம் பிறந்து.... ஜூலை மாதம் இப்பூவுலகை விட்டு பிரிந்தார்கள் -
உலகபுகழ் பெற்ற உண்மையான மண்ணின் மைந்தர்களிடையே உள்ள ஒற்றுமை .....வியக்கவைக்கிறது !
மறைதிரு கலாம் அவர்களின் படிப்பை தனது நடிப்பில் கொண்டுவந்து காட்டிய நமது நடிகர் திலகம் - குழந்தைகள் கண்ட குடியரசு திரைப்படத்தில் 103 வயதுள்ள விண்கல விஞ்ஞானியாக !!
http://i501.photobucket.com/albums/e...psio0flbvq.png
" இராமேஸ்வரத்தில் பாவங்கள் தினந்தோறும் கழிக்கப்படும் . ஆனால் தற்போது புண்ணியம் விதைக்கப்படுகிறது !!"
இன்று ஒரு வினோதமான நாள் . - இரண்டு உடல்கள் மண்ணுக்குள் செல்லும் நாள் . இந்த இரண்டு ஆத்மாக்குள்த்தான் எத்தனை எத்தனை வித்தியாசங்கள் , முரண்பாடுகள் .....
ஒற்றுமை
இரண்டு ஆத்மாக்களும் மிகவும் பிரபலமானவை - உலகமே திரும்பி பார்க்க வாய்த்தவைகள் . Both were involved with missiles !!
முரண்பாடுகள் / வேற்றுமைகள்
1. ஒரு ஆத்மா உலக அரங்கில் நம் பெருமையை உயர்த்தியது . எழுச்சி உள்ள இந்தியாவாக வர கனவு காணுங்கள் என்று வலியுறுத்தியது - கனவுகள் கண்டால் தான் உங்கள் கனவுகள் நிஜமாகும் என்று இளய தலைமுறையைத்தட்டி எழுப்பியது . மனிதன் என்ற போர்வையில் வலம் வந்தது அந்த தெய்வம் .
2.உலக அளவில் எல்லோரையும் வெட்கி தலை குனிய வைத்தது இன்னொரு ஆத்மா . அது கனவு கண்டவர்களை சுட்டு வீழ்த்தியது .- பலரின் கனவுகள் மலராமல் மண்ணில் புதைந்தன . மனிதன் என்ற போர்வையில் திரிந்து கொண்டிருந்தது அந்த மிருகம் .
3. புனிதமான குறிக்கோள் - தளராத உழைப்பு --- ஒரு ஆத்மாவிற்கு
தவறான பாதை , தவறிய குறிக்கோள் , வீணாகி விட்ட வாழ்க்கை - இன்னொரு ஆத்மாவிற்கு .
( one had a vision and the other was on a misplaced mission.)
4. இலட்சம் , இலட்சம் மக்கள் கடைசி மரியாதை செய்ய விரும்பினர் - போக்குவரத்து ஸ்தம்பித்தது ஒரு ஆத்மாவின் பூத உடலை கடைசி முறை தரிசிக்க .
5. இலட்சம் , இலட்சம் மக்கள் வேண்டினர் இன்னொரு ஆத்மாவின் உடல் சீக்கிரம் மண்ணில் விழ ....
6. இரு ஆத்மாக்களில் ஒருவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்து அந்த இடத்திற்கு பெருமையை சேர்த்தவர் . அவருக்கு இளாயதலை முறையின் மீது நம்பிக்கை இருந்தது இந்தியாவை ஒரு வல்லரசு நாடாக அவர்கள் சீக்கிரம் கொண்டு வருவார்கள் என்று .
7. இன்னொரு ஆத்மாவிற்கு கடைசி வரை நம்பிக்கை இருந்தது இந்த நாட்டின் ஜனாதிபதியின் மீது - தனக்கு கருணை புரிவார் என்று . ( one was ex president and the other' s last hope was the president!)
8.இறந்தும் நம்மிடையே வாழப்போவது ஒரு ஆத்மா ! வாழும்போதே நம்மிடையே இறந்துபோனது இன்னொரு ஆத்மா . விதியின் விளையாட்டு - இரு உடல்களும் இதே மண்ணுக்குள் இன்று உறங்க செல்கின்றன !!!!
என்றும் நம் நினைவில் வரும் தலைவரின் பாடல் தான் இன்றும் கண்ணில் தெரிகின்றது -- யாரடா மனிதன் இங்கே ???
https://www.youtube.com/watch?v=_TQqVSwWd1A
https://www.youtube.com/watch?v=QAlApi1dE_M&sns=fb
Sun TV Programme Vanga Pesalam, dedicated to the memory of NT.
நாம் பெற்ற செல்வம் நடிகர் திலகம் .... ஒரு நினைவு கூறல்!
நடிகர்திலகத்தின் பாந்தமான ஜோடிகளில் ஜி வரலக்ஷ்மியும் முக்கியமானவர். நான் பெற்ற செல்வம் திரைப்படத்தில் சற்றே தனது பேரர் விக்ரம் பிரபுவை நினைவு படுத்தும் தோற்றப் பொலிவில் குடும்பப் பாங்கான வரலக்ஷ்மியுடன் நடிகர்திலகம் மனதை ஈர்த்த பாடல் காட்சியமைப்பு !!
https://www.youtube.com/watch?v=q2nxXYj52CM
மீண்டும் ஹரிச்சந்திராவில் நடிகர்திலகம் இணைவில் மனத்தைக் கொள்ளை கொண்டார் !
குளோசப் காட்சிகளில் நவரச பாவங்காளையும் சீராக வெளிப்படுத்துவதில் உலக நம்பர் ஒன் நடிகர்திலகமே !
பாடல் காட்சி முழுவதும் குளோசப்...நினைத்துக் கூடப் பார்க்க முடியாதே வேறு எந்த நடிகராலும்......!
https://www.youtube.com/watch?v=_ongMRRVZrk
வாசு,
மன்னிக்கவும். நெஞ்சிருக்கும் வரை படத்தில் முத்துராமன் ஏற்றிருந்த கதாபாத்திரத்தின் பெயர் உங்கள் மனதில் இந்தளவிற்கு அதிர்வலைகளை உருவாக்கி வேதனைப்படுத்தும் என்று தெரிந்திருந்தால் நான் அதை சொல்லியிருக்கமாட்டேன். எனக்கு ரொம்ப பிடித்த படம். நடிகர் திலகத்தின் பாத்திரவார்ப்பும் மிகவும் பிடிக்கும் என்ற காரணத்தினால் ரகுராமன் என்றே எப்போதும் குறிப்பிடுவேன். அந்த காரணத்தினாலேயே இப்போதும் அப்படி வந்து விட்டது. மீண்டும் மன்னிக்க.
அன்புடன்
வாசு சார்
சிவராமன் மற்றும் ரகுராமன் இந்தப் பெயர்கள் நம் வாழ்வில் எந்த ஒரு கட்டத்திலாவது நம்முடன் தொடர்பில் நிச்சயம் இருந்திருக்கும். ஆனால் அது எந்த விதத்தில் நம்முடன் தொடர்பில் இருந்திருக்கிறது, அல்லது எந்த விதத்தில் நம்மை பாதித்திருக்கிறது என்பதில் தான் விதி அல்லது இறைவன் அல்லது இயற்கை ..எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.....இவற்றின் இருப்பை நாம் உணர்கிறோம்.
இதே நெஞ்சிருக்கும் வரை சிவராமன் என்ற பெயர் எனக்கும் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறது. என் பள்ளி காலத்து நண்பன் ஒருவனின் பெயர் சிவராமன். அவனும் நடிகர் திலகத்தின் ரசிகனே. நாங்கள் அப்போது கடற்கரையில் நெஞ்சிருக்கும் வரை படப்பிடிப்பைப் பார்த்தவர்களில் அடங்குவோம். ஆனால் அப்போது அந்த பாத்திரங்களின் பெயர்களெல்லாம் தெரியாது. படம் வெளிவந்தவுடன் மிகவும் ஆவலாய் நாங்கள் பார்த்தது, Of Course தலைவர், என்றாலும் அதற்குப் பிறகு நாங்கள் பார்த்த காட்சி வருகிறதா என ஆவலோடு காத்திருந்தோம். ரொம்ப நேரம் கழித்து பாடல் காட்சியாகவே அது இடம் பெற்ற போது எங்களுக்கு அளவற்ற மகிழ்வையூட்டியது. அதுவும் ஒரு பாத்திரத்தின் பெயர் அவன் பெயர் என்று அறிந்த போது அவன் ஆனந்தக் கூத்தாடினதைப் பார்க்க வேண்டுமே...பள்ளிப் பருவம் முடிந்த பின் அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் கனவுகள், அழுவதும் சிரிப்பதும் அவனவன் விதிப்படி என்பார்களே அதைப் போல அவன் எங்கோ சென்று விட்டான். அதன் பிறகு அவனைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.
ஆனாலும் அந்த மெரினா கடற்கரையில் சுடும் மணலில் கால் கொதிக்க - அப்போதெல்லாம் காலில் செருப்பணிந்திருந்தால் பெரிய பணக்கார வீட்டுப் பையன் என்று எங்கள் வட்டாரத்தில் அர்த்தம் - அந்த படப்பிடிப்பைப் பார்த்த ஞாபகத்தையும் குறிப்பாக முடியும் நேரத்தில் அந்த சிலை இருக்கும் இடத்தில் ஒரு சேர் போட்டு உட்கார்ந்து தலைவர் ரிலாக்ஸ் பண்ணியதையும் பார்த்து திறந்த வாய் மூடாமல் பார்த்த நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகின்றன.
ஒரு விதத்தில் சிவராமன் என்றாலே எனக்கு அந்த தோழன் தான் நினைவுக்கு வருவான்.
ஆனால் இந்த சிவராமன் தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்பைப் படிக்கும் போதே கண்களெல்லாம் குளமாகி விட்டன.
ஆனால் முரளி எழுதியதும் ஒரு விதத்தில் நல்லது தான். இந்த சந்தர்ப்பத்தில் இவர்களையெல்லாம் நாம் நினைவு கூர்கிறோமே..
அதுவும் ஒரு நெகிழ்வான அதே சமயம் சுகமான அனுபவமே.
சிவாஜி செந்தில் சார்
நான் பெற்ற செல்வம் - இசை மேதை ஜி.ராமனாதன் அவர்களின் புகழ்க்கிரீடத்தில் ஒரு வைரக்கல். சமூகப் படமென்றாலும் கூட அவருடைய பாணியை சற்றே விட்டுக் கொடுத்து சில புதுமைகளைச் செய்திருப்பார். ஆனால் அது பாடலின் சிறப்பை மேலும் அதிகரிக்க்வே செய்யும்.
குறிப்பாக இன்பம் வந்து சேருமா பாடலை சொல்லியே ஆக வேண்டும். மிகவும் குறைந்த இசைக் கருவிகளை வைத்து இனிமையான அதே சமயம் சோகமான பாடலை அவர் அமைத்திருக்கும் விதம் மிகவும் சிறப்பாக இருக்கும். குறிப்பாக Hawaiian Guitar இசைக் கருவியை பிரதானமாக வைத்து இப்பாடலை அமைத்திருப்பார். சில சமயம் இது மேண்டலினை நினைவூட்டும். ஆனால் மேண்டலினுக்கு சிறந்த உதாரணம் உத்தம புத்திரன் படத்தின் யாரடி நீ மோகினி பாடல்.
இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். நீங்களே உணர்வீர்கள்.
https://www.youtube.com/watch?v=LljiwHwPtrE
அபூர்வ தகவல்கள் சிவாஜி
* நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் திரைப் பிரவேசம், 1952ஆம் ஆண்டில் "பராசக்தி' மூலமாகத்தான் என்பதில், ஒரு சிறு திருத்தம் மேற்கொள்ளலாம். ஹெச்.எம்.ரெட்டி என்பவர் தயாரித்து - இயக்கிய "நிரபராதி' என்ற படத்தில், நாயகனாக நடித்த முக்காமலா கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு, நமது நடிகர் திலகம் பின்னணிக் குரல் கொடுத்ததன் மூலமாக, "பராசக்தி'க்கு முன்பே 1951 ஆம் ஆண்டிலேயே திரையுலகப் பிரவேசம் செய்துவிட்டார். ("நிரபராதி' தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட படம்.)
*
** கே.வி.மகாதேவனின் உதவியாளர் டி.கே.புகழேந்தி தனித்து இசையமைத்த (4 படங்களில்) ஒரு படம், "குருதட்சணை' என்ற சிவாஜி கணேசன் நடித்த படமாகும்.
*
** சிவாஜி கணேசனுக்கு இயக்கவும் தெரியும் என்றால் நம்ப முடிகிறதா? அவர் ஒரு திரைப்படத்தை இயற்றி இருக்கிறார். அவர் முழுப் படத்தையும் இயக்கவில்லை என்றாலும், ஒரு படத்தை இயக்கியுள்ளார் என்று வைத்துக் கொள்ளலாம். "ரத்தபாசம்' என்ற படத்தை இயக்கியவர், பாதி படத்திற்கு மேல் இயக்க முடியாததால், மீதிப் படத்தை சிவாஜியே இயக்கினார். படத்தின் எழுத்துப் பகுதியில் (டைட்டில்) இயக்கம் என்ற பெயர் வர வேண்டிய இடத்தில் எவரது பெயரும் திரையில் வராமல், சிவாஜி கணேசனின் குளோசப் போட்டோக்கள் மட்டுமே திரையில் காண்பிக்கப்படும்.
*
** நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த "இரு துருவம்' என்ற படத்தின் கதையை எழுதியவர் இந்தி நடிகர் திலிப்குமார். இது "சங்கா உடுடு' என்கிற இந்திப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.
*
** நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த "சரித்திர நாயகன்' என்ற படத்தின் கதையை, தெலுங்கு நடிகர் என்.டி.ராமாராவ் எழுதியுள்ளார். தெலுங்குப் படத்தில் என்.டி.ஆர்.தான் கதாநாயகன். அதன் தழுவலாக எடுக்கப்பட்ட படம் "சரித்திர நாயகன்'.
*
** சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ், டி.எம்.செüந்தர
*ராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் ஆகியோர் சிவாஜி கணேசனுக்காக ஒரு படத்தில் யாராவது ஒருவர் மட்டும் பின்னணி பாடியிருப்பார்கள். ஆனால், "வணங்காமுடி' என்ற படத்தில் மட்டும் சிவாஜிக்கு சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, டி.எம்.செüந்தரராஜன் ஆகிய மூன்று பேரும் வெவ்வேறு பாடல்களுக்குப் பின்னணி பாடியிருப்பார்கள். அதேபோல, "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி'என்ற படத்தில் மட்டும் சிவாஜிக்கு ஜே.பி.சந்திரபாபு, ஏ.எம்.ராஜா, வி.என்.சுந்தரம் ஆகிய மூன்று பேர் பின்னணி பாடியிருப்பார்கள்.
*
** நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக, வி.என்.சுந்தரம் இரண்டு பாடல்களை பின்னணி பாடியுள்ளார். "வீரபாண்டிய கட்டபொம்மன்' என்ற படத்தில் வெற்றி வடிவேலனே என்ற பாடலையும், "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' என்ற படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.
*
** நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக எஸ்.சி.கிருஷ்ணன், "ராஜா ராணி' என்ற படத்தில் (கண்ணற்ற தகப்பனுக்கு) பூனை கண்ணை மூடினால் என்ற ஒரே ஒரு பாடலை மட்டுமே பின்னணி பாடியுள்ளார்.
*
** நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக அஜித்சிங் என்பவர், "தவப்புதல்வன்' என்ற படத்தில் லவ் ஈஸ் ஃபைன் டார்லிங் என்ற ஒரே ஒரு ஆங்கிலப் பாடலை பின்னணி பாடியுள்ளார்.
*
** நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக, இசையமைப்பாளர் கண்டசாலா, "கள்வனின் காதலி' என்ற படத்தில் வெய்யிற்கேற்ற நிழலுண்டு என்ற ஒரே ஒரு பாடலை மட்டும் பின்னணி பாடியுள்ளார்.
*
** நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக தெலுங்கு பின்னணிப் பாடகர் எம்.சத்தியம் என்பவர், "மங்கையர் திலகம்' என்ற படத்தில் "நீ வரவில்லை எனில் ஆதரவேது' என்ற ஒரே ஒரு பாடலை மட்டும் பின்னணி பாடியுள்ளார்.
*
** நடிகர் திலகம் நடித்த படங்களில், பாரதியார் பாடல்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒரே படம், "கப்பலோட்டிய தமிழன்.'
*
** பூஜ்ஜியம் என்ற சொல் இடம்பெற்ற ஒரே பாடல், (நடிகர் திலகம் நடித்த "வளர்பிறை' படத்தில் வரும்) "பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை" என்ற பாடலாகும்.
* பன்னிரண்டு மாதங்களின் பெயர்களும் இடம்பெற்ற இரு திரைப் பாடல்களில் ஒன்று, நடிகர் திலகம் நடித்த "ராஜராஜ சோழன்' படத்தில் இடம்பெற்ற, "மாதென்னைப் படைத்தான்' என்ற பாடலாகும்.
*
** சிவாஜி நடித்த படங்களில் பாடல்கள் இருந்தும், சிவாஜி பாடாமல் இருக்கும் படங்கள் "மோட்டர் சுந்தரம் பிள்ளை', "தில்லானா மோகனாம்பாள்' ஆகிய படங்களாகும்.
*
** பாடல்களே இல்லாத முதல் தமிழ்த் திரைப்படம் நடிகர் திலகம் நடித்த "அந்தநாள்' படமாகும்.
*
** இலங்கை நடிகை மாலினி பொன்சேகா நடித்த ஒரே தமிழ்ப் படம், நடிகர் திலகம் நடித்த "பைலட் பிரேம்நாத்' என்பதாகும்.
*
** எம்.ஜி.ஆர். நடித்த தேவர் பிலிம்ஸ் படங்களை மட்டுமே இயக்கிய இயக்குநர் எம்.ஏ.திருமுகம், நடிகர் திலகம் நடித்த "தர்ம ராஜா' என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கியுள்ளார்.
*
** மனோரமா, நடிகர் திலகத்தின் ஜோடியாக நடித்த ஒரே படம், "ஞானப் பறவை' மட்டுமே.
*
** தமிழ் சினிமாவின் முதல் அகன்ற திரைப் (சினிமா ஸ்கோப்) படம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'ராஜராஜ சோழன்' திரைப் படமாகும்.
*
** தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் முழு நீள ஈஸ்ட்மென் வண்ணப் படம், நடிகர் திலகம் நடித்த "வீரபாண்டிய கட்டபொம்மன்' (1956) படமாகும். (1952 இல் திரையிடப்பட்ட "ஆன்' (கௌரவம்) என்ற படம், முழு நீள டெக்னிக் வண்ணப் படம் என்றாலும், அது இந்தியிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் (டப்பிங்) செய்யப் பட்ட படமாகும். (எம்.ஜி.ஆர். நடித்த "அலிபாபாவும் 40 திருடர்களும்' (1956) என்ற படம், தமிழ் சினிமாவின் முதல் முழு நீள கேவா வண்ண படமாகும்).
*
** நடிகர் திலகம் கெüரவ வேடத்தில் நடித்த தமிழ் படங்கள் மர்ம வீரன், குழந்தைகள் கண்ட குடியரசு, தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை, தாயே உனக்காக, சினிமா பைத்தியம், உருவங்கள் மாறலாம், நட்சத்திரம், தாவணிக் கனவுகள், மருமகள், சின்ன மருமகள், பசும்பொன், ஒன்ஸ்மோர், தேவர் மகன், என் ஆச ராசாவே, மன்னவரு சின்னவரு, புதிய வானம், ஜல்லிக்கட்டு, படையப்பா, பூப்பறிக்க வருகிறோம் ஆகியவை.
*
** நடிகர் திலகம் இரு வேடங்களில் நடித்த படங்கள் உத்தம புத்திரன், எங்க ஊர் ராஜா, கெüரவம், என் மகன், மனிதனும் தெய்வமாகலம், சந்திப்பு, ரத்த பாசம், சிவகாமியின் செல்வன், பாட்டும் பரதமும், என்னைப் போல் ஒருவன், புண்ணிய பூமி, எமனுக்கு எமன், விஸ்வரூபம், வெள்ளைரோஜா, பலே பாண்டியா (3 வேடங்கள்), தெய்வ மகன் (3 வேடங்கள்), திரிசூலம் (3 வேடங்கள்), நவராத்திரி (9 வேடங்கள்) .
*
** "பராசக்தி' படத்தை இயக்கிய கிருஷ்ணன் பஞ்சு முதல், பூப்பறிக்க வருகிறோம் படத்தை இயக்கிய ஏ.வெங்கடேஷ் வரை, சுமார் 100 இயக்குநர்களின் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்துள்ளார். சிவாஜியை வைத்து அதிக படங்களை இயக்கியவர்கள் ஏ.சி.திருலோகசந்தர் (20 படங்கள்), ஏ.பீம்சிங் (17 படங்கள்) .
*
** படத் தயாரிப்பைப் பொறுத்த வரையில் நடிகர் திலகத்தை வைத்து அதிக (17 படங்கள்) படங்களை தயாரித்தவர் நடிகர் கே.பாலாஜி மட்டுமே.
*
** பண்டரிபாய் முதல் சுமார் 55 கதாநாயகிகள் சிவாஜியுடன் இணைந்து நடித்துள்ளார்கள். இவர்களில் கே.ஆர்.விஜயா 40 படங்களிலும், பத்மினி 38 படங்களிலும் இணைந்து நடித்துள்ளார்கள்.
*
** ஜெயலலிதாவின் தாயார் சந்தியா அவர்கள், "பலே பாண்டியா' படத்தில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், "சாந்தி' படத்தில் தாயாகவும் நடித்துள்ளார்.
*
** ஜெயலலிதா, "மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் நடிகர் திலகத்துக்கு மகளாகவும், பல படங்களில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், "பாட்டும் பரதமும்' படத்தில் நடிகர் திலகத்துக்கு தாயாகவும் நடித்துள்ளார்.
*
** நடிகை லட்சுமியின் தாயார் குமாரி ருக்மணி, "கப்பலோட்டிய தமிழன்'படத்தில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், "ரோஜாவின் ராஜா' படத்தில் தாயாகவும், "விளையாட்டுப் பிள்ளை' படத்தில் மாமியாராகவும் நடித்துள்ளார்.
*
** நடிகை லட்சுமி, எதிரொலி, தங்கைக்காக, அருணோதயம் ஆகிய படங்களில் நடிகர் திலகத்துக்கு தங்கையாகவும், ராஜராஜ சோழன் படத்தில் மகளாகவும், உனக்காக நான், தியாகம், நெஞ்சங்கள், ராஜரிஷி, ஆனந்தக் கண்ணீர் ஆகிய படங்களில் ஜோடியாகவும் நடித்துள்ளார்.
*
** நடிகை ஸ்ரீதேவி, நடிகர் திலகத்தின் மகளாக பைலட் பிரேம்நாத் படத்திலும், ஜோடியாக விஸ்வரூபம், சந்திப்பு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
*
** நடிகை சுமித்ரா, அண்ணன் ஒரு கோயில் படத்தில் நடிகர் திலகத்துக்கு தங்கையாகவும், வீர பாண்டியன் படத்தில் ஜோடியாகவும் நடித்துள்ளார்.
*
** விஜயகுமாரி, பார் மகளே பார் படத்தில் நடிகர் திலகத்துக்கு மகளாகவும், குங்குமம், ராஜராஜ சோழன் ஆகிய படங்களில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், பச்சை விளக்கு படத்தில் நடிகர் திலகத்துக்கு தங்கையாகவும், அன்பைத் தேடி படத்தில் நடிகர் திலகத்துக்கு அக்காவாகவும் நடித்துள்ளார்.
*
** தம்மை விட வயதில் மூத்தவரான பி.பானுமதியுடன் சில படங்களில் சிவாஜி இணைந்து நடித்துள்ளார்.
*
** குங்குமம், லாரி டிரைவர் ராஜாக்கண்ணு ஆகிய இரு படங்களில் சிவாஜி பெண் வேடங்களில் நடித்துள்ளார்.
** பாபு, சம்பூர்ண ராமாயணம், லட்சுமி கல்யாணம், காவல் தெய்வம், படிக்காத பண்ணையார், மூன்று தெய்வங்கள் இன்னும் சில படங்களில் சிவாஜி நடித்த பாத்திரங்களுக்கு, கதாநாயகிகள் கிடையாது.
*
** மராட்டிய மாமன்னர் வீர சிவாஜியாக நடிகர் திலகம் முழுப் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் "ராமன் எத்தனை ராமனடி' படத்தில் ஒரு காட்சியில் மட்டும் சிவாஜியாக சிவாஜி நடித்திருக்கிறார்.
*
** தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக 80 அடி உயர விளம்பர பலகை (கட் அவுட்) வைக்கப்பட்டது, சிவாஜி நடித்த வணங்காமுடி (1957) படத்திற்கே.
*
** "திரையுலக இளவரசன்' நடிக்கும் என்ற விளம்பரத்துடன், மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த திரும்பிப் பார் (1953) என்ற படத்திற்குதான், தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக பட முன்னோட்டம் (டிரெய்லர்) காட்டப்பட்டது.
*
** இலங்கை வானொலியில் நல்ல தமிழ் கேட்போம் என்ற தலைப்பில், வாரத்தில் ஒரு நாள் 30 நிமிடங்களுக்கு புகழ் பெற்ற திரைப்படங்களின் கதை -வசனங்களை ஒலி பரப்புவார்கள். அந்த நிகழ்ச்சியில் சக்தி கிருஷ்ணசாமி, ஏ.பி.நாகராஜன், மு.கருணாநிதி, இளங்கோவன், தஞ்சை ராமையாதாஸ், எஸ்.டி.சுந்தரம் போன்ற சிறந்த படைப்பாளிகளின் திரைக்கதை வசனங்கள் ஒலிபரப்பப் படும். சிவாஜி நடித்த திருவிளையாடலில் தருமியும் சிவனும் பேசும் வசனம், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையிடம் கட்டபொம்மன் பேசும் வசனம், பராசக்தியில் நீதிமன்றக் காட்சி, ராஜா ராணியில் உள்ள சாக்ரடீஸ், சேரன் செங்குட்டுவன் நாடகங்கள் ஆகிய வசனங்களே அதிக தடவை ஒலிபரப்பப்பட்டுள்ளன.
*- சிவ.குகன்
*
*
*
Dr. A.P.J Abdul Kalam Wanted Chiyaan Vikram To Become Like Sivaji Ganesan
Quote:
Vikram has shared his own piece of experience of meeting Dr. A.P.J Abdul Kalam when the actor was blessed with an opportunity to meet India's greatest visionary when he was serving the nation as the President. Walking down the memory lane with a heavy heart, the National Award winning actor has said, "I was very excited the moment I came to know that he wanted to meet me. I wanted to make sure my kids Akshita and Dhruv get to meet Mr. Kalam as he is a great inspiration for young minds." Though Vikram says he was happy that his kids got to speak to him and were made to sit on his lap, what India's President back then had told him would reverberate in Vikram's mind forever. The missile man of our country has said, "I have not seen movies in the past 25 years but I know your hard work and I want you to become like Nadigar Thilagam Sivaji Ganesan". Vikram says he was dumbstruck when those words flew out of the great man's mouth. Vikram went on to add that he would never forget that day and Abdul Kalam's demise is indeed a great loss to our country.
Read more at: http://www.filmibeat.com/tamil/news/...an-192442.html
Ayyo ayyo. Adhu seri. idhu vikrame sonnaara.. avaru yen sivaji ya mention kooda pannalanu purila inga:
http://www.rediff.com/movies/report/...h/20150114.htm
I like different actors for different things.
I like Salman Khan for the way he carries himself. His self-confidence is fantastic.
I love what he did in Tere Naam, which was a remake of my film Sethu. He’s a close friend. When I went to his home, the only trophy he had in his living room was that of Tere Naam.
I like Kamal Haasan’s daring choice of roles. When I was in school and college, I modelled myself on him.
I was so much in awe of him. I used to do my scenes like him until I did Sethu. Then I made a conscious decision to move away from Kamal Haasan’s influence.
Next day rajini fan naan. Andhar balti Vikram
குங்குமம் -52
சென்ற ஞாயிறன்று [ஜூலை 26] அன்று மாலை நமது NT FAnS அமைப்பின் சார்பில் குங்குமம் திரைப்படம் திரையிடப்பட்டது. 1963 ஆகஸ்ட் 2 அன்று வெளியான இந்த படம் 52 வருடங்களை நிறைவு செய்திருக்கும் தருணம்.
இரண்டு வருடங்களுக்கு முன்பே குங்குமம் 50 ஆண்டுகளை நிறைவு செய்தபோது இந்த படத்தை திரையிடலாமா என்ற எண்ணம் தோன்றியபோது சற்றே தயங்கினோம். காரணம் வெளியான டிவிடி பிரிண்ட்கள் எதுவும் தெளிவாக இல்லை. ஆகவே குங்குமம் திரையிடல் தள்ளிப் போனது. அதன் பிறகு இரண்டு மூன்று நிறுவனங்கள் குங்குமம் படத்தின் நெடுந்தகட்டை மீண்டும் வெளியிட்டன. அவற்றையும் வாங்கி நாம் பரிசோதித்தபோது அவையும் முன்பு வெளிவந்த டிவிடிகளை விட பெட்டர் என்ற போதிலும் நல்ல பிரிண்ட் என்று சொல்ல முடியாத சூழல். இதற்கிடையில் நமது அமைப்பில் பல உறுப்பினர்கள் இந்த படத்தை திரையிடுமாறு நமக்கு வேண்டுகோள் விடுத்துக் கொண்டேயிருந்தனர்.
இந்த சமயத்தில்தான் சன் தொலைக்காட்சி குழுமத்திலிருந்து ஒளிப்பரப்பாகும் சன் லைஃப் சானலில் ஒரு நாள் குங்குமம் ஒளிப்பரப்பாகியது என்ற செய்தி கிடைத்தது [அன்று என்னால் பார்க்க முடியவில்லை]. எப்படிப்பட்ட பிரிண்ட் என்று கேட்டதற்கு ஓஹோ என்று சொல்லமுடியாது. இருந்தாலும் ஓகே என்ற தகவல் கிடைத்தது. அதை பதிவு செய்து வைத்திருந்த நண்பர் ஒருவரிடமிருந்து மற்றொரு டிவிடியில் பதிவு செய்து வாங்கினோம். உறுப்பினர்களுக்கு தகவல் சொன்னோம்.
சிறந்த நடிகை என்ற தேசிய விருதை மூன்று முறை பெற்றவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி சாரதா அவர்கள் தமிழில் இந்த படத்தில்தான் அறிமுகமானார். ஆகவே அவரை சென்று அழைத்தோம். இத்தனை வருடங்களுக்கு பிறகும் தன்னை நினைவு வைத்துக் கொண்டு வந்து அழைத்ததில் நெகிழ்ந்து போன சாரதா அவர்கள் வருவதற்கு சித்தமாக இருந்தார். ஆனால் அவர்கள் குடும்பத்தில் நடைபெற இருக்கும் ஒரு சுப நிகழ்ச்சிக்காக சென்னை மற்றும் ஹைதராபாத் இடையே அடிக்கடி பயணம் மேற்கொண்டிருந்த அவரால் அன்றைய தினம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனது.
அதே போல் இந்த படத்தின் மிகப் பெரிய ரசிகரான இயக்குனர் சுந்தர்ராஜன் அவர்கள் விழாவில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தவர் அவர் வீட்டில் நடக்க இருக்கும் கல்யாண வேலைகளில் பிசியாகி விட்டார்.
படம் திரையிடலுக்கு சிறப்பு விருந்தினராக இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்களில் கிருஷ்ணனின் மகள் வயிற்று பேத்தி திருமதி ஜோதி கலந்துக் கொண்டார். ஏஎல்எஸ் புரொடக்ஷன்ஸ் திருமதி ஜெயந்தி கண்ணப்பன் அவர்களும் பங்கு பெற்று சிறப்பித்தார்.
திரையிடலுக்கு முன்பு படத்தைப் பற்றி குறிப்பிட்ட நாம் இந்த படத்திற்கு நேர்ந்த ஒரு தடையை பற்றியும் குறிப்பிட்டோம். என்னவென்றால் கதைப்படி நடிகர் திலகத்தின் தந்தை வேடத்தில் ரங்காராவ் மற்றும் முறைப்பெண் மாமன் மகளாக விஜயகுமாரியும் நடித்திருப்பார்கள். ஒரு எதிர்பாராத சூழலில் கூட இருக்கும் வில்லன் OAK தேவர் சூழ்ச்சியால் ரங்காராவ் கொலை செய்வது போல் வரும். அங்கு தற்செயலாக வரும் நடிகர் திலகம் தன தந்தையை தப்பிக்க விட்டு, தான் கொலைப் பழியை ஏற்றுக் கொள்வார். போலீசிடம் தன் தந்தை மாட்டிக் கொள்ள கூடாது என்பதற்காக ஒரு கட்டத்தில் விஜயகுமாரியின் தந்தையாக ரங்காராவை நடிக்க வைப்பார்.
படம் தணிக்கைக்கு சென்றபோது இந்த திரைக்கதையமைப்பு தணிக்கை அதிகாரிகளுக்கு புரியாமல் போக அது எப்படி நாயகனுக்கும் நாயகிக்கும் ஒரே தந்தை இருக்க முடியும் என்ற கேள்வி எழுப்பி அவர்கள் பல காட்சிகளிலும் கத்திரி போட்டு விட்டனர். இயக்குனர்களும் தயாரிப்பாளரும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் தணிக்கை அதிகாரிகள் பிடிவாதமாக இருந்து விட பல காட்சிகள் வெட்டப்பட்டதினால் படத்தின் சீரான ஓட்டம் தடைப்பட்டு பல ஜம்ப்கள் ஏற்பட்டன. மீண்டும் படப்பிடிப்பு நடத்தி ரீஷூட் செய்ய வேண்டும் என்ற நிலை. படம் தணிக்கைக்கு செல்வது 1963 ஜூலை 19 அன்று. படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட தேதி 1963 ஆகஸ்ட் 2. தமிழகமெங்கும் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு விநியோகஸ்தர்கள் தயாராக இருக்கின்றனர்.
சோதனையாக அந்நேரம் நடிகர் திலகம் கர்ணன் படத்தின் படப்பிடிப்பிற்காக ஜெய்பூர் சென்றிருந்தார். இரண்டு மாத schedule. நடிகர் திலகத்தை தொடர்பு கொண்டு பேசியபோது அங்கே ஜெய்பூர் படப்பிடிப்பை விட்டு விட்டு வந்தால் பந்துலுவிற்கு மிகப் பெரிய நஷ்டம் ஏற்படும் என்றும் அதனால் தன்னால் வர முடியாது என்றும் சொல்லியிருக்கிறார்.
மேலும் குங்குமம் படத்தின் ரீஷூட் என்றால் அனைத்து ஆர்டிஸ்ட் combination கால்ஷீட் வேண்டும். ஆகவே அதுவும் பிரச்சனை. இங்கே கர்ணன் படத்தின் படப்பிடிப்பிலிருந்து வந்தால் ஏற்படக்கூடிய நஷ்டம். ஆகவே இதற்கு இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்து விட்டு கர்ணன் படப்பிடிப்பு முடிந்து தான் வந்தவுடன் ரீஷூட் வைத்துக் கொள்ளலாம். இதற்கு விநியோகஸ்தர்கள் அரங்க உரிமையாளர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் இரண்டாவது வழியாக இப்போது இருக்கும் படத்தையே எடிட் செய்து திரையிட வேண்டியதுதான் என்று சொல்லியிருக்கிறார். விநியோகஸ்தர்களும் அரங்க உரிமையாளர்களும் இரண்டு மாத காலம் காத்திருக்க தயாராக இல்லாத காரணத்தினால் இருக்கும் காட்சிகளை எடிட் செய்து முன்னரே அறிவித்தபடி 1963 ஆகஸ்ட் 2 அன்று படம் வெளியானது.
படத்தின் திருப்பங்களை புரிந்துக் கொள்ளும் இடத்தில காட்சிகள் தணிக்கை செய்யப்பட்ட காரணத்தினால் சாதாரண மக்களுக்கு கதையமைப்பை புரிந்துக் கொள்வதில் கஷ்டம் ஏற்பட்டது. இந்த பிரச்சனை போதாதென்று வழக்கம் போல் நமது படங்களே முன்னும் பின்னும் அணிவகுத்து வந்த நிலைமை. 1963 ஜூலை 12 அன்று பார் மகளே பார் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. 20 நாட்கள் இடைவெளியில் ஆகஸ்ட் 2 அன்று குங்குமம் வெளியாகிறது. குங்குமம் வெளியாகி ஒரு மாத காலத்தில் 1963 செப் 14 அன்று இரத்த திலகம் வெளியாகிறது. இரத்த திலகம் வெளியான் 6 நாட்களிலேயே செப் 20 அன்று கல்யாணியின் கணவன் வெளியாகிறது. ஆக இரண்டு மாத இடைவெளியில் ஒரே ஹீரோவின் 4 படங்கள் வெளியானது என்று சொன்னால் கூடுதலாக ஒன்றும் சொல்லாமலே அனைவருக்கும் நிலைமை புரியும். அன்றைய நாளில் படம் பெற வேண்டிய வெற்றியை பெறாமல் போனாலும் மறு வெளியீடுகளில் படம் சக்கை போடு போட்டதையும் குறிப்பாக 80-களில் பாரகன் அரங்கில் 21 காட்சிகளும் அரங்கு நிறைந்ததையும் அதன் தொடர்ச்சியாக பல திரையரங்குகளில் ஷிப்டிங் செய்யபட்டதையும் எடுத்துக் கூறினோம்.
தன் அருமை நண்பன் பந்துலுவிற்காக அவர் நஷ்டப்படக் கூடாதே என்பதற்காக கிட்டத்தட்ட தன் சொந்த கம்பெனி போன்ற ராஜாமணி பிக்சர்ஸ், சொந்த சகோதரன் போன்ற மோகன் ஆர்ட்ஸ் மோகன் (தயாரிப்பாளர்), தன்னை அறிமுகப்படுத்திய கிருஷ்ணன் பஞ்சு போன்றவர்களை விட பந்தலுவிற்கு முக்கியத்துவம் கொடுத்த நடிகர் திலகத்திற்கு பந்துலு செய்த பதில் மரியாதை? இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் என்பதுதானே நடிகர் திலகத்தின் ஜாதக அமைப்பு!
இயக்குனர் கிருஷ்ணன் பராசக்தி படத்தின் படப்பிடிப்பின்போது எப்படி நடிகர் திலகத்திற்கு ஆதரவாக இருந்தார் என்பதையும் நடிகர் திலகம் திரு கிருஷ்ணன் பெயரில் வைத்திருந்த மதிப்பையும் செவாலியே விருது பெற்ற சேப்பாக்கம் மேடையில் நடிகர் திலகம் திரு கிருஷ்ணன் காலில் விழுந்து வணங்கியதையும் நினைவு கூர்ந்தோம்.
மேற்சொன்ன இந்த விஷயங்களையெல்லாம் குறிப்பிட்டு நாம் பேசி முடித்தவுடன் சிறப்பு விருந்தினர் திருமதி ஜோதி அவர்கள் பேசினார்கள். இரண்டு விஷயங்களுக்காக வெட்கப்படுகிறேன் என்று ஆரம்பித்தவர் முதல் விஷயம் இப்படி ஒரு அமைப்பு மூன்றரை வருடங்களாக இயங்கி வருவதை அறியாமல் இருந்ததற்காகவும் தன் பாட்டனாரை பற்றி தான் அறிந்தவற்றை விட மற்றவர்களுக்கு கூடுதல் தெரிந்திருப்பதை இரண்டாவது விஷயமாகவும் குறிப்பிட்டார். சினிமா சம்மந்தப்பட்ட குடுமபத்தில் பிறந்திருந்தாலும் தான் அதிகம் சினிமா வாடை அடிக்காமல் வளர்க்கப்பட்டதை சொன்ன அவர் அன்றைய நாட்களில் அனைவரும் எப்படி ஒரு குடும்பமாக பழ்கினார்கள் என்பதை சொன்னார். இயக்குனர் பீம்சிங் எப்படி கிருஷ்ணன் குடும்பத்தில் உறவினராக மாறினார் என்பதையும் குறிப்பிட்டார். இனி ஒவ்வொரு நிகழ்விற்கும் தான் நிச்சயமாக வர விரும்புவதாகவும் சொன்ன அவர் தன குடும்பத்தினரை அழைத்து வராததை குறிப்பிட்டு இனி அவர்களையும் அழைத்து வருவேன் என்று சொன்னார். நமது அமைப்பின் சார்பாக குங்குமம் 52 என்று பெயர் பொறிக்கப்பட்ட நினைவு பரிசை அவருக்கு நமது நிர்வாக குழு உறுப்பினர் திரு கவிதாலயா கிருஷ்ணன் வழங்கினார்.
அவருக்கு பிறகு பேசிய திருமதி ஜெயந்தி அவர்கள் திருமதி ஜோதி சொன்ன ஒரே குடும்பம் என்பதை வழி மொழிந்தார். அதற்கு உதாரணமாக தங்கள் வீட்டு திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக தானும் பீம்சிங் மகள் சுசித்திராவும் நடிகர் திலகத்தின் இளைய மகள் திருமதி தேன்மொழி அவர்களும் சென்றதை நினைவு கூர்ந்தார். இசையரசி சுசீலாம்மா இவர்கள் மூவரையும் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் மருமகள், இயக்குனரின் மகள், ஹீரோவின் மகள் அனைவரும் சேர்ந்து வந்து கலயாணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்கும்போது வராமல் இருக்க முடியுமா என்று கேட்டதையும் சொன்னார். மேலும் அவர் பேசுகையில் அன்றைய நாட்களில் நாங்களெல்லாம் சிறுவர்களாக இருந்தபோது சிவாஜிப்பா படம் வெளியாகிறது என்று சொன்னால் குடும்பத்துடன் பார்க்க கூடிய படம் என்று வீட்டில் உடனே கூட்டி சென்று விடுவார்கள். வேறு படங்களுக்கு அப்படி கூட்டி செல்ல மாட்டார்கள் என்று சொன்னார்.
அவருக்கும் நமது அமைப்பின் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதன் பிறகு படம் திரையிடப்பட்டது.
இங்கே நண்பர் ஆர்கேஎஸ் குறிப்பிட்டது போல் அன்று மதியம் 4 மணி சுமாருக்கு கட்டபொம்மன் சிறப்பு காட்சி நடைபெற்றது. நடிகர் திலகத்தின் குடும்பத்தினருக்காக திரையிடப்பட்ட இந்த காட்சியில் நமது ரசிகர்களும் திரளாக கலந்து கொண்டுள்ளனர். அதன் காரணமாக சிலரால் குங்குமம் படத்திற்கு வர இயலவில்லை. மேலும் அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் மயிலை மாங்கொல்லையில் நடிகர் திலகத்தின் நினைவு நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மேலும் அன்றைய தினம் சன் லைஃப் தொலைக்காட்சியில் உத்தம புத்திரன் திரைக்காவியமும் முரசு தொலைக்காட்சியில் பாவ மன்னிப்பு திரைக் காவியமும் ஒளிபரப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தையும் தாண்டி குங்குமம திரையிடலுக்கு வந்த கூட்டம் நம்மை ஒரு பக்கம் ஆச்சரியப்படுத்தினாலும் நடிகர் திலகத்தின் reach நமக்கு தெரிந்ததுதானே!
அன்புடன்
நான் பெற்ற செல்வம் திரைப்படம் மோட்டார் சுந்தரம் பிள்ளை வரிசையில் நடிகர்திலகத்தின் மிக மிக இயல்பான இதமான அதே சமயம் அழுத்தமான நடிப்பினை பதிவு செய்த காவியம்.Quote:
நான் பெற்ற செல்வம் - இசை மேதை ஜி.ராமனாதன் அவர்களின் புகழ்க்கிரீடத்தில் ஒரு வைரக்கல். சமூகப் படமென்றாலும் கூட அவருடைய பாணியை சற்றே விட்டுக் கொடுத்து சில புதுமைகளைச் செய்திருப்பார். ஆனால் அது பாடலின் சிறப்பை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
குறிப்பாக இன்பம் வந்து சேருமா பாடலை சொல்லியே ஆக வேண்டும். மிகவும் குறைந்த இசைக் கருவிகளை வைத்து இனிமையான அதே சமயம் சோகமான பாடலை அவர் அமைத்திருக்கும் விதம் மிகவும் சிறப்பாக இருக்கும்
Raghavendhar Sir
படத்தின் தலைப்பிலேயே வரும் பாடலில் அன்பு மனைவியின் இழப்புக்குப் பின் குழந்தையை சிரமங்களுக்கு இடையே வளர்த்திடும் சோகச் சுமையை அதியற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார் !
https://www.youtube.com/watch?v=jcfAofXtCVM
சிறுவர்கள் ஒன்றுகூடி பாடும் மாதாபிதா குரு தெய்வம் ( குழந்தைகளை நேசித்த அமரர் அப்துல் கலாம் அவர்களுக்கு மாணவரஞ்சலியான பாடல்) பாடல் காட்சியிலும் தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தாது(கடவுளை நம்பு என்ற வாசகங்கள் கொண்ட ஒரே ஒரு பிரேமில் வருவார்! என்றும் எங்கள் நடிப்புக் கடவுளை நாங்கள் நம்புகிறோம் என்பதே எதார்த்தம்!) ஓரமாக நின்று ரசிக்கும் அவரது முக பாவங்கள் ஒப்பிட முடியாதவையே!
https://www.youtube.com/watch?v=ZuByC_rcf_w
நமது நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு அமைப்பின் சார்பில் நடைபெற்ற குங்குமம் 1952 நிகழ்ச்சியைப் பற்றிய முரளி சாரின் பதிவிற்கு இணைப்பாக..
நிகழ்ச்சியின் சில நிழற்படங்கள் நம் பார்வைக்கு
திருமதி ஜோதி அவர்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்
http://i1146.photobucket.com/albums/...psawt9jxkh.jpg
திருமதி ஜெயந்தி கண்ணப்பன் அவர்கள்
http://i1146.photobucket.com/albums/...pswzdazczm.jpg
நமது அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்ட நினைவுப் பரிசுடன் சிறப்பு விருந்தினர் அவர்கள்
http://i1146.photobucket.com/albums/...psuwaevnua.jpg
Reproduced from and courtesy the Hindu at : http://www.thehindu.com/news/cities/...cle7484458.eceQuote:
http://www.thehindu.com/multimedia/d...v_2493042g.jpg
http://www.thehindu.com/template/1-0-1/gfx/logo.jpg
...
Kattabomman to roar again
The king of Panchalankurichi, Veerapandiya Kattabomman, is all set to roar again with Jackson Durai, on an upgraded digital 5.1 surround sound format. Veerapandiya Kattabomman, a classic film, will be released soon. A trendsetter and considered a benchmark on dialogue delivery, the film has a scene in which Kattabomman and Jackson, an East India Company representative , light up the screen in what has now become film lore.
Raj Television Network has digitally restored the film with re-recorded background music with ‘digital intermediates’ (DI) and conversion of the 35-mm film to digital scope. The trailer of the historic movie was released in March, creating a buzz among Sivaji fans and film buffs alike.
Gemini Ganesan, Padmini, S. Varalakshmi, V.K. Ramaswamy and other senior artistes are in the cast of the film, produced by Padmini Pictures.
Music was scored by G. Ramanathan and directed by B.R. Panthulu. The screenplay was written by Ma. Po. Sivagnanam, while story and dialogue were scripted by Sakthi T.K. Krishnasamy.
DI restoration and cinemascope were done by Raj TV. Raj TV owns the rights of many old Tamil classics like Aayirathil Oruvan, Karnan, Pasamalar and Ninaithaaley Inikkum which were restored and received well by fans with record box-office collections on their release in their new avatar.
Reproduced from and courtesy the Hindu at : http://www.thehindu.com/features/met...cle7481657.eceQuote:
http://www.thehindu.com/template/1-0-1/gfx/logo.jpg
And the story continues
http://www.thehindu.com/multimedia/d...1_2492065f.jpg
Vikram Prabhu on his upcoming release and memories of growing up in the landmark Annai Illam, the house of his grandfather Sivaji Ganesan
“This place is very special to me,” says Vikram Prabhu, as he poses for our photographer against a picture of his grandfather, “Every day, I stand here, and pray for a while before I head out.”
We’re at the landmark Annai Illam at Chevalier Sivaji Ganesan Road (South Boag Road) that has seen the who’s who of tinseltown in the last five decades, since the family moved here.
“It has always been full of people,” he says, “Thatha used to sit in the hall, interacting with visitors. He loved the house.”
It would’ve looked busy then, but it’s silent now, with a few domestic help scurrying around. Lovely portraits of Sivaji Ganesan adorn the walls, four fans run suspended from the high ceiling and the chandeliers are big and bright. It echoes when you speak; the high windows are almost always open.
Vikram is busy this week; he has a film, Idhu Enna Mayam, releasing today. He’s just back from London, where he holidayed for a week, while also promoting his release. “Vijay, the director of the film, has a knack of eliciting subtle performances from his actors. He narrated a 15-minute storyline and I really liked the idea. It’s a youthful story, and can be watched by all audiences,” he says about the rom-com.
It’s coming back to this colourful, urban role that got Vikram hooked, after his rural outing in his last film Vellaikara Durai. It was too commercial, people said. He agrees, “It took me three days to go watch it because I couldn’t initially see myself doing such a film.”
But it’s the kind of film that works, he feels, because there are audiences who like to indulge in such storylines. “There are always people watching commercial flicks,” he explains. “When you go to parts of rural Tamil Nadu and walk the streets there, you get a better perception of how the business works. Having said that, there are audiences here too who like such films. In fact, I asked Vijay (director of Idhu Enna Mayam) to watch that film. He watched it at Sathyam and loved it.”
Vikram debuted in Tamil cinema with the hit film Kumki and went on to do others like Arima Nambi and Sigaram Thodu. Point out to him that these flicks did not enjoy the same kind of buzz that his debut vehicle did, and he says, “Kumki was a once-in-a-lifetime sort of a project. A film like Baahubali today has to rely on CG to bring out scenes featuring animals; we did it with live elephants while shooting Kumki. While I’d like all my projects to be as successful as my debut, it cannot be so. I’d like to try out films in different genres; that’s the only way to grow as an actor.”
He learnt that primarily at San Diego, where, despite going for an engineering degree, he decided to shift tracks to acting. “I loved theatre, I was interested in direction,” he recalls. “I took up an advanced acting course and directed a three-hour play there.”
And from theatre came his dreams to enter films. “Didn’t my grandfather do the same thing,” he smiles. “I knew that when I got back to Chennai, I wanted to be part of the movie business. I spent a couple of years in Sivaji Productions, our production house, and then got interested in facing the camera.”
Wasn’t that always on the cards, considering that he hailed from an illustrious family closely linked with the movie world? “When we were in school, it was always about studies. My grandfather always thought that if he had studied and knew English better, he’d have done better for himself. So, he wanted us kids to get a good education before we decided what we wanted to do with our lives,” he recalls.
It’s those good old times at Annai Illam that were an integral part of Vikram Prabhu’s growing-up years. “We were a huge, joint family. And we looked forward to Sundays. We always gathered for lunch and it would be a feast that we’d cherish,” says the actor, pointing out that living in a joint family taught him to understand people better.
Vikram grew up almost unaware of his grandfather’s superstardom. “At home, he was just a grandfather. He loved spending time with us, perhaps because he didn’t get to spend a lot of time with his children.” It was during the re-release of Saraswathi Sabatham, which Vikram watched as a young boy, that he actually understood how much Sivaji Ganesan was revered. “I remember that day in the theatre. It was just a re-release but people were going mad, chanting, crying and reciting all the dialogues.”
He’s looking forward to experiencing that euphoria again, as a re-release of the thespian’s Veerapandiya Kattabomman is lined up. “I’ll surely watch it FDFS with his fans,” he says, “It will be such an experience.”
அதுதானே பார்த்தேன்....!
ஏதுடா ! நடிகர் திலகத்தை பற்றி நல்ல ஒரு செய்தி வந்தால் உடனே நொட்டை சொல்ல நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ யாரவது ஒருவர் ராஜா மாதிரி குதிரையில வருவாரே..... இது வரை வரவில்லையே என்று பார்த்தேன் திரு.ஸ்வஸ். நல்ல வேளை அந்த வழக்கத்தை நீங்கள் மாற்றாமல் வந்து பதிவு செய்ததற்கு நன்றி !
இனி உங்கள் கேள்விக்கு எனது பதில். ...
நீங்கள் கொடுத்துள்ள லிங்கில் (http://www.rediff.com/movies/report/...h/20150114.htm) இருப்பது விக்ரமே கூறியதா ?
ஆனால் இந்த லிங்கில் (Read more at: http://www.filmibeat.com/tamil/news/...an-192442.html) விக்ரம் இப்படி கூறியிருக்கிறாரே.....? மற்ற நடிகர்களை பற்றி எதுவுமே கூறவில்லையே ?
மேலும்....ஒரு விஷயம்....
நாம் நடைமுறையில் ஒரு சிலரை இம்ப்ரெஸ் செய்ய பல விஷயங்களை கூறுவோம்...அது அனைத்தும் அடுத்த நிமிடமே மறந்துவிடும்...!
ஆனால் நம்மிடையே ஒரு மகானோ அல்லது முக்கியத்துவம் வாய்ந்த நல்ல மனிதர்களோ இவர்களை போல வாழவேண்டும்....இவரை போல நாம் நல்ல விஷயங்களை பின்பற்றவேண்டும் என்று கூறினால் அதனை நாம் ஆயுள் உள்ளவரை மறக்கவே மாட்டோம்...!
அப்படிப்பட்ட ஒன்று தான் மறைதிரு அப்துல் கலாம் நடிகர் விக்ரமிடம், நீங்கள் நடிப்புத்துறையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போல வரவேண்டும் என்று கூறியது ! ...
இந்த STATEMENT நடிகர் திலகம் அவர்களுடைய STANDARD ஐ வலியுறுத்தும் ஒரு விஷயம் ஆகும்...!
திரு கலாம் அவர்கள் கூறியதன் அர்த்தம் யாதெனில் ..இதர பத்தோடு ஒன்று பதினொன்று என்ற ரக நடிகர்களை போல வராமல், நடிகர் திலகம் போல ஒரு நல்ல நிலையில் நடிப்புத்துறையில் வரவேண்டும் என்பதே அதன் பொருள் !
மறைதிரு கலாம் போன்ற ஒரு விஞ்ஞானி இப்படி ஒரு அறிவுரை கூறுகிறார் என்றால் நடிகர் திலகம் எந்தளவிற்கு, மிகச்சிறந்த திறமைசாலி மறைதிரு அப்துல் கலாம் அவர்கள் மனதில் பதிந்துள்ளார் என்பதுதான் இந்த பதிவிலிருந்து புத்திசாலிகள் புரிந்துகொள்ளகூடிய பாடம் திரு ஸ்வஸ் அவர்களே !
புத்திசாலிகள் அதனை சரியாக புரிந்திருப்பார்கள் என்பது எந்த சந்தேகமும் வேண்டாம் !
படித்ததது
சந்திரபாபுவின் மரணச்செய்தி கேட்டு திகைத்துப்போன சிவாஜி கணேசன் தான் கலந்து கொண்டிருந்த சட்டக் கல்லூரி முத்தமிழ் விழாவை பாதியில் முடித்துக் கொண்டு திரும்பி வந்து பாபுவின் உடலை நடிகர் சங்கத் திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்தார்.
சாமான்யமான அந்தக் கலைஞனுக்கு அஞ்சலி செலுத்த பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த அந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே காமராஜரும் வந்து அஞ்சலி செலுத்தி விட்டுப் போனார். மறுநாள் மாலை 4.30 மணிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட அந்த இறுதி ஊர்வலம், ஜெமினி மேம்பாலம் வழியாக சாந்தோம் தேவாலயத்துக்கு வந்தது.
அந்த மரண ஊர்வலத்தில் ஒரு மனிதன் தள்ளாடியபடியே வந்தார். அது பாபுவின் தந்தை ஜோசப் பிச்சை ரொட்ரிகோ. அவரை சிவாஜி கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார். அந்த தந்தையின் கண்ணீருக்கு முன்னால் அவன் சலனமற்று கிடந்தான். அந்த கலைஞனின் வாழ்வு இவ்விதம் முடிவுக்கு வந்தது.
ோன்றுகிறது.
இன்று முதல் கோவை டிலைட் திரைஅரங்கில் நடிகர் திலகத்தின் 75வது திரைக்காவியம் "பார்த்தால் பசி தீரும்" திரையிடப்பட்டுள்ளது !
http://i501.photobucket.com/albums/e...psg5otd7la.jpg
TODAY 11.00AM WATCH SUNLIFE TV
http://i57.tinypic.com/2ihxd3r.jpg
http://i57.tinypic.com/33kvzlu.jpg http://i60.tinypic.com/mw8fh3.jpg http://i61.tinypic.com/1to58i.jpg
Watch Jaya Movies at 12.00 pm NT's Fantastic Film Raman Ethanai Ramanadi
நடிகர்திலகம் சிவாஜி மணிமண்டபத்தை அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் நடிகர்திலகத்தின் 14 ஆம் ஆண்டு நினைவு நாளான 21-07-2015, செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில், அனைத்துக் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் குறித்து பருவ இதழ்களில் வெளியான செய்தி.
http://i1234.photobucket.com/albums/...psczcyohik.jpg
http://i1234.photobucket.com/albums/...psqnutffwr.jpg
http://i1234.photobucket.com/albums/...ps4iyafw5g.jpg
சிவாஜிக்கு வைக்கப்பட்ட டெஸ்ட்’ – எஸ்.ஜே. இதயா
http://justnowindia.com/wp-content/u...7idfv1mdlc.jpg
சிவாஜியை வைத்து அதிக படங்கள் இயக்கிய டைரக்டர்கள் பட்டியலில், முக்தா சீனிவாசன்க்கு முக்கிய இடம் உண்டு. இதனால் சிவாஜியின் திறமைகள் மீது மட்டற்ற மரியாதை வைத்துள்ளார் அவர். எவ்வளவு நீள டயலாக்காக இருந்தாலும், அதை இரண்டுமுறை கேட்டாலே, வார்த்தை மாறாமல் டெலிவரி செய்யும் சிவாஜியின் திறமை மீது மாபெரும் வியப்பு, முக்தா சீனிவாசனுக்கு இருந்தது. அவரே அதை விவரிக்கிறார்.
“நானும், ஜாவர் சீதாராமனும், ‘அந்த நாள்’ படத்திற்கு உதவி இயக்குநர்களாக பணியாற்றியபோது, சிவாஜியின் இந்தத் திறமை குறித்து மிகமிக வியந்து போனோம். மேக்கப் போடும்போது, வசனத்தை வாசிக்கச் சொல்லி, ஒருமுறை கேட்பார். ஷாட் ரெடியானதும் ஒருமுறை கேட்பார். இரண்டே முறைதான். அடுத்த கணம் எவ்வளவு நீள வசனமானாலும், வார்த்தை மாறாமல் ஒரே டேக்கில் ஓ.கே. செய்து விடுவார்
“உண்மையில் அவரது அந்த திறமை, பலரால் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. அப்போதுதான் ஜாவர் சீதாராமன் காதுக்கு அந்த செய்தி வந்து சேர்ந்தது. ‘தினசரி ஷூட்டிங் முடிந்து போகும்போது, அடுத்த நாளுக்குரிய டயலாக் பேப்பர்கள் சிவாஜியின் கார் டிரைவரிடம் கொடுத்து அனுப்பப்படுகிறது’ என்பதுதான் அந்த செய்தி. உடனே ஜாவருக்கு சந்தேகம் எழுந்தது.
“தினமும் இரவில் அவர் மனப்பாடம் செய்து விடுகிறார். இங்கே ஷீட்டிங்கிற்கு வந்ததும் ஒன்றும் தெரியாதது போல், இரண்டு முறை டயலாக்கை கேட்டு விட்டு, எல்லார் முன்னாலும் அசத்தி விடுகிறார் – என்ற ஐயம் எழுந்தது ஜாவருக்கு. எனக்கு அதில் நம்பிக்கையில்லை. சிவாஜிக்கென்று சில அபூர்வ திறமைகளை இறைவன் தந்திருப்பதாக நான் நம்பினேன்.
“இதனால் ‘சரி… எதையும் நம்ப வேண்டாம். ஒரு டெஸ்ட் வெச்சு பார்த்திடுவோம்’ என்றார் ஜாவர். அதன் மறுநாள் சிவாஜி நடிக்க வேண்டிய காட்சிகளுக்கான வசனத் தாள்களை ஒதுக்கி விட்டு, வேறொரு நாளுக்கான வசன தாள்கள், கார் டிரைவரிடம் போய் சேர்கிற மாதிரியான ஒரு ஏற்பாட்டை செய்தார் ஜாவர்.
“மறுநாள் வழக்கம்போல் சுறுசுறுப்பாய் வந்து சேர்ந்தார் சிவாஜி”.
“மறுநாள் சுறுசுறுப்பாய் வந்த சிவாஜி, மேக்கப் போட்டுக் கொள்ளத் துவங்கினார். வழக்கம் போல என்னை அழைத்து ‘டயலாக் சொல்லு’ என்றார். நானும் அன்றைய டயலாக்கை வாசித்தேன். முதல் நாள் சிவாஜி வீட்டிற்கு கொடுத்தனுப்பப்பட்ட டயலாக் வேறு; நான் வாசித்த டயலாக் வேறு. எனவே சிவாஜி முகத்தில் ஏதேனும் தடுமாற்றம் தோன்றுகிறதா என என்னை விட, ஜாவர் உன்னிப்பாகக் கவனித்தார்.
“ஆனால் சிவாஜி முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. வசனத்தை ஒருமுறை கேட்டுவிட்டு, ‘ஓ.கே.’ என்று கூறி எங்களை அனுப்பி விட்டார். மீண்டும் ‘ஷாட்’டின் போது மற்றொரு முறை வசனத்தை கேட்டு விட்டு, அட்சரம் பிசகாமல் அதை டெலிவரி செய்து ‘ஷாட்டை ஒரே டேக்கில் ஓ.கே. செய்தார் சிவாஜி. மற்ற எல்லோருக்கும் சாதாரண நிகழ்வு அது. எனக்கும், ஜாவருக்கும் மட்டும் மிக பதட்டமான தருணமாக அமைந்தது.
“சிவாஜி மீதான மதிப்பும் மரியாதையும் எனக்கும், ஜாவருக்கும் மேலும் உயர்ந்தது. அபூர்வ திறமை படைத்த கலைஞர் அவர்” என்று முடித்தார் முக்தா வீ.சீனிவாசன்.
http://justnowindia.com/wp-content/u...bd533c569e.jpg
“சிவாஜியை வைத்து ‘கவரிமான்’, ‘ரிஷிமூலம்’, ‘வெற்றிக்கு ஒருவன்’ – ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் எஸ்.பி. முத்துராமனும், முக்தா சீனிவாசன் கூறியதை அப்படியே வழிமொழிந்தார். உதாரணத்திற்கு அவர் ஒரு சம்பவத்தையும் நினைவு கூர்ந்தார்.
“சிவாஜியை வைத்து நான் இயக்கிய முதல் படம் ‘கவரிமான்’. அதில் ஜேசுதாஸ் பாடிய பாடல் ஒன்று ‘சரிகரி…பதநி’ என்கிற ரீதியில் நெடிய ஆலாபனை கொண்டதாய் இருந்தது. சிவாஜிக்கு க்ளோஸப் காட்சிகள் வேறு இடம் பெற வேண்டும். அந்த பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு நடப்பதற்கு முதல் நாள், நான் ஜேசுதாஸ் பாடிய கேஸட்டுடன், சிவாஜி வீட்டிற்குப் போனேன்.
“சிவாஜி ‘என்ன முத்து’ என்று கேட்க, நான் கேஸட்டை கொடுத்து விஷயத்தைச் சொன்னேன். ‘மனப்பாடம் பண்ணிட்டா கொஞ்சம் ஈஸியாக இருக்கும்’ என்கிற ரீதியில் இழுத்தேன். ‘அட இதுக்குப் போயா இவ்வளவு தூரம் வந்தே?’ என்றவர், சிரித்தபடி கேஸட்டை வாங்கிக் கொண்டார்.
“மறுநாள் அந்த காட்சி படமான போது, நான் பிரமித்துப் போனேன். சிவாஜி அந்த ஆலாபனையை சரியாக உச்சரித்தாரா, இல்லையா என்பது தெரியாது. ஆனால் அதை யாரும் பொருட்படுத்தாத விதத்தில், அந்தப் பாடலின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப அவர் காட்டிய முக அசைவுகள், கண் மற்றும் புருவ அசைவுகள் அவரே அந்தப் பாடலைப் பாடியது போன்ற எஃபெக்டைக் கொடுத்தன. பிரமித்துப் போனேன்.
“அதே போல் முக்கியமான காட்சிகளின்போது, வசனத்தைக் கேட்டுக் கொள்ளும் சிவாஜி, ஒரு சில நிமிடங்கள் ஓரமாய் போய் விடுவார். பின்னர் என்னை அழைத்து, அந்த வசனத்தை மூன்று விதமாய் டெலிவரி செய்து காட்டி, ‘எது வேணும்?’ என்று கேட்பார். அந்தளவு அபூர்வமான, அற்புதமான நடிகர் அவர். ஏ.வி.எம். குறித்து ஒரு டாக்குமென்டரி எடுத்தபோது, சிவாஜியை ஏ.வி.எம்.மிற்கு வரவழைத்திருந்தோம்.
http://justnowindia.com/wp-content/u...attabomman.jpg
“அவரிடம் ’பழைய வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் வசனத்தை ஒருமுறை நீங்கள் பேசிக் காட்டினால், பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும்’ என்று கூறிவிட்டு, உண்மையிலேயே அவருக்கு முழு வசனமும் ஞாபகம் இருக்குமோ, இருக்காதோ என்ற ஐயத்தில் ‘முழு டயலாக்கும் ஞாபகமிருந்தா பேசுங்க.. இல்லைன்னா’ என்று இழுத்தேன்.
“அவரோ, ’என்ன முத்து, என்னை டெஸ்ட் பண்றியா?’ என்று கேட்டு விட்டு, மளமளவென அந்த டயலாக்கை அதே ஏற்ற இறக்கங்களுடன் மூச்சு விடாமல் பேசிக் காட்டி, எங்களை மூச்சடைக்க வைத்து விட்டார். நடிப்பிற்கென்றே தன்னை அர்ப்பணித்து விட்ட அற்புத கலைஞர் அவர்.
http://justnowindia.com/rajinikamalsivaji/
http://justnowindia.com/sj-idhayathi...ajustnowindia/
தினத்தந்தி விளம்பரம்
http://i61.tinypic.com/281amvs.jpg