some comments
http:/ / sathyapriyan.blogspot.com/2008/06/blog-post_16.html
Printable View
some comments
http:/ / sathyapriyan.blogspot.com/2008/06/blog-post_16.html
அடுத்த கதையில், குணவதி என்பவள், பிறந்தகத்து அன்பில் கட்டுண்டு முதலிரவன்றே தன் தமையன் வீட்டுக்கு சென்றுவிடுவது, பாசத்தின் உச்சகட்டம்!!! அவள் கணவன் நிலை அந்தோ பரிதாபம். தன் தங்கையின் ஒரு 'பாசமலர்' என்று எடுத்துரைத்து விட்டு அண்ணன் வீடு திரும்புகிறான். இதை இடித்துக் கூறி பரிகசிக்கிறாள் அண்ணி.
அடுத்த நாள் நல்லவேளை, குணவதி குறிப்பறிந்து நடந்து கொண்டுவிடுகிறாள். எனினும், அவள் கணவனுடன் சந்தோஷமாக இருக்கிறாளோ இல்லையோ என்ற கவலையில், தமையன் வலிய வரும் தன் மனைவியை உதாசீனப்படுத்தி, தங்கையின் நினைவாகவே இருந்து மனைவியின் கோபத்திற்கு ஆளாகிறான். மக்கட்பேறு இல்லாத குறையும் அவளை சேர்த்து வாட்டுகிறது.
குணவதியின் கணவன் பூபதி, வாணிபம் செய்யும் பொருட்டு, சில மாதங்கள் பிரிந்து செல்ல நேரிடுகிறது. மனைவிக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி புறப்படுகிறான் பூபதி.
__
காட்சியமைப்புக்கு பெரிதாக ஒன்றும் மெனக்கெட வேண்டாம் எனறிருந்தாலும், இருக்கும் சிறு காட்சிகளை கச்சிதமாய் செய்திருக்கிறார்கள். ஒப்பனை, உடை அலங்காரங்கள் பளிச்!
செல்வந்தர்களுக்கும் செல்வந்தர் அல்லாதவர்களுக்கும் வித்தியாசமின்றி அண்ணியின் பிறந்தகத்தவர்களும்( பணப்பற்றாக்குறை என்று சொல்லிக்கொண்டு) அதே போல் முத்து, தங்க நகை அணிந்திருக்கின்றனர் (ஒரு வேளை கவரிங் நகையாக இருக்கலாம்!? :roll: ) ஒவ்வொரு கதையின் சோகக்காட்சியிலும் அதே பின்னணி இசை (புத்தம் புது பூ பூத்ததோ-தளபதி)!
"பூ வாடுவதற்குள் திரும்பிவிடுகிறேன்" என்று சொல்லும்போதே நமக்கு எந்த அர்த்ததில் சொல்கிறான் என்று தெரிந்துவிடுகிறது. தொன்று தொட்டு ஆண்கள் சொல்லும் அதே பொய்கள்!!!
திண்ணையில் பாட்டி சொல்லும் வம்புக்கதை போல் இருக்கிறது. வேண்டுமென்றால் தற்காலத்திற்கேற்றபடி, 'மதியம் வரும் குடும்ப-சீரியல் கதைபோல் இருக்கிறது' என்று சொல்லலாம். பக்தியின் சாறு இனிதான் பிழியப்படும்!
கதை ஏனோதானோவென்று சலிப்பு தட்டுகிறது...(இதுவரை)....
(இனி...)
நன்றி
அந்த அண்னனுக்கு சுருட்டுறதுதான் தொழில்போலும்..Quote:
Originally Posted by Shakthiprabha
கவனித்திருப்பீர்கள் ' ""முத்து நகை வேண்டும்"" என்று அங்கு குழந்தை சொன்னது.
சனிப் பிரதோஷ விரத்தைக் கூடக் கடைப் பிடிக்கத் தடுக்கும் கொடுமைக்கார மாமியுடன் குணவதி.
குணவதி கர்ப்பமாகியுள்ளா.
சீர்வரிசை வரும் என
சிலநேரம் நல்ல மாமியாக இனிய செய்தியை சம்பந்தி வீட்டிற்குச்
சென்று செய்தி சொல்கின்றா.
யோகினி தனக்குக் குழந்தை இல்லை என்ற கவலையில்
அந்த செய்தியை கணவனுக்குச் சொலலாமல் மறைக்கின்றா.
சீர்வரிசையை எதிர்பார்த்த ஏமாந்த மாமியயாரும்
மீண்டும் சுயரூபம் எடுக்க..
கணபதி இன்று தங்கையைப் பார்க்க வருகின்றான்
....
இங்கும் தமிழ் கொல்லப் படுகின்றது
மனம் --> மணமா கிறது :lol:
அண்ணன்காரன் யானையில் சீர் கொண்டுவருவான் என்று காத்திருந்த குணவதியின் மாமியாருக்கு ஏமாற்றம். அண்ணன் வெறும் கையுடன் வந்திருக்கிறான். பாவம், அவனுக்கு தெரியாது, தன் தங்கை உண்டாகியிருக்கும் விஷயமும், தன் வீட்டிலேயே அவளுக்கு அண்ணி என்ற உருவில் ஒரு வில்லி இருப்பதும்.
மெட்டிஒலி ராஜம் செந்தமிழ் பேசினால் எப்படியிருக்கும்?. அதேதான். மொழிதான் மாறியிருக்கிறதே தவிர, அதே கொடுமைக்கார மாமியாராக சாந்தி 'வில்லி'யம்ஸ்.
நேற்றுவரை பேச்சு சூடு பிடிக்கவில்லை. இன்று ஆரம்பமே அதாகத்தான் இருக்கும். (கொஞ்ச நாளைக்கு தேவலோக செட்களில் இருந்து விடுதலை).
:D
thamizh kollapadugirathu - nandri - anniyaaga nadithirupavarukku
2 varik kathaiyai 10 naatkaLaaga izhuuuuuuuuuuukkiraargaL :evil:
(viyaakkizhamai athiyaayam muthal meendum thodarven)
சக்தி,Quote:
Originally Posted by Shakthiprabha
நீங்க லீவுல போறீங்கன்னு அவங்களுக்கு தெரிஞ்சு போச்சு. அதான் இழுக்கிறாங்க. 'வந்துட்டேன்'ன்னு ஒரு அட்டென்டன்ஸ் கொடுத்திடுங்க.
இது பரவாயில்லை. 'பொறந்த வீடா புகுந்த வீடா' என்றொரு சீரியல் வருகிறது. அதை ஒருமாதம் கழித்துப்பார்த்தாலும் கதை அங்கேயேதான் நின்றுகொண்டிருக்கும். 'ராதிகா கல்யாணம் - மஹி கல்யாணம் - செண்பகம் கல்யாணம்' என்று செக்குமாடாக சுற்றி சுற்றி வருகிறது. இந்த கல்யாண சப்ஜெக்டை விட்டால் வேறு எதுவுமே கிடையாதா உலகத்தில்..?.
Hahahaha... :lol: , Yes, even I too saw that after 1 month and I can still feel the same... storyle oru maatramum illai... :xQuote:
Originally Posted by saradhaa_sn
aana,
izhuuuuuu izhuuuuuuuuuuuuu endru izhukkiraargaL endra orEEE kaaranathukku thaan naan serial parpathillai :D
Thanks to my mother in law, 2 to 3 serials la enna kathai nnu paarkara alavu (kekkara alavu) naan kadantha 15 naalaaga thEri vitten.
meendum serial galai muzhukku pottu viduven.
(enna achunnu nnu 2 to 3 serials mudinja piragu climax solrennu promise pannirukaanga :D :lol2: )
My athai (MIL) and myself concluded that every serial should finish in 1 month or max 2 months to retain the interest of the viewers. I am sure its not gonna happen though :(
I shall post here regularly (thiruvilaiyaadal) from friday (i.e. thursday episode :) )
// sorry for the digression !
கதைகள் சவ்வு மாதிரி இழுபடுவதால்
சீரியலை 'மிஸ்' பண்ணப்போகிறோம் என்ற கவலை இல்லை.
2. இப்படியான நாடகங்களுக்கு விரைவில் சமாதி ஏற்படலாம்.
இந்த trend விரவில் முடிவிற்கு வந்து விடும்
இன்றைய பகுதி குணவதியின் அழுகையுடன் ஆரம்பித்தது. பூபதி இறந்து விடுகிறான்.
அன்றைய காலகட்டத்தில் உள்ள வழக்கம்படி குணவதியின் மாமியார் அவளின் மாங்கல்ய
பலத்தை குறை கூறுகிறாள். தன்னுடன் குணவதி இருப்பதை இஷ்டப்படாமல், அவளை
தமையன் வீட்டிற்கு அனுப்பி விடுகிறாள். செல்லத் தங்கையின் பழைய குதூகலத்தையும்,
அலங்கார பொம்மையாய் அவள் வளைய வந்ததையும் நினைத்து வருந்தியபடி இருக்கிறான்
அவள் அண்ணன். எதிர்பார்த்தபடி அண்ணியும் தன் கோபத்தை, இயலாமையை, வெறுப்பை,
வண்டி வண்டியாய் சேமித்து குணவதியிடம் வெளிப்படுத்துகிறாள். அவளை ஒரே அறையில்
அடைந்து கிடக்கும்படி ஆணையிடுகிறாள் (அக்கால வழக்கம்ப்படி :? ) துளசி மாடத்திற்கு
நீர் விடும் குணவதியை, நிந்தித்து விரட்டுகிறாள். துளசிச்செடி மிகவும் பவித்ரமானதால்
கைமை அடைந்தவர்கள் நீர் விடுவது செடியை வாட்டி, பட்டுப்போக செய்து விடும் என்பது
கூற்றாம். துளசி வாடினால், செல்வச் செழிப்பும் மனையில் குறைந்து விடும் என்பது
நம்பிக்கை. அப்படி எதுவும் ஆகிவிடாது என்று மறுமொழி கூறுகிறாள் குணவதி. இருந்தும்,
அவளை வருத்துவதற்காக, ரகசியமாய் துளசிச்செடியில் கல்-உப்பை போட்டு பட்டுப்போவதற்கு
வழி செய்கிறாள். அண்ணிக்கு மனை செழிப்பு, நம்பிக்கை, எல்லாவற்றையும் தாண்டி, குணவதியை புண்படுத்துவதே முதல் நோக்கமாகிறது.
இடையே இவர்கள் மாட்டு வண்டியில் ஊர் திரும்பும் போது, சிவனடியார் ஒருவர் இவர்களை
பார்த்தபடி நின்று, இது 'திருவிளையாடல்' தொடர் என்பதை நினைவூட்டி புண்ணியம் கட்டிக்கொள்கிறார்.
பண்டைய கால தவறான வழக்கங்கள் பலவற்றைக் கேள்வி கேட்க வைக்கிறது இந்த அத்தியாயம்.
இன்றும் சில இடங்களில் இது நடந்து கொண்டு இருக்கிறது என்பது வருந்துதற்குறிய விஷயம்.
துளசிச் செடிக்கு நீர் விடக்கூடாது என்பதற்கும், கைமை அடைந்தவள் ஒரு அறைக்குள் அடைந்து
கிடப்பதற்கும் சொல்லவும் முடியாத சில காரணங்கள் உண்டு. எனினும், பொதுப்படையில் பார்க்கும் போது
இவை எல்லாம் பெண்ணிற்கு இழைத்த அநீதிகள் தான்.
சிவன் குழுவினர்க்கு 2 வாரமாக லீவ்! நமக்கு சலிப்பு தட்டும்முன், தரிசனம் தருவது நலம்.
பிரதோஷ நந்நாளை எதிர்ப்பார்த்து நட்சத்திரம் குறித்து காத்திருக்கிறார்கள் போலும்.
என்னதான் குணவதியும், மாமியாராக வரும் ஷாந்தி வில்லியம்ஸ் (சரிதானே?), மற்றும் அண்ணனாக வருபவரும் நன்கு நடித்திருந்தாலும், (அண்ணியின் நடிப்பு சுமார் தான்), இது பக்தித்தொடர்
என்பதால், வெறும் கதையுடன், அண்ணனும் தங்கையும், இறைவனிடம் கொண்ட பக்தியை முதன்மையாக
வைத்து சித்தரிக்க வேண்டும். இல்லையெனில், மாமியார்-மருமகள் சண்டை, மதனி-நாதினி வயிற்றெறிச்சல்
என்று அரைத்த மாவையே ஒரு மாறுதலுக்காக 'செந்தமிழில்' அரைத்து வழங்குவதாகிவிடும்.
இதனை கவனம் கொண்டால் இத்தொடரின் சுவாரஸ்யத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.
(மீண்டும் அடுத்த திங்கள்)
நன்றிQuote:
Originally Posted by Shakthiprabha
நேற்றைய தொடரைப் பார்க்க முடியவில்லை.
இவ்விடம் - சிவன் கோவில் ( ஒரே ஒரு சைவக் கோயில் ) கொடியேறிய படியால் ,,,,,
( 2 கோவில்கள் உள்ளன.
1. குஜராத் (?)..வெள்ளைச் சிலை விஷ்ணு - சிவன் /முருகன்/பிள்ளையார் வீற்றிருக்கின்றார்கள்
2. இப்பொழுதுதான் 1 வருடம்- ஆரம்பித்த சிவன் கோவில்)
வேலை நாட்கள்.
ஆகவே இரவுத் திருவிழா மட்டுமே.
6.00 மணைக்கு ஆரம்பமாகி 10.30 /11.00 முடியும்
Quote:
Originally Posted by Shakthiprabha
முடிந்த அளவு பெயர்கள் இத் தொடரின் முதல் பக்கத்தில் இட்டு வருகின்றேன்.
ஷக்தி,
ஒரு முக்கிய விஷயத்தை கவனித்திருக்கிறீர்களா?.
பெண்ணின் மாங்கல்யக் குறையினால்தான் தன் மகன் இறந்தான் என்று எந்த மாமனாரும் சொன்னதில்லை, மாமியார்தான் சொல்லி வருகிறாள்.
துளசிச்செடிக்கு விதவை தண்ணீர் விடக்கூடாது என்று எந்த ஆணும் சொன்னதில்லை, இன்னொரு பெண்தான் சொல்கிறாள்.
மங்கல காரியங்களின்போது விதவைப்பெண்கள் வந்து நின்றால் அவர்களை எந்த ஆணும் குற்றம் குறைகளால் இடித்து விரட்டுவது கிடையாது. 'சுமங்கலி'பெண்கள்தான் விரட்டுவார்கள்.
ஆகவே இவைபோன்ற காரியங்கள் பெண்களுக்கு எதிராக "பெண்களாலேயே" ஏற்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் கொடுமைகள். எதிர்த்துக்கேட்கும் ஆணைப்பார்த்து' நீங்க சும்மா இருங்க உங்களுக்கு ஒன்றும் தெரியாது' என்று விரட்டுவதும் நம் இனம்தான் என்பதில் நாம் பெருமை கொள்ள முடிகிறதா..??????.
உண்மைதான் சாரதா!
கசப்பான உண்மை!
நான் நம்பும் உண்மையும் கூட.
பெண்ணுக்கு பெண் தான் முதல் எதிரி பல சமயங்களில்.
இன்றைய காலகட்டத்தில், ஒரு பெண்ணை, அவள் திறமையை, அவள் அறிவை, ஏன் அவள் நடத்தையைக் கூட வம்பு பேசுவதில் இன்னொரு பெண்ணுக்கே பெரும் பங்கு உண்டு என்பது மறுக்க முடியாத விஷயம்.
பொறாமை எனும் தீ யாரை விட்டு வைக்கிறது! வருந்த வேண்டிய ஒன்று.
குணவதியை புண்படுத்துவதையே முதல் நோக்கமாகக் கொண்டு அவளை
வாட்டி வருகிறாள் சுசீலை. அமைதியைத் தேடி இறைவன் சன்னதியில் இருக்கும் நேரம்
செல்வந்தர் ஒருவர் அன்னதானம் செய்கிறார். அவர்களே நிறைமாத கர்பிணியான குணவதிக்கு
தாங்களாக கொண்டு வந்து உணவு கொடுக்கின்றனர். இதை தற்செயலாக அங்கு வந்த சுசீலையின்
அண்ணி பார்த்து விட, அவளுக்கு குணவதியின் மேல் பரிதாபம் ஏற்படுகிறது. சுசீலை சரியாக
கவனித்துக் கொள்ளவில்லை, குணவதி உண்ணும் போது பசியின் பரபரப்பு தெரிகிறது என்று
அவள் வாதத்தை, சுசீலையின் அண்ணன் உதாசீனப் படுத்துகிறான்.
இங்கு முதலுக்கு மோசமாய், சுடுசொல்லும், பசியும் வாட்டி எடுக்க, அவள் அண்ணனுக்கோ குணவதிக்கு வளைகாப்பு
செய்துவிட வேண்டும் என்ற ஆவல் துடிக்கிறது. ஊராரின் பேச்சுக்கும், கருத்துக்கும் அவன் கட்டுப்படுபவனாகவோ, பயப்படுபவனாகவோ இல்லை. குணவதியின் மாமியாரிடம் 'வளைகாப்பு' நடத்தப் போகும் நற்செய்தியை கொண்டு சென்று, பதிலுக்கு அவமரியாதையை வாங்கிக்கொண்டு வருகிறான். எதைப் பற்றியும் அவனுக்கு கவலையும் இல்லை. அவன் தங்கையின் மகிழ்ச்சி மட்டுமே குறியாய் இருக்கிறான்.
பரலோகத்தில் இருந்து கொண்டே மூம்மூர்த்திகள் தம்பதி சமேதராய், கைமை அடைந்த பெண்ணுக்கு
வளைகாப்பு நடக்கும் விஷயம் பற்றி அறிந்து, தங்கள் அதிர்ச்சியை, ஒவ்வாமையை பிரதிபலிக்கின்றனர்.
(குறிப்பாக, பெண் அம்சங்களான சரஸ்வதியும், லக்ஷ்மியும் அதிர்ச்சி அடைய, பிரம்மாவும் விஷ்ணுவும்
புன்முறுவல் பூக்கின்றனர்) உமையவள் மட்டும் சிவனுடன் சேர்ந்து புன்முறுவல் பூக்கிறாள்.
சாரதா சொன்னது போல் இறை அம்சங்களில் கூட பெண்ணுக்கு பெண் தான் முதல் தடை விதிப்பார்கள் போலும்!
மும்மூர்த்திகள் யாவரும் குணவதி பற்றிய 'தொலைக்காட்சித் தொடர்' பார்க்கும் முகபாவத்துடன்,
காட்சி அளித்தது எரிச்சலூட்டியது.
குணவதி, செய்வதறியாது குழம்புகிறாள். தனக்கு மகனின் (கவனிக்க, இவளும், தனக்கு பிறக்கப் போகும்
"குழந்தையை"ப் பற்றி யோசிக்கவில்லை, பிறக்கப் போகும்""""மகன்"-னைப் பற்றி பேசுகிறாள் ) வருகைக்காக
அண்ணன் கொண்டாடுவது, சரியில்லையோ என்று குழம்புகிறாள்
(தொடரும்)
:exactly:Quote:
Originally Posted by Shakthiprabha
ஆகவேQuote:
Originally Posted by Shakthiprabha
இன்று நேற்று ஏற்பட்டதல்ல ....
தொடருங்கள்
//ஆகவே
இன்று நேற்று ஏற்பட்டதல்ல .... //
ஆமாம் ஆனா! தொன்றுதொட்டு வந்த சிறந்த பழக்கம் ! :|
எங்கள் ஜாதியில் பிள்ளைபெறப்போகும் பெண்ணுக்கு வளைகாப்பிடும் போது, சுமங்கலிப் பெண்கள் சுற்றி கும்மியிட்டு
"பையன் பொறக்கணம்"
"பையன் பொறக்கணம்" ன்னு சொல்லிகிட்டே கும்மியடிப்பாங்க
:|
:sigh2:
eppo thaaan idhelaam maara pogudho... atleast we can make a change in the future... :D
Madhu,
ippo ipdi yaarum solrathillai :)
It was there 20 years back, Its changing now.
SP, definetely it is changing... But I hope still it is there....Quote:
Originally Posted by Shakthiprabha
It happened to my close friend who is married 2 years back, after she delivered girl baby... she said she wished to have a boy...
enna kodumai idhu... :evil:
But, I feel how a girl can hate a girl baby.....??? :oops:
WHAT THE!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :shock: that's atrocious :cry2:Quote:
Originally Posted by Madhu Sree
குணவதிக்கு மகன் பிறக்கிறான். ஆதித்தன் என்று பெயரிட்டு செல்லமாய் வளர்த்து வருகின்றனர்.
எட்டு வயது குழந்தைக்கு மாமன் ஊட்டி விடும் அளவு செல்லம். அவனை சிறந்த பாடசாலையில்
கல்வி கற்பிக்கவும் ஏற்பாடு செய்கிறான் தனபதி. இவரின் பாசத்தையும் அன்பையும் ஊரே பாராட்டுகிறது.
தனபதி ஆதித்தன் மீது கொண்டுள்ள கண்மூடித்தனமான அன்பு, தன் தங்கையையும் தன்னையும் (!!!)
என்றாவது நிராதரவாய் செய்டுவிடும் என்று அஞ்சி அண்ணனையும் தங்கையையும் பிரிக்கவேண்டும் என்று எச்சரிக்கிறான் சுசீலையின் அண்ணன்.
புத்ரதோஷம் நீங்கி மக்கட்பேறு பெறுவதற்காக தன்னுடன் கோவிலுக்கு வருவதற்கு எட்டு ஆண்டுக்கும் மேலாய் சலிக்காமல் சுசிலை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறாள் (ரொம்ப பாவம்! ) . தனபதியும் பெயருக்கேற்ப தனம் தீட்டுவதில் குறியாய், நேரமின்மையை சுட்டிக்காட்டுகிறான். அதித்தனுக்கும், குணவதிக்கும் என்றால் நேரமின்மை என்ற பேச்சிற்கு இடமிருப்பதில்லை. 'ஏன் பாசத்தில் இந்த ஓரவஞ்சனை' என்று இத்தனை வருடத்து எரிச்சலை, ஏமாற்றத்தை மறைத்து (எரிச்சலை மொத்தமாக, தவறான இடத்தில், அதாவது, குணவதியிடம் காட்டிவிடுகிறாள்!) வருத்தம் மேலிட வினவுகிறாள் சுசிலை.
நேற்றைய பகுதியில், சில நண்பர்களின் ஆலோசனையின் பேரில் குழந்தை ஒன்றை தத்தெடுக்க, சுசீலையிடம்
கலந்தாலோசித்து முடிவெடுக்கிறான் தனபதி. ஆனால் அவன் தத்தெடுக்க நினைத்திருப்பது "ஆதித்தனை"த்தான்
என்பது சுசீலைக்கு இன்னும் தெரிவிக்கவில்லை. இந்த விஷயத்தைக் கேட்ட குணவதி, தன் அண்ணி
இதை எவ்வாறு ஏற்றுக்கொள்வாள் என்று எண்ணி கலக்கமுறுகிறாள்.
(தொடரும்)
செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.
என்கிறது திருக்குறள்.
சுசீலையால் தன் கணவனை அன்பால் திருப்பமுடியவில்லை.
'தானும் தானே அன்புக்கு ஏங்கியவள் ' சினந்து கேட்க முடியவில்லை. கேட்டும் பயனில்லை.
அப்படியிருக்க,
குணவதியை நொந்து, வாட்டி என்ன பயன்!? இதனால் சுசீலையின் பக்கத்து இருக்கும் சில நியாயங்களும் மறைந்து விட, அவள் சம்பாதிப்பது அவபெயர் மட்டுமே.
உன்னை விட உயர்ந்தோரிடம் நீ சினத்தை காப்பது பெரிதல்ல. எவன் ஒருவன் உன்னிலும் தாழ்ந்த நிலையில் இருக்கிறானோ, அவனிடம் உன் பொறுமையைக் காட்டு. உன் அன்பை வெளிப்படுத்து. உன் சினத்தை அடக்கிக் கொள். என்பது மானுடப் பாடம்.
(கடந்த பல அத்தியாயங்களாக, 'இறைவன்' வந்து ஒரு அருளுரையும் கூறுவது போல் தெரியவில்லை என்பதால், இத்தொடரின் ஆன்மீகம் கெட்டுவிடாமல் இருக்க நாமே இப்படிப்பட்ட சில அரிய/நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் தான் உண்டு! )
(இந்தத் திரியை 'நிரந்தரத்திரி' ஆக்கிவிட்டிருக்கிறார்கள். அதற்காகவேனும், அவ்வப்போது, முடிந்த போது சில நல்ல கருத்துக்களை பகிர்ந்து வரலாம் என்று எண்ணுகிறேன்)
// (கடந்த பல அத்தியாயங்களாக, 'இறைவன்' வந்து ஒரு அருளுரையும் கூறுவது போல் தெரியவில்லை என்பதால், இத்தொடரின் ஆன்மீகம் கெட்டுவிடாமல் இருக்க நாமே இப்படிப்பட்ட சில அரிய/நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் தான் உண்டு! )//
உண்மைதான் சக்தி,
குணவதியின் கதை தொடங்கியதில் இருந்து, இது புராண தொடர் என்பதிலிருந்து சற்று மாறி, இக்கால தொடர் ஒன்றை அக்கால உடையணிந்து செந்தமிழ் பேசி நடிப்பதுபோலுள்ளது. (அதை மாற்றத்தான் நேற்று திடீரென தேவலோகத்தைக்காட்டினரோ).
பெண்கள் எப்போதும் தங்களுக்கு ஆண் குழந்தை வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், 'பெண் கல்யாணமானதும் நம்மை விட்டுப்போய்விடுவாள். பையன்தானே கடைசிவரை நம்ம கூட இருப்பான்'. (இக்கால தனிக்குடித்தன வாழ்க்கையில் பையனும்தான் போய்விடுகிறான்).
// (இந்தத் திரியை 'நிரந்தரத்திரி' ஆக்கிவிட்டிருக்கிறார்கள். அதற்காகவேனும், அவ்வப்போது, முடிந்த போது சில நல்ல கருத்துக்களை பகிர்ந்து வரலாம் என்று எண்ணுகிறேன்) //
'திருவிளையாடல்' திரியை நிரந்தரமாக்கியதில் சந்தோஷம். ஆனால் 'இன்னொரு' திரியையும் நிரந்தரமாக்கியதுதான் கொஞ்சம் ஓவராக தெரிகிறது. "அந்த" நிகழ்ச்சியின் பக்கமோ, "அந்த" திரியின் பக்கமோ போய் பல வாரங்களாகி விட்டன.
:-)Quote:
Originally Posted by Shakthiprabha
உண்மை தான். வேறொரு காரணமான 'வரதக்ஷணை'யும் பெண் பிறப்பிற்கு கவலை அளிப்பதாய் இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலைகள் இப்போது சற்றே குறைந்து வருகிறது என்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்!Quote:
Originally Posted by saradhaa_sn
சுசீலை மிக ஆசையுடன், தன் அண்ணன் மகனைத் தத்தெடுக்க அண்ணனுடன்
கலந்தாலோசித்து திட்டமிடுகிறாள். அழுது புரண்டு, சண்டையிட்டு மிரட்டியாவது
அண்ணன் மகனையே தத்து எடுக்க வெண்டும் என்று நினைக்கிறாள்.
குணவதியோ அண்ணியும் மனப்பூர்வமாக சம்மதம் தெர்வித்தால் தான், தன் மகனை
தானம் தர சம்மதிப்பேன் என்று கூறிவிடுகிறாள். தனபதி, சுசீலையும் அவள் அண்ணனும்
கோவலில் பேசிக்கொண்டிருப்பதை ஏதேச்சையாக பார்த்துவிடுகிறான். அவன் மனம் சந்தோஷத்தில்
மிதக்க, உடனே சுசீலையிடன் சென்று "ஆதித்தனை" தத்து எடுக்க தனக்கு முழுச்சம்மதம் என்று
கூறுமாறு ஆணையிடுகிறான்.
கணவன் இல்லாத சமயம் தைரியமாக பேசும் சுசீலை, அவன் பேச்சுக்கு மறு பேச்சு பேச
தயங்கி, இறுதியில் குணவதியின் விருப்பப்படி, தன் தாலி மீது சத்தியம் செய்து, அதித்தனை
நன்றாகப் பார்த்துக்கொள்வதாய் உறுதி அளிக்கிறாள். தன்னால் எதும் செய்ய முடியாத நிலையில்
இனி அதித்தன் அன்புடனும், அறிவுடனும் சிறப்பாய் வளர்ப்பதே தன் கடன் என்று ஏற்றுக்கொண்டுவிடுகிறாள்.
இவர்கள் சொத்தின் மீது ஆசைப்படும் அவள் அண்ணன் மட்டும் வேறு ஏதோ ஊறு விளைவிக்க
ரகசியமாய் எண்ணமிடுகிறான்.
(தொடரும்)
தாலியின் மீது ஆணையிடுவது தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் தொன்று தொட்டு வரும் பழக்கம்
என்று இந்த தொடர் மூலம் நமக்குத் தெரியவருகிறது. இதில், இக்காலத் திரைப்படங்களை நொந்து என்ன
பயன்! அவர்கள் நம் மரபை அல்லவா தழைக்கசெய்கிறார்கள் ! :|
பொதுவாய் தீயச் செயலில் ஈடுபடும் மனிதர்களை சிலவகையாய் பிரிக்கலாம்.
ஒன்று: பிறப்பிலேயே சூது நிறைந்து, பிறர் குடியைக் கெடுத்து அதில் இன்பம் காணுபது, அல்லது
பிறரை துன்புறுத்திப் பார்ப்பதில் மகிழ்ச்சி கொள்ளும் மனம் படைத்த சிலர்.
இரண்டு: மண், பொன், பெண் (இந்தக் கால சீரியல்களில் தனக்குத் தேவையான ஒரு 'ஆண்' கிடைப்பதற்கு
பெண் செய்யும் யுக்திகளும் சொல்லி மாளாது!!!) இம்மூன்றும் தனக்கு வசப்படுத்திக் கொள்ள எக்காரியத்திலும் ஈடுபடத் தயங்காதவர்கள்.
மூன்று: சுய புத்தி மழுங்கி, சூழ்நிலையின் காரணமாய், தீய காரியங்களுக்குத் துணை போகும் மனிதர்கள்
தீயச் செயலுக்கு ஊந்தப் படும் பலரும், மூன்றாம் வகையைச் சேர்ந்தவர்கள் தான்.
கைகேயி, இராவணன் போன்ற இயறகையில் நற்குணம் படைத்த பலரும் கூட மூன்றாம் வகைக்கு தள்ளப்பட்டிருப்பது செவிவழி அறிந்த உண்மை.
அதனாலேயே முயன்றவரை நம் சேர்கையை சரியானதாய் அமைத்துக்கொள்ள வேண்டும். புத்தியானது மழுங்கி, கலங்கி, தெளிவற்று இருக்கும் சமயத்தில், இன்னல் விளைவிக்கும் சிலரின் ஆலோசனைகள், நம் மனக் கதவைக் கூடத் தட்டாமல், ஆழப் புகுந்து விடும் அபாயம் உண்டு. இங்கு சுசீலையின் நிலையும் அப்படித் தான் இருக்கிறது.
நேற்றைய மொத்தக் கதை இவ்வளவு தான்.
******
குணவதி குழந்தையைத் தத்து கொடுக்க, தன் அண்ணியும் மனப்பூர்வமாக சம்மதம் தெர்விக்க வேண்டும் என்கிறாள். அவள் அண்ணியும் சம்மதம் தெரிவிக்கிறாள்.
*****
ஒரு திரைப்படத்தில் நடிகர் விவேக் பேசி நடிக்கும் கீழ்கண்ட வசனம் இது.
"உதவி டைரெக்டர்: சார் அடுத்த எபிசோட் கதை எப்டி டெவலப் பண்றது"
டைரெக்டர் : முதல் எபிசோட் கதை எது வரை நிக்குது?
உதவி : கதையின் மெயின் கேரட்கர், மாடிலெருந்து கீழ நடப்பதை பாக்கறாங்க.
டைரெக்டர்: அப்ப இந்த எபிசோட்ல மாடிலெருந்து இறங்கி கீழ வராங்க....அப்டியே 'தொடரும்' போட்ருங்க!
*****
'ஒரு வரித் திரைக்கதையை ஒரு அத்தியாயமாக்குவது எப்படி' என்று ஏதாவது புத்தகத்தை படித்துவிட்டுத்தான் படமெடுக்க வருகிறார்கள் பலர்!
@ Sakthi prabha Mam,
:clap: :ty:
சக்தி,
இன்று நடக்கும் அத்தனை தகிடுததம், தில்லுமுல்லு, ஏமாற்றுதல், ஏமாறுதல் எல்லாமே புராணங்களில் இருந்து வந்தவைதானே.
இந்திரனின் பொய்சேவல கூவக்கேட்டு நீராடச்சென்ற அகலிகையின் கணவனுக்கும், பொன்மான் என நினைத்து பொய்மானைத் துரத்திசென்ற ராமனுக்கும் அவை போலி என்பது பின்னர்தானே தெரிந்தது. ஆகவே போலிகளைக் கண்டு ஏமாறுவது நம் மூதாதையர் நமக்கு தந்த சொத்து.
அதுபோல, ஒருவன் நேர்வழியில் சென்றால் பலன் கிடைக்காது, குறுக்கு வழிதான் பலன் தரும் என்பதற்கு வினாயகர் - முருகன் - ஞானப்பழம் சம்பவம் ஒன்று போதாதா?. நிஜமாகவே உலகைச்சுற்றிய முருகனுக்கு பழம் கிடைக்கவில்லயே...!. பட்டைநாமம்தானே கிடைத்தது..!.
:rotfl: :rotfl: :clap:Quote:
Originally Posted by Shakthiprabha
குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்Quote:
Originally Posted by Shakthiprabha
தாலி கட்டுதல் தமிழரின் தொன்று தொட்ட பழக்கம் இல்லை.
இளங்கோவின் - சிலப்பதிகாரம் இதற்குச் சான்று..
கோவலன் - கண்ணகி - தாலிச் சடங்கு எங்குமே கூறப்படவில்லை.
இடையில் புகுத்தப்பட்ட மரபு.
இப்படி எத்தனையோ ..
எம்மை நாமே ஏமாற்றQuote:
Originally Posted by saradhaa_sn
எமக்குத் துணைபோகும் காட்சிகள் .
சாரதா,
உண்மை தான். தொன்று தொட்டு எல்லா மனிதர்களும் தவறு செய்து கொண்டுவந்திருக்கிறார்கள். அதன் மூலம் பாடம் கற்கிறார்கள்! கற்பிக்கிறார்கள்.
ஆனால் ஒவ்வொரு தலைமுறையிலும், ஒவ்வொரு தலைமுறையினரும், தாங்களாகவே சுயமாய் தவறு செய்து தெளிவது தான் தொடரும்.
ஆனா,
நீங்கள் சொல்வது சரி. நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தாலி என்பதும் பொன் என்பதும், (சேமிப்பு என்ற பெயரில்) பின்னர் சேர்க்கப்பட்ட விஷயங்கள்!
தத்துக் கொடுக்கும் போது சஞ்சல மனத்துடனும், சங்கடத்துடனும், காட்சி தரும்
குணவதியின் பின்னால் ஒரு சிறு குழப்பக் கதை இருக்கிறது. கோவிலில் சந்திக்கும்
சிவனடியார் ஒருவர், தத்துக் கொடுப்பதால் அவள் குழந்தைக்கு ஆபத்து என்று
கூறுவிடுவதாலேயே அவள் மனம் கலங்கமுற்றிருக்கிறது.
சடங்கை செய்து கொண்டிருக்கும் வரை வாய் மூடி மௌனமாய் இறுக்கமாய் இருந்துவிட்டு,
புரோகிதர் "தத்துக் கொடுக்க சம்மதமா" என்று கேட்டவுடன், மடை திறந்த வெள்ளமாய்
அவளுக்கு சிவனடியாரின் வாக்கு நினைவுக்கு வர, "முடியாது" என்று மறுத்து மகனை
இழுத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்கிறாள்.
பின்னால் ஒடி வரும் தன் தமையனையும் சந்தேகப்பட்டு, சுடு சொல் உதிர்த்து,
அவனை விட்டு பிரிந்து செல்கிறாள்.
அடுத்த காட்சியிலேயே தன் அண்ணன் போலி சிவனடியாருக்கு பணம் கொடுத்து
விலை பேசியதை அறிந்துகொண்டு விடுகிறாள் சுசீலை. குணவதி பிரிந்து போனதற்காக நிச்சயம் மனம்
கலங்குவிடுவாரே தன் கணவர் என்று வருந்துகிறாள். தன் கணவனுக்கு எப்படி
சமாதானம் சொல்வது, என்று மனம் கலங்குகிறாள்.
குணவதியின் பிரிவை, அவள் சுடுசொல்லை தாங்க முடியாத தனபதி, யாரிடமும்
பேசாமல், பூட்டிய அறைக்குள் தனிமையை நாடுகிறான்.
(அல்லது........? )
(தொடரும்)
"பொய் சத்தியத்தை நம்பி ஏமாறாதே" என்று சொன்ன சிவனடியாரின் வாக்கில்
கவனம் வைத்தால், 'அண்ணன்' மேல் காட்டும் வீண் அச்சம் பழி விலகியிருக்கும்.
(அண்ணன் சத்தியம் ஏதும் செய்யவில்லையே! அண்ணி அல்லவா செய்தாள்)
இத்தனை வருடம் வளர்த்து ஆளாக்கிய அண்ணன் மேல் அத்தனை சீக்கிரம்
சந்தேகம் வந்துவிடக்கூடுமா? 'சிவபக்தி' தான் காரணமோ என்னவோ!
மல்லிகை முல்லையை தொடச்சொல்லும் போலி சிவனடியார்
"முட்டாள் பெண்ணே, மணக்கும் முல்லையை விட்டுவிட்டு, வாடிவிடும் மல்லியை
தொட்டுவிட்டாயே" என்கிறார். இந்த வாக்கியத்தின் அபத்தத்தை கண்டுகொண்டாலே
அவன் சிவனடியாரா இல்லையா என்று தெரிந்துவிடும்! முதல் ஒரு நிமிடங்களுக்கு
நமக்கே சந்தேகம் வராதபடி இருந்தது அவரின் நடிப்பு. இருந்தும் மல்லிகை முல்லை
என்றெல்லாம் அளந்தவுடன் நாம் கண்டுபிடித்துவிட முடிகிறது.
சிவனடியாராக வந்த நடிகர் நறுக்கு தெரித்தாற் போல் வசனம் உச்சரித்தார். நன்று!
அவருக்கு கொடுக்கபட்ட வசனமும்,
"உடன்பட்டு நின்றால் உன் பொருள் உன்னதன்று
முரண்பட்டு நின்றால் மகனுக்கு மகிழ்ச்சி"
என்றெல்லாம் எதுகை மோனையுடன் அழகாய் இருந்தது (பொருள் அழகற்றது என்றாலும் கூட!) அவரும் தமிழை நன்கு உச்சரித்து தமிழுக்கும் வசனகர்த்தாவிற்கும் பெருமை சேர்த்தார்!
நான்கு பேர் கூடிவிடும் வரை காத்திருந்து விட்டு தன் ஒப்புதலை தர மறுப்பது, மிகுந்த
வேதனைக்குறியது. (ஒரு வேளை சிவனடியாரை சடங்கு நடக்கும் சில நாழிகை முன்பு
தான் பார்த்தாள் என்று வைத்துக்கொள்ளலாம்!)
குணவதியாய் நடிக்கும் மல்லிகா, தனபதியாய் நடிக்கும் மனோகர் (சரியா?)
மற்றும் சுசீலை, அவள் அண்ணன் என எல்லோரும் தங்கள் பாத்திரத்தை நன்றாக செய்கிறார்கள்.
சுசீலை கூட முன்பை விட சோபிக்கிறார்.
போலிச்சாமியார்கள் கண்டு ஏமாறுவது இக்காலத்து கேடு என்று தலைவலியை நொந்து கொண்டால்,
எக்காலத்திலும் போலிகளுக்கு பஞ்சமிருந்திருக்கவில்லை.
நம் அறிவை விட மிஞ்சியது எதுவுமே இல்லை.
நம்மீதும் நம் உள்ளுணர்வின் மீதும் பகுத்தறிவின் மீதும் நம்பிக்கை இருந்தால், கேட்பார் பேச்சைக் கேட்டு
சீரழியாமல் இருக்கலாம். "கண்ணால் காண்பதும் போய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்"
என்றெல்லாம் பல பழமொழிகள் அன்றே பலர் கூறிச்சென்றிருந்தாலும், பல நேரங்களில் புலனறிவு பகுத்தறிவை மிஞ்சிவிடுகிறது.
"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"
திருவள்ளுவர் விட்டுவைக்காத சங்கதி எதுவுமே இல்லை!!!!
நன்றி
:ty:
:clap: :clap:Quote:
Originally Posted by Shakthiprabha
:exactly:Quote:
Originally Posted by Shakthiprabha
பார்க்க:
http://forumhub.mayyam.com/hub/viewt...er=asc&start=0
:banghead: :banghead:Quote:
Originally Posted by Shakthiprabha
:yes:Quote:
Originally Posted by Shakthiprabha
டொக் டொக் டொக் ....
இது நாளையுடன் முடிகின்றதா?
:-(((
இரு தினங்களுக்கும் மேலாக, சில பல தனிப்பட்ட காரணங்களால் தொடரைப் பார்க்க முடியவில்லை.
'இன்றுடன் இத்துடன் முடிவடைந்தது' (தனபதி/குணவதி கதையுடன்) என்று அறிவித்து மிகுந்த மனவேதனைக்கு ஆளாக்கி விட்டார்கள்.
ஒரே ஒரு தொடர்! புராணங்களைப் பற்றி இருந்திருந்து ஆரம்பித்து, அதையும் தொடராமல் முடித்து விட்டார்களே!
மிகுந்த வேதனையாய் இருக்கிறது.
சாதாரணக் கதைகளை இழுத்து 2 வருடங்கள் இழுக்க முடியும் இவர்களுக்கு, பக்தித் தொட்ர்கள், புராணத் தொடர்கள் 2 மாதங்கள் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை.
சளைக்காமல் ராமாயணம், மஹாபாரதம், க்ருஷ்ணக் கதைகள் என்று எடுக்கும் ராமனந்சாகர் போன்ற வட இந்தியர்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.