Ninavil Nindraval
http://www.tamilflix.net/2011/08/03/...atch-online-2/
Printable View
Ninavil Nindraval
http://www.tamilflix.net/2011/08/03/...atch-online-2/
விரைவில் இந்த திரி மீண்டும் புதிய விவரங்களுடன் தொடர இருக்கிறது....
நண்பர்கள் தங்கள் பதிவுகளை தொடர்ந்து இடுமாறு கேட்டுக்கொள்கிறோம்....
கலை நிலவின் நினைவலைகள் : 1
ஸ்மார்ட் ஹீரோ நடிகர் ரவிசந்திரனின் கிடைத்தற்கரிய அழகிய வண்ணப்புகைப்படம்
'பேசும் படம்' இதழிலிருந்து...
http://i1110.photobucket.com/albums/...ar/Ravi1-1.jpg
தொடரும்....
அன்புடன்,
பம்மலார்.
கலை நிலவின் நினைவலைகள் : 2
இதயக்கமலம் வெளியான தேதி : 27.8.1965
முதல் வெளியீட்டு விளம்பரம் : வெண்திரை : செப்டம்பர் 1965
http://i1110.photobucket.com/albums/...ar/Ravi2-1.jpg
பட விமர்சனம் : வெண்திரை : செப்டம்பர் 1965
http://i1110.photobucket.com/albums/...ar/Ravi3-1.jpg
குறிப்பு:
"இதயக்கமலம்", சென்னை 'சித்ரா' மற்றும் 'மஹாராணி' அரங்குகளில் முறையே ஒவ்வொரு அரங்கிலும் 105 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது. 'உமா'வில் 84 நாட்களும், 'ராம்' திரையரங்கில் 57 நாட்களும் மிக வெற்றிகரமாக ஓடியது. மதுரை 'நியூசினிமா'வில் 84 நாட்களும் மற்றும் கணிசமான ஊர்களில் 50 நாட்களைக் கடந்தும் ஓடி 'சிறந்த வெற்றிப்படம்' என்கின்ற அந்தஸ்தை அடைந்தது.
தொடரும்....
அன்புடன்,
பம்மலார்.
அன்புள்ள பம்மலார் சார்,
பொதுவாக Tamil Films - Classics பகுதியில் புதிய பதிவுகள் எப்போதாவது இடம்பெறுவதால் அடிக்கடி விஸிட் செய்வதில்லை. ஆனால் இன்று காலை நமது பம்மலார் புதிய் பதிவு இட்டிருப்பதாகப்பார்த்ததும் உற்சாகம் மேலிட திறந்து பார்த்தபோது, நிஜமாகவே உற்சாகமளிக்கும் விதமாக...
'பேசும் படம்' இதழில் வெளியான, ரவிச்சந்திரன் அவர்களின் அழகிய இளமைப்பருவ வண்ணப்புகைப்படம்,
'இதயக்கமலம்' திரைப்படத்தின் கண்ணைக்கவரும் விளம்பர ஆவணம்,
'இதயக்கமலம்' திரைப்படத்திற்கான விமர்சனப் பக்கம், மற்றும்
'இதயக்கமலம்' திரைப்படம் ஓட்டத்தில் செய்த சாதனை பற்றிய பாக்ஸ் ஆபீஸ் விவரம் என்று
வித விதமாக அள்ளியளித்து மகிழ வைத்து விட்டீர்கள்.
நடிகர்திலகத்தின் சாதனைகள் மட்டுமல்லாது, சாதனை படைத்த மற்ற கலைஞர்களின் ஆவணங்களையும் பாகுபாடின்றி வெளியிட்டு வரும் தங்களின் பணி போற்றற்குரியது. (அப்படி பாகுபாடின்றி செயல்படுவதால்தான், நடிகர்திலகத்தின் திரியில் மக்கள் திலகத்தின் 'நம்நாடு' விளம்பரத்தை இடம்பெறச்செய்தீர்கள்).
தங்களின் தூய பணி தொடர வாழ்த்துக்கள்.
டியர் பம்மலார்,
எங்கள் இதயத்தில் கமலாசனம் போட்டு அமர்ந்து கொண்டு தாங்கள் ஆட்டுவித்தால் நாங்கள் ஆடாமலா இருப்போம். சும்மா ஆடிட்டம்ல..
சூப்பரோ சூப்பர்...ரவிச்சந்திரனின் திரையுலக அத்தியாயத்தில் முதல் இடம் பெற்ற படம் இதயகமலம். சித்ரா திரையரங்கில் நான் சிறுவனாக இருந்த போது பார்த்தது. அதற்குப் பிறகு நீ................ண்................ட நாட்களுக்குப் பின்னர் சமீபத்தில் ஒளித்தகடு வெளிவந்தது. இருந்தாலும் சித்ரா திரையரங்கின் பெரிய திரையில் அந்தப் படத்தைப் பார்த்த உவகை இதில் கிட்டவில்லை என்பது உண்மை. குறிப்பாக மலர்கள் நனைந்தன பனியாலே பாடலின் போது திரையரங்கம் முழுவதும் அப்படியே மக்கள் சொக்கி கையை சொடுக்கியும் தாளம் இட்டும் ரசித்தது இன்னும் என் நெஞ்சில் நினிவில் உள்ளது. அந்த உணர்வை நீங்களும் அனுபவிக்க முயலுங்களேன். இதோ அந்தப் பாடல்
http://youtu.be/2colXTNhurQ
'கலைநிலவு' ரவிச்சந்திரன் அவர்கள் ஒரு கலகலப்பான நடிகர் என்ற வகையில் என்னை கவர்ந்தவர். அவர் படங்கள் எல்லாமே ஜாலியான பொழுதுபோக்குப் படங்களாக இருந்ததோடு அவர் நடித்த படங்களின் பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டும் ரகமாகவே இருந்தது குறிப்பிடத் தக்கது. அவருக்கென்று ஒரு பாணியைக் கடைப்பிடித்து அதில் நல்ல வெற்றி அடைந்தார் என்றால் அது மிகை இல்லை. முதன் முதலாக இத்திரியில் பங்கு கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
விரைவில் 'கலைநிலவு' ரவிச்சந்திரன் அவர்கள் நடித்த 'மதறாஸ் TO பாண்டிச்சேரி' படத்தைப் பற்றிய ஆய்வை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தங்களது மேலான ஆதரவை எதிர்நோக்குகிறேன்.
அழகான ரவிச்சந்திரன் அவர்களின் "அதே கண்கள்" திரைப்படத்தின் நிழற்படங்கள் சில இப்போது பார்த்து மகிழலாம்.
http://www.shotpix.com/images/67350650986745970048.png
http://www.tamilpix.com/uploads/176ac6ed9e.bmp
http://123tamilforum.com/imgcache2/2...29338213-1.png
அன்புடன்
வாசுதேவன்.
'கலைநிலவு' ரவிச்சந்திரன் அவர்களின்'மதறாஸ் TO பாண்டிச்சேரி' பட ஸ்பெஷல் ஆய்வுக்கட்டுரை.
http://t3.gstatic.com/images?q=tbn:A...PSSrNxopGHj7mq
http://t2.gstatic.com/images?q=tbn:A...aCG9xKVrWFuEwC
படம் வெளியான ஆண்டு: 16-12-1966.
இசை: T.K.ராமமூர்த்தி.
ஒளிப்பதிவு: G.விட்டால் ராவ்.
சண்டைப் பயிற்சி: K.சேதுமாதவன்.
நடன அமைப்பு: சின்னி-சம்பத்
இயக்கம்: திருமலை-மகாலிங்கம்.
தயாரிப்பு: ஆதிநாராயணன்.
பேனர் : விவிதபாரதி
ரவிச்சந்திரன் அவர்களின் 'காதலிக்க நேரமில்லை' நகைச்சுவைப் பட லிஸ்டில் சேரும் மெகா காமெடி மூவி 'மதறாஸ் TO பாண்டிச்சேரி' பாண்டிச்சேரி. பரவலாக எல்லோருக்குமே நன்றாகத் தெரிந்த படம். இன்னும் சொல்லப் போனால் இன்றைய தலைமுறை கூட பார்த்து வயிறு குலுங்கச் சிரிக்கும் வண்ணம் எடுக்கப்பட்ட எவர்க்ரீன் மூவி என்று கூட இதைச் சொல்வேன்.
கதை என்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை. சினிமா நடிகையாக ஆசைப்பட்டு தன் நகைகள் மற்றும் பணத்தோடு கயவன் ஒருவன் பேச்சை நம்பி வீட்டை விட்டு ஓடி வந்து விடுகிறாள் ஒரு பெண். இத்தனைக்கும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள் அவள். வீட்டை விட்டு வெளியேறியதும்தான் புரிகிறது தான் நம்பி வந்த ஆள் ஒரு அயோக்கியன் என்று. எனவே அவனிடமிருந்து தப்பி மெட்ராஸிலிருந்து பாண்டிச்சேரி போகும் ஒரு பஸ்ஸில் ஏறி விடுகிறாள். ஏற்கனவே அறிமுகமான நம் ஹீரோ ரவி பஸ்ஸில் இருக்க பின் அவளுடைய பாதுகாப்புக்குக் கேட்கணுமா?... அவளைக் கொல்ல ஒரு அடியாளை அவள் நம்பி வந்த கயவன் பஸ்ஸில் அனுப்ப அவனிடமிருந்தும், அந்த வில்லனிடமிருந்தும் அவளை ரவி காப்பாற்றி அவளுடைய சினிமா ஆசையினால் வந்த சோதனைகளையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் அவளுக்கு உணர்த்தி அவளைக் கைப்பிடிப்பதே கதை.
இடையில் பஸ் கண்டக்டராக நாகேஷும், டிரைவராக ஏ.கருணாநிதியும், பயணிகளாக மனோரமா, ஏ.வீரப்பன், கரிக்கோல் ராஜ், நம்பிராஜன், 'பக்கோடா' காதர்' (உலகப் புகழ் பெற்ற இப்பட்டம் காதருக்கு இப்படத்தின் மூலமாகத்தான் வந்தது), பழம்பெரும் நகைச்சுவை நடிகைகள் சி.டி ராஜகாந்தம், அங்கமுத்து போன்ற மாபெரும் நகைச்சுவைப் பட்டாளமும் பஸ்ஸில் செய்யும் அட்டகாசங்கள் படத்தின் பெரும்பான்மையை ஆக்கிரமிப்பு செய்து படம் பார்ப்பவர்களின் வயிற்றை பதம் பார்த்தது. வில்லனாக 'கள்ளபார்ட்' நடராஜனும், சினிமா நடிகை ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட ஹீரோயினாக கன்னட நடிகை கல்பனாவும் ('கட்டிலா தொட்டிலா' திரைப்படத்தில் ஜெமினி மற்றும் பானுமதியின் மகளாக நடித்திருப்பார். 'கன்னடத்துப் பைங்கிளி' சரோஜாதேவியை தோற்றத்தில் ஞாபகப்படுத்துவார்) நடித்திருந்தார்கள்.
ஹிந்தியில் வெற்றி பெற்ற 'பாம்பே டு கோவா' என்ற படத்தின் தழுவல் தான் இந்தப் படம் என்ற போதிலும் தழுவல் என்று நம்ப முடியாத வகையில் நகைச்சுவை நடிகர்கள் படத்தைத் தூக்கி நிறுத்தி இருந்தார்கள். ஹிந்தியில் ரவி ரோலை அமிதாப் பச்சனும் (ஆரம்பகால அமிதாப் பச்சன் 'வெட வெட' வென படு ஒல்லியாக ஆனால் உற்சாகமாக நடித்திருப்பார்) கல்பனா ரோலை அருணா ராணியும் செய்திருந்தார்கள்.
படம் ஆரம்பித்து ஒரு முக்கால் மணிநேரம் தவிர மீதி படம் முழுதும் ஓடும் பஸ்சிலேயே முடிந்துவிட (நிச்சயமாக தயாரிப்பாளருக்கும் இயக்குனர்களுக்கும் மகா துணிச்சல் தான்) ஆனால் சலிப்புத்தட்டாமல் பக்கா காமெடியுடன் படம் நகர்வதை பாராட்டத்தான் வேண்டும்.
ஓடும் பஸ்ஸில் பாம்பாட்டி ஒருவனின் கூடையிலிருந்து பாம்பு வெளியேறி விட, பஸ்ஸில் உள்ள அத்தனை பெரும் "குய்யோ முய்யோ" என்று அலற, அதைப் பார்த்து டிரைவர் கருணாநிதி கேலி செய்ய, கடைசியில் பாம்பு டிரைவர் ஓட்டும் ஸ்டியரிங்கின் மேல் சுற்றிக்கொண்டு களிநடம் புரிய, அதுவரை பயணிகளைக் கிண்டல் அடித்துக் கொண்டிருந்த கருணாநிதி பாம்பைப் பார்த்து "பாம்.. பாம்".. என்று வார்த்தை வெளிவராமல் வாயால் ஹாரன் அடிக்க, பாம்பாட்டி "அது ஒண்ணும் செய்யாது சாமி...கொழந்த மாதிரி" என்று பாம்பை லாவகமாகப் பிடித்துக் கொண்டு பாம்பைப் பார்த்து "அய்யாவுக்கு ஒரு முத்தம் கொடுடா" என்று கருணாநிதிக்கு மேலும் கிலி கிளப்ப ஏக களேபரம்தான்.
பஸ் தகர டப்பா மாதிரி ஊர்ந்து கொண்டிருக்க, ரோடு சைடு ஓரத்திலிருந்து நான்கைந்து பேர் ஓடிவர, நாகேஷ் வருவது பயணிகள்தான் என்று வண்டியை விசில் அடித்து நிறுத்த, ஓடிவந்த நபர்கள் பஸ் நகர்ந்ததும் பஸ்ஸில் ஏறாமல் ரோடிற்கு அடுத்த சைடில் வேறு வேலையாய் ஓடும் போது சிரிக்காதவர்களும் இருக்க முடியுமோ?..
பஸ்ஸில் அருகில் இருக்கும் நபர் பக்கோடா பொட்டலம் பிரித்து சாப்பிட, மனோரமாவின் மகன் காதர் அதைப் பார்த்து விட்டு "அம்மா பக்கோடா" என்று இடைவிடாமல் கத்த ஆரம்பிக்க, அவமானம் தாங்காமல் காதரின் வாயை மனோரமா துணியால் அடைக்க, விவரம் தெரியாத நாகேஷ் பரிதாபப் பட்டு துணியை எடுத்துவிட, மறுகணமே காதர் "அம்மா பக்கோடா" என்று ஜெபம் செய்ய ஆரம்பிக்க, மறுபடி நாகேஷே காதர் வாயில் துணியை வைத்து அடைப்பது உம்மணாம் மூஞ்சிகளையும் உற்சாகப் படுத்தி வயிறு வலிக்கச் செய்து விடும். (காதர் 'பக்கோடா' காதர் ஆன வரலாறு இதுதான். நிறைய நடிகர் திலகத்தின் படங்களில் காதர் இருப்பதைக் காணலாம். குறிப்பாக ராமன் எத்தனை ராமனடியும், பட்டிக்காடா பட்டணமாவும்)
இது போன்ற ஏராளமான நகைச்சுவைத் தோரணங்கள் படம் நெடுகிலும் வந்து நம்மை மகிழ்விப்பது நிஜம்.
சரி.. நம் ஹீரோவிடம் வருவோம்.. ரவி தன் ரோலை அழகாகவே செய்திருப்பார். ஓட்டலில் கல்பனாவை வெறுப்பேற்ற ஓட்டலின் மியூசிக் ட்ரூப்பிடம் துண்டுச் சீட்டுக் கொடுத்து அந்தத் தாளத்திற்கு ஏற்றவாறு நடனம் ஆடுவது ஜோர். பஸ்ஸில் கல்பனாவுடன் பழகுவதும், அட்வைஸ் செய்வதும் எதிர்களுக்கு தன் ஸ்டைலில் கும்மாங்குத்து கொடுப்பதும் நம்மை ரசிக்கவே வைத்தன. (அந்த லேசான தொட்டிக்கால் அவருக்கு தனி அழகுதான்).
கல்பனாவும் சினிமா நடிகை ஆக வேண்டும் என்ற வெறித்தனத்தை நன்றாகவே பிரதிபலித்திருப்பார். நாகேஷ், கருணாநிதி கேட்கவே வேண்டாம்...படத்தின் தூண்களே அவர்கள்தாம். (பஸ்ஸில் படிக்கட்டில் நின்றுகொண்டு நடிகை சிவகாமியை 'சைட்' அடித்துக் கொண்டே வரும் நாகேஷ் மெய்மறந்து ஒரு கட்டத்தில் பஸ்ஸிலிருந்து விழுந்து விட, பஸ் டிரைவர் கருணாநிதி அதைக் கவனியாமல் பஸ்ஸை நிறுத்தாமல் ஓட்டிச் செல்ல, சிவகாமி அதிர்ந்து பஸ்ஸை நிறுத்தச் சொல்லிக் குரல் கொடுக்க, கருணாநிதி அதற்கு கொஞ்சமுமும் பதட்டப் படாமல் "ஏம்மா சும்மா கத்தற... பஸ்ஸு இரும்பு மாதிரி...பய காந்தம் மாதிரி...வந்து ஒட்டிக்குவான் பாரு" என்று சொல்வதற்கேற்ப நாகேஷும் ஓடிவந்து பஸ்ஸில் தொற்றிக்கொள்ளும் ஒரு காட்சியே இருவருக்கும் போதும்)
பஸ் பிரேக் டவுன் ஆகி நின்றதும் கொஞ்சமும் பயணிகளைப் பற்றிக் கவலைப்படாமல் ரோடில் அமர்ந்து கொண்டு இருவரும் ஆடு புலி ஆட்டம் ஆடுவது, பஸ்ஸிலிருந்து வெளியே பறந்து சென்றுவிட்ட கோழியைப் பிடிக்க இருவரும் படாத பாடுபடுவது என்று கருணாநிதியும், நாகேஷும் அடிக்கும் கொட்டங்கள் சொல்லி மாளாது.
திரு. V.K.ராமசாமி அவர்கள் கூட தெருவில் மோடிமஸ்தான் வித்தை காட்டுபவராக ஒரு சீனில் வந்து கலக்குவார்.
O.A.K .தேவர் அவர்களும் ஹோட்டல் முதலாளியாக வந்து பிராமண மொழி பேசி அசத்துவார்.
இந்தப் படத்தின் பாடல்களைப் பற்றி அவசியம் கூறித்தான் ஆக வேண்டும். என்ன அற்புதமான பாடல்கள்!. T.K.ராமமூர்த்தி அவர்களின் இசையில் அற்புதமான மனதை மயக்கும் பாடல்கள்.
கல்பனா நடிகைக் கனவு ஆசையில் பாடுவதாக பி.சுசீலாவின் தேன் குரலில் இனிக்கும் "மை பிரெண்ட் நெஞ்சத்தில் என்ன" பாடல் கோடி முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்.
பஸ்ஸில் பயணிகளை மனதில் வைத்து ரவி பாடுவதாக வரும் அருமையான டி.எம்.எஸ் குரலில் ஒலிக்கும் "பயணம் எங்கே?... பயணம் எங்கே?" பாடல் வரிகளிலும் அற்புதமான பாடல். பஸ்ஸில் பயணம் போகிறவர்கள் பலவித நோக்குடன் பயணம் செய்வார்கள் என்பதை அழகாக சித்தரிக்கும் பாடல்.
"என்ன வேலை என்ன தேவையோ..
சொந்தம் யாவும் பார்க்கும் ஆசையோ...
பயணம் எங்கே?... பயணம் எங்கே?...
கோயில் பார்க்கவோ...
பாவம் தீர்க்கவோ...
சொத்து சேர்க்கவோ...
சுமையைத் தூக்கவோ"...
என்ற கதையோடு பொருந்தி வரும் ஆலங்குடி சோமுவின் அருமையான வரிகள்.
பின் தன்னையும்,கல்பனாவையும் இணைத்து கிசுகிசு பேசும் பயணிகளின் மூக்குடைக்க ரவியும், கல்பனாவும் பாடுவதாக வரும், காட்சி சூழலுக்கு ஏற்ப நாமக்கல் வரதராசன் அவர்களின் வைர வரிகளில் மின்னும் "எந்த எந்த நெஞ்சுக்குள்ளே என்ன தோனுதோ"...என்ற அருமையான பாடல் கேட்க கேட்க இனிமை.
ஹோட்டலில் கல்பனாவைப் பார்த்து ரவி பாடும் பஞ்சு அருணாசலம் அவர்களின் "மலரைப் போன்ற பருவமே" பாடல் படு சூப்பர். (stop...listen...proceed... என்று பாடல் துவங்கும்) டி.எம்.எஸ் அதியற்புதமாகப் பாடியிருப்பார். இந்தப் பாடலில் ரவியின் சில நடன மூவ்மென்ட்கள் அசாத்திய அற்புதமாய் இருக்கும்.(சற்று அகலக் கால்களுடன் ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி இழுத்து ஒரு மூவ்மென்ட் கொடுப்பார்)
இயக்குனர்கள் திருமலை-மகாலிங்கம் இப்படத்தை ஒரு நல்ல காமெடி கலந்த பொழுதுபோக்குப் படமாக இயக்கியிருந்தனர். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு நல்ல வெற்றி அடைந்த படமும் கூட.
'மதறாஸ் TO பாண்டிச்சேரி' சில நிழற்படங்கள்
http://123tamilforum.com/imgcache2/2...ondi0001-1.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/1-11.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/2-12.jpg
http://i1087.photobucket.com/albums/...n31355/3-9.jpg
http://i1087.photobucket.com/albums/...n31355/5-8.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/6-10.jpg
http://i1087.photobucket.com/albums/...n31355/7-5.jpg
http://i1087.photobucket.com/albums/...n31355/8-5.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
http://images.raaga.com/Catalog/CD/T/T0001674.jpg
'கலைநிலவு' ரவிச்சந்திரன் அவர்களின் 'மதறாஸ் TO பாண்டிச்சேரி' படத்தின் அனைத்து பாடல்களையும் வீடியோ வடிவில் கண்டு மகிழ கீழ் உள்ள 'லிங்க்'கை சொடுக்கவும். ஒரே 'லிங்க்' கில் அனைத்துப் பாடல்களையும் தொடர்ச்சியாகக் கண்டும், கேட்டும் மகிழலாம்.
http://www.raaga.com/channels/tamil/...sp?clpId=12481
அன்புடன்,
வாசுதேவன்.
அன்புள்ள வாசுதேவன் சார்,
தங்களின் 'மெட்ராஸ் டு பாண்டிச்சேரி' படத்தின் திறனாய்வுக்கட்டுரை படு சூப்பர். திரைப்படத்தை நேரில் பார்ப்பது போலிருக்கிறது. நான் ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன் இப்படத்தை தியேட்டரில் ஆரவாரங்களோடு கண்டு ரசித்திருக்கிறேன். மிக அருமையான பொழுதுபோக்குப்படம் என்பதில் சந்தேகமேயில்லை. இப்போது உங்கள் கட்டுரை படித்ததும் மீண்டும் பார்த்தது போலிருந்தது.
திரு. ரவிச்சந்திரன் அவர்களின் திரியில் நீங்கள் சுறுசுறுப்பாகப் பதிவுகள் இட துவங்கியிருப்பது மகிழ்ச்சியைத்தருகிறது. சாரதா மேடம் இத்திரியைத்துவங்கி தனியொருவராக படங்களின் ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வந்தார். உடன் நமது ராகவேந்தர் சார், பம்மலார் சார் ஆகியோர் பல்வேறு சுவையான பதிவுகளைத் தந்து வந்தனர். இடையில் சிறிது காலம் திரி சுறுசுறுப்பில்லாமல் இருந்தது. சாரதா அவர்கள் முன்போல தீவிரமாக இறங்காததால் இருக்கலாம். நடிகர்திலகத்தின் திரியிலும் தற்போது சிறிது காலம் வரக்காணோம்.
இருப்பினும் சுமார் மூன்று மாதங்களுக்கு முன், 'இத்திரி மீண்டும் சுறுசுறுப்பாக இயங்கப்போகிறது' என்று சாரதா ஒரு அறிவிப்புச்செய்திருந்தார். அதைத்தொடர்ந்து நமது பம்மலார் சார் சிறப்பான ஆவணப் பதிவுகளைத்தந்தார். ராகவேந்தர் சார் அருமையான வீடியோ பதிவை (மலர்கள் நனைந்தன பனியாலே) தந்தார். இப்போது நீங்கள் புயலாக வந்திருக்கிறீர்கள். மனதுக்கு மகிழ்ச்சியைத்தரும் இந்தப்புயல் ஓயாமல் அடித்துக்கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். (நீங்களெல்லாம் வந்து கலக்கப்போகிறீர்கள் என்பதை உணர்ந்துதான் அப்படியொரு அறிவிப்பைச் செய்தாரா தெரியவில்லை).
இரு திலகங்களுக்கு அடுத்து ஜெய்யும், ரவியும் தமிழ்த்திரையுலகில் மறக்க முடியாதவர்கள். இவர்கள் காலத்தில்தான் வித்தியாசமான பொழுதுபோக்குப் படங்கள் வந்து குவிந்தன. அவர்களின் படங்களை நினைவு கூர்வது மிகவும் சந்தோஷம் தரும் விஷயம்.
தங்களுக்கு வாய்ப்பு அமைந்தால், ரவிச்சந்திரனின் 'மீண்டும் வாழ்வேன்' படத்தின ஆய்வுக்கட்டுரையைத் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். மற்ற முக்கியமான படங்கள் பலவற்றை சாரதா அவர்கள் ஏற்கெனவே எழுதிருக்கிறார். பார்த்திருப்பீர்கள். ஆனால் அவரிடம் இல்லாத ஒரு விசேஷம் உங்களிடம் இருப்பது என்னவென்றால், படத்தின் ஸ்டில்களையும், பாடல்களின் வீடியோ இணைப்புகளையும் கூடவே இணைத்துத்தருவது. அது ஆய்வுக்கட்டுரையின் சிறப்புக்கு மேலும் மெருகூட்டுகிறது.
தங்கள் பதிவுகளுக்கு மகத்தான நன்றிகள்.
கலைநிலா ரவியின் மதராஸ் டு பாண்டிச்சேரி பயணக் கட்டுரையை மிகச் சிறப்பாக வடித்துள்ளார் வாசுதேவன். பாராட்டுக்கள். அனைத்துப் பாடல்களும் பிரபலமாயின. டி.கே.ராமமூர்த்தி தனியாக இசையமைக்க முதலில் வாய்ப்பளித்தவர் பீம்சிங். அவருடைய முதல் படத்தில் முதல் பாடலைப் பாடியவர் பால முரளி கிருஷ்ணா அவர்கள். அருள்வாயே அருள்வாயே என்று ஆண்டவன் அருளை வேண்டித் தன் தனியிசை வாழ்க்கையைத் துவக்கினார் ராமமூர்த்தி. இந்தப் படம், மதராஸ் டூ பாண்டிச்சேரி படம் அவருக்கு மிகப் பெரிய புகழைத் தந்தது. குறிப்பாக மலரைப் போன்ற பருவமே சென்னை வானொலியில் அன்றாடம் ஒலித்தது மறக்க முடியாது. கல்பனாவுக்கும் சுசீலாவின் குரலில் மை Friend நெஞ்சத்தில் என்ன (அப்போதே தங்கிலீஷ் வந்து விட்டது) மிகுந்த புகழைக் கொடுத்தது.
சென்னை பிளாசா திரையரங்கில் பல காட்சிகள் கடைசி வரை அரங்கு நிறைந்து வெற்றி நடை போட்ட படம். திருமலை மகாலிங்கம் இரட்டையரின் இயக்கும் திறமைக்கு மற்றொரு சான்று மதராஸ் டு பாண்டிச்சேரி.
இப்படம் தான் பின்னர் பாம்பே டு கோவா என ஹிந்தியில் எடுக்கப் பட்டது.
அருமையான காட்சிகளையளித்த வாசுதேவன் சாருக்கு மீண்டும் பாராட்டுக்கள்.
ரவிச்சந்திரனின் தமிழ்ப்படங்களை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் மலையாளத்திரைப்படங்களைப் பற்றி அதிகம் தகவல் அந்தக் காலத்தில் நமக்குத் தெரியவில்லை. ஆனால் இப்போது இணையத்தின் உதவியால் அந்தப் பாடல்களும் படங்களும் காணொளியாகக் கிடைக்கின்றன. அப்படி ஒரு மலையாளப் படம் ஓமன. ரவிச்சந்திரன் ஷீிலா இணையாக நடித்த இப்படத்திற்கு இசை ஜி.தேவராஜன் அவர்கள். அந்தப் படத்திலிருந்து பாடல் காட்சி
http://youtu.be/3Y2ieHE0njM
ரவியின் படங்களில் அபூர்வமான படம் ஐரீஸ் மூவீஸ் நீயும் நானும். அந்தப் படத்தை அப்போது திரையரங்கில் பார்த்ததோடு சரி, அதற்கப்புறம் வாய்ப்பே கிடைக்க வில்லை. இனிமேல் கிடைக்குமா தெரியவில்லை. ஆனால் மெல்லிசை மன்னரின் பாட்டுக்கள், குறிப்பாக யாரடி வந்தார் பாடல் அந்தக் காலத்தில் சூப்பரோ சூப்பர் ஹிட். அதுவும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடும் போது பியானோ இசையும் மிகச் சிறப்பாக இருக்கும். கோரஸ் குரல்கள் சரியான இடத்தில் தாளக் கட்டோடு அட்டகாசமாக இருக்கும். இதே பாடலை டி.எம்.எஸ். ரவிக்காக பாடும் போது இன்னும் அட்டகாசமாக இருக்கும். இணையத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல் ஆடியோ கிடைக்கிறது. இதோ நாம் கேட்டு ரசிக்கலாம்.
http://www.raaga.com/play/?id=204930
இதே படத்தில் மற்றொரு பாடல் தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் என்ற பாடலும் அதைத் தவிர இன்னோர் பாடலும் உண்டு.
அன்பு கார்த்திக் சார் ,
பதிவிட்ட உடனேயே 'மதராஸ் டு பாண்டிச்சேரி' ஆய்வை படித்து பாராட்டிய தங்கள் பெருந்தன்மைக்கும், அன்பு உள்ளத்திற்கும் நன்றிகள் சார். ராகவேந்திரன் சார் கூறியுள்ளது போல தமிழில் எடுக்கப் பட்ட பிறகுதான் 'மதராஸ் டு பாண்டிச்சேரி' இந்தியில் எடுக்கப்பட்டது. இந்தி 'பாம்பே டு கோவா' 1972-இல் வெளியாகி உள்ளது. பிறகு தான் நான் conform செய்து கொண்டேன். பாம்பே டு கோவா வண்ணப் படமும் கூட.
http://upload.wikimedia.org/wikipedi...ombaytoGoa.jpg
தாங்கள் கேட்டிருந்த படி 'மீண்டும் வாழ்வேன்' பற்றிய ஆய்வை தர முயற்சி செய்கிறேன்.திறமை உள்ளவர்கள், நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியவர்கள் யாராக இருப்பினும் அவர்களை மதித்து கௌரவிக்கும் நற்பண்புகளும்,நல்ல ரசனையும் தங்களுக்கு இருப்பது கண்டு மனம் பூரிப்படைகிறேன்.தங்கள் அன்புப் பாராட்டிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறக் கடமைப் பட்டவனாகிறேன்.
அன்புடன்,
வாசுதேவன்.
அன்பு ராகவேந்திரன் சார்,
தங்களுடைய மனமுவந்த பாராட்டிற்கு நன்றி. விரைவாக பதிவைப் படித்ததோடல்லாமல் 'மதராஸ் டு பாண்டிச்சேரி' தான் முதலில் தமிழில் எடுக்கப் பட்டது... பின்னர்தான் 'பாம்பே டு கோவா' இந்தியில் எடுக்கப்பட்டது என்ற தகவலை சுட்டிக்காட்டியமைக்கும் மிகுந்த நன்றிகள் சார்.
'ஓமன' படத்தின் அபூர்வ பாடல் காட்சியை காணொளி வடிவில் காண வைத்ததற்கு என் சிறப்பு நன்றிகள்.
என்னுடைய அபிமானப் பாடகியின் 'யாரடி வந்தார்...என் எண்ணத்தை கொள்ள' பாடல் இணைப்பிற்கும் மிகுந்த நன்றி.
அன்புடன்,
வாசுதேவன்.
'நீயும் நானும்' படத்தில் வரும் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் மிளிரும் "ஊஞ்சல் கட்டி ஆட்டட்டுமா" ...என்ற அற்புதப் பாடலின் லிங்க் கீழே.
http://www.raaga.com/player4/?id=204...68141774627289
அன்புடன்,
வாசுதேவன்.
ரவிச்சந்திரன் நடித்த அபூர்வ திரைப்படமான 'சத்தியம் தவறாதே' படத்தில் T.M.S. மற்றும் சுசீலாவின் தேன் குரல்களில் ஒலிக்கும் "முத்துக் குளிப்பவரே! கொஞ்சம் பக்கத்திலே வாங்க"...என்ற அற்புதமான பாடல் கேட்க...
http://www.kino-teatr.ru/acter/foto/asia/332709.jpg
http://www.inbaminge.com/t/s/Sathiyam%20Thavarathe/
லிங்கை சொடுக்கவும்.
அன்புடன்,
வாசுதேவன்.
சத்தியம் தவறாதே திரைப்படத்திலிருந்து அபூர்வமான டூயட் பாடலைத் தந்தமைக்கு வாசுதேவன் சாருக்கு உளமார்ந்த நன்றி. இப்பாடல் வானொலியில் கூட அதிகமாக ஒலிபரப்பப்படாத பாடலாகும். சத்தியம் தவறாதே மற்றும் எதடா வாழ்க்கை என்ற இரு பாடல்கள் தான் அடிக்கடி ஒலிபரப்பப்படும். இப்படத்திற்கு இசையமைத்தவர் மிகச் சிறந்த இசைமேதைகளுள் ஒருவரான திரு சி.என்.பாண்டுரங்கன் ஆவார்.
'காதல் ஜோதி'
http://www.jointscene.com/ahtees/adm...al%20Jothi.jpg
"ஒம் மேலக் கொண்ட ஆச"...சூப்பர் ஹிட் பாடல். 'காதல் ஜோதி' திரைப்படத்தில் சீர்காழி அவர்களின் வெண்கலக் குரலில் கலைநிலா ரவியும், எம்.பானுமதியும் தோன்றும் அற்புதப் பாடல்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=8DmiOf4ciFM
அன்புடன்,
வாசுதேவன்.
முத்துக் குளிப்பவரே பாடலைப் பற்றி அடியேனின் குறிப்பை மேற்கோள் காட்டி ஒரு வலைத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கான இணைப்பு
டியர் ராகவேந்திரன் சார்,
'முத்துக்குளிப்பவரே' பாடல் தந்ததைப் பாராட்டிற்கு நன்றி. அதைவிட சந்தோஷம் அந்த அற்புதப் பாடலைப் பற்றி தாங்கள் குறிப்பிட்டிருந்ததை மேற்கோள் காட்டி திரைகானம்.காம் இணையதளத்தில் வந்துள்ள செய்திக் குறிப்பு. இந்தப் பாடல் தங்களால் புகழ் பெற்றுக்கொண்டிருப்பது எங்களுக்கெல்லாம் பெருமை. நன்றி!
அன்புடன்,
வாசுதேவன்.
'சத்தியம் தவறாதே' (20.12.1968)
"முத்துக் குளிப்பவரே... கொஞ்சம் பக்கத்திலே வாங்க" மிக மிக மிக அரிய பாடல் முதன் முதலாக இணையத்தில்.
'சத்தியம் தவறாதே' என்ற ரவிச்சந்திரன் அவர்களின் மிக மிக அபூர்வ படத்தைப் பற்றி பல பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 20.12.1968-இல் வெளிவந்த இந்தப்படத்தில் 'கலைநிலா' ரவிச்சந்திரன், அவரது ஜோடியாக விஜயநிர்மலா (பணமா பாசமா புகழ் 'அலேக்' நிர்மலா தான். இவர் தெலுங்குத் திரைப்பட உலகின் 'சூப்பர் ஸ்டார்' கிருஷ்ணாவின் மனைவி ஆவார். 'பெஜவாடா பெப்புலி' என்ற நடிகர் திலகம், கிருஷ்ணா இணைந்து நடித்த தெலுங்குத் திரைப்படத்தை இயக்கிய பெருமைக்குரியவர். 'மோசக்காரனுக்கு மோசக்காரன்' என்ற தெலுங்கு மொழிமாற்றத் தமிழ் படத்தில் கிருஷ்ணாவின் ஜோடியாக நடித்தவர். கிருஷ்ணாவின் ஜோடியாக பல தெலுங்குப் படங்களில் இவர் நடித்ததினால் இவர்கள் இருவருக்கும் காதல் அரும்பி அதுவே கல்யாணத்தில் முடிந்தது) மற்றும் 'மாஸ்டர்' பிரபாகர், ராமதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். பாண்டி செல்வராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார் என்று நினைக்கிறேன். (C.N. பாண்டுரங்கன் அவர்கள் மகா இசைமேதை. அவர்கள் இசையமைப்பில் மிக மிக அற்புதமான பாடல்கள் இந்தப் படத்திற்கு மகுடம் சூட்டின. (நடிகர் திலகத்தின் 'எதிர்பாராதது' படத்திற்கும் இசை இவர்தான். டைட்டிலில் பாண்டுரங்கம் என்று போடுவார்கள். தியாகராஜ பாகவதர் நடித்த 'புதுவாழ்வு' போன்ற படங்களுக்கு 'சங்கீதமேதை' ஜி.ராமநாதன் அவர்களுடன் சேர்ந்து இசை அமைத்தவர்)
'சத்தியம் தவறாதே... தாய் நாட்டினை மறவாதே' என்று மாஸ்டர் பிரபாகரன் பீச்சில் பாடுவதாக வரும் பாடல் சோஷலிச கொள்கைகளை அற்புதமாக வெளிப்படுத்தும் பாடல்.
இப்படத்தின் vcd,dvd எதுவும் கிடைக்கவில்லை. இந்தப் படத்தைத் தேடி பல வருடங்கள் அலைந்திருக்கிறேன். எந்தத் தகவலும் இல்லை. ஏனென்றால் சிறுவயது முதற்கொண்டே
"முத்துக் குளிப்பவரே... கொஞ்சம் பக்கத்திலே வாங்க"...
பாடல் மனதில் மிக ஆழமாகப் பதிந்து விட்டது. சிலோன் ரேடியோவில் இப்பாடலை பலமுறை கேட்டு மெய்மறந்து போய் இருக்கிறேன். இப்படத்தை சில வருடங்களுக்கு முன் 'விஜய்' தொலைக்காட்சியில் போட்டார்கள். அப்போது இந்தப் பாடல் காட்சியைப் பார்த்து பூரித்துப் போனேன். பாடலுக்கேற்றவாறு அற்புதமாகப் படமாக்கப் பட்டிருந்தது இந்தப் பாடல். அவுட்டோரில் படமாகப் பட்டவிதம் மனதுக்கு குளிர்ச்சியைத் தரும் விதமாக உள்ளது. ரவியும் கேப்பெல்லாம் போட்டுக் கொண்டு அழகாகவே தோன்றுவார். டி எம்.எஸ்ஸின் குரல் ரவிக்கு அற்புதமாக பொருந்தி இருக்கும். இசைக்குயில் சுசீலாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். "இளமை வானிலே எண்ணம் பறப்பதென்ன"... என்ற சரணத்தின் வரிகளை இருமுறை அவர் உச்சரிக்கும் விதம் அலாதியானது.
மிகவும் கடினப்பட்டு இந்தப் பாடலைத் தேடித் பிடித்து வீடியோ வடிவில் முதன் முதலாக இணையத்திலும், 'கலைநிலா' ரவிச்சந்திரன் திரியிலும் பதிவு செய்துள்ளேன். இந்தப் பாடலை அனைவரும் மிகவும் ரசித்துப் பார்ப்பீர்கள் எனவும் நம்புகிறேன். இப்பாடலைப் பற்றிய தங்கள் மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். இந்தப் பாடலை பதிவு செய்ததற்கு மிகுந்த பெருமையும், மனமகிழ்ச்சியும் கொள்கிறேன்.
இதோ... அந்த அற்புதமான "முத்துக்குளிப்பவரே"...பாடல் கண்டு மகிழுங்கள்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=0pj5iZOzX74
அன்புடன்,
வாசுதேவன்.
அன்பு நண்பர் வாசுதேவன் அவர்களே,
மிக அபூர்வமான படம் சத்தியம் தவறாதே படத்தை முதல் வெளியீட்டிற்குப் பிறகு தற்போது தான் பாடல் காட்சியின் மூலம் பார்க்கிறேன். அதற்காக தங்களுக்கு உளமார்ந்த நன்றி. அதுவும் அப்படம் வெளியான டிசம். 20 அன்றே பதிவிட்டது பாராட்டிற்குரியது.
இதுபோல் அபூர்வமான பதிவுகளைத் தங்களிடம் மேலும் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
ரவிச்சந்திரன் நடித்த மற்றொரு அபூர்வமான திரைப்படப் பாடல்
படம் - பம்பாய் மெயில் 109
பாடல் - கட்டுவேன் கையில் உன்னை
படம் வெளியான ஆண்டு - 1980 என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
(நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படம். திரையரங்குகளில் வெளியானதா என்று எனக்கு நினைவில்லை. ஆனால் ரவி அவர்களுடன் PREVIEW காட்சியில் பார்த்தது.)
இயக்கம் - டி.பி.சுந்தரம்
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.
மெல்லிசை மன்னரின் வித்தியாசமான பாணி இசையில் தாளக் கட்டுகள் மிகச் சிறப்பாக அமைந்த பாடல். தேர்ந்த பாடகியரே பாடுவதற்கு மிகவும் சிரமப் படக் கூடிய மெட்டமைப்பு.
பாடியவர் - இசைக்குயில் சுசீலா, மற்றும் சிரிப்பொலி- ரவிச்சந்திரன்
http://youtu.be/Ug2rPlKX3zI
மற்றொரு சூப்பர் ஹிட் பாடல்.
படம் - பணக்காரப் பிள்ளை
பாடல் - மாணிக்க மகுடம் சூட்டிக் கொண்டாள்
குரல்கள் - டி.எம்.எஸ். பி.சுசீலா
இசை - எஸ்.எம். சுப்பய்யா நாயுடு
http://youtu.be/WUZswSo4w9o
அன்புள்ள வாசுதேவன் சார்,
'முத்துக்குளிப்பவரே.. கொஞ்சம் பக்கத்திலே வாங்க' பாடலைத்தேடிப்பிடித்து பதிவு செய்து அனைவரையும் பார்த்து மகிழச்செய்தமைக்கு மிக்க நன்றி.
சத்தியம் தவறாதே படத்தை சின்ன வயதில் தியேட்டரில் பார்த்ததுதான். மீண்டும் பார்க்கக்கிடைக்கவில்லை. தற்போது பழைய படங்களை ஒளிபரப்பும் சில டிவி சேனல்கள் கூட இதுபோன்ற படங்களைக் கண்டுகொள்வதாகத்தெரியவில்லை.
ரவிச்சந்திரனின் படங்களைப்பொறுத்தவரை அவரது வண்ணப்படங்களே அதிகம் காணக்கிடைக்கின்றன. காதலிக்க நேரமில்லை, நான், மூன்றெழுத்து, மீண்டும் வாழ்வேன், அதே கண்கள், உத்தரவின்றி உள்ளே வா போன்ற கலர்ப்படங்கள் அதிகம் குறுந்தகடு, நெடுந்தகடுகளிலும், டிவி சேனல்களிலும் பார்க்க முடிந்த அளவுக்கு பல அற்புதமான கருப்புவெள்ளைப்படங்கள் இன்னும் வெளிச்சத்துக்கு வராமலே இருக்கின்றன. அவற்றில் சத்தியம் தவறாதே, மயிலாடும் பாறை, ஓடும் நதி, குமரிப்பெண், எங்க பாப்பா போன்ற பல படங்கள் அடங்கும்.
விஜயநிர்மலாவைப்பற்றி நீங்கள் சொன்னது மிகவும் சரி. அவரது அழகுக்கும் திறமைக்கும் தமிழில் போதுமான வாய்ப்புக்கள் கிடைக்கவில்லையென்றுதான் சொல்ல வேண்டும். கே.ஏஸ்.ஜி. தனது சித்தி, பணமா பாசமா போன்ற படங்களில் நல்ல வேடங்கள் தந்தார்.
என்னவோ தெரியவில்லை, இசையருவி சேனலில் வரும் 'காவியப்பாடல்கள்' நிகழ்ச்சியில் இந்த வாரம் விஜயநிர்மலாவின் பல பாடல்களைக்காணும் வாய்ப்புக்கிடைத்தது. முத்துராமனுடன் 'சந்திப்போமா.. இன்று சந்திப்போமா' (சித்தி), ஜெய்சங்கருடன் 'நான் கலைஞனல்ல உன்னை சிலையாக்க' (நீலகிரி எக்ஸ்பிரஸ்), நடிகர்திலகத்துடன் 'அம்மா கண்ணு சும்மாசொல்லு' (ஞான ஒளி), நாகேஷுடன் 'வாழைத்தண்டு போல உடம்பு' (பணமா பாசமா) பாடல்களை இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பார்க்க் நேர்ந்தது.
சென்ற வாரத்தில் ஒரு நாள் அதே சேனலில் 70-களில் வந்த வண்ணப்படப்பாடல்களில் நடிகர்திலகம், மக்கள் திலகம் இருவரின் பாடல்களை மட்டும் ஒதுக்கி விட்டு மற்றவர்களின் வண்ணப்பாடல்களை ஒளிபரப்பினர். அத்தனையும் முத்தான பாடல்கள். அதில் ரவி பாடல்கள் நிறைய வந்தன.
ஜெமினி - இயற்கையென்னும் (சாந்திநிலையம்), மங்கையரில் மகாராணி (அவளுக்கென்று ஓர் மனம்), தன்னந்தனியாக நான் வந்தபோது (சங்கமம்)
ஜெய்சங்கர் - அந்த சிவகாமி மகனிடம் (ப.பூதம்), மேயர் மீனாட்சியில் ஒரு பாடல்
ரவிச்சந்திரன் - போதுமோ இந்த இடம் (நான்), ஓ..ஓ.. எத்தனை அழகு (அதே கண்கள்), மாதமோ ஆவணி (உ.உள்ளேவா)
சிவகுமார் - முள்ளில்லா ரோஜா (மூன்றுதெய்வங்கள்), இல்லம் சங்கீதம்(அவன் அவள் அது), தேவியின் திருமுகம் (வெள்ளிக்கிழமை விரதம்)
ஏ.வி.எம்.ராஜன் - திருமகள் தேடி வந்தாள் (இருளும் ஒளியும்)
ஸ்ரீகாந்த் - தேவன் வேதமும் (ராஜநாகம்)
சசிகுமார் - கீதா ஒருநாள் பழகும் (அவள்)
முத்துராமன் - என்ன பார்வை (கா.நேரமில்லை), ராஜராஜஸ்ரீ (ஊட்டிவரைஉறவு), கண்ணுக்குத்தெரியாத (என் அண்ணன்) இதில் விஜயநிர்மலாவும் இருந்தார்.
அத்தனையும் முத்துமுத்தான வண்ணப்பாடல்கள். சிடி, டிவிடி காலமாகப்போய்விட்டதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதுவே வீடியோ கேஸட் காலமாக இருந்தால் அப்படியே சுருட்டியிருக்கலாம்.
Raghavendhar sir,
Thanks a lot for posting the songs from 'Bombay Mail' and 'Panakkara Pillai'
I saw Bombay Mail when it was released. Ravichandran will appear then and there as Spider Man. A good entertainmnet movie.
'Manikka magudam sooti kondaaL' is wondeful composing by SMS.
அன்பு ராகவேந்திரன் சார்,
தங்கள் அன்புப் பாராட்டுக்கு நன்றிகள்.
மாணிக்க மகுடம் தான் தங்களுக்கு சூட்ட வேண்டும் 'மாணிக்க மகுடம் சூட்டிக் கொண்டாள்' என்ற தேன் பாடல் தந்ததற்கு.
'பம்பாய் மெயில்109' படத்தின் "கட்டுவேன் கையில் உன்னை" பாடல் பதித்து மெய்மறக்க செய்து விட்டீர்கள். நான் தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே புரியவில்லை. அப்படிப்பட்ட பாடலை எதிர்பாராவிதமாகக் கொடுத்து நிலைகுனியச் செய்து விட்டீர்கள். என்ன பாடல் சார் அது! இதுவரை நான்கைந்து முறை பார்த்து விட்டேன். காதுகளில் முத்துக்குளிப்பவரை போகச் செய்து விட்டு கட்டுவேன் என் பாடலில் உன்னை என்று என் மனத்தைக் கட்டி விட்டீர்கள். சிரிப்பொலி ரவிச்சந்திரன் என்பதையும் மறக்காமல் குறிப்பிட்ட விதம் அருமை. நன்றிகள் சார்!
'பம்பாய் மெயில்109' நானும் பார்த்திருக்கிறேன் சார், ஏதோ தீபாவளிக்கு வந்தது போன்ற நினைவு. நம் v.k.r. அவர்களின் சொந்தப் படம் என்று நினைக்கிறேன். கார்த்திக் அவர்கள் சொன்னது போல ஸ்பைடர்மேன் உடையில் (ப்ளூ அண்ட் ரெட்) ரவி வலம் வருவார்.
அன்புடன்,
வாசுதேவன்.
அன்பு கார்த்திக் சார்,
தங்கள் பாராட்டுக்கு நன்றி.
விஜயநிர்மலாவைப் பற்றி அழகாக கூறியிருந்தீர்கள். நல்ல திறமையான அழகான நடிகை. என் அண்ணனில் 'கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்' பாடலில் மிக அழகாக காட்சியளிப்பார். உயிரா மானமா படத்தில் கூட ஜெய்யின் ஜோடியாக வந்து நம் அன்புத் தலைவரின் மாபெரும் வெற்றிப் படமான
பட டைட்டிலின் வரிகளான 'சவாலே சமாளி...தனிச்சு நின்னு துணிச்சலோடு சமாளி'...பாடலுக்கும் விஜயநிர்மலா அற்புதமாகச் செய்திருப்பார்.
நீங்கள் குறிப்பிட்ட 'சங்கமம்' படம் தேனூறும் பாடல்களைத் தன்னகத்தே தக்க வைத்துக் கொண்ட படம். அதில் குறிப்பாக 'ஒரு பாட்டுக்கு பலராகம்' என்ற டி.எம்.எஸ்ஸின் குரலில் ஜெமினி பாடுவதாக வரும் பாடல் என் உயிரைக் கொள்ளை கொண்ட ஒரு பாடல். அதுமட்டுமல்ல... 'கண்ணனிடம் கேட்டிருந்தேன் பிள்ளையொன்று வேண்டும்'..., 'வண்ணப் பூப்போட்ட சேலை கட்டி புதுப் பொண்ணு பக்கம் வந்தா'.., பாடல்களும் களை கட்டும். தேன் சொட்டும்..உங்கள் வண்ணப் பட பாடல்கள் லிஸ்ட் சூப்பர். இன்னும் இன்னும் அபூர்வமான அதிகம் கேட்காத ஆனால் உயிரை உருக்கக் கூடிய ரவியின் பாடல்களை கொஞ்சம் கொஞ்சமாகத் தோண்டி எடுத்து விடலாம் தங்களைப் போன்ற, ரசிகவேந்தர் போன்ற உண்மையான ரசிகர்கள் இருந்தால். அன்பு நன்றிகள் சார்.
தங்கள் ரசனைக்குத் தலை வணங்கும்,
வாசுதேவன்.
'பம்பாய் மெயில்109' படத்தின் ஸ்டில்
http://i1087.photobucket.com/albums/...vlcsnap-05.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
'நாலும் தெரிந்தவன்' (1968)
http://t3.gstatic.com/images?q=tbn:A...wKr0CYvP9d4UQh
1962- இல் வெளிவந்த 'professor' என்ற ஹிந்திப் படத்தைத் தழுவி 'நாலும் தெரிந்தவன்' படம் எடுக்கப் பட்டது. ஹிந்திப் படத்தில் கதாநாயகனாக ஷம்மிகபூர் அவர்களும், கதாநாயகியாக கல்பனாவும் நடித்திருந்தனர். ஹிந்தியில் வெற்றி அடைந்த இப்படம் தமிழில் நாலும் தெரிந்தவனாக சுமாராக ஓடியது. பின்னாட்களில் இதே படம் சத்யராஜ், குஷ்பூ, கவுண்டமணி நடித்து, பி.வாசுவின் இயக்கத்தில் 'நடிகன்' என்ற பெயரில் வெளிவந்து சக்கை போடு போட்டது. அப்படியே frame to frame நாலும் தெரிந்தவனின் கார்பன் காப்பியாக 'நடிகன்' வெளி வந்தான்.
படம் வெளி வந்த ஆண்டு: 1968
நடிகர், நடிகைகள்: ரவிச்சந்திரன், காஞ்சனா, நாகேஷ், அஞ்சலி தேவி, மனோகர், மனோரமா, வி.கே.ராமசாமி
இயக்கம்: ஜம்பு
ஒளிப்பதிவு: கர்ணன்
இசை: சுப்பையா நாயுடு
பாடல்கள்: கண்ணதாசன்
"நரி ஒன்று சிரிக்கின்றது"...
"நிலவுக்கே போகலாம்... வான் நிலவுக்கே..போன்ற நல்ல பாடல்கள் கேட்க இனிமையாய் இருந்தன.
ரவிச்சந்திரன் அவர்கள் நடித்த 'நாலும் தெரிந்தவன்' படத்தின் கதையையும், கதை உருவான விதத்தையும் அப்படத்தின் கதாசிரியர் திரு V.C.குகநாதன் அவர்கள் கூறுகிறார்.
http://i1087.photobucket.com/albums/...31355/1-19.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/2-19.jpg
குறிப்பு: 'நாலும் தெரிந்தவன்' என்று கவுண்டமணி ஹீரோவாக நடித்து ஒரு படம் வெளி வந்தது.
இதே போல மற்றொரு படம்.
ரவிச்சந்திரன் அவர்கள் ஹீரோவாக நடித்து வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸாரின் 'ஜஸ்டிஸ் விஸ்வநாதன்' படம் பின்னாளில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில் 'பொல்லாதவன்' படமாக மீண்டும் ரீமேக் ஆகி வெற்றியடைந்தது பல பேருக்குத் தெரிய வாய்ப்பில்லை.
ரவிச்சந்திரனின் படங்கள் தமிழில் பின்னாட்களில் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி அடைந்தது அவருக்கு பெருமையும், புகழும் சேர்க்கும் விஷயமல்லவா!
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் வாசுதேவன் சார்,
நாலும் தெரிந்த தங்களை விட்டால் நாலும் தெரிந்தவன் படத்தைப் பற்றி இவ்வளவு விரிவாக, அதுவும் படத்தோடு விவரங்கள் தர யாரால் முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை. மிகவும் அருமையான பதிவு. வெளியீட்டின் போது சென்னை பாரகன் திரையரங்கில் பார்த்தது. அதற்குப் பிறகு பொதிகையில் ஒரு முறை. அவ்வளவு தான். நிலவுக்கே போகலாம் பாடல் காட்சி இருந்தால் தரவேற்றுங்கள். மிகவும் அருமையான பாடல்.
கேட்டு மகிழ
நிலவுக்கே போகலாம் - http://www.inbaminge.com/t/n/Nalum%2...galam.vid.html
நரி ஒன்று சிரிக்கின்றது - - http://music.cooltoad.com/music/song.php?id=372996
ஜஸ்டிஸ் விஸ்வநாதன்' திரைப்படத்திலிருந்து "சிலை செய்ய கைகள் உண்டு" என்ற அற்புதமான பாடல் காணொளி வடிவில்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=q7NolKhpgtE
அன்புடன்,
வாசுதேவன்.
மெல்லிசை மாமணி வி.குமார் இசையில் நினைவில் நின்றவள் திரைப்படத்தில் இடம் பெற்ற இனிமையான பாடல், டி.எம்.எஸ். மற்றும் சுசீலா குரலில்.
தொட்டதா தொடாததா
http://youtu.be/feQRGYjuG3Y
'கலைநிலா' ரவிச்சந்திரனின் சிறந்த பாடல்கள்.
'கௌரி கல்யாணம்' "வரணும் வரணும் மகராணி" பாடல் பற்றிய சிறப்பு ஆய்வு.
http://www.buycinemovies.com/images/...0374-vcd34.jpg
11.11.1966- இல் வெளி வந்த சரவணா கம்பைன்ஸ் 'கௌரி கல்யாணம்' திரைப்படத்தில் 'கலைநிலா' ரவிச்சந்திரன் அவர்களும், ஜெயலலிதா அவர்களும் பாடுவதாக வரும் "வரணும் வரணும் மகராணி" என்ற அதியற்புத உற்சாகமான டூயட் பாடல். T.M.S அவர்களின் கம்பீரமான குரலும், பி.சுசீலா அவர்களின் தேனினும் இனிய குரலும் இந்தப் பாடலை சிகரத்தின் உச்சிக்கே கொண்டு செல்கின்றன. 'கவிஞர்' கண்ணதாசனின் கல்கண்டு வரிகள் இப்பாடலுக்கு மேலும் சுவையூட்டுகின்றன. இசை எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள். இனிமைக்குக் கேக்கணுமா....கே.சங்கர் அவர்கள் இயக்கிய இப்படத்தில் ஜெய்சங்கர்,ஷீலா மற்றும் பலர் நடித்திருந்தார்கள். ரவியும், ஜெய்யும் சேர்ந்து நடித்த படங்களில் இதுவும் ஒன்று.
இனி பாடல்.
கணீரென்று உற்சாகத் துள்ளலாய் ஆரம்பிக்கும் பல்லவி.
"வரணும் வரணும் மகராணி...
வஞ்சியர் சங்கமம் இதே இடம்...
சரணம் சரணம்...இந்த நேரம்...
சண்டை முடிந்தது சமாதானம்"...
(இந்தப்பாடல் சென்சாருக்கு செல்வதற்கு முன் "வரணும் வரணும் மகராணி...வஞ்சியர் சங்கமம் இதே இடம்.."சரணம் சரணம் சந்நிதானம்... சண்டை முடிந்தது சமாதானம்" என்ற பல்லவியோடு டி..எம்.எஸ் குரலில் தொடங்கி சுசீலாவின் குரலில் முடியும். சென்சாருக்குப் பிறகு "சரணம் சரணம் சந்நிதானம்" என்ற வார்த்தைகள் "சரணம் சரணம் இந்த நேரம்" என்று மாற்றப்பட்டது).
இப்பாடலின் சரணத்திற்கும், பல்லவிக்கும் இடையில்
"தந்தன தந்தன தன்ன... ஹோஹோ...பம்பர பம்பர பப்ப "... ஹோஹோ...
என்ற டி.எம்.எஸ்ஸின் ஆனந்த வெள்ளம் பொங்கும் குரலும் பின் தொடரும் "ஹோஹோ"..என்ற சுசீலாவின் இனிமை குரலும் காலம் முழுதும் நம்மை கட்டிப் போட வைக்கும் சக்தி படைத்தது.
சரணத்தில் வரும்
"பள்ளியில் கோபம் உண்டானது...
பருவத்தினால் அது பெண்ணானது...
கல்லான நெஞ்சம் கனியானது...
கைகளில் ஊற்றிய தேனானது...தேனானது...தேனானது...தேனானது"...
வரிகள் டி..எம்.எஸ் குரலில் காதுகளில் தேன் பாய்ச்ச,
தொடர்ந்து சுசீலாவின் குயில் குரலில் ஒலிக்கும்
"அஞ்சாதது...பெண் என்பது...
ஆண்மையின் முன்னே என்னானது...
பொன்னானது... பூவானது...
போதையில் ஆடும் கண்ணானது...கண்ணானது...கண்ணானது...கண்ணானது"...(வரணு ம் வரணும்)
என்ற வரிகள் உண்மையிலேயே இசைபோதையை நமக்கு உண்டாக்கி விடுவது நிஜம்.
அதே போல இரண்டாவது சரணம்.
"விழி ஒரு பக்கம் பந்தாடுதே...
இடை ஒரு பக்கம் தள்ளாடுதே...
நடையோடு வாழை தண்டானதே...
நடனம் இதில் தான் உண்டானதே....உண்டானதே...உண்டானதே...உண்டானதே"
என்று ஆண்குரல் முடிக்க...
ஆண்குரல் முடித்த அதே "உண்டானதே"என்ற வார்த்தையிலேயே பெண்குரல் அடுத்த வரியைத் தொடங்குவது அற்புதம்.
"உண்டானதே... கொண்டாடுதே... ஓடிய கால்கள் மன்றாடுதே...
"உண்டானதே... கொண்டாடுதே... ஓடிய கால்கள் மன்றாடுதே...
(இரண்டாவது முறை வரும் இந்த வரியில் "கொண்டாடுதே" என்ற வார்த்தையை முதல் வரியிலிருந்து மிக வித்தியாசப்படுத்தி மிக அழகாக உச்சரித்து பாடியிருப்பார் சுசீலா).
எல்லாம் இங்கே நீ தந்ததோ...
இதுதான் சொர்க்கம் நான் கண்டதே...நான் கண்டதே...நான் கண்டதே...நான் கண்டதே" (இந்தப் பாடல் தான் சொர்க்கம் நான் கண்டதே...இது என்னுடைய வரிகள்) (வரணும் வரணும்)
எனச் சரணம் முடிந்து மறுபடி பல்லவி தொடங்கி பாடல் முடிவடைய, ஏன்தான் பாடல் முடிந்ததோ என்று நினைக்கவைத்து மறுபடி மறுபடி கேட்கத் தூண்டும் பாடலாகி விட்டது இந்தப் பாடல்.
டிரம்பெட்டும், ஷெனாயும் இழையும் இந்தப் பாடல் காலத்திற்கும் மறக்க முடியாத பாடல். மெல்லிசை மன்னர்களின் அற்புதங்களில் ஒன்று இந்தப்பாடல் என்று கூடச் சொல்லலாம்.
இந்தப் பாடலில் ரவி மிக அழகாகக் காட்சி அளிப்பதோடு, டி.எம்.எஸ் குரல் அதியற்புதமாய் தனக்குப் பொருந்த, அழகான நடன நெளிவுகளை class- ஆக செய்திருப்பார். ஜெயலலிதாவும் ரவிக்கு ஈடு கொடுத்திருப்பார். அழகான அவுட்டோரில் பார்க்கில் படமாக்கப் பட்டிருக்கும் விதமும் ரம்மியமாக இருக்கும்.
அந்த அருமையான பாடலை இப்போது கண்டு களிக்கலாம்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=UaCNL7xnzeA
அன்புடன்,
வாசுதேவன்.
'மதராஸ் டு பாண்டிச்சேரி' திரைப்படத்தில் அழகிய தோற்றத்தில் ரவிச்சந்திரன் அவர்கள்.
http://www.kollytalk.com/wp-content/...an-dead-29.jpg
கல்பனாவுடன்
http://www.kollytalk.com/wp-content/...an-dead-28.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
கலர்புல் கலக்கல் இளமை ரவி.
http://img2.allvoices.com/thumbs/ima...vichandran.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
'அதே கண்கள்' திரைப்படத்தில் ரவி மற்றும் காஞ்சனாவின் எழில் தோற்றம்.
http://www.kollytalk.com/wp-content/...an-dead-32.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
காலத்தால் அழிக்க முடியாத பாடல் 'அன்பே அமுதா' டி.எம்.எஸ்ஸின் அற்புதக் குரலில் 'அமுதா' திரைப்படத்தில் 'கலைநிலவு' ரவியின் நடிப்பில்
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=4EzyTQtXLsA
அன்புடன்,
வாசுதேவன்.
'நிமிர்ந்து நில்' திரைப்படத்தில் வரும் சூப்பர் ஹிட் பாடல் "தேடி வரும் தெய்வ சுகம்" ரவி, பாரதியின் நடிப்பில்
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=x59nqqYGWvw
அன்புடன்,
வாசுதேவன்.