Originally Posted by
Varadakumar Sundaraman
திரு ராகவேந்திரன் சார்
உங்களின் சிறப்பான 7000 பதிவுகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .
2007 முதல் நான் மையம் திரியில் எல்லா பகுதிகளையும் படித்து வருகிறேன் குறிப்பாக மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரிகளை மிகவும் ஆவலுடன் படித்திருக்கிறேன் . மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 2திரியில் நீங்கள் மற்றும் திரு பம்மல் சுவாமி நாதன் , திரு நெய்வேலி வாசுதேவன் அளித்துள்ள மக்கள் திலகம் எம்ஜிஆர் பதிவுகள் மிகவும் பாராட்டூக்குரியது .
திரு வினோத் அவர்கள் மையம் திரியில் 2012ல் இணைந்த பிறகு அவர் மூலம் கிடைத்த மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்கள் நான் உட்பட இந்த திரியில் பங்கெடுக்க வாய்ப்பு கிடைத்தது எங்களுக்கு கிடைத்த மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய செய்திகள் , விளம்பரங்கள் , ஆவணங்கள் , நிழற் படங்கள் பதிவிட வாய்ப்பு கிடைத்தது . இந்த இனிய தருணத்தில் மையம் திரி நிர்வாகிகளுக்கும் , பதிவிட்ட அனைத்து நண்பர்களுக்கும் , பார்வையாளர்களுக்கும் என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 2 துவங்கி 4 வருடங்களில் குறைந்த அளவில் பதிவுகளுடன் மிகவும் மெதுவாக சென்ற நேரத்தில் ஒரே பார்வையாளராக இருந்த எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது .நண்பர் திரு வினோத் மையம் திரியில் இணைந்த பின்னர் திரியில் மேலும் பல எம்ஜிஆர் நண்பர்கள் இணைந்து மக்கள் திலகத்தின் அபூர்வ நிழற் படங்கள், விளம்பரங்கள் , சாதனைகள் , மலர்கள் ,என்று மின்னல் வேகத்தில் பல பாகங்களை கடந்து இன்று மையம் திரியில் முதலிடத்தில் இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது .
நண்பர் திரு வினோத் அவர்கள் அக்டோபர் -2012ல் துவங்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் -3
தொடர்ந்து 34 மாதங்களில் 13 பாகங்கள் -52,000 பதிவுகள் மற்றும் லட்சக்கணக்கான பார்வையாளர்களுடன் பயணித்து இன்று மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -16 தொடர்கிறது .
''மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களை பற்றி திரியில் ஒரு சிலருக்கு தவறான கண்ணோட்டம் இருந்தது .எம்ஜிஆர் சிறந்த நடிகரே இல்லை .அவர் எந்த சாதனைகளையும் செய்ய வில்லை . அவருக்கு கீழ் மட்ட ரசிகர்களே அதிகம் என்று எண்ணி இருந்தார்கள் .''
கடந்த 35 மாதங்களில் எம்ஜிஆர் சாதனைகள் , விளம்பரங்கள் , நிழற் படங்கள் , விழா தகவல்கள்
வீடியோ , என்று மக்கள் திலகத்தின் அன்பு உள்ளங்கள் இரவு பகல் பாராது பதிவுகள் இட்டதின் மூலம் எம்ஜிஆரின் அத்தனை புகழும் உலகமறிய செய்தார்கள் .இந்த அரிய வாய்ப்பினை வழங்கிய மையம் நிர்வாகிகளுக்கு மீண்டும் என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .
உங்கள் அன்பு
குமார் .