டியர் பம்மலார் சார்,Quote:
3. இந்த ஒலி-ஒளிக்காட்சிகளையெல்லாம் நேர்த்தியான ஒலி-ஒளிப்பேழையாக தொகுத்துத்தந்தவர் வேறு யாராக இருக்க முடியும் ?! எல்லாம் நமது நடிகர்திலகம்.காம் தான் !
இதற்கு முழு முதற் காரணம் திரு ஒய்.ஜி.மகேந்திரா சார் அவர்கள் தான். இந்த விழாவிற்காக ஊனுறக்கமின்றி முழு ஈடுபாட்டுடன் உழைத்தது மட்டுமல்லாமல் கிட்டத் தட்ட 13 மணி நேரம் படத்தொகுப்பில் உடனிருந்து கவனித்தவர். அது மட்டுமன்றி, இந்த எண்ணமே அவருடைய சிந்தனையின் வெளிப்பாடு தான். முழுப் பெருமையும் அவரையே சாரும். அரைத்த மாவையே அரைக்காமல் வித்தியாசமான முறையில் மட்டுமின்றி பல அபூர்வமான, மேடையில் அதிகம் இசைக்கப் படாத பாடல்களை, மேடையேற்றி விழாவை சிறப்புற நடத்தி நடிகர் திலகத்திற்கு பெருமை சேர்த்த திரு மகேந்திரா அவர்களுக்குத் தான் நாம் அனைவருமே நன்றி சொல்ல வேண்டும்.
அன்புடன்