http://i1369.photobucket.com/albums/...ps16388aae.jpg
இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
Printable View
http://i1369.photobucket.com/albums/...ps16388aae.jpg
இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
'Sigaram Thodu' Review Roundup: Engaging Entertainer, Worth a Watch
Vikram Prabhu's "Sigaram Thodu" has received positive reviews from the critics.
Performances: "Vikram Prabhu has delivered a good performance without any larger-than-life shades. Sathyaraj, both as a doting father and a sincere police officer, has churned out a nifty performance. While Sathish and Erode Mahesh manage to bring the roof down in regular intervals, Monal Gajjar has made a neat debut and also utters the most sensible dialogue (in the hospital –second half) in the film," said Surendhar MK of OnlyKollywood.
Technical Aspects: "Technically, Sigaram Thodu is super strong. The cinematography angles are different from the usual prototype and it gives a new color to the film. Editing by Praveen KL is a big boost for the film, man the cuts are sharp and stylish which gives racy feel to the film," said Rajasekar S of Cinemalead.
"Not to forget Imman, who has given some super numbers and pulsating BGM," he stated.
Verdict: Engaging Entertainer; Worth a Watch
http://static.moviecrow.com/marquee/..._thumb_665.jpg
தெய்வ பரம்பரையின் வழித்தோன்றல் விக்ரம் பிரபு நிஜமாகவே நான்காம் முறை வரிசையாக சிகரம் தொட்டு தொட்டு ,அடுத்த சிகரங்களில் ஏறி கொண்டுள்ளார்.
தனக்கென்று ஒரு பாதை,உடற்கட்டில் கவனம்,அழகான ஸ்கிரிப்ட் தேர்வு,இயக்குனர்களை மதித்தல்,தயாரிப்பாளர்களை தொல்லை படுத்தாத ஒத்துழைப்பு,ஒவ்வொரு படத்திலும் நடிப்பிலும் ,presentation இலும் காட்டும் முன்னேற்றம்,நடனம்,சண்டை இவற்றில் தேர்ச்சி அதிகரிப்பு,நாலு படங்களும் தொடர்ச்சியான சூப்பர் ஹிட் என்பதால் தன்னம்பிக்கையின் உச்சத்தில், அதனால் பரம்பரை கொடையான screen presence (என்னதான் சொன்னாலும் சிவாஜியின் அழகு யாருக்கும் வாய்க்கவில்லை)என்று நிஜமாகவே சிகரம் தொடும் தெய்வத்தின் பேரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மேலும் மேலும் வெற்றிகளை குவிக்க தெய்வத்தின் ஆசி துணையிருக்கும்..
சவாலே சமாளி ,ஆனைக்கொரு பாட்டில் பார்த்தால் சிவாஜியின் நடிப்பு மேதமை தெரியும். பாடல் கலாய்க்கும் பாடல். வர்க்க பேதத்திற்கு எதிரானது.ஆனால் எஜமானியம்மாவை உருட்டி புரட்டி அத்து மீறல் செய்யாமல் ,வழக்கமான பலாத்கார பாடலாக இல்லாமல்,திருவிழா சூழ்நிலை கேலி பாடலாக மட்டும் உள்ளது.
சண்டை காட்சிகளிலும், விரக்தி காட்சிகளிலும் கூட சிரித்து கொண்டே படு இயற்கையாக நடித்தவர் மத்தியில், இந்த பிறவி மேதை பிறந்து தொலைத்திருக்க வேண்டாம். அப்படியே பிறந்திருந்தாலும் ,இன பற்று கொண்ட ஆந்திராவிலோ,கேரளாவிலோ,கர்நாடகாவிலோ,வங்காளத்திலோ,மக ாராஷ்டிராவிலோ பிறந்திருக்க கூடாதா?தன் சொந்த இனத்தின் மேதைகளை தூஷிக்கும்,அவமான படுத்தும்,இன அழிப்பை வேடிக்கை பார்க்கும் கேவலமான பாவ பூமியிலா அந்த தெய்வம் வந்து அவதரித்திருக்க வேண்டும்?
இதுவும் திருவிளையாடலா என் தெய்வமே?
நடிகர்திலகம் சிவாஜி 87-வது பிறந்தநாள் விழா - 05-10-2014, ஞாயிறு - திருச்சி, ஸ்ரீரெங்கம்
http://i1234.photobucket.com/albums/...ps01f4d81b.jpg
http://i1234.photobucket.com/albums/...pse9fb4e4c.jpg
http://i1234.photobucket.com/albums/...ps0c3becde.jpg
http://i1234.photobucket.com/albums/...ps1ca1194a.jpg
http://i1234.photobucket.com/albums/...ps27efc2c5.jpg
Pudhiya paravai ran for three weeks in bangalore sritalkies(cantonment area) during its rerelease in 1989 april/may).only nt holds the record of giving two three week films in their rerelease after 1980 in bangalore till date ,the other being deivamagan in sangeeth theatre(jan 26,1990).no other actors have even a single three week film.
நடிகர் திலகத்தின் அழகு முன்பே வேர் எவரின் அழகும் எடுபடாது.
அம்பிகாபதிஇல் ஒரு அசத்தல் அழகு.
தூக்கு தூக்கியில் ஒரு சுந்தர அழகு.
ராஜாவில் ஒரு ராஜ அழகு.
புதிய பறவையில் புதுமை அழகு
இருவர் உள்ளத்தில் இளமை அழகு.
இப்படி சொல்லி கொண்டேய் போகலாம்.
Homage to Shri.P.S. Veerappa, respected producer of three films with NT :Aalayamani, Aandavan Kattalai and Iru Dhuruvam
நடிகர்திலகத்தின் ஆண்டவன் கட்டளை திரைக்காவியம் கோவை ராயலில் அதிரடியாக ஓடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் அப்படத்தின் தயாரிப்பாளரும்
தமிழ்த்திரையுலகின் இடிச்சிரிப்பு வேந்தருமான அமரர் வீரப்பா (PSV, the pioneer for tongue in cheek one liner dialogue punches in Tamil movies) அவர்களை நினைவு கூர்வோம்
Born P.S.Veerappa
10/09/1911
Kangeyam, Madras Presidency
Died 11/09/1998 (what a coincidence with his date of birth)
Chennai, India
Courtesy : Wikipedia
watch from 6:45 PSV scenes with NT
https://www.youtube.com/watch?v=KZqGqZI_s28
What about the response for Prof Krishnan at Kovai Royal. Could anyone share the news.
Also there is a article in recent Kumudham issue about in Lights on about his hunting habit as well
as Imranukku Ootiya Sivaji - the hero of Saravanan Meenakshi I do know whether it is Imran or Irfan.
If anyone have the facility can upload the same.
Regards
Hello!
senthilvel45 shared an album with you.
View Album, http://s1055.photobucket.com/user/senthilvel45/library/
முகத்தில் முகம் பார்க்கலாம்
Hello!
senthilvel45 shared an album with you.
View Album, http://s1055.photobucket.com/user/se...bile%20Uploads
Recap of the posting of Mr Parthasarathy
ராமன் எத்தனை ராமனடி - கடைசி இருபது நிமிடங்கள்
இந்தப் படம் எனக்கு எப்போதும் மிகவும் பிடித்தது. குறைந்தது முப்பது தடவையாவது (தியேட்டரில் மட்டும் இருபது!) பார்த்திருப்பேன். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. படத்தின் டைட்டில் காட்சி (அது மட்டும் தான்) எங்களது ஊரில் எடுத்தார்கள். இன்னொரு காரணம் - அவர் நடிகனான பின்னர் - முக்கியமாக - அவர் நம்பியார் வீட்டில் - செந்தாமரை (அவர் முதலில் நடிகர் திலகத்தின் கழுத்தில் பூட்ஸ் காலை வைத்து அழுதும் போது - நாங்கள் அலறிய அலறல்! - மற்றும் இன்னும் இரு நடிகர்கள் (அதில் ஒருவர் எப்போதும் எதிர் அணி படங்களில் வருவார் - மற்றவர் நடிகர் திலகத்தின் பல படங்களில் நடிப்பார் - திரு Joe அவர்கள் பதிவிறக்கம் செய்த வீர பாண்டிய கட்டபொம்மன் - நாடக ஸ்டில் - ஐ கவனித்தால் அவரது வலது பக்கம் ஓரமாக நிற்பவர் - அவர் தான் அவர்). நம்பியார் வீட்டில் அவர் செய்யும் ஸ்டைல் - கள் - அப்பப்பா. The way he takes on them with his inimitable style - சவுக்கை ஓங்குவார் - ஆனால் நம்பியாரை அடிக்க மாட்டார் - அவர் கோபம் மற்றும் லாகவத்துடன் - செய்யும் அந்த பாவனை - நூறு அடி அடித்ததற்கு சமம் - மற்ற கலைஞர்கள் பத்து நிமிடம் எடுத்துக் கொண்டு காண்பிக்கும் கோபம் மற்றும் ஆத்திரத்தை - வெறும் முக பாவனைகளால் காண்பிப்பவராயிற்றே!.
இப்பொழுது ராமன் எத்தனை ராமனடி படத்தின் கடைசி இருபது நிமிடங்களுக்கு வருவோம்.
இந்த கடைசி இருபது நிமிடங்கள் ஒரு அற்புதமான கோர்வையுடன் ஓடும். அதாவது காட்சி அமைப்புகள் அந்த படத்தின் முடிவை அழகாக ஆனால் சரளமாக இழுத்து செல்லும். அவரது வளர்ப்புப் பெண் dinner பார்ட்டி ஒன்றில் எக்குத் தப்பாக ஒருவனிடம் மாடிக் கொண்டு கடைசி நேரத்தில் - நடிகர் திலகம் வந்து விடுவார். அப்போது ஆரம்பமாகும் இந்த கோர்வையான காட்சி அமைப்பு. நடிகர் திலகம் கோபத்துடன் அந்த வெறியனை அடித்து ஒரு நேரத்தில் காகா வலிப்பு வந்த பிறகு தன்னை அறியாமல் அவனை ஆணியில் அறைந்து - அவனைத் தொடுவார். தொட்டவுடன் அவன் பிணமாக விழுவான் - உடனே அவர் காட்டும் முக பாவம் - அதன் பின்னர் - அவர் காரில் வந்து அமர்ந்து சிறிது நேரம் வரையில் - ப்ரமை பிடிதார்ப் போல் இருப்பார். இங்கு ஒரு விஷயம் - எல்லோரும் வியக்கும் விஷயம் - அதாவது நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் இலக்கணம் வகுத்தவர் என்று எல்லோரும் கூறுகிறோமே - அது. ஒருவர் திடீரென்று ப்ரமை பிடித்து விட்டால் எப்படி ஆவானோ - மிகச் சரியாக அந்த பாவனையை - காண்பிப்பார். சிறிது நேரம் காரில் பயணம் செய்தவுடன் - கார் டிரைவர் - முத்துராமன் - அவரை "சார், நான் யார் என்று தெரிகிறதா?" மிக மிக லேசாக கண்ணை திறந்து பார்த்து "ம். " என்று சொல்லுவார். ஆனால் அவருக்கு தெரியும் முத்துராமன் தான் KR விஜயா - வின் கணவர் என்று. அவர் வீடு வரும். உள்ளே வந்து ஒரு முடிவுக்கு வந்து விடுவார். இது தான் சரியான தருணம் - அனைவரும் (அவரைத் தவிர!) ஒன்று சேர்வதற்கு என்று. உடனே யாருக்கும் தெரியாமல் போலீஸ் - க்கு போன் செய்து வரச் சொல்லிவிட்டு ஹால் - க்கு வந்து. பேச ஆரம்பிப்பார். திடீரென்று நினைவுக்கு வந்து முத்துராமன்- ஐ அழைப்பார். அப்போது அவரது குரலில் இருக்கும் ஒரு வகையான ஒரு இறுக்கம் நிறைந்த ஒரு குரல். உள்ளே வந்தவுடன் அவர் முத்துராமன்-ஐ எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைக்கும் பாங்கு மற்றும் அந்த கம்பீரம் நிறைந்த லாகவம். உடனே போலீஸ் வந்து விடும் - இப்போழோது ஒவ்வொருவரிடமும் விடை பெறும் கட்டம். முதலில், கோபி (ஒரு மலையாள நடிகர்) அவரிடம் ஒரு வகையான நடிப்பு, அடுத்து முத்துராமன் - இப்பொழுது ஒரு கடமை உணர்வுடன் - அடுத்து ஆயா (ஆப்பக்கார ஆயா!........), அடுத்து KR விஜயா - "தேவகி ...." அவர் தேவகி என்ற பெயரை உச்சரிக்கும் விதம் - உணர்ந்து பாருங்கள்! ஆஹா! இப்பொழுது - மகள். இப்பொழுது இரண்டு கைகளை ஒரு மாதிரி தூக்கி - மெல்ல நெருங்கி - மகள் அழுவார் - இவர் - சைடு pose - இல் நமக்கு வலது பக்க முகம் தெரியும். அந்த வலது புருவத்தை - அவரது characteristic /inimitable ஸ்டைல்-இல். இந்த ஸ்டைல் அந்த இடத்துக்கு மெருகை மேலும் ஊட்டுமே தவிர சிதைக்காது. புருவத்தை உயற்றி - "போகட்டுமா" என்று கேட்பார். இப்பொழுது தந்தை மகளிடம் எப்படி பேசுவானோ - அதுவும் மிகவும் செல்லம் கொடுத்தபிறகு எப்படி பேசுவானோ - அப்படி - அதாவது ஒவ்வொரு கேரக்டர்-இடம் விடை பெறும் பொழுதும் அந்தந்த உறவுக்கு ஏற்றார்ப் போல் - நடிப்பு - பிரியாவிடைக்காக. கடைசியில் - யாரும் அழைக்க கூடாது - No cry - என்று அப்பொழுதும் தவறாக - ஆங்கில உச்சரிப்பு - அந்த characterisation - அந்த கடைசி காட்சியில் கூட - அதையும் maintain செய்து. ஒத். Don 't cry என்று சிரித்துக் கொண்டே அழுது நம் எல்லோரையும் - அரங்கத்தில் இருப்பவர்களைப் பார்த்து - அவர் வாயில் இருந்து - வணக்கம் என்று வரும்.
இந்தக் கடைசி இருபது நிமிடங்கள் நடிகர் திலகத்தின் பாத்திரத்தையும் மற்ற அனைத்து முக்கியப் பாத்திரங்களையும் சுற்றி நிகழும். ஒரு முடிவை நோக்கி இழுத்துச் செல்லும். ஆனால், அந்த முடிவை நோக்கி நடிகர் திலகம் தான் இழுத்துச் செல்வார். அதுவும் எப்படி - சரளமாக மற்றும் ரொம்ப casual - ஆக ஆனால் மிக மிக அழகாக மற்றும் ஆழமாக.
இப்போதெல்லாம், இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது மறக்காமல் அந்த இருபது நிமிட கிளைமாக்ஸ் - ஐ பார்த்து விட்டுத் தான் மறு வேலை பார்க்கிறேன்.
Recap of the old posting of Mr Parthasarathy
Nadigar Thilagamum Remake Padangalum
நடிகர் திலகமும் ரீமேக் படங்களும்
இதுவரையில் பலரும் நடிகர் திலகத்தின் ரீமேக் படங்களைப்பற்றி அலசி வந்துள்ளதால், என்னால் உங்கள் அளவிற்குப் பெரிதாக அலச முடியுமா என்று தெரியவில்லை.
இருந்தாலும், எனது எண்ணங்களை இங்கு பதிகிறேன்.
பொதுவாக, 1967-இல் இருந்துதான், நடிகர் திலகம் சில ரீமேக் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. 1952-இல் துவங்கி, 1967-வரை, அநேகமாக, எல்லா கதாசிரியர்களும் / இயக்குனர்களும், அவரை கிட்டத்தட்ட எழுபது சதவிகிதம் முழுவதுமாக அவருடைய நடிப்பாற்றலுக்கு தீனி போடும் வேடங்களைக் கொடுத்து, இனி மேல் அவர் நடிப்பதற்கு ஒன்றுமில்லை என்னும் நிலை மெதுவாக வந்திருக்கலாம். மெதுவாக, சிறந்த கதாபாத்திரங்களில் அவர் நடித்தது போக அவருக்கென்று கதை எழுத ஆரம்பித்து, கற்பனைப் பஞ்சம் மெதுவாக தலை காட்டவும் ஆரம்பிதிருந்ததும் ஒரு காரணமாயிருக்கலாம். இன்னொன்று, எப்போதும் அவரது ரசிகர்கள் ஏங்குவது, அவர் வயுதுக்கேற்றார்ப் போல் (அப்போதைய வயது! 38 தானே!) அல்லாமல், எப்போதும் முதிர்ந்த அல்லது, கனமான கதாபாத்திரங்களையே ஏற்று நடிக்கிறாரே என்று. அதற்கேற்றார்ப் போல், 1966-இல் typhoid காய்ச்சல் வந்து அவர் ரொம்ப மேளிந்துவிடவும், மறுபடியும் (உத்தமபுத்திரனுக்குப் பிறகு), அவர் இளமையாக, முன்னைவிடவும், வசீகரமாக மறுபடியும் தோற்றமளிக்க ஆரம்பித்து விட்டார். உன்னிப்பாகப் பார்த்தோமேயானால், செல்வம் படத்தில் இருந்துதான் அவரது மேலும் இளமையான மற்றும் பொலிவான தோற்றம் ஆரம்பித்திருக்கும்.
I. நடிகர் திலகம் நடித்த ரீமேக் படங்கள்
நான் இங்கு எல்லா படங்களையும் தொடப் போவதில்லை. ஒரு பத்து படங்கள் மட்டும். எல்லோரும் பத்து பத்து என்கிறோமே. இதுவே பத்து என்றால், இது போல், இன்னும் எத்தனை பத்து? சொல்லப் போனால், அவரது அதனை படங்களையும் நாம் இனம் பிரிதி ஆய்வு செய்திட முடியும்.
தங்கை:- இது தேவ் ஆனந்த் நடித்து 1951-இல் வந்து வெற்றி பெற்ற Baazi-என்ற படத்தின் தழுவல். எல்லோரும் அறிந்தார்ப் போல், நடிகர் திலகம் இன்னொரு புதிய பாட்டை / பாதையில் (ஒரிஜினல் பாதையை அவர் விடவே இல்லை அது வேறு விஷயம்) பயணம் செல்ல வித்திட்ட படம். Dev Aanand-ஐ விடவும், style-ஆக, ஆனால், ஒரு இடத்தில கூட, அவரைப் போல் அல்லாமல், முற்றிலும் வேறுவிதமாக நடித்தார். அதிலும், குறிப்பாக, அந்த முதல் சண்டை (ஒரு மாதிரி இரண்டு கைகளையும் தட்டுவது போல் சேர்த்து பின் ஸ்டைல்-ஆக தாக்க ஆரம்பிக்கும் அந்த தெனாவட்டான ஸ்டைல்), கேட்டவரெல்லாம் பாடலாம் பாடலில் காட்டும் அந்த முக பாவங்கள் மற்றும் ஸ்டைல் அதை விடவும் இனியது இனியது பாடல் (ஒவ்வொரு முறை இந்த பாடலை திரை அரங்கத்தில் பார்க்கும் பொழுதும் முதல் சரணத்தில் வரும் ஒரு வரி "ரசிகன் என்னும் நினைவோடு...." உடனே, நாங்கள் எல்லோரும் கோரசாக "நாங்க என்னிக்கும் சிவாஜி ரசிகர்கள்டா! என்று அலறுவோம்). ஒரு டிபிகல் மசாலா மற்றும் gangster படத்தை நடிகர் திலகம் முற்றிலும் வேறு விதமாக ஆனால், பொழுதுபோக்கு அம்சம் கொஞ்சமும் குறையாத வண்ணம் அணுகிய விதம், அன்று முளைக்க ஆரம்பித்த இளம் action நடிகர்களான ஜெய் ஷங்கர் மற்றும் ரவிச்சந்திரன் போன்றோரையே திகைக்க வைத்தது எனலாம்.
என் தம்பி:- இது, A. நாகேஸ்வர ராவும் (ANR), ஜக்கையா-வும் நடித்து VB ராஜேந்திர பிரசாத் இயக்கத்தில் 1967-இல் வெளி வந்து வெற்றி பெற்ற “ஆஸ்தி பருவுலு” என்ற தெலுங்கு படம். (ஒன்று தெரியுமா, இந்த ஜக்கைய்யா தான், நடிகர் திலகம் நடித்து தெலுங்கில் மொழி மாற்றம் seyyap பட்ட பெரும்பான்மையான படங்களுக்கு, டப்பிங் குரல் தெலுங்கில் கொடுத்தவர் – ஏனென்றால், அவரது குரலும் கெட்டியாக, நம் நடிகர் திலகம் அளவுக்கு இல்லை என்றாலும், ஓரளவிற்கு, சிம்ம கர்ஜனை போலிருக்கும். அவர் All India Radio-விலும் அறிவிப்பாளராக வேறு பணியாற்றி வந்தவர்). இந்தப் படத்தின் original-ஐயும் நான் பார்த்தேன். ANR-உம் முதல் பாதியில், அந்த அமைதியான பாத்திரத்தில் நன்றாகத் தான் செய்திருந்தார். இண்டர்வலுக்கு அப்புறம்தான், அவரை, பல லட்சம் படிகள் பெட்டராக நடிகர் திலகம் புகுந்து விளையாடியிருப்பார். அதிலும், “தட்டட்டும் … கை தழுவட்டும்” பாடலில் ஆரம்பித்து, கத்தி சண்டை முடியும் வரை (அதிலும், சண்டை தொடங்குவதற்கு முன் அந்தக் கதியை ஸ்டைல்-ஆக வளைத்து நிற்கும் விதம் ... ஆஹா!”), அரங்கம் திருவிழாக் கோலத்தில் இருக்கும். நூல் முனை கிடைத்தால் நூல் கண்டே பண்ணி விடுபவர் ஆயிற்றே!
திருடன் – ஒரிஜினல் படத்தை நான் பார்க்கவில்லை. அதனால் பெரிதாக எழுதவில்லை. இருந்தாலும், இதிலும், எப்படியும், நூறு சதவிகிதம் வேறு மாதிரி தான் செய்திருப்பார். இந்தப் படத்தில், எங்கள் குழுவிற்கு மிகவும் பிடித்தது, ஓபனிங் ஷாட் கருப்பு சட்டையும் கருப்பு பான்ட்-உம் போட்டுக்கொண்டு ஜெயில்-இல் கம்பிகளுக்கு மேல் நடந்து வரும் காட்சி, அவர் train-இல் முதலில் போடும் சண்டை, அப்புறம், ஒவ்வொரு முறை பாலாஜி-யை சந்திக்கும் போதும், சிகரெட்டை அவர் வாயில் இருந்து எடுத்து, பாலாஜி ஏதோ கேட்டவுடன் “டன்” என்று சிகரெட்டை வாயில் வைத்துக் கொண்டே சொல்லும் அந்த அழகு மற்றும் ஸ்டைல். அதிலும், அந்த, வெள்ளை கலர் சட்டை, முழங்கை வரைதான் இருக்கும். அது ஒரு வகையான ஸ்டைல். அவருக்கு மட்டும் அவ்வளவு அழகாக செட்டாகும். அந்த கெட்டப்புடன் ரிவால்வரை கையில் வைத்து ஒவ்வொரு இலக்கையும் சுடும் அந்த ஸ்டைல். இதுவும் அந்தக் கால இளம் நடிகர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது எனலாம். இந்தப் படத்துக்கு நடிகர் திலகத்தின் விமர்சனம் "இந்த திருடன் ஏராளமான பணத்தைத் திருடி திரு பாலாஜி அவர்களுக்குக் கொடுத்து விட்டான்." அந்த அளவிற்கு வசூல் செய்த படம். என் தந்தை சொன்னார் - இந்த படம் வந்தவுடன் அன்றிருந்த அத்தனை action நடிகர்கள் பயப்பட ஆரம்பித்தனர் என்று.
எங்க மாமா:- இது எல்லோரும் அறிந்தது தான். ஷம்மி கபூரும் ராஜஸ்ரீ (ஹிந்தி நடிகை) மற்றும் ப்ரானும் நடித்து 1967-இல் வெளிவந்து வெற்றி அடைந்த பிரம்மச்சாரி படம். என்னவென்று சொல்வது, எனக்குத் தெரிந்து, இந்தப் படத்தில் தான், அவர் ரொம்ப ரொம்ப அழகாகவும், ஸ்டைல்-ஆகவும், இளமையாகவும் இருப்பார். அதாவது, ரொம்ப. அவருடைய உடை அலங்காரமும் இந்தப் படத்தில் பிரமாதமாக இருக்கும் (கலர் படம் வேறு!). ஒரிஜினல்-இல் இரண்டு மிகப் பெரிய பாப்புலர் பாடல்கள் “Aaj kal their meri pyaari …..” தமிழில், “சொர்க்கம் பக்கத்தில்” மற்றும் “Dhil ke jaroke mein…” தமிழில், “எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்”. முதல் பாடலின் போது, அவரது தோற்றம், டான்ஸ் மூவ்மெண்டுகள் மற்றும் ஸ்டைல் அரங்கை அதிர வைத்தது (இப்போதும் தான்) என்றால், இரண்டாவது பாடல், அரங்கத்தில் இருந்த ஒவ்வொருவரையும், மௌனமான ஒரு நிலைக்கு இட்டுச் செல்லும் – அதாவது – பின் டிராப் சைலன்ஸ் என்பார்களே. அரங்கில் உள்ள அனைவரையும் வழக்கம்போல் கட்டிப்போட்டு விடுவார். மறுபடியும், முற்றிலும் வேறு விதமான நடிப்பு.
எங்கிருந்தோ வந்தாள்:- சஞ்சீவ் குமார் நடித்து வெற்றி பெற்ற “கிலோனா”. இதுவும் 1970-இல் தான் வந்தது. சூட்டோடு சூடாக, பாலாஜி அவர்கள் ரீமேக் செய்தார். இந்தப் படத்திலும், ஒரிஜினலை விட அற்புதமாக வித்தியாசமாக செய்திருப்பார். "ஏற்றி வாய்த்த தீபம் ஒன்று என்னிடத்தில் வந்ததென்று பார்த்து மகிழ்ந்ததென்னவோ பின் பாராமல் போனதென்னவோ") நிறைய பேர் இந்தப் படத்தைப் பற்றி அலசியதால், நான் சொல்வது “ஒரே பாடல்” பாடலைப் பற்றி. இந்தப் பாடலை அவர் சோகமாக இருக்கும்பொழுது (ஆம் அவரது காதலியின் மணவிழாப் பாடல் (காதலி மற்றொருவருக்கு மனைவியானால், பின் எப்படி சோகம் இல்லாமல்?) பாடச் சொல்லி வற்புறுத்துவார்கள். முதலில் முடியாது என்பவர், கடைசியில், வேறு வழியில்லாமல் ஆரம்பிப்பார். எப்படி?, ... ஆ ஆ. . என்று ஆலாபனை செய்து கொண்டே – சரி சரி பாடுகிறேன் என்று – அந்த ஆலாபனையும் அவர் சரி சரி என்பதும் அவ்வளவு அழகாக இழைந்து வரும். அதுவும் அந்த இரண்டாவது சரணம் தான் ரொம்பவே எல்லோரையும் உருக்கி விடும். இந்தப் பாடலைப் பாடித் தான் நான் 1992-இல் எனது அலுவலகத்தில் முதல் பரிசைத் தட்டிச் சென்றேன் என்பதை பெருமையோடு நினைவு கூர்கிறேன்.
வசந்த மாளிகை:- A. நாகேஸ்வர ராவ் (ANR) நடித்து தெலுங்கில் 1971-இல் வந்து பெரும் வெற்றி பெற்ற “பிரேம நகர்” ஆம் தெலுங்கில் ப்ரேம என்றுதான் உச்சரிக்க வேண்டும். நம் அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டு முழுமையாக ஆக்கிரமித்த படம். இதன் ஒரிஜினலையும் நான் பார்த்தேன். ஒன்று, நடிகர் திலகம் ஒவ்வொரு காட்சியையும் வேறு விதமாக செய்தது. மற்றொன்று அவர் காட்டிய அந்த grace மற்றும் ஸ்டைல். படம் முழுவதும் ஒரு விதமாக சன்னமான தொனியில்தான் பேசியிருப்பார் (பெண்களின் மனது எப்போதும் ஆண்களின் பலத்தை எடை போட்டபடிதான் இருக்குமா அதன் பெயர்தான் பெண்மையா? போன்ற பல வசனங்களை அவர் உச்சரிக்கும் விதம்! – வசந்த மாளிகைக்கு அழைத்துச் சென்று அவர் பேசும் அந்த மெய் சிலிர்க்க வாய்த்த வசனங்களையும் சேர்த்து. ஒரிஜினலில் ஒரு மாதிரியான டப்பாங்குத்துப் பாட்டு வரும். தமிழில், பாடலை பதிந்து மட்டும் விட்டிருந்தனர் “அடியம்மா ராசாத்தி சங்கதி என்ன?” என்று துவங்கும். தெலுங்கில், கதாநாயகன் அவரது பண்ணைக்குப் போயிருக்கும் போது, அங்குள்ள, பெண்கள் நாற்று நட்டுக்கொண்டும் தலையில் சுமையை சுமந்துகொண்டும் போவதைப் பார்த்து, கதாநாயகனுக்கு கனவில் இந்தப் பாடல் வருவதாக வரும். தெலுங்கில், ANR நடித்தால், ஒரு பாட்டாவது, அவரது பிரத்யேக டான்ஸ் மூவ்மெண்டுகளுடன் கண்டிப்பாக இருந்தாக வேண்டுமாம். அங்கு அவரது செல்லப் பெயர் “நட சாம்ராட்” அங்கு நட என்றால் நடனம், நடை அல்ல. தமிழில், நடிகர் திலகம் இந்தப் பாடலை வேண்டாம் என்று சொல்லி இருக்க வேண்டும். ஏனென்றால், இந்த கதாபாத்திரம், முதலில் இருந்தே ஒரு விதமான graceful நடை, உடை, பாவனையுடன் விளங்கும். (ஏன் ஏன் பாடல் உட்பட..). இது கிராமத்து மெட்டில் அமைந்த … ஒரு மாதிரியான டப்பாங்குத்துப் பாடல் வேறு… இந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை சிதைத்து விடும் என்பதால்தான் இந்தப் பாடல் படத்தில் இடம் பெறாது போயிருக்கும். அதற்கு பதிலாகத்தான், அந்த நாடோடிக் கூட்டத்தினருடன் அவரும் வாணிஸ்ரீ -யும் சேர்ந்து ஆடுவதுடன் வரும் அந்த கட்டம் வரும் (இதற்கு ஹிந்தியில் பாடலும், இதற்குப் பின் வரும் அந்த குடிசையில் வரும் காட்சி தெலுங்கில் பாடலாகவும் வரும். இதிலும், தமிழில் வித்தியாசமாகதான் செய்திருப்பார் நம் நடிகர் திலகம். இதில், ஒரு நடை piece ஒன்று – NT- ரசிகர்களுக்காகவே இருக்கும். அதிலும், அந்த grace-ஐ maintain பண்ணியிருப்பார். இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும், குறிப்பாக, அவரது டிரெஸ்ஸிங் சென்ஸ்-ஐ பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம்.
Continuation of the recap of the posting of Mr Parthasarathy
நடிகர் திலகமும் ரீமேக் படங்களும் (தொடர்ச்சி):-
நீதி:- இது ராஜேஷ் கன்னா நடித்து வெற்றியடைந்த துஷ்மன் என்ற இந்தி படம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. முதலில் இருந்து கடைசி வரையிலும் (ஒரு சில காட்சிகளைத் தவிர) ஒரே உடையை (ஒரு மாதிரியான மிலிடரி கிரீன் கலர்) அணிந்து கொண்டு ஒரு நிஜ லாரி டிரைவராய் வாழ்ந்து காட்டிய படம். இந்தப் படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்பொழுதும், ஒவ்வொரு முறையும், அவரை மற்றவர்கள் (சௌகார் வீட்டில் இருப்பவர்கள்) ஒதுக்கும்போதும், எப்போது தான் அவரை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களோ என்று மனம் கிடந்து எங்கும். குறிப்பாக, சௌகார் அவரை கடைசி காட்சிக்கு முன் வரை, அவரை அந்த அளவிற்கு வெறுப்பார் (என்ன இருந்தாலும், அவரது கணவரையல்லவா நடிகர் திலகம் தவறுதலாக லாரியால் கொன்றிருப்பார்). கடைசியில், மனோகரை அடித்து நொறுக்கியவுடன், சௌகார் அவரை தம்பி! என்று அழைத்தவுடன், நடிகர் திலத்தின் reaction அனைவரையும் அழ வைத்து விடும். மேலும், "எங்களது பூமி காக்க வந்த சாமி" பாடலில், கடைசியில், கோவை சௌந்தரராஜன் குரலில், " பல்லாண்டு பாடுகின்ற ..." என்று ஆரம்பித்து பாடும் போது அவர் காட்டுகின்ற subtle முக பாவங்கள், ஜெய கௌசல்யா திருமணம் முடிந்து அவரை வழியனுப்பும்போது கூடவே குழந்தை போல் ஓடிக்கொண்டே பாசத்துடன் அவரிடம் பேசும் பேச்சுக்கள்.... இந்தப் படத்திற்கும், நீலவானம் மற்றும் பாபு படங்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இந்த மூன்று படங்களிலும், அவரது கதாபாத்திரம் இடையில் ஒரு சந்தர்ப்பத்தில் தான் வந்து இணைந்து கொள்ளும். ஆனால், போகப்போக, அந்த கதாபாத்திரம் அந்த வீட்டின் சூழலோடு இணைந்து / இழைந்து கொண்டு கடைசியில், அந்த கதாபாத்திரம், அந்த வீட்டிலே ஒருவராக தன்னை ஐக்கியப்படுதிக்கொள்வதோடு மட்டுமல்லாமல், அந்த வீட்டில் உள்ள இன்றியமையாத உறுப்பினராகவே மாறிவிடும். ஆம். இந்த மூன்று படங்களிலும் (இவைகளில் மட்டும் தானா?), அவர் அந்த கதாபாத்திரமாகவே மிக மிக இயல்பாக மாறி விட்டிருப்பார். இவைதானே இயல்பான நடிப்பு!
எங்கள் தங்க ராஜா:- இது VB ராஜேந்திர பிரசாத் இயக்கத்தில் தெலுங்கில் சோபன் பாபு இரட்டை வேடத்தில் நடித்து வெற்றி அடைந்த “மானவுடு தானவுடு" என்ற படம். சோபன் பாபு பெரும்பாலும், அமைதியான கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார். இந்தப் படமும் சோக்காடு என்ற மற்றொரு படமும் அவரை வித்தியாசமான நிறைய வேடங்களை ஏற்க வழி வகுத்தது என்று என் கசின் (பெரியம்மா மகன் - அவர்களது குடும்பம் நெல்லூரில் இருக்கிறது) சொல்லுவான். இந்தப் படத்திலும், நடிகர் திலகம் வித்தியாசமான இரண்டு கெட்-அப் மற்றும் கதாபாத்திரங்களில் கலக்கினார். அநேகமாக அனைவரும் இந்தப் படத்தைப் பற்றி அலசோ அலசு என்று அலசிவிட்டதால், என்னால் முடிந்த சிறு துளிகள். "இரவுக்கும் பகலுக்கும்" பாடலில், நடிகர் திலகத்தின் graceful டான்ஸ் மூவ்மெண்டுகளும் சின்ன சின்ன நடை piece -களும், அரங்கை அதிரவைத்தது. இந்த டாக்டர் கதாபாத்திரத்தில், அவருக்கு பெரிதாக ஸ்டைலாக நடிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லாது போனாலும், இந்தப் பாடலை முழுவதுமாக பயன்படுத்தி, கதாபாத்திரத்தின் தன்மையை சிதைக்காமல், மெலிதான ஒரு ஸ்டைலையும் graceful டான்ஸ் மூவ்மெண்டுகளும் கொடுத்திருப்பார்.
அவன் தான் மனிதன்:- இது Dr. ராஜ்குமார் நடித்து கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற கஸ்தூரி நிவாசா என்ற படம் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ராஜ்குமார் ஒரு மிகச் சிறந்த நடிகர் மற்றும் பாடகரும் கூட. எனக்குத் தெரிந்து, 1975/76-க்கு பிறகு, அவரது படங்களில் வரும் பாடல்களுக்கு, அவரே குரல் கொடுக்க ஆரம்பித்தார். அதற்கு முன்பு வரை, திரு P B ஸ்ரீனிவாஸ் அவர்கள்தான் அவருக்கு பாடி வந்தார். எனது இன்னொரு கசின், ராஜ்குமார் அவர்களின் சொந்த production கம்பெனி-இல் அப்போது வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அந்த பட நிறுவனம், ஏவிஎம் ஸ்டூடியோவில் ஒரு ரூமை வாடகைக்கு எடுத்து ராஜ்குமார் படங்களை மட்டும் எடுத்துக் கொண்டிருந்தது. என்னுடைய இந்தக் கசினும் நடிகர் திலகம் ரசிகன்தான். இந்தப் படத்தின் ஒரிஜினல்-இல் ராஜ்குமார் மிக அற்புதமாக செய்திருந்தார். மேலும், இந்தப் படம் கன்னடத்தில் பெரும் வெற்றியடைந்த படம் என்பதால், (எனது நண்பர் (எதிர் வீடு வேறு) கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும், சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவரும், இவரது இரு அண்ணன்களும் - மூவரும் நடிகர் திலகம் ரசிகர்கள். இவருக்கு ராஜ்குமாரையும் மிகவும் பிடிக்கும். அவர் கூறிய தகவலையும் வைத்து இந்த கன்னடப் பட தகவலை சொல்கிறேன்). இந்த கன்னட படத்தையும் நான் பார்த்திருக்கிறேன். நடிகர் திலகத்திற்கு இந்த படம் ஒரு சவாலாகவே அமைந்தது. (உயர்ந்த மனிதன் மற்றும் தெய்வ மகன் ஆகிய படங்களும் ரீமேக் செய்யப்பட படங்கள் மற்றும் அந்த படங்களும் நடிகர் திலகத்துக்கு சவாலாக அமைந்தவைதான் எனினும் அந்தப் படங்களின் ஒரிஜினல் அந்த அளவிற்கு நாடு முழுவதும் புகழ் அடைந்தவை என்று கூற இயலாது. அதனால் இந்த படங்களை இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, இந்த பத்து படங்களும் ஓரளவிற்கு எல்லா விதமான மக்களும் பார்த்து விட்ட படங்கள் ஆதலால், ரீமேக் செய்யப்படும்போது ஒரிஜினலை நிறைய பேர் compare செய்து பார்ப்பார்கள் அதனால், நடிகர் திலகம் எப்படியும் ஒரிஜினலை விட நன்றாக செய்ய வேண்டும் என்று முனைவார். எல்லா படங்களுக்கும் அவருடைய முனைப்பு இருக்கும் என்றாலும், இந்த மாதிரி ஆரோக்கியமான போட்டி அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று.) இருந்தாலும், இந்த சவாலையும் ஏற்று, நடிகர் திலகம் தன் தனித்தன்மையை நிரூபித்தார் - அதுவும், அந்த சோக உணர்வை விழிகளாலேயே காண்பித்து அனைவரையும் நெக்குருக வைத்தார். சோகத்தை எந்த விதமான அதிகபட்ச சிரத்தையும் எடுத்துக் கொள்ளாமல், இரு விழிகளாலேயே வெளிப்படுத்தும் கலை அவருக்கு மட்டுமே சாத்தியம். (மேஜர் ஒரு பேட்டியில், நடிகர் திலகத்தைப் பற்றி கூறும் போது "சிவாஜி ஒருவர்தான் கண்களில் பெருகும் கண்ணீரை கண்களுக்குள்ளேயே, தேக்கி வைத்து கேமராவை நோக்கி பார்த்து, கண்ணீர் கீழே சிந்தி விடாமல், அந்த கண்ணீரை மக்களுக்கு காண்பித்து நடிப்பவர்" என்றார்). உடலை பெரிதாக வருத்திக் கொள்வாரே தவிர பட்டினி கிடந்து தோற்றத்தை மாற்றிக் கொள்ள மாட்டார். நடிப்பினாலேயே அத்தனை உணர்வுகளையும் காட்டத்தான் தலைப்படுவார். (அப்பர் ஒரு சிறந்த உதாரணம்). இந்தப் படத்தின் flashback காட்சிகள்தான், நம் அனைவரையும் நிறைய கவர்ந்தது. குறிப்பாக, ஊஞ்சலுக்குப் பூச்சூட்டி பாடல் (முரளி சார் கூறிய அந்த கடைசி சரணத்தில் நடிகர் திலகம் அந்த புல்மேட்டின் மேலிருந்து கீழே இருக்கும் மஞ்சுளாவைப் பார்த்து, ஒரு மாதிரி நடை நடந்து பின் மறுபடியும் பாடும் அந்த ஸ்டைல் அரங்கத்தை எப்போதும் அதிர வைக்கும்). அன்பு நடமாடும் பாடலும், மிகச் சிறப்பாக இருக்கும். மெல்லிசை மன்னரின் மெட்டுக்கு கேட்கவே வேண்டாம். இந்தப் படத்தில் நடிகர் திலகம் வைத்திருந்த ஹேர் ஸ்டைலைதான் நான் சிறிது காலம் வரை வைத்திருந்தேன். இப்போது இல்லை. முடி சிறிது கொட்டி விட்டது. அந்த அளவிற்கு என்னை முழுமையாக ஆக்கிரமித்த படம். Grouch-070 இந்தப் படத்தை விரிவாக மிக அற்புதமாக அலசி இருந்தார்.
பாபு:- ஆஹா! இந்தப் படத்தைப் பற்றி பேச, பகிர்ந்து கொள்ள இந்த ஒரு ஜென்மம் போதுமா - தெரியவில்லை. ஓடையில் நின்னு - சத்யன் என்கிற அற்புதமான நடிகர் நடித்த மிகச் சிறந்த மலையாளத் திரைப்படம் ஆயிற்றே இது. இந்தப் படத்தில் நடித்ததற்காக சத்யனும், இதே படத்தின் ஹிந்திப் பதிப்பான “Aashirvaad” படத்திற்கு அசோக் குமாரும் அடுத்தடுத்த வருடங்களில் பாரத் அவார்ட் வாங்கினர். தமிழிலும், நடிகர் திலகத்திற்கு கிடைத்திருக்க வேண்டியது - கை நழுவிப் போன கதை ஏற்கனவே அலசப் பட்டு விட்டது. இந்தப் படத்தில், எப்போதும் எல்லோர் மனதிலும் நிழலாடும் காட்சி - அவர் பாலாஜி வீட்டில் உணவு உண்ணும் காட்சி. பாலாஜியும், அவரது மனைவி சௌகாரும், குழந்தை ஸ்ரீதேவியும் அவர்களது கார் வழியில் நின்றுவிடுவதால், சாலையில் நின்று கொண்டிருக்கும்போது, வழியில் போகும் நடிகர் திலகம் அவர்களை தனது கை ரிக்க்ஷா மூலம் அவர்களது வீட்டிற்குக் கொண்டு விடுவார். பாலாஜி, நடிகர் திலகத்திற்கு பணம் கொடுப்பதோடு நின்று விடாமல், மழையில் நனைந்து விட்ட அவருக்கு, துண்டைக் கொடுத்து மேலும், ஒரு சட்டையும் கொடுப்பார். இது போதாதென்று, அவரை வீட்டிற்குள் அழைத்து, சாப்பாடும் போடுவார். பாலாஜியும், சௌகாரும் ஸ்ரீதேவியும் அவரை பந்தா இல்லாமல் கனிவோடும், அன்போடும் நடத்தும் விதம் மெய் சிலிர்க்க வைக்கும். நடிகர் திலகம் கீழே உட்கார்ந்து இருப்பார். அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென்று ஸ்ரீதேவி கீழே போய் அவர் அருகே உட்கார்வதோடு மட்டுமின்றி, அவரது இலையில் இருந்து ஒரு கத்தரிக்காய் துண்டையும் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளப் போவார். நடிகர் திலகம் பதறிப் போய், ஸ்ரீதேவி கையைப் பிடித்து, சௌகாரையும் பாலாஜியையும் பார்த்து, "குழந்தையை ஒன்றும் சொல்லாதீர்கள். தெரியாமல், என் இலையில் இருந்து எடுத்து விடடாள்" என சொல்வார். ஆனால், அதற்கு மாறாக, பாலாஜியோ சௌகாரை பார்த்து "பரவாயில்லையே. இவள் கத்தரிக்காய் சாப்பிடுகிறாள். குட்" என்று சொல்லவும், சௌகார் அதையே ஆமோதிப்பார். உடனே, நடிகர் திலகம் காட்டும் மின்னலென வெட்டிச் செல்லும் அந்த உணர்வுகள் - ஆம் - ஒன்றல்ல - ஆச்சரியம், ஆனந்தம், மகிழ்ச்சி கலந்த அந்த கண்ணீர் மற்றும் நன்றிப்பெருக்கு - அப்பப்பா - எத்தனை முறை பார்த்தாலும் பார்க்கும் அனைவரையும் ஒருசேர கலங்கவைத்து விடும். Of course, பாலாஜி, சௌகார் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோரின் ஒத்துழைப்புடன் இந்தக் காட்சி அற்புதமாக அமைந்திருக்கும். இதுபோல், இன்னும் எத்தனையோ காட்சிகள். இந்தப் படத்தின் ஒரிஜினலில், சத்யன் அவர்கள் கதாபாத்திரம் ஒரு மாதிரியான முரட்டுத்தன்மை உடையதாக சித்தரிக்கப்பட்டிருக்கும். தமிழில், அதனை இலேசாக, மாற்றி, படம் முழுவதும், கனிவு, நன்றிப் பெருக்கு மற்றும் எளிமை மூலம் மிக மிக வேறுமாதிரியான கதாபாத்திரமாக மாற்றி இருந்தார் நமது நடிகர் திலகம்.
அது எப்படி, நடிகர் திலகம் மட்டும், எப்போதும் ஒரிஜினலை விட நன்றாக செய்கிறார். அதே சமயம், அவரது படங்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்யப் படும் போது இவர் நடித்த அளவுக்கு மற்றவர்களால் நடிக்க முடிவதில்லை - அந்த கதாபாதிரங்களுக்கு உயிர் ஊட்ட முடிவதில்லை? (இந்த ஆய்வு - அதாவது நடிகர் திலகத்தின் படங்கள் மற்ற மொழியில் - இந்த ஆய்வு முடிந்த பிறகு துவங்குகிறது). ஏற்கனவே கூறியது போல் - அதாவது – நடிகர் திலகம் மேஜர் அவர்களிடம் கூறியது போல் - ஒவ்வொரு ஒரிஜினலையும், குறைந்தது பத்து தடவையாவது பார்த்து ஆழமாக study செய்து முழுக்க முழுக்க வேறு மாதிரி - சிறிதளவு சாயல் கூட ஒரிஜினலில் இருந்து வந்து விடக் கூடாது - என்று நடிகர் திலகம் எடுக்கும் அந்த கர்ம சிரத்தை - மற்றும் அந்த தணியாத தாகம் மற்றும் வெறி.
நான் மேற்கூறிய படங்கள் அல்லாமல், இன்னும் பல நல்ல பத்து படங்கள் ரீமேக் வரிசையில் உண்டு. மோட்டார் சுந்தரம் பிள்ளை, உயர்ந்த மனிதன், தெய்வ மகன், (ஏன் இதில் சேர்க்க வில்லை என மேலே கூறியிருக்கிறேன்), தியாகம், அண்ணன் ஒரு கோவில் உள்பட
நிலைமை இப்படி இருக்க, எப்படி நடிகர் திலகத்தின் சாதனைகளை ஒரு பத்து படங்களுக்குள் அடக்கி விட முடியும்?
இன்று ஞாயீறு மாலைக்காட்சியில் ரம்பா தியேட்டரில் திருச்சி JJ COLLEGE மற்றும் JAMAL MOHAMMAD COLLEGE மானவர்கள் மொத்தமாக 150 மாணவர்கள் படம் பார்க்கிறார்கள்
https://scontent-b-kul.xx.fbcdn.net/...9c&oe=54994375
உதாரண புருஷர்
அது 1993-ம் வருடம்! நமது குழும நாளேடான "தினமணி'யின் வைர விழாவை மாநிலம் முழுவதும் ஆங்காங்கே விழா நடத்திக் கொண்டாடினோம். அந்த வரிசையில் தஞ்சாவூரில் ஒரு நிகழ்ச்சி நடத்த முடிவானது.
அந்நிகழ்ச்சியில் நடிகர் திலகம் கலந்துகொண்டு சிறப்பித்தால் நமக்குப் பெருமையாக இருக்குமெனத் தீர்மானித்தோம். விழாவுக்கு அழைப்பதற்காக "அன்னை இல்லம்' குறிப்பிட்ட நாளில் அங்குச் சென்றோம்.
அன்று காலை பத்து மணிக்கு நடிகர் திலகத்தை அவரது இல்லத்தில் சந்திப்பதாக ஏற்பாடு. மிகச் சரியாக 9.59-க்கு வரவேற்பறையில் பிரவேசித்தார் சிவாஜிகணேசன். எங்கள் அனைவரோடும் மகிழ்ச்சி பொங்க அளவளாவிவிட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புதல் தந்தார்.
தஞ்சையில் விழா ஏற்பாடுகள் கோலகலமாய் நடந்தன. நிகழ்ச்சிக்கு முதல் நாளே சூரக்கோட்டையில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு வந்து தங்கியிருந்த நடிகர் திலகத்தை மீண்டும் சந்திக்க விரும்பினோம். உடனே நேரம் ஒதுக்கித் தந்தார். காலை பதினோரு மணி!
நாங்கள் அவரது தோட்ட இல்லத்தின் உள்ளே நுழையும்போது எதிரே நின்று வரவேற்றார் நடிகர் திலகம். ஒரு நிமிடத் தாமதம் கூட இல்லை.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் உரையாடிய பின், ""நாளை எத்தனை மணிக்கு விழாவைத் தொடங்குவீர்கள்? துல்லியமாகச் சொல்லுங்கள்'' என்றார். ""மிகச் சரியாக காலை 10 மணிக்கு தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டுவிடும்'' என்றோம்.
""சரி! 9.59க்கு நான் அங்கே இருப்பேன்! இல்லையென்றால் என் தலை இருக்கும்'' என்று கம்பீரமாகச் சொன்னார் அக்கலையுலக மேதை.
மறுநாள் சொல்லி வைத்தது போலவே 9.59க்கு விழா நடக்கும் அரங்கில் சிம்ம நடை போட்டு வந்தார்.
ஒரு மூத்த கலைஞர், நேரம் தவறாமையில் தொடர்ந்து காட்டிய பொறுப்புணர்வு எங்களை நெகிழ வைத்தது. எத்தனையோ கலைஞர்கள் இதுபற்றி நம்மிடம் சொல்லியிருந்தாலும் நாமே அதை அனுபவிக்கும்போது அது ஆனந்தமாக இருந்தது.
இதுபற்றி விழா முடிந்ததும் அவரிடம் பேசியபோது, ""நேரம் தவறாமை என்பது மிக முக்கியமான பண்பாடு. நாம் காலம் தாழ்த்துவதால் சுற்றியுள்ள பலருக்கு பற்பல நெருக்கடிகள் ஏற்படுவதை அனைவரும் உணர வேண்டும்'' என்றார்.
சென்ற வாரம்... மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திரக் கலை விழாவுக்காகச் சென்ற பாலிவுட் நட்சத்திரங்கள் சிலர், பேட்டிக்காக வந்த மலேசிய பத்திரிகையாளர்களையும் தொலைக்காட்சி நிருபர்களையும் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேல் காக்க வைத்துள்ளனர். அதற்குப் பின்னரும் அலட்சியமாகவே நடந்துள்ளனர். இதனால் மலேசிய பத்திரிகைகள் தங்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன.
நமது நட்சத்திரங்கள், இவை போன்ற செயல்களால் நமது தேசத்தின் புகழையும் குலைக்கின்றோம் என்பதனை உணர வேண்டும்.
பத்மஸ்ரீ டாக்டர் சிவாஜி கணேசனை நடிப்புக்கு மட்டுமின்றி, நேரம் தவறாமைக்கும் நமது கலைஞர்கள் உதாரண புருஷராகக் கொள்ள வேண்டியது அவசியம்.
நன்றி: சினிமாஎக்ஸ்பிரஸ்
Thanks to Mr Joe
Punar Jenmam poster
http://i18.photobucket.com/albums/b126/cdjm/sridhar.jpg
Uththama puthiran Poster
http://i18.photobucket.com/albums/b1...m/uththama.jpg
Review of Bale Pandiya by Mr Murali Srinivas - a recap
பலே பாண்டியா
தயாரிப்பு: பத்மினி பிக்சர்ஸ்
இயக்கம்: பந்துலு
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வெளியான தேதி : 26.05.1962
கட்டபொம்மன் மற்றும் கப்பலோட்டிய தமிழன் என்ற மாபெரும் படங்களுக்கு பிறகு பந்துலு எடுத்த ஒரு லைட் என்டர்டைனர். குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டு வெளியான படம்.
(நடிகர் திலகத்தின் கமெண்ட் " நான் அமெரிக்காவிற்கு போவதற்கு முன் நடித்து முடித்து நான் அமெரிக்கா போய் விட்டு வந்த பின் வெளியான படம்."). நடிகர் திலகம் மூன்று வேடங்களிலும் நடிகவேள் இரண்டு வேடங்களிலும் நடித்த படம். "ப" என்று பெயர் ஆரம்பித்தாலும் பீம்சிங் டைரக்ட் செய்யாத படம். கதை,திரைக்கதையை பொறுத்தவரை லாஜிக் பார்க்காமல் பார்க்க வேண்டிய படம்.
கதாநாயகனான பாண்டியன் ஒரு உயரமான கட்டிடத்தில் இருந்து தற்கொலைக்கு முயற்சிக்க முற்படுவதோடு படம் ஆரம்பம். பாண்டியனை பார்க்கும் கபாலி (ஒரு திருட்டு கும்பலின் தலைவன்) அவனை காப்பாற்றுகிறான். கிழே நிற்கும் கூட்டத்தில் காரில் வந்து இறங்கும் கீதாவும் அவரது தந்தை அமிர்தலிங்கம் பிள்ளையும் அடக்கம். மேலே இருந்து கீதாவை பார்க்கும் பாண்டியனுக்கு அவளை பிடித்து போய் விடுகிறது. ஒரு திருடன் அப்போது கீதாவின் கை பையைஅறுத்துக்கொண்டு ஓடுவதையும் பாண்டியன் கவனித்து விடுகிறான். கிழே வந்து அந்த திருடனை பிடித்து பையை வாங்கும் பாண்டியன் ஆனால் அதை கீதாவிடம் கொடுப்பதற்குள் அவள் போய் விடுகிறாள். கபாலியுடன் அவன் வீட்டுக்கு செல்கிறான். அங்கே ஒரு கூட்டமே இருக்கிறது ஆனால் பாண்டியன் கண்ணில் யாரும் தென்படுவதில்லை. கபாலியிடம் அடியாளாக வேலை செய்யும் மருது பாண்டியனை போலவே இருக்கிறான். பாண்டியனை ஒரு மாதம் தன்னுடன் இருக்க சொல்கிறான் கபாலி. அவன் திட்டம் என்னவென்றால் ஒரு மாதம் கழித்து பாண்டியனை கொன்று விட்டு மருது இறந்து விட்டதாக செய்தியை பரப்பி ஒரு லட்சம் ரூபாய் பணத்தை அடைவது. (இது எப்படி சாத்தியம் என்பது தெளிவாக இல்லை). இதற்கிடையில் கீதாவை தேடி போகும் பாண்டியனை முதலில் விரட்டும் அவள் பிறகு தன் சம்மதத்தை சொல்கிறாள். கீதாவின் அத்தை மகன் ரவி, கீதாவின் வீட்டிலேயே இருக்கிறான். இதற்கிடையில் ஒரு மாதம் முடிந்து விடுகிறது.
தன் திட்டப்படி பாண்டியனை கொல்ல கபாலி முற்படுகிறான். அவனிடமிருந்து தப்பித்து வரும் பாண்டியனுக்கு காரை ஒட்டி கொண்டு வரும் ஒரு பெண் லிப்ட் கொடுக்கிறாள். சிறிது தூரம் சென்றபிறகு தான் அந்த பெண்ணிற்கு கார் ஓட்ட தெரியாது என்றும் மனோ நிலை பாதிக்கப்பட்டவள் என்றும் புரிகிறது. ஆனால் அதற்குள் கார் ஒரு மரத்தில் மோதி விபத்துகுள்ளாகிவிடுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அந்த பெண் விபத்தில் பட்ட அடியால் இயல்பான நிலைக்கு திரும்புகிறாள். அவளின் தந்தை ஒரு பெரிய எஸ்டேட் முதலாளி. பாண்டியன் யாருமற்ற ஆள் என்று தெரிந்ததும் அவனை தன் மகனாக ஏற்றுகொள்கிறார். எஸ்டேட் செல்லும் பாண்டியனால் கீதாவை சந்திக்க முடியவில்லை. சிறிது நாள் கழித்து செல்லும் பாண்டியனை தன் தந்தையை வந்து சந்திக்க சொல்கிறாள் கீதா. தந்தையிடமும் அனுமதி வாங்குகிறாள்.
பாண்டியனை கொல்ல முயன்று தோல்வியுற்ற கபாலி அவனை தேடிக்கொண்டிருக்கிறான். கீதாவை சந்திக்க வரும் பாண்டியனை பார்த்து விடும் கபாலி அவனை சிக்க வைக்க போலீஸ் கண் முன்னால் ஒரு திருட்டை மருது மூலமாக நடத்துகிறான். பாண்டியன் சிக்கி கொள்ள அவனுக்கு சிறை தண்டனை கிடைக்கிறது. சொன்ன நாளில் வராததால் கீதாவின் தந்தை பாண்டியன் மேல் கோபமாக இருக்கிறார். சிறையிலிருந்து வெளி வரும் பாண்டியன் ரவியை சந்தித்து அவனோடு கீதாவின் வீட்டிற்க்கு செல்கிறான். அங்கே கீதாவின் தந்தையும் கபாலி போல் இருக்க கடுமையாக பேசி விட்டு வெளியே வர அங்கே வாசலில் கபாலி. உண்மை புரிந்து கபாலியிட்மிருந்து தப்பித்து எஸ்டேட் வந்து சேருகிறான். அங்கே வளர்ப்பு தந்தை இறந்து போன விவரம் தெரிகிறது. இத்தனை நாள் எங்கே போனீர்கள் என்ற வசந்தியின் (எஸ்டேட் முதலாளியின் மகள்) கேள்வியிலிருந்து தப்பிக்க, இல்லாத ஒரு அத்தை மகனை பற்றி கதை அடிக்க அது வசந்தியின் மனதில் ஒரு உறவிற்கு அச்சராமிடுகிறது. மீண்டும் கல்யாண விஷயமாக ரவியை சந்திக்கும் பாண்டியனின் கையில் இருக்கும் வசந்தியின் புகைப்படத்தை பார்த்து விட்டு யார் என்று கேட்க, எல்லாவற்றையும் பாண்டியன் சொல்லி விடுகிறான். பாண்டியன் ஊருக்கு செல்வதற்கு முன் ரவி சென்று வசந்தியிடம் தன்னை அத்தை மகனாக அறிமுகப்படுத்திக்கொள்ள அவர்கள் இருவருக்கும் காதல் அரும்புகிறது.
ஊருக்கு திரும்பி வரும் பாண்டியன் மூலம் உண்மை தெரிந்தும் கூட வசந்தி தன் முடிவில் உறுதியாக இருக்கிறாள். இதே நேரம் கல்யாணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் தந்தையிடம் சண்டை போட்டு பாண்டியனை தேடி கீதா வந்து விட, இரு ஜோடிகளும் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். இந்த விஷயத்தை அறிந்து கொண்டு விடும் கபாலி, அமிர்தலிங்கம் பிள்ளையாக கல்யாணத்திற்கு வந்து கலந்து கொள்கிறான். இரவு பாண்டியனை கடத்த திட்டம் போடுகிறான். இதற்குள் மனது மாறி அமிர்தலிங்கம் பிள்ளை மகளை தேடி வர குழப்பம் உருவாகிறது. விளக்கை அனைத்து விட்டு பாண்டியனை கடத்தி கொண்டு போய் விடுகிறான். அப்போது கேட்கும் கூக்குரலில் கீதா இறந்து விட்டதாக பாண்டியன் தவறாக புரிந்து கொள்கிறான். தனி அறையில் அடைத்து வைக்கப்படும் பாண்டியன் எஸ்டேட் வக்கீலிற்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அதில் தன் பங்கிற்கு உள்ள சொத்தை நிர்வகித்து அதில் வரும் வருமானம் தன்னை வளர்த்த அண்ணனுக்கு மாதா மாதம் கொடுக்க வேண்டும் என்றும் தான் உயிரோடு திரும்பி வந்தால் இதை மாற்றி கொள்ளலாம் என்றும் அதில் எழுதி வைத்து விடுகிறான்.
பாண்டியனை நடுக்கடலிலே கொண்டு போய் போட்டு விடுகிறார்கள். ஆனால் வேறொரு படகில் இருக்கும் மீனவர்கள் இதை பார்த்து விடுகிறார்கள். கபாலியும் மருதும் போலீஸ் கண்ணில் இருந்து தப்பிபதற்காக வேறொரு ஊருக்கு செல்ல அங்கே பாண்டியனை போல் இருக்கும் சங்கர் என்ற வயதானவரை பார்க்கிறார்கள். (இவர்தான் பாண்டியனின் அண்ணன்). அவரை பின் தொடர்ந்து செல்ல அவர் ஒரு ஆராய்ச்சியாளர் என்பதும் தன் ஆராய்ச்சிக்காக நிறைய கடன் வாங்கி இருப்பதும் கடன்காரர்களின் தொல்லையில் அவதிப்படுவதும் தெரிகிறது. ஒரு வேலைகாரனாக அந்த வீட்டில் சேர்கிறான் கபாலி. அந்த நேரத்தில் எஸ்டேட் வக்கீல் வந்து பாண்டியன் லெட்டர் விவகாரத்தை சொல்கிறார். பாண்டியனாக எஸ்டேட் சென்றால் முழு சொத்தையும் அனுபவிக்கலாம் என்று திட்டம் போடும் சங்கரின் மனைவி தன் கணவனை பாண்டியனாக மாறும்படி வலியுறுத்துகிறாள். மனைவி சொல்லை தட்டாத சங்கர் அதற்கு ஒப்பு கொள்கிறார். வக்கீல் சொல்வதை ஒட்டு கேட்ட கபாலி மருதுவை பாண்டியனாக்கி அனுப்ப முடிவு செய்கிறான். இதற்கிடையில் சங்கர் வீட்டிற்க்கு வரும் கீதா, வசந்தி, ரவி எல்லோரும் வேஷம் மாறி நிற்கும் சங்கரை பாண்டியன் என்று நினைத்து கொள்கிறார்கள். கீதா தன் கணவன் என்று நெருங்கி பழக சங்கருக்கு தர்ம சங்கடம் என்றால் அவரது மனைவிக்கு அளவிட முடியாத ஆத்திரம்.
மீனவர்களால் காப்பாற்ற படும் பாண்டியன் வக்கீலை வந்து சந்திக்க கீதா உயிருடன் இருப்பது தெரிந்து அவளை சந்திக்க தன் அண்ணன் வீட்டிற்க்கு செல்ல அங்கே உச்ச கட்ட குழப்பம். பாண்டியனை சுடும் கபாலியின் துப்பாக்கி குண்டிற்கு மருது இரையாக, அதை பார்த்து கபாலி தன்னை தானே சுட்டுக்கொண்டு சாக, சங்கர் பாண்டியன் குடும்பங்கள் ஒன்றாகின்றன.
(தொடரும்)
பலே பாண்டியா - Part II
பலே பாண்டியாவை பொறுத்தவரை நடிகர்திலகம் மற்றும் ராதா இருவரின் வேடங்களுக்கு பொருத்தமாக ஒரு திரைக்கதை உருவாக்கபட்டது என்றே சொல்ல வேண்டும். நடிகர் திலகம் அமெரிக்கா செல்வதற்கு முன்னால் படத்தை முடிக்க வேண்டும் என்பதால் லாஜிக் எல்லாம் பார்க்காமல் திரைக்கதை எழுதப்பட்டது.. ஒரே உருவமுடைய இரண்டு பேர் இடம் மாறும் போது ஏற்படும் குழப்பங்களை வைத்து நிறைய படங்கள் வந்திருக்கின்றன என்றாலும் இது ஆள் மாறாட்டம் செய்ய முயற்சிக்கும் ஒருவனது கதையை சொல்லியது.
நடிப்பை பொறுத்தவரை முதல் மார்க் பாண்டியனுக்குதான். அந்த வெகுளியான கதாபாத்திரத்தை வெகு இயல்பாக செய்திருப்பார். முதல் காட்சியில் தன்னை காப்பாற்ற வரும் கபாலியிடமிருந்து பேசுவதில் ஆரம்பித்து (" Binocular சார் ") கடைசி வரை அதே momentum maintain ஆகும் கபாலியின் வீட்டை பார்த்து மலைத்து போய் கமெண்ட் அடிப்பது( இது வீடா சார்? அரண்மனை. ஆனால் அநியாயம் சார். அவனவன் இருக்க இடம் இல்லாம இருக்கிறான். இங்கே நூறு பேர் தாராளமாக இருக்க கூடிய இடத்திலே நீங்க தனி ஆளா இருக்கீங்க.") . தேவிகாவின் வீட்டுக்கு போய் பாண்ட் ஷர்ட் போட்டிருக்கும் அவரை ஆண் என்று நினைத்து பேசுவது.( "நீங்க நல்ல பேசுறீங்க. உங்க தங்கச்சி தான் எரிஞ்சு விழறாங்க") , உண்மை தெரிந்தவுடன் அசடு வழிவது எல்லாமே அக்மார்க் NT முத்திரை. அது போல் கபாலியின் சுய ரூபம் தெரியாமல் அன்பாக இருப்பது, வளர்ப்பு தங்கை மேல் வைக்கும் பாசம், அவள் ரவியைதான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதம் பிடிக்கும்போது கெஞ்சாத குறையாக பேசுவது( "வசந்தி, இவனை நீ உண்மையிலே விரும்பிறியா ?" அதற்கு ஆமாம் என்று வசந்தி சொல்ல " கெடுத்துட்டான் கெடுத்துட்டான் " என்று புலம்புவது, மறுபடியும் "அம்மாடி! உண்மையிலே கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைபடுறியா" அதற்கும் ஆமாம் என்று பதில் வர "ரொம்ப கெடுத்துட்டான்" என்று முனுமுனுப்பது) இவை எல்லாமே கிளாஸ். இந்த படத்தில் உணர்ச்சிவசப்படும் கட்டங்கள் குறைவு என்றாலும் வளர்ப்பு தந்தை இறந்து விட்டார் என்று தெரிந்ததும் வசனங்கள் இல்லாமல் சட்டென்று மாறும் முக பாவம்,அவரால் மட்டுமே முடியும்.
பாண்டியன் characterodu ஒப்பிடும் போது மருதுவிற்கு சின்ன ரோல்தான். ஆனால் அந்த லுங்கி கட்டிக்கொண்டு பீடியை உதட்டில் அப்படியும் இப்படியும் உருட்டிக்கொண்டு (45 வருடங்களுக்கு முன்பே) வருவது அவரது ஸ்டைல் முத்திரை. ஒரு கதாபாத்திரத்தை முழுமையாக புரிந்து கொண்டு நடிப்பவர் நடிகர் திலகம் என்பதற்கு ஒரு உதாரணம் மருது, பாண்டியனாக வேஷமிடும் போதும் அணிந்திருக்கும் பாண்டை லுங்கி போல மடக்க முயற்சிப்பது. வசனங்கள் குறைவு என்கின்றபோதும் மருது வரும் காட்சிகளில் எல்லாம் நடையிலும் உடல் அசைவிலும் ஸ்டைல் காட்டியிருப்பார்.
கடைசி அரை மணி நேரம் மட்டுமே வரும் கேரக்டர் ஷங்கர். ஆனால் கடன் தொல்லையால் அவதிப்படும் அந்த Hen pecked கேரக்டர்-ஐ வேறு யாராவது இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. ஒவ்வொரு வார்த்தையையும் இரண்டு முறை சொல்வது( நடிக்க சொல்லும் மனைவியிடம் "It is not correct"),மனைவியின் முகத்தை பார்த்து விட்டு உடனே " நீ சொல்லி நான் எதை செய்யாமல் இருந்திருக்கேன்?" என்று அடங்கி போவது, தம்பி மனைவி தன்னை தம்பி என்று நினைத்து கொண்டு நெருங்கி வரும் போது ஒரு பக்கம் தர்ம சங்கடம் மறு பக்கம் தன் மனைவியின் முகத்தில் வெடிக்கும் கோபத்தை பார்த்து விட்டு நான் என்ன செய்வது என்பது போல் முகத்தை வைத்து கொள்வது, இப்படி சின்ன வாய்ப்பிலும் சிக்ஸர் அடிப்பார். ஒரே ஆள் எப்படி மூன்று வேடங்களையும் வித்யாசமாக செய்ய முடியும் என்பதற்கு காட்சிகளை அடுக்கி கொண்டே போகலாம்.
நடிகவேளின் திரைப்பட வரலாற்றில் இந்த படத்திற்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. இரண்டு வேடங்களையும் அழகாக கையாண்டிருப்பார்.. கபாலி அவருக்கே உரித்தான நக்கல் கேலி நையாண்டி கேரக்டர். ( வீட்டை பற்றி பேசும் பாண்டியனிடம் " பங்களவிற்கு வந்து politics பேச கூடாது" ). சமயம் கிடைக்கும் போதெல்லாம் தன் ஸ்டைல் வெளிப்படுத்த தயங்க மாட்டார்.. அமிர்தலிங்கம் பிள்ளையாக அடக்கி வாசித்திருப்பார். இரண்டு ராதாக்களும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சி சுவையாக இருக்கும். (நிலை கண்ணாடிக்கு பதிலாக இன்னொரு ராதாவே நிற்பது).
கீதாவாக தேவிகா அழகு என்றால் ரவியாக பாலாஜி smart and handsome. வசந்தியாக மாலினி, ஷங்கரின் மனைவியாக (குமுதம்?) சந்தியா (JJ -வின் தாய்) கொடுத்ததை நன்றாக செய்திருப்பார்கள்.
பந்துலுவை பொறுத்தவரை பெரிதாக செய்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும் குழப்பமில்லாமல் கொண்டு போயிருப்பார். மா.ரா வின் வசனங்களும் Down to Earth.. படத்தின் இன்னொரு மிக பெரிய பலம் மெல்லிசை மன்னர்கள் - கவியரசு கூட்டணியில் வந்த பாடல்கள்.
1. வாழ நினைத்தால் வாழலாம் - ஆரம்பத்தில் வரும் இந்த பாடல் climax-irkku முன்பும் வரும். அப்போது பாடலின் பின்னணி இசை சிறிது வேறுபடும்.
2. நான் என்ன சொல்லிவிட்டேன் – TMS பாடல். NT - தேவிகா நடிக்க அழகாக எடுத்திருப்பார்கள்.
3. யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே - NT சிறையில் இருக்கும் போது பாடுவதாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த பாடலின் பின்னணிக்கு ஒரு சம்பவத்தை சொல்வார்கள். இந்த படம் வெளி வந்த காலத்தில் (1962) தமிழகத்திற்கு சட்டமன்ற பொது தேர்தல் வந்தது. திமுக தலைவர் அண்ணாதுரை காஞ்சிபுரம் தொகுதியில் தோற்று போனார். இதற்கு முன்னரே திமுகவை விட்டு வெளியேறிய கண்ணதாசன் தமிழ் தேசிய கட்சி என்ற அமைப்பை நிறுவி இருந்த போதிலும், அண்ணாதுரையின் தோல்வி அவரை பாதித்ததாகவும் அதனால் இந்த பாடல் எழுதினார் என்றும் சொல்லுவார்கள். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.[இதை போலவே தெய்வ மகன் படத்தில் வரும் தெய்வமே பாடலின் போது "முத்து போல என் தம்பி வந்தவுடன் முத்தம் சிந்த ஓடினேன்! அட என் ராச என் தம்பி வாடா" என்று TMS குரலில் பாடி விட்டு திடீரென்று NT தன் குரலில் அண்ணா! அண்ணா! என்று மூன்று தடவை சொல்லுவார். Top Angle Shot-aga எடுத்திருப்பார்கள். அது வெளி வந்த போது (1969 செப்டம்பர்) அண்ணாதுரை இறந்து விட்டார். (1969 Feb). NT- அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்தியதாக சொல்லுவார்கள். இதுவும் உறுதி செய்யப்படாத தகவல்]
4. நீயே என்றும் உனக்கு நிகரானவன் - ரொம்ப பிரபலமான பாடல். மாமா மாபிள்ளை பாடல் என்றும் சொல்லுவார்கள்.
5. ஆதி மனிதன் காதலுக்கு பின் - PBS, ஜமுனா ராணி - பாலாஜி, மாலினி ஜோடி பாடல்.
6. அத்திக்காய் காய் காய் – TMS, PS, PBS, ஜமுனா ராணி.
இந்த பாடலை பற்றி சொல்லவே வேண்டாம். என்றும் பசுமையாக இருக்கும் பாடல்.
மொத்தத்தில் சிரித்து ரசிக்க ஒரு படம்.
Recap of Saradha Madam old post
அன்னமிட்ட கைகளுக்கு
"அன்னமிட்ட கைகளுக்கு...." (இரு மலர்கள்)
'மெல்லிசை மன்னரின்' இனிய இசையில் விளைந்த எத்தனையோ அற்புதப் படைப்புகளில் ஒன்றுதான் "இரு மலர்கள்". பாடல்கள் அத்தனையும் இனிமை. அவற்றில் அதிகம் பேசப்படாத ஒன்றைத்தான் இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
உயிருக்குயிராய் காதலித்த காதலி, காரணமே சொல்லாமல் காணாமல் போய் விட, தனக்காகவே காத்திருந்தவளை மணமுடித்து அமைதியாய் வாழ்ந்திருந்த நேரத்தில், பழைய காதலி மீண்டும் தோன்றுகிறாள். அதுவும் தன்னுடைய மகளுக்கே ஆசிரியையாக. தர்ம சங்கடத்தில் கதாநாயகனும் அவனது முன்னாள் காதலியும்.
திரும்பி நிற்பவள் முன்னாள் காதலி என்ற நினைப்பில் பழைய கதைகளை கணவன் கொட்டிவிட, கேட்டுக்கொண்டிருந்த மனைவிக்கு மாபெரும் அதிர்ச்சி, கணவனின் மனதில் இப்படி ஒரு காயமா என்று. முடிவு...?. கணவனின் நிம்மதியையே பெரிதாக நினைத்த அந்த பேதைப்பெண், (உண்மையில் கணவனின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல்) அவர்களுக்கு இடைஞ்சலாக இல்லாமல் விலகிப்போகும் முடிவெடுக்கிறாள்.
ஆனால் குழந்தை..?. அவளைப்பிரிய மனமின்றி ஆனாலும் வேறு வழியின்றி அவளைத் தூங்க வைத்து விட்டு வீட்டை விட்டு சென்று விடும் முடிவில் தான் இந்த அருமையான பாடல்.
கதாநாயகனாக 'நடிகர் திலகம்', முன்னாள் காதலியாக 'நாட்டியப்பேரொளி', மனைவியாக 'புன்னகை அரசி'. போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள். மெல்லிசை மன்னரின் இனிய இசையில் வாலியின் பாடல்களில் சப்தமெல்லாம் பூப்பூத்தது.
இப்படத்தின் மற்ற பாடல்களான 'மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்' மற்றும் 'மன்னிக்க வேண்டுகிறேன்' ஆகிய பாடல்கள் களத்தின் ஜாம்பவான்களால் ஏற்கெனவே அருமையாக அலசப்பட்டு விட்டது.
'இசையரசி' பி.சுசீலா தனக்குப்போட்டியின்றி தன்னாட்சி செய்து வந்த காலம் அது. எல்.ஆர்.ஈஸ்வரி என்ற அருமையான பாடகி, கவர்ச்சிப்பாடல்களுக்கும் இரண்டாம் நிலை கதாநாயகிகளுக்கும் மட்டுமே என்ற, தமிழ்த்திரைப்படத்தின் (கொடுமையான) எழுதப்படாத விதியினால் ஒதுக்கி வைக்கப்பட, இன்னொரு இசைக்குயில் எஸ்.ஜானகி எப்போதாவது அத்தி பூத்தாற்போல் மட்டுமே பாட அழைக்கப்பட, ஜமுனாராணியும் ஜிக்கியும் முழுதுமாக ஓரம் கட்டப்பட்டிருக்க, வாணி ஜெயராம் அப்போது அறிமுகமே ஆகாமல் இருக்க....... எந்தப்பக்கம் திரும்பினாலும் சுசீலா அம்மாவின் குரலே ஒலித்துக்கொண்டிருக்க, அவரது எல்லாப்பாடல்களுமே நல்லதாக இருந்ததால், நல்லவற்றில் மிக நல்லதாக தேர்ந்தெடுத்து வானொலிகள் ஒலிபரப்ப.......
.............நல்ல பாடலான இப்பாடல் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது.
அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே
உள்ளமில்லை மகளே
தாய்வழி நீ நடக்க தந்தை வழி பேரெடுக்க
நான் அதைப்பார்த்திருக்க நேரமில்லை மகளே
நான் அதைப்பார்த்திருக்க நேரமில்லை மகளே
நேரமில்லை மகளே
கைவிளக்கை ஏற்றிவைத்தேன் கோயிலுக்காக
என் தெய்வத்தின்மேல் எனக்கிருக்கும் காதலுக்காக
வாழ்ந்திருந்தேன் அன்பு என்றும் வளர்வதற்காக
ஒருதாய் வருவாள் மகளே உன் காவலுக்காக
தாய் வருவாள் மகளே உன் காவலுக்காக
அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே
உள்ளமில்லை மகளே
தாய்க்குலத்தின் மேன்மையெல்லாம் நீசொல்ல வேண்டும்
என் தலைமகளே உன் பெருமை ஊர்சொல்ல வேண்டும்
நல்லவர்கள் வாழ்த்துரைக்கும் நாள் வரவேண்டும்
அதை கண்குளிர காண்பதற்கு நான் வர வேண்டும்
கண்குளிர காண்பதற்கு நான் வர வேண்டும் .
அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே
உள்ளமில்லை மகளே
தான் பெற்று வளர்த்த குழந்தையைப் பிரிந்து போகிறோமே என்ற ஏக்கம் நெஞ்சைப் பிழிந்தெடுக்க சோகமே உருவாய் கே.ஆர்.விஜயா (சொல்லணுமா, அவருக்கு இந்த மாதிரி ரோல்கள் அல்வா சாப்பிடுவது போல), தன்னுடைய அம்மா எதைப்பற்றிப் பாடுகிறாள் என்று புரியாமல் கட்டிலில் கொட்டக் கொட்ட முழித்துக்கொண்டு விழியோரங்களில் கண்ணிருடன் ரோஜாரமணி. (இது குறித்து ரோஜாரமணியுடன் (தற்போது நடிகர் தருணின் அம்மா) சமீபத்தில் 'காமராஜர் அரங்கில்' நான் உரையாடியதை அடுத்த முறை விவரமாகத் தருகிறேன்).
எப்போது பார்த்தாலும் கண்களில் நீரை வரவழைக்கும் பாடல் இது. எனக்குப்பிடித்த சுசீலா அம்மாவின் மிக நீண்ட பாடல் பட்டியலில் இதுவும் உண்டு.
Enjoy audio here (song no: 61)
http://psusheela.org/tam/audio.php?offset=60&ord=song
Recap of Saradha Madam Post
சிவாஜி பற்றி ஸ்ரீதர்
எனது பதிவுகளைப் படித்து, தங்களது மேலான பின்னூட்டங்களையும், பதிவுகள் சம்மந்தமான கூடுதல் விவரங்களையும் பதித்து வரும் அனைத்து நல் இதயங்களுக்கும் என் நன்றி.
(முன்பு இதே தளத்தில் பதிக்கப்பட்டு பின்னர் சில காரணங்களுக்காக நீக்கப்பட்டிருந்த இப்பதிவு மீண்டும் இடம் பெறுகிறது. ஏற்கெனவே படித்தவர்களுக்கு பழையது, படிக்காதோருக்கு புதியது)
தமிழ் சினிமா இதழ்களில் முதன்மை வாய்ந்த 'பொம்மை' மாத இதழில் திரைப்பட இயக்குனர் ஸ்ரீதர் முன்னொருமுறை தன் மனம் திறந்த கருத்துக்களைக் கூறியிருந்தார். அவற்றுள் நடிகர்திலகம் சிவாஜி அவர்களைப்பற்றி தெரிவித்திருந்த கருத்துக்கள் ம்னதைக் கவர்ந்ததால், அப்பகுதி மட்டும் இங்கு இடம் பெறுகிறது. அதே கட்டுரையில் இயக்குனர் ஸ்ரீதர் தனது 'தேன் நிலவு' திரைப்படத்தை காஷ்மீரில் படமாக்க பட்ட கஷ்ட்டங்கள் பற்றிக்கூறியிருந்தது அடுத்த பதிவாக இடம் பெறுகிறது.
”எனக்கும் தேவசேனாவுக்கும் திருமணம் நடந்தபோது அதில் சிவாஜி கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. அதற்குக் காரணம் அப்போது (1963) அவர் 'கர்ணன்' படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூரில் இருந்தார். ஆனாலும் தன் குடும்பத்தினர் அனைவரையும் கலந்துகொள்ளச்செய்தார். திருமணச்சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது ஜெய்ப்பூரில் இருந்து ட்ரங்கால், சிவாஜி பேசுகிறார் என்றார்கள். உடனே போனை வாங்கிப்பேசினேன். மறுமுனையில் சிவாஜி எனக்கு மனதார வாழ்த்துச்சொன்னார். அத்துடன் 'நம்ம வீட்டிலிருந்து எல்லோரையும் வரச்சொல்லியிருந்தேனே, வந்திருக்காங்களா?' என்றுகேட்டார். சற்று முன்னர்தான் வி.சி.ஷண்முகம் எனக்கு கைகுலுக்கி வாழ்த்துச் சொல்லியிருந்தது நினைவுக்கு வர, 'ஆமாண்ணே, வந்திருக்காங்க' என்றேன். 'உன் கல்யாணத்தில் கலந்துகொள்ள கமலாவுக்கும் ரொம்ப ஆசை. ஆனா நான் இங்கே அழைச்சிக்கிட்டு வந்திட்டேனே' என்றார். சில நாள் கழித்து அவர் ஜெய்ப்பூரில் இருந்து திரும்பி வந்ததும், அவரது இல்லத்தில் எங்கள் இருவரையும் அழைத்து பெரிய விருந்து கொடுத்தார். புறப்படும்போது கமலா அம்மா ஒரு தங்கச்சங்கிலியை என் மனைவிக்கு அணிவித்தபோது, சிவாஜி 'இதோ பாரும்மா, இதுவும் உனக்கு ஒரு மாமியார் வீடுதான். நீ எப்போ வேணும்னாலும் வரலாம் போகலாம்' என்றவர் என்னைப்பார்த்து, 'இதோ பாரு, இதுவரைக்கும் சதா ஸ்டுடியோ விலேயும் சித்ராலயா ஆஃபீஸ்லேயும் பழியா கிடப்பே. இனிமேலாவது ராத்திரியில் நேரத்கோடு வீட்டுக்கு வந்துசேர். அதுமட்டுமில்லே, காலேஜில படிச்சிக்கிட்டு இருந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டே. அதுக்காக அந்தப்பொண்ணோட படிப்பை நிறுத்திடாதே. தொடர்ந்து படிக்கட்டும்' என்று அட்வைஸ் பண்ணினார். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நல்லா படிக்கணும்ங்கிறது அவர் எண்ணம். அந்த நேரத்தில் அவரோடு விடிவெள்ளி படம் பண்ணியபிறகு படம் எதுவும் பண்ணவில்லை. மற்றவர்களோடுதான் படம் பண்ணிக்கொண்டிருந்தேன்.
('காதலிக்க நேரமில்லை... காதலிப்பார் யாருமில்லை....')
'காதலிக்க நேரமில்லை' படம் பார்த்துவிட்டு சிவாஜி உடனே போன் செய்து பாராட்டினார். 'உன் பேரைச் சொன்னாலே 'அழுமூஞ்சி டைரக்டர்' என்று சொன்னவர்கள் முகத்தில் கரி பூசுகிறமாதிரி படத்தை அருமையா எடுத்திருக்கே. எனக்கும் கூட அது மாதிரி ஒரு பேர் இருக்கு. அதை உடைக்கிற மாதிரி என்னையும் வச்சு ஒரு காமெடி படம் பண்ணேன். சண்முகம் கிட்டே சொல்லி டேட்ஸ் தரச்சொல்றேன்' என்றார். 'அண்ணே, 'காலமெல்லாம் காத்திருப்பேன்' என்ற ஒரு காமெடி ஸ்க்ரிப்ட் யோசனை பண்ணி வச்சிருக்கேன். சீக்கிரமே நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்வோம்' என்றேன். ஆனால் இடையில் வெண்ணிற ஆடையில் நான் பிஸியாக இருந்ததால், உடனடியாக அவரோடு படம் பண்ண முடியவில்லை. இடையிடையே செட்டில் சந்திக்கும் போதெல்லாம் அதைப்பற்றிக் கேட்பார். 'அண்ணே அந்த ஸ்க்ரிப்டை உங்களுக்காக ஒதுக்கி வச்சிட்டேன். பண்ணினால் அதை உங்கள வச்சுதான் பண்ணுவேன். இப்போ நாம ரெண்டுபேருமே பிஸி. கொஞ்சம் பொறுங்கள் பண்ணிடுவோம்' என்றேன். சொன்ன மாதிரியே அந்தக்கதையை அவரை வச்சு பண்ணினேன். கோவை செழியன்தான் தயாரிப்பாளர். 'காலமெல்லாம் காத்திருப்பேன்' என்ற அந்தக்கதைதான் 'ஊட்டி வரை உறவு' என்ற பெயரோடு படமாக வெளியாகி சக்கைபோடு போட்டது.
('பூமாலையில்... ஓர் மல்லிகை...')
சில பல காரணங்களால் நான் அவரை வைத்து தயாரித்து இயக்கி வந்த ஹீரோ 72' படம் வெளியாவது தள்ளிப் போய்க்கொண்டிருந்தபோதிலும், (பின்னாளில் இப்படம் 'வைர நெஞ்சம்' என்ற பெயர் மாற்றப்பட்டு வெளியானது) எங்களுக்கிடையில் இருந்த நட்பில் விரிசல் விழுந்ததில்லை. 'உரிமைக்குரல்' பட பூஜைக்காக சிவாஜியை சென்று அழைத்தேன். 'பூஜையை சத்யா ஸ்டுடியோவில் வச்சிருக்கே. அண்ணன் (MGR) ஸ்டுடியோ ஆரம்பிச்சு இதுவரைக்கும் ஒருநாள் கூட என்னை அங்கே கூப்பிட்டதில்லை. அப்படியிருக்க இப்போ நான் எப்படி வரமுடியும் சொல்லு. ஆனா, வராவிட்டாலும் என்னுடைய வாழ்த்துக்கள் உனக்கு நிச்சயம் உண்டு' என்று வாழ்த்தினார்”.
இவ்வாறு இயக்குனர் ஸ்ரீதர் கூறியிருந்தார். (என்ன காரணத்தாலோ நடிகர்திலகத்தை வைத்து அவர் இயக்கிய நெஞ்சிருக்கும் வரை, சிவந்த மண் படங்களைப்பற்றி எதுவும் கூறவில்லை. சொல்ல மறந்துவிட்டாரா அல்லது வேண்டுமென்றே தவிர்த்து விட்டாரா என்பது தெரியவில்லை).
வாசு(சித்தூர்),
எங்காத்துகாரரும் கச்சேரிக்கு போறார் என்ற ரீதியிலேயே திரிக்கு வந்து போய் கொண்டிருந்தால் எப்படி?ஒரே வீடியோ,cut paste ,re -cap என்று.
நான்,கார்த்திக்,முரளி,சாரதி ,வாசு(ஒரிஜினல்),ராகவேந்தர் போட்ட பதிவுகளை பார்த்து நமது எதிரணியினர் கூட ஓரளவு தேறி வருகிறார்கள். இங்கு ஸ்க்ரீன் பக்கத்தில் ஈ,,கொசு,எறும்புகள் ஒட்டியிருந்தாலும் ,எங்கள் பதிவுகளை பார்த்து மூன்றறிவாவது பெற்றிருக்குமே?
நீங்கள் தயவு செய்து ,ஏதாவது சொந்தமாக எழுதுங்கள். எப்படியிருந்தாலும் ரசிக்க காத்திருக்கிறோம். உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்.ஆவணங்களாவது ,புகைபடங்களாவது,வாட்டர்மார்க் இல்லாததாக போடுங்களேன்,ப்ளீஸ்.
நாங்களே முகமற்று இருக்கும் போது ஞான ஒளி போஸ் வேறு!!!???:-D
Gopal,
Moved your post to Current Affairs section where there is a thread called Women and I feel what you had written would be appropriate there and not here.
Also fail to understand why such unrelated topics are being brought here to NT thread when there is space for anything under the sun is available in this Hub!
Regards
எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்திருப்பினும் திராவிட இயக்கங்களால் 'பேரறிஞர்' என்று பெருமைப்படுத்தப்பட்ட 'அண்ணா' என்று பேரன்பின்
அடையாளமிடப்பட்ட பெருந்தகையாளர் கட்சிகள் காட்சிகள் மாறினாலும் 'எங்கிருந்தாலும் வாழ்க' என்று எம் நடிகவேந்தரை மனந்திறந்து வாழ்த்திய 'மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்' கொள்கைப் பண்பாளர் திரு அண்ணாதுரை அவர்களின் பிறந்த தினத்தில் (SEP 15) அன்னாரை நினைவுகூர்வோம்
https://www.youtube.com/watch?v=kNskMory0aE
மூக்குப்பொடி போடுகின்ற மூளை உள்ள மனிதருக்கு (அறிஞர் அண்ணாவை சிலாகிக்கிறார் நடிகர்திலகம்) வேண்டும் இந்த கைக்குட்டை....
https://www.youtube.com/watch?v=klpiG8llt5k
http://i1369.photobucket.com/albums/...ps73cfb1a5.jpg
கலைக்கடவுள் சிவாஜி என் தெய்வம்.
நடிகர் திலகம் ரசிகர்கள் பங்குபெற்ற நீயா நானா அடுத்தவாரம் 21-ம் தியதி ஒளிபரப்பாகிறது
அண்ணா -
http://i58.tinypic.com/r1lw0l.jpg[/
திராவிட இயக்கங்களின் அறிவு முகம். பேராசை கொண்ட பாமரர்களை கட்டுக்குள் வைத்து ,நியாயமான ஆட்சியை தர முயன்ற வெளிப்படையான ,நல்ல நிர்வாகி.
ஆட்சி கைக்கு வந்தால்தான் ,நினைத்ததை சாதிக்கலாம்,என்று பெரியாரிடம் முரண் பட்டு வெளியேறியது, ஆட்சிக்கு வந்ததும் அவர் கனவுகளை நிறைவேற்ற தலை பட்டது ,என்று நான் மதிக்கும் தலைவர்களில் ஒருவர்.
ஒரு காலகட்டத்தில்,விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேச மூர்த்தி என்ற பாய்ஸ் கம்பெனி சிறுவனை அரவணைத்து,ஆதரவு தந்து, சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் சிவாஜியாக்கி,"பெரியாரால்", சிவாஜி பட்டம் பெற்று சிவாஜி கணேசன் ஆகி, பராசக்தியில் தடங்கல்கள் வந்த போது , கணேசனுக்கு தோள் கொடுத்து நின்ற "God "father . சிவாஜிக்கு இந்திய "Marlon Brando "பட்டம் வழங்கியவர். எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தி இறுதி வரை சிவாஜி ரசிகராக தொடர்ந்தவர்.(ஒரு படம் விட்டதில்லையாம்).125 வது பட விழாவில் ,அவர் சிவாஜியை பற்றி பேசியது பொன்னெழுத்துக்களில் பொரிக்க பட வேண்டியவை.
நடிகர்திலகம்,படிப்பறிவும்,கலையறிவும் ,இலக்கிய அறிவும்,மொழி பற்றும்,நன்றியுணர்ச்சியும் அற்ற காங்கிரஸ் கும்பலுடன் சேராமல்,neutral ஆகவே இருந்து எல்லோருடனும் ,சம நட்பு பேணி,நடிகராகவே தொடர்ந்திருக்கலாம்.
எதிர் அணியில் நின்ற போதும் ,தில்லானா மோகனாம்பாள் படத்தில் "நலந்தானா "பாட்டிலும், தெய்வ மகன் படத்தில் தெய்வமே பாட்டில் "அண்ணா"என்று தலை வணங்கி அஞ்சலி செலுத்தி ,தன் குருவை, நடிகர்திலகம் சிறப்பித்தார்.
இன்று அண்ணாவின் பிறந்த நாள். அவரை வாஞ்சையுடன் நினைவு கூர்வதில் பெருமையடைகிறோம்.
வினோத்,
எங்களிடமிருந்து கற்றாலும்(நீங்களே சொன்ன படி),குரூக்களை மிஞ்சிய சிஷ்யராகி (எண்ணிக்கையில் மட்டுமே.தரத்தை குறிப்பிடவில்லை) ,10000 பதிவுகள் இட்டதற்கு வாழ்த்துக்கள். இந்த உழைப்பையும், விசுவாசத்தையும் , இன்னும் கொஞ்சம் படிப்பதற்கோ,வேலையிலோ காட்டியிருந்தால் ,உங்களுக்கும் ,குடும்பத்துக்கும்,சமூகத்திற்கும் நற்பயன் தந்திருக்குமே,என்று பெருமூச்சு விடாமல் இருக்க முடியவில்லை. இருந்தாலும் நண்பராக இருப்பதால் ,வருந்தாமல் இருக்கவும் முடியவில்லை.வாழ்த்துக்கள்.
லோகநாதன் சார், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
நம் ஆட்கள் ,இன்னும் உழைக்க கற்க வேண்டும்.இவர்களே ,இவ்வளவு பதிவிட்டால் (பொம்மை படங்கள் தான் என்றாலும்),நம் நடிகர்திலகத்தை பற்றி பதிவிட லட்சம் விஷயங்கள் உள்ளனவே? வாசு,கார்த்திக்,கிருஷ்ணா,ராகவேந்தர் இவர்களுக்கு மீண்டும் விண்ணப்பம்.வாருங்கள்.பங்களிப்பை தொடருங்கள்.
http://4.bp.blogspot.com/_erb_nVDbrY...seenivasan.jpg
நண்பர் கோபால் அவர்களுக்கு
அண்ணா பற்றிய கருத்துகள் அருமை
ஆனாலும் நடிகர் திலகம் 1957 கால கட்டத்திற்கு பின் தான் மிக பெரிய வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார்.
ஒரு சிறந்த நடிகனுக்கு அரசியலில் நடிக்கத் தெரியவில்லையே என்பது வேதனை தான்
ஒருவரை வெளியே அனுப்ப முடிவு செய்து விட்டால்அவர்களாகவே வெளியேறும் படி செய்வதில் சில கட்சிகளுக்கு நிகர் எதுவுமே கிடையாது.
சிவாஜி திருப்பதிக்கு சென்றதை அறிந்த பத்திரிகையினர் நாத்திகரான சிவாஜி ஆத்திகராக மாறினார் என்று செய்தி வெளியிட்டனர். திருப்பதியிலிருந்து சென்னை திரும்பும் வழிகளில் சுவரெங்கும் திருப்பதி கணேசா கோவிந்தா..கோவிந்தா என்று எழுதியிருந்தனர். இதை கவனித்த சிவாஜி மனம் வேதனை அடைந்தார். மேலும், சிவாஜியின் போஸ்டர்களில் சாணி அடித்த செய்தியும் அவரின் கவனத்திற்கு வந்தது. கடுப்பாகிவிட்டார்.
இனிமேலும், பொறுமையாக இருப்பதில் அர்த்தமில்லை என்று முடிவுசெய்து உடனே காமராஜரை சந்தித்து தன்னை காங்கிரசில் இணைத்துக்கொண்டார். தி.மு.க.வினர்தான் என்னை தூக்கிக்கொண்டு போய் காங்கிரசில் போட்டனர் என்று பேட்டியும் அளித்தார்.
It was a memorable evening at Russian Cutural Centre for the screening of NT's Magnum Opus Puthiya Paravai where the funcation was graced by Mr G Ramkumar. With the fine intro by Mr Murali and the subsequent speech by Mr GR about PP where he had shared an information that the climax scene been reshooted again due to damage of the film and the shooting took place every night for 3 hrs and ended after 12 days.
Everyone thought the super climax which was reshooted second time imagine the first one and he had also narrated the same situation took place for Annan Oru Kovil. He had also shared an info that Sigaram Thodu surpass the collection of Arima Nambi and Annai Illam specifically requested Mr Dhananjeyan of UTV Film to release the film on 12.09 since the release the date of PP also falls on that date.
Wonderful evening, tremendous response and it is a record of sort in terms viewers as the auditorium filled to the capacity. All the hubbers graced the function.
Regards
சில நடிகர்கள் அரசியல் இல்லையென்றால் பூஜ்யமே .படங்களின் ஓட்டம் கூட அரசியல் சார்ந்தே. ஆனால் நடிகர்திலகம் purple patch என்று சொல்ல படும் 1958- 1965 ,எந்த அரசியல் இயக்கத்திலும் இணையவில்லை. சார்ந்து நிற்கவில்லை. காமராஜரிடம் எனக்கு தலைவர் என்ற ரீதியில் மரியாதை உண்டு.ஆனாலும் ,இவர்களுக்கு விசுவாசமாக கைகாசு போட்டு உழைத்து ,உடலையும் கெடுத்து கொண்ட நடிப்பு தெய்வத்திற்கு ,நன்றியை எப்படி காட்டினார்கள்? காமராஜ் ,இவரை அடையாளம் காட்டி தனி அங்கீகாரம் கொடுத்தாரா?வளர்த்த கடா மூப்பனார் இவருக்கு செய்த பதில் மரியாதை என்ன? காமராஜ் படத்தை,சிவாஜி இல்லாமல் எடுத்திருக்கும் இந்த கும்பலுடன் இணைந்ததால் கண்ட பலன் என்ன?
அண்ணா அறிவாலயத்தில்,நன்றி மறக்காமல் சிவாஜி பற்றிய ஆவணங்களை வைத்தனர். சிலை வைத்தனர். தி.மு.க ,உழைப்பவருக்கு தரும் அங்கீகாரம் காங்கிரஸ் தந்ததேயில்லை.
அதனால்தான் சொல்கிறேன், அரசியல் என்ற எமனிடம் ,நடிகர்திலகம் நெருங்கியே இருக்க வேண்டாம். இந்தியாவில் செல்லுபடியாகும் தலைமை குணங்களை அவர் கொண்டிருக்கவும் இல்லை.
Recap of Mr Partha Sarathy old Post
நடிகர் திலகமும் அவர் நடித்த படங்கள் பிற மொழிகளில் (தொடர்ச்சி...)
8. ஞான ஒளி (1972) / தேவதா (1980) - ஹிந்தி
இந்தப் படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான (எனக்கு மட்டுமா?) நடிகர் திலகத்தின் பத்து படங்களுள் ஒன்று.
வியட்நாம் வீடு சுந்தரத்தின் நாடகம், மேஜரால் நடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது, இந்த நாடகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, ஒரு நாள் நடிகர் திலகம் அதைப் பார்க்க விரும்பி, பார்த்த மாத்திரத்திலேயே, இதை படமாக எடுக்க வேண்டும் என்றும் மேஜர் நடித்த பாத்திரத்தைத் தான் ஏற்க விரும்புவதாகவும் மேஜரிடம் கூறியிருக்கிறார். இதற்குப் பிறகு, அந்த “அந்தோணி” கதாபாத்திரத்தை இன்னும் மெருகேற்றவும், ஒரு இடத்தில் கூட மேஜரின் சாயல் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், திரும்பத் திரும்ப, தொடர்ந்து அந்த நாடகத்தைப் பார்க்கச் சென்றாராம். மேஜர் ரொம்பவே தர்மசங்கடத்துக்குள்ளாகி விட்டாராம். இது படமாக்கப் பட்டபோது, மேஜர் நடித்த அந்தோணி பாத்திரத்தை நடிகர் திலகமும், அவரது மாமா திரு. வீரராகவன் நடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் பாத்திரத்தில், மேஜரும் ஏற்று நடித்தார்கள்.
எனக்குத் தெரிந்து, நடிகர் திலகம் முதன் முதலில் படம் நெடுகிலும் ஒரு கிறித்தவராக நடித்த படம் இது தான். கிறித்தவர்கள் கடவுளை நோக்கி ஜெபம் செய்யும் முறையிலிருந்து அவர்கள் “ஆண்டவரே!” என்று அழைக்கும் முறை வரையிலும் அணு அணுவாக ஆராய்ந்து, அதற்குப் பின் தான் அந்த அந்தோணி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கத் துவங்கினார். எப்போதுமே, அவர் புதிதாக ஏற்கும் எந்தக் கதாபாத்திரத்தையும், அந்த முதல் முயற்சியிலேயே, முழு வெற்றியடைய வைத்து விடுவார் - மிகுந்த ஆராய்ச்சி செய்து, முனைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் கற்பனை வளத்துடன் ஒரு தேர்ந்த சிற்பி போல் செதுக்குவதால் -
முஸ்லீம் அன்பராய் ஏற்ற ரஹீம் பாத்திரம் (பாவ மன்னிப்பு)
கிறித்தவ அன்பராய் ஏற்ற அந்தோணி பாத்திரம் (ஞான ஒளி)
பிராம்மண சமூகத்து ப்ரெஸ்டிஜ் பத்மநாபன் பாத்திரம் (வியட்நாம் வீடு)
கடமை தவறாத காவல் துறை அதிகாரி எஸ்.பி. சௌத்ரி பாத்திரம் (தங்கப்பதக்கம்)
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நான் இதை சொல்லக் காரணம் - இதையே ஒரு சப்ஜெக்ட் ஆக வைத்து ஒரு புதிய கட்டுரையை ஏனைய அன்பர்களோ, ஏன் நானோ, எழுதத் துவங்கலாம்.
இந்தப் படம் திரு. பி. மாதவன் அவர்களின் சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் நிறைந்த திரைக்கதையால், கொஞ்சம்கூட தொய்வில்லாமல் செல்லும். இத்தனைக்கும் இந்தப் படம், பொழுதுபோக்கு அம்சங்கள் சொற்பமே நிறைந்த ஒரு கலைப்படம் போல் தான் இருக்கும். (படத்தின் ஆரம்பத்தில் வரும் நடிகர் திலகம் - விஜயநிர்மலா சம்பந்தப் பட்ட காதல் காட்சிகள் கலகலப்பாக இருக்கும். பிற்பாதியில் வரும் MRR வாசு / ISR போன்றோரின் மிகச்சில காட்சிகள் - கொஞ்சம் கேலிக் கூத்து தான்). பெரிய பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் தனியான காமெடி ட்ராக் இல்லாமல், உணர்ச்சி மிகுந்த சம்பவங்களையும் அதில் நடித்த நடிகர்களையும் மட்டுமே நம்பி, ஆனால் மிக வேகமாகவும் சுவாரஸ்யமாகவும் செல்லும். முக்கியமாக, நடிகர் திலகத்தின் அனாயாசமான, உணர்வுபூர்வமான, மற்றும் அலாதியான ஸ்டைலான நடிப்பாலும், அதற்கு ஈடு கொடுத்துச் சிறப்பாக செய்த மேஜரின் நடிப்பாலும், பி. மாதவனின் சாதுர்யமான இயக்கம் மற்றும் திரைக்கதையாலும், சாரதா, விகேயார் போன்ற கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பாலும், மெல்லிசை மாமன்னரின் அற்புதமான பின்னணி இசை (படத்தின் இரு வகையான தீம் ம்யூசிக் இடம் பெற்றிருக்கும். ஒன்று நடிகர் திலகத்தை ஒவ்வொரு முறையும் சோகம் கவ்வும்போது; மற்றொன்று, பின் பாதியில், அவரும் மேஜரும் சந்திக்கும்போதேல்லாம் வருவது; மற்றும் சிறந்த பாடல்களாலும் (குறிப்பாக, தேவனே என்னைப் பாருங்கள்) வசூல் சாதனை செய்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
பொதுவாக, பொழுதுபோக்கு அம்சங்கள் பெரிதாக இல்லாத படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறுவதில்லை. அதை பெரிய அளவில் முறியடித்து, தொடர்ந்து, நல்ல கருத்துச் செறிவுள்ள படங்களையும் கொடுத்து, அவைகளை வியாபார ரீதியாக பெரிய வெற்றிப்படங்களாக்கியதும் நடிகர் திலகம் மட்டும் தான். இதைத்தான் ஒருமுறை திரு. கமல் அவர்கள் இப்படிச் சொன்னார்.
நடிகர் திலகம் மட்டும் தான் ஒரே நேரத்தில் நடிகராகவும், மக்களைப் பெரிதும் கவர்ந்த நட்சத்திரமாகவும் மிக, மிக வெற்றிகரமாக இருந்தார். அந்தப் பாதையைத் தான் ரொம்ப வருடங்களுக்குப் பிறகு தேர்ந்தெடுத்து அதில் பயணித்துக் கொண்டிருக்கிறேன் (எனக்குத் தெரிந்து நாயகன் படத்திலிருந்து) என்று கூறினார்.
ஞான ஒளியைப் பொறுத்தவரை, ஒரு மனிதனின் வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களையும், அதில் நடிகர் திலகத்தின் நிலைமைகளையும் மிகவும் உணர்வுபூர்வாக எடுத்துரைத்த படம். படத்தின் கால ஓட்டங்களுக்கேற்ப அவரது வித்தியாசமான நடிப்பைப் படம் நெடுகிலும் கண்டு ரசிக்கலாம்.
முதலில் வரும் சில காட்சிகளில், வெறும் அரைக்கால் சட்டையை அணிந்து நடித்தாலும், படம் பார்க்கும் ஒருவரைக் கூட, அவர் நகைக்க விட்டதில்லை. அவரது உடல் மொழி, அந்த அளவிற்கு, அந்தக் கதாபாத்திரத்தோடு இழைந்து, இணைந்திருக்கும்.
இந்தப் படத்தில், அவரது கதாபாத்திரம் இடது கைப் பழக்கம் உள்ளவராக அமைக்கப் பட்டிருக்கும். இயற்கையாகவே ஒருவருக்கு இடது கைப் பழக்கம் இருந்தால் அவர் அந்தக் கையை எப்படிக் கையாளுவாரோ, அதை அப்படியே அச்சு அசலாக, ஆனால், மிக மிக இயல்பாக கண்முன் நிறுத்தியிருப்பார். இந்தப் படத்திற்கான எம்ப்ளமே, அவர் இடது கையால், மெழுகுவர்த்தி ஹோல்டரை ஓங்குவது போல் வரும் ஸ்டில் தானே. படத்தின் முற்பாதியில், இடது கைப் பழக்கம் உள்ள அந்தோணியாகவும், பின் பாதியில், கோடீஸ்வர அருணாக வரும்போது, வலது கைப் பழக்கம் உள்ளவராகவும் – அனாயாசமாக அந்த வித்தியாசத்தைக் காட்டியிருப்பார்.
ஆங்கிலத்தில் “intense performance” என்று சொல்லுவார்கள். When it comes to performing a role with intensity, none in the entire world can even stand near the shadow of NT.
இதில் முதல் பாதி, எல்லோருக்காகவும், இரண்டாம் பாதி, எல்லோருக்காகவும் பிளஸ் அவரது பிரத்தியேக ரசிகர்களுக்காகவும் பண்ணியிருப்பார் (பின்னியிருப்பார்). ஆனாலும், அவரது நடிப்பு வழக்கம் போல அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை சிறிதளவு கூட சிதைக்காது.
முதலில், விஜய நிர்மலாவை மடக்கும் கட்டங்களில் சாமர்த்தியமான, ஜனரஞ்சகமான நடிப்பு;
ஆனாலும், அதே விஜய நிர்மலாவுடன் பாதிரியாரின் முன் நிற்கும் நிலை வரும்போது, அந்தப் பணிவு கலந்த நகைச்சுவையான நடிப்பு;
மனைவி விஜய நிர்மலா மறைந்தது தெரிந்ததும், யாருக்கோ செய்த சவப்பெட்டி தன் மனைவிக்கே பயன்படப்போவதை நினைத்துக் காட்டும் பாவங்கள் (ஆளாளுக்கு subtle நடிப்பு subtle நடிப்பு என்று இந்தக் காலத்தில் கூறிக் கொண்டே இருக்கிறார்களே – இதுதானே subtle நடிப்பு!)
தன் பெண் பெரியவளாகி படிப்பிற்கிடையே, லீவில் வரும் போது, அவருடன் உரையாடும் காட்சிகள்; பெண் சாரதா இரயிலில் பயணம் செய்யும்போது, தவறுதலாக ஸ்ரீகாந்த்துடைய பெட்டி கை மாறி, இவர் கைக்கு வந்து விட, அந்தப் பெட்டியை, நடிகர் திலகம் பார்த்து, வெள்ளந்தியாக, அதில் இருக்கும் ஆண் உடைகள் தனக்குத்தான் தன் பெண் சாரதா வாங்கி வந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு அந்த உடைகளைப் போட்டுக் கொண்டு (முக்கால் பான்ட்) வந்து வெகுளியாக நிற்பது;
தன் பால்ய நண்பன் லாரன்ஸைத் (மேஜர் சுந்தரராஜன் அவர்கள்) திரும்பப் பார்த்தபின் அவர் கை கொடுக்கும்போது, இவர் தனது இடது கையை ஒருமாதிரி அவரது சட்டையில் துடைத்துக் கொண்டே கொடுக்கும் அந்த அப்பாவித் தனம்;
வயல் வரப்போரம் நடிகர் திலகமும் மேஜரும் பேசிக்கொண்டே வரும்போது, தன் பெண் பெரிய டாக்டராக வேண்டும் அதன் மூலம் அவரது வாழ்க்கையில் படிந்திருக்கும் கரையைத் துடைக்க வேண்டும் (கொலைகாரன் பெற்ற பிள்ளை!) என்று தன் கனவை வெளிப்படுத்திக் கொண்டே வந்து; வீட்டில், தன் கண்ணெதிரே, தன்னுடைய பெண் வேறொரு வாலிபனுடன் (ஸ்ரீகாந்த்) இருப்பதைப் பார்த்து பேரதிர்ச்சியடைந்து, கொந்தளித்துக் குமுறும் அந்தக் கட்டம் – முதலில், பெண்ணை இன்னொருவனுடன் பார்த்த மாத்திரத்தில் காட்டும் அதிர்ச்சி, இடது கண் துடிக்கும் – ஆஹா, இதற்காகத்தான் நான் உன்னை இவ்வளவு நாள் வளர்த்தேனா நான் பெத்த மகளே! என்று கதறிக் கொண்டிருக்கும்போது, ஓசைப்படாமல், ஸ்ரீகாந்த் அங்கிருந்து மெல்ல நழுவுவதைப் பார்த்து, ஒரே தாவலில் (என்ன ஒரு வேகம்), அவரைப் பிடித்து, அரிவாளும் கையுமாய் ஒங்க, அவரை மேஜர் பிடித்து இழுக்க – ஒரு action படத்தில் கூட இப்படி விறுவிறுப்பான ஒரு action பார்ப்பது கடினம் – இங்கு ஒரே நேரத்தில், நடிகர் திலகம், அதிர்ச்சி, அவமானம், கோபம், வேகம், வன்மம், கண்மூடித்தனமான ஆத்திரம் – அனைத்தையும் – அற்புதமாக உணர்ச்சிகரமாக சித்தரித்திருப்பார். திரை அரங்கிலிருக்கும் ஒட்டு மொத்த மக்களையும் கட்டிப்போட்ட அற்புதமான, உணர்ச்சிக்கொந்தளிப்பான கட்டம்.
உடனே, மேஜரின் வற்புறுத்தலின்பேரில், அவருடைய மகளுக்கும் அந்த ஊர் பேர் தெரியாத வாலிபனுக்கும் கிறித்தவ முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட, இப்படியா என் பெண் கல்யாணம் நடக்கணும், இதுக்காவா அவளை அரும்பாடுபட்டுப் படிக்க வச்சேன் என்று பொருமி, புலம்பி, அரிவாளை எடுத்துக் கொண்டே அத்தனை கோபத்தையும் வெறியையும், வாழைத் தோப்பின் மேல் காட்டி, அத்தனை வாழைக் குலைகளையும் சீவு சீவென்று சீவித் தன் கோபத்தை வெளிப்படுத்தும் விதம்! (நடிக்க ஆரம்பித்து இருபது வருடங்களுக்குப் பிறகும், ஒரு புது மாதிரியான நடிப்பு - இயலாமையை, கோபத்தை வேறு ஒரு புது மாதிரியாக வெளிப்படுத்திய விதம்!!).
இருந்தாலும், தன் பெண்ணுக்கு முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட வேண்டும் என்று ஒரு தந்தையின் மன நிலையோடு போய் ஸ்ரீகாந்த்தை அணுக, அவர் ஒரு ஸ்திரீலோலன் என்று தெரிந்து, எவ்வளவோ பொறுமையாகக் கெஞ்சியும், அவர் வர மறுத்ததோடு நிற்காமல், அவரின் பெண்ணையே கேவலமாகப் பேசியதைத் தாங்கிக்கொள்ள முடியாமால், ஒரே அடியில் அவரை அடித்துப் பிண்டமாக்கித் தோளில் போட்டுக் கொண்டு வந்து மாதா கோவிலுக்கு வந்து போட்டு விட்டு, அப்புறம் தான் ஸ்ரீகாந்த் இறந்தே போயிருக்கிறார், தான் செய்தது ஒரு கொலை என்றறிந்து, குழந்தையைப் போல் நான் கொலை செய்யவில்லை என்று கதறுவது; தன் பெண்ணின் வாழ்க்கைக்குத் தானே எமனாகி விட்டதை நினைத்து வெடித்துக் குமுறுவது (அவரே ஒரு கொலைகாரன் பெற்ற பிள்ளை, இப்போது அவரும் ஒரு கொலை செய்து விடுவார் - ஆனால் வேண்டுமென்றே இல்லை!);
"ஞான ஒளி" தொடரும்,
நடிகர் திலகமும் அவர் நடித்த படங்கள் பிற மொழிகளிலும் (தொடர்ச்சி...)
8. ஞான ஒளி (தொடர்ச்சி)
நடிகர் திலகம் சிறைக்குச் சென்ற பின் அடைக்கலம் பாதிரியாரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து, அவரும் தான் மறைவதற்குள் மொரட்டுப்பயலைப் (அந்தோனி - நடிகர் திலகம்) பார்க்க விரும்புவதாக மேஜரை வற்புறுத்தி, அவரும் வேறு வழியின்றி அவரது மேலதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி வாங்கி, நடிகர் திலகத்துடன் பாதிரியாரைப் பார்க்க வருவார். அவரது அறையின் வாயிலுக்கு இருவரும் வந்தவுடன், நடிகர் திலகம் என்ன செய்வார் என்று தெரிந்து கொண்டு "பாதிரியாரிடம் போ.. ஆனால் தப்பிக்கக்கூடாது... தப்பிக்க நினைத்தால் ... என் ரிவால்வர் அதன் வேலையைச் செய்யும் ஜாக்கிரதை " என்று சைகையால் சொல்லி, அவரை அனுப்பியதும், ஒரு குழந்தைப் போல் ஓடி வரும்போதே, பார்க்கும் அனைவரையும், அந்தக் கட்டத்துக்குள் கூட்டிச் சென்று, தொண்டையை வலிக்கச் செய்து விடுவார். ஓடி வந்து,பாதிரியாரின் மடியில் முகத்தைப் புதைத்துக் குலுங்கிக் குலுங்கி சத்தமே கேட்காமல் அழும்போது கரையாத நெஞ்சமும் கரையும் (இப்போது
அழும் அழுகை சத்தமில்லாமல், முகத்தையும் பெரிதாகக் காட்டாமல், உடல் மொழியாலேயே வரவழைத்த அழுகை – இந்த அழுகை பார்க்கும் அனைவரையும் தொற்றிக் கொள்ளும்!) மொரட்டுப்பயலே, சொல்லு, இனிமே நான் மனுஷனா மாறுவேன்னு எனக்கு சத்தியம் செய்து கொடுடா!" என்று சொல்லி நடிகர் திலகம், மேஜர் இருவரது கைகளையும் பற்றிக் கொண்டே உயிரை விடும் திரு. கோகுல்நாத் அவர்கள் இந்தப் படத்தின் முக்கியமான தூண்களில் ஒருவர் - நாடகத்திலும், இந்தப் பாத்திரத்தை இவர் தான் செய்தார். இவர், மேஜரெல்லாம் ஒரு காலத்தில், கே. பாலசந்தர் அவர்களின் ராகினி கிரியேஷன்ஸ் நாடக ட்ரூப்பில் நடித்துக் கொண்டிருந்தவர்கள் தான். பின் அவரது படங்களிலும் தவறாமல் நடித்தார்கள்.)
பாதிரியார் இறந்தவுடன் நடந்தேறும் களேபரம் – நடிகர் திலகமும் மேஜரும் கண்ணை மூடி ஜபம் செய்ய – மேஜர் கண் விழிப்பதற்குள் நடிகர் திலகம் கண் விழித்து – தன் குறுக்கு மூளையால் யோசித்து – மேஜரின் ரிவால்வரில் இருக்கும் தோட்டாக்களை எடுத்துத் தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு – “என்ன விடு நான் போகணும்” என்று கூறி வெகு இயல்பாக அப்பாவித்தனம் கலந்த முரட்டு தனத்துடன் தப்பிக்க முயன்று, கடைசியில் மேஜரை மெழுகுவர்த்தி ஹோல்டரால் மண்டையில் அடித்து விட்டு – மன்னிச்சிக்க லாரான்சே என்று சொல்லித் தப்பித்து – மனது கேட்காமல் – மறுபடியும் பாதிரியார் அடக்கம் செய்யப்படும் இடத்துக்கு பாதிரியாரின் அங்கியில் வந்து மறுபடியும் மாட்டிக் கொண்டு தப்பித்து – கடைசியில் கடலில் குதித்துத் தப்பிக்கும் வரை - படம் போவது புல்லட் எக்ஸ்பிரஸ் வேகம்.
இடைவேளைக்குப் பின்னர், அதே பூண்டி கிராமத்துக்கு, பெரிய கோடீஸ்வர அருணாக வந்து கலக்கும்/கலங்கும் கட்டங்கள்!
பூண்டி கிராமத்துக்குத் திரும்பவும் கோடீஸ்வர அருணாக வரும்போது, காரில் அவர் அமர்ந்திருக்கும் தோரணை மற்றும் சிகை அலங்காரம், மீசை மற்றும் அந்த கூலிங் கிளாஸ் – ஆரம்பமே பெரிய அமர்க்களத்துக்கு அச்சாரம்!
அமலோற்பவ மாதா கோவிலுக்குள் நுழைந்தவுடன், நேரே அங்கிருக்கும் அடைக்கலம் பாதிரியாரின் போட்டோவைப் பார்த்து மௌனமாகக் கலங்குவது; அங்குள்ள பள்ளி நிர்வாகிகள் (திரு. எஸ்.ஏ.கண்ணன் அவர்கள் மற்றும் திரு வீரராகவன்) அங்குள்ள குழந்தைகளை – குறிப்பாக ஒரு குழந்தையைப் பார்த்து நெகிழ்வது – அவரை அங்குள்ள ஆசிரியைகளுக்கு அறிமுகப் படுத்தும் போது, கடைசியாக, அவருடைய பெண் மேரியைப் பார்த்து முதலில் மேரி! என்று சொல்லி, உடனேயே, அவருக்கே உரிய பாணியில் மேரி மாதா என்று சமாளிப்பது; தன்னுடைய பெண் இப்போது எங்கு வசிக்கிறார் என்று மற்ற விவரங்களைப் பற்றி அறிய முற்படும்போது, போட்டோவில் உள்ள கண்ணாடியில், சர்ச்சுக்குள், இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் (மேஜர்) நுழைவதைத் தன்னுடைய கூலிங் க்ளாஸ் மூலமாக ஸ்டைலாகப் பார்த்து விட்டு, மெல்ல அங்கிருந்து நகர்வது எல்லாம் பார்ப்பவரை நயமாக அந்த சூழலுக்குள் இட்டுச் செல்லும்.
தன் பெண் எங்கிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு வீகேயார் வீட்டிற்குச் சென்று, அவரது பேத்தி ஜெயகௌசல்யாவைப் பார்த்து, அவர்தான் தன் பேத்தி என்று அறிந்து மகிழ்ந்து, அவருடைய பெயர் என்ன என்று கேட்டு, தன்னுடைய மனைவியின் பெயரான ராணியையே அவருக்கும் வைத்திருக்கிறார்கள் என்றறிந்து மேலும் மகிழ்வது.
அவரது பெண் சாரதா வந்தவுடன், தான் தான் அவரது அப்பா அந்தோனி என்று அவரது இடது கையால் வலது தோளை முன் போல் தடவி சைகையால் சொல்லிப் புரிய வைக்கும் நேரம் பார்த்து, பின்னால் மேஜர் கழுகு மாதிரி வருவதை சாரதா மூலம் தெரிந்து கொண்டு, கனைத்து சமாளிப்பது; தொவில்லாமல் சுவாரஸ்யமாக நகுரும் கட்டங்கள்.
உடனேயே, மேஜருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி, அதே வேகத்துடன் தன் வீட்டிற்கு வந்து, வெறுப்பில் லாரன்ஸ் என்று கொஞ்சம் சத்தமாகச் சொன்னவுடன், உடனே லாரன்ஸ் என்ற ஒரு வேலையாள் வந்து நிற்க, அவரை நீ யார் என்று வினவி, கோபத்தின் உச்சிக்குச் சென்று, செக்ரடரியைக் கூப்பிட்டு, இவருக்கு உடனே பணம் கொடுத்து செட்டில் பண்ணிடு. – நோ மோர் லாரன்ஸ் ஹியர்! என்று ஆங்கிலத்தில் சொல்லும் அந்த ஸ்டைல் – என்ன ஒரு ஆங்கில உச்சரிப்பு!
மேஜர் நடிகர் திலகத்தின் வீட்டிற்குச் சென்று அவரது கை ரேகையை எடுக்க முயல்வதும், அவரிடம் பிடி கொடுக்காமல் நடிகர் திலகம் நழுவுவதும்; அவரது இடது கண் தான் தெரியாதே (ஏனென்றால் அந்தோணியின் வலது கண் திரை போடப்பட்டிருக்கும்; ஆனால், அருணாகிய இவர் எப்படியும் இந்தப் பரீட்சையில் பெயிலாகி விடுவார் என்று மேஜர் தீர்மானிப்பார்); அதை மறைப்பதற்காகத்தான் கறுப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறார் என்று ஊகித்து, சட்டென்று நடிகர் திலகம் எதிர்பாராத வகையில் அவரது முகத்திலிருந்து கண்ணாடியைப் பிடுங்க, நடிகர் திலகம் ரொம்பக் கூலாக, வலது கண்ணை மூடிக் கொண்டே, இடது கண்ணால் அவரைப் பார்க்க, மேஜரோ, உங்கள் இடது கண் வித்தியாசமாக இருக்கிறதே என்று சொல்ல, அதற்கு, நடிகர் திலகம், இல்லையே, "you are wearing a black tie and the time now is seven ten" என்று அலாதியான ஸ்டைலில் அவரை மடக்குவது – எல்லாமே அற்புதம்.
மேஜர் அங்கிருந்து கிளம்பும் போது, வீட்டின் கதவிலக்கம் என்ன என்று கேட்க, நடிகர் திலகம் 1/99 என்று சொன்னவுடன், மேஜர், நக்கலாக, நான் 199-ன்னு நினைச்சேன் என்று சொல்லி விட்டு நகருவார். அவர் முன்பு கைதியாக இருந்தபோது, அவருடைய கைதி எண் 199, அதைத் தான் சாடையாகக் குத்திக்காட்டி அவரை மடக்கி விட்டதாக நினைத்துக் கொண்டு மேஜர் அங்கிருந்து விலகியதும், கோபத்துடன், வேகமாக அவரது ரூமுக்குச் சென்று, மறுபடியும் அதே வேகத்துடன், படத்தின் முத்தாய்ப்பான பாடலான “தேவனே எண்ணிப்பாருங்கள்” பாடலைப் பாடுவது – வேக வேகமாய் நடந்து “தாய் மடியிலே மழலைகள் ஊமையோ; சேய் உறவிலும் நினைவுகள் மௌனமோ; நோய் உடலிலா மனதிலா தேவனே; நான் அழுவதா சிரிப்பதா கர்த்தரே” என்று முடிக்கும் போது இலேசாகக் காலை விரித்து இரண்டு கைகளையும் உயர்த்தும்போது அரங்கத்தில் எழும் ஆரவாரம் அடங்க வெகு நேரம் பிடிக்கும்! இந்தப் பாடலில், மேகக் கூட்டங்கள் நகர்வது படமாக்கப் பட்டது பற்றி பலர் எழுதி விட்டனர் (ஒளிப்பதிவு மேதை பி.என். சுந்தரம் அவர்கள் கூட இதைப் பற்றி விரிவாக சிலாகித்துக் கூறியிருக்கிறார்). மிகச் சரியாக அந்த மேகக் கூட்டம் நகரும்போது எடுக்கப்பட்டதால், அந்தக் காட்சி மிக மிக இயற்கையாக இருக்கும். அந்தப் பாடலின் முடிவில், கொண்டு வா இல்லை கொண்டு போ என்று ஒவ்வொரு கையாக உயர்த்தி சொல்லி, உன் கோவிலில் வந்து சேவை செய்கின்றேன் என்று இரண்டு கைகளையும் கூப்பி முடிக்கும் அழகு! ஒ!
தன்னுடைய பேத்தி ஜெய கௌசல்யா வேறொரு வாலிபனுடன் (மேஜரின் மகன்) நடந்து போவதைப் பார்த்து விட்டு, பின்னர், சாரதா அந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவுடன், ஜெய கௌசல்யா சர்ச்சுக்குச் சென்று ஜெபம் செய்யும்போது, அங்கு அவருடைய செக்ரடரியிடம் பேசிக்கொண்டே வருபவர் (கார்டன் க்ளம்சியா இருக்கு, சரி பண்ணு…. என்ன ஒரு ஆங்கிலம்!) இவரைப் பார்த்து விட்டு, ஜெய கௌசல்யாவை நெருங்கி, அவருடன் சேர்ந்து பைபிள் படிப்பது போல், அவருக்கு புத்திமதி சொல்லி, கவலைப் படாதே, நான் பார்த்துக் கொள்ளுகிறேன். அம்மா சொல்வதைக் கேள் என்று அவருக்கு தேறுதல் கூறி அனுப்பும் பாங்கு (இதைத் தான் அடிப்படையாக வைத்து, பின்னாளில், ரஜினி அவர்கள் தந்தை வேடம் ஏற்ற நல்லவனுக்கு நல்லவன், அண்ணாமலை மற்றும் படையப்பா போன்ற படங்களில், செய்திருப்பார்!).
இப்போதுதான் படத்தின் முக்கியமான காட்சி. மேஜர் அவருடைய மகனை சாரதா தங்கியிருக்கும், வீகேயார் வீட்டிற்குக் கூட்டி வந்து, அவருடைய மகள் ஜெய கௌசல்யாவிற்கு சம்பந்தம் பேச ஆரம்பித்து, அதற்கு, சாரதா மறுக்க, சரியாக அந்த நேரத்தில், நடிகர் திலகம் கைகளில் எப்போதும் அணியும் வெள்ளை நிற உரைகளை அணியாமல் அங்கு வந்து சேர, “ஆஹா! இந்த சந்தர்ப்பத்திற்காகத்தானே இத்தனை நாள் ஏங்கிக்கிடந்தோம்” என்று மேஜர் நினைத்து, அவரைப் பார்க்க, “என்னை உன்னால் ஒண்ணும் பண்ண முடியாது. என்னையா மடக்கப் பார்க்கிறாய்” என்பது போல், ஒரு பார்வை – அதற்கேற்றாற்போல் ஒரு நடை. வந்து அமர்ந்து பேசி முடிந்தபின், எல்லோரும் வெள்ளித் தம்ப்ளரில் (பாலோ, தேநீரோ ஏதோ ஒன்று) பருகிக் கொண்டிருக்கும்போதே, மேஜர் நடிகர் திலகத்தைக் குறி வைத்து, அவருடைய கை ரேகை படிந்த வெள்ளித் தம்ப்ளரை அவருக்குத் தெரியாமல் எடுத்து தன் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொள்ள; (இதை சாரதா பார்த்து அதிர்ச்சியடைந்து விடுவார்!) இதை நடிகர் திலகம் கவனிக்காதது போல்தான் முதலில் தெரியும். ஆனாலும், மேஜர் காரியத்தை முடித்து விட்ட திருப்தியில், கிளம்பும் போது, நடிகர் திலகம் “இன்ஸ்பெக்டர்!” என்று கூறி அவரை அழைத்து, அவர் அருகில் வந்தவுடன், சன்னமான குரலில், கௌரவமான நக்கல் தொனியில், “இன்ஸ்பெக்டர், மத்தவங்க செஞ்சா அது குற்றம். ஆனா, அதையே நீங்க செஞ்சா அது ஞாபக மறதி, இல்லையா?” என்று கேட்க, மேஜர் நடிகர் திலகத்தைப் பார்த்து “what do you mean?” என்று சீற, நடிகர் திலகம் தனக்கேயுரிய ஸ்டைலில் “I mean the silver tumbler” என்று கூறிக் கொண்டே, அவருடைய கைகளில் இருந்து, யாரும் எதிர்பார்க்காத வகையில், மெல்லிய உறையைக் கழற்றி டீபாவில் வைக்கும் போது , திரை அரங்கமே கூரை பிய்ந்து கொள்ளும் அளவுக்கு அலறும். மேஜர் அசடு வழிந்து சிரிக்க, இவரோ, எப்படி, பார்த்தியா? என்ன ஒங்களால கட்ட முடியாது என்று சைகையால் சிரித்து முடிப்பார்.
ஞான ஒளி தொடரும்,
ஞான ஒளி (தொடர்ச்சி...)
தொடர்ந்து, அவரது வீட்டிற்கு வந்து சாரதா வந்திருப்பதை செக்ரட்டரி சொன்னவுடன், உடனே, அந்த வாஞ்சையைக் காட்டி சட்டென்று முகத்தை சாதாரணமாக மாற்றி, அவரை வரச்சொல்லு என்று கூறுவார். சாரதா வந்தவுடன் மேரி வாம்மா! என்று கூறி பல வருடங்களுக்குப் பிறகு அவரைப் பார்த்தும் தன்னை அப்பா என்று சொல்ல முடியாமல் சில நாள் தவித்து, பின்னர் இப்போது பார்க்கும்போது அடைந்த அன்பு மற்றும் நெகிழ்ச்சியினை முழுவதுமாக ஆனால் மிக மிக subtle -ஆக காண்பித்து, அவரை இதமாக அணைத்து, அவரது நெற்றியில் முத்தமிட்டு, அன்பை வெளிப்படுத்தும் விதம்; சாப்பாட்டு மேஜையின் மேல், கஞ்சிக்கலயம் இருப்பதை சாரதா பார்த்தவுடன், என்னம்மா நான் கஞ்சி சாப்பிடறேன்னு பார்க்கிறியா? நான் எப்பவும் அதே பழைய அந்தோணி தாம்மா என்று சொல்லி, ஒரு குழந்தையின் குதூகலத்துடன் ஓடிச் சென்று ப்ரிட்ஜைத் திறந்து, பழங்களை இரு கைகளிலும் எடுத்துக் கொண்டு, பிரிட்ஜைக் காலால் முதலில் மூட முயன்று, முடியாமல், மறுபடியும் முயன்று காலால் மூடி, மேஜை அருகில் வந்து அமர்ந்து, பழத் துண்டுகளை சாரதாவுக்குக் கொடுத்து சாப்பிடச் சொல்ல, அவர் அதை மறுத்து, இல்லையப்பா, நான் உங்களோடு சேர்ந்து கஞ்சியே சாப்பிடுறேன் என்று சொன்னவுடன், ஸ்டைலாக, கைகளில் இருக்கும் பழத் துண்டுகளை வீசி எரிந்து விட்டு, கஞ்சியை அவருக்குக் கொடுக்க, இருவருக்கும் பழைய நினைவுகள் மலர்ந்து, கலங்கி நெகிழ.... பார்க்கும் அத்தனை பேரையும், இது படம்தான் என்பதை மறக்க வைத்து, அவர்களுடன் பயணம் செய்ய வைப்பார் நடிகர் திலகம், ஊர்வசி சாரதா அவர்களின் மிகச் சிறந்த ஒத்துழைப்போடு! சாரதா உண்மையில், நடிகர் திலகத்தை சந்தித்து, அவரை ஜெய கௌசல்யா திருமணத்திற்கு வரவேண்டாம், வந்தால், மேஜர் திட்டம் போட்டு அவரைக் கைது செய்து விடுவார் என்று கூறி, உடனே ஊரை விட்டுக் கிளம்புமாறு வேண்ட, முதலில் மறுத்து, பின், ஒத்துக் கொண்டு, செக்ரடரியைக் கூப்பிட்டு டிக்கெட் புக் பண்ணச் சொல்லும்போது, அங்கு வரும் மேஜர், "It 's too late உங்களை அவ்வளவு தூரம் கிளம்ப விட மாட்டேன் என்று கூற, நடிகர் திலகம் பதற, மேஜர், என் மகன் திருமணத்தை நீங்கள்தான் நடத்தி வைக்க வேண்டும் என்று கூற, ஒரு மாதிரி நடிகர் திலகம் பெருமூச்சு விடுவார். சாரதாவை வீட்டுக்குத் தன் காரில் கொண்டுபோய் விடுகிறேன் என்று சொல்ல, சாரதா இல்லை என்று கூறி தானே செல்லும் போது, வெறும் காலில் முள் தைத்துவிட, அதைப் பார்த்துக் கலங்கிய நடிகர் திலகத்தைப் பார்த்து, மேஜர் கிண்டல் செய்து பின்னர் கிளம்ப, வெறுப்பின் உச்சிக்கே நடிகர் திலகம் சென்று அங்கு perform செய்யும் அந்த "one act play " - "அலையறான் ... அலையறான்... என்னைப் பிடிக்க அலையறான் ... ஒன்கிட்ட நான் பிடிபட மாட்டேண்டா.... லாரன்ச்ச்சச்ஸ் என்று சொல்லி "you can't catch me " என்று கூறி முடிக்கும் அந்த ஸ்டைல்...... அரங்கில் கைத்தட்டல் ஓய வெகு நேரம் பிடிக்கும்!
கடைசியில், மாதா கோவிலில், மேஜர் அவரது பெண்ணை இழிவாகப் பேசப்பேச, நடிகர் திலகம் கோபத்தின் உச்சிக்கே சென்று, மேஜை மேல் இருக்கும், அந்த மரத்துண்டைப் பிடுங்கி (அவர் அதைப் பிடுங்கி எடுக்கும் விதம், அசலாக இருக்கும் ... அது ஏற்கனவே பிடுங்கி ஒப்புக்காக வைக்கப்பட்டிருந்தாலும்!) அந்த அளவுக்கு உக்கிரமாக நடிகர் திலகம் எடுக்கும் போது, மெய் சிலிர்க்கும். அப்படியே சென்று, மேஜரிடம், நான் யாருன்னு உனக்கு நிஜமா தெரியாது? சாரதாவைக் காட்டி இவள் யாரென்று தெரியாது? என்று கூறி கெஞ்ச, மறுபடியும் மேஜர் இல்லை நீங்கள் யார் என்று தெரியாது. அவரது பெண்ணைக் காட்டி, இவள் நடத்தை கெட்டவள் என்று மேலும் மேலும் கூற நடிகர் திலகம் கோபாவேசத்துடன் ஓடிச் சென்று மெழுகுவர்த்தி ஹோல்டரை எடுத்து மறுபடியும், மேஜரை அடிக்கப் போக, மேஜர் "ம்ம். ஏன் நிறுத்திட்ட. ஓங்கியது உன்னோட இடது கை. உன் மனசில் இருப்பது மிருக உணர்ச்சி" என்று சொல்ல, நடிகர் திலகம் இயல்பு நிலைக்குத் திரும்பி, இல்லை, நான் திரும்பவும் ஒரு தப்பு செய்ய மாட்டேன். என்று கூறி அங்கிருப்பவர்களிடம் "நான் தான் மாதா கோவில்ல மணி அடிச்சிக்கிட்டிருந்த அந்தோணி என்று ஸ்டைலாகக் கூறி மேஜரிடம் "இப்ப சொல்லு. என் பெண் களங்கமற்றவள் என்று சொல்லு" என்று கூறி, "Am I not your Friend" என்று கூறும்போது மேஜருடன் சேர்ந்து அனைவரும் (மக்களும் தான்!) கலங்கி, நடிகர் திலகமும், மேஜரும் தழுவிக் கொள்ள, இவ்வாறு மேஜரின் திட்டத்துக்கு பலியாகி மறுபடியும் கைதாகி, இருவரும் ஜீப்பின் பின் இருக்கையில், சிரித்துக் கொண்டே செல்லும்போது - ஒரு கதாநாயகன் கடைசிக் காட்சியில் கைதாகி செல்லுவதைக் கூட மக்களை ரசிக்க வைத்த படம். (சாலையிலுள்ள போர்டில் "நன்றி மீண்டும் வருக" என்று முடியும்போது, எல்லோரையும் திரும்பத் திரும்ப பல நாட்கள் ஏன் இன்னும் கூட வரவைக்கின்ற மகத்தான படமாக, ஞான ஒளி முடியும்.
இந்தப் படம் நடிகர் திலகம் நடித்த எண்ணற்ற முக்கியமான படங்களின் வரிசையில் - அதாவது ஒரு காட்சி கூட சோடை போகாத படங்களின் வரிசையில் - மிக மிக முக்கியமான படம். (தெய்வ மகன், வசந்த மாளிகை, அவன்தான் மனிதன் வரிசையில்.)
ஞான ஒளி, 1980 -இல் ஹிந்தியில், தேவதா என்ற பெயரில் படமாக்கபட்டபோது, சஞ்சீவ் குமார், நடிகர் திலகத்தின் பாத்திரத்தையும், டேனி (ஆம் ரஜினியின் ரோபோ வில்லன்தான்) மேஜர் பாத்திரத்தையும் ஏற்றனர். சென்னை தேவி வளாகத்தில், இந்தப் படம் நன்றாக ஓடியது. அதற்கான ஷீல்டை இப்போதும் அங்கு பார்க்கலாம். சஞ்சீவ் குமாரும் ஹிந்தியில், அந்தோணி பாத்திரத்தை சிறப்பாகவே செய்தார் என்று கூறினாலும், நடிகர் திலகத்தின் ரேஞ்சை அவரால் நெருங்க முடியவில்லை என்றுதான் கூற வேண்டும். இருந்தாலும், அவர் வட இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவர் எனலாம். மேலும், நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பர் மற்றும் நலம் விரும்பியும் கூட.
பேரறிஞர் அண்ணா 106வது பிறந்தநாள் - 15-09-2014
http://i1234.photobucket.com/albums/...ps10e274a4.jpg
Engineers' Day Greetings!
Sir Mokshagundam Visvesvaraya KCIE (popularly known as Sir MV; 15 September 1860[1] – 14 April 1962[1]) was a notable Indian engineer, scholar, statesman and the Diwan of Mysore during 1912 to 1918. He was a recipient of the Indian Republic's highest honour, the Bharat Ratna, in 1955. He was knighted as a Knight Commander of the Indian Empire (KCIE) by King George V for his contributions to the public good. Every year, 15 September is celebrated as Engineer's Day in India in his memory. He is held in high regard as a pre-eminent engineer of India. He was the chief designer of the flood protection system for the city of Hyderabad in Telangana, as well as the chief engineer responsible for the construction of the Krishna Raja Sagara dam in Mandya. (Courtesy : Wikipedia)
இன்று பொறியாளர் தினம் சர் விஸ்வேஸ்வரய்யா அவர்களின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது அனைத்து வகைப் பொறியாளர்கள் சார்பாக வாழ்த்துக்கள்!
என்னதான் பொறியாளராக இருப்பினும் கட்டுமானப்பணிகள் சிறந்திட நல்ல மேஸ்திரியும் களப்பணியாளர்களும்அமைந்தால்தான் பணி சிறக்கும். இந்தியத்
திரை வரலாற்றிலேயே ஒரு கட்டடப்பணி நிலைகளை ஒரே பாடல் காட்சியில் காட்டிய சாதனை நடிகர்திலகத்தின் தெய்வப்பிறவி படம் மூலமே ! நல்ல மேஸ்திரியாக நடிகர்திலகமும் அவரைச் சுற்றும் சித்தாளாக நாட்டியப்பேரொளியும் நம்மை மகிழ்வித்த பாடல் காணொளி (Besides a movie entertainment piece, this video can also be used along with a power point presentation on building materials and construction aspects to civil engineering students!!)
கட்டடத்துக்கு மனைப்பொருத்தம் அவசியம். காதலுக்கு?!...... மனப்பொருத்தம் அவசியம்
https://www.youtube.com/watch?v=wxt4..._tMcZSbH9pGXwB
In a Guru Dutt's Hindimovie "aar paar" too a similar song sequence but not elaborating building construction!
https://www.youtube.com/watch?v=DJFwNErOujc
அன்பு நண்பர் வினோத் அவர்களுக்கு,
என் பாராட்டு ஓரிரண்டு பதிவு பாராட்டாக இருக்க வேண்டாம். அது இரண்டு மூன்று பதிவு பாராட்டாக மாறட்டும். எண்ணிக்கையை வைத்து பாராட்டுவது என்பது எனக்கு ஏற்புடைய செயல் இல்லை என்றபோதினும் உங்கள் உழைப்பிற்கு என் வாழ்த்துகள்!
அன்புடன்
Hello!
senthilvel45 shared an album with you.
View Album, http://s1055.photobucket.com/user/senthilvel45/library/