should we have to post earlier donation news to prove a point here:roll:
it cant have been a fan who made mockery by doing that vulgar fabricated document. lets not be demoralized by that.
Printable View
should we have to post earlier donation news to prove a point here:roll:
it cant have been a fan who made mockery by doing that vulgar fabricated document. lets not be demoralized by that.
Unlike other stars who pretend often that they would be entering politics and give false hope to their fans, KH has been very clear and direct on this by stating many, many times that he would never enter electoral politics. I don't recall if he had played any big role in the elections of Nadigar sangam before. But this time he is openly advocating for his friend Nasser. Sarath Kumar & co must have rubbed him the wrong way by not helping when there was a crisis during VR.
@Jaffnapodiyan: சூதாட்ட மைதானத்தில் Selfis உடன் ஊரை ஏமாற்றும் நடிகர்கள் மத்தியில் சமூகத்தின் குப்பைகளை அகற்ற Clean India campaignஇன் மையத்தில் #KamalHaasan
Sent from my iPhone using Tapatalk
http://www.mayyam.com/talk/showpost.php?p=1257028
Sent from my iPhone using Tapatalk
Skills training meeting with Tamil Cine Folks
கமல்ஹாசன் என்னும் சினிமா யானை! #1 (http://www.vikatan.com/news/article.php?aid=53355)
எப்போது பார்த்தாலும் கண் விலகாமல் ஆச்சர்யம் தரும் யானை, ரயில், அருவி, குழந்தை போல எனக்கு ஆச்சர்யம் தரும் இன்னொரு விஷயம் கமல். பார்வையற்றவன் யானையின் உருவத்தை சொல்ல முயற்சித்தது போல முயற்சி செய்திருக்கிறேன்.
http://i1277.photobucket.com/albums/...psyek4mvpl.jpg
தமிழ் சினிமா 75-ல் இருந்து 80-களின் பெரும்பகுதி வரை 'கரகர' கரம் மசாலாவாகவே இருந்தது. இதில் பாலச்சந்தர், பாரதிராஜா போன்றவர்கள் நல்ல படங்களை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற சினிமா சீனியர்களின் ஓய்வுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மசாலா மணத்தை குறைக்க முற்பட்டதில் முதலிடம் கமலுக்கு கொடுக்கலாம். ரஜினிக்கு மிகப்பெரிய புகழை பெற்றுத்தந்த 'முள்ளும் மலரும்' மூலமாக பாலுமகேந்திராவை தமிழுக்கு கொண்டு வந்தது கமல் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. அதுவரை டாக்கியாக இருந்த சினிமாவை மூவியாக மாற்ற முயற்சித்தவர்கள் மகேந்திரன், பாலுமகேந்திரா. அவர்களை ஒத்த அலைவரிசையில் இருந்தவர் கமல். "கமல் மலையாள படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்தபோதே தமிழ் சினிமாவின் நிறத்தை மாற்றும் எண்ணம் இருந்தது. இத்தனைக்கும் அப்போது அவர் வயது 25க்குள் இருந்தது" என எழுத்தாளர் சுஜாதா கூறியிருக்கிறார்.
கமல் ஆரம்ப காலத்தில் ரொமான்டிக் ஹீரோவாக இருந்தாலும், பின்பு ஆக்சனுக்கும் மாறியவர்தான். நிறைய மசாலா படங்கள் மூலம் வெற்றியை சுவைத்தவர்தான். 'குரு', 'சகலகலா வல்லவன்' அதில் சிகரம் என சொல்லலாம். தன்னுடைய 100வது படமான 'ராஜபார்வை'யில் நடித்தபோது கமலின் வயது 25. தன்னுடைய 100வது படம் என்பது ரிஸ்க் இல்லாமல் வெற்றி படமாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லா ஹீரோக்களும் விரும்புவார்கள். (இதில் விதிவிலக்காக ஜெயித்தவர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, விஜயகாந்த் ஆகியோர்தான். ரஜினி, சத்யராஜ், பிரபு எல்லோருக்கும் 100வது படம் தோல்விப்படங்களே). கமல் சினிமாவின் நிறத்தை மாற்றவேண்டும் என்ற ஆர்வத்தில் தெரிந்தே 'ராஜபார்வை' என்ற தீயில் கையை வைத்தார். "ராஜபார்வைக்காக விருது வாங்கியபோது மட்டும்தான் கை 'ஜில்' என்று இருந்தது" என கமல் குறிப்பிட்டார்.
கமலும் சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே மூலம் உச்சபட்ச வெற்றியை சுவைத்தார். ஆனால், அதில் சிக்கிக்கொள்ளாமல் எழுத்தாளரை சினிமாவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற ஆவலில், சுஜாதாவுடன் இணைந்து எடுத்த படம்தான் 'விக்ரம்'. எனக்கு தெரிந்து கம்ப்யூட்டர் முதன்முதலில் காண்பிக்கப்பட்டது விக்ரமில்தான். ஏவுகணையின் ஆபத்தை தமிழர்கள் அறிய செய்த படம். 'ப்ளூ மேட்' டெக்னாலஜியில் உருவான முதல் தமிழ்ப்படம். ராஜஸ்தானுக்கு தமிழர்கள் சுற்றுலா சென்றுவந்தது போல் அழகாக படம் பிடிக்கபட்ட படம். சத்யராஜ் வில்லனாக நடித்த கடைசி படம் என பல விஷயங்கள் இதில் உண்டு. இயக்குனர் ராஜசேகர் இடையில் மாவீரனை இயக்க போய்விட சந்தானபாரதியும், கமலும் செய்த 'பேட்ச் ஒர்க்' படத்துக்கு செட்டாகவில்லை. இதனால் விக்ரம் தோல்விப்படமாக அமைந்தது. அதுவரை நடித்து சம்பாதித்த அனைத்து பணத்தையும் அதில் போட்டிருந்தார் கமல் என்ற தகவலும் உண்டு. 'மன்னாதி மன்னன்' தோல்வி அடைந்திருந்தால் என்னவாகியிருக்குமோ, அது கமலுக்கு நடந்தது எனத்தகவல். ஆனாலும், வித்தியாசமான முயற்சிகளை விடவில்லை.
http://i1277.photobucket.com/albums/...ps7vf1vcwa.jpg
தொடர்ந்து பிசியாக நடிக்க வேண்டிய சூழல், இல்லையென்றால் 'பேர் சொல்லும் பிள்ளை'யும், 'மங்கம்மா சபதமும்' வந்திருக்காது. கமலின் பேனா கமர்சியல் வெற்றி பெற்றது 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில்தான். மூன்று வேடங்கள், மூன்று பாடி லாங்குவேஜகள் என கமல் தன்னை வருத்தி ரசிகனை குதூகலப்படுத்திய படம். கிரேசி மோகன், கமலுக்கு 'பக்கா'பலம் ஆனார். அப்பு கேரக்டருக்கு கமல் பட்ட சிரமங்கள் ஏராளம். அதில் பின்புறமாக கால்களை கட்டிக்கொண்டு நடித்ததும் ஒன்று. அதில் அப்பு கேரக்டரை சற்று மனநிலை பாதித்தவனாக காட்டியிருந்தாலும் கூட (வில்லன் படம் மாதிரி) இந்த படம் வெற்றி பெற்றிருக்கும். ஏனெனில் திரைக்கதை அவ்வளவு நன்றாக இருந்தது. இப்படி மெனகெட்டிருக்க தேவையில்லை. ஆனால், ரசிகனுக்கு புதிய விஷயத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக கமல் அவ்வளவு மெனக்கெட்டார் என்பதுதான் நிதர்சனம். கமல், அபூர்வ சகோதர்கள் வரையிலும், ரஜினி, பாட்ஷா வரையிலும் ரசிகர்கள் தங்களை எப்போது வேண்டுமானாலும் வீட்டில் உட்காரவைத்து விடுவார்கள் என்ற மனநிலையில் இருந்தார்கள் என்பது தகவல். சிவாஜியையே ஒதுக்கியவர்கள் அல்லவா தமிழர்கள்.
கமல்ஹாசன் என்னும் சினிமா யானை! #2 (http://www.vikatan.com/news/article.php?aid=53355)
கமல் 90க்கு பிறகு தன் பாதையை மாற்ற எடுத்த முதல் முயற்சிதான் 'குணா'. குணா மனநிலை பாதிக்கபட்டவன், அவனது தாய் தப்பான தொழில் செய்பவள். இதற்குமுன் எந்த பெரிய ஹீரோவும் தன்னுடைய பின்புலத்தை இவ்வளவு மோசமாக அமைத்து கொண்டதில்லை. கமல் - இளையராஜா - சந்தானபாரதி என்ற கூட்டணி வெற்றி தராமல் போனாலும், தமிழுக்கு மற்றொரு வாசல் திறந்த படம் குணா. கமல் பேனா பிடித்த படங்களின் திரைக்கதையில் ஒரு ஒழுங்கு இருக்கும். அதில் இரண்டாம் படம் தான் குணா. இவ்வளவு மெனக்கெடல் ஒரு படத்துக்கு வேண்டுமா என ரசிகனை பேசவைத்தது. அதுவரை வெறும் 'பைத்தியம்' என்ற உச்சரித்த தமிழ் சினிமா 'மனநிலை பாதிக்கப்பட்டவன்' என்ற சொல்லை உபயோகிக்க காரணமாயிருந்தது குணாதான்.
http://i1277.photobucket.com/albums/...pshxaj9s7k.jpg
அது செல்வராகவன் காதல் கொண்டேன் செய்யுமளவுக்கு வந்து நின்றது. கமல் குணாவாகவே மாறி உலவினார். ஒரு அறைக்குள்ளேயே கமல் சுற்றி சுற்றி வசனம் பேசும்போது தமிழ்சினிமாவும் சுற்றியது. அதுவரை இருந்த ஸ்டேண்டிங் காமிராக்களுக்கு விடுதலை. குணா குகைக்கு (முன்பு டெவில்ஸ் கிச்சன்) போகும் வழி மிகவும் ஆபத்தானது. ஒவ்வொருவராக பாலத்தில் சென்று அந்த இடத்தை அடைவார்களாம். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் கமல் அதில் சென்று நடித்தார். ஆனாலும், அது அப்படியொரு இடத்தில் படமாக்கபட்டது ரசிகனுக்கு தெரியாது. கடைசி ரசிகனுக்கும் நியாயம் செய்யவே அப்படி ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து சிரமத்துடன் நடித்தார். அதனால்தான் ராஜாவின் 'கண்மனி அன்போடு காதலன்'க்கு நியாயம் செய்ய முடிந்தது. இதுதான் எல்லா இளையராஜா ரசிகனின் ப்ளே லிஸ்ட்டிலும் கண்மனி இடம் பிடிக்க காரணம்.
கமலின் பேனாவுக்கு வைரைக்கல் வைத்த படமென்றால் 'தேவர் மகன்' தான். அன்னை இல்லத்து ராஜா நீண்ட இடைவெளிக்கு பிறகு அரிதாரம் பூசியதற்கு அதுவரை அவர் பெறாத சம்பளத்தை கொடுத்தார் கமல். (படையப்பாவில் ரஜினி அதை முறியடித்தார்.) பொதுவாக கமல், ரஜினி நடிக்கும் படங்களில்தான் மற்ற நடிகர்களுக்கு சரியான சம்பளம் கிடைக்கும் என்ற தகவலும் உண்டு. குருதிப்புனலில் இயக்குனர் விஸ்வநாத்துக்கு சம்பளம் ரூ.85 லட்சதுக்கு மேல் கொடுத்தார் என்பது தகவல். கமல் தன்னை சிறந்த தயாரிப்பாளராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். தேவர் மகன் மூலம் 'ஃபங்க்' ஸ்டைலை அறிமுகம் செய்து வைத்தார். அனைத்து நாயகர்களின் ரசிகர்களும் கூட பேதமின்றி 'ஃபங்க்' வைத்துக்கொண்டார்கள். பொதுவாக கமல் ஸ்டைல் செய்யமாட்டார். செய்தால் அது வெகுநாளைக்கு இருக்கும். உதாரணம், 'சத்யா' பட ரிங் இப்போது வரை காலேஜ் பசங்ககிட்ட கூட டிரெண்ட்.
தமிழ்சினிமாவின் சிறந்த பத்து படங்களை சொன்னால் அதில் தேவர் மகனை சேர்க்காமல் முடியாது. தேவர்மகனில் சிவாஜி இருக்கும் காட்சிகளில் கமல் அடக்கியே வாசித்தார். சிவாஜி என்ற பிதாமகனை வேறொரு கோணத்தில் காட்டி ரசிக்க வைத்தார். தேவர்மகனின் வசனங்கள் இன்றும் பாடமாக படிக்க வேண்டியவை. தமிழ் சினிமாவின் சிறந்த வசனங்களை உள்ளடக்கிய படங்களில் ஒன்று. திரைக்கதை என்ற இலக்கணத்துக்கு சரியான உதாரணம். தெற்கில் இருக்கும் ஜாதி வெறியை, பெரியவர், சின்னவர் என்ற பேதத்தை, சொத்து பிரச்சனையை, அந்த பகுதி மக்களின் வெள்ளந்திதனத்தை கண்ணாடிபோல் காட்டியது திரைக்கதை. சங்கிலி முருகன் அதற்கு உதவினார். சிவாஜியின் 'இன்னைக்கு நான் விதை போடுறேன்' வசனம் மனித வாழ்வில் பாடமாக படிக்க வேண்டிய ஒன்று. 'போய் புள்ளகுட்டிகள படிக்க வைங்கடா' என்று சொல்லி தமிழர்களை விழிக்க செய்தார். தலைவாசல் விஜய், வடிவேல் போன்ற திறமையாளர்களை அடையாளம் காட்டினார். எனக்கு பிடித்த கமலின் 'எவர் கிரீன் மூவி' என்றால் அது 'தேவர்மகன்'தான்.
தேவர் மகனுக்கு பிறகு கமல் மீதான மரியாதை கூடிய படம் 'மகாநதி'. கிருஷ்ணசாமியாக கமல் வாழ்ந்தார். பெண்களுக்கு எதிரான அக்கிரமங்களை, அநீதிகளை வெளிச்சமிட்டு காட்டிய படம். 'சோனாகாஞ்சி' என்ற வார்த்தையை கடைசி தாய்மாருக்கும் கொண்டு போய் சேர்த்தார். ஒரு தவறான தொழில் செய்யும் பெண்ணின் காலில் விழுந்து அழுது தன்னுடைய நட்சத்திர அந்தஸ்த்தை உடைத்து 'தான் ஒரு நடிகன் மட்டுமே' என்று கமல் ஊருக்கு உணர்த்தினார். சகமனிதனின் கோபம் என்ன செய்யும் என காட்டினார். எனக்கு தெரிந்து பெண்களோடு சேர்ந்து, ஆண்களும் கண்ணீர் சிந்தியபடி பார்த்தபடம் 'மகாநதி' தான். அதில் முதன்முதலில் 'ஆவிட்' எனும் கம்ப்யூட்டர் எடிட்டிங்கை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தார். புதுமையை தமிழ் சினிமாவில் புகுத்திக்கொண்டேயிருக்க வேண்டும் என விரும்பினார். இந்த யானையை பற்றி எழுதும்போது அன்பே சிவம், ஹேராம் இரண்டையும் எழுதாமல் இருக்க முடியாது. ஆனால் அதை தொட்டால் இந்த கட்டுரைக்குள் அடக்க முடியாது. அதற்கென ஒரு பதிவு எழுதனும்.
http://i1277.photobucket.com/albums/...ps19bio3lh.jpg
***சிவாஜியையே ஒதுக்கியவர்கள் அல்லவா தமிழர்கள். ***
சிவாஜியை எப்போ ஒதுக்கினாங்களாம்?? படையப்பா வரையில் எல்லோருக்கும் முன்னோடியாகத்தான் இருந்தார்..
***மன்னாதி மன்னன்' தோல்வி அடைந்திருந்தால் என்னவாகியிருக்குமோ, அது கமலுக்கு நடந்தது எனத்தகவல். ஆனாலும், வித்தியாசமான முயற்சிகளை விடவில்லை**
நாடோடி மன்னன்னு வாசிங்கப்பா! ஒரே உளறலா இருக்கு!
b4 devar magan Sivaji was not given much roles. there was a hiatus period. His health too was draining
I dont think Sivaji was not given any roles, it may be that Sivaji was not keen on taking any roles owing to his health..... Devar Magan might be for Kamal, that too I remember Sivaji telling it as just oru 10 days vanthuttu ponen..avlothan...... Kamal might have taken care that the role is not too straining for him..... but i dont think the author was mentioning that phase..... Sivaji yo Rajini Kamal oh....... inga jeyichikittae irukkara varaikum than mathippu...... thatz what was he seemed to intend there.......
எதுக்கு இப்படி வலியக்க தம் கட்டுறிங்கன்னு தெரியல. சிவாஜிக்கு அவருடைய பிற்காலத்திய காலங்களில் அவருடைய நடிப்புக்கு சரியான தீனிபோட்டவை என்றால் அது முதல்மரியாதை, தேவர்மகன் படங்கள் தான். மற்றதெல்லாம் கமல் சொல்வதுபோல "சிங்கத்துக்கு தயிர் சாதம் வச்சிட்டாங்க" என்ற ரீதியில்தான் இருந்தது. படையப்பா உட்பட.
முதல் மரியாதையில் மலைச்சாமிதான் எல்லாம். மேலும் அதன் தரமே வேற. ஹாலிவுட் பட தழுவல் இல்லாத தமிழ் கலாச்சாரத்தை பறை சாற்றும் உலகத்தரம் வாய்ந்த படம் அது. தேவர்மகனை அப்படியெல்லாம் சொல்லிட முடியாது. சும்மா ரெண்டையும் கலந்து விட்டால் ரெண்டும் ஒண்ணாகிவிடாது. தேவர் மகனில் சிவாஜி நடிக்காமல் இருந்து இருந்தாலும் சிவாஜிக்கு ஒரு இழப்பும் இல்லை. முதல் மரியாதையை அப்படி எல்லாம் சொல்ல முடியாது!
Rumours of another book function with MK and Kamal. Do not know what the implications will be for Thoonga Vanam if this is true. MK is bound to talk politics.
Singathukku thayir saatham vachitaanga was a comment from a ardent Sivaji fan who had a different idea of cinema making...... evvalavo pannirukkalam avarai vachu, aana verum ithai than pannirukkanga kind of comment.......and i do believe that comment from kamal was on the late 70's and 80's period of Sivaji sir......... when he was hale and healthy........ Devar mahan came during the beginning of a twilight in his career and life........ DM la sivaji thavira yaar nadichirunthaalum weight ah than irunthirukkum...... it is the strength of the character...... but Sivaji sir, added an extra dimension to that already strong character and gave it that much more respect......... oru unnal mudiyum thambi layo illa avvai shanmugi la yo (assuming he would have been in good health) nadichirunthaalum Sivaji would have made the character punch above its weight.......
”தேவர்மகனில் சிவாஜி நடிக்காமல் இருந்திருந்தால் அது வெறும் “மகன்” அவரால் தான் அந்தப்படம் அந்தளவு உயர்ந்தது!”
சொன்னது யாரு? “2000 வருஷமா வேல்கம்பும் வீச்சருவாளும்” ”அவன் மெதுவாத்தேன் வருவான்” “இதெல்லாம் பெருமையா, கடமை, ஒவ்வொருத்தனோட கடமை” போன்ற காலத்தால் அழியாத வசங்களை எழுதியவரே! ஆனா அதே சமயம், தேவர் மகன் என்ற படத்தை பாத்த பின், அந்த வசனமெல்லாம் சிவாஜியே சொந்தமா பேசினதுமாரி ஆகிவிட்டது! சரித்திரத்தில் பதிந்துவிட்டது! அதுதான் நடிகர்திலகம்! மிக உயர்வான வசங்கள் தான்! ஆனால் அதை சரித்திரத்தில் ஏற்றும் வல்லமை சிவாஜிக்கே என்பது கமலுக்கே தெரிந்துதான் அந்த பாத்திரத்தை, வயசானதால் அவரால் முடியலை என 2 முறை மறுத்தும் விடாப்பிடியா அடம் பிடிச்சி கமல் நடிக்கவைத்தார்!
அதையெல்லாம் பார்த்தபின்பும் சிவாஜி தவிர வேற யார் நடிச்சாலும் ஓடியிருக்கும்னு சொல்றதெல்லாம், வேஸ்ட் ஆஃப் டைம், வேஸ்ட் ஆஃப் எனர்ஜி வேஸ்ட் ஆஃப் everything!
So the author is perfectly alright when he says "சிவாஜியையே ஒதுக்கியவர்களல்லவா தமிழர்கள்” meaning he was only fed தயிர்சாதம். movies like விடுதலை, படையப்பா, ஒன்ஸ்மோர், நாட்டுப்புறப்பாட்டு(?) etc added no fame to the icon. அந்த பாரதிராஜா படம் மட்டும் ஓரளவு ஓகே. i dont even remember its name now
Why do we even have to prove to someone if Thevar Magan is important? :lol:
When Vijay TV conducted a poll on which is the most important movie in Tamil Cinema, Thevar Magan won it hands down in public voting. Let alone Shivaji - Thevar Magan is a milestone in Tamil Cinema history, celebrated by critics and public alike!
https://z-1-scontent-hkg3-1.xx.fbcdn...f3&oe=569ECE80
"Everywhere people were talking about KamalHaasan, his performance, his Box Office Hold!!" :clap: #UnbeatableHistory
தன் முயற்சிகளில் சற்றும் மனம் தளராத ஒருவரின், மற்றுமொரு சிண்டு முடியும் பதிவு.. இந்த முறை target கமல் fans vs சிவாஜி fans!!
I was trying to find out if Sakala mentioned anything like DM gave him another life, but unfortunately.. none found!!
I sincerely wish people stop triggering unwanted fights, by reading too much between the lines.
நீங்க சொன்னா அது எப்பவுமே சரியாகத்தான் இருக்கும் - இல்லீங்களா?
சேரன், பாலா, மிஸ்கின், நாசர் - இவங்கள தவிர கோவிந்த் நிஹலினி போன்றவங்க கூட 'தேவர் மகன்' படத்தை ஒரு மைல் கல்ல்லுனு சொல்லும்போது, என்ன அவிங்கெல்லாம் உங்கள கேட்காம சொல்டாங்க - மன்னிச்சு விட்ருங்க பாவம், உங்க லெவெலுக்கு சினிமா சார்ந்த ஒரு அனுபவமும் தொலை நோக்கு பார்வையும் அவங்களுக்கு இல்லன்னாலும், ஏதோ தெரியாத்தனமா உலகதரமே இல்லாத ஒரு சுமார் படத்தை புகழ்ந்துட்டாங்க - விட்ருங்க - என்ன தான் முயற்சி செஞ்சாலும் '..ப்பா' rangeக்கு எல்லாம் தமிழ்/இந்திய/international சினிமாவுல வரவே வராது- என்ன, சந்தோஷமா?
தமிழ்த் திரையுலகில் "தேவர் மகன்" சிறந்ததொரு காவியப் படைப்பாக இருப்பதனால்தான் நமது P _ R இந்த அளவுக்கு பகுப்பாய்வு செய்திருக்கிறார். complicateur உட்பட. சிவாஜிக்கான திரிகளில் இதை தொடர்ந்து பாதுகாத்து வருகிறார்கள். வாசிக்கணும்னு தோனுச்சின்னா வாசிக்கலாம். அதுகூட Optionதான் தமிழ். இந்த பதில் கூட உங்களுக்கு மட்டுமே அல்ல. இப்பதிவுகளை இதுவரை வாசிக்காதவர்களுக்கு வாய்ப்பு ஒன்றை ஏற்படுத்தலாம் என்ற முனைப்பில்.
** பெரிய தேவர் - நடிப்புக்கலையின் உச்சம் ...ஒரு அலசல் ** - பிரபுராம்
பெரிய தேவர் - 1
பெரிய தேவர் - 2
பெரிய தேவர் - 3
பெரிய தேவர் - 4
பெரிய தேவர் - 5
பெரிய தேவர் - 6
பெரிய தேவர் - 7
பெரிய தேவர் - 8
பெரிய தேவர் - 9
என்னை வென்ற நடிகர்திலகம் - complicateur
-deleted with warning-
தேவர் மகன் படமே என் மானசீக குருவுக்கு நான் போட்ட சல்யூட் -ன்னு நம்ம தல சொன்னாரு ..அது நூத்துக்கு நூறு உண்மை .. அது நம்ம திலகத்துக்கு மட்டும் போட்ட சல்யூட் அல்ல , தமிழ் திரையுலகுக்கே போட்ட சல்யூட்!
எத்தனை சிண்டு முடிஞ்சாலும் சிவாஜி - கமல் என்பது பிரிக்க முடியாதது .
சிவாஜியை மதிக்காத கமல் ரசிகனும் , கமலை தங்கள் ஆளாக உணர முடியாத சிவாஜி ரசிகனும் போலி என்பது என் தனிப்பட்ட தாழ்மையான கருத்து.
நண்பர் ஜோ அவர்களுடன் பல விஷயங்களில் எனக்கு கருத்தொற்றுமை இருப்பதில்லை, இந்த ஒரு விஷயத்தைத் தவிர.Quote:
சிவாஜியை மதிக்காத கமல் ரசிகனும் , கமலை தங்கள் ஆளாக உணர முடியாத சிவாஜி ரசிகனும் போலி என்பது என் தனிப்பட்ட தாழ்மையான கருத்து.
இன்றைக்கு சீனியராக இருக்கும் பல கமல் ரசிகர்கள் முன்னாள் சிவாஜி ரசிகர்களே. நடிகர் திலகத்திற்குப் பிறகு அவருடைய வெற்றிடத்தின் அருகில் வரக்கூடிய தகுதி கமலுக்கு மட்டுமே உண்டு என்று ஆழமாக நம்புபவர்கள். நம்பிக்கையை உண்மையாய் உணர்ந்தவர்கள். கமலின் அடுத்த தலைமுறை ரசிகர்களை வழிப்படுத்த கமலுக்கு உதவியவர்களில் பலர் நடிகர் திலகத்தின் ரசிகர்கள். இதை நான் அறிவேன். ரசனை மாற்றம் காலத்தின் கட்டாயம் என்பதற்கு இவர்கள் உதாரணம்.
எங்களைப் போன்ற சிவாஜி ரசிகர்கள் நடிகர் திலகம் வகுத்த பாதையில் கமல் செல்வதைப் பார்த்து பெருமை கொள்பவர்கள். வாழ்த்து சொல்பவர்கள்.
சிவாஜி-கமல் பெரிய - சிறிய வாழை மாதிரி.
பெரிய வாழை தான் இருக்கும் வரை, குலை தள்ளி தன்னாலான அத்தனை பலன்களையும் மக்களுக்கு அளித்து விட்டு தனக்கு அடுத்து சிறிய வாழைக்கு வழி கொடுத்து விடும். சிவாஜி என்கிற பெரிய வாழை கமல் என்கிற சிறிய வாழை நன்கு வளர்வதைப் பார்த்து சந்தோஷப்பட்டு தன் ஆயுளை முடித்துக் கொண்டது.
ஆனால் இந்த கமல் என்கிற சிறிய வாழைக்கு அந்த வாய்ப்பே கிடையாது. அது எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் வளரும் என்கிற அளவிற்கு பெரிய வாழை அதற்கு உரமளித்துப் போயுள்ளது. கமல் என்கிற வாழை எவ்வளவு பெரியதாக ஆனாலும் அதற்கருகில் ஒரு சிறிய குருத்துக் கூட துளிரவில்லை. இன்னும் பல தலைமுறைகளுக்கு வேண்டிய பலன்களை அளிக்கக் கூடிய சக்தி இந்த வாழைக்கு இருப்பதால் இதற்கு பெரிய வாழையின் ஆசி முழுமையாக இருப்பதால், இன்னொரு வாழைக்கு நாம் காத்திருக்கவோ ஆசைப்படவோ தேவையில்லை.