-
ரவி சாரு,
படம் போடுறது எப்பிடின்னு சொல்லிக்க் குட்துகினதுக்கு தாங்க்ஸ்பா திரி ஒத்துமைய ஆரு கண்ணு திட்டினா.ஒத்த ஒதவி கேட்டுகினேன்.ஆரும் கண்டுக்கிலி யேன்னு கேட்டேன்.அதான் இப்ப நீ கண்டுக்கினியே.என்னாண்ட குத்தம் சொல்லாத.
அப்பிடியே ஆஸ்ட்டு ராசு அண்ணாத்தைக்கும் தாங்க்ஸ் சொல்லிகினன்பா
-
வாசுதேவ அண்ணாச்சி
நான் ஒருத்தன் கேட்டுகினேன்னு வந்து பதிவு போட்டுபிட்டியே.
நீ போட்ட இட்லரு உமாநாத்து இப்பதான் படிச்சு முடிச்சுகினேன்.தமிழுல வேற நாம் ரொம்ப வீக்கா.அதான் நாழி வளத்திடிச்சி.அல்லாரும் சொல்றாமாறி படா ஷோக்கா எளுதிக்கின ப்பா.நான் கூட அத்தப் பார்த்துருக்கேன் ஆனா நெனவே இல்ல.இப்ப உன்னால பாக்கனும்னு ஆச வந்திடிச்சி.
-
மொரளிசாரு இந்த மேசரு தாசன் பண்ண கூத்தப் பத்தி படா ஷோக்கா எழுதி புட்டுபுட்டு வச்சிபுட்டாரு.கெடக்குரானுவ புத்தி கெட்டப் பயலுவ.ஆரு வந்து ஆருக்கு சிவாருசு பண்றது.காமராசுக்கு படம் பாத்து பஞ்சாயத்து பண்றத்தான் சோலியா.மொரளி சாரு இத்தன ஆதாரத்தையும் வச்சதுக்கு அப்பால மொவன் இனிமே எந்தப் போட்டாவையும் கரீட்டா விசாரிக்காம போட்டுக்க கூடாது.குமுதம்காரனுக்கு அல்லாரும் மொத்தமா எழுதி போட்னம்பா.இன்னா நினச்சுகினு கிடக்குறாங்க.சிவாஜின்னா அவ்ளோ இளப்பமா
-
உத்தம புத்ரா
தப்ப தைரியமா எங்க வேண்ணாலும் போயி ஒத்த ஆளாத் தட்டி கேட்டுகினு கெடக்கிறியே மெய்யாலுமே ஒடம்பு சிலித்திகுதுபா.உன் துணிச்சலுக்கும்,தெகிரியத்துக்கும் சலாம் போட்டுகினேன் கண்ணு.
நீ பட்ட கெளப்பு ராசா.
-
*
ஸ்வாட் அனலிஸிஸ்னுல்லாம் எழுதிட்டு டபக்குன்னு ஞான ஒளிக்குப் போய்விட்டீர்..எழுதுங்க எழுதுங்க..:)
சின்ன கண்ணன் - SWOT மூலம் நம் weakness யை திருத்திக்கொண்டால் , கிடைப்பது ஞான ஒளி தானே சார் !!
அன்புடன் ரவி
:smile2::smokesmile:
-
திரி 10 & 11 யை படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும் - அருமையாக எழுதிகொண்டிருந்த நபர் காவேரி கண்ணன் - கவிதையாக NT யை பற்றி பொழிவார் - அவரும் இந்த திரிக்கு வந்தால் , இன்னும் பல மடங்குகள் இந்த திரி களை கட்டும் .
Ravi
:):smokesmile:
-
Mr Vasu Sir,
Welcome back with a bang with a nice post on Hitler Umanath. As rightly written by
you Our NT's movies after 80's are golden one. You have given a fitting reply to those
who have offended our NT through your post. Hereafter those guys will be careful
in writing on NT.
Job well done.
-
Mr Murali Sir,
Truth always triumph in the end. By publishing a false information without verifying
facts that Magazine will lose its credibility in the Press Media.
-
திரி லிங்க் கிடைக்க உதவிய திரு. சந்திரசேகர் அவர்களுக்கு நன்றி . திரியை நான் தவறவிட்ட நான்கு நாளில் 42 பக்கம் சென்று இருப்பது மிகவும் சந்தோசம். அசராத உத்தமபுத்திரன் பதிவுகள் அற்புதம். வாசு சார், முரளி சார், ராகவேந்திர சார் பதிவுகள் மகிழ்ச்சி , பம்மாலரும் வர வேண்டும். ஒரே மூச்சில் 42 பக்கம் படித்து விட்டேன் .
-
நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி!
http://www.eelamview.com/wp-content/.../11/thanks.jpg
உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை திரியிலும் அலை பேசியிலும் அளித்த கோபால் சார், வினோத் சார், அன்புச் சகோதரர் பம்மலார், தம்பி ராகுல்ராம், சின்னக் கண்ணன் சார், ரவி சார், ராகவேந்திரன் சார், (அருமையான பழைய டிசைன் நடிகர் திலகம் படத்திற்கு நன்றி) உத்தம புத்திரன் சார், ராமச்சந்திரன் சார், ராதா கிருஷ்ணன் சார், முரளி சார், கிருபா சார், சந்திர சேகரன் சார், ரவிரவி சார், கோல்ட் ஸ்டார் சதீஷ், தம்பி (ஹரீஷ்) செந்தில், சித்தூர் வாசுதேவன் சார், பார்த்தசாரதி சார், சுப்பிரமணியம் ராமஜெயம் சார், பரணி சார் மற்றும் பெயர் விட்டுப் போன அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்
மற்றும் காரணமே இன்னவென்று நான் அறிய முடியாமல் என்னைத் தவிர்த்த அன்பு ஆதிராம் சார் அவர்களுக்கும், கண்பத் சார் அவர்களுக்கும் (தங்களுக்கு மீண்டும் என்னுடைய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். முதல் வாழ்த்து ப்ரைவேட் மெசேஜில்)
என் இருகரம் கூப்பிய என் நெஞ்சார்ந்த நன்றிகளை மனதார, உளமார தெரிவித்துக் கொள்கிறேன்.
விமானத்தில் பறக்கப் போகுமுன் எனக்கு முன்கூட்டியே பிறந்த நாள் வாழ்த்தளித்த என் உயிர் நண்பர் கோபால் அவர்களுக்கு என் உயிரான நன்றி.
(கோ, போன தடவை நீ என்னுடன் வந்து தங்கி என் பிறந்த நாளை சிறப்பித்தே சென்றாய். அதை என்னால் மறக்கவே முடிய வில்லை, அதனால் அன்று கொஞ்சம் மூட் அப்செட்தான். ஜெமினி திரியில் உன்னுடைய 'நான் அவனில்லை' படத்தின் யாருமே ஈடு செய்ய முடியாத, தர இயலாத ஆய்வைக் கண்டு வாயடைத்துப் போய் நிற்கிறேன். உன்னால் மட்டுமே இந்த அற்புதங்களை அளிக்க இயலும். என்ன பதிவய்யா அது! அற்புதம் நிகழ்த்தியிருக்கிறாய். உன் பதிவில் உன்னை விட எனக்குத்தான் பெருமை. வாழ்த்துக்கள். கோல்ட் பிரேம் போட்டு மாட்ட வேண்டிய பதிவு. நாம் இருவரும் அந்தப் படத்தை ஒன்றாகப் பார்க்க வேண்டுமே. நிறைவேறுமா எண்ணம் நிறைவேறுமா?)
இதே போல் என்னுடைய 4000-ஆவது பதிவான 'ஹிட்லர் உமாநாத்' பதிவை மனதாரப் பாராட்டிய அனைவருக்கும் என் இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக நான் பதிவிட்டே ஆக வேண்டும் என்று அலைபேசி மூலம் எனக்கு அன்பு ஆணைகள் பிறப்பித்த கோபால் சார், ராகவேந்திரன் சார், மிக மிக முக்கியமாக ரவி சார், சித்தூர் வாசுதேவன் சார், உத்தம புத்திரன் சார்
இவர்களுக்கு மீண்டும் மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது இடைவிடாத அலுவல்களுக்கு மத்தியிலும் எனக்கு போன் செய்து ஹிட்லரைப் பற்றி ஆர்வமுடன் விசாரித்து பிறந்த நாள் வாழ்த்ததும் அளித்த நம்
அன்பு முரளி சாருக்கு
என்னுடைய விசேஷமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். (தங்களுடைய 'உண்மை உணரும் நேரம்' பதிவு அனைவருக்கும் நடந்த உண்மையை அற்புதமாக விளக்கியிருக்கிறது. கள்ளம், கபடம், சூது, வாது, பொறாமை, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களின் நய வஞ்சகம், வஞ்சப் புகழ்ச்சி அனைத்திற்கும் சரியான சவுக்கு அடி கொடுத்திருக்கிறது தங்கள் பதிவு. குமுதம் போன்ற மிகப் பெரிய பத்திரிக்கைகளுக்கு தாசன் போன்ற சில கறைகளால் களங்கம்.)
வெளிநாட்டில் இருந்தாலும் அலை பேசியின் வழியாகத் தொடர்பு கொண்டு வாழ்த்திய 'கோல்ட் ஸ்டார்' சதீஷ் அவர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.
சதீஷ் சார்,
'ஹிட்லர் உமாநாத்' பதிவிற்கு அருமையான சப்போர்ட்டாக நடிகர் திலகத்தின் ஹிட்லர் ஸ்டில்களை பதிவு செய்தது பதிவை அற்புதமாக மெருகேற்றியதற்கு மிக்க நன்றி.
ஒரு தடவையல்ல... மூன்று முறைகள் கை பேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்த அன்பு பம்மலார் அவர்களுக்கு என் சந்தோஷமான நன்றிகள்.