http://upload.wikimedia.org/wikipedi...henbagapoo.jpg
http://image1.frequency.com/uri/w354..._thumbnail.jpg
பாட்டுக்கள் நன்றாக இருந்தும் மொக்கை போட்ட படம்.
Printable View
http://upload.wikimedia.org/wikipedi...henbagapoo.jpg
http://image1.frequency.com/uri/w354..._thumbnail.jpg
பாட்டுக்கள் நன்றாக இருந்தும் மொக்கை போட்ட படம்.
நண்பர்களே! இவர் யாரென்று ஊகிக்க முடிகிறதா?
http://www.lankanewspapers.com/news/...2653991438.jpg
கே எஸ் ராஜாவை கார்த்திக் சார் நினவு செய்ததற்கு நன்றி
கே.எஸ் ராஜாவின் குரலை கேட்க வைத்ததற்கு வாசு சார் க்கு நன்றி
சவால் படத்தில் கமல் கூட இதை ட்ரை செய்து இருப்பார்
p p ராஜா என்பர் (pp for பிக் பாக்கெட் )
டியர் வாசு சார்,
தேவதை படம் சிவகுமார், லாவண்யா ஜோடியாக நடித்த படம். ஜெயந்திதான் அக்கா. நெசவுத்தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுவார். (தறி நெய்யும்போதுதான் 'கலீர் கலீர்' பாட்டு).
ஜெயந்தி மீது தவறான பழிசுமத்தி, அந்த ஊர் வழக்கப்படி வீட்டு வாசலில் சிவப்பு விளக்கைக் கட்டி விடுவார்கள். வெளியிருந்து திரும்பும் சிவகுமார் தன் வீட்டு வாசலில் கட்டப்பட்ட சிவப்பு விளக்கை உடைத்தெறிந்து தன் அக்காவுக்காக ஊர் மக்களிடம் ஆக்ரோஷமாக வாதாடுவார்.
ஜெயந்தியை ஒருவன் கற்பழிக்கும் (?????) காட்சி கூட உண்டு. ஒரு மாதிரி சவசவ கதை. சென்னை அலங்கார் தியேட்டரில் காலைக்காட்சி பார்த்து தலைவலி வந்தது.
மாந்தளிரே மயக்கமென்ன எனக்கு மிகவும் கவர்ந்த பாடல்..ரொம்ப்ப அழகா இருக்கும் அதுவு்ம் இரவில் கேட்டால்...படம் வந்து பலவருடங்களுக்கப்புறம் வீடியோ பார்த்ததில் வாழ்க்கையே வெறுத்து விட்டேன்.. விஷீவல் ரொம்ப்ப்ப சுமா...
கரையெல்லாம் செண்பகப்பூ விகடனில் தொடராக வந்த போது..எங்கள் வீட்டிலிருந்து இரட்டைத் தெருவிலிருந்த என் சகோதரி வீட்டிற்குச் சென்று அங்கு அவரது மாமியார் எடுத்து வைத்திருக்கும் விகடனைப் படித்து வருவேன்..அந்தத் தொடர் தான் படிக்க முதலில் கைகள் செல்லும்..
படம் எடுக்கிறார்கள என்றதும் ஆசை ஆசையாய் இருந்தது..ரிலீசானதும் (மதுரை கல்பனா தியேட்டர்) போய்ப் பார்த்தால் ஏமாற்றமே.. ஏன்.. படத்தின் கதைக்குப் பொருத்தமாய் ஸ்ரீப்ரியா பிரதாப் சுமலதா மனோரமா கிராமம் என எல்லாம் இருந்தது..பட் கதையோட்டத்தில் ஊடாடிய கல்யாண ராமன்(ப்ரதாப்) வெள்ளி(ஸ்ரீப்ரியா) காதலை அப்படியே திரைப்படத்தில் எடுத்து விட்டார்கள். அது தான் ஜீவனே..அதை எடுத்ததால் தான் படம் மொக்கை என ஆகி விட்டது..
இதுவும் அலங்காரில் பார்த்த படம்தான்...., 'இனிக்கும் இளமை' . இயக்குனர் (மறைந்த) எம்.ஏ.காஜாவின் முதல் படம்.
சுதாகர், ராதிகா ஜோடி. ஸ்ரீகாந்துக்கு அருமையான பாத்திரம். பெண்களை விரட்டி, விரட்டி கற்பழித்ததற்கு மாறாக தன்னை விடாமல் துரத்தும் மீராவை விட்டு விலகி விலகி ஓடும் ரோல்.
சுதாகர் ராதிகா வழக்கம்போல மொக்கை.
சங்கர் கணேஷ் இசையில் "இனிக்கும் இளமை என்னிடம் இருக்கு" என்ற பாடல் நினைவில் உள்ளது. படம் சராசரிக்கும் கீழே.
கவிதா கவிதா என்றொரு நடிகை ப்ளஸ் முத்துராமன் நடித்த காற்றினிலே வரும் கீதம்..பாடல்லாம் ரொம்ப ரொம்ப அழகு..
கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்
ஒரு வான வில் போலே என் வாழ்விலே வந்தாய்
சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்
க.எ. ந ஆரம்பித்து அந்த நடிகையைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே என சிலர் வருத்தப்படுவார்கள் எனில்..அவரும் ஒரு டைப் அழகு தான்..இளமைக் காலத்தில் துள்ளிக் குதித்து துறு துறு கண்களுடன் அங்கும் இங்கும் அலைபாய்ந்து ஓடிடும் சின்னஞ்சிறு கன்றுக் குட்டியைப் போல - அவருடைய அழகும் இளமையில் இருந்தது :)
//இதுவும் அலங்காரில் பார்த்த படம்தான்...., 'இனிக்கும் இளமை' . இயக்குனர் (மறைந்த) எம்.ஏ.காஜாவின் முதல் படம்//
ரொம்பப் பொறுமை தான் உங்களுக்கு கார்த்திக் சார்.. சுதாகரின் படமென்றாலே காததூரம் ஓடிவிடுவேன்/வோம்..அவரது காலகட்டத்தில் இன்னொரு நபர் விஜயன்..
இவர் நடித்திருக்கிறார் என்றே இந்த ஆயிரம் மலர்களே மலருங்கள் பாடல் இடம்பெற்ற படம்- மறந்து போச் - ரொம்பப் பிடித்திருந்தும் பார்க்காமலேயே விட்டுவிட்டேன்..( ஓ ஞாபக்ம் வந்துடுச்சு நிறம் மாறாத பூக்கள்)..அவரை ஹீரோவாகப் போட்டுப் படம் எடுத்ததால் தான் முத்துராமனுக்கு ஏக நஷ்டம் என க் கேள்வி (பணம் பெண் பாசம்)