http://s4.postimg.org/3xptcc7il/fssa.jpg
Printable View
மக்கள் திலகத்தின் பல அரிய நிழற் படங்களை பதிவுகள் செய்த இனிய நண்பர் திரு செல்வகுமார் அவர்களுக்கு
நன்றி .
இனிய நண்பர் திரு ரவிசந்திரன் சார் விரைவில் கோவை நகருக்கு வர உள்ள மக்கள் திலகத்தின் படங்கள் -பட்டியல் மிகவும் அருமை .
மக்கள் திலகத்தின் பாடல் வரிகள் எத்தனை சத்தியமான வார்த்தைகள் . அவர் வழி நடப்பவர்கள் இந்த பாடல்களை
நினைவில் வைத்து அதன் படி நடந்திருந்தால் .....
தனி ஒரு மனிதன் திருந்தி விட்டால்
சிறைச்சாலைகள் தேவை இல்லை
இருப்பதை எல்லாம் பொதுவில் வைத்ததாலே
எடுப்பவர் யாரும் இல்லை
பிறவியில் எவனும் பிழைகளை சுமாந்தே
வாழ்க்கையை தொடாங்கவில்லை - பின்பு
அவனிடம் வளர்ந்த குறைகளை சொன்னால்
வார்த்தையில் அடங்கவில்லை...
வார்த்தையில் அடங்கவில்லை...
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
பழகும் போதும் தெரிவதில்லை
பாழாய் போன இந்த பூமியிலே
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
திருடராய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஓழிக்க முடியாது
சிரிப்பவரெல்லாம் மகிழ்ச்சியினாலே
சிரிப்பதும் கிடையாது
பிறரை கெடுப்பவரெல்லாம் நிரந்தரமாக
வாழ்வதும் கிடையாது
சொல்லும் செயலும் ஒன்றாய் இருந்தால்
உலகம் பழிக்காது
பெரும் தொல்லையில் சிரிக்கும்
தைரியம் இருந்தால்
துன்பங்கள் நெருங்காது
சிலர் ஆசைக்கும் தேவைக்கும்
வாழ்விற்கும் வசதிக்கும்
ஊரார் கால்பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால்பிடிப்பார்
முன்பு யேசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
இந்த மானிடர் திருந்திட பிறந்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
தென்பாங்கு தென்றல் பண்பாடும் நாட்டில்
தீராத புயல் வந்ததேனோ
தென்பாங்கு தென்றல் பண்பாடும்
நாட்டில் தீராத புயல் வந்ததேனோ
நீர் வாழும் மீன்கள் நிலம் வீழல் போலே
நெஞ்சங்கள் துடித்திடலாமோ
வா வா என் தோழா
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
நீதியின் தீபத்தை ஏற்றிய கைகளின்
லட்சிய பயணமிது
இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்
தாங்கிடும் இதயமிது
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய் நாளெல்லாம் காக்கலாம்
பிற மொழிகளில் மக்கள் திலகத்தின் படங்கள் . இதுவரை பார்த்தறியாத விளம்பரங்கள். பொக்கிஷங்கள். நன்றி திரு வினோத் சார். முடிந்தால் அவற்றின் வீடியோக்களை பதிவிடவும்.
பல்வேறு தருணங்களில் எடுக்கப்பட்ட அரிய மக்கள் திலகத்தின் புகைப்படங்களை அவற்றுக்கான விளக்கங்களுடன் பதிவிட்ட பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
1967 ஜனவரி 12-ந்தேதி பிற்பகல் சென்னை நகரம் பதட்டத்தில் அதிர்ந்தது. எம்.ஜி.ஆர் -எம்.ஆர்.ராதா குண்டடி பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தவாறு
அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். பல இடங்களில் பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன... ஆட்டோக்களும் ஆங்காங்கே
நிறுத்தம். ராயப்பேட்டை மருத்துவ மனையிலிருந்து எம்.ஜி.ஆரை பொது மருத்துவ மனைக்கு மாற்றினார்கள்.
டாக்டர்களே உள்ளே நுழைய திணறினார்கள். நாடெங்கிலுமிருந்து தொண்டர்கள், வி.ஐ.பிக்கள் படைபடையாக ஆஸ்பத்திரியில் முற்றுகை. யாரும் தலைவரைப் பார்க்க அனுமதி இல்லை. விசிட்டர் புத்தகம் கையெழுத்துக்களால் நிரம்பி வழிந்தது.
ஐந்தாவது முறையாக ஆஸ்பத்திரிக்கு படையெடுத்து எம்.ஜி. ஆர் அவர்களை நெருங்கினேன்.
உயிர் போகும் சோதனையை தாண்டிய மனிதர்- இரண்டு நாள் 'காவல்காரன்'-
படப்பிடிப்பில் மட்டுமே என்னைப் பார்த்தவர்- என் முகத்தையே தாமதமாக அடையாளம் கண்டவர் - ஊருக்குப் போனேன் என்று சொன்னதும், விழிகளை விரித்து -'அம்மா சௌக்கியமா'- என்று பாசத்துடன் கேட்டபோது என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை .
55 வயதில் விபத்தில் கை ஒடிந்த நிலையில் கூட - 'மகன் படிப்பு கெட்டுப்போகும், யாரும்
அவனுக்கு தந்தி அடிக்கக் கூடாது'- என்று நண்பர்களுக்கு 6 மாதம் கடுமையான
உத்தரவு போட்டவர் - 30 வயதிலேயே 3 பிள்ளைகளுடன் கணவரையும் பறி கொடுத்தவர் - அம்மா, என்று படப்பிடிப்பின் போது நான் சொன்னது- எம். ஜி.ஆர் மனதில் ஆழமாகப்
பதிந்து விட்டது. அதனால் தான் இத்தனை களேபரங்கள் நடுவிலும் என தாயை நினைவில் வைத்து விசாரித்தார்.
இனிய நண்பர் திரு ஜெய்சங்கர் சார்
உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி . தெலுங்கு பட டப்பிங் வீடியோ -இணைய தளத்தில் கிடைக்கவில்லை .
மக்கள் திலகம் நடித்த 67 படங்களின் பேப்பர் விளம்பரம் மற்றும் சில படங்களின் தெலுங்கு பாட்டு புத்தகம் இடம் பெற்று உள்ளது .