-
நீயில்லையெனில் இன்னொருவன்.
பெற்றோருக்கு நீதான் வேண்டுமென்றால், அசல் வீட்டு
உற்றாரின் வெற்றியை பெருமூச்சுடன் வெறுப்பார்களா.
ஆசிரியனுக்கோ இவனுடன் அவதி படுவதற்கு பதிலியாக
விசித்திர திறன் பெற்ற முன்னணி மாணவனுக்கு முனகுவானா.
நண்பனுக்கோ அருகாமை இல்லில் பள்ளியில் பேருந்தில்
கண்ணுக்கு கருத்துக்கு இசைவாய் ஓராத்மா இல்லா குறை .
பார்த்த பெண்ணுக்கோ செவ்வாய் தோஷம் இல்லையெனில்
நேர்த்தி வரனொன்று வரமாக சிலிக்கன் பள்ளத்தாக்கில் இன்பமாய்.
உன்னால் மட்டுமே முடியும் தம்பி உண்மையில்லா உன் மன பேதைமை
தன்னால் மேசைக்கு வந்த ஊதா வர்ண காகிதத்தில் கருப்பு காட்டிய விந்தை.
பிள்ளைகளுக்கு அன்னையை புணர்ந்தவனை அணைத்து வாழ்ந்தாலும்
உள்ளே முதல் ஐந்நூறு போர்ப்ஸ் நாயகன் அணைந்தவனானால் மெர்சிடிஸ் கனவு.
மருத்துவ மனைகளிலோ அமெரிக்க கூட்டத்தின் நடுவே தொல்லையாக
வெறுத்து அரசுக்கு பணிந்து உன்னுடலையும் நொந்து தீண்டும் செவிலியர்
அகந்தையில் சேர்க்க மறந்தது தெளிவு நீயில்லைஎனில் உன்னிலும் சிறப்பானவன்
காகங்கள் போல சுற்றும் மக்கள் உடலை கொத்தும் காகத்தை ஓட்டாமல் .
சுடுமோ இடுமோ என பிறவி தேர்வு இறுதியானதும் மக்கள் மகிழ்வர்.சுற்றோர்
அடுத்து ஊர் புகுவர் உனக்கு பிரதியாக இளமை சக்தியுடன் புத்தெழுச்சி
உலகத்தில் எங்கே ஒட்டினாய் எங்கு சிறந்தாய் எவர் வாழ்வை உய்வினாய்?
கலகத்தில் உழன்று அலைவுகளை கூட விடாத சுவடற்ற மறைவு.
-
மறைவு எழுப்பித் தடுக்க
திரைச்சீலை மரக்கதவு
முள்வேலி மதில்சுவர்
சாக்குப்படுதா போர்வை
மற்றும் பராமுக பாவனை
போதுமான எல்லைக்கோடு
-
எல்லைக்கோடு இருந்தும் மதிக்கவில்லை எதிரி
தொல்லைததந்தார் ஒதுங்கி நின்றோம் பதறி
பல்லையுடைத்தால்தான் துன்பம் உணர்வர் கதறி
வல்லை நம்எல்லையென அவர் போகவேண்டும் சிதறி
-
சிதறித்தான் போனோம் பல முறை .
கதறி கதறி கண்ணீர் வற்றி சிதறுவதில் கண்ணீர் மிச்சம்.
போதனைகள் கேட்டே பூதவுடல் வளர்த்தோம்.
வேதனை சுமந்தோம். சாதனை அரக்கருக்கு மட்டுமே.
உயிர்களிடத்து அன்பு காட்டும் பாரதியை மிதித்த பிள்ளையார்
உயிர்வாங்கி உடல் வளர்த்த வீரப்பனிடம் நயந்து பயந்தான்
வீரக்கலை பயின்றவர்கள் கொள்ளையடித்து கற்பழித்து
கோரக்கலையில் தேற அகிம்சை பயின்ற அறநெறி மாந்தர்
கேளாக் கலையில் தேர்ந்து அன்னாருக்கு தத்தம் பொன் பொருள்
கேளிர் கெட்ட பின் நீதி மன்றம் உள்ளிட்ட யாரையும் கேளீர்
அன்புநெறி ஆற்றும் என சேர்த்த சுற்றங்கள் வன்வெறியில்
பண்புநெறி துறந்த பாதகரையும் சொர்க்கம் சேர்க்கும் மாண்பு
சுற்றியும் நச்சு கூண்டு உண்பது நச்சு பொய்யுணவு சுவாசமோ
வற்றி போன பிரணவாயு புதுமைகளோ உருமாறும் விஷ நுண்ணியுர்கள்
பனிமாறி கடலாகி கரைதேடும் கல்கியாகும் நாளே அழித்து தழைக்கும்
பணியாற்றும் ஒரே தேவனை ஒன்றே குலமாய் சிதறாமல் தொழுவோம்.
-
தொழுவோம் அழகை
குழந்தையின் சிரிப்பை
புல்லிடை பொடிப்பூவை
வெள்ளந்தியான மாந்தரை
மானுட அடையாளத்தை
அச்சாணி முறியவில்லை
-
அச்சாணிகள் முறியவில்லை பொருட்காட்சி சாலைகளில்.
இச்சைமிகு வாகனங்கள் புகைவிட்டு ஏந்தி செல்லும்
நச்சை இழுத்து வாழும் வண்டி மாட்டை உண்போர்
பிச்சை புகினும் கற்க அரசு பள்ளிகள் இருந்தும்
கொச்சை கொள்ளை கூடங்களாய் ஆங்கில பள்ளிகள்
சிச்சை கற்க அடகு கடையில் அடகாக அப்பனன்னை
கற்றபின் நிற்க அதற்குத்தக கொள்ளையர்களாய் தன்னை
விற்று சிற்றுந்தோ மகிழுந்தோ வாங்கி மகிழ் புகை விட்டு
சுற்றம் அனைத்தையும் முதியோர் விடுதிகளில் அட்டு
கொற்றம் காண கடல் கடக்கும் வீரதீர சோழர்கள்
குடிக்க மட்டும் வோட்கா, காண மட்டும் பாரிசு
குடிகாண தேடுவதோ சுத்த கற்பில் கடாமுடா பட்டி
மடிகணினியில் இணைதேடி ஸ்கய்ப்பில் காதல் கண்டு
முடிவெடுத்து முடியுமுன் மண்டபங்கள் கடிதாகி
இல்லாளை முதல் வருடம் முழுதும் புணர்ந்து பேர்
சொல்ல ஒரே வாரிசு பெற்று ,ஆயுள்வரை மூடியிட்ட புணர்ச்சி
கள்ள உறவு கொள்ளவும் மூடியிட்டே மேகம் தவிர்த்த மோகம்
உள்ள அனைத்திலும் கொள்ள ரப்பரும் ,பிளாஸ்டிக்கும்
தோலோடு தோலுரசி சுகம் காணா பிறப்புறுப்பு ரப்பருடன்
காலோடு தலை அனைத்துமே பிளாஸ்டிக் உறவுடன்
நாலோடு ஐந்தாக சுயமற்ற வாரிசின் வளர்ப்பு பிறந்தவுடன்
வாளோடு முற்பிறந்த மூத்த குடியின் வீரம் கணினி விளையாட்டில்
சுழற்சி செய்து இயற்கையை காக்காமல் சுழர்ச்சியால்
அழற்சியில் மானுடம் கொய்யும் நவீன செயற்கையே
விழலுக்கு இறைத்த நீராக அனைவரின் வாழ்வும்
நிழலுக்கும் ஒளியின்றி நிழல் வாழ்வு ,செல்வர்கள் ஐநூருக்காய் .
-
ஐநூறுக்காய்
ஆயிரத்துக்காய்
தக்க மண்டபம்
மொய்யெழுத கூட்டம்
அளவில்லா ஆடம்பரம்
ஏனிந்த விளம்பரம்
பட்டினி சாவுலகில்
பந்தியிலுணவு பாழ்
-
பாழ் வெளியில் தேவருடன்
பார்வதி சிவனார் பார்த்தபடி :
பீஷ்மர் பாண்டவருக்கு படுத்தபடி
பார் உய்ய வழி பகர்ந்தபடி:
பரந்தாமன் திருநாமம் ஆயிரம்
பாடி அனுதினமும் சிந்திக்க
அமுதம் போல் அனந்தன் பெயர்
அருளிக் கொண்டிருந்த நேரமது !
https://encrypted-tbn3.gstatic.com/i...ku8P020wYACHRQ
/தொடரும் /:smile2:
-
நேரமது கேட்க சரியாய் படவில்லை
கழுத்துக்கு எட்டு காரட் வைர அட்டிகை
சாண் அகல சரிகை பார்டர் பட்டுச்சேலை
அவசரமாய் வெளியே கிளம்பும் காலை
காத்திரு வரும் மயக்கம் தரும் மாலை
கச்சிதமாய் காய் நகர்த்துவதவள் கலை
-
கலைவாணியும் பிரமனும் அருணனும் வருணனும்
கண்ணாயிரம் கொண்ட இந்திரனும் சந்திரனும்
கந்தர்வரும் தேவரும் கிங்கரரும் ஒன்றாய் நின்று
கண்கொள்ளா காட்சிதனை காணலாயிற்றே !
கருமுகில் வண்ணன் மாதவன் கோவிந்தன்
கேசவன் ஸ்ரீதராவென பிதாமகர் பாடலாயிற்றே!
கண்ணனும் சத்யபாமா ருக்மணியுடன் அங்கே
காவியமாய் பீஷ்மன் உரை கேட்கலாயிற்றே !
(கிங்கரன் - கைங்கரியம் செய்பவன். eg : யம கிங்கரன்)
-
கேட்க லாயிற்றே கண்ணனவன் குழலினிமை
…தெள்ளத் தெளிவாக தேனமுதாய்க் காதுகளில்
பார்க்க லாயிற்றே பரபரக்கும் விழிமலர்கள்
…பார்த்தன் திருவுருவம் வரும்திசையை நோக்கித்தான்
வேட்கை கொண்டவுளம் விரைவாக அங்குமிங்கும்
…வெட்கம் தனைவிட்டே அவனணைப்பை நாடித்தான்
வேர்த்து அலைபாயத் தவித்துநிற்க லாயிற்றே..
.மேவி அவளிடமே கண்ணனெப்போ வருவானோ
-
கண்ணனெப்போ வருவானோ
கவலையெல்லாம் தீர்ப்பானோ
அண்ணனையொத்து இருப்பானோ
அறிவுரைகளாய் தருவானோ
எண்ணங்களில் நிறைந்தானோ
ஏற்றங்கள் கொடுப்பானோ
வண்ணங்களாய் வார்ப்பானோ
வாழ்க்கையையே மாற்றுவானோ
திண்ணமாய் கும்பிடுவோர்
திருமலைநாதனை சேவிக்கிறார்
-
சேவிக்கிறார் பலர் பணநாதனை
உயர் பதவியில் இருப்பவனை
அடியாள் படை பலமுள்ளவனை
பவனி வரும் உற்சவ சாமியை
கொள்கையில்லாதது கொள்கை
அனுபவிக்க துடிப்பது என்னத்தை
-
என்னத்தை சொன்னார் கங்கை மைந்தன்
எப்படி அறுப்பது சம்சார பந்தன்
எப்படி பெறுவது பிறப்பறு முக்தி -என
பக்தியுடன் கேட்ட பாண்டு மகனுக்கு
பாசமாய் நேசமாய் பதில் சொன்னார்
பிறப்பு பின்னர் இறப்பு பின் தாயின் கருவில்
மீண்டும் உயிர்ப்பு மீளா துக்கம் மேதினியில்
மீள வேண்டில் மேக வண்ணன் புகழ் பாடு
பாரில் நாராயணன் நாமம் நீக்கும் பந்தம்
பாடு நாளெல்லாம் தேடு அவனடி நாடு !
//.. தொடரும் //
-
அவனடி நாடு
சற்றே நீளம் பருமன் ,
வாய்க்குள் கமறல் வரும்
ஆனாலும் புணர்வில் இன்ப வேதனை
அவ்வப்போது பிட்டம் புணர்வது
மரணாவஸ்தை புதுமை அருவருப்பு.
ஆனால் குமாஸ்தாவாக மாமிச பிண்டம்
அலுவலகம் போகும் தேவைக்கு குறைவாக
பொருள் கொடுக்கும்
என்னவோ வெட்டி முறித்தது போல
கைகால் பிடிக்க சொல்லி வாடி போடி என்னும்.
சாதி திமிர் வேறு சம்போகமோ அம்மா
அனுமதித்தால் மாதமிருமுறை இரு வினாடி
பிட்டம் தூக்கி அபான வாயுவால்
அவ்வப்போது ரசாயன போர் வேறு
குடும்பத்துக்கேற்ற பெண்ணாக மனையில் நின்று
புதிய ஆண் நண்பனுடன் நிஜ வாழ்வு.
இருபிறப்பு இதமானதே
-
இதமானதே இனிதாயினி இகத்தில்சுகம் பெறவே
பதமானவோர் துணையென்றுதான் பகிர்ந்தேனுன துளத்தை
மிதமேயென அவனோயிலை எனிலோயினி மகளே
சடமாகவே இருக்காமலே தயங்காமலே விடுவாய்..
சொல்வதற்கும் எழுதுதற்கும் வார்த்தை வேண்டும்
…சோகத்தில் எழுகின்ற குரல்தான் ஆனால்
எள்ளிடுவார் உன்விஷயம் பார்க்கும் மக்கள்
..ஏனென்று கேட்கிறாயா சரித்தான் போடி
துள்ளுகின்ற இளமையதில் வேகத் தட்டாய்
…துடிப்படக்கி நல்வழிதான் செய்யும் மாண்பு
இல்லறத்தில் இருக்கிறது மகளே ஆனால்
..ஏட்டினிலே சொலும்போது பொறுமை கொள்வாய்..
..
விவரித்தாய் விவஸ்தைகளும் ஏதும் இன்றி
…விலாவரியாய் இங்குவந்து புலம்ப லுற்றாய்
புவனத்தில் மாக்களெல்லாம் மிருகம் போலே
..பிட்டுபிட்டு வைத்ததாக உந்தன் எண்ணம்
துவண்டுவிழும் சருகெல்லாம் மக்கிப் பின்னர்
….சிலநாளில் துளிர்த்தங்கே மரமாய் ஆகும்
சுற்றிசுற்றி வருவதுதான் பிறப்பும் இறப்பும்
…சூட்சுமத்தைப் புரிந்துகொண்டு நடப்பாய் மகளே
-
மகளே கொள்வாய் மிக கவனம்
வாக்கில் வேணும் நல்ல நாகரிகம்
காய் தவிர்த்து கனி போற்றுவாய்
அறியப்பட்ட இடக்கரடக்கல் பல
மூடியோ மூடாமலோ நன்றல்ல
தவிர் சபையோர்க்கு முகச்சுளிப்பு
-
முகஞ்சுளிப்புக் கொள்ளுகின்ற குழந்தை அன்று
…மூச்சுமுட்ட மருந்தினையே குடிக்கும் மேலும்
அகம்மலரும் சுரமதுவும் செல்ல அங்கே
…அழகுடனே அன்னையிடம் சிரிக்கும் பார்க்கும்
உடலினிலே கொண்டநோயும் மருந்தில் போகும்
…உளத்தினிலே கொண்டசுரம் என்று போகும்
படபடத்துப் பறக்கின்ற காலந்தன்னில்
…தானாகக் கரைந்துவிடும் நினைப்போம் நன்று..
-
நன்று நடப்பது தேவதை கதைகளில்தான்
அதில் மட்டும் மணம்புரிவார்கள் பின்னர்
மகிழ்வாய் வாழ்வார்கள் ஆயுள் முழுதும்
அலுத்துப்போகாதோ திகட்டாதோ எனவே
ஆண்டவன் கொடுக்கிறான் துன்பம் அடிக்கடி
ஒரொரு அடி நகர்கையிலுமோரடி தருகிறான்
-
ஓரடி நகர்கையில் மேலுமோரடி வைப்பவன்
சீரடி கொண்டவனல்ல சிந்தையில் தேர்ந்தவன்
நினைப்போம் நன்று செய்வோம் இன்று
வினைகளுக்கு வேலைவைப்போம் நல் சேர்த்து
வேறு என்ன சொல்ல செய்ய உலகம் வைத்தது
பேருசொல்ல சிற்பம் செய்வோம் என்றால் டாவின்சி
கவிதை வரைவோம் என்றால் கம்பன் பாரதி
கவிமனத்தை கரைக்கும் நாயகன் என்றால்
நடிகர்திலகம் கதை செய்வோம் என்றால் அசோகமித்திரன்
துடிப்பாக புதுமை காண்போம் என்றால் நியூட்டன்
டார்வின் எடிசன் ப்ராஇட் ஐன்ஸ்டீன் என்று வரிசை
தேர்வின் போது இவர்கள் கண்டதை வெளிக்கொணரும்
மூன்றாம்தர குடிமகனாக நாமெல்லாம் எதை காண
இன்று எதை செய்ய எதை எழுத எதை நடிக்க செய்ததை
செய்யவும் வேலையின்றி கூகல் அனைத்தும் மடியில்
ஐயகோ காதல் செய்வீர் என்றால் தற்குறிப்பு அனுப்பு
சம்பளம் பாப்போம்,கோத்திரம் நிறம் உயரம் கண்டே
சம பலன் காண்போம் பெண்களோ குறைவு தேவைநிறைய
என்னத்தை செய்ய செய்ததை செய்ய வேண்டும் அலுப்பின்றி
சொன்னதை சொல்ல வேண்டும் சுயமின்றி மிச்சம் என்ன
அன்னை தெரசா தொண்டுக்கு எக்காலமும் தேவையுண்டு
முன்னை புதுமைக்கும் புதுமையாய் பின்னை பழமைக்கும்
பழமையாய் அலுப்பு சலிப்பே இன்றி ஆறுதல் அறச் சுற்றம்
கிழமை தோறும் காத்திருப்போம் அழிவு நோக்கி ஆர்வமாக
எல்லாமே அழியட்டும் மீண்டும் தழைக்கட்டும் இலைகட்டி
எல்லைமீறுவோம் ஏவாளுடன் ஆப்பிள் விழுவதை ஆய்வோம்
-
ஆய்வோம் அவன் ஆற்றல் அவன் ஏற்றம்
அறிவோம் அவன் அருமை அவன் பெருமை
இதமானது எது இறைவன் யார் ஆதாரமெது
அச்சுதன் யார் பக்தவத்சலன் யார் -தேடினார்
தேடி தெளிந்தார் தெளிந்தது பகன்றார்
நாடினார் நாடி கண்டுகொண்டார் பீஷ்மர்
நாராயணா வென்னும் நாமம் - நவின்றார்
ஆயிரம் திருநாமம் விஷ்ணு சஹஸ்ரநாமம்
தருகிறான் விஷ்ணு தயக்கமின்றி கேள்
தருமம் பொருள் வம்சம் செழிக்கும்
துதிப்பவன் இருவினை இடரும் தீரும்
தூய்மையுடன் ஆயிரம் நாமம் சொன்னால்
நெறி சொல்லி நின்றாரில்லை பேரறிவு பீஷ்மர்
பெருமாள் பேர்பாட ஆயிரம் வைஷ்ணவ
அருந்தெய்வ திருநாமம் அடுக்கடுக்காய்
அருளினார் அழகாய் அம்பு படுக்கையில்
அஞ்சன வண்ணன் அமலன் விமலன் பேரோடு
இருடிகேசன் கோவிந்தன் பத்மநாபன் போக்தன்
அமரப்ரபு மதுசூதன் கேசவன் ஸ்ரீமான் என
அனந்த கல்யாண குணமாய் ஆயிரம் பேர்
அத்துடன் அநேகரூபன் அஜாதன் வனமாலி
ஆதித்யன் தாமோதரன் திரி விக்கிரமன்
அனுகூலா அச்சலா என சில நாமம் செதுக்கி
செவ்விய சஹஸ்ரனாம மாலை சேர்த்தார்
மாதவன் பேர் பாடவே மானுடம் உய்யவே
மண்ணு புகழ் மஹாவிஷ்ணு திருவடி சேரவே
https://encrypted-tbn1.gstatic.com/i...3YNJIl5_fhSqKA
// தொடரும் ... இது விஷ்ணு பற்றி அல்ல ராமனின் புகழ் சொல்ல :: எனது கிறுக்கல்கள் //
-
சேரவே சேராது இருப்புப்பாதையின் தண்டவாளங்கள்
தனித் தனிக்குணம் கொண்ட ஆண் பெண் மனங்கள்
பங்கமின்றி தொடரும் நம் நீண்ட நெடிய பயணங்கள்
பாங்காய் உள்வாங்க வேண்டிய பெரிய உண்மைகள்
-
உண்மைகள்
பொய் என்ற கொழு கொழு அண்ணனின் சோனித் தம்பி
வாய் நிறைய புகழ்ந்து அடிக்கடி அழைப்பர் போற்றுவர்
அகப்பை நிறைய அன்னம் என்னவோ அண்ணனுக்கே
ஜகத்தை அழிக்கும் பாரதி குரலுக்காய் சிறிதே அன்னம்
எல்லா தொற்றும் தொ ற்றி உயிர் விடும் சாத்தியங்கள்
கல்லாரும் கற்றோரும் கச்சேரியில் உரைக்க தேவை
மருத்துவரை கூப்பிட்டு பிழைக்க வைத்து குறை சோறு
கருத்து சொல்ல கூப்பிடுவது தம்பியை மறைபொருளாய்
ஒறுத்து புறம் தள்ளி போற்றுவது அண்ணனை அக்கா லட்சுமி
விரும்பி சேருமிடமோ அண்ணன்தான் தங்கை தரித்திரத்தை
கருமி நெஞ்சுடன் குற்றுயிரான தம்பியுடன் குலவ சொல்வாள்
தம்பியை போற்றி புகழ்ந்து என்ன பயன் வாழவிடாமல்
கம்பிக்குள் போக விடாமல் கண்டோரையும் காப்பது அண்ணனே
அண்ணா அண்ணா என தம்பிகள் அழைப்பது புரிந்திருக்குமே
அண்ணனின் புகழுக்கு அழிவேயில்லை காணீர் ஜகத்தோரே
பி.கு- சி.க -கச்சேரி என்றால் கோர்ட்.
-
ஜகத்தோரே அறிவீர் சர்வம் விஷ்ணு மயம்
ஜகத்ரக்ஷகன் சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
துக்கித்தோரே துதியுங்கள் ஆயிரம் நாமம்
தூரப்போகும் துன்பமெல்லாம் இன்பம் சேரும்
அருளியே முடித்தார் பீஷ்மர் ஆயிரம் நாமம்
அன்னை பார்வதியும் அங்கேயே பரமனும்
ஆவலுடன் அனைத்தையும் கேட்ட பின்னர்
அன்னபூரணி அகிலாண்டேஸ்வரி அவளது பதி
அம்பிகாபதி அவனிடம் ஆச்சரியமாய் கேட்டதிது
என்னதிது ! ஈஸ்வரா! எவ்விதம் சாத்தியம்
எந்நாளும் சொல்வது ஆயிரம் திருநாமம்
ஏது மாந்தர்க்கு காலம் நேரம் தினம்
ஏதேனும் எளிதான உபாயம் உங்களிடம்
இருந்தால் சொல்லவேண்டும் என்னிடம்
இனிமையாக சிரித்துக் கொண்டே சொன்னான்
இறைவன் : என்னுயிர் மனோரமா - ஏனில்லை
எளிதான உபாயம் உண்டு ராம ராம என்று
நாளும் சொன்னால் ஆயிரம் நாமத்தின்
பலனும் அப்போதே கிடைக்கும் அறிவாய்
https://encrypted-tbn3.gstatic.com/i...laUHQiEpRP-f4S
" ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே !!!"
-
அறிவாய் அளவாய் உப்பு காரமிட்டு
அறுசுவை விருந்து படைத்து மகிழ
அறியாய் அழுக்கும் அவலமுமான
அகந்தையுடன் பிறந்த ஆண்மகனை
-
ஆண்மகனாய் பாராது
ஆன்மீகமாய் பார்த்திடின்
நாமம் ஏதாயினும்
நன்மைப் பயத்திடும்
நஞ்சில்லா நெஞ்சுடன்
நம்பி நினைத்திட்டால்.
-
கிறுக்கன்
-
நினைத்திட்டால் அந்த நாளை நினைத்திட்டால்
பாலாய் பொங்குது பாவை மனசு பரவசத்தில்
பிறந்த வீட்டை விட்டு புது உலகம் சென்றிட
படபடப்பாய் இமைகள் இனி துடிக்காமல் மூட
பொருட்டில்லையிங்கு சேர்த்து வைத்த எதுவும்
பறப்பேன் புதிய உலகில் இப்பூத உடலை துறந்து
-
துறந்து செல்வதற்கு நான் ஒன்றும் பற்றற்றவன் இல்லை
பறந்து மேற்பார்வை கொள்வதற்கு நான் பறவையும் இல்லை
இறந்து போனால் எதைத்தான் பார்ப்பேன் விவரமும் இல்லை
சிறந்து விளங்கிட எத்துறைதேடுவேன் வழிகாட்டி இல்லை
திறந்த புத்தகமாகிட நான் என்ன சிறப்பு கொண்டேன் வாழ்வில்!!!
-
வாழ்வில் சவாலுக்கு என்றும் பஞ்சமுண்டோ
வரிந்து கட்டி நீயும் போராடிட வேண்டாமோ
வருந்துவதால் எவ்விதமான பயனுமுண்டோ
வதனம் தான் வாடி தன் ஒளி இழக்கலாமோ
சோர்வை நீக்கி சுயபச்சாதாபம் தவிர்த்து எழுந்திடு
சொடுக்கிக் கூப்பிடு சோதனைகளை வா வாவென
வீழ்வேன் என நினைத்தாயோ என சண்டை போடு
வாழ்வது ஒரு முறை அதை செய்திடு நிறைவோடு
-
நிறைவோடு வாழ்பவன்
பிறந்த போது நிர்ணயித்த எதிர்காலம்
சிறந்த பள்ளிக்கு வித்யா மந்திர்
பள்ளிக்கு செல்ல எந்த கார் யார் ஓட்டுனர்
மெள்ள கல்வி பயில நீச்சல் கற்க ஒரு இசைக்கருவி
கூடவே டென்னிஸ் அவ்வப்போது கிரிக்கெட்
தேடவே தேவையில்லாமல் நிர்ணயித்த இணை
தந்தையின் செல்வ நண்பரின் ஒரே மகள்
எந்தையும் தாயும் மகிழ வருடம் ஒரு பிறந்தநாள்
கூடுதல் இரண்டில் ஒன்றாம் குழு முடிந்தவுடன்
தேடுதல் இன்றி நிர்ணயித்த ஐந்து லட்ச ஐ டி தனியார்
முடிந்ததும் டி.சி.எஸ் மும்பையில் முதல் வேலை
கடிமணம் அடுத்த இரண்டாம் வருடம் பிள்ளை பிறந்தான்
வித்யாமந்திர் சற்றே பெரிய கார் அடிக்கடி மாறும் ஓட்டுனர்
மத்யமர் வாழ்வில் எங்கே மாற்றம் மகிழ்ச்சி ஒன்றே நிலை
எப்போதாவது சேரியில் விளையாடி கழித்து தன் பிற்காலம்
தப்போ சரியோ தன் கையிலாக நிலையாமையில் உழலும்
வறியசிறுவனை வேடிக்கை பார்க்குங்கால் வாழ்க்கையில்
தெரியவரா நிலையாமை அறியாமை ஆச்சர்யங்கள் தான்
சுவையோ தன் வாழ்வை தானே வாழ்தல் தனித்தன்மையோ
கவைக்கு உதவா நிச்சய வாழ்வில் சில திருப்பங்களும் உண்டு
சக்கரை நோய் திடீர் பணி மாற்றம் பணி நீக்கம் திருப்பி தேடும்
அக்கரையில் அயர்ச்சி மகனின் திடீர் குடி பழக்கம் பணப்பை
பறிபோதல் சிலதொலைத்தல்கள் மறதிசார் மனமாச்சர்யங்கள்
வறியோருக்கு வக்கற்றோருக்கே வாழ்க்கை சுவாரஸ்ய சுவையோ
பிறப்பிலேயே நிர்ணயிக்க பட்ட நாடக வாழ்வு ஒரே கதை
மறக்காத மக்களின் அதே நிலை அதே நிறை அதே அதே அதே
-
அதே கண்கள்
அடையாளம் கண்டவள்
ஆச்சரியக் கூவல்
அரை நூற்றாண்டு கழித்து
கல்லூரித் தோழியின் சந்திப்பு
கனத்திருந்தன உடல்கள்தான்
காய்ந்திருந்தன மனங்களும்
கசிந்துருகிய இனிய கணங்கள்
-
கணங்கள் கூட மணியானதே
கண்ணே காத்திருக்கும் நேரத்திலே
கண்மணி நீ காதல் பேசுகையிலே
கணத்திலே போனதே கால நேரமே !
/ ** கல்யாணத்திற்கு முன் /
-
நேரம் தவறலும் தவறில்லை நேரம்
தவறல் நன்மைப் பயக்குமெனின்.
-
கிறுக்கன்
-
நன்மை பயக்குமெனின் நல்லபடி வேகநடை
..நன்றாக நடந்தாலே எடையெல்லாம் குறையுமென
எண்ணி மனத்துள்ளே நினைத்துவிட்டு நேற்றெனது
..இல்லம் முன்னாலே *வாகனங்கள் நிறுத்தத்தில்
மென்மை யெனமுதலில் பின்கொஞ்சம் கூட்டுகையில்
..மேவி வந்தார்கள் பக்கத்து நண்பர்கள்
என்ன சுகம்தானா என்றெல்லாம் இருமணியாய்
..எல்லாம் பேசிவிட்டு திரும்பிவிட்டேன் என்னசெய்ய..!
*car parking
-
என்ன செய்ய என்ன சொல்ல
ஏனடா இத்தனை சோதனை
முன்னால் சென்றால் முட்டி
பின்னால் சென்றால் உதைத்து
மாடாய் கழுதையாய் மாறி
என் விதி தாக்குகின்றபோது
வள்ளுவம் வழி செல்வேன்
ஊழை முயன்று வெல்வேன்
-
வெல்வேன் என்பதே முன்னோக்கு பயணம்
வெல்லவே வேண்டும் துணிவும் முயற்சியும்
கொள்ளவே வேண்டும் உழைப்பும் பொறுமையும்
கூடவே வேண்டும் திட்டமும் இலக்கும்
-
திட்டமும் இலக்கும் எனக்கு கொடுத்ததென்னவோ
திட்டும் அடியும் உதையும்தான் திட்டமிட்டுத்தான்
ஓரிரவில் பெண்கள் கழிப்பறைக்கு சென்று யார்
யாரிடம் உறவு என்று படம் வரைந்து பாகம் குறித்தேன்
எந்த பாவியோ அது நானாக இருக்கலாம் என்று போட்டு
வெந்த புண்ணில் வேலாய் அப்பாவிடம் தகவல் கொசுராய்
முழுநாளும் முட்டி திட்டமிட்டு எழுதிய காதல் கடிதம்
கழுதையின் வாய்க்கு போனது குப்பை தொட்டி தட்டில்
ஹோலி பண்டிகை கொண்டாட்ட வெறியில் புரபசர் மகளின்
காலி நெற்றியில் பொட்டிட திட்டமிட்டு நிறைவேற்ற
பாவியவள் சிவப்பா உயரமா தொங்கு மீசை என்று பெயர்
பாவிப்பதை தவிர அனைத்தும் குறிப்பு கொடுக்க
கல்லூரியிலா விடுதியிலா எங்கே விலக்கு என பெரிசுகள்
பொல்லாத மட்டிமன்றம் நடத்தி விடுதியிலிருந்து வெளியேற்றம்
நண்பனின் தங்கையை தனியறையில் தழுவி முத்திட முனைந்து
கண் நிறை அண்ணன் தகப்பனிடம் உதைக்க சொன்னால் வாங்கலாம்
தொட்ட தோஷத்திற்கு கட்டு அவளை என கருத்தாக திட்டமிட
விட்டகுறை தொட்ட குறையாக விலை மதிப்பில்லா முத்தமானது
கட்டியபின் ஐந்து வருடம் அனுபவிப்போம் என திட்டமிட்டு உறைபோட
சட்டென்று கிழிந்த உரை இருநூற்று சொச்சம் நாட்களில் மகவு.
அலுவலகத்தில் சக நண்பனை போட்டு கொடுத்து பதவியுயர்வு திட்டம்
தெலுங்கு நண்பனோ முதலாளி ரெட்டிகாருவின் அக்காள் மகன்
போட்டுகொடுத்து போக்கி கொண்டது வேலையை மகனுக்காய் ஐ.ஐ.டி
திட்டம் மகன் வாங்கியதோ ஆண்டாரழகருக்கான அற்புத மதிப்பெண்
நொந்துபோன பின் திட்டமிடுதலை நிறுத்தி சித்தம் சிவம் போக்கில்
கந்துவட்டி மருத்துவர் குறித்தார் நாளை திறந்த இதய சிகிச்சைக்காய்
வந்துபோன அனைவரின் தேவையும் பில்லின் உருவில் திட்டமிடாமல்
பிந்திய வாழ்வில் திட்டமோ திடமோ இன்றி சுவடற்ற மறைவு அலைவுகள் அற்று.
-
அலைவுக ளற்று இருந்த காலம்
..அன்னையின் மடியில் தவழ்ந்த நேரம்...
வளைதலும் சிறிதும் இலாமல் நின்று
..வாலிபக் காலங் கடந்து போச்சு
களைகளாய்க் செய்த செயல்க ளின்று
..கனவிலும் பயமாய் வார லாச்சு
தொலைத்திட நினைக்கும் வாழ்வு மின்று
..தொடர்ந்திடத் துன்பம் கூட லாச்சே
-
கூடலாச்சே குற்றங்கள்
கூடவே கவலைகள்
கலைந்த குடும்பங்கள்
களையிழந்த கூடுகள்
கூறுகெட்ட குழுக்கள்
கிறுக்கான கலைகள்
கும்பிடும் கைகள்
குறிவைப்பது கறக்க
குழிபறிக்கும் குள்ளநரிகள்
காவலில்லா குழந்தைகள்
கற்பென்பதை கருதாத
கன்னிகள் காளைகள் காண்
-
காண் என உடனே கவனம் ஈர்க்கும் மின்னல் செய்திகளே
வீணென்று தள்ள முடியா துக்கத்தில் எமை ஆழ்த்தும்
ஞானத்தந்தை ஜெயகாந்தனின் மறைவு போன்ற நிகழ்வுகளை
மோனத் துவத்தில் நான் முடிவு காணும் நாள்வரை பதுக்கலாமே
என்வாழ்வுக்கே அர்த்தம் தந்து என் ஆத்மாவை வளப்படுத்திய
உன்னதர்களை சிறிது சிறிதாக இழந்து தனியனாய் இருந்து
காணத்தான் போவதென்ன குறை பட்ட இலக்கியங்கள் பந்தா
பேணும் அரைகுறைகள் சுயநல நட்புசுற்றம் கடமையே வாழ்வு
எங்கே நான் என்னை அனுதினமும் புதுப்பித்து அனுபவித்து
நன்கேவாழ்ந்த நாட்கள் வாழ்க்கை தீர்ந்து வாழும் வடிவங்கள்
சங்கு முழக்கிய பாரதியின் சிவப்பு சிஷ்யன் சூன்யமாக்கினான்
கங்கு கழன்று கருத்தை அழித்து காலத்தை ஒட்டுகிறது நிர்மூலமாய்