Originally Posted by
Murali Srinivas
சந்திரசேகர் அவர்களே,
நீங்கள் குமுதம் இதழுக்கு கடிதம் எழுதுவதை வரவேற்கிறேன். அதை செய்ய வேண்டும். அதே நேரத்தில் உலகெங்கும் உள்ள பல்லாயிரகணக்கானோர் படிக்கும் நமது திரி போன்ற இணையதளங்களில் நாம் இந்த உண்மைகளை உரக்க சொல்ல வேண்டும். காரணம் குமுதம் அல்லது எந்த பருவ இதழாக இருந்தாலும் நாம் அனுப்பும் மறுப்பு கடிதத்தை பிரசுரிப்பார்கள் என்று நம்ப முடியாது. எதிர்பார்க்கவும் முடியாது.
நடிகர் திலகத்தைப் பற்றிய தவறான தகவல்கள் வரும்போது [முன்னரே நமது ஹப்பில் ஒரு சில வந்திருக்கின்றன] அவற்றை தெளிவுபடுத்தும் வண்ணம் உண்மைகள் உணரும் நேரம் தொடரும்.