http://i57.tinypic.com/1e12jt.jpg
Printable View
7000 பதிவுகளுக்கு வாழ்த்துக் கூறிய அன்பு நண்பர்கள்,
யார் Landmark No. of Postings பதிவுகளிட்டாலும் முதல் நண்பராய் வாழ்த்துத் தெரிவிக்கும் அன்பு நண்பர் விநோத் அவர்கள்,
பெங்களூரு செந்தில் (Harish),
வரதகுமார் சுந்தர்ராமன்,
கே.சந்திரசேகர்,
ஷைலேஸ் பாஸு,
நடிகர் திலகம் திரியின் இரு கல்தூண்களாய் விளங்கும் பம்மலார் (தொலைபேசி வாயிலாக) மற்றும் நெய்வேலி வாசு அவர்கள்,
கோவை செந்தில்வேல்,
நெல்லை கோபு,
டாக்டர் கோவை செந்தில்,
ரவிச்சந்திரன்,
கனடா சிவா,
கலைவேந்தன்,
முத்தையன் அம்மு,
ரவிகிரண் சூர்யா,
சுப்ரமண்.ம் ராமஜெயம்,
லோகநாதன்,
செல்வகுமார்,
யுகேஷ் பாபு,
மதுரை சந்திரசேகர்,
பரணி,
சுந்தர்ராஜன்,
பார்த்தசாரதி,
ஹைதராபாத் ரவி,
தங்கள் ஒவ்வொருவருக்கும் என் சிரந்தாழ்ந்த பணிவான நன்றி. நடிகர் திலகத்தின் சிறப்பைப் பார் முழுதும் பரப்பும் பணியில் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் தருபவை தங்களின் அன்பான வாழ்த்துக்களே. தங்களின் தொடர்ந்த ஆதரவின் மூலம் மேலும் பணியை சிறப்பாக செய்ய முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்நேரத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் திரி நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன். நாம் அனைவரும் அவரவர் தலைவரின் புகழ் பாடுவதில் ஈடுபடுவதில் எந்தவித மனக்கசப்பிற்கும் இடம் தராமல் கருத்துக்களைக் கூறி நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்பதே என் அவா.
தங்கள் ஒவ்வொருவருக்கும் என் உளமார்ந்த நன்றியை மீண்டும் கூறிக்கொள்கிறேன்.
BAHUBALI STORYLINE:
"IT'S THE SIMPLE STORY OF A FATHER WHO HAS BEEN BACK-STABBED, A MOTHER WHO HAS BEEN ENCHAINED FOR NO WRONG OF HERS AND THE STORY OF A SON WHO TAKES REVENGE. THE TWO PARTS SPAN TWO GENERATIONS," EXPLAINED DIRECTOR SS RAJAMOULI
Seems like Adimaipen!. Anyone seen the movie?
அன்பினால் நல்ஆட்சி புரிந்த ஆயிரத்தில் ஒருவன் வாழ்க;
அண்ணாவின் இதயகனியாய் அன்னமிட்ட முதல்வன் வாழ்க;
சத்யதாயின் பாலனாய் சமநீதி அமைத்த மாமன்னன் வாழ்க;
சத்தியமே உருவான/கருவான தர்மத்தின் தலைவன் வாழ்க;
மனித நேய மன்னாதி மன்னன் வாழ்க; மக்கள் திலகம் வாழ்க;
ஏழைகளின் புனித இறைவனாம் எங்க வீட்டு பிள்ளை வாழ்க;
திருமுருகவாரியார் புகழ் அருளாம் பொன்மன செம்மல் வாழ்க;
பொற்கால ஆட்சி வழங்கிய பொன் புரட்சி தலைவன் வாழ்க;
கண்டியில் நாவல்பிண்டியில் மலர்ந்த கொடைவள்ளல் வாழ்க;
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் வாழ்க;
அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர். புகழ்வாழ்க;
பாலக்காட்டு மாதவன் விவேக் பேசும் வசனம்: எம்.ஜி.ஆருக்கு அப்புறம் மற்றவனை பார்த்து சாப்பிட்டா என்று கேட்டது உங்கள் அமைச்சர்தான், eventhough the purpose is different. Vivek shows that he is also Thalaivar Fan.
பாலக்காட்டு மாதவன் விவேக் பேசும் வசனம் : அன்பு பண்பு என்றல் அரவனைபாங்க அதுவே அநியாயம் அக்கிரமம் என்றல் துவம்சம் பண்ணுவாங்க அவங்க தண்டா "அம்மா" புரியுதா?
நன்றி திரு.லோகநாதன் சார்.
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் மறுவெளியீடு செய்யப்பட்டு சென்னையில் வெள்ளி விழா கொண்டாடியது உலகம் அறிந்த செய்தி. ஆல்பட் காம்பளக்சில் 190 நாட்கள் ஓடியது என்று எனக்குத் தெரியும். இதை நேற்று எனது மணிமாறன் - 50 பதிவில் (பதிவு எண் 350) குறிப்பிட்டிருந்தேன். ஆனால், சத்யம் காம்ப்ளக்சில் 140 நாட்களுக்கு மேல் ஓடியது என்பது தெரியுமென்றாலும், துல்லியமாக எத்தனை நாள் என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை.
அதனால்தான், ஏதும் பிழையான தகவலை சொல்லி விடக்கூடாதே என்பதற்காக, நேற்றைய எனது பதிவில் ஆல்பட் காம்ப்ளக்சில் ஓடிக்கொண்டிருந்த அதே நேரத்தில் சத்யம் காம்பளக்சில் 140 நாட்களுக்கு மேல் ஓடியது என்று பொதுவாக குறிப்பிட்டிருந்தேன்.
சத்யம் காம்பளக்சில் 160 நாட்கள் ஓடியது என்று தாங்கள் குறிப்பிட்டு தெளிவுபடுத்தியதற்கு மிக்க நன்றி. இன்னும் 15 நாட்கள் சத்யம் காம்பளக்சில் ஓடியிருந்தால் மறுவெளியீட்டில் ஒரு திரையங்கில் அல்ல, 2 திரையங்குகளில் வெள்ளி விழா கண்ட படம் என்ற சாதனையை ஆயிரத்தில் ஒருவன் பெற்றிருக்கும்.
தெளிவுபடுத்தியமைக்கு மீண்டும் நன்றி திரு.லோகநாதன் சார் .
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்