ஜோ சார்,
ஆனால் படம் வெளிவந்த 1973-ல் சென்னையும், மதுரையும் மட்டுமே மாநகராட்சியாக இருந்தது.
கவலைப்படாதீர்கள். அடுத்து மாநகராட்சியாக உருவாக இருக்கும் பட்டியலில் நாகர்கோவிலும், தஞ்சாவூரும் இருப்பதாக சமீபத்தில் செய்தி வந்தது.
Printable View
திரு பம்மலார் மற்றும் திரு ராகவேந்திரன் ஆகியோரின் - நடிகர்திலகத்தின் திரைப்படங்களைப்பற்றிய கடந்த காலப் பதிவுகள் மிகவும் அருமை. ஆனந்த விகடன் பொக்கிஷம் பகுதியை மிஞ்சும் வகையில் பதிவுகளை அள்ளி வழங்கும் இருவருக்கும் நன்றி.
பாராட்டிப் பதிவிட்ட ராகேஷ், பாலா, கார்த்திக், சதீஷ், ஜோ, சந்திரசேகர் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்.
டியர் சதீஷ்,
நாங்கள் பார்க்க திட்டமிட்டிருக்கும் அதே நேரத்தில் நீங்களும் பார்த்து எங்களோடு சேர்ந்து கொள்வதற்கு மிக்க மகிழ்ச்சி. எங்கள் உள்ளங்கள் உங்களையும் உங்கள் உள்ளம் எங்களையும் நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.
15.07.2011 தேதியிட்டு வெளிவர இருக்கும் நாளைய ஹிந்து நாளிதழில் கௌரவம் பட வெளியீட்டினைப் பற்றி அருமையாக எழுதியிருக்கும் மாலதி ரங்கராஜன் அவர்களுக்கும் மற்றும் ஹிந்து நாளிதழுக்கும் நமது உளமார்ந்த நன்றி.
கட்டுரையைப் படிக்க படத்தை சொடுக்கவும்.
http://www.thehindu.com/multimedia/d...va_693804f.jpg
அன்புடன்
மற்றவர் சட்டையின் கைப்பட்டை கழன்றிருந்தால் ஃபெயில்
நீ சட்டையின் கைப்பட்டை கழற்றி விட்டால் அதுவும் ஒரு ஸ்டைல்.
டியர் ரங்கன்,
தங்களுடைய பாராட்டுக்களுக்கும் ஆதரவிற்கும் உளமார்ந்த நன்றிகள். கிட்டத்தட்ட புதிய பறவை அளவிற்கு, அல்லது அதற்கும் மேலே என்று சொல்லக் கூடிய அளவிற்கு ரசிகர்களின் பங்களிப்பு பாரிஸ்டருக்கு குவிகிறது. பிரம்மாண்டமான கட்-அவுட், பெங்களூரு ரசிகர்களின் ராட்சத மாலை, பந்தல், என அமர்க்களங்கள் ஏற்பாடாகி வருவதாக காற்றில் வந்த செய்தி தெரிவிக்கிறது. எனவே புதிய பறவையை கௌரவம் மிஞ்சக் கூடிய சாத்தியக்கூறுகளே அதிகம்.
அன்புடன்
டியர் ராகவேந்தர் சார்,
17ம் தேதி மாலை ரசிகர்களின் கொண்டாட்ட நிகழ்வினை நேரில் காண மகிழ்வுடன் தயாராவோம்.
சுவாமி,
கேட்டதும் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுத்ததற்கு நன்றி.
ராகவேந்தர் சார்,
சேகரின் அந்த ஸ்டைலிஷ் பாடலுக்கு நன்றி. நடிகர் திலகத்தின் எந்த பாடலை பார்த்தாலும் அந்த பாடல் அல்லது காட்சி இடம் பெற்ற படத்தை முதன் முதலில் பார்த்தபோது நடந்தது நினைவுக்கு வரும் என்ற போதிலும் அந்த வகையில் தர்மம் எங்கே படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு. தர்மம் எங்கே என்று கேட்டவுடன் உடன் நினைவுக்கு வருவது பல விஷயங்கள்.
முதலில் ஜூலை 1 அன்று வருவதாக இருந்து பின்னர் 15 -ந் தேதி மாறியது, படம் வெளியான அன்று மதுரை ஸ்ரீதேவி அரங்க வளாகமே மக்கள் வெள்ளத்தில் மிதந்தது, கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காட்சிகள் எல்லாம் வெகு சீக்கிரமாக தொடங்கியது, கூட்டத்தை பார்த்துவிட்டு இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை 5 காட்சிகளாக மாற்றியது, எக்ஸ்ட்ரா காட்சி திரையிட்டும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாமல் போனது, நான் சென்றிருந்த இரண்டாம் நாள் ஞாயிறு மாலைக் காட்சிக்கு அந்த அரங்கம் அமைந்திருந்த ஒர்க் ஷாப் ரோடே வாகன போக்குவரத்து போக முடியாமல் ஸ்தம்பித்து போனது, போலீசார் நடத்திய லத்தி சார்ஜ், அடிப்பட்டு காலில் ரத்தம் வழிந்து ஓடும் போதும் வரிசையில் மீண்டும் நின்று டிக்கெட் வாங்குவதற்கு முயற்சி செய்த மனிதன், தொடர் வெற்றிகளால் பூரிப்படைந்து அரங்கத்திற்கு வெளியே ஆரவாரிக்கும் ரசிகர்கள், அந்த நேரத்தில் 70 நாட்களை கடந்து புதிய வசூல் சாதனை படைத்துக் கொண்டிருந்த பட்டிக்காடா பட்டணமாவின் வசூல் விவரங்களை குறிப்பிட்டு ரசிகர்கள் அடித்திருந்த கையால் தொட்டாலே கொதிக்கும் அனல் வாசகங்கள் அடங்கிய நோட்டிஸ்கள், எப்படியோ உள்ளே நுழைந்து டிக்கெட் வாங்கியது, சுதந்திர பூமியில் பாடலின் அறிமுக காட்சி முதல் தர்மம் எங்கே என்று கேட்டவர்களுக்கு தர்மம் இங்கே என்று பதில் கொடுத்திருக்கிறார் என்று முத்துராமன் பேசும் இறுதிக் காட்சி வரை நிலவிய தியேட்டரின் internal atmosphere, இவற்றையெல்லாம் விவரிக்க வார்த்தைகளே சிக்கவில்லை என்பதுதான் உண்மை.
அன்புடன்
Rakesh,
It is Kannadasan I believe and not Vaalee.
Plum,
Earlier you were evincing keen interest to watch Barrister and his Foster son! In case if you want to come on Sunday evening please inform!
ஜூலை 15
இந்நாளில் அவதரித்த
இந்த மண்ணிற்கும் இந்த மக்களுக்கும் வேண்டி தன் உடல் பொருள் ஆவி அனைத்தும் வழங்கிய சிவகாமியின் செல்வன், கர்ம வீரர், பாரதப் பெருந்தலைவர் அவர்களை எந்நாளும் நினைவு கொள்வோம் .
பள்ளி சாலை தந்தவன் ஏழை தலைவனின் புகழ் எந்த நாளும் பாடுவோம்.
அன்புடன்
பன்னிரண்டாண்டில் ஒரு முறை மலரும் குறிஞ்சி மலரினைப் போலே
தன்னலமில்லா தலைவர் வருவார்
என்று நம்பிக்கையோடு பெருந்தலைவர் நினைவைப் போற்றுவோம்.
http://i872.photobucket.com/albums/a...Kamaraj01B.jpg
ராகவேந்திரன்
புரட்சி வீரன் சேகர் திரையரங்கினைக் கண்ட நாள் 15.07.1972 .. தர்மம் எங்கே இன்று தனது 40வது ஆண்டில் நுழைகிறது. இதனையொட்டி தமது திரையரங்க அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முரளி சார் அவர்களுக்கு நமது நன்றிகள். இதோ சேகரின் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்..
http://i872.photobucket.com/albums/a...rmamengey2.jpg
அன்புடன்
டியர் ராகவேந்திரன் சார்,
கலக்கல் பாராட்டுக்கு கனிவான நன்றி ! பைரவ டாக்டரின் கூடுதல் விளம்பரமும், 'பொம்மை' மாத இதழில் வெளியான அழகிய நிழற்படங்களும், "இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை" பாடலும் பிரமாதம் !
விடுதலை வீரன் சேகரின் சிருங்கார ஸ்டில் ['பொம்மை'யில் வெளிவந்தது] சூப்பர் என்றால், எனது மனம் கவர்ந்த பாடலான "பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே" சூப்பரோ சூப்பர் ! சேகரின் ஸோலோ ஸ்டில் சுப்ரீம் !
[சகோதரி சாரதா எழுதிய "தர்மம் எங்கே" திறனாய்விலிருந்து சில வரிகளைப் பதிவிட்டது Superb ! சகோதரியின் படைப்புகளை எப்பொழுது படித்தாலும் சச்சின் அடிக்கும் சிக்ஸரைக் காணும் மகிழ்வு ஏற்படுகிறது.]
"The Hindu" [15.7.2011] நாளிதழின் கட்டுரை மிக மிக அருமை ! "The Hindu" நாளிதழுக்கும், திருமதி. மாலதி ரங்கராஜன் அவர்களுக்கும், இக்கட்டுரையின் சுட்டியை நிழற்படத்துடன் அளித்த தங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி !
பெருந்தலைவருடன் நடிகர் திலகம் அளவளாவும் புகைப்படம் அருமை மட்டுமல்ல, அரிய ஒன்றும் கூட !
டியர் செந்தில் சார்,
கண்ணான பாராட்டுக்கு பொன்னான நன்றி ! கௌரவக் கொண்டாட்டங்கள் பறவையை மிஞ்சும் !
டியர் mr_karthik,
மனம் திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி !
டியர் சந்திரசேகரன் சார்,
அள்ளி வழங்கிய பாராட்டுக்கு அன்பான நன்றி !
டியர் முரளி சார்,
உயர்வான பாராட்டை அளித்தமைக்கு உளப்பூர்வமான நன்றி ! "தர்மம் எங்கே" நினைவுகள் அமர்க்களம் !
அன்புடன்,
பம்மலார்.