https://encrypted-tbn2.gstatic.com/i...XQXa7iElzREMHGhttp://i1098.photobucket.com/albums/...olVeli0007.jpghttp://i1.ytimg.com/vi/kYGOurwVabQ/0.jpghttps://encrypted-tbn3.gstatic.com/i...gobvpRX2EXaSXIhttp://upload.wikimedia.org/wikipedi...edu_Manasu.jpg
நூல்வேலி 1979
பாலசந்தர் இயக்கம்
சரத்பாபு சுஜாதா சரிதா நாராயண ராவ் (நினைத்தாலே இனிக்கும் திரை படத்தில் ஜெயசுதாவின் கணவர் ரஜனிக்கு கார் டிரைவர்), ரமணமுர்த்தி(சங்கராபரணம் சோமயாஜுலு சகோதரர்) ,அனுமந்து நடித்து வெளி வந்த திரை படம்
மெல்லிசை மன்னர் இசை
இதே படம் குப்புடு மனசுடு என்று தெலுங்குலும் வெளியானது
நினைத்தாலே இனிக்கும் (ஏப்ரல் 1979) திரைப்படத்திற்கு பிறகு வந்த திரை படம்
கதை பயங்கர வி(வ)காரமான கதை . பாலச்சந்தரின் பல சீனியர் ரசிகர்கள் அவரை perverted என்று சொல்ல ஆரம்பித்த படம்
ஏற்கனேவே புன்னைகை,அரங்கேற்றம் போன்ற திரை படங்களில் இந்த புகார் எழுந்தது.
சரத்பாபு சுஜாதா கணவன் மனைவி
சரத்பாபு கட்டிட வல்லுனுர் .சுஜாதா நாவல் ஆசிரியை மற்றும் திரை பட தணிக்கை குழு உறுப்பினர் . அவர்களுக்கு பக்கத்துக்கு வீடு ஒரு சீனியர் நடிகை (இவர் நினைத்தாலே இனிக்கும் திரை படத்தில் கமலுக்கு அம்மா
) மற்றும் அவரது மகள் சரிதா . சரிதா வெகுளி பெண் . நீண்ட நாட்கள் திரை துறையை விட்டு விலகி இருக்கும் சரிதாவின் அம்மாவிற்கு மீண்டும் திரை துறையில் (கமலுடன் நடிக்க ) சான்ஸ் கிடைக்கும்.ஆனால் எதிர்பாராத விதமாக ஷூட்டிங் ஆரம்ப தினத்தன்று சரிதாவின் அம்மா இறந்து விடுவார். இதனால் அனாதை ஆகும் சரிதாவிற்கு சுஜாதா சரத்பாபு தம்பதியினர் பாதுகாவலர்கள் ஆக மாறுவார்கள் .சரிதா சுஜாதாவை அக்கா என்றும் சரத்பாபுவை மாமா என்றும் அழைக்க ஆரம்பிபார். சுஜாதாவின் தம்பி (நாராயண ராவ் ) வெளிநாட்டில் இருக்கும் டாக்டர் .அவர் சரிதாவை நேசிக்க ஆரம்பிபார் இந்த நிலையில் ஒரு நாள் மாலை மழை நேரத்தில் சரத்பாபுவின் நெருக்கத்திற்கு சரிதா ஆளாவார். இது கற்பழிப்பு அல்ல இரு மன இணைப்பு. அதே நேரத்தில் சுஜாதா ஒரு திரை படத்திற்கு (வளர்ப்பு தந்தை அவருடைய வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொள்வது போல் இருக்கும்) 'இது ஒரு சமுதாய கேடு இதை அனுமதிக்க முடியாது' என்று கூறி அனுமதி மறுத்து விட்டு ,பள்ளியில் படிக்கும் தன மகளை கூட்டி கொண்டு தன வீட்டிற்கு வருவார் .வந்து கதவை திறந்தால்
'சரத் சரிதா ஏடாகூடம் - சோலி முடிந்தது'
மூவரின் மன போராட்டம் (மௌனத்தில் விளையாடும் மனசாட்சி)
சுஜாதா தன தந்தை (ரமணமுர்த்தி) இடம் எல்லா உண்மையையும் கூறி அவரிடம் இதற்கு நல்ல முடிவு ஒன்று கூறுமாறு கேட்பார் . ஆனால் அவரோ இதற்கு என்னால் முடிவு சொல்ல இயலாது என்று மறுத்து விடுவார். பிறகு தன கணவர் சரத்பாபுவிடம் வாக்குவாதம் செய்வார் .
அவரோ "தான் ஒரு சாதாரண மனிதன் எனக்கும் ஆசாபாசங்கள் இருக்கும் " என்று அவரோடு ஓத்துழைக்க மறுத்து விடுவார் .இதற்கு நடுவில் வெளிநாட்டில் இருக்கும் அவரது தம்பி எல்லா விவரங்களையும் அறிந்த பின்னும் சரிதாவை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக சொல்வார் .அவரிடமும் சுஜாதா வாக்குவாதம் செய்வார் . இந்நிலையில் சரிதா கர்ப்பம் ஆகி ஹைதராபாத் சென்று குழந்தையை பெற்றுகொள்வார் .இறுதியில்
சுஜாதாவிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வார் .
இதே பாலசந்தர் 'கல்யாண அகதிகள்' திரை படத்தில் தற்கொலை முடிவு அல்ல என்று கூறுவார் .
'இது நல்ல படமா மோசமான படமா '
'வெற்றி படமா தோல்வி படமா '
(நாயகன் கமல் ) தெரியலேப்பா
ஆனால் மெல்லிசை மன்னரின் இனிமையான பாடல்கள்
1.பாலா வாணி LR அஞ்சலி குரல்களில் கோல்டன் பீச் location
family outing அண்ட் gettogether ஒரு நல்ல பாடல்
(மெல்லிசை மன்னர் குழுவின் தபேலா மாஸ்டர் நயம் அக்மார்க் ஜீவன் brand ரவையை குழைத்து தேச்சு இருப்பார் போல .நச்னு இருக்கும் )
நானா பாடுவது நானா ... நானும் இளவயது மானா
வெரிகுட் (பாலாவின் குரல்)
ஹ ... ஹ ..ஹ ..(சிரிப்பு).. (பாலாவும் வாணியும் இணைந்து)
நானா பாடுவது நானா .... நானும் .... இளவயது மானா
இசைக்கோலம் உன் மங்கலம் , அதில் கீதம் உன் குங்குமம்
உயர்தாளம் நம் சங்கமம் , நீ பாடு தானே வரும்
இசைக்கோலம் உன் மங்கலம் , அதில் கீதம் உன் குங்குமம்
உயர்தாளம் நம் சங்கமம் , நீ பாடு தானே வரும்
நானா
ஹா
பாடுவது நானா .... நானும் .... இளவயது மானா ....
(அஞ்சலியின் அருமையான ஹம்மிங்)
ப ப பா ப ப பா ...ரப பபப்பா ..ப ப பா ப ப பா ரபபபப்பா ..
ருருறு ..ரம்பப ரம்பப ரம்பப ரம்
ரம்பப ரம்பப ரம்பப ரம் ...ரம்பப ரம்பப ரம்பப ரம்
(தபேல இசை ) பின் violin இசை
சரணம் 1
கோதை என் நெஞ்சிலே , என் குடும்பம் நிற்கின்றது
நல்ல சமையல் புரிகின்றது , ஆனால் சங்கீதம் புரியவில்லை
ஹஹஹஹ்ஹா ..(பாலாவின் சிரிப்பு)
(அஞ்சலியின் அருமையான மூச்சு முட்டும் ஸ்வரம்)
நிநிஸஸ ஸஸஸஸ தநிநி நிநிநிநி
பபதத ததத மமபப பபபப
மபம , பதப , தநிதத நிஸநி தநிபா
கோதை என் நெஞ்சிலே , என் குடும்பம் நிற்கின்றது
நல்ல சமையல் புரிகின்றது , ஆனால் சங்கீதம் புரியவில்லை
தாயின் தாலாட்டிலே , தினம் தோன்றும் சங்கீதமே
தாயின் தாலாட்டிலே , தினம் தோன்றும் சங்கீதமே
நீயும் தாயல்லவா , இதில் ஏனோ சந்தேகமே
இதில் ஏனோ சந்தேகமே
(தபேல இசை )
நானா
ம்
பாடுவது நானா .... நானும் .... இளவயது மானா ....
அஞ்சலி ஹம்மிங்
டிணிங் டிண்டிநிங் டிண்டிண்டிண்டிண்டிநிங் டிண்டிகுடிங்
டிணிங் டிண்டிநிங் டிண்டிண்டிண்டிண்டிநிங்
இடை இசை மீண்டும் தபேலா violin கலந்து
சரணம் 2
கவிஞன் சொல்லாததோ .... தமிழ் கவிதை காணாததோ
இதில் எதை நான் சொல்வேனம்மா
இந்த சபையை வெல்வெனம்மா
பாலா அஞ்சலி இணைந்து மீண்டும் ஸ்வரம்
நிநிஸஸ ஸஸஸஸ தநிநி நிநிநிநி
பபதத ததத மமபப பபபப
மபம , பதப , தநிதத நிஸநி தநிபா
கவிஞன் சொல்லாதோ ...தமிழ் கவிதை கானாததோ
இதில் எதை நான் சொல்வேனம்மா
இந்த சபையை வெல்வேனம்மா
நீந்தும் நேரம் வந்தால் , உடன் நீச்சல் அங்கே வரும்
நீந்தும் நேரம் வந்தால் , உடன் நீச்சல் அங்கே வரும்
பாடும் ஆசைவந்தால் எந்த பாட்டும் சபையில் வரும்
எந்த பாட்டும் சபையில் வரும்
(தபேலா)
நானா
ஹ ..ஹ ..ஹ
பாடுவது நானா .... நானும் இளவயது மானா
இசைக்கோலம் உன் மங்கலம் , அதில் கீதம் உன் குங்குமம்
உயர்தாளம் நம் சங்கமம் , நீ பாடு தானே வரும்
நானா .... பாடுவது நானா .... நானும் ... இளவயது மா .னா ..
http://www.youtube.com/watch?v=aszzDKEJ8xw
2. பாலமுரளி கிருஷ்ணா குரலில் சாமா ராக பாடல்
மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே (2)
ஆயிரம் நினைவாகி ஆனந்தக்கனவாகி (2)
காரியம் தவறானால் கண்களில் நீராகி
மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே
மனசாட்சியே
ரகசியச்சுரங்கம் நீ நாடக அரங்கம் நீ (2)
சோதனைக்களம் அல்லவா?
நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா?
ஒருகணம் தவறாகி பலயுகம் துடிப்பாயே
ஊமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாயே (2)
(மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே)
உண்மைக்கு ஒரு சாட்சி பொய் சொல்ல பலசாட்சி (2)
யாருக்கும் நீயல்லவா
நெஞ்சே மனிதனின் நிழல் அல்லவா
ஆசையில் கல்லாகி அச்சத்தில் மெழுகாகி
யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாய் நீ (2)
(மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே)
ஒரு நாள் வீட்டில் கண்ணதாசன் தன் பூட்டிய அறைக்குள் இந்தப் பாடலை மட்டும் மீண்டும்,மீண்டும் ஒலிக்கச் செய்து கேட்டுக்கொண்டிருந்தாராம். அவருக்கு என்ன கஷ்டமோ
http://www.youtube.com/watch?v=1YxUO0KXRlE
3.3.பாலா வாணி குரல்களில் ஒரு அருமையான டூயட் கனவு பாடல்
நாராயண ராவ்விற்கும் சரிதாவிற்கும்
(இந்த பாட்டில் மெல்லிசை மன்னர் இடை இசையில் இன்ஸ்ட்ருமென்ட் சும்மா டம் டம் னு பின்னி எடுத்து இருக்கும். மிருதங்க சத்தமும் தபேலா சத்தமும் சேர்ந்த மாதிரி . நினைத்தாலே இனிக்கும் படத்தில் கூட இந்த இன்ஸ்ட்ருமென்ட் அடிகடி அடிகடி ஓலிக்கும்)
SPB:வீணை சிரிப்பு
ஆசை அழைப்பு
வேதம் பாடட்டுமா ?
மாலை மயக்கம்
என்னை மயக்கும்
மஞ்சம் நாளாகுமா ?
வீணை சிரிப்பு
ஆசை அழைப்பு
வேதம் பாடட்டுமா ?
மாலை மயக்கம்
என்னை மயக்கும்
மஞ்சம் நாளாகுமா ?
பூசிய சந்தனம்
மார்பினில் சாய்ந்ததும்
கன்னம் தடமாகுமா ?
பூசிய சந்தனம்
மார்பினில் சாய்ந்ததும்
கன்னம் தடமாகுமா?
பொங்கிய குங்குமம்
செங்கனி வாய் இதழ்
எங்கும் விளையாடுமா ?
பொங்கிய குங்குமம்
செங்கனி வாய் இதழ்
எங்கும் விளையாடுமா ?
VJ:விழி ஓரங்கள்
கதை பேசுமோ ?
தேன் அமுதினில் மழை வர
நாதங்கள் உருவாகுமோ ?
SPB:அழகிய திருமுகமதில்
நாணங்கள் விளையாடுமோ ?
இடை எனும் சிறு கொடிதனில்
வானங்கள் கவிபாடுமோ ?
VJ:வீணை சிரிப்பு
ஆசை அழைப்பு
வேதம் பாடட்டுமா ?
மாலை மயக்கம்
என்னை மயக்கும்
மஞ்சம் நாளாகுமா ?
VJ:மன்மத மந்திரம்
மாலையில் கேட்டதும்
எண்ணம் அலையாகுமோ
மங்கள நாடகம்
பள்ளியில் வந்ததும்
பெண்மை விலையாகுமோ
மங்கள நாடகம்
பள்ளியில் வந்ததும்
பெண்மை விலையாகுமோ
SPB:ரதி நேர் வந்து
மலர் தூவுமே
ஒரே ரகசிய கவிதையில்
ஆனந்தம் கலைஆகுமஎ
VJ:இலையோடு மலரென தினம்
உள்ளங்கள் உறவாடுமோ
இருவரும் ஒரு நிலை பெற
கீதங்கள் துணையாகுமோ
SPB:வீணை சிரிப்பு
ஆசை அழைப்பு
வேதம் பாடட்டுமா ?
VJ:மாலை மயக்கம்
என்னை மயக்கும்
மஞ்சம் நாளாகுமா ?
http://www.youtube.com/watch?v=uqqhdI3WV4Y
4.பாலாவின் சோலோ
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் (2)
காவிரி பொங்கிடும் நீரோட்டம் ,
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம் ,
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...
பொண்ணாட்டம் அங்கு பெணாட்டம்
என் கணோட்டம் ஒரு வெளோட்டம் (2)
சின்ன சின்ன நடை திண்டாட்டம்
அதை கண்டதும் நெஞ்சினில் கொண்டாட்டம் (2)
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் ,
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...
பூந்தோட்டம் ,(ஒரு இனிமையான flute )
பூந்தோட்டம் கண்ட மானாட்டம்
பொன் வண்டாட்டம் இடும் தேனாட்டம் (2)
வண்ன வன்ண முகம் பாலாட்டம்
அந்த வஞ்சியின் மெல்லிடை நூலாட்டம் (2)
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் ,
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...
சேலாட்டம் விழி சீராட்டும்
இளம் தண்டாட்டம் உடல் பாராட்டும் (2)
என்ன என்ன சுகம் உளோட்டம்
எனை இந்திர லோகத்தில் தாலாட்டும் (2)
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் ,
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் ,போராட்டம் ...
http://www.youtube.com/watch?v=v0XetBorpMg