Sivaji in மலர்ந்து மலரத
http://www.youtube.com/watch?v=YooD5Qm2aTI
My fav raag - Abheri
Great lullaby composition by duo Vishwanathan - Ramamoorthy :bow:
Printable View
Sivaji in மலர்ந்து மலரத
http://www.youtube.com/watch?v=YooD5Qm2aTI
My fav raag - Abheri
Great lullaby composition by duo Vishwanathan - Ramamoorthy :bow:
Thanks raagadevan. Raghavendar sir's humility is unbelievable. In a time where website owners would exaggerate their figures, you told the truth. Bravo, Sir! Too bad we Malaysians couldn't experience this :cry: To the unitiated, they will think this giant is 6'5". Look at that majestic.....I don't know what!!!!
http://www.hindu.com/fr/2011/04/22/i...2250690401.jpg
Saw the Hindu article in print today morning. Goosepimples! The Man rules.
Thanks Raghavendra for the sized pictures and the info.
I don't usually sport avatars because basically I yam lazy (to crop and size pictures for avatar suitability). Ipdi vaazhapazhathai urichchu koduththuttInga :thanks:
Good article carried by THE HINDU about Thiruvarutchelvar. Thanks to Mr.Ragavendran for the information. Thanks to Mr.Murali & Mr.Khan for the initiate taken.
Thanks to Mr.Pammalar for sharing the Evergreen rare classic "Naan Enna Sollivitten" song with us.
And....not to forget Mr YGM who actually insisted Ms. Malathi Rangarajan to come to the theatre and watch the film. I was thrilled to read in the article that how MR YGM greatly appreciated the scene where Sekkizhar expressed fear while presenting Periya Puranam amidst the King and other elite group.....this scene was nicely captured by Murali sir in his post in the previous pages.
The glad news for me, personally, in the article is that the distributor Mr. Murali's assurance to screen GOWRAVAM in the coming weeks. Though I came with my daughter to the theatre last Sunday to watch the gala event, I was not able to watch the film among the fans. I'll somehow try to make it up for Gowravam. Looking forward to watch The Great Barrister on big screen, soon.
Raghavendar sir,
Thank you verymuch for the link provided to read the woderful article in 'The Hindu' about Thiruvarutchelvar. Thanks to Malathi Rangarajan also for the wonderful nerration.
Same like she hinted about the roll of Sekkizhar, it will be more enjoyable if mention about the other four rolls, the great artist has done 44 years ago.
Pammalar sir,
Thanks for the 'Punar Janmam' rememberance with rare advertisement of the movie.
Spoke to distributor Murali, who has released Tiruvarutchelvar. He was happy about THE HINDU's coverage. If this is the response for Tiruvarutchelvar, a mythological movie which may not appeal to all sections of fans, proposed release of Gowaram ( possibily on 21st July) would do wonders.
Dear mr_karthik,
Thanks ! திருப்பதிக்கே லட்டா?! திருநெல்வேலிக்கே அல்வாவா?! நீங்களே தீவிர NT Fan ! உங்களுக்கே ஓடும் TN Fanஆ...?!
அன்புடன்,
பம்மலார்.
அன்புள்ள திரு. ராகவேந்தர், திரு. முரளி, திரு. பம்மலார், சாரதா மேடம் மற்றும் ஏனைய நண்பர்களே,
கடந்த மூன்று நாட்களில் நடிகர் திலகத்தின் திரி மூன்று பக்கங்களைத் தாண்டி விட்டது என்பதை இப்போது தான் பார்த்துத் தெரிந்து கொண்டேன். மனதுக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் நிறைய விஷயங்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை மேலிடுகிறது. ஹிந்து நாளிதழில் இன்று வந்திருக்கும் திருமதி. மாலதி ரங்கராஜன் திருவருட்செல்வரைப் பற்றி எழுதிய கட்டுரை பலரை சென்றடைந்திருக்கிருக்கும். அவருக்கு நாம் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம். Of course , இதில் திரு. ஓய்.ஜி. மகேந்திராவின் பங்கு மகத்தானது.
திரு. ராகவேந்தர் அவர்களின் ஒவ்வொரு பாடல் மற்றும் காட்சிப் பதிவும் அற்புதம் என்றால், திரு. முரளி அவர்கள் வழக்கம் போல் நுணுக்கமான விஷயங்களை அவருக்கேயுரிய அந்த எளிய, தெளிந்த நீரோடை போன்ற நடையில் எழுதிப் பிய்த்து உதறி விட்டார்.
திரு. பம்மலார் அவர்கள் வழக்கம் போல் புள்ளி விவரங்கள், கேள்வி பதில் புதையல்கள் மட்டுமல்லாது, அரிய/அற்புதமான பாடல்களையும் பதிவிட்டு திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கிறார்.
சாரதா மேடமும் தன் பங்குக்குக் குறை வைக்காமல், திருவருட்செல்வரைப் பற்றிய செய்திகளை பதிவிட்டிருக்கிறார்.
மற்ற நண்பர்களும் இன்னும் சில அன்பர்களும் தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டு வருவது, இந்தத் திரியைப் பல படிகள் மேல் ஏற்றிக் கொண்டுவிட்டிருக்கிறது.
அன்புடன்,
பார்த்தசாரதி
அன்பு நண்பர்களே,
சற்று முன்தான் ஒரு சிறிய பதிவைப் பதிந்து விட்டுப் பார்க்கிறேன். ஆனந்த அதிர்ச்சி! பார்த்தசாரதி, Senior Member, Regular Hubber என்று என்னைப் பற்றி வந்திருக்கிறது!! நான் ஒரு இரண்டு மாதங்களாகத் தான் எழுதிக் கொண்டு வருகிறேன் என்பதால், இவ்வளவு நாள், பார்த்தசாரதி, Junior Member என்றுதான் வந்து கொண்டிருந்தது. இப்போது, எனக்கு ப்ரமோஷன் கிடைத்திருக்கிறது என்று எண்ணி இறுமாந்து கொள்கிறேன். அலுவலகத்தில் எனக்கு ப்ரமோஷன் கிடைத்தது போல் உணர்கிறேன். மிக்க நன்றிகள்.
அன்புடன்,
பார்த்தசாரதி
"உள்ளதைச் சொல்வேன் சொன்னதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது !
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது !"
கணிப்பொறியியலைக் கற்றுத்தரும் கல்விக்கூடங்களுக்குச் செல்லாமலேயே அதில் "படிக்காத மேதை"யாக விளங்கும் நமது ராகவேந்திரன் சாருக்கும் மேற்குறிப்பிட்ட வரிகள் நூறு சதம் பொருந்தும்.
நமது நடிகர் திலகம் ஒரு சுயம்பு ! அவரது ரசிகர் திலகமும் ஒரு சுயம்புவே !
அன்புடன்,
பம்மலார்.
Dear Sunil_M88,
Thanks for sharing this evergreen lullaby ! NT & NT at their Himalayan best ! Perhaps this song sequence is one of the best & most powerful sequences in the annals of World Cinema.
பல வானொலி, தொலைக்காட்சி நேயர் விருப்ப திரைப்பாடல்கள் நிகழ்ச்சிகளிலும் மற்றும் மேடைக் கச்சேரிகளிலும் இந்தப் பாடலுக்கு வாய்த்த நேயர்களைப் போல் வேறு எந்தப் பாடலுக்கும் வாய்த்ததில்லை.
'மலர்ந்தும் மலராத' : ஆன்மாவை அசைக்கும் கானம் !
அன்புடன்,
பம்மலார்.
The glad news for me, personally, in the article is that the distributor Mr. Murali's assurance to screen GOWRAVAM in the coming weeks.
மிக நல்ல செய்தி!!! ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
Dear Pammalar, V_S, Rakesh, Plum, Chandrasekar, Rangan, Karthik, Mahesh, Parthasarathy, Radhakrishnan and all friends,
Thank you every body for the appreciations, encouragement and words of praise. Everything is directed to Nadigar Thilagam.
அவர் ஆட்டுவித்தால் நாம் ஆடுகிறோம். அவ்வளவே..
ஹிந்து பத்திரிகைக்க்கும் திரு மகேந்திரா அவர்களுக்கும் நாம் நமது நன்றியை மீண்டும் செலுத்துகிறோம். திரு மகேந்திரா அவர்களிடம் பேசும் போது நமது சாந்தி திரையரங்கினைப் பற்றி உணர்ச்சிப் பெருக்கோடு நினைவு கூர்ந்தார். தெய்வ மகன் படத்திற்கு க்யூ வரிசையில் நின்று காவலர்களிடம் அடி வாங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
திரு பம்மலார் குறிப்பிட்டதைப் போல் அவரைப்போலத் தான் நாம் அனைவருமே. நம் அனைவருமே உள்ளதைச் சொல்வோம், சொன்னதைச் செய்வோம், வேறொன்றும் தெரியாது.
இன்றைய ஹிந்து நம் இணைய தளத்தைப் பற்றிக் குறிப்பிட்டதில் ஒரே நாளில் கிட்டத் தட்ட 200க்கு மேல் ஹிட்ஸ் அதிகரித்துள்ளது. இதற்காக நமது இணையதளம் சார்பிலும் உளமார்ந்த நன்றிகள்.
மீண்டும் அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.
பம்மலார் நினைவூட்டிய பாடலோடு
http://www.youtube.com/watch?v=K1I3c64ieBs&playnext=1&list=PLE1805B3A357D 1C96
அன்புடன்
ராகவேந்திரன்
Thanks to Malathi Rangarajan for the article which had brought out all the points regarding Thiruvarutselvar, things associated with the film, a brief foray into future re-releases and the credit given to the persons who worked hard behind the scenes.
ஹிந்து பத்திரிக்கை தன் கட்டுரை மூலமாக nadigarthilagam.com இணையதளத்தை சரியான முறையில் சரியான நேரத்தில் அடையாளம் காட்டியிருக்கிறது. ராகவேந்தர் சார் அவர்களுக்கு நமது வாழ்த்துகள். குடத்திலிட்ட விளக்காக இருந்த அவரின் சேவை இதன் மூலம் குன்றிலிட்ட விளக்காய் பிரகாசிக்கட்டும்.
செஞ்சுரி அடித்த சாரதிக்கு வாழ்த்துகள். மேலும் பல செஞ்சுரிகள் நீங்கள் அடிக்க வேண்டும்.
சுவாமி,
புனர் ஜென்மம் விளம்பரத்திற்கு மிக்க நன்றி. மீண்டும் ஒரு பொன் விழா நிறைவின் அரேங்கேற்றம். தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஆண்டின் மற்றொரு படைப்பு. பாவ மன்னிப்பு மற்றும் பாச மலர் என்ற மிகப் பெரிய இரண்டு திரைக் காவியங்களின் இடையில் அகப்பட்டுக் கொண்டதால் பெற வேண்டிய பெரிய வெற்றியை பெற முடியாமல் போன படம்.
நடிப்பு என்றால் யாது? ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு பாத்திரமும் கதையின் தன்மைக்கேற்ப எப்படி உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும், எங்கே கூட்ட வேண்டும், எங்கே குறைக்க வேண்டும், பாத்திரத்தின் தன்மைக்கேற்ப உடல்மொழி எவ்வாறு அமைய வேண்டும், வசன உச்சரிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் திரையுலகிற்கு மீண்டும் எடுத்து சொல்ல, வாழ்ந்து காட்ட நடிகர் திலகம் ஒரு புனர் ஜென்மம் எடுக்க மாட்டாரா?
அன்புடன்
Dear rajeshkrv,
Thank You ! Manohara(1954) was a trilingual film produced at the same time in Tamil, Telugu & Hindi. NT-Girija pair ruled supreme in all the three versions. Actress Girija, as you said played second fiddle in many films of 1950s. She first acted with NT in Thirumbippaar(1953), in which she paired with Actor Narasimma Bharathi. Recently, I saw a film on VCD - Kaalam Maari Pochu(1956). Gemini Ganesan & Anjali Devi took the top honours in the film while Girija as Gemini's sister played second fiddle but her performance is second to none.
Warm Wishes & Regards,
Pammalar.
டியர் முரளி சார், நெஞ்சார்ந்த நன்றி !
டியர் சந்திரசேகரன் சார், மனமார்ந்த நன்றி !
டியர் பார்த்தசாரதி சார், பாராட்டுக்கு நன்றி ! All the best for a century of centuries & even more !
Dear Mahesh Sir, Welcome back !
அன்புடன்,
பம்மலார்.
டியர் முரளி சார்,
தங்களுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நனறிகளும். விளக்கு நான் என்றால் ஒளி நடிகர் திலகம் அன்றோ...இதற்கும் அவர் பாடல் வைத்து வி்ட்டாரே... விளக்கே நீ தந்த ஒளி நானே.. விழியே நீ இட்ட திரை நானே....
டியர் பம்மலார்,
தாங்கள் கூறுவது போல் அடுத்த முறை நாம் அனைவரும் கூடி - இது வரை வராதவர்களும் வர வேண்டும் - ஒன்றாய் புகைப்படம் எடுத்து இங்கே பதிவிடுவோமே.
இதோ நான் கூறிய பலே பாண்டியா பொம்மை
http://i872.photobucket.com/albums/a...andiyadoll.jpg
அன்புடன்
Due to unavoidable reasons I could not post my views here for a long period,but never missed out viewing the thread daily.
As usual the giants murali sir,raghavendar sir,pammal sir,parthi sir,saradha madam and many others are taking this thread to a great height which is unparallalled in this hub .
thanks pammal sir and raghavendra sir for the photos of TC sunday gala.
eagerly waiting for murali sir's live relay of sunday's happenings
thankyou
சென்ற வாரம் ஜெயா தொலைக்காட்சியின் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் இயக்குனர் ஏ.ஜெகன்னாதன் பங்குபெற்று தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
(திரு ஏ.ஜெகன்னாதன், இயக்குனர் ப.நீலகண்டனின் உதவி இயக்குனராக இருந்தபோது ஏராளமான எம்.ஜி.ஆர்.படங்களுக்கு பணியாற்றியவர். இதயக்கனி படத்தின் இயக்குனர் மற்றும் பிற்காலத்தில் சத்யா மூவீஸின் ஆஸ்தான இயக்குனர்).
"நான் சிவாஜி சாரை வைத்து இயக்கிய ஒரே படம் 'வெள்ளை ரோஜா'. அப்படத்தின் தயாரிப்பாளர்களான பிலிம்கோ நிறுவனத்தினர் முதலில் சிவாஜி சாரை புக் பண்ணிவிட்டு என்னிடம் வந்து படத்தை இயக்க வேண்டுமென்று கேட்டார்கள். சிவாஜி சாரை வைத்து இயக்கும் அரிய வாய்ப்பு என்றதும் உடனே ஒப்புக்கொண்டேன். அதன்பின்னர் தயாரிப்பாளர்களுக்கு புதிய சந்தேகம் வந்துள்ளது. 'இவர் எம்.ஜி.ஆர்.டைரக்டராச்சே, இவரைப்போட்டால் சிவாஜி ஒப்புக்கொள்வாரா' என்ற ஐயம் ஏற்பட்டதால், பிலிம்கோ உரிமையாளர் காதர் மற்றும் சிலருடன் எனக்குத்தெரியாமல் சிவாஜிசாரைப்போய்ப்பார்த்து, 'வெள்ளை ரோஜா படத்துக்கு டைரக்டராக ஏ.ஜென்னாதனைப் போட்டிருக்கிறோம். நீங்க விரும்பலைன்னா சொல்லுங்க, நீங்க சொல்ற வேற் டைரக்டரைப் போட்டுடலாம்' என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதற்கு சிவாஜி சார் சிரித்துக்கொண்டே “அவர் எங்க அண்ணனையே டைரக்ட் பண்ணியவராச்சே. என்னை டைரக்ட் பண்ண மாட்டாரா என்ன?. அதெல்லாம் மாற்ற வேண்டாம். அவரே இருக்கட்டும்” என்று சொல்லியனுப்பி விட்டார். இச்சம்பவம் நடந்தபோது நான் இல்லை. ஆனால் சிவாஜி சார் சொன்ன விஷயம் கேள்விப்பட்டதும் அப்படியே புளகாங்கிதம் அடைந்தேன்.
படப்பிடிப்பின்போது நான் வைக்கும் சில ஷாட்களை மனதாரப் பாராட்டுவார். போலீஸ் ஆபீஸராக வரும் அவர் கொலையாளியைக் கண்டுபிடிக்கும் கட்டத்தில் நான் அவரது கண்ணுக்கு மட்டும் பக்கவாட்டில் குளோஸ்-அப் ஷாட் வைத்ததை பலமாக முதுகில் தட்டிப்பாராட்டினார். அமைதியான பாதிரியாராகவும், ஆக்ரோஷமான போலீஸ் ஆபீஸராகவும் இருவேறுபட்ட நடிப்பை அற்புதமாகத் தந்திருந்தார்.
சிவாஜி சாரைப்போன்ற அற்புத நடிகர் Never Before and Never After.
சிவாஜி சாரை வைத்து நான் இயக்கிய 'வெள்ளை ரோஜா' படமும், ரஜினி சாரை வைத்து இயக்கிய 'தங்க மகன்' படமும் ஒரே தீபாவளியன்று வெளிவந்தன. அந்த தீபாவளிக்கு வேறு எத்தனையோ படங்கள் வெளியாகியிருந்தபோதிலும், இவ்விரண்டு படங்களும் மாபெரும் வெற்றிபெற்று முதல் இரண்டு இடங்களைப்பிடித்தன. மீண்டும் அதுபோன்ற ஒரு பொற்காலத்துக்காக காத்திருக்கிறேன்".
(Thank you A.Jagannathan sir)
அன்பு சகோதரி சாரதா அவர்களின் திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சி பற்றிய பதிவு நம்மையெல்லாம் 83ம் ஆண்டிற்கு அழைத்து செல்கிறது. அந்த தீபாவளியன்று வெளியான அனைத்துப் படங்களும் வெற்றி பெற்றன என்பது சிறப்பாகும். தீபாவளி என்றதும் நமக்கு முதல் படமான பராசக்தி நினைவுக்கு வராமல் இருக்காது. அந்த பராசக்தி படத்தைப் பற்றி நாளைய 24.04.2011 ஹிந்து நாளிதழில் வெளிவர உள்ள கட்டுரையினை இச்சுட்டியில் காணலாம்.
ராண்டார் கய் எழுதிய பராசக்தி கட்டுரை
அன்புடன்
காலங்கடந்து நிற்கும் நடிகர் திலகத்தின் கொள்கைப் பாடல்கள் - 6
இந்த நாடு நன்றாய் இருந்தால் தான் நாம் நன்றாக இருக்க முடியும் என்கிற எண்ணத்தில் தன் கொள்கையை இந்த நாட்டுப் பற்றை அடிப்படையாக வைத்து, சுய நலம் பாராமல், வணிக நோக்கம் பாராமல், சுய பெருமை பாடாமல், தேசப் பற்றையும் இறையாண்மையையும் தன் படங்களிலும் பாடல்களிலும் பறை சாற்றியவர் நடிகர் திலகம். இதை அடிப்படையாகக் கொண்டு நமது அடுத்த கொள்கைப் பாடல் இங்கே இடம் பெறுகிறது. படுத்துக் கொண்டே நடித்து வெற்றி பெற்றவர் நடிகர் திலகம் என்பதற்கு இப்பாடல் சாட்சி. இப்பாடல் முடிவில் கண்களில் நீர் வரவில்லை என்றால் அவர் தன் தேச பக்தியை இன்னும் தீவிரமாக உணர வேண்டும் என்பதே பொருளாகும். இடம் பெறும் பாடல் லீலா அவர்கள் பாடி ஜி.ராமனாதன் அவர்கள் இசையமைத்த பாரதியார் பாடல். வ.உ.சி. யாக வாழும் நடிகர் திலகம் நடித்த கப்பலோட்டிய தமிழனில் இடம் பெற்று, சற்று அபூர்வமாக ஒலிக்கக் கூடிய பாடல் இது. மரணப் படுக்கையில் இருந்தும் கூட என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்கிற வரியின் போது தன்னுடைய கைகளை விலங்குடைத்து விடுவிபபதாக செய்து, விடுதலையை எண்ணி புன்னகை பூக்கும் காட்சியில் இந்த உலகத்தில் இதற்கு மேல் கண்களால் தேச பக்தியைக் கூறக்கூடிய நடிகர் வேறு யாரேனும் உண்டா என்கிற எண்ணத்தை நம்முள் தோற்றுவிக்கும் அந்தக் காட்சி....
இதோ நீங்களும் உணருங்கள்
http://www.youtube.com/watch?v=T80xmSzffb4
பாடல் காட்சியில் இடம் பெற்ற கலைஞர்கள்
ருக்மணி, டி.எஸ்.துரைராஜ் மற்றும் பலர்.
அன்புடன்
பம்மலார்
ராகவேந்திரன்
"அன்பளிப்பு" வெளியான 1.1.1969 அன்று 'பொம்மை' தனது ஜனவரி இதழின் மூலம் தனது அன்பு வாசகர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கிய அண்ணலின் அழகிய திருமுகம் [Natural Still] தாங்கிய அட்டைப்படம் இது.
இந்த அற்புத அட்டைப்படத்தை நமக்கு அன்பளிப்பாக இங்கே வழங்கிய நமது ராகவேந்திரன் சாருக்கு கனிவான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்திரன் சார்,
சென்ற வருடம்(2010), தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கலந்து சிறப்பித்த ஒரு விழாவில், மாநில அமைச்சர் ஒருவர் தனது விழா உரையில் 'கா கா கா பாடலை கலைஞர் அவர்கள் எழுதினார்' என்று குறிப்பிட்டுப் பேசினார். இது தவறான தகவல். பராசக்தியில் இடம்பெற்ற 'கா கா கா' பாடலை எழுதியவர் 'உடுமலை நாராயண கவிராயர்' என்று அதன் இணைத் தயாரிப்பாளரான திரு.ஏவிஎம் அவர்களே தான் எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார். மனோகராவில் இடம்பெற்ற 'சிங்கார பைங்கிளியே பேசு' பாடலுக்கும் நேர்ந்துள்ள இத்தகைய தகவல் நெருடல் இது போலத்தான் இருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.
இது போன்ற தகவல் பிழைகள் ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணமும் இருக்கிறது. ஒரு படத்தினுடைய ஒரு பாடலை யார் இயற்றினார் என்பதனை மிகச் சரியாகச் சொல்வதற்கு அதிகாரபூர்வ ஆவணமாகத் திகழ்வது அந்தப் படத்தினுடைய ஒரிஜினல் பாட்டுப் புத்தகம். ஒரு படத்தினுடைய முதல் வெளியீட்டின் போது அதன் தயாரிப்பாளர்களே [சில சமயங்களில் விநியோகஸ்தர்கள்] இத்தகைய ஒரிஜினல் பாட்டுப் புத்தகங்களை வெளியிடுவார்கள். 1970களின் இறுதி வரை இது வழக்கத்தில் இருந்தது. ஒரு படத்தினுடைய ஒரிஜினல் பாட்டுப் புத்தகத்தின் மூலம் அதில் நடிக்கும் நடிக-நடிகையர் விவரங்கள் மற்றும் அப்படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்கள் என எல்லாவற்றையும் அறிய முடியும். மேலும் ஒவ்வொரு பாடலினுடைய வரிகள், ஒவ்வொரு பாடலுக்கும் மேலே இடதுபுற ஓரம் பாடலாசிரியர் பெயர் மற்றும் வலதுபுற ஓரம் பின்னணியில் பாடியவர்கள் பெயர்கள் என ஒரிஜினல் பாட்டுப் புத்தகம் அப்படத்தைப் பற்றிய ஒரிஜினல் புள்ளிவிவரத் தகவல் களஞ்சியமாகவே விளங்கும்.
பராசக்தி படத்தினுடைய ஒரிஜினல் பாட்டுப் புத்தகத்திலும் சரி, மனோகராவினுடைய ஒரிஜினல் பாடல் புத்தகத்திலும் சரி, ஒவ்வொரு பாடலுக்கும் மேலே கொடுக்கப்படும் பாடலாசிரியர் பெயரும், பாடியவர்கள் பெயரும் கொடுக்கப்படவில்லை. இதுவே இத்தகைய தகவல் நெருடல்களுக்கு முக்கிய காரணம். பின்னணிப் பாடியவர்களை அவர்களது பாட்டுக் குரல்களைக் கேட்டு கணித்து விடலாம். ஆனால் பாடல் வரிகளைக் கொண்டு பாடலாசிரியரை கணிப்பது மிக மிகக் கடினம்.
எனினும், திரை இசை ஆராய்ச்சியாளர் திரு.வாமனன் அவர்கள் தான் எழுதியுள்ள "திரை இசை அலைகள் (பாகம் 1)" நூலில் 'சிங்கார பைங்கிளியே பேசு' பாடலை இயற்றியவர் 'உடுமலை நாராயண கவிராயர்' என்றே பதிவு செய்துள்ளார். அடியேனைப் பொறுத்தவரை, ஒரிஜினல் பாட்டுப் புத்தகத்திற்குப் பிறகு திரு.வாமனன் அவர்களுடைய தகவல் ஆதாரபூர்வமானது. எனவே 'சிங்கார பைங்கிளி' உடுமலைக்கே உரித்தானது.
குறிப்பு:
1. மனோகரா ஒரிஜினல் பாட்டுப் புத்தகத்திலும் சரி, படத்தினுடைய பெயர்ப்பலகை[Title Card]யிலும் சரி, பாடலாசிரியர்கள் பட்டியலில் கலைஞர் அவர்களின் பெயர் இடம்பெறவில்லை. திரைக்கதை-வசனம் : கலைஞர் மு.கருணாநிதி என்று மட்டுமே இடம்பெறுகிறது.
2. 1997-ம் ஆண்டு முதல் சற்றேறக்குறைய எட்டு வருடங்கள், 'சினிமா எக்ஸ்பிரஸ்' மாதமிருமுறை இதழில், திரு.வாமனன் அவர்கள் "திரை இசை சாதனையாளர்" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைத் தொடரே "திரை இசை அலைகள்" என்ற பெயரில் கூடுதல் தகவல்களுடன் பல புத்தகங்களாக (பாகங்களாக) வெளிவந்துள்ளது. இதனை வெளியிட்டவர்கள் சென்னை மணிவாசகர் பதிப்பகம்.
அன்புடன்,
பம்மலார்.
டியர் பம்மலார்,
பலே பாண்டியா பொம்மை, பொம்மை அட்டை, மற்றும் அனைத்துப் பாராட்டுக்களுக்கும் நன்றி. இவை யனைத்தும் நடிகர் திலகத்திற்கே.
தாங்கள் கூறியது தான் உண்மை. மனோகரா படத்தில் சிங்காரப் பைங்கிளியே பேசு பாடலின் இசைத்தட்டிலும் உடுமலை நாராயண கவியின் பெயர் தான் உள்ளது. அவர் இயற்றியது என்பதே உண்மை. ஆனால் சில சமயங்களில் இது போன்ற சர்ச்சைகள் வருவதுண்டு.
அன்புடன்
ராகவேந்திரன்
கேள்வி - பதில்
கேள்வி - நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு எந்த வேடம் போட்டாலும் கச்சிதமாக பொருந்துகிறதே
பதில் - அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தீவிரமான ரசிகர் அல்லவா, பொருந்தாமல் இருக்குமா
நன்றி - தினத்தந்தி 24.04.2011 பக்கம் 14 குருவியாரின் சினிமா கேள்வி பதில் பகுதி.
அன்புடன்
காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 9
1961ம் ஆண்டில் வெளிவந்த மறக்க முடியாத நடிகர் திலகத்தின் காவியங்களில் மருத நாட்டு வீரனும் ஒன்று. இப் படத்தில் நடிகர் திலகத்தின் பல்வேறு தோற்றங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். மறைந்த மாமேதை தமிழ்த் திரைப்பட உலகின் முதல் இசையமைப்பாளராக கருதப் படும் எஸ்.வி.வெங்கட்ராமன் இசையமைத்த படம் மருத நாட்டு வீரன். அனைத்துப் பாடல்களும் இனிமை. என்றாலும் இப்பாடல் மிகவும் நெஞ்சை கொள்ளை கொள்ளும். இப்பாடலில் நடிகர் திலகத்தின் புன்னகை நம்மை வசீகரத்தில் ஆழ்த்தும். அட்டகாசமான ஸ்டைல். சொல்லிக் கொண்டே போகலாம். இப்பாடலை இதுவரை பார்க்காதவர்களுக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம். பாடல் கண்ணதாசன், பாடியவர் டி.எம்.சௌந்தர்ராஜன். உடன் நடித்தவர் ஜமுனா. படம் வெளிவந்தா நாள் ஆகஸ்ட் 24, 1961. இனி பாடலைக் காண்க.
http://www.youtube.com/watch?v=eMl17UP5uFE
அன்புடன்
பம்மலார் மற்றும் ராகவேந்திரன்
Hi all,
I have created a blog to collect all motivational/philosophical songs from Sivaji Ganesan movies. But I noticed that unlike MGR songs, there isn't any full list of thatthuva padalgal from Sivaji movies. If anyone have the full list, do provide me. In the meantime you can view the songs here :
http://sivaji-philosophical-songs.blogspot.com/
Dear Seablues
Our sincere appreciations for your efforts in compiling the motivational and philosophical songs of Sivaji and MGR. It's a really good service.
Please go through all the 7 parts of this thread on Nadigar Thilagam Sivaji Ganesan. You will find in-depth analyses of the songs by senior stalwarts like Saradha, Murali, Joe, Nov and later joined by many fans.
Before posting, would like to give a humble suggestion. Please categorize differently the philosophical, motivational, principle songs. Many songs of Nadigar Thilagam are motivational and principle based but unfortunately they are miscategorised as philosophical. Songs that feature in a situation where the hero or the person concerned faces despair, loss, or failure and frustration, usually deemed as philosophical. But songs in other situations are also deemed as philosophical as far as NT is concerned, where this is not correct. We shall classify and post the list here as soon as possible and you can use that list in your blog. For e.g. Ulladhai Solven is a song depicting how the character is and what he has in mind. This is not a sad song or philosophical song. Like that there are many songs which need appropriate classification.
Please keep watch on this thread for a classified list of songs featuring Sivaji Ganesan.
Raghavendran
" Endru thaniyum indha sudhandhira dhaagam..."
Great patriot, great song, splendid performance.....thank you Raghavendra sir for posting the song.
I used to say that apart from performances in various films, this powerful, honest & realistic performance in Kappalottiya Thamizhan should have fetched a National Award for our NT.
When i think about the kind of sacrifice Chidambaram ayya and other patriots have made to attain freedom, I used to get very emotional and the way in which this class performer gave life to the character......moves me to tears.